மறு பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகும் 10 நாட்களாக மருத்துவமனையில் இருக்கும் மாணவி உடல்: சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடல் 10-வது நாளாக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை பெற்றோர் பெற்றுக் கொள்ளாத நிலையில், உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கத்தின் மகள் மதி, சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் கடந்த 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது இறப்பில் சந்தேகம் … Read more