இலங்கையிலிருந்து 3 குழந்தைகள் உட்பட 8 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை

ராமேஸ்வரம்: இலங்கை திரிகோணமலை, யாழ்பாணம் பகுதியை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 8 இலங்கை தமிழர்கள் இன்று அதிகாலை தனுஷ்கோடி வந்திறங்கினர். இவர்களிடம் ராமேஸ்வரம் மரைன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இலங்கை யாழ்பாணம் சாவடி பகுதியை சேர்ந்த கார்த்திக் (26), ரத்தினம் ரஞ்சித் (59), இதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் கீதாகுமாரி (27), இவரது குழந்தைகள் துவாரகன் (6), நிரஞ்சன் (2), திரிகோணமலையை சேர்ந்த ராமன தபிலேந்தகுமாரி (32), இவரது மகள் மித்ரா (2) மற்றும் … Read more

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவை தொட்டுள்ளது நெல் உற்பத்தி – தமிழக அரசு

தமிழகத்தில் நெல் உற்பத்தி முன் எப்போதும் இல்லாத அளவை தொட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2021-2022 ஆம் ஆண்டில் தமிழகத்தில் சுமார் 1.22 கோடி மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த 2014-15 ஆம் ஆண்டில் 1.20 கோடி மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டதே சாதனையாக இருந்தது. நெல் சாகுபடி செய்யப்படும் பரப்பளவும் 22 லட்சம் ஹெக்டேரை தாண்டியுள்ளது. கடந்த 2020-21 ஆம் ஆண்டில் நெல் சுமார் 20 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்தது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

சென்னையில் செப்டம்பருக்குள் 80% மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெறும்: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் வரும் செப்டம்பருக்குள் 80 சதவீதம் நிறைவு பெறும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “கொசஸ்தலை பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை 2023-ம் ஆண்டில்தான் முடிக்க வேண்டும். ஆனால், அதில்கூட 60 முதல் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது. சென்னை மாநகரின் உள்பகுதிகளில் நடைபெற்று … Read more

சண்டை செய்யும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்: என்ன செய்யபோகிறார் ஸ்டாலின்?

அரசியல் கட்சிகள் இலவசங்கள் கொடுப்பது பற்றி இந்தியா முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. அண்மையில், ஹரியானா மாநிலம் பானிபட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, சுயநலம் கொண்ட இலவச அறிவிப்புகள் நாடு தன்னிறைவு பெறுவதற்கு தடையாக இருக்கும் என்றும் வரி செலுத்துவோருக்கு மேலும் சுமையாக இருக்கும் என்றும் கூறியிருந்தார். அதேபோல், பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகளுகு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். இதனிடையே, இலவசங்கள் குறித்து தமிழக நிதியமைச்சர் … Read more

நிலச்சரிவுகளை தடுக்க புதிய தொழில்நுட்பம்… இனி கவலை இல்லை!

மலை மாவட்டமான நீலகிரியில் மழைக்காலங்களில் கனமழை காரணமாக நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே மண் சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்படுவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.  மேலும் மழைக்காலங்களில் வாகன ஓட்டிகளும் அச்சத்துடனே வாகனத்தை இயக்க வேண்டிய நிலையில் நிலவி வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்ட மலைப்பாதைகளில் ஏற்படும் நிலச்சரிவுகளை தடுக்கும் விதமாக மாவட்ட நெடுஞ்சாலை துறை சார்பாக புதிய முறை ஒன்று கடந்த ஆண்டு  செயல்படுத்தப்பட்டது. அதன்படி நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்களை கண்டறிந்து அந்த இடத்தில் 5 … Read more

மனிதாபிமானமில்லாத கண்டக்டர்; மூளைவளர்ச்சியற்ற மகனை ஒன்றரை கி.மீ., தூக்கி வந்து மனு அளித்த தந்தை

கிருஷ்ணகிரி: பஸ் கண்டக்டர் நடுவழியில் இறக்கிவிட்டதால் மூளை வளர்ச்சியற்ற, 16 வயது மகனை ஒன்றரை கி.மீ., தூரம் தூக்கி வந்து கலெக்டர் அலுவலகத்தில் சிறுவனின் தந்தை மனு அளித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டப்பள்ளி அடுத்த பேகேப்பள்ளியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வாணிஸ்ரீ, மற்றும் மூளைவளர்ச்சியற்ற, தன், 16 வயது மகன் ஹரிபிரசாத்துடன் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க கிருஷ்ணகிரிக்கு பஸ்சில் வந்துள்ளார். அப்போது அவரை பஸ் கண்டக்டர்‘ பஸ் கலெக்டர் … Read more

“பயிற்சி மருத்துவர் செலுத்திய ஊசியால் பிரசவம் ஆன எனது மகள் மரணம்” – தாய் அதிர்ச்சி புகார்

பயிற்சி மருத்துவர் செலுத்திய ஊசியின் காரணமாகவே பிரசவம் நடந்த தனது மகள் உயிரிழந்ததாகவும், உடலை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்ய உத்தரவிடக்கோரி தாய் ஒருவர் தொடர்ந்த வழக்கில், அரசுத்தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க மதுரைக்கிளை உத்தரவுப் பிறப்பித்துள்ளது. தேனி கண்டமனூரைச் சேர்ந்த பூங்கொடி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், “எனது மகள் கனிமொழிக்கு கடந்த 2012-ல் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகள் மீண்டும் கருவுற்ற நிலையில் தேனி, ராஜதானி … Read more

டாக் ஓனர் முகம் தெரிகிறதா? 15 செகண்டில் கண்டுபிடிச்சா உங்க ஐ.க்யூ அதிகம்!

ஆப்டிகல் இல்யூஷன் தந்திரமானவை.  சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு புயல்போல தாக்கி வருகிறது. சில குழப்பமான படங்கள்’ இதை மிகவும் சுவாரஸ்யமாகவும், சில சமயங்களில் சவாலாகவும் ஆக்குகின்றன. அந்தவகையில் இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் மிகவும் சுவாரசியமானது. கீழே உள்ள தந்திரமான புதிர் படம் 1880களில் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டது. ஆனால் இந்த ஓவியத்தில் நீங்கள் பார்ப்பது வெறும் நாய் மட்டும் அல்ல, இதில், நாய் உரிமையாளரின் முகமும் மறைந்திருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பது தான் உங்களுக்கான … Read more

“குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000… அறிவிப்பை வெளியிடுங்கள்” – புதுச்சேரியை முன்வைத்து வலியுறுத்தும் அன்புமணி

சென்னை: திமுக அரசு பதவியேற்று இரு நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விட்ட நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகைக்கான வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று புதுச்சேரி பட்ஜெட்டை முன்வைத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “புதுச்சேரியில் 21 வயது முதல் 57 வயது வரையிலான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. … Read more

நானும் மதுரைக்காரந்தேன்: பரபரக்கும் பிடிஆர்..!

தமிழக நிதியமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நியமனம் செய்யப்பட்டபோதே, இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அவர் பேசுபொருளானார். பொருளாதாரத்தில் அவர் கொண்டிருந்த அனுபவம் காரணமாக கட்சியில் சீனியர்கள் பலர் இருந்தபோதும், பிடிஆருக்கு நிதியமைச்சர் பொறுப்பு கொடுத்த முதல்வர் ஸ்டாலினை பலரும் பலரும் பாராட்டினர். அதற்கு ஏற்றாற்போல், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் தனது பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். சமூக வலைதளங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறார். ஆனால், ஆரம்பம் முதலே பழனிவேல் தியாகராஜன் பாஜக மற்றும் ஒத்த சிந்தனையுடையவர்களால் கடுமையான … Read more