வரும் 17-ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற 17-ம் தேதி தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள சந்தித்தார். அப்போது அவர், “தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 17-ம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. சட்டப்பேரவை கூட்டத்தில், மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்படும். அதன்பின்னர், அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்பது … Read more

பாலியல் வழக்கில் கைதான ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமீன்

மதுரை: பாலியல் வழக்கில் கைதான அரசுப் பள்ளி ஆசிரியருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குண்ணாக்கவுண்டம்பட்டியைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியர் மருதை (59). இவர் பொம்மநாயக்கன்பட்டி அரசு உயர் நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வந்தார். பள்ளி மாணவ, மாணவிகளை அடித்து துன்புறுத்தியும், பாலியல் தொல்லை அளித்ததாகவும் மருதை மீது பள்ளியின் தலைமை ஆசிரியர் போலீஸில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து மருதை கைது செய்து சிறையில் … Read more

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்; அமலுக்கு வருமா ஆன்லைன் ரம்மி தடை சட்டம்?

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் அக்டோபர் 17ம் தேதி தொடங்கும் என அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பூதாகரமாகியுள்ள ஆன்லைன் ரம்மி தடைக்கு எதிரான சட்டம் அமலுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் இருந்தே ஆன்லைன் ரம்மி தொடர்பான தற்கொலைகள் நடந்து வருகிறது. அதுவும் முதன்முதலாக ஒரு பெண் ஆன்லைன் ரம்மியால் பணம் இழந்து தற்கொலை செய்துகொண்ட கொடுமையும் தமிழகத்தில் அரங்கேறியது. கடந்த மாதம் ஜூனில் மணலியை சேர்ந்த பவானி என்ற … Read more

தொடரும் மரணங்கள்… ஆன்லைன் ரம்மி தடைக்கு ஆளுநர் ஒப்புதல்

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து வங்கி ஊழியர் முதல் சாமானியர்கள்வரை தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். நேற்று திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்டார். இப்படி தொடர்ச்சியாக மரணங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இதற்கிடையே இந்த விளையாட்டை தடை செய்யக்கோரி தமிழ்நாடு அரசிடம்  பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்தன. இதனையடுத்து ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டம் செம்மைப்படுத்தப்பட்டு, கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் … Read more

பொன்னேரி நகராட்சியில் சேறும் சகதியுமாக மாறிய தாலுகா அலுவலக சாலை: சீரமைக்க வலியுறுத்தல்

பொன்னேரி: பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மெத்தனமாக நடைபெறுவதால், அங்கு தாலுகா அலுவலகத்துக்கு செல்லும் சாலை சேறும் சகதியுமாக மாறிவிட்டது. அப்பணிகளை விரைந்து முடித்து, அச்சாலையை விரைவில் சீரமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட தாலுகா அலுவலகம் செல்லும் சாலையில், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், சார்பு நீதிமன்றங்கள், ஆதார் இ-சேவை மையம், கிளைச் சிறை, தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனை உள்பட பொன்னேரி ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் ஏராளமான … Read more

"கடவுளை வழிபடுவது என்பது அவரவரின் தனிப்பட்ட உரிமை" – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

கடவுளை வழிபடுவது என்பது ஒவ்வொரு தனிநபருக்கும் அவரவர் தனிப்பட்ட நம்பிக்கையின்படி உள்ள உரிமை என சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை நீதிபதி தெரிவித்துள்ளார். மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சீனி என்பவர், உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், “மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா மேலநேரி கிராமத்தில் உள்ள அருள்மிகு வாலகுருநாதசுவாமி திருக்கோயில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினையால் கடந்த 12 ஆண்டுகளாக மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் அனைத்து தரப்புனரிடமும் சுமூக உறவு எட்டப்படாத நிலையில், … Read more

லஞ்சம் கேட்ட ஆடியோ வைரல்.. காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்..!

கடந்த 22-ம் தேதி, புதுச்சேரியில் இருந்து மதுரைக்கு ஒரு தனியார் பேருந்து வந்துகொண்டிருந்தது. மதுரை, ஒத்தக்கடை பகுதியில் இந்த பேருந்து வந்தபோது, வேகத்தடையில் அதிவேகமாக ஏறி இறங்கியதில் பேருந்தில் இருந்த மல்லிகா என்ற பெண் கீழே விழுந்தார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மல்லிகா, அங்கு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதனைத் தொடர்ந்து, அந்த பேருந்து ஜப்தி செய்யப்பட்டு ஒத்தக்கடை காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், … Read more

இந்து சமய அறநிலையத் துறையை சைவம், வைணவம் என இரண்டாக பிரிக்க வேண்டும்: திருமாவளவன் 

சென்னை: இந்து சமய அறநிலையத் துறையை சைவம், வைணவம் என்று இரண்டாக பிரிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மதுரை மாமன்ற உறுப்பினர் தெற்கு மாவட்ட செயலாளர் இன்குலாப் இல்லத் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினேன். அப்போது அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தேன். இந்து சமய அறநிலையத் துறையை சைவ சமய அறநிலையத் துறை … Read more

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை..! அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்..!

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் அக்டோபர் 17ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆன்லைன் ரம்மிக்கு எதிராக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநர் அனுமதி வழங்கினாரா? மீண்டும் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் மசோதா இயற்றப்படுமா என்ற கேள்விகள் எழுந்தன. அதே வேளையில், அண்மையில் திருச்சியை சேர்ந்த சந்தோஷ் என்ற பொறியியல் மாணவர் ஆன்லைன் ரம்மியில் பணமிழந்து ஓடும் ரயிலில் குதித்து தற்கொலை செய்துகொண்ட மாநிலம் முழுக்க கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தையொட்டி ட்விட்டரில் … Read more

திருப்பூரில் விவேகானந்தா சேவாலயம் குழந்தைகள் காப்பகத்தின் மீது நடவடிக்கை கோரி முற்றுகையிட்ட 100 பேர் கைது..!!

திருப்பூர்: திருப்பூரில் விவேகானந்தா சேவாலயம் குழந்தைகள் காப்பகத்தின் மீது நடவடிக்கை கோரி முற்றுகையிட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர். திருமுருகன்பூண்டி ஸ்ரீ விவேகானந்தா சேவாலயம் அருகே முற்றுகையில் ஈடுபட்டவர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். த.பெ.தி.க., இந்திய கம்யூனிஸ்ட், வி.சி.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அண்மையில் விவேகானந்தா சேவாலயம் குழந்தைகள் காப்பகத்தில் உணவு உட்கொண்ட 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.