முன்னாள் எம்.பி. மைத்ரேயன் அதிமுகவில் இருந்து நீக்கம்

சென்னை: முன்னாள் எம்.பி. மைத்ரேயன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக, அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். புற்றுநோய் மருத்துவரான மைத்ரேயன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை, கட்சியில் செல்வாக்குடன் இருந்தார். பொதுக் கூட்டங்களை வழி நடத்துபவராகவும் இருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017-ல் ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கியபோது, அவரது அணியில் மைத்ரேயன் இருந்தார். கட்சியில் ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்த நிலையில், பழனிசாமி அணிக்கு தாவினார். இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை எழும்பூரில் அறக்கட்டளை … Read more

எடப்பாடிக்கு காத்திருக்கும் ஷாக்: டெல்லியின் செல்லப் பிள்ளையான ஓபிஎஸ்

அதிமுகவில் 95 சதவீதத்துக்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்துள்ளனர். முன்னாள் அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளும் அவர் பக்கம் தான் நிற்கின்றனர். ஓபிஎஸ்ஸையும் சேர்த்து மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் தான் எடப்பாடிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளனரே தவிர மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அணியில் தான் உள்ளனர். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள், எடப்பாடி பழனிசாமியால் ஒதுக்கப்பட்டவர்கள், ஒதுங்கிச் சென்றவர்கள் என தேடித்தேடி பலரைப் பிடித்து பொறுப்புகளில் அமரவைத்து வருகிறார் ஓ.பன்னீர் செல்வம். சென்னை உயர் … Read more

தொடர் மழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

புதுக்கோட்டை: தொடர் மழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார். காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுத பூஜையில் மீந்து போன பொரியில் சுவையான கட்லெட்.. இப்பவே ட்ரை பண்ணி பாருங்க!

ஆயுத பூஜையில் மீந்து போன பொரியில் சுவையான கட்லெட்.. இப்பவே ட்ரை பண்ணி பாருங்க! Source link

தமிழகத்தில் இன்று (அக்டோபர் 10) இந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (அக்டோபர் 10) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. நாமக்கல் நாமக்கல் கோட்டத்திற்கு உட்பட்ட கெட்டிமேடு துணை மின் நிலையத்தில் இன்று மின் பராமரிப்பு பணிகள் காரணமாக அதனைச் சுற்றியுள்ள பகுதியில் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. கன்னியாகுமரி  ஆரல்வாய்மொழி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை … Read more

காதல் ஜோடி வந்த பைக் மோதி தாய், 8 மாத குழந்தை பலி!!

சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள அண்ணா ஆர்ச் அருகே பூங்குழலி(28) என்பவர் தனது 8 மாத பெண் குழந்தையுடன் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, எதிர்சாலையில் கே.டி.எம் பைக்கில் பெண் ஒருவருடன் அதிவேகமாக வந்த இளைஞர் ஒருவர் பூங்குழலி மீது மோதினார். இதில், பூங்குழலி மற்றும் அவரது 8 மாத பெண் கைக்குழந்தை ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த அண்ணா நகர் … Read more

தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வளிமண்டல சுழற்சி காரணமாக சில இடங்களில் கனமழையும், ஆங்காங்கே மிதமான மழையும் பெய்துவருகிறது. அதன் தொடர்ச்சியாக வடஇலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் வருகிற 13-ந் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. Source link

தமிழகத்தின் 26 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: மதுரை, கோவை, திருச்சி, சேலம், டெல்டா உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அக். 10, 11, 12-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களிலும், 13-ம் தேதி ஒருசில இடங்களிலும் இடி, … Read more

வாலாஜாவில் விளையாடியபோது தலையில் பாத்திரம் சிக்கி பரிதவித்த குழந்தை: தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

வாலாஜா: வாலாஜாவில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒன்றரை வயது குழந்தையின் தலையில் எவர்சில்வர் பாத்திரம் சிக்கி 2 மணிநேரம் பரிதவித்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் கட்டர் மூலம் பாத்திரத்தை வெட்டி எடுத்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா விசாலாட்சி நகரை சேர்ந்தவர் ஜோனத். இவரது ஒன்றரை வயது மகன் ஜோவித் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது வீட்டின் சமையல் அறையில் இருந்த எவர்சில்வர் பாத்திரத்தில் குழந்தை ஜோவித் தலையை நுழைத்ததாக … Read more