எதிர்க்கட்சி துணைத்தலைவர் யார் என்பது சட்டப்பேரவை கூடும்போது தெரியும்: சபாநாயகர் அப்பாவு பேட்டி

திருநெல்வேலி: எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது சட்டப்பேரவை கூடும்போது தெரியும் என சபாநாயகர் அப்பாவு நெல்லையில் பேட்டியளித்தார். எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் ஜனநாயக ரீதியில் முடிவு இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

குடும்பத்துடன் தடுப்பணையில் குளித்தபோது விபரீதம் – நீரில் மூழ்கி சிறுமி உட்பட 3 பேர் பலி

அரக்கோணம் அருகே  தடுப்பணையில் குளிக்கச் சென்ற எட்டாம் வகுப்பு மாணவி உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம் பகுதியைச் சேர்ந்த ஜவ்ளக் என்பவரின் குடும்ப நிகழ்ச்சிக்காக வந்திருந்த உறவினர்கள் அனைவரும் நிகழ்ச்சி முடிந்தவுடன் தடுப்பணைக்கு குளிக்கச் சென்றுள்ளனர். இந்நிலையில் கால் தவறி தடுப்பணையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து தவறி விழுந்துள்ளனர். தவறி நீரில் விழுந்தவர்களில் நான்கு பேரை பாதுகாப்பாக மீட்ட நிலையில், மீதமிருந்த 3 பெண்கள்  … Read more

Tamil news today live: அரவிந்த் கெஜ்ரிவாலை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற முதலமைச்சர்

Go to Live Updates பெட்ரோ- டீசல் விலை சென்னையில் 106வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை .ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியா தோல்வி ஆசியகோப்பை: சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடைந்துள்ளது. 182 ரன்கள் இலக்கை நிர்ணயித்த இந்தியாவை 19.5 ஓவர்களில் 182 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் வெற்றிபெற்றுள்ளது. 45 பேருக்கு நல்லாசிரியர் விருது ராமநாதபுரத்தை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன் உள்பட 45 … Read more

புதுக்கோட்டை || காவல் ஆய்வாளர் வீட்டில் கொள்ளை… காவல்துறையினர் தீவிர விசாரணை..!

காவல் ஆய்வாளர் வீட்டில் கொள்ளையடித்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை அழகர் நகர் பகுதியில் வசிப்பவர் கோபிநாத். இவர் புதுக்கோட்டை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தார். கோபிநாத் குடும்பத்துடன் தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.  அவருடைய வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது அவரின் வீட்டில் இருந்த பணம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு … Read more

இன்று தேசிய ஆசிரியர் தினம்: ஆளுநர்கள், முதல்வர், கட்சித் தலைவர்கள் வாழ்த்து

தேசிய ஆசிரியர் தினம் இன்று (செப்டம்பர் 5) கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்திகள்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள். ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்துவது இந்தியாவின் பாரம்பரிய மரபு. ஆசிரியர்கள் சமூகத்துக்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாகத் திகழ்கின்றனர். சுதந்திர இந்தியாவின் அடுத்த 25 ஆண்டுகள் நாட்டின் … Read more

ஆசிரியர்களின் கவலைகள் களையப்பட வேண்டும்: ராமதாஸ்

ஆசிரியர்கள் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கும் வகையில் அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டால் தான் அவர்களால் மிகச்சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்க முடியும் என்று கூறியுள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதை தெரிவித்துள்ளார். அதில், “ஒட்டுமொத்த நாட்டின் முன்னேற்றத்திற்கும் காரணமாகத் திகழும் ஆசிரியர்கள் நாளை கொண்டாடும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏழைக் குடும்பத்தில் பிறந்து, ஆசிரியராக பணி செய்து, இந்தியாவின் முதல் குடிமகன் என்ற உன்னத நிலையை … Read more

உச்சநீதிமன்ற வழக்கில் வெற்றி பெற இபிஎஸ் ஆதரவாளர்கள் சிறப்பு வழிபாடு!

உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்யும் நிலையில் காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் ஆலயத்தில் இபிஎஸ் ஆதரவு அதிமுகவினர் சிறப்பு வழிபாடு செய்தனர்.  செப்டம்பர் மாதம் 2-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொது குழு செல்லும், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக ஓபிஎஸ் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார்.   இந்நிலையில் உயர் நீதிமன்ற … Read more

கோவையில் மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் ரயில் சேவை ரத்து

கோவை: கோவையில் மழை காரணமாக மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. ஹில்கிரோ ஆடர்லி ரயில் நிலையம் இடையே ஏற்பட்ட மண்சரிவை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமடைந்துள்ளனர்.   

திருப்பதி தேவஸ்தான சேவை குறைபாடு: சேலம் பக்தருக்கு ரூ.45 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

திருப்பதி தேவஸ்தான சேவை குறைபாடு தொடர்பாக சேலத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் ரூபாய் 45 லட்சம் நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த ஹரி பாஸ்கர் என்பவர் திருப்பதி தேவஸ்தானத்தில் மேல் சாந்து வாஸ்திர சேவை தரிசனத்திற்காக ரூபாய் 12,250 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்துள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு செலுத்திய இந்த கட்டணத்தின் அடிப்படையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10ஆம் தேதி … Read more

தாம்பரம், ஐடி காரிடர், எண்ணூர், மாதவரம் பகுதிகளில் இன்று மின்தடை

சென்னையில் இன்று (செப்.5) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், ஐடி காரிடர், எண்ணூர், மாதவரம் ஆகிய பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். தாம்பரம் பகுதி:  ராஜகீழ்பாக்கம் பொன்னியம்மன் கோயில் தெரு, கனகராஜ் தெரு, ஆலவட்டம்மன் கோயில் தெரு, மாடம்பாக்கம் மெயின் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து … Read more