செல்போனில் மூழ்குவதால் குடும்பத்தினர் பேசுவதே குறைந்தது ஆன்லைன் விளையாட்டை தடை செய்வது இயலாத காரியமாக உள்ளது: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை: ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது இயலாத காரியமாக உள்ளது. செல்போனில் மூழ்குவதால் பெற்றோர், குழந்தைகள் பேசுவதே குறைந்துள்ளது என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர். நாகர்கோவிலை சேர்ந்த ஒரு பெண், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தனியார் கல்லூரியில் மகளை கடந்த 6ம் தேதி முதல் காணவில்லை. மகளுக்கு பப்ஜி மற்றும் ஃபிரீ பயர் ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக ஆர்வம் உண்டு. இந்த விளையாட்டுகள் மூலம் ஜெப்ரின் என்ற இளைஞர் பழக்கமாகி உள்ளார். … Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

தமிழகத்தில் தஞ்சாவூர், கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று இடிமின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர்,கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, … Read more

திருவாரூரில் கனமழை 25,000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மூழ்கியது

திருவாரூர்: திருவாரூரில் கனமழையால் 25 ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. தமிழகத்தில் பல இடங்களில் கடந்த 26ம் தேதி நள்ளிரவு முதல் நேற்றுமுன்தினம் காலை வரை பலத்த மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று அதிகாலையும் மழை பெய்தது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் விடிய விடிய மழை கொட்டியது. திருவாரூர், நன்னிலம் பகுதியில் நேற்று அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கடந்த … Read more

“இது தொழிலாளர்களின் விடியலுக்கான திமுக அரசு” – தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன்

சென்னை: “திமுக அரசு, தொழிலாளர்களின் விடியலுக்கான அரசு” என்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் தெரிவித்தார். தொழிலாளர் நலத் துறை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் பேசுகையில், “தமிழக முதல்வர் தலைமையிலான அரசு மக்களின் அரசு. தொழிலாளர்களுக்கான அரசு. இந்த அரசு தொழிலாளர்களின் விடியலுக்கான அரசு. இவ்வரசாங்க தொழிலாளர் துறையானது சிறப்பான முறையில் செயலாற்றி வருகிறது. இத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்த அனைத்து அலுவலர்களும் சிறந்த முறையில் இத்துறை செயல்பட நாம் … Read more

சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு சேலம் முன்னாள் எஸ்பி சாட்சியம்

விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி மற்றும் அப்போதைய செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகியோர் மீதான வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இவ்வழக்கு நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு சாட்சியான சேலம் மாவட்ட முன்னாள் எஸ்பி குணசேகரன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து விசாரணையை மீண்டும் … Read more

சசிகலா மேல்முறையீட்டு வழக்கு: அக்.26-ல் இறுதி விசாரணை

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி சசிகலா தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை இறுதி விசாரணைக்காக சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அதிமுக பொது செயலலராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கட்சியின் பொது செயலாளராக வி.கே.சசிகலாவும், துணை பொது செயலாளராக டிடிவி தினகரனும் தேர்ந்தெடுத்துள்ளதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற … Read more

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் உள் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை: ஐகோர்ட் கிளையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்

மதுரை: முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் வன்னியர் உள் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை என டிஆர்பி தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் மனு முடித்து வைக்கப்பட்டது. சீர் மரபினர் நலச்சங்க தலைவர் ஜெபமணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் மற்றும் கணினி பயிற்றுநர் நியமனம் தொடர்பான அறிவிப்பு கடந்தாண்டு ஆசிரியர் தேர்வாணையத்தால் வெளியானது. சான்றிதழ் சரிபார்ப்புக்கான தகுதியானோர் பட்டியல் கடந்த ஆக. 28ல் வெளியானது. இதில், எம்பிசி, எம்பிசி … Read more

கட்சிகாரர்களுக்கு மட்டும் மணல் அள்ள அனுமதி : தி.மு.க எம்பியின் சர்ச்சை பேச்சு… வைரல் வீடியோ

கட்சிகாரர்களுக்கு மட்டும் மணல் அள்ள அனுமதி : தி.மு.க எம்பியின் சர்ச்சை பேச்சு… வைரல் வீடியோ Source link

‘படிப்பை தொடர முடியாதவர்களை கருத்தில் கொண்டே புதிய கல்வி கொள்கை உருவாக்கம்’ – உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து

மதுரை: ‘குடும்ப சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படிப்பை தொடர முடியாத பலரின் நிலையை கருத்தில் கொண்டு தான் புதிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது’ என உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் வஹிதா பேகம். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் திண்டுக்கல் தொலைதூர கல்வி திட்ட மையத்தின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டார். பின்னர் திறந்த நிலை பல்கலைக்கழக பட்டத்தின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டதால், பதவி இறக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து வஹிதா பேகம் உயர் … Read more

தனுஷ்கோடி வந்த 6 பேர் கைது இலங்கை கடற்படை நடவடிக்கை

ராமேஸ்வரம்:  இலங்கையில் இருந்து நேற்று முன்தினம் இரவில் படகில் வந்த 3 சிறுவர்கள் உள்ளிட்ட 6 இலங்கை தமிழர்கள்  ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடல் மணல் திட்டு பகுதியில் படகோட்டிகளால் இறக்கி விடப்பட்டதாகவும், மணல் திட்டில் இவர்கள் தவிப்பதாகவும் நேற்று அதிகாலை தகவல் பரவியது. தொடர்ந்து மரைன் போலீசார், தனுஷ்கோடி பகுதியில் சென்ற போது அங்கு யாரும் இல்லை. இதற்கிடையில் இலங்கை கடல் எல்லைக்குள் உள்ள மணல் திட்டில் தவித்து கொண்டிருந்த 6 பேரையும், அந்நாட்டு கடற்படையினர் … Read more