டெல்லியிலிருந்து ஆளை இறக்கிய எஸ்.பி.வேலுமணி: கோர்ட்டில் காரசாரம்!

அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி சென்னை, கோவை மாநகராட்சி பணிகளில் 800 கோடி ரூ ஊழல் செய்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து வேலுமணி தொடர்புடைய இடங்களில் இரண்டு முறை அதிரடி சோதனை நடத்தியது. சோதனையில் கிடைத்த ஆவணங்களின் படி மேலும் ஒரு வழக்கு வேலுமணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்டது. இந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். … Read more

சிந்தனையாளர்களையும், தேச பக்தர்களையும் கொன்று குவிப்பது தான் பாஜகவின் மாடலா?: கே.பாலகிருஷ்ணன் சாடல்

திருவாரூர்: திருவாரூரில் திராவிடர் கழகம் சார்பில் நடந்த சனாதன எதிர்ப்பு, திராவிட மாடல் மாநாட்டில் அரசியல் கட்சி தலைவர்கள் சனாதனத்தை எதிர்த்து போராட வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி பேசினர். திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது. இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் … Read more

கன்னியாகுமரியிலும் களைகட்டும் ஓணம் திருவிழா – பத்மநாப அரண்மனையில் கோலாகல கொண்டாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் கேரளா கலாசார முறையில் அத்தப்பூ கோலமிட்டும் திருவாதிரை நடனமாடியும் அரண்மனை ஊழியர்கள் ஓணம் பண்டிகையை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். கேரளா மாநிலத்தின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை கழிந்த மாதம் 30-ம் தேதி ஹஷ்த நட்சத்திரத்தில் ஆரம்பித்து வரும் 8-ம் தேதி திருவோண நட்சத்திரம் வரையிலான பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் அமலில் இருந்த நிலையில் ஓணம் கொண்டாட்டங்கள் நடைபெறாமல் இருந்ததால் … Read more

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் நாளை நீலகிரி, கோவை, தென்காசி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழையும், 16 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. வரும் 7ம் தேதி 6 மாவட்டங்களுக்கு … Read more

‘உங்க இன்ஸ்டா ஐடி என்ன டீச்சர்?’ – பள்ளிக் கல்வியில் டிஜிட்டல் மயமும் கள நிலவரமும் | Teachers' Day Special

பள்ளிக் கல்வித் துறையின் 2022-23-ம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பில், “பள்ளிக் கல்வித் துறைக்கு 2022-23 ம் கல்வியாண்டிற்கு ரூ.36,895.89 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டதன் வாயிலாக ஆசிரியர்களின் நிர்வாகப் பணிச்சுமைக் குறைக்கப்பட்டு, கற்றல், கற்பித்தல் பணித்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட பதிவேடுகளைக் கணினி மயமாக்குதல் வாயிலாக ஆசிரியர்களின் கல்வி சாராப் பணிகள் குறைக்கப்பட்டு எளிமையாக்கப்பட்டு உள்ளது. எதிர்வரும் காலங்களில் இதேப்போன்று பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து சேவைகளையும் … Read more

ராகுல் பாதயாத்திரை செலவு: விழிபிதுங்கும் கதர் கட்சியினர்!

கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (பாரதமே ஒன்றிணைவோம்) என்ற பெயரில் 3,500 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொள்ளவுள்ளார். இதற்காக, டெல்லியில் இருந்து விமானம் மூலமாக 6ஆம் தேதி இரவு சென்னை வரும் ராகுல் காந்தி, 7ஆம் தேதி காலையில் அவரது தந்தையும், மறைந்த முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். அதன்பின்னர், அங்கிருந்து ஹெலிகாப்டர் … Read more

பேருந்தில் பெண் குழந்தையை விட்டு சென்ற பெண்

தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையில் இருந்து தருமபுரிக்கு வந்த அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிசெல்ல தயாராக இருந்தது. அப்போது, அங்கு பச்சை நிற சுடிதார் அணிந்து வந்த ஒரு இளமண பெண் சுமார் 2 வயது மதிக்கதக்க பெண்குழந்தையுடன் முன்பக்கமாக பேருந்தில் ஏறியுள்ளார். பின்னர் இவர் தனது 2 வயது குழந்தையை பேருந்தில் தனியாக விட்டு விட்டு பின்பக்க படி வழியாக இறங்கி சென்றுவிட்டார்.  இந்த சூழலில் பேருந்து பயணிகளுடன் புறப்பட … Read more

ஒரே பள்ளியில் படித்தபோது காதல் மலர்ந்தது; பிரான்ஸ் இளம்பெண்ணை கரம்பிடித்த தமிழக வாலிபர்: இந்து முறைப்படி இன்று திருமணம்

காரைக்குடி: ஒரே பள்ளியில் படித்தபோது காதல் மலர்ந்தது. பிரான்ஸ் இளம்பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்த காரைக்குடி வாலிபருக்கு,  உறவினர்கள், கிராமமக்கள் ஒன்றுகூடி வாழ்த்து தெரிவித்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூரைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் பிரான்சில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் கலைராஜன். இவர் பிரான்சில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும்போது, அவரது பள்ளியில் சைக்காலஜி படிக்கும் கயல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஆரம்பத்தில் நண்பர்களாக பழகினர். பின்னர் அவர்களுக்குள் நட்பு … Read more

பிரான்ஸ் பொண்ணு – சிவகங்கை மாப்பிள்ளை.. சிவகங்கையில் நடைபெற்ற டும் டும் டும்!!

காரைக்குடி அருகே இந்திய வம்சாவளி மணமகனுக்கும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மணமகளுக்கும் திருமணம் இனிதாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அமராவதி புதூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்கள் தங்கராசு – மாணிக்கவள்ளி தம்பதியினர். தங்கராசு பிரான்ஸ் நாட்டில் அம்பாசிடரில் பணிபுரிந்து வருவதால் தனது மனைவியுடன் பிரான்ஸ் நாட்டிலேயே வசித்து வருகிறார். இவரது மகன் கலைராஜன் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் பிறந்த நிலையில் எட்டு வயதில் தனது குடும்பத்தாருடன் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில், அங்கு … Read more

இது சலுகை அல்ல; கடமை: மாணவிகளுக்கு ரூ.1000 திட்டத்தை தொடங்கி வைத்து ஸ்டாலின் பேச்சு

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித் தொகை வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் தொடக்க விழா இன்று (செப். 5) நடைபெற்றது. மேலும், 26 தகைசால் பள்ளிகள், 15 மாதிரிப் பள்ளிகள் தொடக்க விழாவும் நடைபெற்றது. சென்னை பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் … Read more