அதிக பணிச்சுமையால் பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் பாதிப்பு – 8 மணி நேர பணி நடைமுறைக்கு வருமா?

சென்னை: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அதிக பணிச்சுமையால் பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்களுக்கு நான்கரை ஆண்டுகளுக்கு படிப்பும், கடைசி ஓராண்டுக்கு பயிற்சி மருத்துவர் பணியும் வழங்கப்படுகிறது. எம்.டி., எம்.எஸ்.போன்ற முதுநிலை மருத்துவப் படிப்புகளை படிக்கும் மாணவர்கள் 3 ஆண்டுகளும் படிப்புடன் பணியாற்றி வருகின்றனர். பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு தினமும் 8 மணி நேரம் மட்டுமே பணி வழங்க வேண்டும் … Read more

தொடரும் அட்டூழியத்தால் குடும்பத்தினர் அச்சம் காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: 15 பேர் படுகாயம் ஒருவர் கவலைக்கிடம்

காரைக்கால்: காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் தாக்குதல்  நடத்தினர். இதில் 15 மீனவர்கள் படுகாயமடைந்தனர். காரைக்காலை அடுத்த காரைக்கால்மேடு  மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்குமாரின் (43) விசைப்படகில், அவருடன்  15  மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க கடந்த 2ம் தேதி சென்றனர். நேற்று அதிகாலை 2 மணியளவில்  நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரைக்கு தென்கிழக்கே இலங்கை -இந்திய சர்வதேச  எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது காரைக்கால் மீனவர்களின் படகை இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கி முனையில் … Read more

சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலம்: 15,000 போலீஸார் பாதுகாப்பு

விநாயகர் சிலை ஊர்வலம் இன்றுநடைபெறுவதை ஒட்டி சென்னையில் 15 ஆயிரம் போலீ ஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா ஆக.31-ம் தேதி கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டன. இந்நிலையில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் தொடர்ந்து கரைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னையில் விநாயகர் சதுர்த்திக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டதில், … Read more

அதிமுகவில் ஒற்றுமை என டிவிட்டர் பதிவு சசிகலா கருத்து காலம் கடந்தது: முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி

மதுரை: அதிமுகவில் ஒற்றுமை என டிவிட்டரில் சசிகலா பதிவிட்டுள்ளது காலம் கடந்த கருத்து என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘எடப்பாடி பழனிசாமியை ஏகமனதாக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தது நூறு சதவீதம் செல்லும் என ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்புக்குப்பின் எடப்பாடி பழனிசாமிக்கு பல பணிகள், கடமைகள் உருவாகியுள்ளன. அதனை அவர் செவ்வனே செய்வார். அதிமுகவில் ‘ஒற்றுமை’ என டிவிட்டரில் சசிகலா பதிவிட்டுள்ளார். … Read more

கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர் சென்னையில் பழனிசாமியுடன் சந்திப்பு: மகள் மரணத்துக்கு நீதி கிடைக்க உதவ கோரிக்கை

எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகஇடைக்கால பொதுச்செயலருமான பழனிசாமியை கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர், சென்னையில் நேற்று நேரில் சந்தித்தனர். அப்போது தங்கள் மகள் மரணத்துக்கு நீதி கிடைக்க உதவக்கோரி மனு அளித்தனர். கள்ளக்குறிச்சி மாணவி மர்மமரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இதனிடையே விசாரணை தாமதமாக நடைபெறுவதாக கூறி மாணவியின் பெற்றோர் அண்மையில் முதல்வர் ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து, விசாரணையை வேகமாக நடத்துமாறு கோரிக்கை விடுத்தனர். மாணவியின் மரணத்துக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் … Read more

இபிஎஸ் அணி முக்கிய பிரமுகரை இழுக்க திட்டம்? ஓபிஎஸ் ஆதரவாளரின் ரூ.50 லட்சத்துடன் ஓட்டம் பிடித்த கார் டிரைவர்: தென்காசியில் சிக்கியவரிடம் போலீசார் விசாரணை

பெரியகுளம்: பெரியகுளத்தை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளரிடம் ரூ.50 லட்சத்தை எடுத்துக் கொண்டு தப்பி சென்ற கார் டிரைவரை தென்காசியில் போலீசார் கைது செய்தனர். அது, இபிஎஸ் அணியின் முக்கிய பிரமுகரை இழுக்க கொண்டு சென்ற பணம் என்று கூறப்படுகிறது.தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்தவர் நாராயணன். இவர் இப்பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை நடத்தி வருகிறார். மேலும் இவர் ஓபிஎஸ்.சின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவர் என கூறப்படுகிறது. ஓபிஎஸ் குடும்பத்தினருக்கு இவர் மிகவும் நெருக்கமானவர். தேனி மாவட்ட அதிமுகவில் … Read more

போதை பழக்கத்தை முழுமையாக ஒழிக்க அரசுடன் தொண்டு நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும்: அமைச்சர்

போதை பழக்கத்தை முழுமையாக ஒழிக்க தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் வாழும் கலை அமைப்பின் சார்பில் ‘போதையை தவிர்ப்போம் போதையை தடுப்போம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போதை பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகளை விளக்கி மாணவர்கள் தயாரித்த குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக … Read more

வட மாநிலங்களில் மழை, விளைச்சல் பாதிப்பால் வரத்து சரிவு பருப்பு வகைகள் விலை 30 சதவீதம் அதிகரிப்பு: மிளகாய் வற்றல் விலையும் கூடியது

சேலம்: வட மாநிலங்களில் பெய்த தொடர் மழையாலும், விளைச்சல் பாதிப்பாலும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு உள்பட பல மளிகை பொருட்களின் விலை 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக மளிகை வியாபாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் துவரை, உளுந்து, கொண்டைக்கடலை, பச்சைப்பயறு, தட்டைப்பயறு, சோம்பு, சீரகம், கசகசா உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கேரளா, ஏற்காடு, கொல்லிமலையில் மிளகும், மகாராஷ்டிரா, கர்நாடகாவில் பெரிய வெங்காயமும், ராஜஸ்தான் … Read more

ஒரே பைக்கில் சென்ற 3 பேர் உயிரிழப்பு: வாகனத்தை ஓட்டியவரின் குடும்பத்துக்கான இழப்பீடு ரத்து

திருச்சியைச் சேர்ந்த வீடியோ கேமராமேன் பாலகிருஷ்ணன், லைட்மேன் சத்தியமூர்த்தி, புகைப்படக்காரர் அகஸ்டின். இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளை பாலகிருஷ்ணன் ஓட்டினார். மற்ற இருவரும் பின்னால் அமர்ந்து சென்றுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிள் மண்ணில் சறுக்கி சாலையோர மரத்தில் மோதியது. இதில் 3 பேரும் உயிரிழந்தனர். 3 பேரின் குடும்பத்தினரும் திருச்சி வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் பாலகிருஷ்ணன் குடும்பத்துக்கு ரூ.4.50 லட்சம், … Read more

புதுவை அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் அனுமதி

புதுச்சேரி: உடல் நலக்குறைவு காரணமாக புதுவை அமைச் சர் நமச்சிவாயம் மருத்துவ மனை யில் அனுமதிக்கப் பட்டு உள்ளார்.புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வரும் 8ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதையொட்டி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் அமைச்சர் நமச்சிவாயம் ஓய்வின்றி அரசு நிகழ்ச்சிகள் மட்டுமின்றி பல இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார். இதன் ஒரு பகுதியாக, நேற்று … Read more