தனியாரில் வேலைவாய்ப்பு… தமிழர்களுக்கு வழங்க தனிச்சட்டம் இயற்றுங்கள் – சீமான் வலியுறுத்தல்

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ ஓசூரில் இயங்கும் ஒரு தனியார் நிறுவனம், பணித்தேவைக்காகச் சிறப்பு ரயில் மூலம் 800 இளம்பெண்களை ஜார்க்கண்டிலிருந்து அழைத்துவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டின் வளங்களை மூலதனமாகக் கொண்டு, தமிழக அரசின் தயவில், தமிழ்நாட்டில் இயங்கும் தனியார் நிறுவனங்கள், வேலைக்கு மட்டும் வெளி மாநிலங்களிலிருந்து ஆட்களைப் பணியமர்த்தி, தமிழர்களின் வேலைவாய்ப்பினைத் தட்டிப்பறிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. ஐம்பதாண்டுகளாக தமிழ்நாட்டை மாறிமாறி ஆண்ட இரு திராவிடக் கட்சிகளின் … Read more

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அமராவதி ஆற்றில் உலாவரும் முதலையை பார்க்க ஆற்றுப்பாலத்தில் குவியும் பொதுமக்கள்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதி பழைய மற்றும் புதிய ராஜா வாய்க்கால் பாசன பகுதிகளில் விவசாய பயன்பாட்டிற்காகவும், பாசனத்திற்க்காகவும் அமராவதி  அணையிலிருந்து நீர்  திறக்கப்பட்டது. இதில் சில முதலைகள் அணையில் இருந்து தப்பித்து அமராவதி ஆற்றுப்பகுதிகளில உலா வருகிறது. குறிப்பாக கல்லாபுரம், மடத்துக்குளம், கண்ணாடிப்புத்தூர, கணியூர் மற்றும் கடத்தூர் ஆகிய ஆற்றுப்பகுதிகளில், அவ்வப்போது பாறைகளின் மேல்  படுத்துக்கொள்ளும் முதலையை பார்த்து பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அவ்வப்போது விவசாய நிலங்களில் முதலை நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் முதலைகளை பிடிக்க … Read more

’இதான் டாக்டர் என்ன கடிச்ச கட்டுவிரியன் பாம்பு’.. அரசு மருத்துவமனையை அலறவிட்ட இளைஞர்

கள்ளக்குறிச்சி அருகே தன்னைக் கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள வாணியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யம்பெருமாள். இவருக்கு சொந்தமான நிலத்தில் அவரது தம்பி விக்னேஷ் உள்ளிட்ட பலர் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் இருந்த கட்டு விரியன் பாம்பு விக்னேஷை மூன்று இடத்தில் கடித்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் விக்னேஷை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர். தன்னை கடித்த பாம்புடன் … Read more

அடுத்த அதிரடி.. ராக்கெட் ராஜா குண்டர் சட்டத்தில் கைது.. பிரபல தாதா சிக்கியது எப்படி?

அடுத்த அதிரடி.. ராக்கெட் ராஜா குண்டர் சட்டத்தில் கைது.. பிரபல தாதா சிக்கியது எப்படி? Source link

நோகாமல் வந்து.. லாவகமாக ஸ்கூட்டி திருடிய திருட்டு ராணி.. சிசிடிவியால் சிக்கிய சம்பவம்.! 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் ரயில் நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக புகார்கள் எழுந்து வந்தன.  இரண்டு நாட்களுக்கு முன் டெய்லர் கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று காணாமல் போனது. எனவே, வாகனத்தை இழந்த உரிமையாளர் அரக்கோணம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க போலீசார் சம்பந்தப்பட்ட இடத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது ஒரு இளம் பெண் அந்த இருசக்கர வாகனத்தை திருடி செல்வது சிசிடிவி காட்சிகளில் … Read more

சென்னையில் இந்த ஏரியாக்களில் நாளை மின்தடை!!

சென்னையில் நாளை (13.10.2022) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஒரு சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தாம்பரம், ஆவடி, திருவேற்காடு, பெரம்பூர், செங்குன்றம் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். தாம்பரம் பகுதி : கடப்பேரி வள்ளுவர் குருகுலம் கிழக்கு தாம்பரம் எம்.கே ரெட்டி தெரு, ராஜாஜி ரோடு, … Read more

விளையாட்டு துறைக்கான வேலைவாய்ப்பில் ஆணழகன் துறையை இணைக்க வலியுறுத்தல்: மதுரை எம்பி-யிடம் மனு அளித்த ஆணழகன் சங்கத்தினர்

மதுரை: தமிழக அரசின் வேலைவாய்ப்பில் 3 சதவீத விளையாட்டுத்துறைக்கான இட ஒதுக்கீட்டில் ஆணழகன் துறையையும் இணைக்க தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என மதுரை எம்பி சு.வெங்கடேசனிடம் மதுரை ஆணழகன் சங்க நிர்வாகிகள் இன்று மனு அளித்தனர். மதுரை மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்க தலைவர் செளந்திரபாண்டியன், பொதுச்செயலாளர் கே.சிவக்குமார், பொருளாளர் பிரவீன் ஆண்ட்ரூஸ் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் 80 பேர், மதுரை எம்பி சு.வெங்கடேசனை இன்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், … Read more

ஆடு மேய்க்கும் தொழிலுக்குத்தான் போகவேண்டும்: அண்ணாமலைக்கு மநீம எச்சரிக்கை!

அண்ணாமலை அரசியலில் மதிப்பிழந்து அவர் ஏற்கெனவே சொன்னபடி ஆடு மேய்க்கும் தொழிலுக்குத்தான் போகவேண்டும் என்று கட்சி செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ”தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை வழக்கமாக பேசும் பொறுப்பற்ற பேச்சுக்களில் ஒன்றை அண்மையில் அமெரிக்க மாநிலமான கலிபோர்னியாவில் பேசிய காணொலி ஒன்றை காண நேர்ந்தது. வழக்கமான குப்பைகளில் ஒன்று என்று ஒதுக்கித் தள்ளலாமென்று பார்த்தால் அவர் பேசியது தலைவர் கமல்ஹாசனைப் பற்றி. ஆட்டை கடித்து, … Read more

திருநங்கை மீது தாக்குதல்…. நடவடிக்கை எடுக்கப்படுமென காவல் துறை உறுதி

திருநங்கைகள் தற்போதைய நவீன உலகத்திலும் தீண்டாமையையும், பிறரின் ஏளனப்பார்வையையும் பேச்சையும் சந்தித்துக்கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே வீட்டால் ஒதுக்கப்பட்டவர்களை சமூகமும் ஒதுக்கும் அவலம் நடந்துகொண்டே இருக்கிறது. திருநங்கைகளும் நம்மைப்போல் அனைத்தும் இருக்கும் உயிர்தான் என்ற நினைப்பு தற்போதும் இல்லாதது அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளது. ரயில்களில், பொது இடங்களில் ஒதுக்கப்படும் அவர்கள் தீவிர மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். இதனால் இந்த ஆரோக்கியமற்ற போக்கை உடனடியாக நிறுத்த வேண்டுமென்பதே சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோரின் கருத்தாக இருக்கிறது. இதற்காக பல்வேறு விழிப்புணர்வுகள் … Read more

காஞ்சி தாலுகா காவல் நிலையத்தில் மழையில் வீணாகும் பறிமுதல் வாகனங்கள்; ஏலம்விட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் குற்றவழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மழையிலும், வெயிலிலும் வீணாகி வருகிறது. இந்த வாகனங்களை ஏலம்விட்டு அரசுக்கு வருவாய் ஈட்டலாம் என சமூக ஆர்வலர்கள்  கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குள் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், விபத்துகளில் சிக்கும் வாகனங்கள் மற்றும் நீதிமன்றத்தால் ஜப்தி செய்யப்பட்ட வாகனங்கள் என அனைத்தும் காஞ்சிபுரம் திருவீதி பள்ளம் பகுதியில் தாலுகா  காவல் நிலையம் அருகில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி … Read more