முஸ்லீமா? அப்போனா வீடு கிடையாது! பிரபல யூடியூப் ரிவியூவருக்கு நேர்ந்த கொடுமை!

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக மதப் பிரச்சினைகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட இந்தியாவில் மதவெறி தாக்குதல்கள் அதிக அளவில் தினமும் நடைபெறுகிறது. இந்து மதத்தை வைத்து இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர்களை தாக்கும் சம்பவங்கள் பற்றிய செய்திகளை நாம் தினமும் பார்த்து கடந்திருப்போம்.  எங்கோ வெளி மாநிலங்களில் நடக்கும் விசயம் என நாம் பார்த்த சம்பவங்கள் தற்போது தமிழ்நாட்டில் நடக்க தொடங்கியுள்ளது.  மத அடையாளங்களுக்காக ஒருவரை நேரடியாக தாக்குவது மட்டுமின்றி மறைமுக தாக்குதல்களும் நடைபெறுகிறது.   திண்டுக்கல்லை சேர்ந்த … Read more

படியில் பயணம்..நொடியில் மரணம்!: விருதுநகர் அருகே அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த மாணவன் கீழே விழுந்து படுகாயம்..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த மாணவன், சாலையோரத்தில் இருந்த லாரி மீது உரசியதில் தவறி விழுந்து படுகாயமடைந்தான். காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான். படியில் பயணம்., நொடியில் மரணம் என்பதால் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.

”என் கணவர் எதுவுமே செய்யல”.. கடிதம் எழுதிவைத்துவிட்டு மகனுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!

பொன்னமராவதி அருகே கடிதம் எழுதி வைத்துவிட்டு எட்டு வயது மகனுடன் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொன்னமராவதியில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர்கள் வீரானந்தம் – ஜெயபாரதி தம்பதியர். இவர்களுக்கு 8 வயதில் ஸ்ரீஹரி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வீரானந்தம் பக்ரைன் நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது மனைவி மற்றும் மகனின் குடும்பச் செலவிற்கு பணம் அனுப்பவில்லை … Read more

முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு மோடி வர வேண்டும் என்பது ஆசை தான்! – அண்ணாமலை!

வரும் 30ம் தேதி பாரத பிரதமர் மோடி தமிழகம் வருகை இல்லை! ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அக்டோபர் 30 ஆம் தேதி குருபூஜை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அமைப்புகளும் நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்த உள்ளனர். இதனிடையே ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 30ம் தேதி பயணம் செய்கிறார் என்று அதிகாரபூர்வ … Read more

இந்திய வட்டு எறிதல் வீராங்கனை கமல்பிரீத் கவுருக்கு 3 ஆண்டுகள் தடை!!

இந்திய வட்டு எறிதல் வீராங்கனை கமல்பிரீத் கவுர் போட்டிகளில் பங்குபெற 3 ஆண்டுகள் தடை விதித்து தடகள ஒருமைப்பாடு பிரிவு உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட மருந்தை கமல்பிரீத் கவுர் பயன்படுத்தியதற்காக தடகள ஒருமைப்பாடு பிரிவு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 2020-ம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட கமல்பிரீத் கவுர், தடைசெய்யப்பட்ட ஸ்டானோசோலோல் என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தியதற்காக மூன்று ஆண்டுகள் தடை செய்யப்பட்டதாக தடகள ஒருமைப்பாடு பிரிவு அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 7-ம் … Read more

கொலை செய்யப்பட்டவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.. வியப்பை ஏற்படுத்திய போலீசார்!

கடலூர் மாவட்டத்தில் கொலை செய்யப்பட்டவர் மீது 3 தினங்கள் கழித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குறவன் பாளைத்தை சேர்ந்த சிவமணி என்பவர்  தவறாக நடந்ததால் உறவுக்கார சிறுமி கர்ப்பமடைந்த நிலையில்  சிறுமியின் தாயும் தாய்மாமனும் அவரது நண்பரும் சேர்ந்து சிவமணியை கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் மூவர் சிறையில் உள்ள நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி காவல்நிலையத்தில் சிவமணி மீது புகார் அளித்தார்.  புகாரை பெற்ற போலீசார் கொலை செய்யப்பட்ட சிவமணி மீது போக்சோ … Read more

’பாஜகவின் வளர்ச்சி முதல்வர் ஸ்டாலினுக்கு பயத்தைக் கொடுத்துள்ளது’ – அண்ணாமலை

சென்னை: “முதல்வருக்கு இரண்டு விதமான பயம் வந்திருக்கிறது. ஒன்று அவருடைய கட்சியில் யார் என்ன செய்வார்கள்? எப்போது செய்வார்கள்? எப்படி செய்வார்கள்? என்பது புரியாமல் ஒரு பயத்தில் இருக்கிறார். இரண்டாவது பயம் பாஜகவின் வளர்ச்சி” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், மத்திய அரசு இந்தியை மீண்டும் திணிக்க முயற்சிப்பதாக ஆளுங்கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் … Read more

திருநங்கைகளுக்கு காட்டுக்குள் நடந்த கொடுமை! அதிரடி காட்டிய போலீஸ்! என்ன நடந்தது?

Attack Transgender in Tuticorin: தூத்துக்குடியில் திருநங்கைகளுக்கு முடியை வெட்டி துன்புறுத்திய இளைஞர்களை கைது செய்துள்ளதாக தமிழக தென்மண்டல காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பகுதியில் திருநங்கை ஒருக்கு முடியை வெட்டி இளைஞர்கள் சிலர் கொடுமைப்படுத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கழுகுமலையை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அந்த பகுதியில் உள்ள இரண்டு திருநங்கைகளை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதில் ஒரு  திருநங்கையின் முடியை வெட்டி … Read more

காட்பாடி திருவலம் அருகே முதியவர்களை துன்புறுத்திய விவகாரம்: கருணை இல்லத்துக்கு சீல்

வேலூர்: காட்பாடி திருவலம் அருகே குகையநல்லூர் கிராமத்தில் முதியவர்களை துன்புறுத்திய விவகாரம் தொடர்பாக கருணை இல்லத்துக்கு சீல் வைக்கப்பட்டது. புனித ஜோசப் கருணை இல்லத்துக்கு காட்பாடி வட்டாட்சியர் ஜெகன் டி.எஸ்.பி. பழனி தலைமையிலான குழு சீல் வைத்தது.