’அறிவுப்பசி போக்க வயிற்று பசி ஆற்றும் தமிழகம்’ நூற்றாண்டு கடந்து தொடரும் சமூகநீதி திட்டம்

கல்வி கற்க வரும் மாணவர்களின் பசியை போக்கும் உணவுத் திட்டம் இன்று நேற்றல்ல, நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது. நீதிக்கட்சி தொடங்கி வைத்த இந்த திட்டத்தை தமிழக முன்னாள் முதலமைச்சர்களான காமராஜர், கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என அனைவரும் தங்களின் ஆட்சிக்காலத்தில் அடுத்தடுத்து மேம்படுத்திக் கொண்டே வந்தனர். பசியால் ஒரு குழந்தை படிப்பை நிறுத்திவிடக்கூடாது, பசியை போக்கவாவது அவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்ட உன்னத திட்டம் இது.  வறுமையால் … Read more

கோவில்பட்டி அருகே பரபரப்பு; நடுரோட்டில் லாரி கவிழ்ந்து ரூ.3 லட்சம் முட்டைகள் நாசம்: போக்குவரத்து கடும் பாதிப்பு

கோவில்பட்டி: கோவில்பட்டியில் நடுரோட்டில் லாரி கவிழ்ந்ததில் ரூ.3 லட்சம் மதிப்பிலான வாத்து முட்டைகள் உடைந்து நாசமாகின. லாரியை மீட்கும் பணி தாமதமானதால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. தஞ்சாவூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு 50 ஆயிரம் வாத்து முட்டைகளை ஏற்றிக் கொண்டு நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் லாரி புறப்பட்டது. லாரியை கள்ளக்குறிச்சி மாவட்டம், வடமருதூரைச் சேர்ந்த மனோஜ்குமார் ஓட்டினார். இதே ஊரைச் சேர்ந்த பால்ராஜ் … Read more

விவசாய நிலத்தில் காட்டுப் பன்றிக்காக வைத்திருந்த மின் கம்பியில் சிக்கி பெண் யானை பலி

பாலக்காடு அருகே காட்டுப் பன்றிக்காக விவசாய தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி பெண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் ஏராளமான யானைகள் அவ்வப்போது விவசாய நிலங்களுக்குள் படையெடுப்பது வழக்கம். இந்த நிலையில் பாலக்காடு மாவட்டம் முத்தூர் அருகே உள்ள அச்சம் பள்ளி என்ற பகுதியில், விவசாயத் தோட்டம் அருகே வந்த பெண் யானை ஒன்று அங்கு காட்டுப் பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் … Read more

தெலுங்கானாவில் உள்ள புலிக்கு தமிழகத்தில் முறம் வீசுகிறார் தமிழிசை : மீண்டும் விமர்சித்த தி.மு.க

தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் வெளியான விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சௌந்திரராஜன் தன்னை யாரும் அவமதிக்கவும் இல்லை தான் அவமானப்படவும் இல்லை என்று கூறியுள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில்தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சௌந்திரராஜன் வெளியிட்டது பேட்டி அல்ல சில ஆளுனர்களுக்கு சொன்ன பாடம் என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அப்பாவியாக இருப்பதாகவும், பேட்டி தரும்போது சில செய்திகளை … Read more

தேனி || பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு.! போகோவில் கல்லூரி மாணவர் கைது.!

தேனி மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரி மாணவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் மகாவிஷ்ணு(21). இவர் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் மகாவிஷ்ணு, தென்றல் நகர் பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியுடன் பழகி வந்துள்ளார்.  மேலும் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி மகாவிஷ்ணு, தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் மாணவி … Read more

விருதுநகரில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்: தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்

விருதுநகர்: விருதுநகரில் 2 லட்சம் சதுர அடியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்.15) அடிக்கல் நாட்டினார். மதுரையில் பள்ளியில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதைத் தொடங்கிவைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் விருதுநகர் வந்தார். மாவட்ட எல்லையான கே.உசிலம்பட்டி பகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பளித்தனர். Source … Read more

காலை உணவுத் திட்டம்: பெரிய மாற்றத்துக்கான தொடக்கம் – அண்ணாவுக்கு செயல் மூலம் புகழஞ்சலி!

அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சமூகவலைதளங்களில் அவரது உரைகள், முன்னெடுத்த திட்டங்கள், தொலைநோக்கு சிந்தனை, அண்ணா குறித்த பிற தலைவர்களின் மேற்கோள்கள் என பலரும் பகிர்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சரான அண்ணா நவீன தமிழ்நாட்டுக்கான விதை விதைத்தவர். அவரது பிறந்தநாளில் முதல்வர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கியிருப்பது வரவேற்பை பெற்று வருகிறது. முழுக்க முழுக்க தமிழக அரசின் செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பள்ளிக்கு வரும் குழந்தைகளின் பசியை போக்குவது இன்றியமையாத பணி. இந்த … Read more

TN Weather Report: உங்கள் ஊரில் மழை பெய்யுமா? இதோ வானிலை தகவல்

தமிழக மாவட்டங்களுக்கான வானிலை தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பின்வரும் வானிலை மாற்றங்கள் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15.09.2022 மற்றும் 16.09.2022 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 17.09.2022 அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் … Read more

நரிக்குறவர், குருவிக்காரர் சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு நரிக்குறவர்கள் நன்றி: பாசிமணி மாலை அணிவித்து மகிழ்ச்சி..!!

விருதுநகர்: விருதுநகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நரிக்குறவர் மக்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். நரிக்குறவர், குருவிக்காரர் சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு நன்றி கூறினர். விருதுநகர் அரசு விருந்தினர் மாளிகையில் நடந்த சந்திப்பின்போது அவர்களுடன் முதல்வர் தேநீர் அருந்தினார். பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நரிக்குறவர்கள் பாசிமணி மாலை அணிவித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். மலை பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர்கள் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் … Read more

நேரம் வரும்போது கட்சி அலுவலகத்திற்குச் செல்வேன் – சசிகலா

நேரம் வரும்போது கட்சி அலுவலகத்திற்குச் செல்வேன். ஏழை எளிய மக்களுக்காக அம்மா கொண்டு வந்த நல்ல திட்டங்களை திமுக நிறுத்துவது நல்லதல்ல என சசிகலா தெரிவித்தார். தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள சசிகலாவின் இல்லத்தில் அண்ணாவின் 114-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்… அண்ணாவின் பாதையில் நாங்கள் பயணித்து கொண்டிருக்கிறோம். நேரம் வரும்போது கட்சி அலுவலகத்திற்கு செல்வேன் என்றவரிடம்…. பன்னீர் செல்வத்தை நேரில் எப்போது சந்திப்பீர்கள் … Read more