தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு.. ஆனால், இந்த மாவட்டத்திற்கு மட்டும் விடுமுறை.!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் காலாண்டு தேர்வு கடந்த செப்டம்பர் 21ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 13ஆம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் இன்று (அக்டோபர் 10ம் தேதி) 6 முதல் 12ம் … Read more

இனி ஹெல்மெட் கட்டாயம்… மீறினால் 1,000 ரூபாய் அபராதம்… 3 மாதம் லைசன்ஸ் ரத்து!

புதுச்சேரியில் சமீப காலமாக இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், பாதுகாப்பற்ற பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் சாலை விபத்துகள் அதிகரிப்பதுடன் உயிரிழப்புகளும் அதிகம் ஏற்படுகிறது. இதன் காரணமாக, புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரியில் மோட்டார் வாகனம் இயக்குவதால் தினமும் ஏற்படும் விபத்துகளும் அதிகரித்துள்ளன. கடந்த 2019 முதல் 2021 வரை புதுவையில் 3,410 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இருசக்கர வாகனங்களில் 2 … Read more

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் ரூ.735 கோடியில் மறுசீரமைப்பு: 3 ஆண்டுகளில் உலகத் தரம் மிக்கதாக மாறும்

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையம் ரூ.734.90 கோடியில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது.அடுத்த 3 ஆண்டுகளில் இந்த ரயில் நிலையம் உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மாறும் என்று சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையம், 114 ஆண்டுகள் பழமையானது. அழகான கட்டமைப்புகளை கொண்ட இந்த ரயில் நிலையத்துக்கு தினமும் 35 விரைவு ரயில்கள், 240 புறநகர் மின்சார ரயில்கள் வந்து செல்கின்றன. ஒவ்வொரு நாளும் … Read more

தொழிலதிபரின் இமெயிலை ஹேக் செய்து டூப்ளிகேட் சிம் பெற்று ரூ.10 லட்சம் மோசடி: மேற்குவங்க ஆசாமிகளுக்கு வலை

புதுச்சேரி: புதுச்சேரியில் கட்டிட நிறுவன உரிமையாளரின் இமெயில் ஐடியை ஹேக் செய்து, டூப்ளிகேட் சிம் பெற்று, அதன் மூலம் ரூ.10 லட்சம் நூதன முறையில் மோசடி செய்த மேற்கு வங்க ஆசாமிகள் 2 பேரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி எல்லைபிள்ளைச்சாவடி பெரியார்நகரை சேர்ந்தவர் பிரதாபன் (70). கட்டிட நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், இந்தியன் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். கம்பெனியின் வரவு செலவு கணக்கினை அந்த வங்கியில் நடத்தி வருகிறார். கம்பெனியில் அதிகாரிகள், … Read more

கேட்கும் போதே மனசு பதறுது ..!! 4 வயது சிறுமியை நைசாக பேசி வீட்டிற்கு அழைத்து சென்ற பாலியல் கொடுமை செய்த கயவன்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் வடக்கு பகுதியில் வசித்து வருபவர் லியாகத் (48). ஓட்டல் தொழிலாளியான இவர், அதே பகுதியில் 4 வயது சிறுமியிடம் நன்றாக பேசி வந்துள்ளார். இவருடைய குடும்பத்தினர் உறவினர் வீட்டுக்கு சென்று இருந்த நிலையில், நேற்று தன்னுடைய வீட்டிற்கு அந்த சிறுமியை அழைத்து சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாத நிலையில் பெற்றோர் ஒருபுறம் சிறுமியை தேடியுள்ளனர். சிறுமி விளையாடும் இடங்களிலும், அக்கம் பக்கத்தினர் வீட்டிலும் சிறுமி இல்லாததால் … Read more

இந்து கடவுளை விமர்சிப்பவர்களை கடுமையாக தண்டிக்க சட்டம் கொண்டு வரவேண்டும்: சடகோப ராமானுஜ ஜீயர்

இந்து கடவுளை விமர்சிப்பவர்களை கடுமையாக தண்டிக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வரவேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் கூறினார். திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பதி கோயிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு திருவேங்கட பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்துக்களிடம் ஒற்றுமை ஏற்படவேண்டும். இந்து மதத்தை அவதூறாக … Read more

இலங்கை கடற்படை அட்டகாசம் வலைகளை வெட்டி வீசி மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம்: வலைகளை அறுத்து எறிந்து ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இரவில் வழக்கம்போல் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மிரட்டி அங்கிருந்து விரட்டியடித்தனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் படகுகளை உடனடியாக வேறு பகுதிக்கு ஓட்டிச் சென்றனர்.  ஆனாலும், விடாமல் துரத்திவந்த இலங்கை கடற்படையினர், பத்துக்கும் மேற்பட்ட படகுகளில் … Read more

திமுக பழுத்த மரம் மட்டுமல்ல கல் கோட்டை – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..!

சென்னையில் நடைபெற்று வரும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது, “தமிழர்களின் சுயமரியாதை மற்றும் தமிழகத்தின் நலனை காக்கின்ற திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். உங்களில் ஒருவனான தன்னை தலைவராக தேர்ந்தெடுத்த கோடான கோடி தொண்டர்களுக்கு நன்றி. ஒவ்வொரு உடன்பிறப்பாலும் நான் தலைவராகியிருக்கிறேன்.  நீங்கள் இருக்கும் தைரியத்தில் தான் நான் இந்த பொறுப்பை ஏற்றிருக்கிறேன். கலைஞர் மறைவிற்கு பிறகு இந்த எளியன் தலையில் தலைமை பொறுப்பு சுமத்தப்பட்டது. உழைப்பு, உழைப்பு என்று பாராட்டப்பெற்றதால் கிடைத்த பொறுப்பு இது … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வு..!!

தேர்தல் ஆணைய விதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும். மேலும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை உட்கட்சி தேர்தல் நடத்தி நிர்வாகிகளையும் நியமிக்க வேண்டும். அந்த வகையில், தற்போது திமுகவில் 15-வது முறையாக உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. முதற்கட்டமாக பேரூராட்சி, ஒன்றியம், நகரம், பேரூர், பகுதி, மாவட்டம், மாநகரம் வரை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட செயலாளர்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் … Read more

அக்.17, 20, 26 தேதிகளில் அதிமுக பொன்விழா நிறைவு பொதுக்கூட்டம்: பழனிசாமி அறிவிப்பு

அதிமுக பொன்விழா நிறைவு மற்றும் 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் அக்.17,20, 26-ல் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும் என்று இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: அதிமுக, பொன்விழா ஆண்டை நிறைவு செய்து, அக்.17-ம் தேதி 51-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி, கட்சிரீதியான மாவட்டங்கள், புதுச்சேரி,கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் அக்.17, 20, 26 ஆகிய3 நாட்களும் அதிமுக பொன்விழா நிறைவு மற்றும் … Read more