அம்பானி, அதானி என்.டி.டிவியின் பங்குகளை எப்படி தன்வசமாக்கிக்கொண்டனர்?

கடந்த செவ்வாய் கிழமை கெளதம் அதானி, என்.டி.டிவியின் 29.18 % பங்குகளை வாங்கினார். மேலும் இந்நிறுவனத்தின் 26 % பங்களையும் வாங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது அதானி குழுமம். இந்த வருடம் மே மாதம், டிஜிட்டல் செய்தி நிறுவனமான  ப்ளூம்பர் க்யூண்ட் (BloombergQuint) 49 % பங்குகளை வாங்கப்போவதாக தெரிவித்தது. மேலும் தனியார் செய்தி தொலைக்காட்சியின் பங்குகளை வாங்கப்போவது மூலமாக தனது வியாபாரத்தை விரிவாக்க உள்ளதாக தெரிவித்தது. இந்நிலையில் என். டி. டிவியின் 29.18 % பங்குகளை அதானி … Read more

கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள் புகைப்படம் வெளியீடு.! கண்கலங்கும் ரசிகர்கள்.!

நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்தின் பிறந்தநாள் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  நடிகராக அறிமுகமாகி தனது திறமையினால் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்று பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் தான் நடிகர் விஜயகாந்த். இவர் நடிக்கும் போது தன்னால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்து வந்தவர்.  பின்னர் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை துவங்கி அரசியலிலும், கால்பதித்தார். அவருக்கு அரசியலிலும் மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை கொடுத்து அழகு பார்த்தனர். அனைத்து தரப்பு அரசியல்வாதிகள், ரசிகர்கள் என்று … Read more

நான்காம் தொழில் புரட்சிக் காலத்தில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தியாக வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

திருப்பூர்: “ஒற்றைச்சாளர இணையதளம் 2.0-வை நான் கடந்தாண்டு ஜூலை மாதம் தொடங்கி வைத்தேன். அதில் இதுவரை MSME நிறுவனங்களிடமிருந்து 10 ஆயிரத்து 555 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 9 ஆயிரத்து 212 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 87 விழுக்காடு விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திருப்பூரில் சிறு குறு தொழில்துறை மண்டல மாநாட்டை தொடங்கி வைத்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியது: ” தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் … Read more

பாஜக பக்கம் நகரும் டிடிவி தினகரன்? எடப்பாடிக்கு வேற வழியே இல்லையா?

சிறை சென்ற போது டிடிவி தினகரனை அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக பதவியில் அமரவைத்துவிட்டு சென்றார். அதன்பின் நடைபெற்ற அரசியல் சடுகுடு விளையாட்டில் தினகரன், திஹார் சிறைக்கு சென்றார், அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் திடீரென அவருக்கு அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்தது. ஆர்கேநகர் இடைத் தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளை ஓரம்கட்டி சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பாஜக எதிர்ப்பு, இபிஎஸ் – ஓபிஎஸ் எதிர்ப்பு ஆகியவற்றில் மும்முரமாக இருந்த அவர் சென்ற … Read more

திருப்பூரை போன்று மற்ற மாவட்டங்களும் மாற வேண்டும் என்பது எனது விருப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை..!

திருப்பூர்: திருப்பூரை போன்று மற்ற மாவட்டங்களும் மாற வேண்டும் என்பது எனது விருப்பம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருப்பூரில் தொழில் முனைவோர் மண்டல மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொழில்முனைவோருக்கு கடனுதவிகளை வழங்கினார். பின்னர் மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; முதல்வராக பொறுப்பேற்று 4 முறை திருப்பூருக்கு வந்து விட்டேன். இனியும் வருவேன். விடுதலை போராட்ட காலத்திலும் திராவிட இயக்க வரலாற்றிலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது திருப்பூர். திருப்பூருக்கு பல சிறப்புகள் உண்டு. திமுக … Read more

கட்சி மாற பேரம் பேசுவதாக பா.ஜ.க மீது குற்றச்சாட்டு; 4 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் குறித்து ஒர் பார்வை

From controversial Somnath to face of protests: 4 MLAs AAP says on BJP watch: கட்சி மாறுவதற்கு பா.ஜ.க உறுப்பினர்கள் ரூ.20 கோடி தருவதாகக் கூறி தங்களை அணுகியதாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ.,க்கள் புதன்கிழமை குற்றம்சாட்டினர். பா.ஜ.க இந்த குற்றச்சாட்டை நிராகரித்த நிலையில், அதை பொய் என்று முத்திரை குத்தி, ஆம் ஆத்மி ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, பா.ஜ.க தனது 35 சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொண்டதாக … Read more

தமிழக மீனவர்கள் 10 பேருக்கு செப்டம்பர் 6ம் தேதி வரை சிறை – இலங்கை நீதிமன்றம் உத்தரவு.!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை வரும் செப்டம்பர் 6-ந்தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் 22-ந்தேதி படகில் மீன்பிடிக்கச் சென்ற 10 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்தது.  அதுமட்டுமில்லாமல் அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. இதையடுத்து தமிழக மீனவர்கள் 10 பேரையும் இலங்கையில் உள்ள திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். … Read more

கஞ்சா கடத்தல் வலைப்பின்னலை வேருடன் அழிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: 750 கிலோ கடத்தல் கஞ்சா பறிமுதல்: கஞ்சா வலைப்பின்னலை வேருடன் அழிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ”தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில், ஆந்திராவிலிருந்து சரக்குந்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள 750 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. காவல்துறையினரின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது. ஆனால், கஞ்சா ஒழிப்புக்கு இது போதுமானது அல்ல. காவல்துறையினரால் பிடிபடும் கஞ்சாவை விட 100 மடங்கு … Read more

அதிமுக வழக்குகள்: சிறப்பு அமர்வில் விசாரிக்க கோரி மனுத்தாக்கல்!

2017 மற்றும் 2021 அதிமுக பொதுக்குழு, செயற்குழு தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்க கோரி மனுதரார்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், முன்னாள் எம்பி. கே.சி.பழனிச்சாமியின் மகன் சுரேன் பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர் அளித்த மனுவில், அதிமுக கட்சி 2017ம் ஆண்டு நடத்திய பொதுக்குழுவை எதிர்த்தும், 2021 டிசம்பரில் செயற்குழு கூட்டத்தில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்ததை எதிர்த்தும், ஒருங்கிணைப்பாளர் – … Read more

தேர்வில் தோல்வி: பள்ளி மாணவி தற்கொலை, புதுக்கோட்டையில் பரிதாபம்

படிப்பு, அழுத்தம், ஏழ்மை ஆகிய பல காரணங்களால் மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது இந்நாட்களில் அதிகரித்து வருகிறது. இது ஒரு சமூகமாக நாம் கவலைக்கொள்ள வெண்டிய, கூர்ந்து கவனிக்க வேண்டிய, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. தினம் தினம் தொடந்து தற்கொலை பற்றிய செய்திகள் வருவது மனதை பதபதைக்க வைக்கிறது. உலகில் காலூன்றி வாழ்ந்து, வென்று கட்ட வேண்டிய சிறுவர் சிறுமிகளும், இளைஞர்களும் தோல்வியை தழுவிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வது வேதனை … Read more