விராலிமலை, கீரனூர் வழித்தடத்தில் கூடுதலாக அரசு பேருந்து இயக்க வேண்டும்-பள்ளி மாணவர்கள் கோரிக்கை

விராலிமலை : விராலிமலை-கீரனூர் வழித்தடத்தில் செல்லும் அரசு பேருந்தை காலை, மாலை என இரு வேளைகளில் அதிகப்படுத்தி இயக்குமாறு பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விராலிமலையில் இருந்து கீரனூர் வழித்தடத்தில் அரசு பேருந்து இயங்கி வருகிறது. இந்த பேருந்தில் பேரம்பூர், நால்ரோடு, நீர் பழனி, ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் விராலிமலையில் இருந்து கீரனூருக்கும், கீரனூரில் இருந்து விராலிமலைக்கும் பயணித்து பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் காலை, மாலை பள்ளி தொடங்கும் நேரம் மற்றும் பள்ளி … Read more

`வங்கி கடனாளிகள் கூடுதல் வட்டி கட்ட ரெடியாகுங்க’- மீண்டும் அதிகரிக்கும் ரிப்போ ரேட்?

வீடு வாங்குவதற்கோ, வாகனம் வாங்குவதற்கோ அல்லது உயர் கல்விக்காகோ நீங்கள் வங்கியில் கடன் வாங்கி இருந்தால், கூடுதல் வட்டி கட்டுவதற்கு உங்களை நீங்கள் இப்போதே தயார்படுத்திக் கொள்ளுங்கள். விரைவிலேயே வங்கிகளிலிருந்து வாங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் மீண்டும் அதிகரிக்க உள்ளன. ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமையன்று வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ ரேட் என அழைக்கப்படும் வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்த திட்டமிட்டுள்ளது என வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் கடன்களுக்கு … Read more

சிலைகளுக்கு பாதுகாப்பு கொடுங்க.. போலீசாருக்கு கமிஷனர் உத்தரவு..!

சென்னை முழுவதும் உள்ள பெரியார் மற்றும் அண்ணா சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, சென்னை முழுவதும் உள்ள 47 பெரியார், 17 அண்ணா சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே அண்ணாவின் முழு உருவ சிலை உள்ளது. இந்த சிலைக்கு நேற்று அதிகாலை யாரோ சிலர் செருப்பு மாலை அணிவித்து, முகத்தை சேதப்படுத்தி உள்ளனர். மேலும் திமுக எம்பி ஆ.ராசா படத்தை கரும்புள்ளி … Read more

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். முதுநிலை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பெறப்பட்டது. அனைத்து விண்ணப்பங்களும் சான்றிதழ்களும் பரிசீலனை செய்யப்பட்டு இன்று (செப்.28) அதற்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “2022-2023 ஆம் ஆண்டிற்கான மருத்துவ … Read more

அதிமுகவின் தென் மண்டல தளபதி யார்? எடப்பாடியை வரவேற்க தயாராகும் ஆர்.பி.உதயகுமார்

அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கிய பின்னர் தென் மண்டலத்தில் தனது செல்வாக்கு சரிந்துவிடக்கூடாது என்பதற்காக தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஆர்.பி.உதயகுமாருக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆர்.பி.உதயகுமாரே பதிலளித்து வந்தார். இதனால் ஓபிஎஸ் வகித்து வந்த எதிர்கட்சி துணைத் தலைவர் பதவியை ஆர்.பி.உதயகுமாருக்கு எடப்பாடி பழனிசாமி அளித்தார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி புகழ்பாடும் ஆர்.பி.உதயகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகாசி, மதுரை ஆகிய பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமிக்கு … Read more

தவறான சிகிச்சையால் சிறுமிக்கு உடல்நலம் பாதிப்பு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல்-டிஎஸ்பி பேச்சுவார்த்தை

வானூர் : தவறான சிகிச்சை அளித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, புதுவையில் சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கிளியனூரை சேர்ந்தவர் சுகுமார். இவரது ஐந்தரை வயது மகள் சஞ்சனா. இவருக்கு காய்ச்சல் காரணமாக உப்புவேலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கம்பவுண்டராக வேலை பார்க்கும் கணேசன் (54) என்பவரை சந்தித்து உள்ளனர். அவர் தைலாபுரத்தில் உள்ள … Read more

`அன்பில் மகேஷ்க்கு பன்றிக் காய்ச்சல் உறுதியாகியுள்ளது’- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஷின் உடல்நிலை சீராக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் நேற்று முன் தினம் அமைச்சரவை கூட்டம் நடந்த முடிந்த பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில்,  டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. கொரோனா … Read more

போராட்டம் நடத்தியது பிஎஃப்ஐ.. ரூ.5.06 கோடி கேட்குது மாநில அரசு..!

‘கேரளாவில், பிஎஃப்ஐ அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் சேதப்படுத்தப்பட்ட பொருட்களுக்கு ரூ.5.06 கோடி இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்’ என, கேரள மாநில சாலை போக்குவரத்துக் கழகம் உயர்நீதிமன்றத்தில் கோரியுள்ளது. பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுதல், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆள் சேர்த்தல், பயிற்சி நடத்தல் உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை இணைந்து கேரளா, தமிழகம் உட்பட நாடு முழுவதும் கடந்த 22-ம் தேதி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது 100-க்கும் மேற்பட்ட … Read more