ரெட்டமங்கலம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்; சுந்தர் எம்எல்ஏ வழங்கினார்

உத்திரமேரூர்:  உத்திரமேரூர் அருகே ரெட்டமங்கலம் அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை க.சுந்தர் எம்எல்ஏ  வழங்கினார். உத்திரமேரூர் அடுத்த ரெட்டமங்கலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசினர் ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில், ஒன்றியக்குழு துணை பெருந்தலைவர் வசந்திகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சிவராமன், சாலவாக்கம் ஒன்றிய துணை செயலாளர் அமுதா தமிழ்வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். … Read more

”சிஸ்டமிக் ஸ்களிரோசிஸ் என்ற புது வகை நோயால் பாதிக்கப்பட்ட பெண்” – முதல்வருக்கு கோரிக்கை

சிஸ்டமிக் ஸ்களிரோசிஸ் என்ற புது வகை நோயால் நுரையீரல் பாதிக்கப்பட்டு படிப்பை பாதியில் நிறுத்தி உயிருக்கு போராடும் இளம்பெண் சிகிச்சைக்காக தமிழக முதல்வரிடம் உதவி கேட்டு உருக்கமாக வேண்டுகோள் விடுத்த வத்தலகுண்டு பெண். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவை சேர்ந்தவர் அன்னக்கொடி. இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார் இவரது மனைவி பாண்டீஸ்வரி. இவர்களுக்கு செந்தூர் என்ற மகனும், ஜமுனா என்ற மகளும் உள்ளனர். ஜமுனாவுக்கு தற்போது 17 வயது ஆகிறது. ஜமுனா ஒன்பதாம் வகுப்பு … Read more

ம.தி.மு.க- நாம் தமிழர் மோதல் வழக்கில் சீமான் விடுதலை

திருச்சி விமான நிலையத்தில் 2018-ம் ஆண்டு மதிமுக – நாம் தமிழர் கட்சியினர் மோதிக்கொண்ட வழக்கு தொடர்பாக திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுதலை செய்யப்பட்டார். இரு தரப்பும் சமரசம் செய்துகொண்டதால் வழக்கை நீதிபதி சிவகுமார் முடித்து வைத்தார். தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் செல்வதற்காக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 19-ம் தேதி சென்னையில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் … Read more

மக்கள் பிரச்சினைகளுக்காக நீதி கிடைக்கும் வரை தேமுதிக போராடும்: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: “மின் கட்டண உயர்வு உள்ளிட்ட என அனைத்து பிரச்சினைகளிலும், தேமுதிகதான் முதல் ஆளாக களத்தில் இறங்கி அனைத்து போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். இனியும் மக்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும் முதல் ஆளாக இருந்து மக்களுக்கு ஒரு நீதி கிடைக்கும்வரை போராடுவோம்” என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. கட்சி அலுவலகம் வந்த நிறுவனத் தலைவர் விஜயகாந்திற்கு கட்சி … Read more

கொளுத்தி போட்ட ஆளுநர் ரவி; கொந்தளிக்கும் கிறிஸ்தவர்கள்!

ஒரே பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உண்மையாகி விடும் என்ற பேச்சு பரவலாக உள்ளது. அதை தான் தற்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செய்து கொண்டு இருக்கிறாரோ? என, பலரும் சந்தேகப்படும் வகையில் இருக்கிறது அவரது சமீபத்திய நடவடிக்கைகள். அதாவது, கோயம்புத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கடந்த ஜனவரி மாதம் நடந்த சர்வதேச திருக்குறள் மாநாட்டில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது,‘தமிழகம் புண்ணிய பூமி, ஆன்மிக பூமி. இங்கு … Read more

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16,000 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக லேசான மழை பெய்து வருவதால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் கடந்த இரண்டு நாட்களாக 14 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை நீடிக்கிறது. மேட்டூர் அணைக்கு கடந்த … Read more

வரி வசூலில் முன்னாள் ராணுவ வீரர்கள் முறைகேடு.. புதிய தலைமுறை களஆய்வில் அதிர்ச்சி!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாநிலம் மற்றும் மாவட்ட எல்லைகளில் வசூலிக்கப்படும் பசுமை நுழைவு வரி மற்றும் சுங்க நுழைவு வரியில் முறைகேடு செய்திருப்பது புதிய தலைமுறையின் கள ஆய்வில் ஆதாரங்களோடு தெரிய வந்திருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பர்லியாறு, கக்கநல்லா சோதனை சாவடிகளில் பசுமை நுழைவு வரியும், குஞ்சபன்னை, நாடுகாணி, சோலாடி, பாட்டவயல், தாளூர் உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் சுங்கநுழைவு வரியும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணியை மேற்கொள்ளும் முன்னாள் ராணுவத்தினர், பசுமை நுழைவு வரியை மாவட்ட ஆட்சியர் அலுவலக வங்கிக் கணக்கிலும், சுங்க நுழைவு வரியை அந்தந்த பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக  அலுவலர்களிடமும் … Read more

சினிமா முதல் ‘ப்ரீ வெட்டிங்’ ஷூட் வரை – பரபரப்புக்கும் சுற்றுலா ஸ்பாட் ஆன மதுரை தெப்பக்குளம்

மதுரை: மதுரை தெப்பக்குளம் தண்ணீர் நிறைந்து ரம்மியமாக காணப்படுவதால், அதன் பின்னணியில் சினிமா ஷூட்டிங் முதல் ப்ரீ வெட்டிங் ஷூட் வரை அடிக்கடி நடக்கிறது. வைகை நதி கரையும், அதனுடன் தொடர்புடைய நீர்நிலைகளும் தமிழர் நாகரிகத்தின் பெருமையாக கருதப்படுகின்றன. சங்க கால இலக்கியம் முதல் சமகால வரலாற்று புத்தகங்கள் வரை போற்றிவரும் மதுரை நதி கரையில் அமைந்துள்ள வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளமும் வரலாற்று சிறப்பு பெற்றது. அதனால், இந்த தெப்பக்குளம் மதுரையின் முக்கிய சுற்றுலா தலங்களில் … Read more

ஸ்டாலின் ஐயா… நீங்கதான்யா எங்க குலசாமி… தான்யாவின் தாய் நன்றி கண்ணீர்..!

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சவீதா மருத்துவமனையில் முகச்சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்த சிறுமி தான்யாவுக்கு தமிழக முதல்வரின் உத்தரவின் படி முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. சிகிச்சைக்கு பிறகு மருத்துவர்களின் அறிவுரைப்படி சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், சிறுமியை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை என்றும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சிறுமி தான்யாவின் தொகுதியான மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் … Read more

மேலக்குறிச்சி -பெரியநெசலூர் சாலையை சீரமைக்க கோரிக்கை

வேப்பூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த மேலக்குறிச்சியிலிருந்து பெரியநெசலூர் கிராமத்திற்கு சாலை உள்ளது. இந்த சாலை பணிக்காக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஜல்லி கற்கள் கொட்டி பரப்பி விடப்பட்டது. ஆனால் இரண்டு மாதங்கள் ஆகியும் சாலை பராமரிப்பு பணி ஏதும் நடைபெறாமல் இருப்பதால் அவ்வழியே செல்லும் சிறுவர்கள், முதியோர்களும், வாகன ஓட்டிகளும்  கரடுமுரடான சாலையில் செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அரசு அதிகாரிகள் மேலக்குறிச்சியிலிருந்து பெரியநெசலூர் செல்லும் சாலையை சீரமைக்க நடவடிக்கை … Read more