வனப்பகுதிகளிலுள்ள அந்நிய மரங்களை அகற்ற குழுக்கள் அமையுங்கள் – வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

தமிழக வனப்பகுதிகளில் உள்ள அந்நியமரங்களை அகற்றும் பணிகளை மேற்கொள்வது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அந்நிய மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக, முதன்மை வனப் பாதுகாவலர், குழு ஒன்றை அமைத்துள்ளதாகக் கூறி அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்ததால், அறிக்கையை திரும்பப் பெறுவதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வனப்பகுதிகளில் அந்நிய மரங்களை அகற்றுதல், கண்காணித்தல் மற்றும் பராமரித்தல் பணிக்கு தனித்தனி குழுக்களை அமைக்க முதன்மை தலைமை வனப் பாதுகாவலருக்கு உத்தரவிட்டு, விசாரணையை 18ம் தேதிக்கு … Read more

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், திண்டுக்கல் மாவட்டம் களத்துப்பட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “அதிமுக கட்சியில் நிறுவனர் எம்ஜிஆர், பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய விதிகளுக்கு முரணாக ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இரட்டை தலைமை முறையை அகற்றிவிட்டு, ஒற்றை தலைமையை உருவாக்கும் … Read more

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை எதிரொலி மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 35,000 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 35,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் நள்ளிரவில் மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை வலுத்துள்ளதால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 9,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று … Read more

தென்னை மரத்தை தாக்கிய இடி : பல வீடுகளில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் சேதம்

தென்னை மரத்தை தாக்கிய இடி : பல வீடுகளில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் சேதம் Source link

கௌரவ விரிவுரையாளர்கள் பணி நீக்கம்? அப்படி ஒரு உத்தரவே போடவில்லை என உயர்கல்வித்துறை விளக்கம்!

உயர்கல்வி துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் விளக்கம்!  சென்னையில் போராட்டம் நடத்தி வரும் கௌரவ விரிவுரையாளர்களை நிரந்தர பணிநீக்கம் செய்ய வேண்டும் என அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கு உயர்கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. பணி நீக்கம் செய்யப்படும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு பணி அனுபவச் சான்று தரக்கூடாது நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கூடாது கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தை கைவிட கல்லூரி முதல்வர்கள் தெரிவிக்க வேண்டும். பணி நீக்கம் செய்யப்படும் இடங்களுக்கு … Read more

அரசின் சார்பு நிறுவன ஊழியர்களுக்கு உடனே தீபாவளி போனஸ் அறிவிப்பீர்: தினகரன்

சென்னை: “போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட அரசின் சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிக்க வேண்டும்” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “போக்குவரத்துக் கழகம், மின்சார வாரியம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் உள்ளிட்ட தமிழக அரசின் சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும். கரோனாவைக் காரணம் காட்டி கடந்த ஆண்டுகளில் 10 சதவீதமாக … Read more

அவர் அதுக்கு முயற்சிக்கிறார்… திருமா மீது இந்து அமைப்பு பகிரங்க குற்றச்சாட்டு!

மணிரத்னம் இயக்கத்தில் அண்மையில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வசூலை வாரி குவித்து வருகிறது. இந்த திரைப்படம் வெளியான பிறகு ராஜ ராஜ சோழன் குறித்தும், ஹிந்து மதம் பற்றியும் அரசியல் கட்சித் தலைவர், சினிமா பிரபலங்கள் தெரிவித்துவரும் கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ‘ராஜராஜ சோழன் தமிழ் பேரரசன்; அவர் இந்து அல்ல’ என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார். “ராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு. திருநீறு பட்டை வேறு; திருமண் … Read more

கொடநாடு வழக்கு ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு

ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான ஆவணங்களை நீலகிரி தனிப்படை போலீசார், சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். நீலகிரி மாவட்டம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசார் சசிகலா, முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி உட்பட 326 பேரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, பல்வேறு சாட்சிகளிடம் கோவையில் உள்ள பிஆர்எஸ் அலுவலகத்தில் ஐஜி சுதாகர் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி  வந்தனர். இதற்கிடையே, இவ்வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதனால், … Read more

திருச்சி மத்திய சிறையில் சிக்கிய கஞ்சா, செல்போன், சிம் கார்டு! 4 பேர் மீது வழக்குப்பதிவு

திருச்சி மத்திய சிறைச்சாலையில் கஞ்சா, செல்போன், சிம் கார்டுகள் வைத்திருந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மத்திய சிறையில் ஆயுள் கைதிகள், தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள பல்வேறு அறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், கஞ்சா, செல்போன் பயன்படுத்துவதாக சிறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து திருச்சி மத்திய சிறை அதிகாரி சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் ஜெயிலில் … Read more