#BREAKING : தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ஆங்காங்கே நல்ல மழை பெய்து வந்த நிலையில், கடந்த வாரத்தில் சற்று மழை குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் தமிழகத்துக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.  அதன்படி, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று  முதல் நாளை மறுதினம் (ஆகஸ்ட் 26) வரையிலான … Read more

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு புதிய அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படுவது எப்படி? – தமிழக அரசு விளக்கம்

சென்னை: “போக்குவரத்து தொழிலாளர்களுக்கான அடிப்படை ஊதியத்தை பேமேட்ரிக்ஸில் பொருத்தி 5 சதவீதம் உயர்வு அளித்து கணக்கீடு செய்து புதிய அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்” என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். சென்னை குரோம்பேட்டையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், 14-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்பின்னர், அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது அவர் கூறியது: “போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பான 13-வது ஒப்பந்தம், 4.1.2018 அன்று … Read more

சாலையோரம் வீசப்படும் பச்சிளம் குழந்தைகள் – உண்மையில் இதன் உளவியல் பிரச்சனைகள்தான் என்ன ?

நல்லதாங்காள் கதையில் இருந்து தொடங்குவோம். கடும் வறுமை, பசி, பட்டினி காரணமாக தான் பெற்ற 7 குழந்தைகளையும் பாழங்கிணற்றில் தூக்கிப்போட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்கிறாள் நல்லதாங்காள். இன்றும் பல கிராமங்களில் நல்லதாங்காள் கதை பேசப்பட்டு வருகிறது. சில கிராமங்களில் அவர் நாட்டார் வழிபாட்டுத் தெய்வமாகவும் இருந்து வருகிறாள்.  இந்தக் கதையை நவீன யுவகத்தில் நின்றுகொண்டு கேட்பவர்கள், அத்தனைக் குழந்தைகளையும் கொல்ல நல்லதாங்காளுக்கு உரிமை உண்டா ? என்று கேட்கிறார்கள். இன்றும் கணவனைத் தாண்டிய காதலனுக்காக, பணத்திற்காக, … Read more

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான ஜிப்மர் மருத்துவக்குழு அறிக்கையை வழங்க இயலாது என விழுப்புரம் நீதிமன்றம் மறுப்பு.!

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான ஜிப்மர் மருத்துவக்குழு அறிக்கையை வழங்க இயலாது என விழுப்புரம் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விசாரணை நடைபெற்று வருவதால் தற்போது ஜிப்மர் மருத்துவக்குழு அறிக்கையை வழங்க இயலாது என விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் நடந்த 2வது உடற்கூறாய்வு அறிக்கை மட்டும் மாணவி தரப்பு வழக்கறிஞரிடம் வழங்கப்பட்டது. கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரண வழக்கில் மாணவியின் உடல் இரண்டு முறை உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு அந்த அறிக்கையை … Read more

‘குருவியை சுடுவதுபோல சுட்டுக்கொன்றவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள்’- ஸ்னோலினின் தாயார்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டின் அருணா ஜெகதீசன் அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்வது தொடர்பாக, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவி ஸ்னோலினின் தாயார் வனிதா மற்றும் தமிழ் மீனவர் கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் ரஜினி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது ஸ்னோலின் தாயார் வனிதா பேசுகையில், “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களை காக்கா குருவிவை சுடுவதுபோல 14 பேரை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கையில் 16 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி இதுபோன்ற செயல்கள் … Read more

2023-ம் ஆண்டுக்கான H-1B விசா வரம்பை அடைந்து விட்டதாக அமெரிக்கா அறிவிப்பு… உலகச் செய்திகள்

USA reaches H1B visa cap today world news: இன்று உலக நாடுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்ப்போம். வெள்ளத்தில் இந்திய அமெரிக்க பெண் மரணம் அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள சியோன் தேசிய பூங்காவில் கடந்த வாரம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 29 வயதான இந்திய-அமெரிக்க பெண் மலையேறுபவர் இறந்து கிடந்ததாக பூங்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அரிசோனாவில் உள்ள டக்ஸனைச் சேர்ந்த ஜெடல் அக்னிஹோத்ரி ஆகஸ்ட் 19 … Read more

பெற்ற தாயை கவனிக்காமல் சென்னையில் தவிக்கவிட்ட அமெரிக்க ரிட்டனுக்கு ஆப்பு..! போலீசுக்கு நீதிமன்றம் பாராட்டு

பெற்ற தாயை கவனிக்காமல் அமெரிக்காவில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த மகனை விமானநிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். உரிய நடவடிக்கை மேற்கொண்டதாக போலீசாருக்கு நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. சென்னை மயிலாப்பூர் கேசவ பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் துர்காம்பாள். 74 வயதான மூதாட்டியான இவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள். மூத்த மகன் உயிரிழந்துவிட, மற்றொரு மகன் ராமகிருஷ்ணன் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசிக்கிறார். மகள் திருமணம் முடிந்து அவரது குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார். அமெரிக்காவில் பன்னாட்டு … Read more

சென்னையில் செப்.10-ல் ஜாக்டோ-ஜியோ மாநாடு – ‘முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு’

மதுரை: சென்னையில் செப்டம்பர் 10-ல் ஜாக்டோ-ஜியோ நடத்தும் ‘வாழ்வாதார நம்பிக்கை’ மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.செல்வம் தெரிவித்தார். மதுரையில் இன்று ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.செல்வம், மாவட்ட நீதிமன்றம் அருகிலுள்ள நெடுஞ்சாலைத் துறையின் சாலைப்பணியாளர் சங்க கட்டிடத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியது: ”கடந்த அதிமுக ஆட்சியில் ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பல போராட்டங்கள் நடத்தியும் மனுவைக் கூட பெறவில்லை. அப்போது போராடியபோது, போராட்ட … Read more

தலைமை நீதிபதிக்கு வேறு வேலை இல்லையா… அதிமுக முன்னாள் எம்பியிடம் நீதிபதி காட்டம்!

அதிமுக தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்க கோரி ராம்குமார் ஆதித்தன் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.ராம்குமார் ஆதித்தன், முன்னாள் எம்பி. கே.சி.பழனிச்சாமியின் மகன் சுரேன் பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர் அளித்த மனுவில், அதிமுக கட்சி 2017ம் ஆண்டு நடத்திய பொதுக்குழுவை எதிர்த்தும், 2021 டிசம்பரில் செயற்குழு கூட்டத்தில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்ததை எதிர்த்தும், ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட உள்கட்சி நிர்வாகிகள் தேர்தலை … Read more

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதுமக்கள் தாழி மூடியில் ஓலைப்பாய் அச்சு கண்டுபிடிப்பு

செய்துங்கநல்லூர்: ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதுமக்கள் தாழி மற்றும் மூடியில் பனை ஓலை அச்சு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. வைகுண்டம் அருகே தாமிரபரணி நதிக்கரை ஓரத்தில் ஆதிச்சநல்லூரில் ஒன்றிய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படுமென அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் முதற்கட்டமாக ஒன்றிய தொல்லியல் துறை சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இதில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் இங்கேயே காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அகழாய்வு பணிகள், … Read more