ஜனாதிபதி கவனத்தை ஈர்த்த ராமநாதபுரம் ஆசிரியர் ராமச்சந்திரன்.. டெல்லியில் நடந்தது என்ன?

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் தேசிய அளவில் சிறந்த ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிப்பார். அந்த வகையில் தமிழ்நாட்டில் ராமநாதபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன், புதுச்சேரியை சேர்ந்த அரவிந்த் ராஜா உள்ளிட்ட 46 பேருக்கு டெல்லியில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நல்லாசிரியர் விருது வழங்கினார். தமிழ்நாட்டை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன் பள்ளி … Read more

கன்னியாகுமரியில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நிறைவு; காந்திமண்டபத்தில் இருந்து செப்.7ல் ராகுல் நடைபயணம்: மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி வழங்கி தொடங்கி வைக்கிறார்

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்தில் இருந்து செப்டம்பர் 7ம் தேதி ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்குகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயணத்தை தேசியக்ெகாடி வழங்கி தொடங்கி வைக்கிறார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடா யாத்ரா’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை வரும் செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகே இருந்து தொடக்குகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தேசிக்கொடியை … Read more

`அன்றும் இன்றும்…!’- முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படங்கள் வெளியீடு

முக சிதைவால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட சிறுமி டான்யா முகம் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் புகைப்படத்தை மருத்துவமனை தரப்பு வெளியிட்டுள்ளது. ஆவடி வீராபுரத்தை சேர்ந்த ஸ்டீபன்ராஜின் 9 வயது மகள் முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.தொடர்ந்து சமூகத்திலும் ஒதுக்கப்பட்ட குழந்தையாக பார்க்கப்பட்டு வந்தார்.இதனால் சிறுமி மற்றும் அவரது பெற்றோர் மிகவும் துன்பத்துக்கு ஆளாகினர். இது குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. பின்னர் இது குறித்து தகவல் அறிந்த தமிழக … Read more

இப்படி புக் செய்தால் 10% கட்டணம் தள்ளுபடி: தமிழக அரசு விரைவு பஸ்களில் அதிரடி சலுகை

Tamil Nadu News: தமிழக அரசின் விரைவுப் பேருந்தில் இருவழிப் பயணச்சீட்டை இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்தால், பயணச்சீட்டு கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்குவதாக விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு கீழ் 1,082 பேருந்துகள் இயங்கி வருகின்றன. அவை, அதிநவீன மிதவைப் பேருந்து, குளிர்சாதனப் பேருந்து, குளிர்சாதன படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பேருந்து மற்றும் கழிப்பறை வசதியுடன் கூடிய பேருந்து ஆகியவை இயங்குகின்றன.  இவை தமிழ்நாட்டை அடுத்து … Read more

“இலவசங்கள் இல்லையெனில் சமத்துவ சமுதாயத்தை நிலைநிறுத்த முடியாது” – எ.வ.வேலு

கள்ளக்குறிச்சி: அரசு சார்பில் விலையில்லாமல் மக்களுக்கு வழங்கப்படும் திட்ட செயல்பாடுகளை சிலர் கொச்சைப்படுத்துவதாக அமைச்சர் எ.வ.வேலு பேசினார். கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளித் தலைமையாசிரியர் விஜயலட்சுமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, மாணவிகளுக்கு சைக்கிளை வழங்கிப் பேசுகையில், ”அரசு மக்கள் நலன் கருதி சில திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் … Read more

'டாஸ்மாக்கில் விற்பது நாழிக்கிணறு தீர்த்தமா?' – திமுகவை தெறிக்க விட்ட சீமான்!

தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு திராவிட மாடல் என்று சொல்வதை விட, தமிழ்நாட்டு மாடல் என்று சொன்னால் ஆறுதலாக இருக்கும் என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்து உள்ளார். அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். மகன் மாவீரன் பிரபாகரனுக்கு, முடி காணிக்கை செலுத்தியும், பச்சரிசி, வெல்லம் துலாபாரத்திற்கு கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் தெரிவித்ததாவது: கோவில்களில் தமிழில் அர்ச்சனை பெயர் … Read more

சேலம்; சில்மிஷ இயக்குநரை சிறையில் அடைத்த காவல்துறை; இளம் பெண்கள் சரமாரி புகார்

சேலம் ஏவிஆர் ரவுண்டானா பகுதியில் தனியார் கட்டிடத்தில் இயங்கிய சினிமா கம்பெனியில் இளம்பெண்களை நடிகையாக்குவதாக கூறி ஆபாச படங்கள் வீடியோக்கள் எடுத்ததாக சேலம் மாவட்டம் இடைப்பாடியை சேர்ந்த இயக்குநர் வேல்சத்ரியன் (38), அவரது பெண் உதவியாளர் ஜெயஜோதி (23) ஆகியோரை சூரமங்கலம் போலீசார் கைது செய்தனர். அந்த சினிமா கம்பெனியில் போலீசார் நடத்திய சோதனையில் அதிர்ச்சி தரும் வகையில் 30க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்குகள், கணினி, லேப்டாப், கேமரா, பென்டிரைவ் உள்ளிட்டவை போலீசில் சிக்கியது. இயக்குநரின் ஹார்டு … Read more

அல்லேரிமலை கிராமத்தில் மாடு விடும் விழா: முதலிடம் பிடித்த காளைக்கு ரூ1.11 லட்சம் பரிசு

அணைக்கட்டு: அல்லேரிமலை கிராமத்தில் நடந்த மாடு விடும் விழாவில் முதலிடம் பிடித்த காளையின் உரிமையாளருக்கு ரூ.1.11 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவில் உள்ளது அல்லேரி மலை கிராமம். இந்த கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாடு விடும் விழா நேற்று நடந்தது. விழாவில் பங்கேற்க நேற்றுமுன்தினம் இரவே வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்பட வெளிமாவட்டங்களில் இருந்து வாகனங்களில் 250க்கும் மேற்பட்ட மாடுகள் அழைத்து வரப்பட்டன. நேற்று காலையில் மாடு விடும் விழா … Read more

'ஓசி சீட்டில் வரும் நீங்கள்'.. பெண்ணை தரக்குறைவாக பேசிய நடத்துநர்!.. நடவடிக்கையில் தாமதம்!

‘ஓசி சீட்டில் வரும் நீங்க ஆண்கள் இருக்கையில் அமரக்கூடாது’ என்று கைக்குழந்தையுடன் பேருந்தில் சென்ற பெண்ணை தரக்குறைவாக பேசிய நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன. ஈரோடு மாவட்டம் சாஸ்திரி நகரில் வசித்து வருபவர்கள் சுரேஷ்குமார் – கௌசல்யா தம்பதியினர் தனியார் குடும்பத்தினருடன் பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள கோயிலுக்குச் செல்ல சாஸ்திரி நகரில் இருந்து அரசு பேருந்தில் ஏறியுள்ளனர். இந்நிலையில், பேருந்தின் முன் இருக்கையில் இடம் இல்லாததால் பின் இருக்கையில் தனது கைக்குழந்தையுடன் … Read more

நீட் தேர்வு விடைத்தாள் மாறிவிட்டது: சென்னை உயர் நீதிமன்றத்தில் மாணவி வழக்கு

சென்னை: நீட் தேர்வு விடைத்தாள் மாறிவிட்டதால் கலந்தாய்வில் அனுமதிக்க கோரி மாணவி ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நாடு முழுவதும் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17-ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வு முடிவுகளும், மாதிரி விடைகளும் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியிடப்பட்டது. அதேபோல விடைத்தாள்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் தனது விடைத்தாள் மாறிவிட்டதாக கூறி சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த மாணவி பவமிர்த்தினி சென்னை உயர் நீதிமன்றத்தில் … Read more