ஆடுகள் காணாமல் போன தகராறில் நாட்டுத்துப்பாக்கியால் விவசாயி சுட்டுக்கொலை – இளைஞர் கைது..!
கோவை மேட்டுப்பாளையம் அருகே, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், விவசாயியை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த இளைஞரை, போலீசார் கைது செய்தனர். ரங்கராஜபுரத்தை சேர்ந்தவர் விவசாயி சின்னசாமி. இவர் நேற்றிரவு, அதே பகுதியை சேர்ந்த குருந்தாசலம், அய்யாச்சாமி, ரஞ்சித் ஆகியோருடன் மது அருந்தியுள்ளார். சின்னசாமியின் ஆடுகள் காணாமல் போனது தொடர்பாக, அப்போது வாய்த்தகராறு ஏற்பட்டதில், அவர் ரஞ்சித்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித், சட்டவிரோதமாக வேட்டைக்கு பயன்படுத்தும் நாட்டுத்துப்பாக்கியை எடுத்து வந்து சுட்டதில், 11 பால்ரஸ் குண்டுகள் … Read more