குழந்தை தலையில் சிக்கிய பாத்திரத்தை 1 மணி நேரம் போராடி வெட்டி அகற்றிய மருத்துவர்கள்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே ஒன்றரை வயது ஆண் குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரத்தை ஒரு மணி நேரமாக போராடி லாவகமாக வெட்டி எடுத்து குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே விசாலாட்சி தெருவை சேர்ந்தவர் ஜோனா. 30 வயதாகும் இவர் தனியார் தோல் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் ஜோவின் என்ற ஆண் குழந்தை உள்ளது. இன்று குழந்தை ஜோவின் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாப்பாடு … Read more

விபத்து பிரிவில் சேவை செய்யும் பைக் ரேஸர்… மறுவாழ்வு மையத்தில் தொண்டாற்றும் ‘ரூட் தல’ – மக்களின் பாராட்டை பெற்ற மனிதநேய தீர்ப்புகள்

ரயிலில் சக பயணிகளிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய ‘ரூட் தல’, மறுவாழ்வு மையத்தில் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு சேவை புரிகிறார். அசுர வேகத்தில் சாகசம் காட்டி மிரள வைத்த பைக் ரேஸர்கள் நடுரோட்டில் நின்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தும், விபத்து தலைக் காயம் பிரிவில் தொண்டாற்றியும் வருகின்றனர். இப்படி, தவறு செய்யும் இளைஞர்கள் திருந்த வேண்டும் என்றஎண்ணத்தில் நூதன நிபந்தனைகளுடன் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் வழங்கி வரும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மனிதநேய தீர்ப்புகள் பொதுமக்கள் மத்தியில் … Read more

அசரவைத்த தயாநிதி… கைகாட்டிய உதயநிதி- கண்டுகொள்ளாத ஸ்டாலின்!

சென்னையில் இன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தயாநிதி மாறன் பேசுகையில், ஸ்டாலின் முதல் வரை பலரையும் வரவேற்று உரையை தொடங்கினார். அதில் ”வருங்கால திராவிட முன்னேற்றக் கழகம்” என்று சொல்லக்கூடிய இளைஞரணி செயலாளர், எனது அருமை சகோதரர், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் என்று புகழாரம் சூட்டினார். அப்போது, ”ஏங்க இப்படிலாம்?” என்பது போல் கையால் உதயநிதி ஸ்டாலின் சைகை காட்டினார். பின்னர் புன்னகையுடன் சமாளித்துக் கொண்டே அமைதி காத்தார். உடனே உதயநிதி … Read more

புதுக்கோட்டை: பணம் கேட்டு தர மறுத்த தாய்மாமனை உலக்கையால் அடித்து கொலை செய்த இளைஞர்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பணம் கேட்டு தர மறுத்த தாய்மாமனை உலக்கையால் அடித்து கொலை செய்த 23 வயது இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை‌ மேற்கொண்டு வருகின்றனர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கலபம் ஊராட்சியில் உள்ள ஆத்தியடிமனை கிராமத்தைச் சேர்ந்தவர் 65 வயதான வீரையா. இவர் அந்தப் பகுதியில் உள்ள தில்லை நாயகி அம்மன் கோயிலில் பூசாரியாக உள்ளார். இந்நிலையில் நேற்று மாலை வீரையா மற்றும் அவரது மனைவி சாந்தாயி ஆகிய இருவரும் … Read more

ராமர் கோவிலுக்கு இலவச பயணம்; குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி

ராமர் கோவிலுக்கு இலவச பயணம்; குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி Source link

சென்னை || பட்டாக்கத்தியுடன் செல்லும் மாணவர்கள்.! வைரலாகும் வீடியோ.!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்பாக்கம், ஏளாவூர், கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை, பொன்னேரி, மீஞ்சூர், நந்தியம்பாக்கம், அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவர்கள் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரியில் படித்து வருகின்றனர்.  இதனால் காலையில் செல்லும் ரெயில்களில் மாணவர்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். இதனை தொடர்ந்து கல்லூரி முடிந்து மாலையில் வீடு திரும்பும் மாணவர்களிடையே ரெயிலில் செல்லும் போது யார் பெரியவர் என்ற மோதல் ஏற்படுகிறது.  இதனால், கல்லூரி மாணவருடன் சில இளைஞர்களும் சேர்ந்து பட்டாக்கத்தியுடன் … Read more

சாமி கும்பிட வந்த இடத்தில் காவிரி ஆற்றில் மணல் சுழலில் சிக்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜ் மற்றும் ஜெகநாதன் ஆகிய இருவரும் நேற்று மூன்றாவது சனிக்கிழமையை ஒட்டி தங்கள் குடும்பத்துடன் கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே உள்ள கொம்பாடிபட்டியில் உள்ள பெருமாள் கோயிலுக்கு வழிபாட்டிற்காக வந்திருந்தனர். இவர்கள், லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் தீர்த்த குடம் எடுத்துச் செல்ல காவிரி ஆற்றுக்கு வந்தவர்கள் குடும்பத்துடன் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது நாகராஜ் மகன் விஷ்வா (24), ஜெகநாதன் மகன் புருஷோத்தமன் (18) ஆகிய இருவரும் ஆற்றின் புதை மணலில் சிக்கியுள்ளனர். அங்கு … Read more

துரைமுருகன் அளித்த 2 பேனாக்கள்; கனிமொழியைப் புகழ்ந்த ஸ்டாலின்: திமுக பொதுக்குழு சுவராஸ்யங்கள்

சென்னை: திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் இன்று (அக்.9) காலை நடைபெற்றது. இந்த பொதுக் குழுவில் நடைபெற்ற சுவராஸ்யங்கள் நிகழ்வுகளின் தொகுப்பு * பொதுக் குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் தொடங்கியது. * திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு … Read more

அம்பேத்கர் சொல்லும் இந்து பெரும்பான்மையின் ரகசியம்?

புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்தம் ஏற்ற மாதம் அக்டோபர் மாதம். அவர் பௌத்தத்தை ஏற்று (1956) 66 ஆண்டுகள் ஆகின்றன. அவர் பௌத்தத்தை ஏற்றதற்குக் கூறிய காரணங்கள் இன்றும் பொருந்துகின்றனவா? என்பது பற்றி விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் கட்டுரை தொடர் ஒன்றை எழுதி வருகிறார். அந்தவகையில், இந்து பெரும்பான்மை பற்றி அவர் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். ரவிக்குமார் எம்.பி., கூறியதாவது: “இந்துக்கள் இந்த நாட்டில் பெரும்பான்மையானவர்கள் என்று சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே சனாதனவாதிகளால் இந்துப் பெரும்பான்மைவாதம் கட்டமைக்கப்படுகிறது. மதச் … Read more