இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு; ஆ.ராசா மீது பாஜக சார்பில் புகார்!

இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக டிஜிபி அலுவலகத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா மீது பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் புகார் அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மதி இழந்து, தகுதி இழந்து, தரம் தாழ்ந்து மத நல்லிணக்கத்திற்க்கு எதிராக பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது.  அனைவருக்கும் பொருந்தும் வகையில் இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்களை தவிர எல்லா ஆண்மகன்களும் விபச்சாரியின் மகன் என்று பேசுகிறார்.  இதை கண்டித்து நாங்கள் டி.ஜி.பி … Read more

சென்னை, மதுரை, திருச்சியில் தடுப்பணைகள் கட்டப்படும்: அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி

மதுரை: லண்டனில் கர்னல் பென்னிகுக் சிலை திறப்பு விழாவில் பங்கேற்று திரும்பிய அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு மதுரை விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் பென்னிகுக்கிற்கு நினைவு மண்டபம் இருந்தாலும், லண்டனில் அவருக்கு சிலை வைத்து பெருமை சேர்த்துள்ளார் தமிழக முதல்வர். அந்நாட்டு மக்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். சென்னை, மதுரை, திருச்சி மக்களின் தாகத்தை தீர்க்க நிறைய தடுப்பணைகளை கட்ட முதல்வர் முடிவு … Read more

மோடி பிறந்தநாளில் மாட்டு வண்டி பந்தயம் அனுமதிகோரிய வழக்கு- காவல்துறை பதிலளிக்க உத்தரவு

பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி நெல்லை மாவட்டத்தில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடத்த அனுமதி கோரிய வழக்கில் காவல் கண்காணிப்பாளர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடியின் பிறந்தநாள் 17ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அவரது பிறந்தநாளை நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடும் வகையில் பாஜகா கட்சியினர் பல்வேறு நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரம் கிராமத்தில் போட்டிகள் நடத்த அனுமதி கோரி எஸ்.பி.யிடம் … Read more

என்னை மிரட்டிப் பார்க்க ஸ்டாலின் நினைத்தால் முடியாது: ரெய்டுக்கு பிறகு எஸ்.பி வேலுமணி பேட்டி

அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் கோவையில் 10 இடங்கள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர். இதையும் படியுங்கள்: சூத்திரர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதியில் இழிவுபடுத்தியது ஏன்? ஆ. ராசா பேச்சால் வெடித்த சர்ச்சை! கோவை மாநகரில் … Read more

அக்கா வீட்டிற்கு சென்றவர்.! கிணற்றில் மூழ்கி பலி.!

செங்கல்பட்டு மாவட்டத்தில் அக்கா வீட்டிற்கு சென்றவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குரோம்பேட்டை லட்சுமிபுரம் குமாரசாமி தெருவை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் முருகன்(50). இவர் நேற்று மேல்மருவத்தூர் அடுத்த ஒரத்தூரில் உள்ள அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது அங்குள்ள கிணற்றில் முருகன் குளிக்க சென்றுள்ளார். ஆனால் முருகனுக்கு நீச்சல் தெரியாததால் எதிர்பாராத விதமாக கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மேல்மருவத்தூர் போலீசார், உயிரிழந்த … Read more

750+ அறிவிப்புகளும் அக்.15-க்குள் செயல்பாட்டுக்கு வரவேண்டும்: முதல்வர் ஸ்டாலின் விதித்த கெடு

சென்னை: சட்டப்பேரவையில் வெளியிட்ட அனைத்து அறிவிப்புகளுக்கான ஆணைகளும் அக்டோபர் 15-க்குள் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு துறைச் செயலாளர்கள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “ஆட்சி அமைந்த பிறகு நடக்கக் கூடிய நான்காவது அனைத்துத் துறையினுடைய செயலாளர்கள் கூட்டம் இந்தக் கூட்டம். உங்கள் அனைவரையும் தனித்தனியாகத் தொடர்ந்து சந்தித்து வந்தாலும், அனைவரையும் ஒருசேரச் சந்திப்பது என்பது மிக … Read more

அரசு துறை செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் டார்கெட்!

சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அரசு துறைச் செயலாளர்கள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அரசு உயர்மட்ட அதிகாரிகள் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழக அனைத்து துறை செயலாளர்களும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். துறைகளின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். அதன்பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “ஆட்சி அமைந்த பிறகு நடக்கக்கூடிய நான்காவது அனைத்துத் துறையினுடைய செயலாளர்கள் கூட்டம் இந்தக் கூட்டம். உங்கள் … Read more

சசிகலா புஷ்பாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாஜக பொதுச்செயலாளர்

ஒடுக்கப்பட்டோரின் மேம்பாட்டுக்காக பாடுபட்ட தியாகி இமானுவேல் சேகரனின் 65வது நினைவு நாள் நேற்று அனுசகரிக்கப்பட்டது. இதனையொட்டி பரமக்குடியில் இருக்கும் தியாகி இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், ஊர் பொதுமக்கள் என அலைஅலையாக வந்து அஞ்சலி செலுத்தினர். தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து இமானுவேல் சேகரனின் தியாகத்தை நினைவு கூர்ந்தனர். பாஜக சார்பில் மாநில துணைத் தலைவா் நயினாா் … Read more

மறைந்த தாய், தந்தைக்கு கோயில் கட்டி வழிபடும் ஓய்வு எஸ்ஐ: கும்பாபிஷேகமும் செய்தார்

மதுரை: மதுரையில் மறைந்த தாய், தந்தைக்கு ஓய்வு பெற்ற எஸ்ஐ கோயில் கட்டி வழிபடுகிறார். மதுரை சிந்தாமணியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு(57). தமிழ்நாடு காவல்துறையில் தனிப்பிரிவு எஸ்ஐயாக பணிபுரிந்து, விருப்ப ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ரேணுகாதேவி, மகன் பொன்மணி, மகள் திவ்யபாரதி. இவரது 5 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் அருகருகே வசித்து வருகின்றனர். இந்நிலையில் ரமேஷ்பாபு மறைந்த தனது தாய், தந்தையை போற்றும் வகையில் குடும்பத்தினருடன் ஆலோசித்து சிலை வைக்க முடிவு செய்தார். இதனடிப்படையில் தனது … Read more

13 ஆண்டுகளுக்குப் பின் இரு மின்வாரிய அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியான விசாரணை: உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்

சென்னை: லஞ்ச வழக்கில் சிக்கி, விடுதலையான இரு மின்வாரிய அதிகாரிகளுக்கு எதிராக 13 ஆண்டுகளுக்கு பின் புதிதாக துறை ரீதியான விசாரணை நடத்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், இருவருக்கும் உரிய பதவி உயர்வுகளை வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகாவில் உள்ள அலுமினிய பாத்திர உற்பத்தி நிறுவனத்துக்கு மின் இணைப்பு வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக உதவிப் பொறியாளர்களாக பணியாற்றிய ராதாகிருஷ்ணன், சாந்தி ஆகிய இருவரும் … Read more