காய்கறி சந்தைக்கு சென்று விசாரித்தால் தீர்வு கிடைக்குமா?: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பகடி செய்த ப.சிதம்பரம்

திருப்பூர் : சந்தைக்கு சென்று சுண்டைக்காய் என்ன விலை, கீரை என்ன விலை என்று கேட்டால் மட்டும் விலைவாசி உயர்வுக்கு தீர்வு கிடைக்காது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பகடி செய்துள்ளார். சென்னை மைலாப்பூரில் உள்ள காய்கறி சந்தைக்கு சென்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அங்கு காய்கறிகளின் விலையை கேட்டறிந்தார். இதை குறிப்பிட்டு முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பகடி செய்தார். திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் திமுக சுற்றுசூழல் அணி செயலாளர் கார்த்திகேயன் … Read more

கோவை அரசுப் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி: நடவடிக்கை உறுதி என அதிகாரி தகவல்

கோவை அரசுப் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி: நடவடிக்கை உறுதி என அதிகாரி தகவல் Source link

ப்ளூடூத் கருவியுடன் ராணுவ போட்டி தேர்வு எழுதிய வடமாநில இளைஞர்கள்!

சென்னையில் பாதுகாப்புத் துறை தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு! சென்னை நுங்கம்பாக்கம் அடுத்த எம்எச் சாலையில் செயல்பட்டு வரும் ராணுவப் பள்ளியில் பாதுகாப்புத் துறையில் குரூப்-சி பணியாளர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் இந்தியா முழுவதும் இருந்து 1728 பேர் கலந்து கொண்டனர். இந்தத் தேர்வில் கலந்து கொண்ட அரியானாவைச் சேர்ந்த 29 பேர் சிறிய அளவிலான ப்ளூடூத் கருவியை காதில் அணிந்து கொண்டு தேர்வு மையத்திற்கு வெளியே இருக்கும் நபரிடன் உதவியுடன் … Read more

பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு: பிஎப்ஐ நிர்வாகி வீட்டில் போலீசார் திடீர் சோதனை..!

கன்னியாகுமரியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கைதான பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தி லேப்டாப், சிம்கார்டு, வங்கி பாஸ் புக் உள்ளிட்ட 31 முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். கருமன்கூடலைச் சேர்ந்த பாஜக பிரமுகரான கல்யாணசுந்தரம் என்பவர் வீட்டில் கடந்த மாதம் 24-ம் தேதி இரவு மர்ம நபர்கள் 2 பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி சென்றனர். இதுதொடர்பாக ஷமில்கான் என்பவரை கைது செய்த போலீசார் நேற்று மதியம் … Read more

இலக்கு நிர்ணயிக்க வேண்டும் – உதயநிதி எம்எல்ஏ

கட்சியின் சார்பு அணிகளுக்கான இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ கூறினார். திமுக பொதுக் குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது: தலைவர் கருணாநிதி இருந்திருந்தால் எப்படி கட்சித் தேர்தலை கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு நடத்தி முடித்திருப்பாரோ அந்த வழியிலேயே தேர்தலை நடத்திக் காட்டிய தலைவருக்கு நன்றி. நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளோம். இந்த வெற்றி நிச்சயமாகத் தொடரும். நாம் … Read more

கோவை மாநகராட்சி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சாகா பயிற்சி?: தபெதிக-வினர் ஆர்ப்பாட்டம்

கோவை: கோவை மாநகராட்சி துவக்கப்பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பயிற்சி நடத்தியதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்த மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். கோவை ஆர்.எஸ்.புரம் தேவாங்க பள்ளி சாலையில், கோவை மாநகராட்சி ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சாகா பயிற்சி மேற்கொண்டதாக தகவல் பரவியது. அந்த அமைப்பை சேர்ந்த பலர் பள்ளி வளாகத்தில் வரிசையாக நின்று உறுதி மொழி எடுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதையடுத்து தந்தை பெரியார் … Read more

`பார்க்க பச்சரிசி போல இருக்கு; சுங்கக்கட்டணம் செலுத்துங்க’- தேங்கிய 2000 டன் இட்லி அரிசி

சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில், அதிகாரிகளின் குழப்பத்தால் சுமார் ஆயிரம் டன் இட்லி அரிசி ஏற்றுமதி செய்யப்படாமல் தேக்கம் அடைந்திருப்பதாக ஆலை உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகத்தில் உள்ள திருச்சி, சேலம், மதுரை, ஆரணி, காஞ்சிபுரம், திருத்தணி, விக்கிரவாண்டி, உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அறுவடை செய்த குருவை நெல் ரகமான ஏ எஸ் டி :16 , ஆடுதுறை 36 , ஏடி :37 , ஆகிய ரக நெல்லின் அரிசிகள் இட்லி அரிசியாக விளங்குகிறது. இந்த வகையான … Read more

‘பத்மஸ்ரீ’ சுப்பு ஆறுமுகம் மரணம்: காந்தி சுயசரிதையை வில்லிசையாக பாடியவர்

‘பத்மஸ்ரீ’ சுப்பு ஆறுமுகம் மரணம்: காந்தி சுயசரிதையை வில்லிசையாக பாடியவர் Source link

அரசு பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி.? பெரியார் திராவிட கழகத்தினர் போராட்டம்.!

கோவை மாநகராட்சி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பயிற்சியில் ஈடுபட்டதாக கூறி தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பயிற்சி பெற அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்கள் பள்ளி வளாகத்தில் ஆர்எஸ்எஸ் பயிற்சி வகுப்பு நடைபெறவில்லை என்றும் பாஜக ஊடக பிரிவு மறுப்பு தெரிவித்துள்ளது.  மேலும், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஆண்டுதோறும் சேவா தினம் … Read more

திருவண்ணாமலையில் விடிய, விடிய லட்சக்கணக்கானோர் கிரிவலம்: அண்ணாமலையாருக்கு அரோகரா என முழக்கம்

திருவண்ணாமலையில் விடுமுறை நாளான நேற்று பவுர்ணமி திதி என்பதால், அதிகாலையில் இருந்து விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை வழிபட்டனர். திருவண்ணாமலையின் சிறப்பு கிரிவலம். ‘மலையே மகேசன்’ என போற்றப்படும் திரு அண்ணாமலையை 14 கி.மீ. வலம் வந்து பக்தர்கள் வழிபடுகின்றனர். பவுர்ணமி நாளில், கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும். இந்நிலையில், விடுமுறை நாளான நேற்று பவுர்ணமி என்பதால், அதிகாலையில் இருந்து பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பக்தர்களின் வருகை, மாலை 4 … Read more