கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 14 கி.மீ. தூரம் அண்ணாமலையார் கிரிவலம்: ஆரத்தி எடுத்து பக்தர்கள் வழிபட்டனர்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது. இதன் நிறைவாக, கடந்த 6ம் தேதி மாலை 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அடிமுடி காணாத பரம்பொருள், ஜோதிப்பிழம்பாக எழுந்தருளியதை சுமார் 30 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். மகாதீபத்தின் 2ம் நாளன்று இறைவனே கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். அதன்படி, நேற்று காலை 7 மணிக்கு கோயிலில் … Read more