வெள்ளம் வந்த பிறகு நிவாரணப் பொருட்கள் தருவது தீர்வாகாது: மநீம தலைவர் கமல்ஹாசன்

சென்னை: வெள்ளம் வந்த பிறகு நிவாரணப் பொருட்கள் தருவது தீர்வாகாது என்றும், மழைநீர் வடிகால்களைப் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மழை நீர் வடிகால் பணிகள் தொடர்பாக மநீம தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அக்டோபர் இறுதியில் தொடங்கும் வடகிழக்குப் பருவமழை, வழக்கத்தைக் காட்டிலும் அதிகம் இருக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சராசரி மழையையே தாங்காமல் தவிக்கும் தமிழ்நாடு, கனமழையைத் தாங்குமா? 2015-ல் ஏற்பட்ட மழை வெள்ளப் பேரிடருக்குப் பிறகு, … Read more

நாளைக்கு பௌர்ணமி: இதை மறக்காம செய்யுங்கள்- பாமகவினருக்கு ராமதாஸ் வேண்டுகோள்!

நாளை அக்டோபர் 9ஆம் தேதி பௌர்ணமி நாளாக இருப்பதால் அன்று செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் தனது கட்சியினரைக் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாதத்திற்கு ஒரு முறை கிளை, பேரூர், ஒன்றிய, மாவட்ட அளவில் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும். பவுர்ணமி நாளில் கிராமக் கிளை அளவிலான செயற்குழு கூட்டமும், அமாவாசை நாளில் ஒன்றிய, நகர, பேரூர் கூட்டங்களும் கூட்டப்பட வேண்டும். ஆங்கில மாதத்தின் முதல் … Read more

ஜனநாயக நாட்டில் எந்தக் கட்சியிலும் இதுபோன்ற மோசமான பொதுக்குழு நடைபெறவில்லை’-ஓபிஎஸ் கருத்து

ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியிலும் இது போன்ற கீழ்த்தரமான பொதுக்குழு நடக்கவில்லை என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மாற்றுக் கட்சியிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர். மேலும் ஈபிஎஸ் அணியில் இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் இன்று ஓபிஎஸ் அணியில் இணைந்தார். அதனைத்தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவியும் வழங்கினார் ஓபிஎஸ். ஈபிஎஸ் அணியிலிருந்து ஓபிஎஸ் அணிக்கு மாறிய மைத்ரேயன் நிகழ்ச்சியில் பேசிய போது, … Read more

எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு | கர்நாடகம் போல் தமிழகத்திலும் துணிச்சல் நடவடிக்கை தேவை: ராமதாஸ்

சென்னை: கர்நாடகத்தில் பட்டியலினத்தவர், பழங்குடியினர் இடஒதுக்கீடு அதிகரிக்கப்படுவது வரவேற்கத்தக்கது என்றும், அம்மாநில அரசை தமிழகம் பின்பற்ற வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “கர்நாடகத்தில் மக்கள்தொகை அடிப்படையில் பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீடு 15%-ல் இருந்து 17% ஆகவும், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு 3%-ல் இருந்து 7% ஆகவும் உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இது மிகச்சிறந்த சமூக நீதி காக்கும் நடவடிக்கையாகும். தமிழகத்தில் பட்டியலின … Read more

மடக்கிய டிடிவி தினகரன்; முதல்வர் கடும் அதிருப்தி!

கரூர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலை போடாமலேயே ரூபாய் 5 கோடி பணத்தை சங்கர ஆனந்த இன்ஃப்ரா என்கிற ஒப்பந்ததாரருக்கு பட்டுவாடா செய்து இருப்பதாக, அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டி உள்ளது. இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், ‘கரூர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலை போடாமலேயே, ரூ 5 கோடி பணத்தை சங்கர் ஆனந்த் இன்ஃப்ரா என்ற ஒப்பந்ததாரருக்கு மார்ச் 2022ம் தேதி பட்டுவாடா செய்துள்ளது. இதன் மீது FIR பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் … Read more

கிழங்கை பார்த்து பார்த்து வாங்கிய நிர்மலா சீதாராமன்… மயிலாப்பூர் மார்க்கெட்டுக்கு திடீர் விசிட்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று (அக். 9) சென்னை வந்தார். தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பும் வழியில், மயிலாப்பூரில் உள்ள தெருவோரத்தில் இருந்த கடைகளில் காய்கறி வாங்கினார். இதனால், அப்பகுதி சிறிது பரபரப்பாக காணப்பட்டது.  இதுகுறித்த வீடியோ நிர்மலா சீதாராமனின் அதிகாராப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், கடையில் இருந்த கிழங்கு வகைகளை மத்திய அமைச்சர் பக்குவமாக பார்த்து வாங்கினார். தொடர்ந்து, அங்கிருந்த வேறு கடையில் ஒருசில கீரைக்கட்டுகளையும் வாங்கினார். … Read more

வாலாஜாபாத் அருகே தனியார் தொழிற்சாலையில் கேன்டீனில் உணவு சாப்பிட்ட 30 ஊழியர்களுக்கு வாந்தி, மயக்கம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அருகே ஊத்துக்காடு கூட் சாலை பகுதியில் தனியார் இருசக்கர மற்றும் கார்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு வாலாஜாபாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு ஷிப்ட் அடிப்படையில் வேலை நடந்து வருகிறது. ஊழியர்களுக்காக கேன்டீனும், தொழிற்சாலை வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு வேலையில் இருந்த 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், கேன்டீனில் உணவு சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் 30க்கும் மேற்பட்டோருக்கு  … Read more

அக்.17-ல் சட்டப்பேரவைக் கூட்டம் நடக்கும்போது தொடர் மறியல் போராட்டம்: ஜேஏசி அறிவிப்பு

மதுரை: “அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4 ஆண்டாக நடைபெறாத ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இம்மாதம் 17-ம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடக்கும்போது தொடர் மறியல் போராட்டம் நடைபெறும்” என்று ஜேஏசி அறிவித்துள்ளது. மதுரையில் இன்று கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜேஏசி) சார்பில் மூட்டா அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அதன் ஒருங்கிணைப்பாளர் மு.நாகராஜன் கூறியது: “கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக்குழுவின் … Read more

ஆர்எஸ்எஸ் நல்ல மனிதர்களை உருவாக்கும் அமைப்பு- பாஜக மாநில பொதுச் செயலாளர்!

விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விருதுநகர் வந்திருந்த தமிழக பாஜகவின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். ஒன்றிய பாஜக அரசு பழிவாங்கும் நோக்கத்துடனும், தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் நோக்கத்துடன் நடந்து கொண்டால் திமுக அதன் போர் குணத்தை வெளிகாட்டும் என திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த பேராசிரியர் சீனிவாசன்; மாநில திமுக அரசாங்கம் மத்திய பாஜக அரசுடன் போர் தொடுக்கட்டும் என்றார். மேலும் பேசிய அவர் … Read more