எச்.ராஜாவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் வார்னிங்!

விழுப்புரம் மாவட்டம், வானூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு மணி விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பொன்முடி மற்றும் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கட்சி நிதியாக விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் உறுப்பினர்கள் 533 கிராம் தங்க நகைகளை வழங்கினார். விழாவில் எம்.பி பேசியதாவது: “அக்டோபர் 2-ம் தேதி காந்தியடிகளின் பிறந்தநாள் அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இதுவரை எந்த நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை … Read more

கோவையில் அமைதியை நிலைநாட்ட ‘அமைதிக் குழு’ : புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி

கோவை மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்ட ‘அமைதிக் குழு’ நியமிப்பது குறித்து தமிழக தலைமைச் செயலர், உள்துறைச் செயலாளர், தமிழக காவல்துறைத் தலைவர், கோவை மாவட்ட ஆட்சியர், கோவை மாநகர காவல் துறை ஆணையாளர், மேற்கு மண்டல ஐஜி ஆகியோருக்கு தனித்தனியே எழுதப்பட்ட கடிதங்களின் சாராம்சம்: கோவை மாநகரம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த நான்கு தினங்களாக நடந்து வரும் சம்பவங்கள் மிகவும் கவலை அளிக்கக் கூடியதாகும். கோவை மாவட்டம் சென்னைக்கு அடுத்தபடியாக மிக முக்கியமான தொழில் … Read more

ஸ்ரீபெரும்புதூரில் விரைவில் ஐபோன் 14 உற்பத்தி தொடங்கப்படும்: ஃபாக்ஸ்கான் நிறுவனம் அறிவிப்பு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் விரைவில் ஐபோன் 14 உற்பத்தி தொடங்கப்படும் என ஃபாக்ஸ்கான் நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் ஆலையில் உற்பத்தியாகும் ஐபோன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். ஐபோன்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டாலும் செல்போன்கள் விலையில் மாற்றம் இருக்காது என எதிர்பாக்கப்படுகிறது.  

பணம் பங்குபோடுவதில் ஏற்பட்ட பிரச்னை – அண்ணனால் தம்பிக்கு நேர்ந்த துயரம்

விளாத்திகுளம் அருகே தம்பியை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய அண்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.   தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வடக்கு செவல் பகுதியைச் சேர்ந்தவர் இராமநாதன் (38) பனையேறும் தொழில் செய்து வரும் இவரும், இவரின் உடன் பிறந்த தம்பி சேதுராமன் (36) என்பவரும் ஒரே வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் வளர்த்து வந்த ஆடு ஒன்று உயிரிழந்துள்ளது. இதையடுத்து உயிரிழந்த ஆட்டை இறைச்சிக்காக விற்பனை செய்துள்ளனர். விற்பனை … Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக 26-ம் தேதி (இன்று) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் … Read more

நான் ரெடி நீங்க ரெடியா? -பிடிஆருக்கு செல்லூர் ராஜு சவால்!

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழணிசாமி தலைமையில் அதிமுக பொதுக்கூட்டம் மதுரையில் வரும் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்துக்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் இன்று நடைபெற்றது. அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: முந்தைய அதிமுக ஆட்சியில் கூட்டுறவு துறை அதிகாரிகள் பரிந்துரையின் அடிப்படையில் நகைக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அப்படி இருக்கும்போது எப்படி தகுதி இல்லாதவர்களுக்கு கடன்களை தள்ளுபடி செய்ய இயலும். அதிமுக ஆட்சியில் கூட்டுறவு … Read more

தூத்துக்குடியில் பயணிகள் பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கோவை சென்ற, பாஜக பிரமுகருக்கு சொந்தமான பேருந்தின் மீது மர்ம நபர்களால் வீசபட்ட குண்டு வீச்சில் பயணிகள் உயிர் தப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை சரக டிஐஜி மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்து தப்பி சென்ற குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டுள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் இருந்து கோவைக்கு செல்லக்கூடிய பாரதிய ஜனதா கட்சியின் ஒபிசி அணியின் மாநில துணைத்தலைவர் ரமேஸ் … Read more

குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. மதியம் முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடைபெறும். இரவு 10 மணிக்கு சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். விழா … Read more