வற்றிய கிணற்றுக்குள் புகுந்த மழைநீர்..! வழுக்கி விழுந்த பதினைந்து வயது சிறுமி..!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள கிரே நகரைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருடைய கிணறு நீண்ட நாட்களாக வற்றியிருந்த நிலையில், தற்போது பெய்த கனமழையால் பத்து அடி ஆழத்திற்கு தண்ணீர் நிரம்பி இருந்தது. இதனைக் கண்ட அவரின் பதினைந்து வயது மகள் மோட்டார் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென கால் தடுமாறி கிணற்றில் விழுந்துள்ளார். சில நேரத்திற்கு பிறகும் மகளைக் காணாததால் பதற்றமடைந்த மோகன்ராஜ் கிணற்றுக்கு அருகே சென்று பார்த்துள்ளார். அப்போது உயிருக்கு போராடிய நிலையில் தனது … Read more

தமிழகத்தில் தீவிரவாத தடுப்புப் படையை உருவாக்க அவசியமில்லை -உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

பயங்கரவாத தடுப்பு படையை அமைக்கக்கோரும் வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மற்ற மாநிலங்களைப் போல, தமிழகத்திலும் பயங்கரவாத தடுப்புப் பிரிவை உருவாக்க, அரசுக்கு உத்தரவிடக்கோரி, ஜெகன்நாத் என்ற வழக்கறிஞர் வழக்குத்தொடர்ந்தார். இதன் மீதான இன்றைய விசாரணையின்போது, தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீராக உள்ளதாக கூறிய நிலையில், பயங்கரவாத தடுப்புப்படையை அமைக்கக்கோரி, வழக்கு தொடர்ந்தது ஏன்? என, மனுதாரருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், … Read more

தமிழக போக்குவரத்துக் கழகத்துக்கு புதிதாக 1,172 பிஎஸ்-6 பேருந்துகள்

சென்னை: தமிழக போக்குவரத் துறைக்கு புதிதாக பிஎஸ்-6 ரகத்தை சேர்ந்த 1,172 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. தமிழகத்தின் 8 போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலாவதியான பேருந்துகளை ஈடுசெய்யவும், காற்று மாசுபாட்டை குறைக்கும் பிஎஸ்-6 ரக பேருந்துகளை பயன்படுத்தும் வகையிலும் புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. இதில் முதல்கட்டமாக 2,213 பேருந்துகள் கொள்முதல் செய்ய டெண்டர் வெளியிடப்பட்டது. இவை அனைத்தும் டீசலில் இயங்கும் தாழ்தள பேருந்துகள் ஆகும். இந்நிலையில், மேலும் 1,172 பேருந்துகள் … Read more

கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்: தீபாவளிக்கும் கிடையாது… அப்டினா எப்ப தான் முடியும்?

தலைநகர் சென்னையில் அதிகரித்து வரும் இடநெருக்கடியை போக்கும் வண்ணம் புதிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டியுள்ளது. அந்த வகையில் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தின் வரவை கடந்த மூன்று ஆண்டுகளாகவே சென்னைவாசிகள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் கட்டுப்பாடுகள், நிலம் கையகப்படுத்துதல், கொரோனா பெருந்தொற்று என பல்வேறு காரணங்களால் பணிகள் தள்ளிப் போயின. நடப்பாண்டு தொடக்கம் முதலே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பணிகள் வேகமெடுத்தன. நடப்பாண்டு செப்டம்பரில் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்பட்டது. … Read more

விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை வழங்கக்கோரி வழக்கு: நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையை சேர்ந்த சுந்தரவிமல் நாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் கடந்த 2016ல் அறிமுகமானது. இதன்படி கடந்த 2021-22 மற்றும் 2022-23 ஆண்டுகளுக்கு பல்வேறு வங்கிகளில் பயிர் காப்பீடு செய்ய ஒன்றிய அரசால் பரிந்துரைக்கப்பட்டது. காவிரி டெல்டா பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தங்களின் நெல் சாகுபடிக்கு உரிய காப்பீட்டு தொகையை செலுத்தினர். கடந்த 2021ல், இயற்கை சீற்றங்களால் விவசாயிகள் பலர் அதிக … Read more

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி இளைஞர் பலி – மற்றொருவரை தேடும் பணி தீவிரம்

கீழ் பவானி வாய்க்காலில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார். வாய்க்கால் கரையில் இருசக்கர வாகனம், 2 செல்போன்கள் கிடந்ததால் மேலும் ஒருவர் நீரில் மூழ்கி இருக்கலாம் என சந்தேகித்து தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த மாரனூர் மேட்டுக்கடை வழியாக செல்லும் கீழ்பவானி வாய்க்கால் கரையில் தண்ணீருக்குள் இறங்கிய நிலையில் இன்று மாலை இருசக்கர வாகனம் ஒன்று இன்ஜின் இயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளது. இருசக்கர வாகனத்தின் அருகே 2 செல்போன் … Read more

காசர்கோடு கோயில் குளத்தில் வாழ்ந்த வெஜிடேரியன் முதலை உயிரிழப்பு.. பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி!

காசர்கோடு கோயில் குளத்தில் வாழ்ந்த வெஜிடேரியன் முதலை உயிரிழப்பு.. பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி! Source link

மருமகனை வெட்டிவிட்டு தப்பியோடிய மாமனார் – தென்காசி அருகே அதிர்ச்சி சம்பவம்!

வாசுதேவநல்லூர் அருகே குடும்ப தகராறில், மாமனாரே மருமகனை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற அதிர்ச்சி  சம்பவம் அரங்கேறியுள்ளது.  தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அடுத்த சிந்தாமணிபேரிபுதூரை சேர்ந்தவர் அய்யாத்துரை. இவரின் மனைவிக்கு தலைவன்கோட்டை குளம் அருகே சொந்தமாக நிலம் கொஞ்சம் உள்ளது.  அந்த நிலத்தை தனது பெயருக்கு எழுதி தரும்படி அய்யாதுரையின் மனைவியிடம், அவரின் சித்தப்பா சின்னபாண்டி கேட்டதாக தெரிகிறது.  இதன் காரணமாக அய்யாத்துரைக்கும், அவரின் சின்ன மாமனாரான சின்ன பாண்டிக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது. … Read more

மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பால், பட்டாசு விலை 30 சதவிகிதம் உயர்வு: உற்பத்தியாளர்கள்

சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தீவிரமடைந்துள்ள நிலையில், மூலப்பொருட்கள் விலை உயர்வு, உற்பத்தி குறைவு போன்ற காரணங்களால், இந்த ஆண்டு 30 சதவீதம் விலை உயர்ந்திருப்பதாக, உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். சிவகாசியில் 1,100 ஆலைகளில் 3 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், 2 லட்சம் பேர் மறைமுகமாகவும் பட்டாசு தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஆண்டிற்கு பட்டாசு உற்பத்தி மூலம், 3 ஆயிரம் கோடி ரூபாய் முதல், 4 ஆயிரம் கோடி ரூபாய் வரை, வர்த்தகம் நடைபெறுகிறது. டெல்லியில் இந்தாண்டு பட்டாசு வெடிக்க … Read more