#Breaking: தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.! 

வருகின்ற செப்டம்பர் 8-ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கேரள மக்கள் மற்றும் மலையாள மொழி பேசுகின்ற தென் தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடும் பாரம்பரிய பண்டிகை தான் ஓணம். இது பத்து நாட்கள் வண்ண பூக்களை கொண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்ற பண்டிகை.  அந்த வகையில் இந்த வருடம் ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கி, வரும் செப்டம்பர் எட்டாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. … Read more

கரூர் புத்தகத் திருவிழா அரங்கினுள் புகுந்த மழை வெள்ளம்: புத்தகங்கள் சேதம், சேறும் சகதியுமான பாதை

கரூர்: கரூர் புத்தகத் திருவிழா அரங்கினுள் மழை வெள்ளம் புகுந்ததால் ஏராளமான புத்தகங்கள் சேதமடைந்தன. அரங்கினுள் செல்லும் பாதை சேறும், சகதியுமாக மாறியது. இதனால் இன்று (ஆக. 27) காலை பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக கரூர் திருமாநிலையூரில் அமைக்கப்பட்டுள்ள புத்தகத் திருவிழா அரங்கில் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் ஏராளமான புத்தகங்கள் மழை, வெள்ள நீரில் நனைந்து நாசமாகின. கரூர் திருமாநிலையூரில் புதிய … Read more

வழக்குப்பதிவு செய்ய லஞ்சம் கேட்ட போலீஸ்: துணை ஆணையர் விசாரிக்க உத்தரவு!

புகார் மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்சம் கேட்ட சென்னை புது வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் மீதான புகாரை துணை ஆணையர் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த வி.சுதாகர் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அடகு நகைகளை மீட்க வேண்டுமென கூறி தனது நண்பர் மோகன் 2 லட்சம் ரூபாயை கடனாக பெற்றதாகவும், கடனை திரும்ப கேட்டபோது கவரிங் சங்கிலியை கொடுத்து … Read more

ரோபோட்டிக்ஸ் துறையை ஆராய வேண்டும் – மத்திய அமைச்சர்

ஆந்திர மாநிலம் சித்தூர் ஸ்ரீ சிட்டி இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஐந்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய கல்வித் துறை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் மற்றும் கணேசன் கண்ணபிரான் ஐஐஐடி ஸ்ரீ சிட்டி சித்தூர் இயக்குநர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஸ்ரீ சிட்டி இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஐந்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா சித்தூரில் உள்ள  ஸ்ரீசிட்டி ஐஐஐடி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய கல்வித் துறை அமைச்சர் டாக்டர் சுபாஷ் … Read more

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிள்ளையார்பட்டியில் இன்று மாலை கஜமுக சூரசம்ஹாரம்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில்  சதுர்த்தி பெருவிழாவையொட்டி இன்று மாலை கஜமுக சூரசம்ஹாரம் நடக்கிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் உலக பிரசித்தி பெற்ற  கற்பகவிநாயகர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு ஆக. 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஸ்ரீகற்பகவிநாயகர் கோயிலில் கடந்த ஆக.22ம் தேதி கொடியேற்றத்துடன் முதல்நாள் விழா துவங்கியது. 2ம் … Read more

மைனர் பெண்ணை காதலித்து திருமணம் செய்த இளைஞர் மீது போக்சோ வழக்கு – நீதிமன்றம் புதிய உத்தரவு

மைனர் பெண்ணை காதலித்து திருமணம் செய்ததாக, இளைஞருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கை ரத்துசெய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் செல்வபுரத்தை சேர்ந்த சூரஜ் என்பவர் அதேப் பகுதியைச் சேர்ந்த பெண்ணை கடந்த 2019-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு குழந்தையும் பிறந்துள்ளது. திருமணத்தின் போது அந்தப் பெண் 18 வயதை பூர்த்தி அடையவில்லை எனக் கூறி, பெண்ணின் தாயார் அளித்த புகார் காரணமாக சூரஜ் மீது, … Read more

மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் 2023 ஜனவரி வரை நீட்டிப்பு

கோவை: மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் இயக்கத்தை 2023 ஜனவரி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே வியாழக்கிழமையும், மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி இடையே வெள்ளிக்கிமைதோறும் வாராந்திர சிறப்பு ரயில்கள் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி முதல் இயக்கப்பட்டு வந்தன. பொள்ளாச்சி, பழநி வழியாக தென்மாவட்டங்களுக்கு இரவு நேரத்தில் இயக்கப்பட்ட முதல் ரயில் இதுவாகும். எனவே, இந்த ரயிலுக்கு தொடக்கம் முதலே சிறப்பான வரவேற்பு இருந்தது. இந்நிலையில், திருநெல்வேலி … Read more

‘சந்தோஷமா இருக்கேன்… பிரச்சினையை பேசி தீர்த்துட்டோம்’: போக்சோ வழக்கு ரத்து!

கோவை மாவட்டம் செல்வபுரத்தை சேர்ந்த சூரஜ் என்பவர் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை கடந்த 2019ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு குழந்தையும் பிறந்துள்ளது. ஆனால், திருமணத்தின் போது அந்த பெண் 18வயதை பூர்த்தி அடையவில்லை எனக் கூறி, பெண்ணின் தாயார் அளித்த புகார் காரணமாக சூரஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சூரஜ் தாக்கல் செய்த … Read more

மேல்மலையனூரில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்; கொட்டும் மழையிலும் ஏராளமானோர் தரிசனம்

மேல்மலையனூர்: மேல்மலையனூரில் ஆவணி மாத அமாவாசையையொட்டி நேற்றிரவு நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் அங்காளம்மன் காஞ்சி காமாட்சி அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் எராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி ஆலயம் உள்ளது. இங்கு வீற்றிருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மனை தமிழக பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் ஏராளமானோர் தங்கள் குலதெய்வமாக கொண்டு நாள்தோறும் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். … Read more

பள்ளி, கல்லூரி வளாகத்தில் போதைப்பொருள் பயன்பாடு இருந்தால்.. காவல்துறையினரின் எச்சரிக்கை

கோவையில் பள்ளி, கல்லூரி வளாகங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில் போதைப் பொருட்கள் விற்பனை அல்லது அதனது உபயோகம் குறித்து தகவல் தெரிந்தும், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்தால், பள்ளி தலைமையாசிரியர் அல்லது கல்லூரி முதல்வர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாநகரில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பள்ளி, கல்லூரிகள் மாணவர்கள் பலரும் கஞ்சா உபயோகத்தில் … Read more