அரசு பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி.? பெரியார் திராவிட கழகத்தினர் போராட்டம்.!

கோவை மாநகராட்சி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பயிற்சியில் ஈடுபட்டதாக கூறி தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பயிற்சி பெற அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்கள் பள்ளி வளாகத்தில் ஆர்எஸ்எஸ் பயிற்சி வகுப்பு நடைபெறவில்லை என்றும் பாஜக ஊடக பிரிவு மறுப்பு தெரிவித்துள்ளது.  மேலும், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஆண்டுதோறும் சேவா தினம் … Read more

திருவண்ணாமலையில் விடிய, விடிய லட்சக்கணக்கானோர் கிரிவலம்: அண்ணாமலையாருக்கு அரோகரா என முழக்கம்

திருவண்ணாமலையில் விடுமுறை நாளான நேற்று பவுர்ணமி திதி என்பதால், அதிகாலையில் இருந்து விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை வழிபட்டனர். திருவண்ணாமலையின் சிறப்பு கிரிவலம். ‘மலையே மகேசன்’ என போற்றப்படும் திரு அண்ணாமலையை 14 கி.மீ. வலம் வந்து பக்தர்கள் வழிபடுகின்றனர். பவுர்ணமி நாளில், கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும். இந்நிலையில், விடுமுறை நாளான நேற்று பவுர்ணமி என்பதால், அதிகாலையில் இருந்து பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பக்தர்களின் வருகை, மாலை 4 … Read more

வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் மறைந்தார்!

வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் வயது முதிர்வு காரணமாக இன்று (அக்டோபர் 10) சென்னை கே.கே. நகரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 94. இவர் 1928 ம் வருடம் திருநெல்வேலி மாவட்டம் சத்திர புதுக்குளத்தில் பிறந்தார். சுப்பு ஆறுமுகம் தனது வில்லுப் பாட்டின் வாயிலாக சுதந்திர போராட்ட காலத்தில் மக்களிடையே ஆன்மிகம், தேச பக்தியை வளர்த்து வந்தார். 14 வயது குமரன் பாட்டு என்ற கவிதை தொகுப்பு மூலம் பிரபலமடைந்தார். நடிகர் நாகேஷின் … Read more

ஆர்எஸ்எஸ் பெண்கள் அமைப்பு பேரணிக்கு தடை

குலசேகரம்: ஆர்எஸ்எஸ்சின் மகளிர் அமைப்பான ராஷ்ட்ர சேவிகா சமிதி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் நேற்று  அணிவகுப்பு ஊர்வலத்துக்கு  அனுமதி  கோரப்பட்டிருந்து. இந்த  நிகழ்ச்சியில் 1,320 பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொள்வதாக  இருந்தது. ஆனால் மாவட்ட எஸ்பி ஹரிகிரன் பிரசாத் உத்தரவின்பேரில், தக்கலை டி.எஸ்.பி கணேசன் இந்த பேரணிக்கு தடை உத்தரவு பிறப்பித்தார். நீதிமன்ற உத்தரவின் படி இப்போது பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்று ராஷ்டிர சேவிகா சமிதி நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து ஊர்வலம் … Read more

வயது முதிர்வினால் காலமானார் `வில்லிசை வேந்தர்’ பத்மஸ்ரீ சுப்பு ஆறுமுகம்

வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம், வயது முதிர்வினால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார். திருநெல்வேலி மாவட்டம் சந்திர புதுகுளத்தில் 1928 ஆம் ஆண்டில் பிறந்த வில்லிசை பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் (வயது 93) வயது முதிர்வின் காரணமாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்தார். தன்னுடைய 14வது வயதிலே “குமரன் பாட்டு” என்ற கவிதைதொகுப்பு மூலம் பிரபலமடைந்த சுப்பு ஆறுமுகம், கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் உதவியால் சென்னையில் தங்கி கல்கி எழுதிய காந்தியின் சுயசரிதையை முதன் … Read more

பொதுக்குழு டு அறிவாலயம்: பசியை மறந்து வந்த ஸ்டாலின்; நெகிழ்ந்த நிர்வாகிகள்

பொதுக்குழு டு அறிவாலயம்: பசியை மறந்து வந்த ஸ்டாலின்; நெகிழ்ந்த நிர்வாகிகள் Source link

கோயம்பேடு மார்க்கெட்.! (10.10.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 10/10/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 28/25/20 நவீன் தக்காளி 35 நாட்டு தக்காளி 30/25 உருளை 33/26/24 சின்ன வெங்காயம் 65/60/50 ஊட்டி கேரட் 80/65/60 பெங்களூர் கேரட் 40/30 பீன்ஸ் 50/40 பீட்ரூட். ஊட்டி 60/55 கர்நாடக பீட்ரூட் 40 சவ் சவ் 20/18 முள்ளங்கி 25/20 முட்டை கோஸ் 25/20 வெண்டைக்காய் 20/15 உஜாலா கத்திரிக்காய் 18/15 வரி … Read more

கோவையில் அரசுப்பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி!?

கோவையில் மாநகராட்சி பள்ளி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பயிற்சியில் ஈடுபட்டதாகக் கூறி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில் பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வகுப்பு நடைபெறவில்லை என்று பா.ஜ.க. ஊடக பிரிவு மறுப்பு தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஆண்டுதோறும் சேவா தினம் என்ற ஒரு தினத்தை கடைப்பிடிப்பதாகவும், அன்றைய தினம் … Read more

பழிக்கு பழியாக இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பழிக்கு பழியாக இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அந்திவாடியை சேர்ந்த திமுக பிரமுகரான உதய்குமார் கடந்த பிப்ரவரி 28ந்தேதி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் கொலையில் தொடர்புடைய முரளியை பெத்தக்கொள்ளு பகுதியில் மது அருந்த அழைத்துச் சென்ற உதயகுமாரின் நண்பர்கள் மதன் மற்றும் நவீன் ஆகியோர் பழிக்குப் பழியாக வீச்சரிவாளால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்துள்ளனர். Source link

மீண்டும் திமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவராக 2-வது முறையாகத் தேர்வு செய்யப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பொதுச் செயலராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். துணைப் பொதுச் செயலராக கனிமொழி எம்.பி. நியமிக்கப்பட்டார். திமுகவின் 15-வது பொதுத் தேர்தலில் ஒன்றியம் முதல் மாவட்டச் செயலர்கள் வரையிலான நிர்வாகிகள் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், சென்னை செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுக்குழு கூடியதும், தலைவர், பொதுச் செயலர், … Read more