அமைச்சர் கார் மீது காலணி வீச்சு விவகாரம்: பாஜகவினர் மன்னிப்பு கோர உத்தரவு 

மதுரை: மதுரையில் அமைச்சர் கார் மீது காலணி வீசிய வழக்கில் பாஜகவினர் 3 பேரின் முன்ஜாமீன் மனு மீது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. பாஜகவினர் மன்னிப்பு கோர நீதிபதி உத்தரவிட்டார். காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வின் போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசி தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பான வழக்கில் பாஜகவை சேர்ந்த குமார், பாலா, … Read more

திமுக வில் அடுத்தடுத்து இணையும் கொங்கு மண்டல முக்கிய புள்ளிகள் … சரிகிறதா அதிமுக கோட்டை..?

நான்கு நாள் பயணமாக கொங்கு மண்டலத்திற்கு விசிட் செய்து வருகிறார். கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலதை சார்ந்த மாற்று கட்சியினர் திமுகவில் இன்று இணைந்தனர். சுமார் 50 ஆயிரம் மாற்று கட்சியினர் திமுகவில் இன்று இணைந்தனர். இந்த கூட்டத்தை முன்னின்று ஏற்பாடு செய்தவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. இதில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியை வரவேற்கிறேன் திமுகவில் இணைந்து கொண்ட முன்னாள் பாஜக உறுப்பினர் மைதிலி … Read more

கட்டைக் காலுடன் வாகன திருட்டில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளி

ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் வாகன திருட்டு தொடர்பாக காவல்துறைக்கு புகார் சென்றது. இது தொடர்பாக சிசிடிவி கேமராக்களை ஆய்வு மேற்கொண்ட காவல்துறையினர், ஒரு வலது கால் இல்லாமல் கட்டைக்காலுடன்  இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் ஈடுப்பட்டதை கண்டுபிடித்தனர். அதேநபர் துலுக்கானும் தோட்டம், அனகாபுத்தூர், ஒரகடம், ஆகிய இடங்களிலும் வாகன திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து இராயப்பேட்டை குற்றப்பிரிவு ஆய்வாளர் பசுபதி தலைமையில், உதவி ஆய்வாளர் ராஜேந்திரன்,  தலைமை காவலர் மாரி முன்னிலையிலும்  தனிப்படை  அமைத்து  … Read more

மெயினருவி, ஐந்தருவியில் குளிக்க தடை: குற்றாலத்தில் விடிய விடிய சாரலால் வெள்ளப்பெருக்கு

தென்காசி: குற்றாலத்தில் விடிய விடிய பெய்த சாரல் மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கேரளாவில் இம்மாதம் 23 மற்றும் 24 ஆகிய இரண்டு தினங்கள் அதிக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், கடந்த 2 தினங்களாக குற்றாலம் பகுதிகளில் சாரல் பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் சாரல் … Read more

கள்ளக்குறிச்சி: மாணவியின் ஜிப்மர் மருத்துவ அறிக்கையை வழங்க நீதிமன்றம் மறுப்பு… ஏன்?

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பாக ஜிப்மர் மருத்துவ அறிக்கையை மாணவி தரப்பு வழக்கறிஞர்களிடம் தர விழுப்புரம் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியார் பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பாக, மருத்துவ அறிக்கைகள் மற்றும் ஆய்வறிக்கையை கேட்டு மாணவி தரப்பு வழக்கறிஞர்கள் விழுப்புரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இன்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற இரண்டாவது பிரேதப் பரிசோதனையை அறிக்கையை மட்டும் அவர்களிடம் வழங்கினார். மேலும் … Read more

செம்பருத்தி பார்வதியின் அடுத்த சீரியல் இதுவா? எதிர்பார்ப்பை எகிற வைத்த புகைப்படம்

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. இதை கருத்தில் கொண்டு சேனல்கள் அவ்வப்போது புதிய சீரியல்களை களமிறக்கி வருகின்றனர். மேலும் பழைய சீரியல்களையும் சுவாரஸ்யத்துடன் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஜீ தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட செம்பருத்தி சீரியல் ரசிகர்களின் ஆதரவுடன் தொடர்ந்து 5 ஆண்டுகள் ஒளிபரப்பானது. விஜே அக்னி, ஷபானா, பிரியா ராமன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல … Read more

கடந்த 36 மணி நேரத்தில் 12 படுகொலை தான் நடந்திருக்கு – தமிழக காவல்துறை விளக்கம்!

கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி அறிக்கை விடுத்திருந்த நிலையில், 12 கொலைகள் தான் நடந்துள்ளதாக தமிழக போலீஸ் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியான அந்த அறிக்கையில், “கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்ததாக சில ஊடகச் செய்திகளில் மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் 2208.2022 அன்று 7 கொலைகளும், 23.08.2022 அன்று 5 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளது. சில ஊடகங்களில் பட்டியிலிடப்பட்ட பல்வேறு … Read more

பத்து மாதங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடலை மீட்க கிணற்றில் உள்ள நீரை இறைத்து வரும் போலீசார்.!

மாமூல் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் பத்து மாதங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடலை மீட்க கிணற்றில் உள்ள நீரை போலீசார் இறைத்து வருகின்றனர். குன்றத்தூர் அடுத்த எருமையூர் பகுதியை சேர்ந்தபிரகாஷ் என்ற ரவுடிக்கும், கருத்து என்ற ரவுடிக்கும் மாமூல் வாங்குவதில் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மறைமலை நகரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பிரகாஷ் சென்றபோது கருத்துவும் அவனது கூட்டாளிகளும் சேர்ந்து பிரகாஷை தூக்கி சென்று மண்ணிவாக்கம் பகுதியில் … Read more

“திமுக அரசை விமர்சிக்க யோக்கியதை கிஞ்சிற்றும் கிடையாது” – அதிமுகவை சாடிய முதல்வர் ஸ்டாலின்

கோவை: “சொந்தக் கட்சிக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியில், தங்களது கையாலாகாத்தனத்தை மறைப்பதற்கு, திசை திருப்புகிற நோக்கத்தோடு திமுக அரசை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். திமுக அரசை விமர்சிப்பதற்கு தகுதியோ, யோக்கியதையோ, கிஞ்சிற்றும் கிடையாது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுகவையே அவர் சாடியது தெளிவு. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கோயம்புத்தூர் மாவட்டம், ஈச்சனாரியில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். … Read more

திமுக அரசை விமர்சிப்பதற்கு தகுதியோ, யோக்கியதையோ அவர்களுக்கு கிடையாது..!- அதிமுகவை சாடிய ஸ்டாலின்..!!

நான்கு நாள் பயணமாக ஸ்டாலின் கொங்கு மண்டலத்திற்கு விசிட் செய்து வருகிறார். கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலதை சார்ந்த மாற்று கட்சியினர் திமுகவில் இன்று இணைந்தனர். சுமார் 50 ஆயிரம் மாற்று கட்சியினர் திமுகவில் இன்று இணைந்தனர். பொள்ளாச்சியில் ஆச்சிபட்டி திடலில் இதற்கான விழா நடந்து வருகிறது.புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய … Read more