இரட்டை குழந்தை விவகாரம்… நயன்தாரா, விக்னேஷ் சிவனிடம் விசாரணை?

தமிழக சுகாதாரத் துறையின் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் நிலை, பருவகால மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், காய்ச்சல் முகாம்களின் செயல்பாடுகள், மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரை கையிருப்பு போன்றவை தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் சென்னையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 46 சுகாதார மாவட்டங்களை சேர்ந்த சுகாதார இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், 36 மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர்கள், 64 மருத்துவமனை இயக்குனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியது: … Read more

சமவெளி மிளகு சாகுபடி: ஏக்கருக்கு 2 லட்சம் கூடுதல் வருமானம் அசத்தும் பொள்ளாச்சி விவசாயி

விவசாயத்தில் பல புதிய உத்திகளைக் கையாண்டு, லாபகரமான விவசாயத்தை சாத்தியமாக்கியிருக்கிறார் முன்னோடி விவசாயி வள்ளுவன். தொழில்முறையில் பொறியாளராக இருக்கும் இவர், விவசாயத்தை பொருளாதாரத்தை உயர்த்தும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் செய்ய முடியும் என்பதை சாதித்து காட்டியிருக்கிறார். இவர் பலரும் செயல் படுத்த தயங்கும் பல உத்திகளை தன் நிலத்தில் செயல்படுத்தி வெற்றி கண்டவர். பொள்ளாச்சி மாவட்டம், ஆனைமலை பகுதியில் வேட்டைகாரன்புதூரில் 26  ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது இவர் பண்ணை. பெரும்பாலனவர்கள் ஒற்றை பயிர் முறையை பின்பற்றும் சூழலில் … Read more

சாலையை சீரமைக்க வலியுறுத்தி 3 கிராம மக்கள் திடீர் மறியல்; போக்குவரத்து பாதிப்பு

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி 3 கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கல்பாக்கம் அடுத்த கானத்தூர், கொடப்பட்டினம், அங்காளம்மன் மீனவர்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக கூவத்தூர் மற்றும் கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்குத்தான் சென்று வர வேண்டும். அந்த வகையில் இந்த கிராமங்களில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையான கூவத்தூர் வரை 3 கிலோ மீட்டர் … Read more

அரசுப்பள்ளியில் வருவாய் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு – ஆசிரியர் இல்லாததால் கடும் எச்சரிக்கை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருவாய் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வகுப்பறையில் ஆசிரியர் இல்லாததால் உதவி தலைமை ஆசிரியரை கண்டித்தார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்துவருகிறது. இன்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்துவந்ததால் மழைநீர் குமாரபாளையம் அரசு ஆண்கள் மற்றும் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் தேங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கௌசல்யா, குமாரபாளையம் அரசுப் பள்ளிகளில் … Read more

திராவிடம் குறித்து ஆர்.என்.ரவி பேச்சு; ஆர்.எஸ்.எஸ்.காரர் போல பேசுகிறார் ஆளுநர்… தி.மு.க விமர்சனம்

திராவிடம் குறித்து ஆர்.என்.ரவி பேச்சு; ஆர்.எஸ்.எஸ்.காரர் போல பேசுகிறார் ஆளுநர்… தி.மு.க விமர்சனம் Source link

சென்னை விமான நிலையத்தில் ரூ.79 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தி வந்த பெண் கைது.!

சென்னை விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட ரூ.79 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த ஷர்மிளா நாகமுத்து என்ற பெண்ணிடம் சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது அவரது … Read more

சோவியத் யூனியன் நிலைதான் இந்தியாவிலும்: மத்திய அரசுக்கு வைகோ எச்சரிக்கை..!

மொழித் திணிப்பால் சோவியத் யூனியன் வீழ்ந்த நிலைதான் இந்தியாவிலும் ஏற்படும். எனவே, ஆட்சி மொழிக்கான பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு செயல்படுத்தக் கூடாது என வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆட்சி மொழிக்கான பாராளுமன்ற நிலைக்குழு, மொத்தம் 112 பரிந்துரைகள் கொண்ட 11-வது அறிக்கையை ஜனாதிபதிக்கு அனுப்பி இருக்கிறது. ஆட்சி மொழி எனும் பெயரால், முழுக்க முழுக்க ஹிந்தி மொழியை வலிந்து … Read more

கொலை வழக்குகளை விசாரிக்க காவல் துறையில் தனிப் பிரிவு: உயர் நீதிமன்றம் பரிந்துரை

மதுரை: கொலை வழக்குகளை விசாரிக்க காவல் துறையில் புதிதாக தனிப் பிரிவை உருவாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. திருச்சி அரியமங்கலத்தை சேரந்தவர்கள் சதீஷ்குமார், சங்கர். இவர்களுக்கு கொலை வழக்கில் திருச்சி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி 2 பேரும் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, என்.ஆனந்த் வெங்கடேஷ் … Read more

அன்னிய மரங்கள் அகற்றும் பணி: தனிக்குழுக்களை அமைக்க உத்தரவு!

தமிழக வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அகற்றப்பட்ட இந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு காகித நிறுவனத்துக்கு வழங்குவது குறித்து உத்தரவுகளை பிறப்பிக்க தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அகற்றப்பட்ட அன்னிய மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக, முதன்மை வனப் பாதுகாவலர், குழு ஒன்றை அமைத்துள்ளதாகக் கூறி அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து … Read more

கோவையில் தடையை மீறி பிளாஸ்டிக் பைகள் விற்பனை; அதிரடி காட்டிய அதிகாரிகள்!

Plastic Ban in Tamil Nadu: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் உள்ள வணிக நிறுவனங்களில் வியாபாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பண்டிகையை தேவையான பொருட்களை வாங்கி செல்கிறார்கள். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிலர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் வந்ததை அடுத்து, ஆய்வு மேற்கொண்டனர்.   … Read more