திருநங்கைகளின் முப்பெரும் விழா 2022 – "மிஸ் சென்னை திருநங்கை"-கான அழகிப்போட்டி!!

திருநங்கைகளின் முப்பெரும் விழா 2022 நிகழ்ச்சியில் பங்கேற்க அழகிப்போட்டிக்கான “மிஸ் சென்னை திருநங்கை” தேர்வு நடைபெற்றது.  ‘திருநங்கைகளின் முப்பெரும் விழா 2022’ அக்டோபர் 15 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுவதை முன்னிட்டு, அந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியான “மிஸ் சென்னை திருநங்கை” அழகிப்போட்டிக்கான தேர்வு, சென்னை கீழ்ப்பாக்கம் டான்பாஸ்கோ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.  மூன்று நாட்கள் நடைபெறும் திருநங்கைகளின் முப்பெரும் விழாவிற்கு முன்னதாக அக்டோபர் 13 ஆம் தேதி, கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் திருநங்கைகளுக்கான முக்கியத்துவம் … Read more

பக்தர்களே, காணிக்கை வழங்க வேண்டாம்.. திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தல்..!

திருமலை – திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வருகிற 27-ம் தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ விழா நாட்களில் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் இலவசமாக அன்னப் பிரசாதம் வழங்கப்படுகிறது. எனவே, அன்னதானம் என்ற பெயரில் தனி நபருக்கோ, அமைப்புகளுக்கோ பக்தர்கள் காணிக்கை வழங்க வேண்டாம். இந்நிலையில், பிரம்மோற்சவத்தை முன்னிட்டு செகந்திராபாத் அனந்த கோவிந்த தாச அறக்கட்டளை அன்னதானம் செய்யப் போவதாகக் … Read more

பொதுக்குழு பிரமாணப் பத்திரங்களை மீண்டும் தேர்தல் ஆணையத்திடம் அளித்தோம்: சி.வி.சண்முகம் தகவல்

புதுடெல்லி: ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழுவும், பொதுக்குழு தீர்மானங்களும் செல்லும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பு நகல் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் பிரமாணப் பத்திரங்களை தேர்தல் ஆணையத்தில் மீண்டும் தாக்கல் செய்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் கூறியுள்ளார். அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “அதிமுகவின் 11.7.2022 அன்று இயற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தங்களை, குறிப்பாக பொதுச் செயலாளர் பதவி, … Read more

திமுகவில் இருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன்… உடல்நிலை தான் உண்மை காரணமா?

சுப்புலட்சுமி ஜெகதீசன்… நேற்றுவரை கொங்கு மண்டலத்தில் திமுகவின் முக்கிய நபர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தனர். கருணாநிதி ஆட்சிக் காலத்தில் எம்பி, எம்எல்ஏவாக இருந்ததுடன், மத்திய, மாநில அரசுகளில் அமைச்சராகவும் வலம் வந்தவர். 2021 இல் வெற்றிப் பெற்றிருந்தால் அநேகமாய் சபாநாயகராக கூட ஆகி இருப்பார். ஆனால் எதிர்பாராத விதமாக, மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளரான டாக்டர் சரஸ்வதியிடம் வெறும் 280 வாக்குகள் வித்தியாசத்தில் தோலவி கண்டார். தமது இந்த தோல்விக்கு ஈரோடு தெற்கு திமுக மாவட்ட செயலாளரும், … Read more

நாகப்பட்டினம் பஸ் நிலையத்தில் பெரிய மூட்டையால் பொதுமக்கள் பீதி

நாகை: நாகப்பட்டினம் பஸ் நிலையத்தில் கிடந்த பெரிய துணி மூட்டையால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. நாகை புதிய பஸ் நிலையத்தில் பட்டுக்கோட்டை, தூத்துக்குடி செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் துணியால் சுற்றிய மூட்டை கிடந்தது. அந்த மூட்டையில் அனுப்புனர் முகவரியில் வேதாரண்யம் தோப்புத்துறை சேர்ந்த முகவரியும் பெறுநர் முகவரியில் சிவபாலகிருஷ்ணன், தீபா, ஏ/9, திருமுறுகண்டி, எண் 31, முல்லைத்தீவு, லங்கா, செல்போன் எண் 0775228358 என்ற முகவரியும் இருந்தது. இதை பார்த்த பயணிகள், போலீசாருக்கு தகவல் … Read more

ஆ.ராசாவுக்கு எதிராக பாஜக சார்பில் மக்களிடம் கையெழுத்து இயக்கம்: அண்ணாமலை தகவல்

மதுரை: ”தமிழகத்தில் திமுக தான் மத அரசியல் செய்கிறது, பாஜக அல்ல” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். மதுரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களிடம் இன்று கூறியது: ”திமுக எம்.பி. ஆ.ராசாவின் கருத்து தமிழக மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது நீலகிரி தொகுதியில் 90 சதவீத மக்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அனைத்து மதத்தினரும் ஆ.ராசாவை கண்டித்து வருகின்றனர். ஆனால், வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அவர் … Read more

மியான்மரில் தவிக்கும் இந்தியர்கள், தமிழர்களை மீட்க ..! – வீரமணி அறிக்கை..!

மியான்மர் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களையும் தமிழர்களையும் மீட்க திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். மியான்மர் நாட்டில் இந்தியர்கள் ஆயுதப்பிடியில் சிக்கியுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் நாட்டின் கிழக்கு எல்லையில் கிரிப்டோ கரன்சி மோசடியில் ஈடுபடும் ஐடி நிறுவனங்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக அரசுக்கு தகவல் கிடைத்தது. இது போன்ற போலி நிறுவனங்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்று கடந்த 5ம் தேதி அரசு எச்சரிக்கை … Read more

கட்டணமில்லா பயண திட்டத்தில் தினமும் 38 லட்சம் பெண்கள் பயன்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

குன்னம்: தமிழக அரசின் இலவச பேருந்து திட்டத்தின் மூலம் தினமும் 38 லட்சம் பெண்கள் பயன்பெறுகின்றனர் என்று போக்குவரத்து துறை அமைச்சர் கூறினார். பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டார். பின்னர் அமைச்சர் கூறியதாவது;கலைஞர் ஆட்சியில்தான் சமுதாய வளைகாப்பு திட்டம் துவங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 400க்கும் மேற்பட்ட அரசு ஆரம்ப சுகாதார … Read more

குற்றச் செயல்களுக்கு துணை போனதாக புகார் – 2 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சட்டவிரோத செயலுக்கு துணைப்போனதாக எழுந்த புகாரையடுத்து இரு காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சென்னை கே.கே நகர் காவல் நிலைய குற்றப்பிரிவில் பணிபுரிந்து வருபவர் கருப்பையா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வடபழனி, எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த கருப்பையா மீது, ரவுடிகள் மற்றும் சமூகவிரோதிகளிடம் தொடர்பு வைத்துக்கொண்டு அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், குற்றவாளிகளுக்கு தகவல் கொடுத்து அவர்களை தப்பிக்க வைத்ததாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் இருந்தன. இதையடுத்து அப்போதைய இணை கமிஷனர் மகேஸ்வரி, … Read more

“டவுசரில் நூல் பிரிந்து பாவாடை ஆச்சு… தரமான சீருடை தாங்க” – கருத்துக்கேட்பில் அதிரவைத்த அரசுப் பள்ளி மாணவன்

மதுரை: “அரசு வழங்கிய சீருடை டவுசரில் நூல் பிரிந்து பாவாடை போல் ஆனது, இனிமேலாவது சீருடைய தரமான நூலில் தைத்துத் தரச் சொல்லுங்கள்” என மாநிலக் கல்விக் கொள்கை கருத்துக் கேட்பு கூட்டத்தில் பேசிய அரசுப் பள்ளி 4-ம் வகுப்பு மாணவனின் பேச்சால் அரங்கமே அதிர்ந்தது. மதுரையில் புதன்கிழமை மாநில கல்விக் கொள்கை குறித்து உயர்மட்டக்குழுவின் மண்டல அளவிலான கருத்துக் கேட்புக் கூட்டம் அக்குழுவின் தலைவரும், ஓய்வுபெற்ற புதுடெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியுமான த.முருகேசன் தலைமையில் ஆட்சியர் … Read more