திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் மீன் வளர்ப்பில் மானியம் பெற விண்ணப்பிக்க அழைப்பு

திண்டுக்கல்: பிரதான்  மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்பினை  ஊக்கப்படுத்த மானியம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்பும்  திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் விசாகன்  தெரிவித்துள்ளார்.இது குறித்து கலெக்டர் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல்  மாவட்டத்தில் மீன் உற்பத்தி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக  2021-22ம் ஆண்டில் பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ்  மீன் வளர்ப்பினை ஊக்கப்படுத்தும் விதமாக திட்டங்களில் சிறிய அளவிலான  பயோபிளாக் குளங்களில் மீன் வளர்ப்பு செய்தல், புதிய … Read more

கீழடியின் பொருட்களுக்கான அகழ் வைப்பக அருங்காட்சியகம்! ஒப்பந்தபுள்ளிக்கு நாளை கடைசிநாள்!

கீழடி அகழ் வைப்பகத்தில் தொல்லியல் பொருட்கள் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.  கீழடியில் கிடைத்த பழமையான பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் அகழ் வைப்பக அருங்காட்சியகப் பணியானது 11.30 கோடி ரூபாய் செலவில், மொத்தம் 31,919 சதுரஅடி பரப்பளவில் 6 முக்கிய கட்டடத் தொகுதிகளை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசால் கட்டப்பட்டு வரும் கீழடி அகழ் வைப்பகத்திற்கான பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், தொல்லியல் பொருட்களை காட்சிப்படுத்துவதற்கான மரப்பலகை, கண்ணாடி பெட்டிகள், விளக்குகள் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டு … Read more

#JUSTIN:நாளை இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..!!

கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இந்த தாழ்வு நிலை வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. இது புயலாக மாறி நாளை வியாழக்கிழமை மாலையில் சென்னை- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அப்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. … Read more

2016 சட்டமன்றத் தேர்தல் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் நேரில் ஆஜராகி சாட்சியம்

சென்னை: கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆவடி தொகுதி திமுக வேட்பாளர் ஆவடி நாசர் தொடர்ந்த தேர்தல் வழக்கில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். கடந்த 2016-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு நடந்த பொதுத் தேர்தலில் ஆவடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட மாஃபா பாண்டியராஜன் 1,395 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகளில் பாண்டியராஜன் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, அவரது வெற்றியை … Read more

நடமாடும் சொகுசு ஓட்டலில் முதல்வர்; விடியலுக்காக தென்காசி வெயிட்டிங்!

தமிழ்நாடு முதல்வர் தென்காசியில் நாளை நடக்க இருக்கும் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்க இருக்கிறார். இதற்காக சென்னை எழும்பூரில் இருந்து இன்று மாலை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தென்காசிக்கு புறப்பட்டார். நாளை காலை 7.30 மணிக்கு தென்காசி ரயில் நிலையம் வந்து அடைகிறார். இதன் பிறகு அங்கிருந்து குற்றாலம் விருந்தினர் மாளிகைக்கு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவுக்கு பின்னர் நலத்திட்ட உதவி வழங்கும் விழா … Read more

CM Stalin Train : தென்காசி செல்லும் ஸ்டாலின்… ரயில் பெட்டியில் இத்தனை வசதியா ?

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தென்காசி பயணத்திற்காக பொதிகை ரயிலில் சலூன் (சொகுசு) பெட்டி இணைக்கப்படுகிறது. இதில் சொகுசு ஓட்டலில் உள்ளது போன்று பல்வேறு வசதிகள் உள்ளன. இந்திய ரயில்வே நிர்வாகத்தின் IRCTC நிர்வாகம், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர், முதலமைச்சர் போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் விமானம் மூலம் செல்ல முடியாத இடங்களுக்கு செல்வதற்காக ‘சலூன்’ என்ற சொகுசு வசதிகள் கொண்ட தனிப்பெட்டியை உருவாக்கி உள்ளது. இந்த சலூன் பெட்டி என்பது நகரும் வீடு போன்றது. பாத்ரூம் … Read more

மலையோர பகுதிகளில் கனமழை எதிரொலி; திற்பரப்பில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் குளிக்க 2வது நாளாக தடை

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய இயற்கை சுற்றுலாத்தலம் திற்பரப்பு அருவி. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் கோதையாறு இங்கு அருவியாக விழுகிறது. மழைக்காலக்காலங்களில் பேச்சிப்பாறை, சிற்றார் அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரும் கோதையாறு வழியாக திற்பரப்பு பகுதியை வந்தடைகிறது. ஆகவே திற்பரப்பு அருவியில் அபாயகட்டத்தை தாண்டி தண்ணீர் விழுகிறது. இந்த நேரங்களில் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டில் மழைக்காலத்தில் பெரும்பாலான நாட்களில் அருவியில் குளிக்க தடை … Read more

’கோவில்கள் குறித்த கருத்தை பலமுறை கூறிவிட்டோம்’-திருச்செந்தூர் கோவில் வழக்கில் நீதிபதிகள்!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு கோயில் சொத்துக்களை பராமரிப்பது பாதுகாப்பது போன்ற பொறுப்புகள் உள்ளன என்றும், அதன் வருவாயை சரியான செலவினங்களுக்கு பயன்படுத்த வேண்டிய கடமை உள்ளது எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். திருச்செந்தூரை சேர்ந்த வேல்முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், “திருச்செந்தூர் கோயிலுக்கு சொந்தமான துவாதசி மடம் பகுதி, தனி நபருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை மீட்டு மீண்டும் கோவிலிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்” … Read more