'என்னை தூங்க விடுங்கப்பா'… தூக்கம் இழந்த மு.க. ஸ்டாலின்… கதறவிட்ட மூத்த அமைச்சர்கள்

திமுகவின் பொதுக்குழு இன்று சென்னை அமைந்தகரையில் நடந்தது. இதில் மு.க. ஸ்டாலின் போட்டியின்றி அக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் அவர் திமுகவின் தலைவராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்கிறார். அதேபோல், மகளிரணி செயலாளராக இர்நுத கனிமொழி துணை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருபக்கம் திமுகவின் தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் குவிந்தாலும் அவர் பொதுக்குழுவில் பேசிய ஒரு விஷயம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுக்குழுவில் பேசிய அவர், “மழையே பெய்யவில்லை என்றாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள்; மழை அதிகமாக … Read more

ஆரணி மற்றும் சுற்று வட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது

ஆரணி: ஆரணி மற்றும் சுற்று வட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சேவூர், முள்ளிப்பட்டு, பையூர், வடுகசாத்து, இரும்பேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. 

சாலைக்கு இடையூறு: 200 ஆண்டுகள் பழமையான புளியமரத்தை உயிருடன் இடமாற்றிய தனியார் நிறுவனம்

செங்கல்பட்டில் சாலை அமைப்பதற்கு இடையூறாக இருந்த 200 ஆண்டுகள் பழமையான புளியமரம், வேருடன் பிடுங்கி ராட்சத கிரேன்கள் உதவியுடன் மீண்டும் நடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த அறப்பேடு பகுதியில் ஆக்சிஜன் சேமித்து வைக்கும் சிலிண்டர்களை உருவாக்கும் தனியார் நிறுவன கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்திற்கு செல்வதற்காக புதிய சாலைகள் அமைக்கும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது. நிறுவனத்திற்கு கனரக வாகனங்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், நெடுஞ்சாலை … Read more

IND vs SA 2nd ODI; ஹெண்ட்ரிக்ஸ், மார்க்ரம் அரைசதம்; இந்தியாவுக்கு 279 ரன்கள் இலக்கு

IND vs SA 2nd ODI; ஹெண்ட்ரிக்ஸ், மார்க்ரம் அரைசதம்; இந்தியாவுக்கு 279 ரன்கள் இலக்கு Source link

பாலாற்று தடுப்பணையில் மூழ்கி மாயமான இரண்டு பேர்!

ஆந்திர மாநில பகுதி பாலாற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவனும் மாயம்!  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக ஆந்திர எல்லையான புல்லூர் பகுதியில் ஆந்திரா அரசால் கட்டப்பட்ட தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணை பருவ மழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த தடுப்பணையில் ஆந்திரா, கர்நாடகா, தமிழக பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் சுற்றுலாவுக்காகவும் அருகில் உள்ள கோயிலுக்கு வழிபடவும் வருகை புரிகின்றனர். இந்நிலையில் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகரை சேர்ந்த ராகில் பைசல், உசேன் … Read more

செங்கல் தூக்கி காட்டியவர் பேச மறுப்பது ஏன்..?: கேட்கிறார் ஆர்.பி.உதயகுமார்..!

செங்கல்லை தூக்கி காட்டியவரும், தற்போது செங்கோலை வைத்திருப்பவரும் இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி பேச மறுப்பது ஏன்..? என்று, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்று அம்மாவும் எடப்பாடியாரும் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தியதன் விளைவாக, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2015-ம் ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு, 2019-ம் ஆண்டு பிரதமர் அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் … Read more

மத்திய கல்வி நிறுவனங்களில் கட்டாய பயிற்று மொழியாக இந்தி: நிராகரிக்க அன்புமணி வேண்டுகோள்

சென்னை: மத்திய கல்வி நிறுவனங்களில் இந்தியை கட்டாய பயிற்று மொழியாக்க வேண்டும் என்ற அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரை நிராகரிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” எய்ம்ஸ் மருத்துவக் கல்வி நிறுவனம், ஐஐடி, ஐஐஎம், மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய அரசு உயர்கல்வி நிலையங்களிலும், கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசு பள்ளிகளிலும் இந்தியை கட்டாய பயிற்று … Read more

மதுரை எம்ய்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படுவது எப்போது? -மத்திய அரசு புதிய அப்டேட்!

தருமபுரியில் பாஜக கூட்டத்திற்கு இன்று வருகை புரிந்த மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: மத்திய அரசு மக்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடத்தினேன். நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்டு பிரதமர் நரேந்திர மோடி செயலாற்றி வருகிறார். தருமபுரி மாவட்டத்தில் … Read more

2026இல் தான் மதுரை எய்ம்ஸ் வேலை முடியுமா? மத்திய அமைச்சரின் தகவல் கொடுக்கும் கவலை

தர்மபுரி: 2026 ஆம் ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நிறைவடையும் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திருமதி பாரதி பிரவின் பவார் தெரிவித்துள்ளார். தருமபுரியில் நடைபெற்ற பாஜக கூட்டத்திற்கு வருகை புரிந்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திருமதி பாரதி பிரவின் பவார், நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் “தமிழ்நாடு பெருமை வாய்ந்த கலாச்சாரங்களை கொண்ட மாநிலம். மத்திய அரசு … Read more

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு திருவள்ளூரில் மழை நீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் விறுவிறுப்பு

திருவள்ளூர்: வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் மழைநீர் வடிகால்வாய், கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில், வரத்து கால்வாய்களை சீரமைக்கவும் மழைநீர் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் சென்னை உள்பட … Read more