போதையில் கார் ஓட்டி இரண்டு பெண்களை கொன்ற ஐ.டி. ஊழியர்.. ஓ.எம்.ஆர் அருகே நடந்த பகீர்!

சாலையை கடக்க முயன்ற இரு பெண்கள் மீது கார் மோதிய விபத்தில் இருவரும் பலியாகினர். குடிபோதையில் கார் ஒட்டிய நபர் கைது. செங்கல்பட்டு மாவட்டம், பழைய மாமல்லபுர சாலை, நாவலூர் அருகே நேற்றிரவு 11 மணியளவில் சாலையை கடக்க முயன்ற பெண்கள் இருவர் மீது ஐ.டி. ஊழியர் ஒருவர் அதிவேகமாக குடிபோதையில் காரை ஓட்டி வந்து மோதிய விபத்தில் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பணி முடித்து வீடு திரும்பிய போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அருகில் இருந்தவர்கள் இருவரையும் … Read more

புதுச்சேரியில் நிலத்தடி நீரை உறிஞ்சும் மதுபான ஆலைகளுக்கு அனுமதி அளிக்க பாஜக எதிர்ப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் நிலத்தடி நீரை உறிஞ்சும் புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி தர அம்மாநில பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு ஆட்சி அமைந்துள்ளது. பாஜக தலைமை அலுவலகத்தில் புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “நாராயணசாமி முதல்வராக இருந்தபோது ஆளுநர் கிரண்பேடி தன் அரசுக்கு முட்டுக்கட்டை போடுவதாக கூறி வந்தார். தற்போதைய முதல்வர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசை தன்னுடன் இணக்கமாக செயல்படுவதாக கூறி வருகிறார். … Read more

ஓபிஎஸ்ஸும் நாங்களும் ஒன்றாக இருக்கிறோம்: சசிகலா ஓப்பன் டாக்!

அதிமுகவின் பொதுச்செயலாளர் என உரிமை கோரிவரும் தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறார், அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். அதிமுகவில் அத்தனை அணிகளையும் இணைத்து தனது தலைமையில் வழிநடத்த உள்ளதாக சசிகலா கூறியுள்ளார். தஞ்சாவூரில் உள்ள தனது இல்லத்தில் அண்ணா பிறந்த நாளை கொண்டாடினார் சசிகலா. அண்ணா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அண்ணாவின் பாதையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அண்ணாவின் பிள்ளைகள் அனைவரும் ஒன்றாக இணைந்து அதிமுகவை … Read more

காலை உணவு திட்டத்தின் மெனு: சிறுதானியம் முதல் ரவா கிச்சடி வரை

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். மதுரை ஆதிமுலம் மாநகராட்சி பள்ளியில் வரலாற்று சிறப்புமிக்க இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பள்ளிக் குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தார். அப்போது, அருகில் அமர்ந்திருந்த குழந்தைகளுக்கும் தன் கையால் உணவை ஊட்டி மகிழ்ந்த முதலமைச்சர், எவ்வளவு நிதிச் சிக்கல் வந்தாலும், இந்த திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதே தன்னுடைய இலக்கு என்று சூளுரைத்தார். முதல் … Read more

தொடர்மழை இதமான காலநிலையால் நெல்லிக்காய் விளைச்சல் அமோகம்; விவசாயிகள் மகிழ்ச்சி

நிலக்கோட்டை: தொடர் மழை மற்றும் இதமான காலநிலையால் கொடைரோடு சிறுமலை அடிவாரப் பகுதியில் நெல்லிக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நிலக்கோட்டை அதனை சுற்றியுள்ள சிறுமலை அடிவாரப் பகுதிகளான பள்ளப்பட்டி, சடையாண்டிபுரம், கொடைரோடு, அம்மையநாயக்கனூர், காமலாபுரம், ஊத்துப்பட்டி, ஜம்புத்தூரக்கோட்டை ஆகிய பகுதிகளில் சமீப காலமாக நெல்லிக்காய் விளைச்சல் அதிகமாக செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஓராண்டாக பருவமழை முதல் சரியான நேரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் தொடர்ந்து இதமான காலநிலை நிலவுவதாலும் இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு … Read more

விருதுநகர்: பேருந்து – பைக் மோதிகொண்ட விபத்தில் தாய் மகன் உடல் நசுங்கி பலி.!

விருதுநகர் அருப்புகோட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த தாய்மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விருதுநகரில் இருந்து தனியார் பேருந்து ஒன்று 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அருப்புக்கோட்டை வழியாக சாயல்குடி நோக்கி அதிவேகமாக சென்று கொண்டு இருந்தது. அப்போது அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டி-விருதுநகர் பிரதான சாலையில் பேருந்து சென்று கொண்டிருக்கும்போது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. … Read more

புதுச்சேரி | ‘55 மாதங்களாக ஊதியமில்லை’ – வயிற்றில் ஈரத்துணி அணிந்து பாப்ஸ்கோ ஊழியர்கள் போராட்டம்

புதுச்சேரி: 55 மாதங்களாக ஊதியம் தராததால் புதுச்சேரி சட்டப்பேரவை அருகே வயிற்றில் ஈரத்துணி அணிந்து பாப்ஸ்கோ ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோவின் ஊழியர்கள் நலச்சங்கத்தினர் (ஏஐடியூசி) சட்டப்பேரவை அருகே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 55 மாத சம்பளம் வழங்க வேண்டும், தீபாவளி பஜார் மானியத்தொகை ரூ.62 லட்சம் வழங்க வேண்டும், பாப்ஸ்கோ ரேஷன் கடைகளுக்கு 6 ஆண்டு வாடகை பாக்கியை தர வேண்டும், மதுபான ஆலைகளை தனியாருக்கு வழங்கி பாப்ஸ்கோவை … Read more

முதல்வர் ஸ்டாலின் எடுத்த முயற்சிக்கு வெற்றி: நரிக்குறவர் இன மக்கள் நன்றி!

நரிக்குறவ இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி, பழங்குடியின தகுதி பெற்றுத் தந்தமைக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நரிக்குறவர் சமுதாய மக்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (15.9.2022) விருதுநகர் விருந்தினர் மாளிகையில், நரிக்குறவர் சமுதாய மக்கள் சந்தித்து, நரிக்குறவர் இன மக்கள் பயனடைய அவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி, பழங்குடியின தகுதி பெற்றுத் தந்தமைக்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை … Read more

சசிகலாவுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்று பாராட்டும் அதிமுகவின் ஜெயக்குமார்

சென்னை: முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு, அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலையின் கீழ்  அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு அதிமுக சார்பில், அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது . அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பல கருத்துக்களை தெரிவித்தார். அண்ணாவை ஒருமையில் திட்டி … Read more

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் கைது செய்து போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர். பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஸ்டீபன் அந்தோணிராஜ் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.