போக்குவரத்து ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இழுபறி – இன்று மீண்டும் நடப்பதாக அறிவிப்பு

சென்னை: போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதால், இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தத்தின் 7-ம் கட்ட பேச்சுவார்த்தை, துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மைய வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், போக்குவரத்து துறைசெயலர் கே.கோபால், நிதித் துறைகூடுதல் செயலர் ஜி.கே.அருண்சுந்தர் தயாளன், தொழிலாளர்தனி இணை ஆணையர் லட்சுமிகாந்தன், மாநகர போக்குவரத்துகழக … Read more

சதுரகிரி கோயிலுக்கு செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி

விருதுநகர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

`சாதி மத மோதல்களுக்கு வாய்ப்பிருக்கு…. தடுக்க தயாரா இருங்க’- டிஜிபி சுற்றறிக்கை

காவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் எதிர்வரும் நாட்களில் தயார் நிலையில் இருக்குமாறு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார் தமிழகத்தில் எதிர்வரும் நாட்களில் முக்கிய விழாக்கள், பண்டிகைகள் மற்றும் அரசியல், சாதி மற்றும் மதத் தலைவர்களின் பிறந்த நினைவு நாகள், தொடர்ந்து வரவுள்ள நிலையில், அரசியல் கட்சியினர், சாதி மற்றும் மத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் பங்கேற்பதற்கு வாய்ப்புள்ளது. அப்படி ஏற்படும் போது இருபிரிவினரிடையே மோதல் சம்பவங்கள் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால், தகுந்த பாதுகாப்பு … Read more

விசாரணை முடியும் வரை யாரும் தலைமை அலுவலகம் செல்ல வேண்டாம்; தொண்டர்களுக்கு அதிமுக அறிவுறுத்தல்

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறை தொடர்பாக போலீசாரின் விசாரணை முடியும் வரை தொண்டர்கள் யாரும் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தைப் பார்வையிட செல்ல வேண்டாம் என்று அதிமுக தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. காவல்துறை விசாரணையை முடித்த பிறகு, சேதமடைந்த பொருட்கள், கதவுகள் சரிசெய்யப்பட்டு அதிமுக தலைமை அலுவலகம் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்பட உள்ளது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதையடுத்து … Read more

பிளஸ்-1 துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு – தேர்வுத்துறை அறிவிப்பு.!

11ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 11ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. துணைத்தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. மேலும், 11ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகளை http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு வரும் ஆகஸ்ட் 29 மற்றும் 30-ந் தேத்களில் நேரில் விண்ணப்பிக்கலாம் என … Read more

மீண்டும் மூடும் அபாயத்தில் கொலோன் பல்கலை.யின் தமிழ் பிரிவு – ஜெர்மனியில் இருந்து உதவி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்

புதுடெல்லி: பழம்பெருமை வாய்ந்த கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ் பிரிவுக்கு மீண்டும் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை காக்க உதவிகோரி தமிழக அரசுக்கு அத்துறையின் சார்பில் ஜெர்மனியிலிருந்து கடிதம் எழுதப்பட்டுள்ளது. கடந்த 1963 முதல் ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் துறையில் தமிழ் பிரிவும் செயல்பட்டு வருகிறது. இதை, தமிழால் ஈர்க்கப்பட்டு, தமிழ்பயின்று, அறிஞரான க்ளவுஸ் லுட்விட் ஜெனரட் எனும் ஜெர்மனியர் நிறுவினார். இதில், ஆய்வுக்கான வகையில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழம்பெரும் தமிழ் நூல்களும், ஓலைச்சுவடிகளும் உள்ளன. … Read more

திருத்தணி ஒன்றியத்தில் சுடுகாட்டுக்கு செல்ல பாதை அமைத்து தர கோரிக்கை

திருத்தணி: திருத்தணி ஒன்றியத்தில் உள்ள சுடுகாடுக்கு செல்ல பாதை அமைத்தரவேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். திருத்தணி நகரம் மற்றும் திருவாலங்காடு ஒன்றியத்தில் 47 ஊராட்சிகளில் 90 குக்கிராமங்கள் உள்ளன. அனைத்து கிராமங்களுக்கும் மூன்று மதத்தினருக்கும் தனித்தனியே சுடுகாடு மற்றும் இடுகாடுகள் உள்ளன. இந்த பகுதிகளில் இயற்கை மரணம், விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இறப்பவர்களுக்கு இறுதிச்சடங்கு நடைபெறுவது வழக்கம். தற்போது மழைக்காலம் என்பதால் அனைத்து சுடுகாட்டு பகுதிகளிலும் விஷச்செடிகளும் புதர்களும் மண்டிக்கிடக்கின்றன. இதனால் சடலங்களை எடுத்துக்கொண்டு … Read more

கியூட் சீன் பாத்து 52 நாள் ஆச்சா? இதெல்லாமா எண்ணிட்டு இருக்கீங்க… சீரியல் கலாய் மீம்ஸ்

சின்னத்திரை சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறி இருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சிகளை வைத்து பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவும் இளைஞர்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலகப்போர்கள் வரை அனைத்து நிகழ்வுகளையும் மீம்ஸ்களாக பதிவிடும் நெட்டிசன்கள் தற்போது சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களையும் விட்டு வைப்பதில்லை. சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விடவும் இந்த மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. “தமிழ் … Read more

தமிழகத்தின் உயிர்க்கொல்லி சாலை.. ஒரே நாளில் 8 உயிர்களை காவு வாங்கிய பயங்கரம்..! வாகன ஓட்டிகளே உஷார்..!

சேலம் – உளுந்தூர் பேட்டை நான்குவழி சாலையில் இரு வழிச் சாலையாக மாறும் இடத்தில்  ஆத்தூர் அருகே லாரியை முந்திச்செல்ல முயன்ற ஆம்னி கார் மீது எதிரே வந்த தனியார் பேருந்து பயங்கரமாக மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். ஒரே நாளில் 8 உயிர்களை காவு வாங்கிய உயிர்க்கொல்லி சாலையின் விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு… சேலத்தில் இருந்து உளுந்தூர் பேட்டை வரை செல்லும் சாலையானது ஊர் வரும் பகுதியில் பைபாஸில் … Read more