வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: வட தமிழக பகுதிகளை ஒட்டி நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருப்பூர், தேனி, … Read more

பொன்னியின் செல்வன் சக்சஸ்: ப்ரோமோஷனுக்கு களமிறங்கிய பாஜக!

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் டீசரும், பொன்னி நதி பாக்கணுமே … Read more

பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்த ஒற்றை ஆண் காட்டு யானை

கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானைகள் நாள்தோறும் இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர்  தேடி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் வருவது வழக்கம். தற்போது மருதமலை வனப்பகுதியில் 16 யானைகள் முகாமிட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் 14 யானைகள் ஐஓபி காலனி மற்றும் பாரதியார் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்தது.  இதனை அடுத்து வனத்துறையினர் அந்த யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் … Read more

கந்தர்வகோட்டை- பட்டுக்கோட்டை சாலையில் வேகத்தடையில் வெள்ளை வர்ணம் அழிந்ததால் அடிக்கடி விபத்து-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலைகள் விரிவாக்க பணிகள் தற்சமயம் நடைபெற்று, புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் மீது ஒளிரும் வண்ணமோ, அருகில் வேகத்தடை இருப்பதற்கான விளம்பர பலகையோ இல்லாமல் இருக்கின்றது. இதனால் இந்த சாலையில் செல்வோருக்கு வேகத்தடை இருப்பது தெரியாமல் வேகத்தடை மீது வாகனங்கள் ஏறி நிலை தடுமாறி கீழே விழும் நிலை இருந்து வருகிறது. இந்த சாலையில் சமீபத்தில் கந்தர்வகோட்டை ஒன்றியம்,வேம்பன்பட்டி கிராமத்தில் உள்ள … Read more

சின்னமனூர்: சாலையில் வலம் வந்த அரியவகை நட்சத்திர ஆமை

சின்னமனூர் நகர்பகுதி சாலையில் வலம்வந்த அரிய வகை நட்சத்திர ஆமையை பொதுமக்கள் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் உள்ள மாநில நெடுஞ்சாலையில் அரிய வகை நட்சத்திர ஆமை ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது. அப்போது அதை பார்த்த வாகன ஓட்டிகளும் அப்பகுதி மக்களும் ஆச்சரியத்துடன் ஆமையை பிடித்து சின்னமனூர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து தீயணைப்புத் துறையினர் இது குறித்து சின்னமனூர் வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். … Read more

மதுவில் விஷம் கலந்து மாமனார் கொலை: பணத்தை அபகரிக்க மருமகன் நடத்திய கொடூரம்

பொள்ளாச்சி அருகே மது குடித்த விவசாயிகள் இருவர் மரணமடைந்த நிலையில், பணத்திற்காக அவர்களில் ஒருவரின் மருமகனே விஷம் கலந்து கொடுத்து கொன்றது தெரியவந்துள்ளது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அருகே நெகமத்தில் மது அருந்தி இருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து நெகமம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதையும் படியுங்கள்: வியாழக்கிழமை இ.பி.எஸ் அ.தி.மு.க அலுவலகம் வருகை: தொண்டர்கள் திரண்டு வர அழைப்பு நெகமம் அடுத்த பொன்னாக்காணி பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (56), விவசாயி. அதே பகுதியை … Read more

பென்னிகுவிக் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க இங்கிலாந்து செல்லும் தேனி எம்எல்ஏக்கள்

பென்னிகுவிக் சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமைச்சர் இ.பெரியசாமி இங்கிலாந்து கிளம்பிச் சென்றார். இதே நிகழ்ச்சியில் பங்கேற்க கம்பம், ஆண்டிபட்டி, பெரியகுளம் எம்எல்ஏக்கள் என்.ராமகிருஷ்ணன், ஆ.மகாராஜன், சரவணக்குமார் மற்றும் தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனும் நேற்று கிளம்பிச் சென்றனர். தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக முல்லை பெரியாறு அணை விளங்கி வருகிறது. இந்த அணையை பல்வேறு சிரமங்களுக்கு இடையில் ஆங்கிலேயப் பொறியாளர் ஜான் பென்னிகுவிக் 1895-ல் கட்டினார். … Read more

17 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக பகுதிகளை ஒட்டி நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (07.09.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் … Read more

திமுகவுடனான உறவை ஓபிஎஸ் பகிரங்கப்படுத்திவிட்டார்: இபிஎஸ் குற்றச்சாட்டு

திருச்சி: திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் கலந்து கொண்டு அங்கு பொதுகூட்டத்தில் பேசிவிட்டு சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்த சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அதிமுகவின் பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளா்களை சந்தித்து பேசினார். பொதுக்குழுவை நடத்தியது தொடர்பாக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் என்ற கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ் உள்ளிட்ட குழு நீதியரசரிடம் சென்று இருக்கிறார்கள் நாங்களும் அபிடவிட் தாக்கல் செய்துள்ளோம் என்றார்.  ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி … Read more

கேரளாவில் நாளை மகாபலி மன்னனை வரவேற்கும் திருவோணம்

கூடலூர் : கேரளாவில் ஓணம் பண்டிகை ஜாதி மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுகிறது. மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்க மாதத்தில், பருவ மழைக்காலம் முடிந்ததும் கொண்டாடப்படும் ஓணத்தை அறுவடைத்திருநாள் என்றும் அழைப்பர். மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் தொடங்கி சித்திரை, சோதி, விசாகம், அனிஷம், திரிக்கேட்டை, மூலம், பூராடம், உத்ராடம், திருவேணம் என 10 நாட்கள் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் ஓணம் பண்டிகை கடந்த 29.08.22 அன்று … Read more