திமுக கூட்டங்களுக்கு ஆள்பிடிப்பதுதான் பள்ளிக் கல்வித் துறையின் வேலையா? – அண்ணாமலை

திமுகவின் கூட்டங்களுக்கு ஆட்பிடிப்பு வேலை செய்வதுதான் பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை பணியா? எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று கோவையிலும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திலும் பங்கேற்கும் அரசு விழாவிற்கு மக்களை அழைத்து வர அனைத்து பள்ளி வாகனங்களைக் கொடுக்குமாறு மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக அறிகிறேன். மாற்று வாகனங்களில் மாணவர்கள் … Read more

தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம்: மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தில் ஆறு மாதங்களுக்கு மேல் காலியாக உள்ள தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை நிரப்பக் கோரிய வழக்குக்கு பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞரும், சமூக நீதி பேரவை தலைவரும் கே.பாலு தாக்கல் செய்த மனுவில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகள் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதியுடன் காலாவதியாகி விட்டதாக தெரிவித்துள்ளார். கடந்த ஆறு … Read more

கள்ளக்குறிச்சி விவகாரம் – மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என கூறி,  தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை அடுத்து பள்ளியில் நடந்த கலவரம், தீவைப்பு சம்பவங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு போலீசார், அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.  இதில் அப்பாவிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி, அவர்களை அடையாளம் காணக் கோரியும், அவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும், … Read more

புதுக்கோட்டை மாவட்டம் மாமுண்டி கருப்பர் கோயிலில் குடமுழுக்கு விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் வடவாளத்தில் உள்ள மாமுண்டி கருப்பர் கோயிலில் 22 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். புதுக்கோட்டை மாவட்டம் வடவாளத்தில் மாமுண்டி கருப்பர் கோயில் உள்ளது. இந்த கோயில் அந்த பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த கோயிலாக உள்ளது. இந்த கோயிலில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடைபெற்றது. இதனையடுத்து இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் திட்டமிட்டிருந்தனர். அதன்படி கடந்த சில ஆண்டுகளாக ரூ.1 … Read more

தனியார் பேருந்தின் படியில் அமர்ந்து மது அருந்தியவாறு பயணம் செய்த நபர்கள் – வைரல் வீடியோ

திருப்பூரில் தனியார் பேருந்தில் பயணத்தின் போது படியில் அமர்ந்து மது அருந்திச் செல்லும் குடிமகன்கள். சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது. திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து – அனுப்பர்பாளையம் வரை தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு TN 39 BD2626  என்ற பதிவெண் கொண்ட பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது படிக்கட்டில் அமர்ந்தவாறு நான்கு நபர்கள் மது அருந்திச் சென்றுள்ளனர். இதை காரில் சென்ற நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் … Read more

கொஞ்சமா கூடிய தங்கம், வெள்ளி.. இன்றைய நிலவரம்

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.60.90 என நிர்ணயிக்கப்பட்டு கிலோ பார் வெள்ளி ரூ.90,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் வெள்ளி கிராமுக்கு 0.20 காசுகள் உயர்ந்துள்ளது.நேற்று வெள்ளி கிராம் ரூ.60.70 ஆக விற்பனையானது. தங்கத்தை பொறுத்தமட்டில் கிராம் ரூ.5 அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4805 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.38440 ஆக உள்ளது. ஆக சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. 24 காரட் 99.99 தூயத் தங்கம் … Read more

 அரசு மருத்துவர் வீட்டில் 12 சவரன் நகை கொள்ளை..!

புதுக்கோட்டை மாவட்டதில் உள்ள அறந்தாங்கியில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர்கள் ரமேஷ் (வயது39), மாதவி. ரமேஷ் புதுக்கோட்டை பேருந்து நிலையதிற்கு பின்புறம் மொபைல் கடை வைத்துள்ளார். அவரது மனைவி மாதவி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.   இந்நிலையில், நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு ரமேஷ் மனைவியை மருத்துவமனையில் விட்டுவிட்டு, கடைக்கு சென்றுள்ளார். அதனை தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு சாப்பாட்டிற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது,  வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. … Read more

நகைக்கடையில் கவரிங் செயினை வைத்துவிட்டு தங்க நகையை திருடிச் சென்ற திமுக வார்டு செயலாளர்.!

திருச்செந்தூரில் வாடிக்கையாளர் போன்று நகைக்கடைக்கு வந்த திமுக வார்டு செயலாளர், கவரிங் நகையை வைத்து விட்டு தங்க நகையை திருடிச் சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 4 நாட்களுக்கு முன், வடக்கு ரத ரீதியில் உள்ள நகைக்கடைக்கு வந்த பெண்ணிடம் உரிமையாளர் நகை டிசைன்களை காண்பித்துள்ளார். அப்போது ஒரு செயினை எடுத்து மேஜையில் வைத்த பெண், வேறு டிசைன்கள் காண்பிக்கும் படி கூறிய நிலையில், உரிமையாளர் உள்ளே சென்று நகைகளை எடுத்து வருவதற்குள் கவரிங் செயினை மாற்றி … Read more

விதிகளை மீறி ஆம்னி பேருந்துகள் இயக்கம்: உரிமையாளர்களிடம் ரூ.9.65 லட்சம் அபராதம் வசூலிப்பு

தொடர் விடுமுறையின்போது ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. கடந்த சுதந்திர தினத்தையொட்டி அளிக்கப்பட்ட விடுமுறையின்போது ஆம்னி பேருந்துகளில் மும்மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து திடீர் சோதனை நடத்திய போக்குவரத்துத் துறைஅதிகாரிகள், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்ததாக புகாரளித்த 97 பேரிடம், அந்தந்த இடத்திலேயே உரிமையாளர்கள் மூலம் கூடுதல் கட்டணத்தைத் திருப்பி வழங்க வைத்தனர். மும்மடங்கு கட்டணம் இதேபோல் கடந்த 19-ம் தேதிகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தை ஒட்டி பெரும்பாலானோருக்கு ஆக.19, … Read more

நெருங்கும் காவல்துறை? திமுகவில் கரை ஒதுங்கும் வி.சி.ஆறுகுட்டி!

அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அக்கட்சியில் நாள்தோறும் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்து வண்ணம் உள்ளது. குறிப்பாக ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரானது பின்னர் அவசர அவசரமாக ராஜினாமா செய்தது. ஓபிஎஸ் தர்மயுத்தம், ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணி, அதிருப்தி அணி, அமமுக, சசிகலா ஆதரவு என கட்சியின் நிலைப்பாடு என்னவென்று தெரியாமல் உள்ள இடியாப்ப சிக்கலால் தொண்டர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். இதனை சாதமாக பயன்படுத்திக்கொண்ட மத்தியில் ஆளும் பாஜக, மாநிலத்தில் … Read more