மறு பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகும் 10 நாட்களாக மருத்துவமனையில் இருக்கும் மாணவி உடல்: சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடல் 10-வது நாளாக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை பெற்றோர் பெற்றுக் கொள்ளாத நிலையில், உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கத்தின் மகள் மதி, சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் கடந்த 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது இறப்பில் சந்தேகம் … Read more

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு… முதியவருக்கு 29 ஆண்டுகள் சிறை

15 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்த குற்றவாளிக்கு 29 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்த போந்தூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 15 வயது சிறுமியை (மனநல வளர்ச்சி குன்றியவர்) கடந்த 2015 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த மண்ணாங்கட்டி (எ) ராஜமாணிக்கம் (70) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார், மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் … Read more

வட சென்னையில் எரிவாயு கசிவு?: ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைப்பு  

திருவொற்றியூர் மற்றும் மனலி பகுதியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட வாசனை வருவது தொடர்பாக ஆய்வு செய்ய தமிழக அரசு 5 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. சென்னை திருவொற்றியூர் மற்றும் மனலி பகுதியில் எரிவாயு கசிவு வாசனை வருவதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்நிலையில் இந்த குழுவில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த இரண்டு விண்வெளி … Read more

#திண்டுக்கல் || மனைவியின் கழுத்தில் கத்திரிக்கோலால் குத்திக் கொன்ற கணவர்.! போலீசார் விசாரணை.!

திண்டுக்கல் மாவட்டத்தில் மனைவியின் கழுத்தில் கத்திரிக்கோலால் குத்தி கொன்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியபட்டி லக்கான் தெருவை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மனைவி கற்பகம்(வயது30). இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கருப்பு சாமிக்கு குடிப்பழக்கம் இருந்ததால், அதனை மறப்பதற்காக ஈரோட்டில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று கையில் கயிறு கட்டி விரதம் இருக்குமாறு குடும்பத்தினர் வற்புறுத்தியுள்ளனர். இதனால் கோவிலுக்கு சென்று கயிறு கட்டி வந்த கருப்புசாமி, நேற்று இரவு மீண்டும் மது … Read more

ஜிஎஸ்டி வரிவிதிப்பு அதிகரிப்பால் ஆவின் பொருட்கள் விலை உயர்வு

சென்னை: ஜிஎஸ்டி வரிவிதிப்பு அதிகரிப்பு காரணமாக ஆவின் பால் தவிர்த்து,இதர நெய், தயிர் உள்ளிட்ட உபபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டி கவுன்சிலின் 47-வதுகூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்படி, பல்வேறு பொருட்களுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில், ஆவின் நிறுவனம் ஜிஎஸ்டி உயர்வைக் காரணம் காட்டி, பால் தவிர்த்து நெய் உள்ளிட்ட உப பொருட்களின் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள் ளது. … Read more

சேலத்தில் மின்னல் தாக்கி கொழுந்துவிட்டு எரிந்த பச்சை மரங்கள்

சேலத்தில் மின்னல் தாக்கியதில் பச்சை தென்னை மரங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக அந்தப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், தலைவாசலில் உள்ள தியாகனூர் ஊராட்சி இந்திரா நகர் காலனி பகுதியைச் சேர்ந்த மல்லிகா (60) என்பவரின் வீட்டின் முன்புறம் இருந்த இரண்டு தென்னை … Read more

காந்திய மக்கள் இயக்கம் இனி காமராஜர் மக்கள் இயக்கமாக செயல்படும்: தமிழருவி மணியன் அறிவிப்பு

சென்னை: காந்திய மக்கள் இயக்கம் இனி காமராஜர் மக்கள் இயக்கமாக செயல்படும் என்று தமிழருவி மணியன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை. நேர்மையும், நாணயமும், நல்லொழுக்கமும் நிறைந்த, ஊழலின்நிழல் கூடப் படியாத, வளர்ச்சிப் பாதையில் மாநிலத்தை முன்னெடுத்துச் சென்ற காமராஜரின் ஆட்சியை மீண்டும் நிலை நிறுத்த தூய்மையான அரசியல் வேள்வியில் நாம் அனைவரும் ஈடுபட வேண்டும் என்பது காலத்தின் தவிர்க்க முடியாத கட்டாயமாகும். 53 ஆண்டுகள் நேர்மை பிறழாமல், ஒழுக்கம் தவறாமல், அரசியலைப் பயன்படுத்தி ஒரு … Read more

100 அடியை எட்டும் பவானிசாகர் அணை – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தொடர் மழை காரணமாக பவானி சாகர் அணை 100 அடியை எட்டுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சி, அப்பர் பவானி ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. பவானி ஆறு மற்றும் மாயாற்று நீரும் அணைக்கு வந்து சேருவதால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை … Read more