பெரியார் இருந்திருந்தால் திமுக இருந்திருக்காது – சுப்பிரமணியன் சுவாமி அதிரடி

மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகியான சுப்பிரமணியன் சுவாமியின் 83-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், பல்வேறு கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள், தொழிலதிபர்கள் கலந்துக்கொண்டு சுப்பிரமணியன் சுவாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர். விழா மேடையில் சுப்பிரமணியன் சுவாமி பேசியதாவது: “இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டில் மிகப்பெரிய மாற்றம் வர உள்ளது. நாட்டின் கலாச்சாரத்தை வெள்ளைக்காரர்கள் எரித்ததால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி சென்றோம் தற்போது அதிலிருந்து மீண்டு … Read more

ஆம்புலன்ஸில் அழகான ஆண் குழந்தை பிறப்பு

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான கோதையார் வனப்பகுதி இருக்கிறது. இதன் அருகே கோலஞ்சிமடம் பகுதியியை சேர்ந்தவர் அபிஷா, இவருக்கு வயது 19 ஆகும். இவர் கர்ப்பமாகி தலைபிரசவத்திற்க்காக காத்திருந்தார். இந்த நிலையில் நேற்று நாள் இரவு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் பேச்சிப்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இரவு தகவல் கொடுத்து 108 ஆம்புலன்ஸ் விரைந்து சென்றனர். அங்கு அந்த பெண்மணியை அழைத்து வரும் வழியில் அந்தப் பெண்மணிக்கு யானைகள் நடமாடும் அடர்ந்த … Read more

தேனி அருகே பாஜக மாநில மேம்பாட்டு பிரிவு செயலாளர் கார் கண்ணாடி உடைப்பு

தேனி: தேனி சின்னமனூர் பாஜக மாநில மேம்பாட்டு பிரிவு செயலாளர் பிரபாகரனுக்கு சொந்தமான ஸ்கார்பியோ காரின் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தூத்துக்குடி: பாஜக பிரமுகரின் ஆம்னி பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீச்சு.!

தூத்துக்குடியை சேர்ந்த பாஜக பிரமுகரின் ஆம்னி பேருந்து மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டு அதிர்ஷ்டவசமாக பஸ்ஸின் மீது படாமல் தரையில் விழுந்ததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. பாஜக ஓபிசி அணியின் மாநில துணைத் தலைவர் விவேகம் ரமேஷ். இவர் விவேகம் டிராவல்ஸ் என்ற பெயரில் தூத்துக்குடியில் இருந்து சென்னை மற்றும் கோயம்புத்தூருக்கு ஆம்னி பேருந்துகளை இயக்கி வருகிறார். இந்நிலையில் இவரது ஆம்னி பஸ் இன்று இரவு திருச்செந்தூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கோயம்புத்தூருக்கு புறப்பட்டது. அப்போது பஸ் … Read more

யூ-டியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு.. 17 வயது சிறுவன் கைது..!

தாய் குறித்து தவறாக பேசிய நண்பனை மிரட்ட யூ-டியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி, லாஸ்பேட்டை பாரதிதாசன் வீதியைச் சேர்ந்தவர் பரமசிவம் (50). சண்டே மார்க்கெட் வியாபாரியன இவருக்கு, மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த ஜூலை மாதம் 20-ம் தேதி இவருடைய வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதுகுறித்து லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், பரமசிவத்தின் … Read more

சட்டத்தை தங்கள் கையில் எடுத்ததால் பாஜகவினர் கைது: அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து

கோவையில் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டதால் தான் பாஜகவினர் கைது செய்யப்பட்டனர் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். உலக பிசியோ தெரபி தினத்தையொட்டி தமிழ்நாடு பிசியோ தெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் கோவையில் நேற்று நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட பின் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையில் பாஜகவினர் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டதால் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கான கோரிக்கைகள் இருந்தால் மாவட்டஆட்சியர் அல்லது காவல் துறை அதிகாரிகளிடம் முன்வைக்கலாம். … Read more

அமைச்சரவைக் கூட்டம்: என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டன?

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்டோபர் மாதம் கூடவுள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டமன்றத்தை கூட்டும் தேதி தொடர்பாக சபாநாயகருக்கு பரிந்துரை செய்யப்படும், அதன்பின்னர் சபாநாயகர் சட்டப் பேரவை கூடும் தேதியை அறிவிப்பார். ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் … Read more

மகளை அடித்த மருமகனை கோடாரியால் வெட்டிக் கொன்ற மாமனார்!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயசூரியன் (47). இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த உருவாட்டி (75) என்பவரின் மகள் காளீஸ்வரி (39) என்பவருக்கும் திருமணமாகி, இவர்களுக்கு 19 வயது மகன் மற்றும் 16 வயது மகள் ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர். உதயசூரியன் மதுபோதையில் தனது மனைவியுடன் சண்டையிட்டு காளீஸ்வரியை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை உதயசூரியன் மது போதையில் தனது மனைவி காளீஸ்வரியை அடித்துள்ளார். … Read more

பவானிசாகர் அணை கரையில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் – வனத்துறை எச்சரிக்கை

பவானிசாகர் அணையின் கரையில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுப்பணித் துறை ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். பவானிசாகர் அணை நீர் தேக்கப் பகுதியை ஒட்டி பவானிசாகர் மற்றும் விளாமுண்டி வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனத்தையொட்டியுள்ள பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதிக்கு யானைகள் நீர் அருந்த வருவது வழக்கம். இந்த நிலையில் இன்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் பவானிசாகர் அணைக்கரையில் வளர்ந்துள்ள புற்களை உண்ண குட்டிகளுடன் வந்தன. இதையடுத்து அங்கு செழித்து வளர்ந்த புற்களை உண்டபடி அங்கேயே … Read more

காவல் துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்: அர்ஜுன் சம்பத்

காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் உள்ள பாஜக அமைப்பு சாரா பிரிவின் தெற்கு மாவட்ட செயலாளர் பொன்ராஜ் வீட்டுக்கு நேற்றிரவு வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட பொன்ராஜின் காரை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் பிஎஃப்ஐ அமைப்பை தடை செய்ய வேண்டும். என்ஐஏ சோதனை என்பது முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. இந்த … Read more