#BREAKING : தமிழகத்தில் நாளை (9.12.2022) 23 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் நாளை 23 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று நள்ளிரவு ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் தற்போது காரைக்காலுக்கு தென்கிழக்கே 500 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 580 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இந்த நிலையில் மாண்டஸ் புயல் அடுத்த 6 மணி நேரத்திற்குள் அதி தீவிர புயலாக வலுப்பெற்று, நாளை (வெள்ளிக்கிழமை) … Read more

#JUST IN: நாளை மொத்தம் 21 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!!

மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், வேலூர், திருப்பத்தூரில்,அரியலூர், தஞ்சாவூர்,பெரம்பலூர்,திருவாரூர்.மயிலாடுதுறை,கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை,சேலம்,நாமக்கல்,திருவண்ணாமலை, தருமபுரி,நாகை  மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் நாளை (09.12.2022) மற்றும் நாளை மறுநாள் (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல், கனமழை முன்னெச்சரிக்கையாக அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் அறிவித்து அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள … Read more

“சாவதை தவிர வேறு வழியில்லை” – திருவையாறு புறவழிச்சாலை திட்டத்துக்கு நிலங்களைத் தர மறுத்து விவசாயிகள் ஆவேசம்

தஞ்சாவூர் : திருவையாறு புறவழிச்சாலை திட்டத்துக்கு விவசாய நிலங்களை தர மாட்டோம் என கோட்டாட்சியர் கருத்துக் கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசமாக பேசினர். தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை (டிச.8) திருவையாறு புறவழிச்சாலை அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கோட்டாட்சியர் எம்.ரஞ்சித் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திருவையாறு வட்டாட்சியர் பழனியப்பன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் சக்திவேல், நில எடுப்பு தனி வட்டாட்சியர் ஆர்.அனிதா, திருவையாறு காவல் துணை கண்காணிப்பாளர் க.ராஜ்மோகன் மற்றும் விவசாயிகள் பலர் … Read more

முடிசூட்டு விஷாவுக்கு தயாராகும் உதயநிதி.. வெயிட்டான துறைக்கு இனி அமைச்சர்..!

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற போதே, அவரது மகன் உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சர் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை. இருப்பினும், மக்கள் மத்தியில் அதிருப்தி எதையும் ஏற்படுத்தவில்லை. காரணம், எந்த சூழலிலும் தனது மகனுக்கு பதவிகள் வழங்கப்படாது என்று அறிவித்திருந்த மு.க. ஸ்டாலின் உதயநிதிக்கு இளைஞரணி செயலாளர் என்ற பெரிய பதவியை வழங்கினார். அதனை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் … Read more

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு நாளை (09.12.2022) விடுமுறை அறிவிக்கப்பட்டு தேர்வுகள் ஒத்திவைப்பு

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு நாளை (09.12.2022) விடுமுறை அறிவிக்கப்பட்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் வெளியிடப்படும் என அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தன் உயிரை தியாகம் செய்து.. 40 பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுனர்.!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பணிமனையில் அரசு பேருந்து ஓட்டுனராக சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியை சேர்ந்த குமார் என்பவர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் வேலைக்கு சென்ற குமார் சிங்கம்புணரியில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்றுள்ளார். அப்போது மேலைச்சிவபுரி அருகே சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் குமாருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சுதாரித்துக் கொண்ட ஓட்டுனர் குமார்  பேருந்து சாலை ஓரமாக நிறுத்தி பயணிகளின் உயிருக்கு … Read more

#JUST IN: நாளை 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – முக்கிய தேர்வுகள் ஒத்திவைப்பு..!!

மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கும். நாளை காலை வரை தீவிர புயலாகவே நகர்ந்து பிறகு சற்றே வலுக்குறைந்து மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் ,பொதுமக்கள் கடற்கரைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என தமிழக … Read more

ரயில் பயணக் கட்டணத்தில் அரசு அளிக்கும் மானியங்கள்: மக்களவையில் அமைச்சர் விளக்கம்

புதுடெல்லி: பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் ரயில் சேவை செய்ய மத்திய அரசு எடுத்த நடவடிக்கை குறித்து திமுக எம்.பி கதிர் ஆனந்த் இன்று மக்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு ரயில்வே அமைச்சர் அரசு அளிக்கும் மானியங்கள் விவரத்தை தெரிவித்தார். இது குறித்து ரயில்வே மற்றும் தகவல் தொடர்பு மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் தனது எழுத்துபூர்வமான அளித்த பதில்: ”ரயில் பயணக் கட்டணங்கள் மலிவு விலையில் இருக்க அதிக மானியம் வழங்கப்படுகிறது. … Read more

அம்பேத்கருக்கு காவி சாயமா?..திருமாவளவன் ஆர்பாட்டத்திற்கு அறைகூவல்.!

மகாராஷ்டிராவின் தாழ்த்தப்பட்ட மகர் சமூகத்தில் பிறந்து, இந்து மதத்தில் கடைபிடிக்கப்பட்ட அத்தனை தீண்டாமை கொடுமைகளையும் அனுபவித்த அண்ணல் அம்பேத்கர், கல்வி மறுக்கப்பட்டபோதும், அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து, நாட்டின் அரசியல் சாசனத்தை உருவாக்கியவர் அம்பேத்கர். இந்து மதத்தில் கடைப்பிடிக்கப்படும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, மூன்று லட்சம் பேரோடு அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு வெளியேறி 1956ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி பௌத்தத்தைத் தழுவினார். மதச்சார்பற்ற, சாதிய ஒடுக்குமுறைகளற்ற இந்தியா என்னும் பெருங்கனவுக்கு விதையிட்ட அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் … Read more