எம்.எல்.ஏ-வின் டிராக்டர் மோதி 4 வயது சிறுவன் உயிரிழப்பு.!

காங்கிரஸ் எம்எல்ஏ பழனிக்கு சொந்தமான டிராக்டர் மோதிய விபத்தில் 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தென்காசி மாவட்டம் கீழ சுரண்டை பகுதியில் உள்ள குளங்களில் இருந்து சரளை மண் வெட்டி எடுத்து தென்காசி காங்கிரஸ் எம்எல்ஏ பழனிக்கு சொந்தமான எஸ்பிஎன் சேம்பர் குவாரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் மணல் ஏற்றி சென்ற காங்கிரஸ் எம் எல் ஏ பழனிக்கு சொந்தமான டிராக்டர் ஒன்று கீழ் சுரண்டை பிள்ளையார் கோவில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த … Read more

உதயநிதி மீது 22 வழக்கு.. வெற்றியை செல்லாது என அறிவிக்க சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

உதயநிதி ஸ்டாலின் மீது 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, அவர் தேர்தலில் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் எம்.எல்.ரவி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக … Read more

காங்கிரஸ் கட்சியிலிருந்து ரூபி மனோகரன் தற்காலிக நீக்கம்: ஒழுங்கு நடவடிக்கை குழு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ரூபி மனோகரனை கட்சியிலிருந்து தற்காகலிக நீக்கி கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கடந்தவாரம் அக்கட்சியைச் சேர்ந்த இரு குழுவினர் இடையே மோதல் நடைபெற்றது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ரூபி மனோகரன் மீதும், தமிழக காங்கிரஸ் எஸ்.சி., பிரிவு தலைவராக இருக்கும் … Read more

ரூபி மனோகரன் தற்காலிக நீக்கம்: காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அறிவிப்பு!

சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரனுக்கு கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை ஒழுங்கு நடவடிக்கை குழுவைச் சேர்ந்த ராமசாமி பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிட்டுள்ளார். 63 மாவட்ட தலைவர்கள் இணைந்து ரூபி மனோகரனுக்கு எதிராக ஒரு புகார் மனு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது நிரந்தர நீக்கம் இல்லை என்றும் தற்காலிக நீக்கம் என்றும் தெளிவுபடுத்தினர். “15ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற சம்பவம் துரதிர்ஷவசமானது. … Read more

ரேஷனில் போடப்படும் போலி பில்; கூட்டுறவுத்துறை கடும் எச்சரிக்கை

தமிழகத்தில் ரேஷன் கடை மூலம் பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. கோடிக்கணக்கான மக்கள் நியாய விலையில் பொருட்களை மாதந்தோறும் பெற்றுச் செல்கின்றனர். எண்ணெய், சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பல பொருட்கள் வெளி மார்க்கெட்டை காட்டிலும் மிக குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அரிசி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.  ரேஷனில் புகார்  இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் ரேஷன் கடைகளில் போலி பில் போடப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதாவது வாடிக்கையாளர்கள்  வாங்காத பொருட்களுக்கும் … Read more

பழனி தண்டாயுதபாணி கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக 2000 இலவச தங்கும் கூடங்கள் அறிமுகம்

பழனி: பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு சொந்தமான 2000 பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக இலவச தங்கும் கூடங்கள் உள்ளன. அவற்றை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 1) சின்னக்குமாரர் விடுதி (வின்ச் நிலையம் எதிரில்), 2) பழைய நாதஸ்வர பள்ளி (ரோப்கார் நிலையம் எதிரில்) மற்றும் 3) சுற்றுலா பேருந்து நிலையம் (கிழக்கு கிரிவீதி) ஆகிய இடங்களில் 2000 பக்தர்கள் இலவசமாக தங்குவதற்கு தங்கும் கூடங்கள் உள்ளன. இலவச … Read more

குப்பைகளை பிரித்தெடுக்கும் தூய்மை பணியாளரான நடிகர் யோகி பாபு – ஏன் தெரியுமா?

தூய்மை பணியாளராக வீடு தோறும் சென்று தரம் பிரித்து குப்பைகளை சேகரிக்கும் காட்சியில் நடிகர் யோகி பாபு நடித்துள்ளார். குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக குறும்படம் தயாரிக்கப்படும் நிலையில், அதில் தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வளம் வரும் யோகி பாபுவை வைத்து குறும்படம் இயக்கப்படுகிறது. Urbaser Sumeet நிறுவனம் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்படும் இந்த படத்திற்காக வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்குக் தூய்மை பணியாளர் வேடத்தில் யோகி பாபு … Read more

திருப்பத்தூர் || இறந்த மனைவிக்கு நிர்வாணமாக பூஜை செய்த கணவரால் சிதறி ஓடிய உறவினர்கள்!

திருப்பத்தூர் மாவட்டத்தை அடுத்த சின்னபசிலிகுட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜா தேசிங்கு. இவருக்கு நான்கு வருடங்களுக்கு முன்பு பூர்ணிமா என்ற பெண்ணோடு திருமணம் நடைபெற்ற நிலையில் இரண்டு வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்த நிலையில் பூர்ணிமா ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்து வந்துள்ளார். நேற்று பூர்ணிமா மாட்டு கொட்டகைகளை வழக்கம் சுத்தம் செய்யும் பணி செய்து கொண்டிருந்தார்.   வாட்டர் சர்வீஸ் செய்யும் மோட்டாரை கொண்டு மாட்டு கொட்டகைகளை சுத்தம் செய்து கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்பொழுது … Read more