விஜய், அஜித்துக்கே இல்லை..ஆனா உதயநிதிக்கு கிடைத்த பெருமை!

திமுகவின் கொள்கைகள் மற்றும் வரலாறு கடைக்கோடி கிராமங்கள் வரை இல்லாதது வருத்தமளிப்பதாகவும், தலைமைக்கும் தொண்டனுக்கும் இடைவெளியே இருக்க கூடாது என்றும், அதை நிரப்பி வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். பாரம்பரியம் மிக்க ஒரு கட்சியின் நேர்மையான தலைவராக மு.க.ஸ்டாலினின் லட்சியத்தை நோக்கிய பயணம் அது.!  அதனை செயல்படுத்த திமுக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. திமுகவின் கொள்கைகள் மற்றும் வரலாற்றைத் தமிழகம் முழுவதும் எடுத்துரைக்கும் பணியில் அக்கட்சியின் இளைஞர் அணி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. கழகத்தின் … Read more

மாமண்டூர் பகுதியில் பயண வழியில் உள்ள அரசு உணவகத்தில் கழிப்பறையை பயன்படுத்த கட்டண கொள்ளை

மதுராந்தகம்: சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அடுத்த மாமண்டூர் பகுதியில் பயண வழி உணவகம் செயல்பட்டு வருகிறது. இது தமிழக அரசு சார்பில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு  கட்டப்பட்டது. ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட பஸ்களை நிறுத்த முடியும். இதன்காரணமாக சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் பஸ்களும் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் பஸ்களும் இந்த பயண வழி உணவகத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள், டிரைவர், கண்டக்டர்கள் ஆகியோர் சாப்பிட்டு செல்கின்றனர். இந்த … Read more

இடிதாக்கி தீப்பற்றி எரிந்த தென்னை மரம் – இருளில் மூழ்கிய ஆரணி நகரம்

ஆரணி அருகே தென்னை மரத்தின் மீது இடி தாக்கியதால் ஆரணி நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு தொடர்ந்து 3 மணி நேரம் இருளில் மூழ்கியது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சந்தவாசல் அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தில் தென்னை மரத்தின் மீது நேற்றிரவு இடி தாக்கியதால் தென்னை மரம் கொழுந்துவிட்டு எரிந்தது. இதை பார்த்த பொதுமக்கள் தென்னை மரத்தின் அருகில் செல்லும் மின் கம்பிகள் பாதிப்படையுமா? என்ற அச்சத்தில் மின்வாரிய அலுவலகத்திற்கு உடனடியாக தகவலை தெரிவித்தனர். இதன் … Read more

தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் ரயில்வே தேர்வு மையம்: ராமதாஸ் கண்டனம்

சென்னை: இந்திய ரயில்வேயில் குரூப் டி பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை எழுத தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”இந்திய ரயில்வேயில் குரூப் டி பணியிடங்களை நிரப்புவதற்காக வரும் 8ஆம் தேதி நடைபெறும் போட்டி தேர்வுகளை எழுதுவதற்காக தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. தமிழக மாணவர்கள் ஆந்திர தேர்வு மையத்திற்கு செல்ல 700.கி.மீ.க்கும் கூடுதல் தொலைவு பயணிக்க … Read more

2000 ஆண்டு பழமையான கோவில்.. 62 ஆண்டுக்கு முன்பு திருட்டு.. அமெரிக்கா மியூசியத்தில் கண்டுபிடிப்பு!

தஞ்சாவூர் மாவட்டம் திருவேதிக்குடி கண்டியூரில் உள்ள அருள்மிகு வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 2000 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் போன்ற முனிவர்கள் தரிசித்து இறைவனின் பெருமையைப் பாடிய திருக்கோயில் என பழங்காலத்திலிருந்தே புகழ்பெற்று விளங்குகிறது. இந்த நிலையில் வேதபுரீஸ்வரர் கோவிலில் 62 ஆண்டுகளுக்கு முன்பு புகந்த மர்ம நபர்கள் அங்கு பக்தர்களால் வனங்கப்பட்ட வந்த பழங்கால நடராஜனை திருடிச் சென்று உள்ளனர். இது … Read more

கொள்ளிடம் ஆற்றில் 45 நாட்களில் 3-வது முறையாக வெள்ளப்பெருக்கு: கரையோரம் இருந்த வீடு அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் பெய்த மழையால் ஏரி நிரம்பி நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்ததுள்ளது. குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதிகளான ஓலைப்பாளையம், தட்டான்குட்டை, கத்தேரி உள்ளிட்ட பகுதிகளில்  நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் ஓலைப்பாளையம் ஏரி நிரம்பியது. ஏரியிலிருந்து உபரி நீர் வழிந்தோடும் நிலையில் அந்த ஆக்கிரமிப்பு கட்டப்பட்ட குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்ட நிலையில் அங்கு மழைநீரை அகற்றும் பணியை நகராட்சி மற்றும் வருவாய்துறையினர் … Read more

கோவில்பட்டி: திடீரென திறந்த அவசரவழி கதவு…பேருந்தில் இருந்து கீழே விழுந்த மாணவி படுகாயம்

கோவில்பட்டியில் தனியார் பள்ளி வாகனத்தில் இருந்து விழுந்து பள்ளி மாணவி படுகாயமடைந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தொட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா என்பவரது மகள் ரதிமா (10) என்பவர் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இன்று காலையில் அந்தப் பள்ளியின் வாகனத்தில் ஊரிலிருந்து பள்ளிக்கு வந்துள்ளார். கோவில்பட்டி அருகே உள்ள முடுக்கலான்குளம் பகுதியில்  வாகனம் வளைவில் திரும்பும்போது வாகனத்தின் அவசர வழி பகுதி திடீரென திறந்ததால் … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, … Read more

தமிழகத்தில் தகைசால் பள்ளிகள்: பள்ளிக் கல்வித்துறையில் புதிய பாய்ச்சல்!

26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரிப் பள்ளிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (5.9.2022) சென்னை, பாரதி பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் சார்ந்தும் அதைக் கடந்தும் முழுமையான கல்வியை வழங்கிடும் வகையில் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக 26 தகைசால் பள்ளிகளையும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி, … Read more

மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்!

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து உயா் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பங்கேற்று சிறப்பித்தார். அப்போது ஒரு மாநில முதலமைச்சர், இன்னொரு மாநிலத்திற்கு சென்று பள்ளிகள், மருத்துவமனைகளை பார்வையிடுவதை இதுவரை கண்டதில்லை என முதலமைச்சர் ஸ்டாலினை டெல்லி முதலமைச்சர் கேஜ்ரிவால் பாராட்டியுள்ளார். அவ்வாறு தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு வந்து பார்வையிட்டு, … Read more