வள்ளுவம் வாழ்வியலுக்கானது – ஆளுநருக்கு எதிராக வைரமுத்து ட்வீட்

சென்னை அண்ணா பல்கலைக்கழக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ‘உலக அமைதிக்கும் மனித வாழ்விற்கும் வழி காட்டும் திருக்குறள் (Thirukkural To The Humanity For World Peace And Harmony’) என்ற மாநாட்டை ஆளுநர் ஆர்.என். ரவி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “திருக்குறள் மொழிப்பெயர்ப்பட்ட போது, அதிலிருந்த ஆன்மீக கருத்துகளை ஜி.யூ. போப் மறைத்துவிட்டார். அரசியல் காரணத்திற்காக திருக்குறளில் உள்ள ஆன்மீக கருத்துக்கள் மறைக்கப்படுவது சரியானதில்லை” என்று குறிப்பிட்டு பேசியிருந்தார். ஆளுநரின் இந்தக் கருத்து கடும் … Read more

சித்தரேவு- பெரும்பாறை மலைச்சாலையில் சரியும் நிலையில் உள்ள பாறைகளால் விபத்து அபாயம்: அதிகாரிகள் கவனிப்பார்களா?

பட்டிவீரன்பட்டி: சித்தரேவு- பெரும்பாறை மலைச்சாலையில் சரியும் நிலையில் பாறைகளால் விபத்து அபாயம் நிலவுகிறது. பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவு- பெரும்பாறை இடையே 15 கிமீ தூர மலைச்சாலை உள்ளது. இந்த மலைச்சாலை ஆபத்தான பள்ளத்தாக்குகள் மற்றும் வளைவுகள் நிறைந்ததாகும். இந்த மலைச்சாலை வழியாக 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள், பொதுமக்கள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் என பலர் தினமும் வாகனங்களில் சென்று வருகின்றனர். மேலும் இந்த சாலை 40க்கும் … Read more

சென்னை: லிஃப்டில் சிக்கித் தவித்த 7 பேர் – கதவை உடைத்து மீட்ட போலீசார்

சென்னையில் உணவகம் ஒன்றில் லிஃப்டில் மாட்டிக்கொண்ட 7 பேரை போலீசார் போராடி மீட்டனர். சென்னை பாண்டி பஜார் ஜி.என். சாலையில் அமைந்துள்ள மல்லு ஜாயிண்ட் என்ற உணவகத்திற்கு சாப்பிட வந்த மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 7 பேர் அங்கிருந்த லிஃப்ட்டை பயன்படுத்தியுள்ளனர். அப்போது லிஃப்டின் கதவு திடீரென திறக்க முடியாமல் நின்றது. நீண்ட நேரமாகியும் திறக்காததால் பதட்டம் அடைந்த அவர்கள் உதவி கோரி சத்தம் எழுப்பியுள்ளனர். சத்தம் கேட்டு வந்த  உணவக ஊழியர்கள்  லிஃப்டின் கதவை எவ்வளவோ … Read more

சுவாரஸ்யம்.. செர்பிய புதிய வகை வண்டுக்கு ‘ஜோகோவிச்’ பெயர்.. ஏன் தெரியுமா?

சுவாரஸ்யம்.. செர்பிய புதிய வகை வண்டுக்கு ‘ஜோகோவிச்’ பெயர்.. ஏன் தெரியுமா? Source link

திராவிடம் என்ற வார்த்தையே தமிழர்களிடையே இல்லை.. திருமாவளனுக்கு பதிலடி கொடுத்த இயக்குனர் பேரரசு.!

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானதில் இருந்து பல்வேறு சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது. திருமாவளவனின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன் ராஜராஜ சோழன் மன்னரை இந்து அரசனாக சித்தரிக்கும் முயற்சி செய்கின்றனர் என பேசி பெரும் சர்ச்சையை உருவாக்கினார்.  ராஜராஜ சோழன் சைவர் அவர் இந்து இல்லை என சீமான், திருமாவளவன், நடிகர் கமலஹாசன் உள்ளிட்டோர் பேசி இருந்தனர். இதற்கு பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா, வானதி சீனிவாசன் மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் இதனை கடுமையாக … Read more

திமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின்.. 2வது முறையாக போட்டியின்றி தேர்வு..!

திமுக தலைவர் பதவிக்கு வேறு யாரும் போட்டியிடாததால், மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக திமுக தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், தமிழகம் முழுவதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2,600 பொதுக்குழு உறுப்பினர்கள், 1,500 சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 100 பேர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், இந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more

மயிலாப்பூர் சந்தையில் காய்கறி வாங்கிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: வைரல் வீடியோவும், நெட்டிசன்கள் ரியாக்‌ஷனும்

சென்னை: சென்னை மயிலாப்பூரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காய்கறி வாங்கினார். நேற்று மாலை சென்னையிலிருந்து டெல்லி செல்வதற்காக விமான நிலையம் புறப்பட்ட அவர் வழியில் மயிலாப்பூரில் தெருவோர கடையில் காய்கறி வாங்கினார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ நிர்மலா சீதாராமனின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில், ”சென்னை மயிலாப்பூர் மார்கெட்டில் நிதியமைச்சர் காய்கறி வாங்கினார். அங்கு அவர் காய்கறி வியாபாரிகளுடனும், உள்ளூர்வாசிகளுடனும் உரையாடினார்” என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், நிர்மலா சீதாராமன் சக்கரவல்லி கிழங்கு, … Read more

தூக்கமற்ற இரவுகள்: ஸ்டாலின் பேச்சால் அமைச்சர்கள் கலக்கம்!

உட்கட்சித் தேர்தலின் இறுதிகட்டமாக தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி ‘விங்க்ஸ்’ கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெற்றது. அதில், திமுக தலைவராக 2ஆவது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி அதிகாரப்பூர்வமாக தேர்வானார். அதன்பின்னர் அவர் பேசுகையில், “நான் அண்ணாவோ, கலைஞரோ அல்ல என்று தெரிவித்த திமுக தலைவர் , “பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி அமர்ந்த இடம் இது. ஆனால், நான் … Read more

எமனாய் வந்த நாய்; தலை நசுங்கி இளைஞர் பரிதாப மரணம்!

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே கோட்டைக்காடு பகுதியை சேர்ந்த காந்தியின் மகன் ராம்குமார் (35). இவர் தனது மனைவியின்  ஊரான ஆவரேந்தல் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு ஆவரேந்தல் கிராமத்தில் இருந்து காய்கறிகள் வாங்குவதற்காக ஆர்.எஸ். மங்கலம் சந்தைக்கு தனது இருசக்கர ஸ்கூட்டி வாகனத்தில் வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கீழக் கோட்டை மிளகாய் கிடங்கு அருகில் அவர் வந்த போது சாலையின் குறுக்கே நாய் வந்ததால் இரு சக்கர வாகனம் … Read more

பழைய வத்தலக்குண்டு சென்றாய பெருமாள் கோயிலை சுற்றி கிரிவல பாதை அமைக்க வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை

வத்தலக்குண்டு: பழைய வத்தலக்குண்டு சென்றாய பெருமாள் கோயில் மலையை சுற்றி கிரிவலம் சுற்ற ஏதுவாக சாலை அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வத்தலகுண்டு அருகே பழைய வத்தலக்குண்டுவில் கோட்டைப்பட்டி சென்றாய பெருமாள் மலைக்கோயில் உள்ளது. இங்கு திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், தினந்ேதாறும் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். குறிப்பாக சனிக்கிழமை நாட்களில் பக்தர்கள் அதிகளவு வருவர். மேலும் இங்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடக்கிறது. அந்த … Read more