சமூக ஊடகங்களில் பரவும் தேர்வு முடிவுகள் போலி! எச்சரிக்கும் TNPSC

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2022 ஜூலை மாதம் இரண்டாம் தேதியன்று முற்பகல் மற்றும் பிற்பகலில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு தொடர்பான போலிச் செய்தி வெளியாகி இருப்பதை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உறுதிப் படுத்தியுள்ளது. இது தொடர்பாக நேற்று செய்தி வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி, இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் குறித்த போலிப் பட்டியல், சமூக வலைதளங்களில் பரவி வருவதாக தெரிய வந்துள்ளதாகவும், இதனை தேர்வு எழுதியவர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் … Read more

தமிழகத்தில் செயல்படும் மின் உற்பத்தி திட்டங்கள் என்ன? மின்சார தேவை எவ்வளவு? – முழுவிபரம்

தமிழ்நாட்டில் தற்போது செயல்பாட்டில் உள்ள மின்உற்பத்தி திட்டங்களில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு குறித்து விரிவாக பார்க்கலாம். நிலக்கரி, எரிவாயு போன்ற மரபுசார்ந்த எரிசக்தி ஆதாரங்கள் மூலமும், நீர், காற்றாலை, சூரிய ஒளி போன்ற மரபுசாரா எரிசக்தி ஆதாரங்கள் மூலமும்மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தின் தினசரி மின் தேவை அதிகபட்சம் 15 ஆயிரம் மெகாவாட். கோடைக்காலத்தில் இது 17 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கும். தமிழகத்தில் தினசரி 29 கோடி முதல் 30 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. … Read more

இது உங்களுக்கு தெரியுமா? மசால் தோசை போல் மசால் இட்லியாம்! இப்பவே ட்ரை பண்ணி பாருங்க

இது உங்களுக்கு தெரியுமா? மசால் தோசை போல் மசால் இட்லியாம்! இப்பவே ட்ரை பண்ணி பாருங்க Source link

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவாக இருந்த தனியார் பள்ளி தாளாளர் அதிரடி கைது.!

சென்னையில் உள்ள திருநின்றவூரில் தனியார் பள்ளி ஒன்றின் தாளாளர் அப்பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அந்த புகாரில், பன்னிரண்டாம் வகுப்பில் சரியாக படிக்காத மாணவிகள் சிலரை தனியாக அழைத்து கவுன்சிலிங் கொடுப்பதாக கூறி தாளாளர் வினோத் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தில் பலமுறை புகார் அளித்தும் அதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் பள்ளி … Read more

அதிரடி! சூர்யா சிவாவின் பொறுப்புகளை பறித்த அண்ணாமலை!!

பாஜக ஓபிசி பிரிவு மாநில துணைத் தலைவர் திருச்சி சூர்யாவும், பாஜக சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டெய்சியும் செல்போனில் வாக்குவாதம் செய்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, திருச்சி சூர்யா கட்சி நிகழ்வில் பங்கேற்க தற்காலிக தடை விதித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில துணைத்தலைவர் கனகசபாபதி தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தவும் அறிவுறுத்தினார். இதையடுத்து, திருப்பூரில் பாஜக அலுவலகத்திற்கு வந்த திருச்சி சூர்யா மற்றும் டெய்சி ஆகியோர் விசாரணைக் … Read more

ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக தாம்பரம் – எர்ணாகுளம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை: கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைகள் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு யாத்திரையாக சென்று வருகின்றனர். ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து எர்ணாகுளத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த வாராந்திர சிறப்பு ரயில் (06068), எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து நவ.28, டிச.5, 12, 19, 26,ஜன.2 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமைகளில்) மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு, மறு நாள் நண்பகல் 12 மணிக்கு தாம்பரம் வரும். அதேபோல, தாம்பரத்தில் … Read more

திமுக vs பாஜக… ரத்தம் தெறிக்க செம சண்டை… மொடக்குறிச்சியில் என்ன நடந்தது?

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பேரூராட்சியில் 15 வார்டுகள் இருக்கின்றன. இதற்கு கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 10, அதிமுக 1, பாஜக 2, மற்றவை 2 என வெற்றி வாகை சூடினர். இந்த பேரூராட்சியின் தலைவராக மொடக்குறிச்சி திமுக பேரூர் செயலாளர் சரவணனின் மனைவி செல்வாம்பாள் உள்ளார். இந்நிலையில் மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சர்ச்சைக்குரிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. பேரூராட்சியில் நிதி முறைகேடு அதில், பேரூராட்சியில் நடந்த நிதி முறைகேடு தொடர்பாக … Read more

’அரியர் இருக்கா?’.. அண்ணா பல்கலை. மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு

2001-2002 கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத அனுமதி வழங்கியுள்ளது அண்ணா பல்கலைக்கழகம். 2001-2002-ஆம் கல்வியாண்டிற்கு பிறகு படித்த மாணவர்கள் 3-ஆவது செமஸ்டர் தொடங்கி அரியர் வைத்திருந்தால், நடைபெறவுள்ள செம்ஸ்டர் தேர்வில் தேர்வெழுத சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அரியர் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வுக்கடணத்துடன் ரூ.5,000 கூடுதலாக செலுத்த வேண்டும். இந்த தேர்வுக்கு www.coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் நவம்பர் 23- ஆம் தேதி முதல் டிசம்பர் 3 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அரியர் தேர்வு எழுதும் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் நிர்ணயித்துள்ள 9 … Read more