எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆதாரங்கள்: ஐகோர்ட்டில் அறப்போர் இயக்கம் தகவல்!

முன்னாள் முதல்வர் , நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக, அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2016 – 2021ம் ஆண்டுகளில், அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில், அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்துள்ளதாக நெடுஞ்சாலைத் துறையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தலைமை செயலர், நெடுஞ்சாலை துறை, லஞ்ச ஒழிப்புத் … Read more

ஓபிஎஸ் புலியாக மாற வேண்டும்: செய்தியாளர் சந்திப்பில் சையது கான் அதிரடி

தேனி: அதிமுக இணைப்புக்கு ஓபிஎஸ் விடுத்த அழைப்பை நிராகரித்த எடப்பாடி பழனிசாமியை, ஓபிஎஸ் ஆதரவாளர் சையது கான் கடுமையாக விமர்சித்துள்ளார். ஓபிஎஸ் புலியாக மாற வேண்டும், இனிமேலும் அவர் பணத்தாசை பிடித்த எடப்பாடி பழனிச்சாமியை பொருட்படுத்தக்கூடாது என்று செய்தியாளர்களிடம் பேசிய சையது கான் தெரிவித்தார். பதவி ஆசையால், சசிகலாவின் காலில் ஊர்ந்து சென்று விழுந்து முதல்வர் பதவியை பெற்று ஓபிஎஸ்ஸுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்று அவரை கடுமையாக சாடினார். செங்கோட்டையன் தான் முதன் முதலில் சசிகலாவினால் அதிமுக சார்பில் முதல்வராக … Read more

இன்டர்நெட் மூலம் தோழிகளை விலை பேசிய கல்லூரி மாணவி

திருப்பூர்: சிறுவர்கள் முதல் பல்லுபோன பாட்டிவரை அனைவரிடமும் இப்போது ஸ்மார்ட் போன் வைத்திருப்பது ஒரு பேஷனாகிவிட்டது. ஒருவரிடம் ‘ஸ்மார்ட் போன்’ இல்லை என்பது இன்றைய நிலையில் மிகப்பெரிய அவமானமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களிடம் ‘ஸ்மார்ட் போன்’ பயன்பாடு மிக அதிகமாக உள்ளது. ஆனால் இந்த போன்களை பயன்படுத்தி அறிவை வளர்த்துக் கொள்பவர்கள் மிக சொற்ப அளவிலேயே உள்ளனர். ஆக்க சக்தியாக பயன்படுத்தப்பட வேண்டிய விஞ்ஞான வளர்ச்சியை அழிவு சக்தியாக பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. … Read more

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு – முக்கிய ஆவணங்கள் மாயம்; ஓய்வு வழக்கறிஞர் விளக்கம்

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் காணாமல்போனது நீதிபதியை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சிறப்பு டிஜிபியாக இருந்தவர், கடந்த 2021-ம் ஆண்டு பெண் எஸ்.பி.க்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த ஓர் ஆண்டாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே முன்னாள் சிறப்பு டிஜிபி, பெண் எஸ்பிக்கு இடையே நடந்த உரையாடல் பதிவு, வாட்ஸ்அப் மெசேஜ் பதிவு, கால் … Read more

மின்னல் தாக்கி பலியான மாணவர்.. ராமநாதபுரம் அருகே நிகழ்ந்த சோகம்..!

மின்னல் தாக்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள நயினார் கோவிலில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த பல மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அந்த பள்ளியில் தாழையடி பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன் கஜினி படித்து வருகிறார். சம்பவதன்று, அவர் பள்ளி முன் விளையாடி கொண்டிருந்த போதுபோது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியது. படுகாயமடைந்த அவரை மீட்ட ஆசிரியர்கள் … Read more

தமிழகத்தில் தற்கொலைகளை தடுப்பதற்காக எலி பேஸ்ட் மற்றும் சாண பவுடரை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்க முடிவு

தமிழகத்தில் தற்கொலைகளை தடுப்பதற்காக எலி பேஸ்ட் மற்றும் சாண பவுடரை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்க சட்டம் கொண்டுவர இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி பணிகளை உடனடியாக துவங்க வலியுறுத்தி மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்திக்க விரைவில் டெல்லி செல்ல இருப்பதாக தெரிவித்தார்.   Source link

“நிதியமைச்சர் தியாகராஜன் அவர்களே… நீங்கள் பேசியது அகங்காரத்தின் வெளிப்பாடு” – தமிழக பாஜக

சென்னை: “மத்திய அரசை கேள்விகேட்கும் நீங்கள், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டீர்களா?” என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நான் ஏன் மற்றவர்களுடய கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்? என் முதல்வர் எனக்கு ஒரு பணியினை கொடுத்தார். அதை நான் செவ்வனே செய்துகொண்டிருக்கிறேன். மத்திய அரசையே மிஞ்சும் அளவிற்கு என் செயல்பாடு உள்ளது. மத்திய அரசின் கருவூலத்திற்கு தமிழகம் அதிக அளவில் … Read more

கள்ளக்குறிச்சி கலவரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம் தொடர்பாக சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும், கைது செய்யப்பட்ட அப்பாவிகளை அடையாளம் காணக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை அடுத்து மூன்று நாட்களுக்கு பின் பள்ளியில் நடந்த கலவரம், தீ வைப்பு சம்பவங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு போலீசார், அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதில் அப்பாவிகளும் கைது செய்யப்பட்டு உள்ளதால் அவர்களை அடையாளம் … Read more

பொதுமக்களை நோக்கி காரி உமிழும் திமுக பெண் கவுன்சிலர் வீடியோ வைரல்

சேலம் மாநகராட்சி செவ்வாப்பேட்டை 30 வது வார்டு அய்யாசாமி தெரு உள்ளது. இப்பகுதியின் கவுன்சிலர் திமுக கட்சியை சேர்ந்த அம்சா. கடந்த 15 நாட்களுக்கு முன்பு குடிநீர் செல்லும் குழாயில் பழுத்தாகியுள்ளது. இதுகுறித்து திமுக பெண் கவுன்சிலர் அம்சா சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் குடிநீர் செல்லும் குழாயை விரைந்து சீர்படுத்த உத்தரவிட்டுள்ளார். உடனடியாக சம்பந்த இடத்திற்கு வந்த சேலம் மாநகராட்சி பணியாளர்கள் குடிநீர் குழாயில் உள்ள பழுதினை கண்டறிந்து மூன்று வீடுகளில் உள்ள குழாய்களில் அடைப்பு இருப்பதை கண்டறிந்துள்ளனர். … Read more

புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயிலில் ஆடித் தேரோட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயிலில் இன்று நடந்த ஆடித் தேரோட்டத்தில் கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்று வடம்பிடித்து தேரை இழுத்து தொடங்கி வைத்தனர். புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீரம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடித்திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான ஆடித் தேரோட்டம் இன்று காலை 8 மணிக்கு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்று தேரை … Read more