6 பேர் கொண்ட கும்பலால் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டி படுகொலை

தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோவிலைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு சாமிநாதன், மாரியப்பன் என இரண்டு மகன்களும், தையல்நாயகி என்ற ஒரு மகளும் உள்ளனர். இதில் மகள் தையல் நாயகிக்கு அரியலூர் மாவட்டம் அணைகுடம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமண நடைபெற்றது. திருமணத்திற்கு வந்திருந்த சாமிநாதன் மண்டபத்திற்கு எதிரே இருந்த பெட்டி கடைக்கு வந்துள்ளார்.  அப்போது மூன்று இருசக்கர மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் சாமிநாதனை சரமாரியாக … Read more

ஈரோடு அந்தியூர் அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: படுகாயமடைந்த 35 பேர் மருத்துவமனையில் அனுமதி

ஈரோடு: அந்தியூரில் இருந்து கொங்கடை மலை கிராமத்துக்கு சென்ற அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணித்த 35 பேரும் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

தேசிய நெடுஞ்சாலையில் உருண்டோடிய ஆட்டோ: சிதறி விழுந்த பயணிகள் – அதிர்ச்சி சிசிடிவி காட்சி

உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த ஆட்டோ திடீரென சாலையில்  கவிழ்ந்து உருண்டோடியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாதூர் கிராமத்திற்கு துக்க நிகழ்ச்சிக்காக ஆட்டோவில் சென்றுவிட்டு வீடு திரும்பினர். இந்த ஆட்டோவை அப்பு என்பவர் ஓட்டிக்கொண்டு வந்தார். அப்போது தனியார் திருமண மண்டபம் அருகே வந்த ஆட்டோ திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் தலைகீழாக கவிழ்ந்து உருண்டோடியது. அப்போது அதே திசையில் வந்த இருசக்கர வாகனம் அந்த … Read more

அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி விசாரணை காலம் தாழ்ந்த நடவடிக்கை: இபிஎஸ் விமர்சனம்

திருவள்ளூர்: “அதிமுக அலுவலக பிரச்சினைக்கு நீதிமன்றம் சென்ற பிறகுதான் இன்று சிபிசிஐடி வந்து விசாரிக்கின்றனர். பலமுறை புகார் அளித்தும், காவல்துறை மெத்தனப்போக்குடன் இருந்தது. நாங்கள் நீதிமன்றம் சென்றோம், நீதிமன்ற உத்தரவின்பேரில்தான் சிபிசிஐடி இன்று விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்து வருகின்றனர்” என்று அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் அதிமுக நிர்வாகி இல்ல விழாவில் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். … Read more

இனிமேல் அங்கு தான் முதல் ஆய்வு.. ஆசிரியர்களுக்கு 'செக்' வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

தருமபுரி அரசு மருத்துக் கல்லூரி கலையரங்கில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள கல்வி அதிகாரிகளுடனான மண்டல அளவிலான 2-ம் கட்ட ஆலோனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தருமபுரி எம்.பி செந்தில்குமார் ஆகியோர் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: “நான்கு மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் பள்ளிகளுக்கு … Read more

ஐரோப்பா பெண்ணுக்கும் திருமங்கல இளைஞருக்கும் டும்டும்டும்

Madurai News: மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த ராமநாத சுவாமி கோயிலில், காளிதாஸ் என்ற இளைஞர் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த தனது காதலி ஹானா பங்க்லோனாவை திருமணம் செய்தார். மதுரையை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஐரோப்பா பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் காளிதாஸ். இவருக்கும் ஐரோப்பா, செக் குடியரசை சேர்ந்த கானாபம்குலோவா என்ற பெண்ணுக்கும் இந்து முறைப்படி ராமேஸ்வரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் இன்று … Read more

12 மாநிலங்கள் வழியாக காஷ்மீர் வரை நடைபயணம்: குமரியில் இருந்து ராகுலின் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்தில் இருந்து ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகே இருந்து இன்று (7ம் தேதி) மாலை தொடங்கினார். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தவும் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் … Read more

தருமபுரி: 2 குழந்தைகளுடன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட தாய்!

தருமபுரி மாவட்டத்தில் தாய், இரண்டு குழந்தைகள் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டனர். தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அடுத்த தொட்டபாவளி காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த விவசாயி மணிகண்டன்-லட்சுமி தம்பதியினருக்கு பிரசாந்த் (4), லதா (6 மாதம்) என இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், கணவன் – மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பப் பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன், லட்சுமி தனது இரு குழந்தைகளுடன் வீட்டு விட்டு வெளியில் சென்றதாக கூறி, அவரது … Read more

விவேகானந்தர் நினைவிடம், திருவள்ளுவர் சிலையை பார்வையிட்ட ராகுல் காந்தி

கன்னியாகுமரி: ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்ளும் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவிடம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டார். காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய அளவில் கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடையச் செய்யவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொள்கிறார்.இதற்காக விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து அங்கிருந்து, கன்னியாகுமரி வந்தடைந்தார். நடைபயணத்தை தொடங்குவதற்கு முன்னர், பூம்புகார் படகுப் … Read more

நடத்துநர்களுக்கு இலக்கு நிர்ணயிப்பதா? ராமதாஸ் கண்டனம்!

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் வருவாயை பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் ஒரு கட்டமாக நடத்துநர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில் போக்குவரத்துக்கழக வருவாயை அதிகரிக்க சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் அதற்கு மாறாக நடத்துனருக்கு இலக்கு நிர்ணயித்து கொடுமைப்படுத்த வேண்டாம் என பாமக நிறுவனர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காக, ஒவ்வொரு பேருந்தின் மூலமும் ஒவ்வொரு சுற்றுமுறைக்கும் (ஷிஃப்ட்) ஒரு குறிப்பிட்ட தொகையை வருவாயாக ஈட்ட வேண்டும் என்று போக்குவரத்துக் … Read more