தேர்வில் தோல்வி: பள்ளி மாணவி தற்கொலை, புதுக்கோட்டையில் பரிதாபம்

படிப்பு, அழுத்தம், ஏழ்மை ஆகிய பல காரணங்களால் மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது இந்நாட்களில் அதிகரித்து வருகிறது. இது ஒரு சமூகமாக நாம் கவலைக்கொள்ள வெண்டிய, கூர்ந்து கவனிக்க வேண்டிய, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. தினம் தினம் தொடந்து தற்கொலை பற்றிய செய்திகள் வருவது மனதை பதபதைக்க வைக்கிறது. உலகில் காலூன்றி வாழ்ந்து, வென்று கட்ட வேண்டிய சிறுவர் சிறுமிகளும், இளைஞர்களும் தோல்வியை தழுவிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வது வேதனை … Read more

மடவாமேடு கடலில் அதிகம் கிடைக்கும் சூரைமீன்கள்; கிலோ ரூ.40 முதல் ரூ.75 வரை விற்பனை.!

கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள கடலோர மீனவ கிராமம் மடவாமேடு. இந்த கிராமத்திலிருந்து தினமும் பைபர் படகுகள் மூலம் மட்டுமே மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். சுமார் 500 மீனவர்களின் குடும்பங்கள் இங்கு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தினந்தோறும் 350 பைபர் படகுகள் மூலம் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். மடவாமேடு கிராமத்தில் கடலில் பிடிக்கப்படும் மீன்களை வெளியூர்களிலிருந்து வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர். சில்லறை விற்பனையும் நடைபெற்று … Read more

Tamil news today live : அதிமுக பொதுக்குழு விவகாரம் – உயர் நீதிமன்றத்தில் ஈபிஎஸ் மனு மீது விசாரணை தொடங்கியது

Go to Live Updates பெட்ரோல் – டீசல் விலை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் லிட்டர் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பில்கிஸ்பானு வழக்கு பில்கிஸ்பானு வழக்கில் குற்றவாளிகளான 11 பேர் கடந்த ஆகஸ்டு 15ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த தீர்ப்பு அநீதியின் உச்சம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பில்கிஸ் பானுவின் தரப்பில் உச்சநீதிமன்றம் மேல்முறையீடு … Read more

மாணவர் நலனுக்காக பின்வாங்குவதில் தவறில்லை: அன்பில் மகேஷ் கருத்து

ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில், பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் தலைமைப் பண்பு மேம்பாட்டுக்காக மாநில அளவிலான 6 நாள் உண்டு, உறைவிட கருத்தாளர் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில்தான் தலைமை ஆசிரியர்களுக்கு இதுபோன்று உண்டு, உறைவிடப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்திட்டத்துக்காக ஒன்பதரை … Read more

திரையிலும் சரி… நிஜத்திலும் சரி… எப்பவும் விஜயகாந்த் தான்; ட்விட்டரில் தெறிச்ச ரசிகர்கள்!

என்றதும் கேப்டன், தமிழ் திரைப்படங்களில் அசத்தலான நடிகர், நடிகர் சங்கம் பட்ட கடனை எல்லாம் தீர்த்தவர், வாரி வாரி கொடுத்த வள்ளல், தைரியமான அரசியல்வாதி, கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும் போதே துணிச்சலான அரசியல் செய்தவர், தமிழக சட்டப்பேரவையில் அதகளப்படுத்திய பேச்சு உள்ளிட்டவை பலருக்கும் நினைவுக்கு வரும். இவரது 70வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ட்விட்டரில் ஏராளமானோர் பிறந்த நாள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

அமைச்சர் பொய்யாமொழி குறித்து சர்ச்சை: நாளேட்டை எரித்து ஆர்ப்பாட்டம்

அமைச்சர் பொய்யாமொழி குறித்து சர்ச்சை: கோவையில் பிரபல தனியார் நாளேடு ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படும். தற்போது வெளியாகி உள்ள அந்த நாளேட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடைய புகைப்படத்துடன் கூடிய கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது. அந்தவகையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறித்து சர்ச்சைக்குரிய செய்திகளை வெளியிட்டதாக அந்த நாளேட்டை எரித்து கோவையில் உதயநிதி ஸ்டாலின் மன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மாதந்தோறும் வெளியிடப்படும் பிரபல தனியார் நாளேட்டில் பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் … Read more

நாமக்கல் தொழிலதிபர் கொலை: 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை

நாமக்கல்: நாமக்கல்லை சேர்ந்த தொழிலதிபர் கெளதம் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரின் நிதி நிறுவன ஊழியர்கள் குணசேகரன், பிரகாஷ், முன்னாள் ஊழியர் தீபன் ஆகிய 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

வலைத்தளம் உருவாக்கி தமிழகம் முழுவதும் ஊக்க மருந்தை விற்பனை செய்து வந்த கும்பல் கைது!

மதுரை, சென்னை, புனே ஆகிய பகுதிகளில் உள்ள மருந்து நிறுவனங்களிடம் இருந்து ரகசிய குறியீட்டின் மூலம் ஊக்க மருந்தை கொள்முதல் செய்து வலைத்தளம் மூலம் தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் சின்னமனூரில் போதை ஊசி பயன்படுத்திய 4 இளைஞர்களும், போதை மருந்து விநியோகம் செய்த என்ஜினீயர் உள்பட 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டும் பயன்படுத்தக் கூடிய ஊக்க மருந்தை போதைக்காக … Read more

சுறா துடுப்புகள் சீனாவுக்கு கடத்துவது அதிகரிப்பு: தமிழக கடல் பகுதியில் அரிதாகிவரும் சுறா மீன்கள்

தமிழகத்திலிருந்து இலங்கை வழியாக சீனாவுக்கு சுறா துடுப்புகளை கடத்துவது அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக கடல் பகுதியில் சுறாக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. உலகளவில் 480 வகையான சுறா மீன்கள் உள்ளன. தமிழகத்தில் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பரப்பில் கலங்குச் சுறா, கணவாய் சுறா, கல்லு சுறா, கொண்டையன் சுறா, கொம்பன் சுறா, தாளன் சுறா, பஞ்சு சுறா, பால் சுறா, திமிங்கல சுறா, ஈட்டிபல் சுறா, கங்கை சுறா, … Read more

முதல்வரை நெகிழச் செய்த அமைச்சர்; குட் லிஸ்டில் இடம்; காத்திருக்கும் பரிசு!

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் மாநாடு, பொதுக்கூட்டம் என்றாலே வழக்கமாக பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் மற்றும் கட்சிக்கொடிகளை பல கிலோ மீட்டர் தூரம் வைத்து இம்சைக்கு உள்ளாக்குவது உண்டு. அதிலும் , அதிமுக என்றால் இதுபோன்ற அலப்பறைகளுக்கு அளவே இருக்காது. கட்சி தலைமையின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அந்தந்த பகுதிகளின் பொறுப்பாளர்கள் இதுபோன்ற வேலைகளுக்காகவே லட்சங்களை வாரி இறைப்பார்கள். இதுபோன்ற பேனர் கலாச்சாரத்தின் விளைவாக ஏராளனமான விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலிகளும் அதிகரித்து வந்தது. இதனால், சமூக ஆர்வலர்கள் … Read more