கடிதம் எழுதிவிட்டு இளம்தாய் எடுத்த விபரீத முடிவு – வெளியான சிசிடிவி காட்சியால் அதிர்ச்சி!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே இரண்டு குழந்தைகளின் தாயான பார்மசிஸ்ட் பெண்ணை, மினி பஸ் டிரைவர்கள் காதலிக்கச் சொல்லி வற்புறுத்தியதாகவும், அதனால் தான் தற்கொலை செய்துகொள்வதாகவும் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இருப்பினும் குற்றவாளிகள் போலீசாரால் கைது செய்யப்படாத நிலையில், மினி பஸ் டிரைவர்கள் அவரை விரட்டி விரட்டி அவரிடம் அத்துமீறும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை அடுத்த காரியாவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த குமார். இவரது மனைவி சஜிலா. இரண்டு குழந்தைகளுக்கு … Read more

ஆம்னி பஸ்களில் தீபாவளிக்கு கூடுதல் கட்டணம்: புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு

ஆம்னி பஸ்களில் தீபாவளிக்கு கூடுதல் கட்டணம்: புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு Source link

இந்த இணையதளங்களை முடக்கணும்: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு..!

கோவில் பெயரில் தனி நபர்கள் இணையதளம் நடத்தக் கூடாது. தனியார் நடத்தும் இணையதளங்களை முடக்கி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மார்க்கண்டன் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “பிரசித்தி பெற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 60-ம் ஆண்டு திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இந்த கோவிலை அணுகும் பலர் தவறுதலாக தனியார் இணையதளங்களை … Read more

எண்பது வயதை அடைந்துள்ள வாழும் வரலாறு: அமிதாப் பச்சனுக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து 

சென்னை: நடிகர் அமிதாப் பச்சனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் அமிதாப் பச்சனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எண்பது வயதை அடைந்துள்ள வாழும் வரலாறு, இந்தியத் திரையுலகின் மிகப்பெரும் அடையாளச் சின்னமாம் அமிதாப் பச்சனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தங்களது தனிச்சிறப்புமிக்க கலைப்பண்புகள் இனி வரும் காலங்களிலும் இந்தியத் திரையுலகில் செல்வாக்கு செலுத்தி, ரசிகர்களை மேலும் பல பத்தாண்டுகள் தன்வயப்படுத்தி மகிழ்வித்திட வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். Wishing … Read more

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பு: ஆ.ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

துணைப் பொதுச்செயலாளராகவும், நீலகிரி தொகுதி திமுக எம்.பி.யாகவும் இருப்பவர் ஆ.ராசா. கடந்த 1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இவர் மத்திய அமைச்சராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.27.92 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 17 பேருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக கடந்த 2015ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து, சென்னை, பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட … Read more

வீட்டில் மகாராணியை போல உலா வரும் அணில்; நெல்லை வீட்டில் நடக்கும் அதிசயம்!

நெல்லை மாவட்டம் வேப்பங்குளம் பகுதியை சேர்ந்தவர் தாவித்ராஜா கட்டிட ஒப்பந்ததாரரான இவருக்கு இரண்டு மகள் உள்ளனர். அதில் மூத்த மகள் பியூலா சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை உளவியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இரண்டாவது மகள் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காலத்தில் வீட்டின் அருகே உள்ள மரத்திலிருந்து அணில் குஞ்சு ஒன்று, தாவித் ராஜா வீட்டிற்குள் விழுந்துள்ளது இதனை கண்ட மூத்த மகள் பியூலா அணிலை … Read more

சிதம்பரம் பஸ் ஸ்டாப்பில் மாணவிக்கு தாலி கட்டிய விவகாரம்: மாணவன் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் கைது..!

கடலூர்: சிதம்பரம் பேருந்து நிலையத்தில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே பல்வேறு சிறு கிராமங்களுக்கு செல்லும் மினி பஸ் பேருந்து நிறுத்தம் உள்ளது. அங்குள்ள நிழல் குடையில் பள்ளியில் படிக்கும் சீருடை அணிந்த மாணவிக்கு, ஒரு மாணவன் மஞ்சள் கயிறு தாலி கட்டிய வீடியோ வைரல் ஆனது. மாணவியின் கழுத்தில் மாணவன் தாலி கட்டும் போது எதிரே நிற்கும் … Read more

`ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில்…'- ஓபிஎஸ் கொடுத்த 2 வது கடிதம்! சபாநாயகர் முடிவு என்ன?

அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் சபாநாயகருக்கு இரண்டாவது முறையாக கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதம், பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த இடைக்கால தடைவிதித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டி எழுதப்பட்டுள்ளது. அதிமுவின் ஒருங்கிணைப்பாளர் தான் என்பதால், சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன்னிடம் கலந்து ஆலோசிக்கவேண்டும் என்று கடிதத்தில் ஓபிஎஸ் தெரிவித்திருக்கிறார். ஒற்றை தலைமை சர்ச்சை தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றத்தல் நிலுவையில் உள்ளதால் அதிமுக சார்பாக சட்டமன்ற குழுக்களை … Read more

சென்னை கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரை மேம்பாலம்: திட்டப் பணிகள் தொடக்கம்

சென்னை கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரை மேம்பாலம்: திட்டப் பணிகள் தொடக்கம் Source link

கோவையில் அரை நிர்வாண போராட்டம் நடத்திய ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்களால் பரபரப்பு

திமுக அரசு ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்களை வஞ்சித்து விட்டதாக போராட்டம்! கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள நிதி துறை ஆணையர் அலுவலகம் முன்பு அனைத்து அரசு ஊழியர்கள் ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல் உட்பட ஏழு அம்ச கோரிக்கைகளை முன் வைத்தனர். நிதிச்சுமையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காமல் ஓய்வூதியர்களை வஞ்சிக்கும் செயலில் திமுக அரசு ஈடுபடக் கூடாது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் 70 வயதைக் கடந்த … Read more