ஆசிரியர்களை சுதந்திரமாக செயல்படவிட்டாலே போதும் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.!

ஆசிரியர்களை சுதந்திரமாக செயல்படவிட்டாலே மாணவர்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தி விடுவார்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பா் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியா் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பேசியதாவது, ஆசிரியர்களை சுதந்திரமாக செயல்பட்டாலே மாணவர்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்திவிடுவார்கள். தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைக்கூட பொருட்படுத்தாமல் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். மாணவர்களின் எதிர்காலத்தை … Read more

“ஐடிஐ பயிற்சியாளர்களை கூலித் தொழிலாளர்களாக மாற்ற முயற்சிக்கிறது மத்திய அரசு” – வேல்முருகன்

சென்னை: “ஐடிஐ பயிற்சி பெறும் பயிற்சியாளர்களை கொத்தடிமை கூலித் தொழிலாளர்களாக மாற்றும் எண்ணத்தோடு ஒன்றிய அரசு தற்போது பாடத்திட்டங்களை குறைத்து ஆணை பிறப்பித்துள்ளது” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,”ஐடிஐயில் பயிற்சி பெற்றுச் செல்லும் பயிற்சியாளர்கள் தொழில் முனைவோர்களாக, வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்கு செல்பவர்களாக, பொதுத்துறை, அரசுத்துறை மற்றும் தனியார் துறைகளில் சிறந்த தொழிலாளர்களாக பணிபுரியலாம். ஆனால், தற்போது அந்த நோக்கத்தை சிதைக்கும் வகையிலும், எந்த நிபுணத்துவமும் … Read more

எல்லையின்றி தொடரும் மணல் கொள்ளை: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

ஆறுகளின் எல்லையின்றி நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க மணல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என தமிழக அரசுக்கு தலைவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “தமிழ்நாடு முழுவதும் மணல் கொள்ளை வரலாறு காணாத வகையில் தலைவிரித்தாடத் தொடங்கி இருக்கிறது. தமிழகத்தின் சுற்றுச்சூழலையும், நிலத்தடி நீர்வளத்தையும் பாதுகாப்பதற்கான தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு முற்றிலும் எதிரான வகையில், பெருகி வரும் மணல் கொள்ளையை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது தமிழகத்திற்கு … Read more

பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க நெல்லை, மதுரை வழியாக செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

நெல்லை: பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க நெல்லை, மதுரை வழியாக செல்லும் குருவாயூர், அந்தியோதயா மற்றும் கோவை இரவு நேர ரயில்களில் கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் – குருவாயூர் ரயிலில் (16127) நேற்று முதல் வரும் 11ம் தேதி வரையும் குருவாயூர் – சென்னை எழும்பூர் ரயிலில் (16128) வரும் 12ம் ேததி வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி, ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி … Read more

முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்ட திருவள்ளூர் சிறுமி சிகிச்சைக்கு பின் வெள்ளிக்கிழமை டிஸ்சார்ஜ்

திருவள்ளூர்: அரிய வகை முகைச் சிதைவு நோயால் 6 வருடங்களாக பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி தான்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவால் தனியார் மருத்துவமனையில் முக சீரமைப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிலையில், வரும் வெள்ளிக்கிழமை தான்யா டிஸ்சார்ஜ் செய்யப்பட இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ், இவரது மனைவி சவுபாக்கயம். இவர்களுக்கு 9 வயதில் தான்யா என்ற மகள் உள்ளார். சிறுமி Hemifacial … Read more

நீட் தேர்வு விடைத்தாளை பார்த்த மாணவி அதிர்ச்சி…காரணம் இதுதான்!

நாடு முழுவதும் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வு முடிவுகளும், மாதிரி விடைகளும் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியிடப்பட்டன. அதேபோல விடைத்தாள்களும் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் தனது விடைத்தாள் மாறிவிட்டதாக கூறி சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த மாணவி பவமிர்த்தினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்வில் 720க்கு 600க்கும் மேல் மதிப்பெண்கள் பெறும் நம்பிக்கையுடன் இருந்த நிலையில் 132 மதிப்பெண்கள் பெற்றதற்கான விடைத்தாள் தனக்கு … Read more

கண்டாச்சிபுரம் ஊராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

கண்டாச்சிபுரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் ஊராட்சியில் 12 வார்டுகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் தாலுகா அலுவலகம், காவல் நிலையம், காவலர் குடியிருப்பு, பொதுவுடைமை வங்கி, மின்சார வாரியம், கூட்டுறவு வங்கிகள், துணை அஞ்சலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளிட்ட அரசு துறை சார்ந்த அலுவலகங்கள் அமைந்துள்ளன. மேலும் வணிக வளாகங்கள், வாரச்சந்தைகள் மற்றும் கண்டாச்சிபுரத்திலிருந்து விழுப்புரம், திருக்கோவிலூர், திருவண்ணாமலை, … Read more

கோவிலுக்குச் சொந்தமான விவசாய பூமியில் எவ்வாறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது? – நீதிமன்றம்

கோவிலுக்குச் சொந்தமான விவசாய இடத்தில் எவ்வாறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது? ஏன உயர் நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். நாகர்கோயில் பகுதியைச் சேர்ந்த இந்துஜா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘நாகர்கோவில் கரியமாணிக்கபுரம் கிராமத்தில் அருள்மிகு முப்பிடாதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், இக்கோவிலுக்குச் சொந்தமாக பல்வேறு சொத்துக்கள் உள்ள நிலையில், லாலாவிளை கிராமத்தில், இந்தக் கோயிலுக்குச் சொந்தமான … Read more

இந்தியாவிற்கு அகதிகளாக வந்த தமிழர்களை தாயகம் அழைத்துச் செல்ல சிறப்புக் குழு அமைத்தது இலங்கை அரசு

ராமேசுவரம்: இலங்கையில் நடந்த உள் நாட்டுப் போரின்போது அகதிகளாக இந்தியாவிற்கு புலம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர சிறப்பு குழுவை அந்நாட்டு அரசு அமைத்துள்ளது. இலங்கையில் கடந்த 1983-ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டு போரின் போது அந்நாட்டு ராணுவம் மற்றும் சிங்களர்களால் தமிழர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர். இதனால் இலங்கையிலிருந்து இருந்து உலகம் முழுவதும் தமிழ்மக்கள் அகதிகளாக புலம் பெயரத்தொடங்கினர். கடந்த 1983-ம் ஆண்டு முதல் தமிழகத்துக்கு 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 … Read more

ரயில்வே தேர்வு: தமிழக மாணவர்கள் தேர்வு எழுத 700 கிமீ போகணுமா?

இந்திய ரயில்வேயில் குரூப் டி பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு செப்டம்பர் 8ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுதும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வெழுத செல்லும் மாணவர்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும். இதற்கு நிறுவனர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய ரயில்வேயில் குரூப் டி பணியிடங்களை நிரப்புவதற்காக வரும் 8ஆம் தேதி நடைபெறும் போட்டி தேர்வுகளை எழுதுவதற்காக தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் … Read more