செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும்: தென்னக ரயில்வே மண்டல மேலாளரிடம் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ கோரிக்கை

திருவள்ளூர்: செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தென்னக ரயில்வே மண்டல மேலாளரிடம் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் அருகே செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் உள்ளது. இதன் அருகே  ரயில்வே கேட் உள்ளது. இந்த வழியாக செவ்வாப்பேட்டை, கீழானூர், மேலானூர், சிட்டத்தூர், கிளாம்பாக்கம், தொட்டிக்கலை, ராமாபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் அரண்வாயல், திருவூர், கொப்பூர், பாப்பரம்பாக்கம், முருக்கஞ்சேரி, நேமம், புதுச்சத்திரம், வெள்ளவேடு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் … Read more

சென்னை: சாலையை கடக்க முயன்ற பெண் மீது அதிவேகமாக வந்த பைக் மோதி விபத்து.!

சென்னை நந்தனத்தில் அதிவேகத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் சாலையை கடக்க முயன்ற பெண் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் அந்த பெண் படுகாயம் அடைந்துள்ளார். சென்னை நந்தனத்தில் சாலையை கடக்க முயன்ற 40 வயது மதிக்கத்தக்க பெண்மணி மீது இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் வந்த இளைஞர் மோதியதில் அந்த பெண்மணி படுகாயத்துடன் நிலைகுலைந்து சாலையில் விழுந்துள்ளார். இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை மீறி அருகில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. வாகனத்தை ஓட்டி வந்த இளைஞரும் … Read more

திருடிய நகையை அணிந்து செல்ஃபி.. 3 ஆண்டுகளுக்கு பின் பெண் கைது..!

தென்காசி மாவட்டம் சிவந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பங்கஜவல்லி (69). ஓய்வு பெற்ற ஆசிரியையான இவரது வீட்டில் கடந்த 2019-ம் ஆண்டு 16 பவுன் தங்கச் சங்கிலி காணாமல்போனது. இது குறித்து அவர் தென்காசி போலீசில் புகார் செய்தார். போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த வழக்கில் துப்பு துலங்காமல் இருந்தது. இந்த நிலையில், பங்கஜவல்லி செல்போனில் அவர் வீட்டில் வேலை பார்த்த ரெட்டியார்பட்டி பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் மனைவி ஈஸ்வரி (40) … Read more

கொள்ளிடம் ஆற்றில் கடைமடை கட்டமைப்புச் சுவர் அமைக்க நிதி ஒதுக்குக: ஸ்டாலினுக்கு அன்புமணி கடிதம்

சென்னை: கொள்ளிடம் ஆற்றில் அளக்குடி – திருக்கழிப்பாலை கடைமடை கட்டமைப்புச் சுவர் அமைக்க உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்தக் கடிதத்தில், ”கடலூர் – மயிலாடுதுறை மாவட்டங்களில் நிலத்தடி நீர்வளத்தை பாதுகாப்பது, கடல் நீர் உள் புகுவதை தடுப்பது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதற்கு தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கடிதத்தை தமிழகத்தின் முதல்வராகிய தங்களுக்கு … Read more

நிலவில் மனிதர்கள் குடியேறி விவசாயம் செய்ய முடியும்: விஞ்ஞானி மயில்சாமி தகவல்!

திருச்சி ஆண்டாள் வீதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் (CARE ACADEMY) PG – TRB தேர்வில் இன்று அரசு பணி ஏற்க இருக்கும் 85 ஆசிரியர்கள் மற்றும் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் இஸ்ரோ இயக்குனர் மற்றும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மயில்சாமி அண்ணாதுரை, “மேற்படிப்பு என்பதை தாண்டி வேலைக்கு கூட போட்டி தேர்வு … Read more

நாகப்பட்டினத்தில் ரூ. 3.25 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் மேம்படுத்தும் பணி

* இரவு, பகலாக பணிகள் மும்முரம்* மழைக்காலம் தொடங்குவதற்குள் முடிக்க திட்டம் நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் புதிய பஸ் ஸ்டாண்ட் ரூ.3.25 கோடியில் மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் அவுரித்திடலில் தற்காலிக பஸ்ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு பஸ்கள் வந்து செல்கிறது. எந்தெந்த ஊர்களுக்கு எந்தெந்த இடத்தில் பஸ்கள் நிற்கும் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்படாததால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா, எட்டுக்குடி முருகன் கோயில் என மூன்று மதத்தை சேர்ந்த பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அதிகம் … Read more

1 மணி நேரமாக வராத 108 ஆம்புலன்ஸ்-டாட்டா ஏஸ்ஸில் மருத்துவமனைக்கு சென்ற அவலம்

கிருஷ்ணகிரி சிப்காட் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆம்புலன்ஸ் வராததால் டாட்டா ஏஸ் வாகனத்தின் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அவலம் நடந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சிப்காட் அருகே உள்ள அரசமரம் பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டது. இதில் பேரிகை பகுதியைச் சேர்ந்த பாக்யராஜ், அவரது மனைவி … Read more

கோடிக்கணக்கான பயனர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ட்வீட்டரின் புதிய அப்டேட்..!!

உலகளவில் மிகவும் பிரபலமான சமூக வலைத்தளங்களில் ஒன்று ட்விட்டர். ஒரு நாட்டின் பிரதமர் முதல் சாமானிய மக்கள் வரை அனைவரும் ட்விட்டரை பயன்படுத்தி வருகின்றனர். அனைத்து உலக பிரபலங்களும் முக்கிய அறிவிப்புகளை ட்விட்டர் மூலமே வெளியிடுகின்றனர். பல சமூக வலைதளங்கள் இருந்தாலும் 140 எழுத்துகளில் சொல்ல வேண்டிய செய்தியை சொல்ல வேண்டும் என்பதே ட்விட்டரின் சிறப்பம்சமாக இருக்கிறது. அதனால் சர்வதேச அளவில் பல ஆக்டிவ் பயனர்கள் இருக்கும் சமூக வலைதளமாக ட்விட்டர் இருக்கிறது. ட்விட்டர் தலத்தில் ஏகப்பட்ட … Read more

ஹெல்மெட்டின் மகத்துவம் சொல்லும் தரவு: 3 ஆண்டுகளில் புதுச்சேரியில் 3,140 சாலை விபத்துகள்; 445 உயிரிழப்புகள்

புதுச்சேரி: புதுச்சேரியில் முறையற்ற வகையில் வாகனங்களை ஓட்டுவதால் விபத்துகள் அதிகரித்துள்ளன. 3 ஆண்டுகளில் 3,410 சாலை விபத்துக்களில் 445 பேர் உயிரிழந்துள்ளனர் என்று புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘‘முறையற்ற வகையில் மோட்டார் வாகனம் இயக்குவதால் தினமும் ஏற்படும் விபத்துகள் அதிகரித்துள்ளன. 2019 முதல் 2021 வரை புதுச்சேரியில் 3,410 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அவற்றில் 445 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த நான்கு நாட்களில் புதுச்சேரியில் நான்கு … Read more