தமிழகத்தில் ஒருபோதும் இந்தியை திணிக்க முடியாது: சென்னை ஆர்ப்பாட்டத்தில் வைகோ உறுதி

சென்னை: தமிழகத்தில் இந்தியை ஒருபோதும் திணிக்க முடியாது என்று மதிமுக பொது செயலாளர் வைகோ உறுதியாக தெரிவித்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மதிமுக சார்பில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மதிமுகபொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், வைகோ பேசியதாவது: இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சிக்கிறார்கள். … Read more

வடகிழக்கு பருவமழை: தமிழக அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதம் துவங்கி டிசம்பர் வரை நீடிக்கிறது. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு இயல்பாக 448 மி.மீ. மழை கிடைக்கப்பெறுகிறது. இந்த வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாவதோடு, கனமழை முதல் அதி கன மழை பொழிவு … Read more

கடலில் மாயமாகும் மீனவர்களை கண்டுபிடிக்க உயர் தொழில்நுட்ப அமைப்பு: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

நாகர்கோவில்: காணாமல் போகின்ற மீனவர்களை கண்டுபிடிக்க இஸ்ரோவுடன் இணைந்து உயர் தொழில்நுட்பம் கொண்ட அமைப்பை உருவாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். நாகர்கோவில் சுங்கான்கடையில் அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று அளித்த பேட்டி: கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் காணாமல் போகும்போது அவர்களை தேடி கண்டுபிடிப்பதற்காக தமிழக தகவல் தொழில்நுட்பத் துறையும், மீன்வளத் துறையும், இஸ்ரோ அமைப்பும் சேர்ந்து ஒரு உயர் தொழில்நுட்பம் கொண்ட அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. … Read more

தமிழகத்தில் அக்டோபர் 9ம் தேதி இந்த மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு.!

மிலாது நபியை முன்னிட்டு அக்டோபர் ஒன்பதாம் தேதி சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளையும் கூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது ; மிலாது நபியை முன்னிட்டு வரும் அக்டோபர் 9ம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் டாஸ்மாக் மதுபான கடைகளுடன் இணைந்துள்ள பார்கள் மூடப்பட வேண்டும். மேலும், அரசு உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கி வரும் மதுபான கூடங்கள் அனைத்தும் … Read more

இந்த மாவட்டத்தில் வரும் 9ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்!

அரசு உத்தரவின்படி, 09.10.2022 அன்று மிலாடி நபி தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிம வளாகங்களை மூடி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட நாளில் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிம வளாகங்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது என … Read more

கூட்டுறவு அங்காடிகளில் சிறிய காஸ் சிலிண்டர் விற்பனை – அமைச்சர் தொடங்கிவைத்தார்

சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2 மற்றும் 5 கிலோ எடையிலான சமையல் காஸ் சிலிண்டர்கள், கூட்டுறவு சிறப்பங்காடிகள், பெட்ரோல் நிலையங்களில் விற்பனை செய்யப்பட உள்ளன. சென்னை திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தில், கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று இத்திட்டத்தை தொடங்கிவைத்தார். சிறிய அளவிலான சமையல் காஸ் சிலிண்டர்கள், இடம்பெயரும் தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், சிறு வணிகர்கள், மீனவர்கள், சுற்றுலா செல்வோருக்குப் பயனுள்ளதாக இருக்கும். இவற்றைப் பெற எவ்வித முகவரிச் சான்றும் தேவையில்லை. ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட … Read more

குலசேகரன்பட்டினம் கடற்கரையில் மகிஷாசூரனை வதம் செய்த முத்தாரம்மன்: லட்சக்கணக்கானோர் தரிசனம்

உடன்குடி: குலசேகரன்பட்டினம் கடற்கரையில் மகிஷாசூரனை சம்ஹாரம் செய்தார் முத்தாரம்மன். இதை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழவையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு சூரசம்ஹாரத்திற்காக சிம்ம வாகனத்தில் முத்தாரம்மன், கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன் எழுந்தருளினார். அப்போது அபிஷேக மண்டபத்தில் இருந்து சூரனும் புறப்பட்டு கடற்கரை வளாகத்திற்கு வந்தார். தன் தலையுடன் வந்த சூரனை  முத்தாரம்மன் ஈட்டியால் வதம் செய்தார். 12.05க்கு சூரனின் சிங்க தலையையும் 12.10க்கு எருமை … Read more

போலி பத்திரப் பதிவு; மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்.. தமிழ்நாடு அரசு பதிலளிக் உத்தரவு..!

போலி பத்திரப் பதிவு; மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்.. தமிழ்நாடு அரசு பதிலளிக் உத்தரவு..! Source link

மழைக்காலம் முடியும் வரை காய்ச்சல் முகாம் தொடர்ந்து நடைபெறும் – சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

சென்னை: தமிழகத்தில் மழைக்காலம் முடியும் வரை காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடைபெறும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளை அறிந்துகொள்வதற்காக மால்டா குடியரசு நாட்டின் அமைச்சர் ஜோ-எட்டியென் அபேலா தலைமையிலான குழுவினர் நேற்று சென்னை வந்தனர். சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை, மால்டா அமைச்சர் சந்தித்து பேசினார். சுகாதாரத் துறை செயலாளர் ப.செந்தில்குமார், தமிழ்நாடு மருத்துவ சேவைக் … Read more

ஓராண்டுக்கான படிப்பில் 10 மாதங்கள் பூர்த்தி செய்த பிறகே தேர்வு எழுத வேண்டும்: பெரியார் பல்கலைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ஓராண்டுக்கான படிப்பில் 10 மாதங்கள் பூர்த்தி செய்த பிறகே தேர்வெழுதும் திட்டத்தை கொண்டு வர பெரியார் பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம், தேவதானப்பட்டியைச் சேர்ந்த செண்பகம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘2012ல் பிஎஸ்சி (கணிதம்) முடித்தேன். 2013ல் பிஎட் முடித்தேன். பெரியார் பல்கலையில், கடந்த 2015ல் எம்எஸ்சி (கணிதம்) முடித்தேன். 9.5.2017ல் முதுகலை பட்டதாரி (கணிதம்) ஆசிரியர் நியமன அறிவிப்பை ஆசிரியர் தேர்வாணையம் வெளியிட்டது. இதற்கான தேர்வில் 77 … Read more