கனமழை எதிரொலி: பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை!

வடகிழக்கு பருவமழை இன்னும் தொடங்காத போதும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தென் மேற்கு வங்கக் கடலில், இலங்கையை ஒட்டிய பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், 13ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுதும் கன மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு … Read more

காலாண்டு விடுமுறைக்கு பின் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறப்பு

சென்னை: தமிழகத்தில் காலாண்டு விடுமுறைக்கு பின் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது.1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் 13ம் தேதி திறக்கப்பட உள்ளன.

Tamil news today live : டெல்லி; கட்டடம் இடிந்து விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு

Tamil news today live : டெல்லி; கட்டடம் இடிந்து விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு Source link

ஈரானில் பரபரப்பு..!! அரசு தொலைக்காட்சியை ஹேக்கிங் செய்த போராட்டக்காரர்கள்!!

இஸ்லாம் மதத்தை பின்பற்றும் நாடுகளில் ஒன்றான ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது 1979ம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்நாட்டின் குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரை சேர்ந்த மஹ்சா அமினி (22) என்ற இளம்பெண் தனது குடும்பத்துடன் கடந்த 13-ம் தேதி தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளார். அப்போது ரோந்து பணியில் இருந்த நெறிமுறை போலீஸ் பிரிவு, … Read more

முன்னாள் எம்.பி. மைத்ரேயன் அதிமுகவில் இருந்து நீக்கம்

சென்னை: முன்னாள் எம்.பி. மைத்ரேயன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக, அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். புற்றுநோய் மருத்துவரான மைத்ரேயன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை, கட்சியில் செல்வாக்குடன் இருந்தார். பொதுக் கூட்டங்களை வழி நடத்துபவராகவும் இருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017-ல் ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கியபோது, அவரது அணியில் மைத்ரேயன் இருந்தார். கட்சியில் ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்த நிலையில், பழனிசாமி அணிக்கு தாவினார். இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை எழும்பூரில் அறக்கட்டளை … Read more

எடப்பாடிக்கு காத்திருக்கும் ஷாக்: டெல்லியின் செல்லப் பிள்ளையான ஓபிஎஸ்

அதிமுகவில் 95 சதவீதத்துக்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்துள்ளனர். முன்னாள் அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளும் அவர் பக்கம் தான் நிற்கின்றனர். ஓபிஎஸ்ஸையும் சேர்த்து மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் தான் எடப்பாடிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளனரே தவிர மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அணியில் தான் உள்ளனர். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள், எடப்பாடி பழனிசாமியால் ஒதுக்கப்பட்டவர்கள், ஒதுங்கிச் சென்றவர்கள் என தேடித்தேடி பலரைப் பிடித்து பொறுப்புகளில் அமரவைத்து வருகிறார் ஓ.பன்னீர் செல்வம். சென்னை உயர் … Read more

தொடர் மழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

புதுக்கோட்டை: தொடர் மழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார். காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுத பூஜையில் மீந்து போன பொரியில் சுவையான கட்லெட்.. இப்பவே ட்ரை பண்ணி பாருங்க!

ஆயுத பூஜையில் மீந்து போன பொரியில் சுவையான கட்லெட்.. இப்பவே ட்ரை பண்ணி பாருங்க! Source link

தமிழகத்தில் இன்று (அக்டோபர் 10) இந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (அக்டோபர் 10) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. நாமக்கல் நாமக்கல் கோட்டத்திற்கு உட்பட்ட கெட்டிமேடு துணை மின் நிலையத்தில் இன்று மின் பராமரிப்பு பணிகள் காரணமாக அதனைச் சுற்றியுள்ள பகுதியில் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. கன்னியாகுமரி  ஆரல்வாய்மொழி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை … Read more

காதல் ஜோடி வந்த பைக் மோதி தாய், 8 மாத குழந்தை பலி!!

சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள அண்ணா ஆர்ச் அருகே பூங்குழலி(28) என்பவர் தனது 8 மாத பெண் குழந்தையுடன் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, எதிர்சாலையில் கே.டி.எம் பைக்கில் பெண் ஒருவருடன் அதிவேகமாக வந்த இளைஞர் ஒருவர் பூங்குழலி மீது மோதினார். இதில், பூங்குழலி மற்றும் அவரது 8 மாத பெண் கைக்குழந்தை ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த அண்ணா நகர் … Read more