உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம்: உயர்த்தி வழங்க இபிஎஸ் கோரிக்கை!

ஆன்மீக சுற்றுலாவிற்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சென்றிருந்த தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி கிராமம், சிலுவைப்பட்டியைச் சேர்ந்த சார்லஸ் (வயது 38), பிருத்விராஜ் (வயது 36), தாவீதுராஜா (வயது 30), பிரவீன்ராஜ் (வயது 19), ஈசாக் (வயது 19) மற்றும் அண்டோ கெர்மஸ் ரவி ஆகிய ஆறுபேரும் அக்டோபர் 3ஆம் தேதி காலை சுமார் 9 மணியளவில், கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றபோது பள்ளத்தில் விழுந்ததில் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் … Read more

சிங்கப்பூர் டூ கோவை: விமானத்தில் கடத்திவரப்பட்ட 5.7 கிலோ தங்கம் பறிமுதல் – இருவர் கைது

சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 5.7 கிலோ தங்கம் மற்றும் ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்த 6 பயணிகளை கோவை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது செயின்கள் மற்றும் வளையல்களை பேண்ட் பாக்கெட்டுகளில் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் தங்கம் … Read more

“தினமும் 15-16 மணி நேரம் வேலை, மனரீதியாக சித்திரவதை” – மியான்மரில் சந்தித்த வேதனைகளை பகிரும் தமிழர்

சென்னை: மியான்மரில் ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கித் தவித்த 13 தமிழர்கள் நாடு திரும்பியுள்ளனர். தகவல்தொழில்நுட்ப பணிகளுக்காக தாய்லாந்திற்கு சென்ற 50 தமிழர்கள் மியான்மரில் ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கித் தவித்தனர். தங்களை சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர். 50 தமிழர்கள் உள்பட 300 பேர் மியான்மரில் சிக்கித் தவித்தனர். மியான்மரில் சிக்கித் தவிக்கும் தங்களை மீட்க கோரி, அவர்கள் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்கக் … Read more

தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனை..இந்து முன்னணி நிர்வாகி கைது.!

தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை செய்த இந்திய இந்து முன்னணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் தற்போது போதைப்பொருள் பழக்கம் வேகமாக பரவி வருகிறது. போதை பொருள் விற்பனையை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் காவல்துறை தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, தினமும் கஞ்சா குட்கா மற்றும் பான் மசாலா போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்களை காவல்துறைய கைப்பற்றி விற்பனை … Read more

இரவு மாரத்தானில் உற்சாகத்துடன் ஓடிய ஓய்வுபெற்ற ‘தி இந்து’ நாளிதழ் உதவி ஆசிரியர்: ஆவடி காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டு

சென்னை: இரவு மாரத்தானில் உற்சாகமாக ஓடிய ‘தி இந்து’ நாளிதழின் ஓய்வுபெற்ற உதவி ஆசிரியர் ஆல்பர்ட் தேவகரத்தை ஆவடி காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை ரன்னர்ஸ், வேல் டெக், வேலம்மாள் நெக்ஸஸ் மற்றும் ஆவடி காவல் ஆணையரகம் ஆகியவை இணைந்து மக்களிடையே உடற்தகுதி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை வளர்ப்பதை நோக்கமாக வைத்து ‘போதைப் பொருள் இல்லா தமிழகத்துக்கான ஓட்டம்’ என்ற பெயரில் இரவு மாரத்தான் ஓட்டத்தை நேற்று முன்தினம் இரவு நடத்தியது. 21 கி.மீ., … Read more

ஆயுத பூஜை சிறப்பு சந்தையில் பொருள் வாங்க குவிந்த மக்கள் கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசல்

சென்னை: கோயம்பேட்டில் ஆயுதபூஜை சிறப்பு சந்தையில் பூஜை பொருட்களை வாங்க அதிக அளவில் மக்கள் குவிந்தனர். அதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோயம்பேடு சந்தையில் ஆண்டுதோறும் ஆயுதபூஜை சிறப்பு சந்தை திறப்பது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சிறப்பு சந்தை திறக்கப்படவில்லை. இந்த ஆண்டு கடந்த செப். 30-ம் தேதி சிறப்பு சந்தை திறக்கப்பட்டது. இச்சந்தையில் நேற்று பூஜை பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலை மோதியது. மேலும் … Read more

2022 இயற்பியல் நோபல் பரிசு; மூவருக்கு பகிர்ந்தளிப்பு.. இந்த விஞ்ஞானிகளின் சாதனைகள் என்ன?

2022 இயற்பியல் நோபல் பரிசு; மூவருக்கு பகிர்ந்தளிப்பு.. இந்த விஞ்ஞானிகளின் சாதனைகள் என்ன? Source link

சமூக வலைதளத்தால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் – மூன்று பேர் கைது..!

உத்தரபிரதேச மாநிலத்தில் பஸ்தி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் ஆசிரியையாக பணியாற்றி வரும் இளம்பெண் ஒருவருக்கு, சமூக வலைதளத்தின் மூலம் அதே பகுதியை சேர்ந்த ஒரு மருத்துவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்குள் இருவரும் நெருங்கிய நண்பர்களாயினர். இந்நிலையில் கடந்த வாரம் அந்த மருத்துவர் இளம்பெண்ணை நேரில் சந்திக்க வேண்டும் என்று வற்புறுத்தியதால், அந்த பெண் அவரின் மருத்துவமனைக்கு சென்று பார்த்தார். அப்போது அந்த மருத்துவர் தன்னுடைய ஹாஸ்டலுக்கு வருமாறு வற்புறுத்தினார். அதற்கு சம்மதம் … Read more

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மாதவரத்தில் சுரங்கம் தோண்டும் பணி: அக்டோபர் இறுதியில் தொடங்க திட்டம்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் – சிறுசேரி இடையே 3-வது வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணி இந்த மாத இறுதியில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246 கோடி செலவில் நடைபெறுகிறது. மாதவரம்-சிறுசேரி சிப்காட் (வழி: கெல்லீஸ் வரை 3-வது வழித்தடம், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை 4-வது வழித்தடம் (தியாகராய நகர்), மாதவரம்-சோழிங்க நல்லூர் வரை 5-வது வழித்தடம் … Read more