மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்ட நடிகை சோனாலி கொல்லப்பட்டாரா?.. சகோதரர் புகாரால் பரபரப்பு

பனாஜி: நடிகை சோனாலி போகட்டின் மரணம் இயற்கையானது இல்லை. உணவில் விஷம் வைத்து கொல்லப்பட்டார் என்று அவரது சகோதரர் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். அரியானாவைச் சேர்ந்த நடிகை சோனாலி போகட்(42),  கோவாவுக்கு சுற்றுலா சென்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்றுமுன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவரை பரிசோதித்த டாக்டர்கள் சோனாலி ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என அறிவித்தனர். இதற்கிடையே, சோனாலியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது சகோதரரும், சகோதரியும் புகார் கூறியுள்ளனர். சோனாலி மரணத்திற்கு முன்னால் நடந்த இரவு … Read more

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினிக்கு மீண்டும் பரோல் நீட்டிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பரோலில் உள்ள நளினிக்கு 8-வது முறையாக மேலும் 30 நாட்களுக்கு பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர் நளினி. தனது தாயார் பத்மாவதி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை கவனித்துக்கொள்ள தனக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததை அடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு … Read more

தண்ணீரே இல்லாத இடத்தில் கூட வளரும்; பனைமரங்களை பாதுகாப்பது அவசியம் – யோகா விஜயகுமார்

க.சண்முகவடிவேல் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் ஆற்றங்கரையோரம் ஆயிரம் பனை விதை விதைப்பு பணிகள் திருச்சியில் நடைபெற்றது.  மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் தண்ணீர் கே.சி.நீலமேகம், தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி.சதீஸ்குமார், தண்ணீர் அமைப்பு நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.கே.ராஜா, கன்மலை டிரஸ்ட் வில்பர்ட் எடிசன், அக்னி சிறகுகள் மகேந்திரன், சுகு, நிரோஷ், ஆரிப் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்கள் இந்த பனை விதை விதைப்பு பணியில் ஈடுபட்டனர். பனை … Read more

பாஜகவில் இணைந்த திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர்.!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில், திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் க.பாலமுருகன் பாஜகவில் இணைத்துள்ளார். தமிழகத்தில் முக்கிய கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் திமுகவில் இணைந்து வரும் நிலையில், திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் க.பாலமுருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைத்துள்ளார். திமுகவின் குடும்ப ஆட்சி என்ற சிலந்தி வலையிலிருந்து மீண்டு நமது பாரத பிரதமர் திரு @narendramodi அவர்களின் ஊழலற்ற உன்னதமான மக்களாட்சியால் ஈர்க்கப்பட்டு திருப்பூர் … Read more

“எங்கள் தொகுதிகள் புறக்கணிப்பு” – புதுச்சேரி பேரவையில் பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு

புதுச்சேரி: பாஜக எம்.எல்.ஏ.க்கள், பாஜக ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகள் புறக்கணிப்படுவதாக புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத் தொடரில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தின் மீது எம்எல்ஏக்கள் பேசினர். இதில் சுயேட்சை எம்எல்ஏ அங்காளன் பேசும்போது, ”கடந்த பட்ஜெட்டில் அறிவித்த எதையுமே செய்யாத போது, இந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ள திட்டங்களை எவ்வாறு செய்வீர்கள்? ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல் பட்ஜெட் உரை உள்ளது. கோயில்களில் கமிட்டி போடப்படும் என சொன்னார்கள். கமிட்டி … Read more

நோயாளிகளிடம் பணம் பறிக்கும் அரசு மருத்துவமனை பணியாளர்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம், பணியாளர்கள் பணம் பறிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. ஒட்டன்சத்திரம் மட்டுமின்றி, சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினந்தோறும் சுமார் 500க்கும் மேற்பட்டோர்  வெளி நோயாளிகளாக இங்க வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஊழியர்கள் சிலர், சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக புகார் எழுந்துள்ளது. மேலும் சாலை விபத்து … Read more

தமிழ்நாட்டில் கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகளா? காவல்துறை விளக்க அறிக்கை

கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்துள்ளதாக வரும் செய்திகளுக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கடந்த 22-ம் தேதி 7 கொலைகளும், 23-ம் தேதி 5 கொலைகளும் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில ஊடகங்களால் பட்டியலிடப்பட்டவை ஆகஸ்ட் மற்றும் அதற்கு முந்தைய மாதங்களில் நடந்த நிகழ்வுகள் எனவும், அதில் பெரும்பாலான கொலைகள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தனி நபர்களின் முன் விரோதத்தால் நடந்தது எனவும் தமிழக … Read more

மனைவியிடம் மன்னிப்பு கேட்டு.. தண்டவாளத்தில் தலை வைத்து.. பலியான தி.க நகர தலைவர்..!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாமல், தண்டவாளத்தில் தலைவைத்து தி.க நகர தலைவர் தற்கொலை செய்து கொண்டார். மனைவியிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ பதிவிட்டு உயிரை மாய்த்தவருக்கு வீரவணக்கம் போஸ்டர் ஒட்டப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி சம்பவத்தன்று காலை கூட்ஸ் ரயில் சென்றது திருவெறும்பூர் அருகே உள்ள குமரேசபுரம் அருகே வந்தது. அப்போது தூரத்தில் மர்ம நபர் ஒருவர் ஓடி வந்து தண்டவாளத்தில் … Read more

“இதுதான் சட்டம் – ஒழுங்கை கவனிக்கும் லட்சணமா?” – பட்டியலுடன் முதல்வர் ஸ்டாலின் மீது இபிஎஸ் சாடல்

சென்னை: “தமிழகத்தில் கடந்த 36 மணி நேரத்தில் 15 படுகொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. சட்டம் – ஒழுங்கை நானே நேரடியாக கவனித்து வருகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு கூறினார். இதுதான் அவர் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை கவனிக்கும் லட்சணமா?” என்று சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “இந்த திமுக ஆட்சியில், சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டை கடந்த 15 மாதங்களில் நான் பலமுறை எடுத்துக் கூறியுள்ளேன். … Read more

முல்லை பெரியாறு லோயர்கேம்ப்பிலிருந்து மதுரைக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை எதிர்த்த மனு தள்ளுபடி: இருமாநில விவகாரத்தில் தலையிட முடியாது என ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: முல்லை பெரியாறு லோயர்கேம்பிலிருந்து மதுரைக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் கிளை, இருமாநில விவகாரத்தில் தலையிட முடியாது என கூறியுள்ளது. தேனி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்த பாஜ விவசாய பிரிவு சதீஷ்பாபு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘அம்ருட் திட்டத்தின் கீழ் ரூ.1,020 கோடி செலவில் மதுரை மாநகருக்கு முல்லை பெரியாறின் லோயர்கேம்ப்பில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரும் திட்டப் பணிகள் நடந்து … Read more