#நாகை | சிறைச்சாலை கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கொலை குற்றவாளி!

நாகப்பட்டினம் மாவட்டச் சிறையில் கொலைக் குற்ற வழக்கில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த பாலூரான் படுகையைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 30). இவர் கடந்த 22 ம் தேதி தனது கள்ளக் காதலியை கொலை செய்த வழக்கில் கொள்ளிடம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், கொலை விசாரணை கைதி செந்தில் இன்று சிறை ஜன்னல் … Read more

செல்போன் வாங்கித் தராததால் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி சரஸ்வதி (26). இருவருக்கும் 5 வயது ஒரு மகன் உள்ளார். சரஸ்வதி தன் கணவரிடம் தொடர்ந்து செல்போன் வாங்கி தரச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். கணவர் செல்போன் வாங்கி தர மறுத்து தகாத வார்த்தையில் திட்டி விட்டு, வீட்டை விட்டு வெளியேறி சென்றார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது பெட் ரூம் உள்ளே … Read more

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் குழந்தை திருமணம் செய்த விவகாரத்தில் 2 தீட்சிதர்கள் கைது

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் குழந்தை திருமணம் செய்த விவகாரத்தில் தந்தை, மகன் என 2 தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டனர். சிதம்பரம் வடக்கு சன்னதியைச் சேர்ந்த தில்லை நாகரத்தினம் மற்றும் அவரது மகன் பத்ரிசன் ஆகியோர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்களாக பணிபுரிந்து வருகின்றனர். பத்ரிசனுக்கும் 13 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றது தொடர்பாக கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் திருமண ஏற்பாடுகளை செய்த தந்தை தில்லை … Read more

பேருந்தில் இருந்து தவறி விழுந்த சிறுவன்: ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு உயிரிழப்பு

சென்னை: சென்னையில் பேருந்தில் இருந்து தவறி விழுந்த சிறுவன் ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கரணை பெரும்பாக்கம், கலைஞர் நகர் முத்துமாரியம்மன் கோயில் 2-வது தெருவை சேர்ந்த சிறுவன் ஆர்யா (14). மேடவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 8-ம் தேதி தாம்பரத்தில் இருந்து அடையார் செல்லும் மாநகர பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்தபோது தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த … Read more

`ரொம்ப திருப்தியா இருக்கு’- வடசென்னை மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின்

சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். சென்னையில் 608 கோடி ரூபாய் மதிப்பில் 179.45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீர்வளம், நெடுஞ்சாலை, பொதுப்பணி ஆகிய துறைகளின் சார்பிலும் பன்னாட்டு நிதியுதவியுடன் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில், சென்னை துறைமுகம், திரு.வி.க.நகர், கொளத்தூர் தொகுதிகளில் நடைபெறும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். சென்ட்ரல் … Read more

Tamil news today live: விடுதலைப் புலிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவர் – இலங்கை பிரதமர் 

Tamil news today live: விடுதலைப் புலிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவர் – இலங்கை பிரதமர்  Source link

சைவமும், வைணவமும் இந்து மதம் இல்லையா..? நடிகர் சரத்குமார் ஆவேச பேச்சு.!

சமீபத்தில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியது. இந்த படம் வெளியானதிலிருந்து அதில் வரும் கதாபாத்திரங்கள் குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. இது குறித்து சமீபத்தில் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் திருமாவளவன் பிறந்தநாள் மேடையில் பேசிய கருத்து பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. அதில் அவர், “ராஜராஜ சோழனை இந்து என்று கூறுவது தவறானது. ராஜ ராஜ சோழன் இந்து இல்லை என்றும் வரலாறு மாற்றப்படுகிறது” என பேசி இருந்தார். இதை கேட்ட பலரும் … Read more

சிறையில் கொலை குற்றவாளி தற்கொலை!!

நாகை மாவட்டச் சிறையில் கொலைக் குற்ற விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பாலூரான் படுகையைச் சேர்ந்த கொலை குற்றவாளி செந்தில் (30) என்பவரை கடந்த 22ஆம் தேதி கள்ளக் காதலியை கொலை செய்த வழக்கில் கொள்ளிடம் காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து நாகை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கொலை குற்றவாளி செந்தில் சிறையில் உள்ள ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து நாகை … Read more

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டங்கள் குறித்து மத்திய இணையமைச்சர் ஆய்வு

சென்னை: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மத்திய புள்ளியியல் மற்றும் திட்டஅமலாக்கத் துறை இணையமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் நேற்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆய்வு செய்தார். இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் திட்டமிடுதல் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர்,சென்னை மாநகராட்சி இணை ஆணையர் சங்கர்லால் குமாவட் ஆகியோர் பங்கேற்று மத்திய அரசின் திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் நிலை குறித்து எடுத்துரைத்தனர். இந்த கூட்டத்தில், பல்வேறு துறைகளின் … Read more