நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு மறு சீராய்வு மனு.!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூருக்குத் தேர்தல் பிரசாரத்துக்காக வந்த போது, அவர்மீது நடத்தப்பட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதலில் அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரும் முக்கியக் குற்றவாளிகளாகக் கைதுசெய்யப்பட்டு, கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்துவந்தனர். இந்தநிலையில் கடந்த மே மாதம் 18ம் தேதி, உச்ச நீதிமன்றம் தனது தனிப்பட்ட அதிகாரமான சட்டப்பிரிவு … Read more

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: நவம்பர் 11 தீர்ப்பை மறுஆய்வு செய்ய மத்திய அரசு மனு

நியூடெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற அனைவரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய நவம்பர் 11ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது. முன்னதாக, நவம்பர் 11ம் தேதியன்று, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த தீர்ப்பை அடுத்து, நளினி உட்பட பலரும் விடுதலை செய்யப்பட்டனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் … Read more

ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக குற்றாலம் மெயினருவியில் ஓரமாக நின்று குளிக்க அனுமதி

தென்காசி: குற்றாலம் மெயினருவியில் ஐயப்ப பக்தர்கள் இன்று ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். குற்றாலம் மெயின் அருவியில் கடந்த மூன்று தினங்களாக குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக அருவியின் ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மெயின் அருவியில் நான்காவது நாளாக இன்றும் தண்ணீர் அதிகமாக விழுகிறது. இன்று கார்த்திகை மாதம் முதல் நாள் என்பதால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல விரதம் இருப்பதற்காக மாலை … Read more

”எளிதாக பெண்களை ஏமாற்றும் உலகம்; யாரையும் எளிதாக நம்பாதீர்கள்” – அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

தற்போது பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்துவருவது உண்மை, சட்டத்திற்கு முரணாக செயலில் ஈடுபடும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறுது, போதை பழக்க வழக்கமும், விற்பனையில் ஈடுபடுவதும் அதிகரித்துவருவதாக மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.  மதுரை மாவட்ட சமூக நலத்துறை மற்றும் லேடி டோக் கல்லூரி ஒருங்கிணைந்து நடத்தும் ‘குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் குழந்தை திருமணங்கள் தடுப்பு’ தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார். … Read more

தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் மீதான பணமோசடி வழக்கு ரத்து – சென்னை ஐகோர்ட் உத்தரவு

தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் மீதான பணமோசடி வழக்கு ரத்து – சென்னை ஐகோர்ட் உத்தரவு Source link

கழிவு நீர்த்தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த நிலையில் 2 நாள்களுக்குப் பின் மேலும் ஒருவர் சடலமாக மீட்பு.!

கரூர் மாவட்டம் சுக்காலியூரில் கழிவு நீர்த்தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த நிலையில் 2 நாள்களுக்குப் பின் மேலும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 15 ஆம் தேதி கழிவுநீர் தொட்டியில் கான்கிரீட் போட பயன்படுத்திய கட்டைகளை அகற்றும் போது மோகன்ராஜ், சிவக்குமார், ராஜேஷ்குமார் ஆகிய மூன்று தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இந்நிலையில், சிவக்குமாருடன் வேலைக்கு வந்த சின்னமலைப்பட்டியைச் சேர்ந்த கோபால் என்பவரை காணவில்லை என்று அவரது அண்ணன் அளித்த தகவலையடுத்து தீயணைப்பு துறையினர் … Read more

மின்சார சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் தமிழகம் கொந்தளிக்கும்: கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை

திருவண்ணாமலை: மின்சார சட்ட திருத்த மசோதா-2022 நிறைவேற்றப்பட்டால் தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ”2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி இணைந்து மகத்தான வெற்றி பெறுவதற்கான பணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொடங்குவது என … Read more

டாக்டர் படிச்ச அனைவருக்கு அரசு வேலை சாத்தியமில்லை: அமைச்சர் மா.சு!

சென்னை,அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில் பட்டப்படிப்பிற்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டு, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் பட்டம் மேற்படிப்பு இட ஒதுக்கீடு ஆணையை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியது: தமிழக சுகாதாரத்துறையினர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விடியல் பெற்றுள்ளனர். விருப்பத்திற்கேற்ப வெளிப்படைத்தன்மையுடன் பணியிட மாறுதல், கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. நாமக்கல்லில் சித்த மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்று கடந்த … Read more

தேயிலை தோட்ட கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வீடுகள் – முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்காக, 1968ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வனத்துறை மூலம் நீலகிரி மாவட்டத்தில் ‘அரசு தேயிலைத் தோட்டம் திட்டம்’ தொடங்கப்பட்டது. இத்திட்டத்தினை செம்மைப்படுத்திட 1976 ஆண்டு, அப்போது முதலமைச்சராகப் பதவி வகித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் (TANTEA) என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு நிறுவனங்களின் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது. இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய 2,445 குடும்பங்களுக்கு (4082 தொழிலாளர்கள்), கடந்த … Read more

சிவகங்கை மாவட்ட ஊராட்சிகளில் கூடுதல் துப்புரவு பணியாளர்களை நியமனம் செய்ய வலியுறுத்தல்

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஊராட்சிகளில் கூடுதல் துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 445 ஊராட்சிகள் உள்ளன. இதில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் துப்புரவு பணியாளர்கள் தேவையான எண்ணிக்கையில் நியமிக்கப்படுவது வழக்கம். தற்போது நகராட்சி, பேரூராட்சிகளிலேயே போதிய எண்ணிக்கையிலான துப்புரவு பணியாளர்கள் இல்லை. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் ஒவ்வொரு ஊராட்சியிலும் மிகக்குறைவான எண்ணிக்கையிலான துப்புரவு பணியாளர்களே உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பகுதி நேர … Read more