பாரம்பரிய சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதித்திடுக: சென்னையில் மீனவர்கள் போராட்டம் 

சென்னை: பாரம்பரிய சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, சுருக்கு வலையைப் பயன்படுத்த அனுமதி வழங்க கோரி சென்னையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடல்பகுதிகளின் வளம் மற்றும் மீன் வளங்கள் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க கடந்த 2020-ம் ஆண்டு தமிழக அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள மீனவ மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு … Read more

சரியான நேரத்தில் உயிரைக் காப்பாற்றிய எடப்பாடி: தமிழ் மகன் உசேனுக்கு என்ன நடந்தது?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மேலசாலை அன்னை அஜ்மத் பீவி தர்காவில், மீண்டும் தமிழகத்தில் அதிமுக இடைகால பொதுசெயலாளர் எடப்பாடி.பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி அமைந்திடவேண்டும் என அதிமுக அவைதலைவரும், முன்னால் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான தமிழ்மகன் உசேன் சிறப்பு பிரதாத்தனை செய்து வழிபட்டார். பின்னர் தமிழ்மகன் உசேன் அதிமுகவினர் மத்தியில் பேசுகையில், “மீண்டும் தலைமையிலான அதிமுக ஆட்சி அமைந்திட தமிழகம் முழுவதும் உள்ள தர்காக்களில் பிராத்தனை செய்து வருகிறேன். 31ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் … Read more

தொடர் விடுமுறையால் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்: 3 நாளில் 20 ஆயிரம் பேர் சுருளி அருவியில் குளியல்

கம்பம்: தொடர் விடுமுறை காரணமாக, சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சுருளி அருவியில் ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருக்கும். இந்த அருவியில் கோடைக்காலமான ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் நீர்வரத்து குறையும். இந்த அருவிக்கு தமிழகம் மட்டுமின்றி, கேரளா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவது வழக்கம். சுருளி அருவிக்கு வரும் சுற்றுலாபயணிகளிடம் வனத்துறை சார்பில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த … Read more

டி20 உலகக் கோப்பையில் அந்த இருவர் இல்லாதது இளம் வீரர்களுக்கு நல்ல வாய்ப்பு – ரவி சாஸ்திரி

டி-20 உலகக் கோப்பை தொடரில் பும்ரா, ஜடேஜா போன்ற வீரர்கள் இடம்பெறாதது வருத்தம் அளித்தாலும் இளம் வீரர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் ரவி சாஸ்த்திரி தெரிவித்தார். சென்னை போருர் அருகே கௌப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தை ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரரும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அலுவலர் காசி … Read more

வாகன ஓட்டிகளுக்கு ரூ.1000 அபராதம்.. விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!

புதுசேரியில், சாலை பாதுகாப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் சட்ட சபை வளாகத்தில் நடந்தது.அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், சந்திர பிரியங்கா, தலைமைச் செயலர் ராஜிவ் வர்மா, கலெக்டர் வல்லவன், அரசு செயலர்கள் அருண், கேசவன், முத்தம்மா, ஏ.டி.ஜி.பி., ஆனந்தமோகன், போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார், உள்ளாட்சித் துறை இயக்குநர் ரவிதீப் சிங் சஹார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், புதுச்சேரியில் சாலை விபத்துகளை தவிர்ப்பது மற்றும் குறைப்பது தொடர்பான ஆலோசனை … Read more

சுப்புலட்சுமி ஜெகதீசன் ஏன் திமுகவிலிருந்து விலகினார்? சீமான் சொல்லும் காரணம்!

திமுகவிலிருந்து ஏன் விலகினார் என்ற கேள்வி தமிழக அரசியலில் வட்டமடித்து வரும் நிலையில் கட்சி ஒருங்கிணைப்பாளர் அதற்கான காரணமாக நூறு நாள் வேலை திட்டத்தை குறிப்பிடுகிறார். திமுகவிலிருந்து விலகிய நிலையில் அவரை வரவேற்று கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “எனது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய அம்மா சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களுக்கு, சிறு வயதிலிருந்தே உங்களுடைய பெருமைகளை அறிந்த மகன் நான். அரசியல் துறையில் ஒரு தன்மானமிக்க தமிழச்சியாக நீங்கள் மிளிர்வதில் நான் மிகுந்த பெருமையடைகிறேன். உங்களை … Read more

திருப்பூரில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு

திருப்பூர்: திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் அவிநாசி சாலை பூண்டி ரிங்ரோட்டில் உள்ள விவேகானந்தா சேவாலயம் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை உண்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட குழந்தைகள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 3 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். ஆதரவற்ற … Read more

பிரியாணி விருந்து சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக்குறைவு.! 6 பேரில் ஒருவர் பலி.!

திருவாரூரில் நடைபெற்ற விழாவில் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருவாரூர் மாவட்டம் புலிவலத்தில் கடந்த 5ஆம் தேதி விக்னேஷ் என்பவர் தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருப்பதால் மருந்து கொடுக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பிரியாணி மற்றும் வெரைட்டி ரைஸ் உள்ளிட்ட உணவு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நிகழ்வில் உணவு சாப்பிட்டவர்களுக்கு உணவு ஒவ்வாமையினால் … Read more

தேசிய சராசரியைவிட தமிழகத்தில் உயர்கல்வி கற்போர் விகிதம் அதிகம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்

கோவை: தேசிய அளவில் உயர்கல்வி பயில சேரும் மாணவர்களின் சராசரி விகிதத்தைவிட, தமிழகத்தில் இரண்டுமடங்கு மாணவர்கள் உயர் கல்வியில் சேர்கின்றனர் என ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்தார். கோவையில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தின் 19-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகள், தொழில்வளர்ச்சி ஆகியவற்றில் முன்னேறிய நிலையில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாக உள்ளது. தேசிய அளவில் உயர்கல்வி பயில சேரும்மாணவர்களின் சராசரி எண்ணிக்கையைவிட, … Read more

கழிப்பறை இல்லாததே பெண் கல்விக்கு முக்கியத் தடை: தமிழிசை செளந்தர்ராஜன் குற்றச்சாட்டு

கோவை: கோவை அவிநாசிலிங்கம் மகளிர் கல்லூரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை தெரிவித்தார். அங்கு நடைபெற்ற  கருத்தரங்கில் கலந்துக் கொண்ட தமிழிசை செளந்தர்ராஜன், ‘பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசப்படாத காலத்திலேயே மகளிருக்கு என கல்லூரியினை நிறுவி தற்போது வரை சிறப்பாக நடத்தப்பட்டு வரும் இந்த கல்லூரியின் நிர்வாகத்தினருக்கும் அதன் நிறுவனர் அவிநாசிலிங்கம் அவர்களுக்கு நன்றி தெரிவித்த பிறகு … Read more