நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து நிற்க தயார்- செல்லூர் ராஜூ!

மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுகவின் 50வது நிறைவு விழாவை கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அவர்; “சந்திரமுகி படத்தில் பேயை பார்க்க சென்று மாட்டிகொண்டு புலம்பித் தவித்த வடிவேல் போல, முதலமைச்சர் ஸ்டாலினின் நிலைமை இருக்கிறது” என்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ, “எந்த இயக்கத்திலும் மக்களை வசீகரிக்க கூடிய, வலிமையான தலைவர் இல்லை. அதிமுகவில் தற்போது வலிமையான தலைவர் இல்லை … Read more

மன்னார்குடி கோயிலில் தகர பெட்டிக்குள் 3 சாமி சிலைகள்

மன்னார்குடி: திருவாருர் மாவட்டம் மன்னார்குடி கீழப்பாலம் அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் ஒம்மடியப்ப அய்யனார் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்குள் தீப்பாய்ந்தம்மன் பிரகாரம் உள்ளது. நேற்று மாலை பக்தர்கள் சாமி கும்பிட கோயிலுக்கு சென்றனர். அப்போது தீப்பாய்ந்தம்மன் பிரகாரம் அருகில் சந்தேகத்துக்கு இடமான வகையில் தகரப்பெட்டி ஒன்று இருந்தது. இதுகுறித்து மன்னார்குடி நகர காவல் நிலையம், வருவாய்த்துறைக்கு பக்தர்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் சென்று தகர பெட்டியை திறந்து பார்த்தனர். … Read more

குடும்பத்தினரை தாக்கியதாக சிறப்பு எஸ்.ஐ மீது வழக்குப்பதிவு: பல பெண்களுடன் தொடர்பு காரணமா?

ஓமலூர் அருகே தொளசம்பட்டி காவல் நிலையம் அருகில் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு மனைவி மற்றும் மகன்களை கொடுமைப்படுத்தியதாக சிறப்பு உதவி ஆய்வாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள அமரகுந்தி பகுதியை சேர்ந்தவர் 50 வயதான கோவிந்தராஜ். இவர் தற்போது சேலம் அருகேயுள்ள மல்லூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இரண்டு மகன்களும் … Read more

ட்ரெண்ட்ஸ் இழப்பீடு வழங்க உத்தரவு.. திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி..!

ட்ரெண்ட்ஸ் இழப்பீடு வழங்க உத்தரவு.. திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி..! Source link

நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் திருப்பூர் சார் கலெக்டராக நியமனம்..!!

1984-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கை கொடுக்கும் கை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகர் சின்னி ஜெயந்த். இவர் 300-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், 30 வருடங்களுக்கு மேல் இவர் திரைத்துறையில் நடித்து வருகின்றார். நடிகர் மட்டுமல்லாது தயாரிப்பாளர், இயக்குநர், மிமிக்ரி கலைஞர் என பன்முகம் கொண்ட இவர், பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் பல்வேறு தொலைகாட்சி நிகழ்சிகளிலும் நாடகங்களிலும் பணியாற்றி உள்ளார். பல குரல் ஆராய்ச்சி … Read more

காலி மதுபாட்டில்களை திரும்பபெறும் திட்டம் | கோவை, பெரம்பலூரில் நவ.15 முதல் அமல்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை சோதனை அடிப்படையில் கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நவம்பர் 15 முதல் அமல்படுத்த வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்று விட்டு, பின் காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அத்தொகையை திரும்ப வழங்கலாம் … Read more

இரட்டை குழந்தை விவகாரம்… நயன்தாரா, விக்னேஷ் சிவனிடம் விசாரணை?

தமிழக சுகாதாரத் துறையின் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் நிலை, பருவகால மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், காய்ச்சல் முகாம்களின் செயல்பாடுகள், மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரை கையிருப்பு போன்றவை தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் சென்னையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 46 சுகாதார மாவட்டங்களை சேர்ந்த சுகாதார இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், 36 மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர்கள், 64 மருத்துவமனை இயக்குனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியது: … Read more

சமவெளி மிளகு சாகுபடி: ஏக்கருக்கு 2 லட்சம் கூடுதல் வருமானம் அசத்தும் பொள்ளாச்சி விவசாயி

விவசாயத்தில் பல புதிய உத்திகளைக் கையாண்டு, லாபகரமான விவசாயத்தை சாத்தியமாக்கியிருக்கிறார் முன்னோடி விவசாயி வள்ளுவன். தொழில்முறையில் பொறியாளராக இருக்கும் இவர், விவசாயத்தை பொருளாதாரத்தை உயர்த்தும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் செய்ய முடியும் என்பதை சாதித்து காட்டியிருக்கிறார். இவர் பலரும் செயல் படுத்த தயங்கும் பல உத்திகளை தன் நிலத்தில் செயல்படுத்தி வெற்றி கண்டவர். பொள்ளாச்சி மாவட்டம், ஆனைமலை பகுதியில் வேட்டைகாரன்புதூரில் 26  ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது இவர் பண்ணை. பெரும்பாலனவர்கள் ஒற்றை பயிர் முறையை பின்பற்றும் சூழலில் … Read more

சாலையை சீரமைக்க வலியுறுத்தி 3 கிராம மக்கள் திடீர் மறியல்; போக்குவரத்து பாதிப்பு

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி 3 கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கல்பாக்கம் அடுத்த கானத்தூர், கொடப்பட்டினம், அங்காளம்மன் மீனவர்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக கூவத்தூர் மற்றும் கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்குத்தான் சென்று வர வேண்டும். அந்த வகையில் இந்த கிராமங்களில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையான கூவத்தூர் வரை 3 கிலோ மீட்டர் … Read more

அரசுப்பள்ளியில் வருவாய் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு – ஆசிரியர் இல்லாததால் கடும் எச்சரிக்கை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருவாய் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வகுப்பறையில் ஆசிரியர் இல்லாததால் உதவி தலைமை ஆசிரியரை கண்டித்தார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்துவருகிறது. இன்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்துவந்ததால் மழைநீர் குமாரபாளையம் அரசு ஆண்கள் மற்றும் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் தேங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கௌசல்யா, குமாரபாளையம் அரசுப் பள்ளிகளில் … Read more