காட்பாடியில் வரும் 29ம் தேதி வரை நடக்கிறது அக்னிபாத் ஆட்சேர்ப்பு முகாமில் திரண்ட 9 மாவட்ட இளைஞர்கள்: சான்றிதழ் இல்லாதவர்கள் ஏமாற்றம்

வேலூர்: காட்பாடியில் உள்ள வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அக்னிபாத் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நேற்று தொடங்கியது. இதில் 9 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டனர். உரிய சான்றிதழ் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று முதல் வரும் 29ம் தேதி வரை ராணுவத்திற்கு அக்னிபாத் ஆட்சேர்ப்பு முகாம் நடக்கிறது. இதில் அக்னிவீர்(ஆண்), அக்னிவீர்(பெண் ராணுவ காவல் பணி), சிப்பாய் தொழில்நுட்பம் உதவி செவிலியர், உதவி செவிலியர்(கால்நடை) … Read more

காதலியிடம் பேசியதால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.! சிசிடிவியில் சிக்கி கொண்ட காதலன்.!

சென்னை வியாசர்பாடியில் உள்ள கணேசபுரத்தில், சுந்தரம் நகர் 6-வது தெருவை சேர்ந்த ராஜேஷ் புளியந்தோப்பில் உள்ள ஆடு தொட்டியில் ஆடு மற்றும் மாடுகளை பராமரிக்கும் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு ஆடு தொட்டியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மினிவேன் ஒன்றில் படுத்து உறங்கினார். அப்போது அந்த பகுதிக்கு வந்த ராஜேஷ் மீது மர்மநபர் ஒருவர் தீ வைத்து விட்டு தப்பி ஓடினார்.  இந்த தீ விபத்தில், பற்றி எறிந்த இவரை, அருகிலிருந்தவர்கள் மீட்டு, … Read more

கனமழையால் சீர்காழி பகுதிகளில் வயல் வெளிகள் உள்ளிட்ட இடங்களில் மார்பளவு தேங்கிய மழை நீர்..!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால், அப்பகுதிகளில் வயல் வெளிகள் உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. வேட்டங்குடி பகுதியில் விவசாய நிலங்களில் மழை நீர் அதிகளவில் தேங்கிய நிலையில், மார்பளவு நீரில் நின்று பயிர்களை கையில் ஏந்தி, விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். வேட்டங்குடி பகுதியில் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசமானதாக தெரிவித்த விவசாயிகள், அரசே ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். … Read more

“ஆதீன மடங்கள் ஒன்றும் அறிவாலய சொத்துகள் கிடையாது” – இந்து முன்னணி மாநிலத் தலைவர்

திருப்பூர்: “ஆதீன மடங்கள் ஒன்றும் அறிவாலய சொத்துகள் கிடையாது என்பதை உணர்ந்து செயல்பட்டால், திராவிட மாடல் அரசுக்கு நல்லது” என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடம் 600 ஆண்டுகள் பாரம்பரியம் உடையது. தமிழ் மொழியை வளர்த்ததிலும், தமிழ்ப் பண்பாடான ஆன்மீகத்தை செம்மைப்படுத்தியதிலும் தொண்டை மண்டல ஆதீனத்தின் பங்கு அளப்பரியது. தமிழகத்தில் கோயில்களில் இருந்து வரும் வருமானம் முழுதையும் எடுத்துக்கொள்ளும் … Read more

சமயநல்லூர் – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் ரூ.80 கோடி செலவில் 591 அதிநவீன கேமரா: ‘பறந்து’ சென்றால் ஃபைன் கட்டணும்; இரவிலும் துல்லியமாக கண்காணிக்கும்

விருதுநகர்: சமயநல்லூர் – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணிக்க, ரூ.80 கோடி செலவில் 591 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சுங்கச்சாவடி அருகில் அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலை கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தேசிய நெடுஞ்சாலை மண்டல அலுவலர் வைபவ் மிட்டல் தலைமை வகித்தார்.  கேமரா கட்டுப்பாட்டு அறையை விருதுநகர் மாவட்ட எஸ்பி மனோகர் திறந்து வைத்தார். மதுரை மாவட்டம், சமயநல்லூர் முதல் கன்னியாகுமரி … Read more

பிரியா மரணம் | “அரசியல் நோக்கத்தோடு கிளறி விடுவது சரியல்ல” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: “மாணவி பிரியா மரணம் தொடர்பாக அரசியல் நோக்கத்தோடு எதையாவது கிளறி விடுவது சரியாக இருக்காது” என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தமிழக அரசின் சுகாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.15) தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மாணவி பிரியா மரணம் அடைந்தது மிக மிக … Read more

மயிலாடுதுறை அருகே மழைநீர் வடியாததால் 33,000 ஏக்கர் நெற்பயிர் அழுகும் அபாயம்: விவசாயிகள் கவலை

கொள்ளிடம்: மயிலாடுதுறை அருகே கொள்ளிடம் பகுதியில் மழைநீர் வடியாததால் 33 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையுடன் உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையால் கொள்ளிடம் அருகே அளக்குடி, மகேந்திரப்பள்ளி, காட்டூர், புளியந்துறை, பச்சை பெருமாநல்லூர், உமையாள்பதி, மகாராஜபுரம், ஆலங்காடு, வேட்டங்குடி, வேம்படி இருவக்கொல்லை, குமரக்கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 33 ஆயிரம் ஏக்கரில் சம்பா நேரடி விதைப்பு செய்துள்ள நெற்பயிர் 5 நாட்களாக தண்ணீரில் மூழ்கியுள்ளது. தொடர்ந்து நெற்பயிர் தண்ணீருக்குள்ளேயே இருந்து … Read more

தவறான சிகிச்சையால் உயிரிழந்த பிரியா இறுதிச் சடங்கு… பார்ப்பவர்களை கலங்க வைத்த காட்சி

தவறான சிகிச்சையால் உயிரிழந்த பிரியா இறுதிச் சடங்கு… பார்ப்பவர்களை கலங்க வைத்த காட்சி Source link

ஸ்டாலினை சந்தித்த பாஜக எம்.எல்.ஏக்கள்! மண்டைக்காடு மத கலவரம் குறித்து ஆலோசனை!

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை இன்று பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், காந்தி, சரஸ்வதி மற்றும் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்தனர். பாஜக எம்எல்ஏக்கள் தங்களுடைய தொகுதியில் உள்ள பிரச்சனைகள் குறித்தான கோரிக்கை மனுவை ஸ்டாலினிடம் அளித்தனர். ஸ்டாலினை சந்தித்து விட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நயினார் நாகேந்திரன் “நெல்லையப்பர் கோவிலுக்கு புதைவட மின் இணைப்பு அமைத்து தர வேண்டும், தேர் வசதி செய்து தர வேண்டும் என … Read more