திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு; கனிமொழி துணை பொதுச்செயலாளர்… உடன் பிறப்புகள் உற்சாகம்

சென்னையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக ஒன்றிய, பேரூர், கழக, மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட 4100 பேர் கலந்துகொண்டனர். தமிழகம் முழுவதும் நடந்த 15ஆவது திமுக கழக அமைப்பு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் ஒப்புதல் பெறப்பட்டது . பொதுக்குழு தொடங்கிய சிறிது நேரத்தில் மு.க. ஸ்டாலின் திமுகவின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது முறையாக ஸ்டாலின் திமுகவின் தலைவராகிறார். இதனையடுத்து அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தை … Read more

ஓபிஎஸ் மகன் தோட்டப்பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்: விவசாயிகள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் விவசாய நிலங்களில் பெண் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கோம்பை வனப்பகுதியில் தேனி தொகுதி எம்பியும், ஓபிஎஸ் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத்திற்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த வேலியில் சிக்கிய பெண் சிறுத்தையை மீட்க முயற்சி செய்தபோது சிறுத்தை வனத்துறை அதிகாரியை தாக்கி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே அதே பகுதியில் மறுநாள் ஒரு ஆண் … Read more

"காரணம் சொல்லாதீங்க… வேகமா வேலையை முடிங்க"- அதிகாரிகளை எச்சரித்த தலைமைச் செயலர்

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்து தலைமைச் செயலர் இறையன்பு இன்று 14 இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். “காரணம் சொல்ல வேண்டாம் விரைவாக பணியை முடியுங்கள்” என ராஜமன்னார் சாலையில் ஆய்வு மேற்கொள்ளும் போது அதிகாரிகளை எச்சரித்தார் அவர். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலர் இறையன்பு ஆய்வு செய்து வருகிறார். கடந்த வாரம் தென் சென்னை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட தலைமைச் செயலாளர் இந்த வாரம் மத்திய மற்றும் … Read more

மெட்ரோ பணிகள், தி.மு.க பொதுக் குழு… சென்னையில் இந்த ஏரியாக்களில் இன்று போக்குவரத்து மாற்றம்!

மெட்ரோ பணிகள், தி.மு.க பொதுக் குழு… சென்னையில் இந்த ஏரியாக்களில் இன்று போக்குவரத்து மாற்றம்! Source link

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்வு.! நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து.!

திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் இன்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திமுக-வின் 15வது பொதுக்குழு கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் 2,600 பேர், கட்சியின் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் … Read more

திமுக பொதுக்குழு கூட்டத்தில் தடபுடலாக விருந்து! மெனு இதோ!!

திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தரும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஆற்காடு மட்டன் பிரியாணி, பலாக்காய் பிரியாணி, விருதுநகர் பரோட்டா என சைவ , அசைவ வகைகளில் விதவிதமாக விருந்தளிக்கப்படுகிறது. மட்டன் பிரியாணி , ஆற்காடு மக்கன் பேடா , முட்டை , கத்திரிக்காய் பச்சடி , தயிர் பச்சடி , உருளை வறுவல் , ஆரஞ்சு ஐஸ் கிரீம் , கல்கத்தா ஸ்வீட் பீடா , வாழைப்பழம் , வாட்டார் பாட்டில் இவை அசைவ உணவு பட்டியலில் … Read more

வேலை வாங்கித் தருவதாக இளைஞர்களிடம் ரூ.7.38 கோடி மோசடி… 2 பெண்கள் உள்பட 4பேர் கைது

கனடா நாட்டிற்கு குடும்பத்துடன் அழைத்துச் சென்று வேலை வாங்கி தருவதாகவும், எஸ்பிஐ வங்கி மற்றும் அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாகவும் 7 கோடியே 38 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் 2 பெண்கள் உட்பட4பேர் கைது செய்யப்பட்டனர். மயிலாடுதுறையைச் சேர்ந்த நடேஸ்வரி, தஞ்சாவூரைச் சேர்ந்த ரேவதி, தட்சிணாமூர்த்தி ஆகியோர் தனித்தனி மோசடி புகாரில் கைது செய்யப்பட்டனர். அதேபோல் எஸ்பிஐ வங்கியில் வேலை வாய்ப்பு இருப்பதாக 39 நபர்களிடம் 3கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து … Read more

மது அருந்தி பணிக்கு வந்தால் கடும் ஒழுங்கு நடவடிக்கை: பேருந்து ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை

மது அருந்திய நிலையில் ஓட்டுநர் மற்றும் இதர பணியாளர்கள் பணிபுரிவது கண்டறியப்பட்டால் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அனைத்து கோட்ட மேலாளர்களுக்கும் அவர் அனுப்பிய சுற்றறிக்கை: சமீபகாலமாக நமது ஓட்டுநர்கள் மற்றும் சில பணியாளர்கள் மது அருந்திய நிலையில் பணிபுரிவதாக புகார் கூறப்படுகிறது. இவ்வாறு மது அருந்திய நிலையில் பணிபுரிவது சட்டப்படி குற்றம். அவ்வாறு பணிபுரிந்தால் நிர்வாகத்துக்கு அவப்பெயர் ஏற்படுவதுடன், பயணிகளுக்கு நமதுபோக்குவரத்துக் கழகத்தின் … Read more

மீண்டும் திமுக தலைவர்… ஸ்டாலினுக்கு காத்திருக்கும் சவால்கள் என்னென்ன?

சென்னையில் இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் போட்டியின்றி மீண்டும் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர கட்சியின் பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். தலைமை நிலைய செயலாளராக கே.என்.நேரு தேர்வாகியுள்ளார். துணைப் பொதுச் செயலாளர்களாக பொன்முடி, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியேறிய நிலையில், அவரது இடத்திற்கு கனிமொழி தேர்வாகியுள்ளார். … Read more

தேனி: கஞ்சா வியாபாரிகளின் ரூ.58 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

தேனியில் கஞ்சா வியாபாரிகளின் ரூ.58 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை முடக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். தேனி மாவட்டம் அல்லிநகரம் காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக பெரியகுளம் கைலாசபட்டியைச் சேர்ந்த கங்காதேவா (26) பிரபாகரன் (22) ஆகிய இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கைலாசபட்டியில் கங்காதேவாவின் பெயரில் உள்ள வீடு, கார், இருசக்கர வாகனம் மற்றும் அவரது சகோதரி பெயரில் இருக்கும் நிலம் என … Read more