வால்பாறை அருகே வேட்டைப்பல் இழந்த புலி பல்வேறு கெட் அப்பில் போஸ் கொடுத்து அசத்தல்-அறுவை சிகிச்சைக்கு பின் 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணிப்பு

வால்பாறை : வால்பாறை அருகே பயிற்சியின்போது, வேட்டை பல் இழந்த புலிக்கு அறுவை சிகிச்சைக்கு பின், மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் புலி பல்வேறு போஸ்களை கொடுத்து அசத்தி வருகிறது. கோவை மாவட்டம், வால்பாறை அடுத்து உள்ள முடீஸ் எஸ்டேட் பஜார் பகுதியில் 2 வயதான, உடல் மெலிந்து காணப்பட்ட புலிக்குட்டியை, பொதுமக்கள் புகாரின் பேரில் வனத்துறையினர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மீட்டனர். இதைத்தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆலோசனையின்படி … Read more

தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.. இன்றைய விலை நிலவரம்.!

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. சென்னையில் 22 … Read more

டிவிஎஸ் நிறுவன தலைவர் தாயார் காலமானார்.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!

பிரபல டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசனின் தாயார் பிரேமா சீனிவாசன் காலமானார். அவருக்கு வயது 90. அவருடைய உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நிறுவனர் சுந்தரம் அய்யங்காரின் இளைய மகன் டி.எஸ்.சீனிவாசன். இவருடைய மனைவி பிரேமா. இந்த்த தம்பதிக்கு வேணு சீனிவாசன் மற்றும் கோபால் சீனிவாசன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், வேணு சீனிவாசன் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். கோபால் சீனிவாசன், … Read more

அந்தரத்தில் நீர்ப்பாய்ச்சும் அரசாங்கம் நடத்திய பழனிசாமிக்கு நிர்வாக நடைமுறைகள் எப்படி தெரியும்? – துரைமுருகன் பதில்

சென்னை: அந்தரத்தில் நீர்ப்பாய்ச்சும் அரசாங்கம் நடத்திய எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாக நடைமுறைகள் எப்படி தெரியும் என்று அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். பாலாற்றில் புதிய தடுப்பணை கட்டுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பதில் அளித்து நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதும், எதிர்க்கட்சித் தலைவராக சட்டசபையில் அமர்ந்திருந்த போதும் நிதானத்தோடுதான் நடந்து கொண்டிருந்தார். அவருடைய கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக … Read more

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஸ்டாலின் சொன்ன ஆலோசனை!

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று (26.9.2022) சென்னை, கலைவாணர் அரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், பெரிய கருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன், பழனிவேல் தியாகராஜன், செந்தில் பாலாஜி மற்றும் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர், மற்றும் துறைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் தொடர்பாக … Read more

சிறுமிக்கு பாலியல் தொல்லை; 8 பேருக்கு ஆயுள் தண்டனை; நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு!

சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனையும் , இன்ஸ்பெக்டர், பத்திரிகையாளர் உள்ளிட்ட 13 பேருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கிய வழக்கில் சிறுமியின் உறவினர் ஷகிதா பானு, உடந்தையாக இருந்த எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன் உள்ளிட்ட 26 பேர் … Read more

ஊட்டி நஞ்சநாடு, கோல்கிரைன் தோட்டக்கலை பண்ணைகளில் 25 டன் விதை கிழங்கு உற்பத்தி-நவம்பர், டிசம்பரில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்

ஊட்டி :  ஊட்டி அருகேயுள்ள நஞ்சநாடு, கோல்கிரைன் தோட்டக்கலை பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள  25 டன் விதை கிழங்குகள் நவம்பர், டிசம்பர் மாதங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என தோட்டக்கலைத் துறை தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் ஒரு பிரதான தோட்டக்கலை மாவட்டமாகும். பயிர்சாகுபடியிலும், சீதோஷஅண நிலையிலும் அண்டைய மாவட்டங்களைக் காட்டிலும் பெருமளவு வேறுபட்டது. மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 2545 சதுர கிலோ மீட்டராகும். இம்மாவட்டத்தில் 6 வருவாய் வட்டங்கள் உள்ளன. சராசரி மழையளவு ஆண்டொன்றிற்கு 1522.7 மில்லி … Read more

பிளிப்கார்ட் மூலம் ட்ரோன் கேமரா ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் வந்தது என்ன தெரியுமா?

ஸ்ரீபெரும்புதூரில் பிளிப்கார்ட் செயலி மூலம் ரூ.80 ஆயிரம் கொடுத்து ட்ரோன் கேமரா வாங்கியவருக்கு பார்சலில் 100 ரூபாய் மதிப்புள்ள விளையாட்டு கார் அனுப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் சிவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் மொய்தீன் (35). .ஏ.சி மெக்கானிக்கான இவரது நண்பர் சுரேஷி என்பவருக்கு ட்ரோன் கேமரா தேவைப்பட்டதால் ஆன்-லைனில் தேடியுள்ளார். இதையடுத்து பிளிப்கார்ட் செயலி மூலம் 79,064 ரூபாய் மதிப்புள்ள ட்ரோன் கேமராவை கிரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்தி கடந்த 20 ஆம் தேதி ஆர்டர் … Read more

விடுதி தோழிகளின் குளியல் வீடியோ.. டாக்டரை குஷி படுத்திய மாணவி கைது..!

விடுதியில் தங்கிய தோழிகளின் குளியல், உடை மாற்றும் காட்சிகளை செல்போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து தன் டாக்டர் நண்பருக்கு அனுப்பி அவரை குஷிபடுத்திய மாணவியை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்தவர் ஆசிக் (31). எம்பிபிஎஸ் படித்துள்ள இவர், கமுதி முஸ்லிம் பஜாரில் கிளினிக் நடத்தி வருகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன் இவருக்கு திருமணம் நடந்தது. இவருக்கும், கிளினிக் அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரி (24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. காளீஸ்வரி தற்போது … Read more

நளினி, ரவிச்சந்திரன் மேல்முறையீட்டு வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் 

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் தங்களை விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை கடந்த மே மாதம் 18-ம் தேதி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.உச்ச நீதிமன்றம் தனது … Read more