மதிமுகவினர் தொடுத்த வழக்கு… சீமான் விடுதலை

திருச்சியில் நாம் தமிழர் கட்சியினருக்கும், மதிமுகவினருக்கும் இடையே நடந்த மோதல் தொடர்பான வழக்கிலிருந்து சீமான் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு திருச்சி விமான நிலையத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவும் ஒரே நேரத்தில் வந்தபோது அவர்களை வரவேற்க இரு கட்சிகளை சேர்ந்த தொண்டர்களும் வந்திருந்தனர். அப்போது இருதரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ம.தி.மு.க வை சேர்ந்த இருவர் காயமடைந்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை … Read more

புதிய விமானநிலையம் வருவதை வரவேற்கிறோம்! அதே நேரத்தில்…..! என்ன சொல்ல வருகிறார் அன்புமணி!

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைகிறது என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த விமான நிலையம் அமைவதால் பாதிக்கப்படும் பரந்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள 12 கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அவர்களை சந்தித்து கருத்து கேட்பு கூட்டத்தினை நடத்தினார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.   பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, ‘சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்துர் மற்றும் அதன் சுற்றியுள்ள … Read more

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா: இன்று முதல் செப்.11 வரை 750 சிறப்பு பேருந்துகள்

சென்னை: நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு இன்று (ஆக.25) முதல் செப்.11-ம் தேதி வரை 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி: போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு 750 சிறப்பு பேருந்துகள் ஆக.25-ம் தேதி முதல் செப்.11-ம் தேதி … Read more

சாதி குறித்து பேசிய பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை அனுராதா சஸ்பென்ட்…!- நீதிபதி அதிரடி உத்தரவு ..!

பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் துறை தலைவர் அனுராதா தனது துறை மாணவர்களிடம் தொலைபேசியில் பேசிய ஆடியோவில் சாதிய பாகுபாடுகளை ஏற்படுத்தும் விதமாக பேசியது சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பேஸ்புக், வாட்சாப் என அனைத்து சமூக ஊடகங்களிலும் அவர் பேசிய ஆடியோ பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் ஒரு மாணவருடன் பேசிய ஆடியோவில் “முகத்தைப் பார்த்தாலே தனக்கு மேல் சாதியா ..? கீழ் சாதியா ..? என தெரிந்துவிடும் எனவும், நீ என்ன … Read more

பொய் மூட்டைகளை கட்டவிழ்த்துவிடாதீர்கள் எடப்பாடி – ஆர்.எஸ்.பாரதி காட்டம்

திமுக அமைப்பு செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர் எஸ் பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். தமிழக முதலமைச்சர் மூன்று நாள் பயணமாக கொங்கு மண்டலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நிலையில், அவர் செல்லக்கூடிய இடங்களில் பொதுமக்கள் திரண்டு வரவேற்பு கொடுப்பதை பார்த்த எடப்பாடி பழனிசாமி வயிற்றெரிசச்சலுடன், பொய் மூட்டையாக நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளதாக குற்றம் சாட்டினார் . திமுக ஆட்சியில் நிர்வாகம் உட்பட அனைத்திலும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருவதாகவும்  அவர் … Read more

பள்ளியில் 3 மாணவிகள் விஷம் குடிப்பு: தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஒரே பள்ளியை சேர்ந்த 3 மாணவிகள் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி பகுதியில் இயங்கும் தனியார் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மூவர் நெருங்கிய தோழிகள். நேற்று இவர்கள், பள்ளியில் இருந்தபோது எறும்பு பொடியை தண்ணீரில் கலக்கி குடித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக 2 மாணவிகள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும், ஒரு மாணவி தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி, சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். மற்ற … Read more

மதுரை: சிறுவன் இறந்த நிலையில் மீன்களும் இறந்து மிதக்கும் மர்மமான குளம்…போலீஸ் விசாரணை

பள்ளி சிறுவன் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஊரணியில், தற்போது மீன்களும் இறந்து மிதப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நண்பர்களுடன் ஊரணி ஒன்றில் குளிக்கச் சென்ற பள்ளி சிறுவன் சையது மைதீன், ஊரணி கரையிலேயே செத்து மிதந்ததுள்ளார். இந்நிலையில் அதே குளத்தில் இரண்டு நாட்களுக்கு பின்னர் குளத்திலிருந்த அனைத்து மீன்களும் செத்து மிதந்து இருக்கின்றன. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகர் உத்தங்குடி அருகே … Read more

படங்களை ரிலீஸ் செய்யும் ரெட் ஜெயன்ட்: உதயநிதிக்கு ஆதரவாக சீமான் கருத்து

மதிமுக – நாம் தமிழர் கட்சியினர் கடந்த 2018 ஆம் ஆண்டு மோதிக்கொண்ட வழக்கில், இன்று திருச்சி நீதிமன்றத்தில் ஆஜரான சீமான் செய்தியாளரிடம் தெரிவித்ததாவது:“எல்லாத் துறைகளிலும் சிக்கல் உள்ளது, பள்ளிகல்வி துறைக்கு ஒரு இளைஞர் வந்துள்ளார். அவர் ஆர்வமாக செயல்பட வேண்டும். முதலமைச்சர் காசு கொடுக்காமல் 5000 பேர்களை முதலில் திரட்டட்டும், அதன் பிறகு கோவையில் 50 ஆயிரம் பேர் கூடினார்கள் என்று கூறட்டும். இந்த ஆட்சியை சகித்துக் கொள்ள முடியாமல் இருக்கும் மக்கள் ஏன் மீண்டும் … Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு.. இருதரப்பு வாதத்தின் முடிவில் நீதிபதி அதிரடி உத்தரவு.!

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயா்நீதிமன்றத்தின் தனிநீதிபதி தீர்ப்பு வழங்கியிருந்தார். இந்த உத்தரவை எதிா்த்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் இரு நீதிபதிகள் அமா்வில் கடந்த வாரம் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான இறுதி விசாரணை இன்று நடந்தது. அப்போது, “இந்த வழக்கில் உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்று, எடப்பாடி கே பழனிசாமி தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.மேலும், “பொதுக்குழுவில் எடுக்கும் … Read more

கனல் கண்ணன் ஜாமீன் கிடைக்குமா? – தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைப்பு

சென்னை: ‘பெரியார் சிலையை உடைக்க வேண்டும்’ என்று பேசியதாக கைது செய்யப்பட்ட திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் ஜாமீன் கோரிய வழக்கை தீர்ப்புக்காக சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், திரைப்பட சண்டைப் பயிற்சி நிபுணர் கனல் கண்ணன், … Read more