3வது நாளாக தொடரும் ஸ்விக்கி ஊழியர்களின் ஸ்டிரைக்.. பாதிக்கப்பட்ட டெலிவரி பணி!

ஸ்விக்கி ஊழியர்களுக்கான புதிய ஊதிய திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி டெலிவரி ஊழியர்கள் மூன்றாவது நாளாக சென்னையில் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் உணவு மற்றும் இதர பொருட்களை ஸ்விக்கி ஊழியர்கள் டெலிவரி செய்து வருகிறார்கள். இதில் 10 முதல் 12 மணி நேரம் மட்டுமே பணியாற்றி வந்த நிலையில் தற்போது அந்த பணி நேரம் 16 மணிநேரமாக நீட்டிக்கப்பட்டு கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஸ்விக்கி நிறுவனத்தின் இந்த புதிய அறிவிப்பை எதிர்த்து என டெலிவரி … Read more

Tamil news today live: மதுரை வந்த ஜே.பி.நட்டா: பாஜகவினர் உற்சாக வரவேற்பு

Go to Live Updates பெட்ரோல்,டீசல் விலை சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. பாஜக சிறை நிரப்பு போராட்டம்  இந்து மதத்தை குறித்து அவதூறாக பேசிய ஆர். ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 26ம் தேதி  சிறை நிரப்பும் போராட்டத்தை தமிழக பாஜக … Read more

உருவம் ஒத்துபோனதால் தாய் தான் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதிய மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அம்பேத்கர் நகர், பஜனை கோவில் தெருவில் வசித்து வருபவர் சந்திரா (72). இவருடைய கணவர் சுப்பிரமணி, கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுப்பிரமணி இறந்து விட்டார். இந்த நிலையில் சந்திரா பஜனை கோவில் தெருவில் உள்ள, தனது மகன் வடிவேலு பராமரிப்பில் வசித்து வந்தார். வயதான சந்திரா அடிக்கடி கோவிலுக்கு செல்வது வழக்கமாக கொண்டுள்ளார். குறிப்பாக சந்திரா சிங்கப்பெருமாள் அருகே உள்ள கோவிலுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். வழக்கம்போல நேற்று சந்திரா … Read more

எஸ்.பி.வேலுமணி வழக்கு: அக்.12-ல் இறுதி விசாரணை

சென்னை: மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் மீதான இறுதி விசாரணையை அக்டோபர் 12-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகள் டெண்டர் முறைகேடு மற்றும் சொத்து குவித்ததாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் … Read more

சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த ஐந்து தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 22.09.2022 மற்றும் 23.09.2022: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். 24.09.2022 முதல் 26.09.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான … Read more

எச்1 என்1 பரிசோதனையில் 1267 பேருக்கு இன்ஃப்ளூயென்சா காய்ச்சல் உறுதி

சென்னை: எச்1 என்1 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 1267 பேருக்கு இன்ஃப்ளூயென்சா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. எச்1 என்1 காய்ச்சல் அதிகரித்து வருவதால் 15 நாட்களில் 6000 பரிசோதனை கிட் வாங்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. நேற்று வரை தமிழ்நாட்டில் 5,064 பேருக்கு காய்ச்சல் காரணமாக எச்1 என்1 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.   

ஈரோடு: மில்லில் வேலை செய்து கொண்டிருந்த வாலிபர்.! மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு.!

ஈரோடு மாவட்டத்தில் மில்லில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்தவர் ராஜா(36). இவர் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் உள்ள மில்லில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ராஜா வழக்கம்போல் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். இதையடுத்து சக பணியாளர்கள் உடனே ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு … Read more

பொருள் வாங்காதவர்களுக்கு 'கௌரவம்': கூட்டுறவுத்துறை செயலர் தகவல்..!

“குடும்ப அட்டை வைத்திருந்து பொருட்கள் வாங்காத நபர்கள் ‘கௌரவ ரேஷன் கார்டு’ பெற்றுக் கொள்ளலாம்” என கூட்டுறவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் திருச்சி அண்ணா நகர் கூட்டுறவு வங்கியில், உறுப்பினர்களுக்கு கடனுதவிகளை வழங்கினார். தொடர்ந்து, கல்லுக்குழி நியாய விலைக்கடையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்னர், டி.வி.எஸ். டோல்கேட் மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள சுப்பிரமணியபுரம் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஆய்வு மேற்கொண்டார். … Read more

தமிழகத்தில் 1267 பேருக்கு எச்1என்1 ஃப்ளூ காய்ச்சல் உறுதி: 6000 சோதனைக் கருவிகளை வாங்க சுகாதாரத்துறை திட்டம்

சென்னை: தமிழகத்தில் இதுவரை 1267 பேருக்கு எச்1என்1 ஃப்ளூ காய்ச்சல் உறுதியாகியுள்ளது. ஃப்ளூ காய்ச்சல் அதிகரித்து வரும் எச்1என்1 இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சல் காரணமாக அடுத்த 15 நாட்களில் 6 ஆயிரம் சோதனைக் கருவிகளை வாங்க தமிழக சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஃப்ளூ காய்ச்சல் என்று அழைக்கப்படும் எச்1என்1 இன்ஃப்ளுயன்ஸா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே உள்ளது. பெரும்பாலான நகரங்களில் இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக வரக்கூடிய பொதுமக்களின் எண்ணிக்கை கடந்த சில … Read more

பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா பதவியேற்பு: கடந்து வந்த பாதை!

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எம்.துரைசாமி நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி டி. ராஜாவை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டிருந்தார். அதன்படி சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி டி.ராஜா பொறுப்பு தலைமை நீதிபதியாக இன்று பொறுப்பேற்று கொண்டார். நீதிபதி டி.ராஜா மதுரை மாவட்டம் தேனூர் கிராமத்தில் கடந்த 1961 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதி பிறந்தார். பள்ளிப்படிப்பை … Read more