சாதி, மதம், கட்சி வேறுபாடின்றி தேசிய கொடி ஏற்றுவோம் – ரஜினிகாந்த்

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இதனையொட்டி சுதந்திர நாளான ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று சமூக வலைதளங்களில் அனைவரும் தங்களது முகப்பு படமாக தேசியக்கொடியை வைக்க வேண்டுமென பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருந்தார். மேலும் தங்களது வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டுமெனவும் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து பிரதமர் தனது ட்விட்டர் முகப்பு படமாக தேசியக்கொடியை வைத்தார். அவரைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் தேசியக்கொடிக்கு கீழ் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி இருக்கும் … Read more

கருப்பின் அரசியல் கலாசாரம் வரலாறு!

பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 10ஆம் தேதி பேசுகையில், ” குறுகிய மனப்பான்மையில் சூன்ய கருத்துக்களை விதைக்கின்றனர்” என்று யாரையும் குறிப்பிடாமல் பேசினார். தொடர்ந்து, “விரக்தியின் காலம் கருப்பு ஆடையோடு முடிந்துவிடாது” என்றும் கூறினார். இதற்கு ட்விட்டரில் பதிலளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “உங்களது தோல்வியை மறைக்க இதுபோல் பேசுவதை முதலில் நிறுத்துங்கள். பிரதமர் பதவியின் கண்ணியத்தை குறைக்க வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டனர். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “பிரதமர் நரேந்திர … Read more

கோவையில் அனுமதியின்றி ஒட்டப்படும் சுவரொட்டிகள்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

கோவை: கோவை மாநகரில் மேம்பாலத் தூண்கள் உட்பட பல்வேறு பொது இடங்களில் அனுமதி மீறி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருவதாகவும், இதனால் விபத்துகள் அதிகரித்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. கோவை அவிநாசி சாலையில் 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக 300-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல உக்கடம் – ஆத்துப்பாலம் சாலையில் மேம்பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நஞ்சப்பா சாலை, காந்திபுரம் நூறடி சாலையில் உயர்மட்டப் பாலங்கள் … Read more

ஹஜ் மானிய தொகை உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்ற தெரிவிக்கும் ஹாஜிக்கள்

சென்னை: தமிழக அரசு ஹஜ் மானிய தொகை உயர்த்தி வழங்கியிருப்பது இஸ்லாமிய மக்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. இதற்காக,தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும், ஹஜ் கமிட்டி உறுப்பினரும் நாகூர் தர்கா பிரசிடன்டுமான செய்யது முஹம்மது கலீபா சாஹிப் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது சம்பந்தமாக அவர் வெயிட்ட அறிக்கையில், ஒன்றிய அரசு ஹஜ் விமான பயண கட்டணத்திற்கான மானியத்தை நிறுத்தியது, அதனை ஈடு செய்யும் வகையில்  தமிழக அரசு மானிய தொகை வழங்க தொடங்கியது. ஒவ்வொருவருக்கும் தலா … Read more

திருச்சியில் போலீஸ் நிலையத்திற்கே பூட்டு: புகார்தாரர்கள் திகைப்பு

திருச்சி மாவட்டத்தில் உறையூர் காவல் நிலையம் மாநகரின் மையப்பகுதியில் இயங்கிவருகிறது. இந்தக் காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பாண்டமங்கலம், வெக்காளியம்மன் கோயில், உறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில், 108 வைணவத் திருத்தலங்களுள் சோழ நாட்டு இரண்டாவது திருத்தலம் என அழைக்கப்படும் உறையூர் அழகிய மணவாளர் கமலவல்லி நாச்சியார் திருக்கோயில் என பிரசித்தி பெற்ற பல்வேறு திருத்தலங்களும், பல்வேறு வணிக நிறுவனங்களும், விடுதிகளும், பிரபல மருத்துவமனைகளும் உறையூர் பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் எப்போதுமே பரபரப்புடன் காணப்படும் உறையூர் பகுதியில் … Read more

சென்னை அருகே நரிக்குறவ மக்களை அப்புறப்படுத்த கடும் எதிர்ப்பு.!

திருவள்ளூர் மாவட்டத்தில், ஆரணி ஆற்றின் கரையோரத்தில் பொன்னேரி வருவாய் கோட்ட பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவின் படி இவர்களுக்கு கடந்த 1 வாரமாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டு வந்தது.  இந்த நிலையில் குன்னம் சேரி ஆரணி ஆற்றின் கரையோரத்தில் 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்களில் 200க்கும் மேற்பட்டோர் கடந்த 20 வருடமாக வசித்து வருகின்றனர். இவர்களை பொதுப் பணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் … Read more

திண்டுக்கலில் 200 ஏக்கரில் மூலிகைப் பயிர் சாகுபடி: மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: திண்டுக்கலில் 200 ஏக்கரில் மூலிகைப் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் தலைமை அலுவலகம், தேசிய சித்த மருத்துவ நிறுவனம், அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை புதிய வெளி நோயாளர் பிரிவு கட்டிடத்தை மத்திய ஆயுஷ் மற்றும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் … Read more

தீ குளித்த 17 வயது காதலி… மரண வாக்குமூலத்தில் வெளியான திடுக்கிடும் காரணம்

தர்மபுரி அருகே அக்கமனஅள்ளி பகுதியில் உள்ள சின்னமாட்டுகடை கிராமத்தை சேர்ந்த முனியாண்டி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மகள் பவித்ரா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது).  இவர் சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலை பள்ளியில் கடந்த ஆண்டு  12ம் வகுப்பு முடித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத பொழுது உடலில் மண்ணென்ணை ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். பிறகு அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டார் வநந்து பார்த்துள்ளனர். அப்போது பவித்ரா தீக்காயங்களுடன் கிடந்துள்ளார்.  பின்னர் பக்கத்துவீட்டார் … Read more