போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு 25 சதவீத போனஸ்: தமிழக அரசு முடிவு என்ன?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கும் போனஸை 25 சதவிகித அளவில் முன்கூட்டியே வழங்கி போக்குவரத்துத் துறை தொழிலாளர்களின் நலன் காக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜிகே வாசன் கூறியுள்ளார். இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலம் தாழ்த்தாமல் போனஸை வழங்க முன்வர வேண்டும் . தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களிலும் … Read more

Mozhipor vs MK Stalin: இந்தியை திணிக்க வேண்டாம்! மற்றுமொரு மொழிப்போர் எதற்கு?

சென்னை: கட்டாயமாக இந்தியைப் புகுத்தி மற்றுமொரு மொழிப்போரைத் திணிக்காதீர்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில், ஒன்றிய அரசு ஒற்றுமையைக் காத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மொழி என்பது மனிதனை அடையாளப்படுத்தும் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாகும். மொழி தானும் வளர்ந்து, தன்னைப் பயன்படுத்தும் மனிதனையும் வளர்க்கும் தனியாற்றல் பெற்றது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எண்ணத்தின் வடிவமாகவும் நாகரிகத்தின் சின்னமாகவும் திகழும் மொழி, … Read more

பச்சரிசிக்கும், இட்லி அரிசிக்கும் வித்யாசம் தெரியாமல் 20% ஏற்றுமதி வரி விதிப்பதா?: தமிழ்நாட்டின் துறைமுகங்களில் 1000கி டன் அரிசி தேக்கம்

சென்னை: பச்சரிசிக்கும், இட்லி அரிசிக்கும் வித்யாசம் தெரியாமல் 20 சதவிகித ஏற்றுமதி வரி செலுத்த நிர்பந்திப்பதால் தமிழ்நாட்டின் துறைமுகங்களில் 1000கிலோ டன் இட்லி அரிசி தேக்கமடைந்து இருப்பதாக ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகின் மிகபெரிய அரிசி ஏற்றுமதியாளரான இந்தியா அரிசி ஏற்றுமதியில் 40 சதவிகிதக்கு அதிகமான பங்களிப்பை கொண்டுள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் 30 சதவிகித விளையும் பாரம்பரிய இட்லி வகை அரிசி உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. நடப்பு பருவத்தில் நெல் சாகுபடி குறைந்ததால் பாசுமதி, … Read more

இந்திய மாணவர்களின் சிரமங்களை அனுதாபத்துடன் பாருங்கள்; நியூசிலாந்திடம் வலியுறுத்திய ஜெய்சங்கர்

இந்திய மாணவர்களின் சிரமங்களை அனுதாபத்துடன் பாருங்கள்; நியூசிலாந்திடம் வலியுறுத்திய ஜெய்சங்கர் Source link

சோழர் திட்டங்களை மீட்டெடுக்க களமிறங்கும் அன்புமணி! காத்திருக்கும் அரியலூர் மாவட்டம்! 

அரியலூர் மாவட்டத்தில் சோழர் பாசன திட்டத்தை  செயல்படுத்த வலியுறுத்தி அக்டோபர் 29, 30 தேதிகளில் நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாக பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களுக்கு இணையான வளத்தையும், வளர்ச்சியையும் கொண்டிருக்க வேண்டிய அரியலூர் மாவட்டம், அவற்றில் கடைநிலை மாவட்டங்களில் ஒன்றாக தடுமாறிக் கொண்டிருக்கிறது. மற்ற மாவட்டங்களில் இல்லாத அளவுக்கு பாசனக் கட்டமைப்புகள் அரியலூர் மாவட்டத்தில் சோழர் காலத்திலேயே உருவாக்கப்பட்டுள்ள போதிலும் அவை … Read more

உபி முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் காலமானார்..!

உடல்நலக் குறைவால் ஹரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, ஹரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அவருடைய உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த … Read more

அப்பா இடத்தில் அண்ணன் ஸ்டாலின்: பொதுக்குழுவில் கனிமொழி உருக்கம்

சென்னை: திமுக துணைப் பொதுச் செயலர்கள் 5 பேரில், ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். மற்றொரு துணைப் பொதுச் செயலரான சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியிலிருந்து விலகிய நிலையில், அந்தப் பதவி காலியாக இருந்தது.இதையடுத்து, திமுக மகளிரணிச் செயலரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழியை துணைப் பொதுச் செயலராக நியமித்துள்ளதாக நேற்று பொதுக்குழுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து, பொதுக்குழுவில் கனிமொழி எம்.பி. பேசியதாவது: திமுக தொடங்கப்பட்டபோது, பெரியாருக்கும் நமது தலைவர்களுக்கும் இருந்த … Read more

பேருந்து நிழற்குடையில் +2 மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் காந்தி சிலை உள்ளது. அதன் அருகில் பல்வேறு சிறு கிராமங்களுக்கு செல்வதற்காக சிற்றுண்டி பேருந்து நிறுத்தம் உள்ளது.  இந்த நிழற்குடையில் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவி ஒருவருக்கு மாணவன் ஒருவர் மஞ்சள் கயிறு மூலம் தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இது குறித்து பல்வேறு பகுதிகளில் விசாரணை செய்ததில் சிதம்பரம் அருகே உள்ள பெராம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட வெங்காயதலமேடு கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் … Read more

நாடு முழுவதும் ஒரே நுழைவு தேர்வு நடத்த ஒன்றிய அரசு திட்டம்: ஒன்றிய கல்வி இணையமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் தகவல்

காஞ்சிபுரம்: நாட்டில் அனைத்து பாடங்களுக்கும் ஒரே பொது நுழைவு தேர்வு நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டு வருவதாக ஒன்றிய  கல்வித்துறை இணையமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் தெரிவித்தார்.  காஞ்சிபுரத்துக்கு வந்துள்ள ஒன்றிய இணையமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் வெள்ளிங்கேட் பகுதியில்  தனியார் பள்ளியில் நடந்த நிகழ்வில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் நீட் தேர்வு என்பது தேசத்தின் பொதுவான நுழைவு தேர்வு என்றும், இது பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் பெரிதும் பயனளிக்கும் என்றும் தெரிவித்தார். மாணவர்கள் … Read more

கோவை மாவட்டத்தில் மின்னல் வேட்டை ; ரவுடிகளின் மீது காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை

கோவை மாவட்டத்தில் ரவுடிகள் மற்றும் ரவுடிசத்தில் ஈடுபடும் நபர்களை கட்டுப்படுத்தும் வகையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் ரவுடிசத்தில் ஈடுபடும் ரவுடிகளின் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அதன் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களில் 88 ரவுடிகளின் மீது காவல் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 9 நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ரவுடிசத்தில் ஈடுபட்ட 62 ரவுடிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் அவர்களின் மீது நன்னடத்தை பிணையம் … Read more