மேலக்குறிச்சி -பெரியநெசலூர் சாலையை சீரமைக்க கோரிக்கை

வேப்பூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த மேலக்குறிச்சியிலிருந்து பெரியநெசலூர் கிராமத்திற்கு சாலை உள்ளது. இந்த சாலை பணிக்காக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஜல்லி கற்கள் கொட்டி பரப்பி விடப்பட்டது. ஆனால் இரண்டு மாதங்கள் ஆகியும் சாலை பராமரிப்பு பணி ஏதும் நடைபெறாமல் இருப்பதால் அவ்வழியே செல்லும் சிறுவர்கள், முதியோர்களும், வாகன ஓட்டிகளும்  கரடுமுரடான சாலையில் செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அரசு அதிகாரிகள் மேலக்குறிச்சியிலிருந்து பெரியநெசலூர் செல்லும் சாலையை சீரமைக்க நடவடிக்கை … Read more

குளித்தலை நர்சிங் மாணவி பாலியல் வழக்கு.. கல்லூரி தாளாளருக்கு மேலும் ஒரு வருடம் சிறை!

நர்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு மேலும் ஒரு வருடம் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குளித்தலை ரயில் நிலையம் அருகே பல ஆண்டுகளாக இயங்கி வந்த நர்சிங் கல்லூரியில் பயின்ற மாணவிக்கு கல்லூரி முதல்வரும் வழக்கறிஞருமான செந்தில்குமார் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், செந்தில்குமார் உட்பட உடந்தையாக இருந்த வார்டன் அமுதவல்லி, மகாலட்சுமி ஆகியோர்கள் மீது போக்ஷோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மேலும் ஒரு வருடத்திற்கு … Read more

கல்லூரி மாணவர்கள் இடையே ஆயுத கலாசாரத்தை அனுமதிக்க முடியாது: ரயில்வே காவல்துறை கூடுதல் டிஜிபி வனிதா

மதுரை: கல்லூரி மாணவர்கள் இடையே ஆயுதக் கலாசாரத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என டிஜிபி வனிதா எச்சரித்துள்ளார். மதுரை ரயில்வே காவல் உட்கோட்டத்தில் வேலை பளு காரணமாக காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்குதல், பொதுமக்களை எவ்வாறு அணுகுவது உள்ளிட்ட உளவியல் சார்ந்த ஆலோசனை வழங்கும் கலந்துரையாடல் மதுரை ரயில்வே கோட்ட அலுவலக பகுதியில் வியாழக்கிழமை நடந்தது. ரயில்வே இருப்புப் பாதை காவல்துறை கூடுதல் இயக்குநர் வனிதா தலைமை வகித்தார். ரயில்வே காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் … Read more

எனக்கு பெயில்..உனக்கு ஜெயில்; கெத்தா காலரை தூக்கிய ஓபிஎஸ்!

அதிமுகவில் தலைமை பதவி பஞ்சாயத்து உச்சத்தில் உள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் நீதிமன்ற கதவுகளை தட்டிய நிலையில், அவருக்கு சாதகமான தீர்ப்பு வெளியானது. இந்த தீர்ப்பு அவரது ஆதரவாளர்களுக்கு முதற்கட்டமான வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் அதே சமயம் ஓபிஎஸ்சை நீக்கிவிட்டு தனி ஆவர்த்தனம் செய்யலாம் என திட்டமிட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு நீதிமன்றம் ஆரம்ப நிலையிலேயே சம்மட்டி அடியை கொடுத்துள்ளது. இதனால் அதிமுக விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை … Read more

எதிர்கட்சிகள் பழிச்சொல்லுக்கு பதிலளிக்க எனக்கு நேரமில்லை: முதலமைச்சர் முக ஸ்டாலின்

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆச்சிப்பட்டி பகுதியில் திமுக பொதுக்கூட்டம் மற்றும் மாற்றுக்கட்சியினர் இணையும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, அவரது மகளும் அதிமுக மாவட்ட கவுன்சிலருமான அபிநயா, தேதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனப்பட்டி தினகரன், முன்னாள் பாஜக மாநில மகளிரணிச் செயலாளர் மைதிலி உள்ளிட்டோர் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய … Read more

விவசாய நிலங்களை சேதப்படுத்தி கொடைக்கானலில் ஒற்றை யானை அட்டகாசம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கொடைக்கானல்: கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் தொடந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் ஒற்றை யானையை விரட்ட வேண்டுமென பொதுமக்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் பாரதி அண்ணா நகர், பேத்துப்பாறை, அஞ்சு வீடு உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்கள் உள்ளன. மலைப்பகுதியில் வன விலங்குகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் ஒற்றை யானை நடமாட்டமும் அதிகரித்துள்ளது. மேலும், வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் இந்த யானை, காட்டெருமை, … Read more

`கலப்பு திருமணம் செய்ததற்காக ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதா?’ – நீதிமன்றத்தில் கிடைத்த நீதி!

புதுக்கோட்டை, பொன்னமராவதி நல்லூர் கிராமத்தில் கலப்புத் திருமணம் செய்த 25 குடும்பங்களிடமிருந்து தலைக்கட்டு வரி வசூல் செய்யவும், திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி வழங்க கோரியும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த வேலு என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “எனது கிராமத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் குறிப்பிட்ட சமூகத்தை (பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் ஒரு பிரிவு) சேர்ந்தவர்கள். நல்லூர் கிராமத்தின் தலைவர்களாக (அதே சமூகத்தை சேர்ந்த) பிச்சன், சொக்கலிங்கம், பெருமாள் ஆகியோர் உள்ளனர். நான் மாற்று (பிற்படுத்தப்பட்ட) … Read more

‘திருக்குறள் மொழிபெயர்ப்பில் பக்தி கண்ணோட்டம் நீக்கப்பட்டுள்ளது’ – ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு

டெல்லித் தமிழ்க் கல்விக்கழக மேனிலைப்பள்ளி வளாகத்தில் திருவள்ளுவர் திருவுருவச் சிலையை திறந்து வைத்துப் பேசிய, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, ஜி.யு. போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பில் பக்தி என்ற கண்ணோட்டம் நீக்கப்பட்டுள்ளது என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள தமிழ் கல்விக்கழகம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தரை அடி உயரமும், ஆயிரத்து 500 கிலோ எடையும் கொண்ட இந்த திருவள்ளுவர் சிலையை, வி.ஜி.பி. உலக தமிழ் சங்கத்தின் தலைவர் … Read more

கத்தியால் குத்தப்பட்ட ஆர்.பி.எப் பெண் காவலர் ரயிலில் இருந்து குதித்து தப்பி ஓடிய சிசிடிவி காட்சி.!

சென்னையில்,கத்தியால் குத்தப்பட்ட ஆர்.பி.எப் பெண் காவலர் ஓடும் மின்சார ரயிலில் இருந்து குதித்து தப்பி சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. செவ்வாய் இரவு கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு சென்ற மின்சார ரயிலில் ஆசிர்வா என்ற 29 வயது ஆர்.பி.எப் பெண் காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மகளிருக்கான பெட்டியில் ஏறிய 40 வயது மதிக்கத்தக்க போதை ஆசாமியிடம் இது மகளிருக்கான பெட்டி என ஆசிர்வா கூறியதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அந்த நபர் ஆசிர்வா-வை … Read more

கொடைக்கானல் ஏரி மேம்பாட்டு பணிகளுக்கு தடையில்லை: உயர் நீதிமன்றம்

மதுரை: கொடைக்கானல் ஏரிப் பகுதியில் கட்டிடங்கள் கட்டுவதற்கு தடை கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கொடைக்கானலைச் சேர்ந்த ஆறுமுகவேலன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ”தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமாக கொடைக்கானல் உள்ளது. கொடைக்கானல் ஏரிப் பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் ஏரியை சுற்றி 200 மீட்டருக்குள் எவ்வித கட்டிடங்களும் கட்டக் கூடாது. இப்பகுதியில் ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தக்கூடாது என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விதிமுறையை மீறி கொடைக்கானல் ஏரியைச் … Read more