கட்சி மாற பேரம் பேசுவதாக பா.ஜ.க மீது குற்றச்சாட்டு; 4 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் குறித்து ஒர் பார்வை

From controversial Somnath to face of protests: 4 MLAs AAP says on BJP watch: கட்சி மாறுவதற்கு பா.ஜ.க உறுப்பினர்கள் ரூ.20 கோடி தருவதாகக் கூறி தங்களை அணுகியதாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ.,க்கள் புதன்கிழமை குற்றம்சாட்டினர். பா.ஜ.க இந்த குற்றச்சாட்டை நிராகரித்த நிலையில், அதை பொய் என்று முத்திரை குத்தி, ஆம் ஆத்மி ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, பா.ஜ.க தனது 35 சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொண்டதாக … Read more

தமிழக மீனவர்கள் 10 பேருக்கு செப்டம்பர் 6ம் தேதி வரை சிறை – இலங்கை நீதிமன்றம் உத்தரவு.!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை வரும் செப்டம்பர் 6-ந்தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் 22-ந்தேதி படகில் மீன்பிடிக்கச் சென்ற 10 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்தது.  அதுமட்டுமில்லாமல் அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. இதையடுத்து தமிழக மீனவர்கள் 10 பேரையும் இலங்கையில் உள்ள திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். … Read more

கஞ்சா கடத்தல் வலைப்பின்னலை வேருடன் அழிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: 750 கிலோ கடத்தல் கஞ்சா பறிமுதல்: கஞ்சா வலைப்பின்னலை வேருடன் அழிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ”தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில், ஆந்திராவிலிருந்து சரக்குந்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள 750 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. காவல்துறையினரின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது. ஆனால், கஞ்சா ஒழிப்புக்கு இது போதுமானது அல்ல. காவல்துறையினரால் பிடிபடும் கஞ்சாவை விட 100 மடங்கு … Read more

அதிமுக வழக்குகள்: சிறப்பு அமர்வில் விசாரிக்க கோரி மனுத்தாக்கல்!

2017 மற்றும் 2021 அதிமுக பொதுக்குழு, செயற்குழு தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்க கோரி மனுதரார்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், முன்னாள் எம்பி. கே.சி.பழனிச்சாமியின் மகன் சுரேன் பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர் அளித்த மனுவில், அதிமுக கட்சி 2017ம் ஆண்டு நடத்திய பொதுக்குழுவை எதிர்த்தும், 2021 டிசம்பரில் செயற்குழு கூட்டத்தில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்ததை எதிர்த்தும், ஒருங்கிணைப்பாளர் – … Read more

தேர்வில் தோல்வி: பள்ளி மாணவி தற்கொலை, புதுக்கோட்டையில் பரிதாபம்

படிப்பு, அழுத்தம், ஏழ்மை ஆகிய பல காரணங்களால் மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது இந்நாட்களில் அதிகரித்து வருகிறது. இது ஒரு சமூகமாக நாம் கவலைக்கொள்ள வெண்டிய, கூர்ந்து கவனிக்க வேண்டிய, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. தினம் தினம் தொடந்து தற்கொலை பற்றிய செய்திகள் வருவது மனதை பதபதைக்க வைக்கிறது. உலகில் காலூன்றி வாழ்ந்து, வென்று கட்ட வேண்டிய சிறுவர் சிறுமிகளும், இளைஞர்களும் தோல்வியை தழுவிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வது வேதனை … Read more

மடவாமேடு கடலில் அதிகம் கிடைக்கும் சூரைமீன்கள்; கிலோ ரூ.40 முதல் ரூ.75 வரை விற்பனை.!

கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள கடலோர மீனவ கிராமம் மடவாமேடு. இந்த கிராமத்திலிருந்து தினமும் பைபர் படகுகள் மூலம் மட்டுமே மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். சுமார் 500 மீனவர்களின் குடும்பங்கள் இங்கு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தினந்தோறும் 350 பைபர் படகுகள் மூலம் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். மடவாமேடு கிராமத்தில் கடலில் பிடிக்கப்படும் மீன்களை வெளியூர்களிலிருந்து வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர். சில்லறை விற்பனையும் நடைபெற்று … Read more

Tamil news today live : அதிமுக பொதுக்குழு விவகாரம் – உயர் நீதிமன்றத்தில் ஈபிஎஸ் மனு மீது விசாரணை தொடங்கியது

Go to Live Updates பெட்ரோல் – டீசல் விலை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் லிட்டர் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பில்கிஸ்பானு வழக்கு பில்கிஸ்பானு வழக்கில் குற்றவாளிகளான 11 பேர் கடந்த ஆகஸ்டு 15ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த தீர்ப்பு அநீதியின் உச்சம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பில்கிஸ் பானுவின் தரப்பில் உச்சநீதிமன்றம் மேல்முறையீடு … Read more

மாணவர் நலனுக்காக பின்வாங்குவதில் தவறில்லை: அன்பில் மகேஷ் கருத்து

ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில், பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் தலைமைப் பண்பு மேம்பாட்டுக்காக மாநில அளவிலான 6 நாள் உண்டு, உறைவிட கருத்தாளர் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில்தான் தலைமை ஆசிரியர்களுக்கு இதுபோன்று உண்டு, உறைவிடப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்திட்டத்துக்காக ஒன்பதரை … Read more

திரையிலும் சரி… நிஜத்திலும் சரி… எப்பவும் விஜயகாந்த் தான்; ட்விட்டரில் தெறிச்ச ரசிகர்கள்!

என்றதும் கேப்டன், தமிழ் திரைப்படங்களில் அசத்தலான நடிகர், நடிகர் சங்கம் பட்ட கடனை எல்லாம் தீர்த்தவர், வாரி வாரி கொடுத்த வள்ளல், தைரியமான அரசியல்வாதி, கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும் போதே துணிச்சலான அரசியல் செய்தவர், தமிழக சட்டப்பேரவையில் அதகளப்படுத்திய பேச்சு உள்ளிட்டவை பலருக்கும் நினைவுக்கு வரும். இவரது 70வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ட்விட்டரில் ஏராளமானோர் பிறந்த நாள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

அமைச்சர் பொய்யாமொழி குறித்து சர்ச்சை: நாளேட்டை எரித்து ஆர்ப்பாட்டம்

அமைச்சர் பொய்யாமொழி குறித்து சர்ச்சை: கோவையில் பிரபல தனியார் நாளேடு ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படும். தற்போது வெளியாகி உள்ள அந்த நாளேட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடைய புகைப்படத்துடன் கூடிய கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது. அந்தவகையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறித்து சர்ச்சைக்குரிய செய்திகளை வெளியிட்டதாக அந்த நாளேட்டை எரித்து கோவையில் உதயநிதி ஸ்டாலின் மன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மாதந்தோறும் வெளியிடப்படும் பிரபல தனியார் நாளேட்டில் பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் … Read more