விராலிமலை அருகே பரபரப்பு வீட்டுக்குள் நாட்டு வெடி வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் காயம்

விராலிமலை : விராலிமலை அருகே விற்பனைக்கு வைத்திருந்த நாட்டு வெடி வெடித்தில் வீடு இடிந்து நாசமானதோடு இவ்விபத்தில் சிக்கிய 5 வயது சிறுவன் உட்பட 5 பேர் காயமடைந்து ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள நாங்குபட்டி சித்த குடிப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி(55). இவர் நாட்டு வெடிகளை தயாரித்து அப்பகுதிகளில் விற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இவர் தயாரித்த பெருமளவிலான வெடிகளை … Read more

“புலியை முறத்தால் அடித்த தமிழச்சி பரம்பரையில் வந்தவள் நான்” – ஆளுநர் தமிழிசை பேட்டி

“நான் என்றுமே அவமதிக்கப்படவும் இல்லை; அலறவும் இல்லை. எதைப்பார்த்து அலற மாட்டேன். புலியை முறத்தால் அடித்த தமிழச்சியின் பரம்பரையில் வந்தவள் நான்” என்று திருச்சியில் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி. கும்பகோணம் அருகே சுவாமிமலையில், 23 அடி உயரமுள்ள நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் பங்கேற்பதற்காக, விமானம் மூலம் திருச்சி வந்த புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் திருச்சிக்கும், தஞ்சைக்கும் வருவது என் தாய் வீட்டுக்கு வருவது … Read more

வேலுமணிக்கு ஆதரவாக போராட்டம் – எம்எல்ஏக்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது

கோவை: கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். கடந்த அதிமுக ஆட்சியின் போது, கிராமப்புறங்களில் உள்ள தெருவிளக்குகளை, எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாகவும், தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு அரசு விதிகளுக்கு மாறாக அமைச்சராக இருந்த வேலுமணி ஒப்பந்தங்களை … Read more

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு

தமிழக சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதன் அடிப்படையில் டாக்டர் விஜயபாஸ்கர் இடம் தொடர்பில் இருந்த மருத்துவர்கள் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகின்றனர். அதன்படி சேலத்தில் பல்வேறு மருத்துவர்கள் வீட்டிலும் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார் சோதனை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னை, சேலம், … Read more

மருத்துவப் படிப்பிற்கு சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்: புதுச்சேரி அரசு

புதுச்சேரி: நீட் மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு சென்டாக் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில், நிகழாண்டு இளங்கலை மருத்துவம் பயிலும் மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வினை 5,749 பேர் எழுதினர். இதில் 2,899 பேர் தேர்ச்சி பெற்றனர். இதனையடுத்து, தேசிய தேர்வு முகமையிடமிருந்து நீட் தேர்ச்சிக்கான புதுச்சேரி மாநில பட்டியலைப்பெற மாநில சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனிடையே, புதுச்சேரி மாநிலத்தில் நீட் தேர்வு மதிப்பெண்கள் … Read more

குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்த மனைவி – திருமண நாளன்று குத்திக் கொன்ற கணவன்

மயிலாடுதுறையில் குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை திருமணநாளில் கத்தியால் குத்தி கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை அக்பர் காலனி தெருவைச் சேர்ந்தவர்கள் அருள் (எ) ராயப்பன்( 49), ரேவதி (45) தம்பதியினர். 25 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். இந்நிலையில், பேருந்துநிலைய பகுதியில் சில்லரை வியாபாரம் செய்யும் ராயப்பன் குடிபோதைக்கு அடிமையானவர். இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு … Read more

எஸ்.பி.வேலுமணி – சி.விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காலைமுதல் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக ஆட்சிக் காலத்தில் எல்.இ.டி. பல்புகள் வாங்கியதில் 500 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.கோவை சுகுணாபுரத்தில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட 26 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 8 லட்சம் … Read more

விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறும்: பழனிசாமி உறுதி

மேட்டூர்: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான பழனிசாமி கூறினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்வழங்கும் நிகழ்ச்சி சேலம் மாவட்டம் எடப்பாடியில் நேற்று நடைபெற்றது. இதில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கிய பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சரபங்கா நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட 40 குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பொருளாதார ரீதியாக … Read more

+2 மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது வழங்கப்படும்? தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த மே 15ம் தேதி தொடங்கிய 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 28ம் தேதி வரை நடைபெற்றது.  கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சரியாக நடைபெறாமல் இருந்த பள்ளிகள் மற்றும் தேர்வுகள் இந்த ஆண்டு சரிவர நடத்தப்பட்டது.  இந்த ஆண்டு 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்களும், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவிகளும் என மொத்தமாக 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.  … Read more

ரெய்டுக்கு எதிர்ப்பு!: கோவையில் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன் போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் அதிரடியாக கைது..!!

கோவை: கோவை சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன் போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கிராமப்புறங்களில் உள்ள தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்கள், நண்பர்கள் வீடுகள், பினாமி நிறுவனங்கள் உள்ளிட்ட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடியில் உள்ள பல்வேறு … Read more