தோட்டத்தில் புகுந்த பாம்பு… எங்கே இருக்கிறது? 10 நொடிகளில் கண்டுபிடிச்சா மாஸ்டர்!

தோட்டத்தில் புகுந்த பாம்பு… எங்கே இருக்கிறது? 10 நொடிகளில் கண்டுபிடிச்சா மாஸ்டர்! Source link

அமைச்சரவை கூட்டத்தில் பல திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவதாக எதிர்பார்ப்பு..! 

இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஆரம்பமானது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், அக்டோபர் மாதம் கூடவுள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.  இந்தக் கூட்டத்தில் முக்கியமாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்துள்ள அறிக்கை, ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டம் குறித்தும் ஆலோசனை செய்யப்பட உள்ளது. மேலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி … Read more

நாளை முதல் இவர்களுக்கு கலந்தாய்வு.. பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு..!

மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் மாவட்டத்திற்குள் மாறுதல் பெற நாளை கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘ஜூன் மாதம் 1-ம் தேதி நிலவரப்படி, மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அதன்படி, நிதிக் காப்பாளர், … Read more

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்: உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார்

சென்னை: சென்னையில் இருந்து இன்று டெல்லி செல்லும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசுகிறார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று மாலை சென்னையில் இருந்து டெல்லி செல்கிறார். இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்லும் அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசவுள்ளார். தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடந்த என்ஐஏ சோதனையைத் தொடர்ந்து, தமிழகத்தில் கோவை, மதுரை, சேலம், மற்றும் ஈரோடு உள்ளிட்ட 15-க்கும் … Read more

பெரியார் இருந்திருந்தால் திமுக இருந்திருக்காது – சுப்பிரமணியன் சுவாமி அதிரடி

மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகியான சுப்பிரமணியன் சுவாமியின் 83-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், பல்வேறு கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள், தொழிலதிபர்கள் கலந்துக்கொண்டு சுப்பிரமணியன் சுவாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர். விழா மேடையில் சுப்பிரமணியன் சுவாமி பேசியதாவது: “இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டில் மிகப்பெரிய மாற்றம் வர உள்ளது. நாட்டின் கலாச்சாரத்தை வெள்ளைக்காரர்கள் எரித்ததால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி சென்றோம் தற்போது அதிலிருந்து மீண்டு … Read more

ஆம்புலன்ஸில் அழகான ஆண் குழந்தை பிறப்பு

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான கோதையார் வனப்பகுதி இருக்கிறது. இதன் அருகே கோலஞ்சிமடம் பகுதியியை சேர்ந்தவர் அபிஷா, இவருக்கு வயது 19 ஆகும். இவர் கர்ப்பமாகி தலைபிரசவத்திற்க்காக காத்திருந்தார். இந்த நிலையில் நேற்று நாள் இரவு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் பேச்சிப்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இரவு தகவல் கொடுத்து 108 ஆம்புலன்ஸ் விரைந்து சென்றனர். அங்கு அந்த பெண்மணியை அழைத்து வரும் வழியில் அந்தப் பெண்மணிக்கு யானைகள் நடமாடும் அடர்ந்த … Read more

தேனி அருகே பாஜக மாநில மேம்பாட்டு பிரிவு செயலாளர் கார் கண்ணாடி உடைப்பு

தேனி: தேனி சின்னமனூர் பாஜக மாநில மேம்பாட்டு பிரிவு செயலாளர் பிரபாகரனுக்கு சொந்தமான ஸ்கார்பியோ காரின் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தூத்துக்குடி: பாஜக பிரமுகரின் ஆம்னி பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீச்சு.!

தூத்துக்குடியை சேர்ந்த பாஜக பிரமுகரின் ஆம்னி பேருந்து மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டு அதிர்ஷ்டவசமாக பஸ்ஸின் மீது படாமல் தரையில் விழுந்ததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. பாஜக ஓபிசி அணியின் மாநில துணைத் தலைவர் விவேகம் ரமேஷ். இவர் விவேகம் டிராவல்ஸ் என்ற பெயரில் தூத்துக்குடியில் இருந்து சென்னை மற்றும் கோயம்புத்தூருக்கு ஆம்னி பேருந்துகளை இயக்கி வருகிறார். இந்நிலையில் இவரது ஆம்னி பஸ் இன்று இரவு திருச்செந்தூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கோயம்புத்தூருக்கு புறப்பட்டது. அப்போது பஸ் … Read more

யூ-டியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு.. 17 வயது சிறுவன் கைது..!

தாய் குறித்து தவறாக பேசிய நண்பனை மிரட்ட யூ-டியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி, லாஸ்பேட்டை பாரதிதாசன் வீதியைச் சேர்ந்தவர் பரமசிவம் (50). சண்டே மார்க்கெட் வியாபாரியன இவருக்கு, மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த ஜூலை மாதம் 20-ம் தேதி இவருடைய வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதுகுறித்து லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், பரமசிவத்தின் … Read more

சட்டத்தை தங்கள் கையில் எடுத்ததால் பாஜகவினர் கைது: அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து

கோவையில் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டதால் தான் பாஜகவினர் கைது செய்யப்பட்டனர் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். உலக பிசியோ தெரபி தினத்தையொட்டி தமிழ்நாடு பிசியோ தெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் கோவையில் நேற்று நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட பின் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையில் பாஜகவினர் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டதால் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கான கோரிக்கைகள் இருந்தால் மாவட்டஆட்சியர் அல்லது காவல் துறை அதிகாரிகளிடம் முன்வைக்கலாம். … Read more