விஜயகாந்தை பாத்து கத்துக்கோங்க… இனியாவது மாறுவாரா பிரேமலதா?

தமிழ் திரையுலகில் மட்டுமல்ல. தமிழக அரசியலிலும் சிறப்பான நிலையை எட்டியவர் . இவை அனைத்தும் ஒரே நாளிலோ அல்லது ஒருசில முயற்சிகளிலோ வந்து விடவில்லை. சாமானியராக இருந்து இந்தளவிற்கு பெயர், பணம், புகழ் உள்ளிட்டவற்றை பெற்றிருக்கிறார். திரையுலகில் தொடக்க காலத்தில் இருந்தே அனைவரையும் அரவணைத்து செல்லும் மனப்பாங்கு கொண்டவர். உதவிகள் கேட்டு வருவோருக்கு இல்லை என்று சொன்னதில்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் உரிய மரியாதை கொடுத்து பேசுவார். குறிப்பாக சாப்பாடு விஷயத்தில் குறை … Read more

சென்னை உயர் நிதிமன்றத்தில் இபிஎஸ் மேல்முறையீட்டு மனு விசாரணை தொடங்கியது

சென்னை: எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது. அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்த எடப்பாடி பழனிச்சாமி மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ஏற்கனவே தாக்கல் செய்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது என்னும் நிலையில் யூகங்களின் அடிப்படையில் நீதிபதி … Read more

திருச்சி விமான நிலையத்தில் மதிமுக – நாம் தமிழர் கட்சியினர் மோதிக்கொண்ட வழக்கில் இருந்து சீமான் விடுதலை

திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் மதிமுக – நாம் தமிழர் கட்சியினர் மோதிக்கொண்ட வழக்கில் இருந்து சீமான் விடுதலை செய்யப்பட்டார். 2018-ம் ஆண்டு நடந்த மோதல் தொடர்பான வழக்கில் ஆஜரான நிலையில் சீமான் விடுவிக்கப்பட்டார். இரு தரப்பும் சமரசம் செய்துகொண்டதால் வழக்கை திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவகுமார் முடித்து வைத்தார்.

தருமபுரி: இனம்புரியா நோயால் பிறந்தது முதல் இன்னல்களை மட்டுமே அனுபவித்துவரும் இரு சகோதரிகள்

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பிறந்ததிலிருந்து இனம் காணாத நோயால், வலிகளை மட்டுமே அனுபவித்து வரும் மலைக்கிராம சிறுமிகள் தங்களது நோய்க்கு நிரந்தர தீர்வு காண உயர் சிகிச்சை வழங்க முதலமைச்சர் உதவ வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த வள்ளிமதுரை கிராமத்தைச் சார்ந்த மலைவாழ் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த முனியன் – கமலா தம்பதியினர் சித்தேரி மலை அடிவாரத்தில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 11 வயதான திருமலர் (கேட்கும் சவால் … Read more

அம்பானி, அதானி என்.டி.டிவியின் பங்குகளை எப்படி தன்வசமாக்கிக்கொண்டனர்?

கடந்த செவ்வாய் கிழமை கெளதம் அதானி, என்.டி.டிவியின் 29.18 % பங்குகளை வாங்கினார். மேலும் இந்நிறுவனத்தின் 26 % பங்களையும் வாங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது அதானி குழுமம். இந்த வருடம் மே மாதம், டிஜிட்டல் செய்தி நிறுவனமான  ப்ளூம்பர் க்யூண்ட் (BloombergQuint) 49 % பங்குகளை வாங்கப்போவதாக தெரிவித்தது. மேலும் தனியார் செய்தி தொலைக்காட்சியின் பங்குகளை வாங்கப்போவது மூலமாக தனது வியாபாரத்தை விரிவாக்க உள்ளதாக தெரிவித்தது. இந்நிலையில் என். டி. டிவியின் 29.18 % பங்குகளை அதானி … Read more

கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள் புகைப்படம் வெளியீடு.! கண்கலங்கும் ரசிகர்கள்.!

நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்தின் பிறந்தநாள் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  நடிகராக அறிமுகமாகி தனது திறமையினால் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்று பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் தான் நடிகர் விஜயகாந்த். இவர் நடிக்கும் போது தன்னால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்து வந்தவர்.  பின்னர் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை துவங்கி அரசியலிலும், கால்பதித்தார். அவருக்கு அரசியலிலும் மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை கொடுத்து அழகு பார்த்தனர். அனைத்து தரப்பு அரசியல்வாதிகள், ரசிகர்கள் என்று … Read more

நான்காம் தொழில் புரட்சிக் காலத்தில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தியாக வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

திருப்பூர்: “ஒற்றைச்சாளர இணையதளம் 2.0-வை நான் கடந்தாண்டு ஜூலை மாதம் தொடங்கி வைத்தேன். அதில் இதுவரை MSME நிறுவனங்களிடமிருந்து 10 ஆயிரத்து 555 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 9 ஆயிரத்து 212 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 87 விழுக்காடு விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திருப்பூரில் சிறு குறு தொழில்துறை மண்டல மாநாட்டை தொடங்கி வைத்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியது: ” தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் … Read more

பாஜக பக்கம் நகரும் டிடிவி தினகரன்? எடப்பாடிக்கு வேற வழியே இல்லையா?

சிறை சென்ற போது டிடிவி தினகரனை அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக பதவியில் அமரவைத்துவிட்டு சென்றார். அதன்பின் நடைபெற்ற அரசியல் சடுகுடு விளையாட்டில் தினகரன், திஹார் சிறைக்கு சென்றார், அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் திடீரென அவருக்கு அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்தது. ஆர்கேநகர் இடைத் தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளை ஓரம்கட்டி சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பாஜக எதிர்ப்பு, இபிஎஸ் – ஓபிஎஸ் எதிர்ப்பு ஆகியவற்றில் மும்முரமாக இருந்த அவர் சென்ற … Read more

திருப்பூரை போன்று மற்ற மாவட்டங்களும் மாற வேண்டும் என்பது எனது விருப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை..!

திருப்பூர்: திருப்பூரை போன்று மற்ற மாவட்டங்களும் மாற வேண்டும் என்பது எனது விருப்பம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருப்பூரில் தொழில் முனைவோர் மண்டல மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொழில்முனைவோருக்கு கடனுதவிகளை வழங்கினார். பின்னர் மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; முதல்வராக பொறுப்பேற்று 4 முறை திருப்பூருக்கு வந்து விட்டேன். இனியும் வருவேன். விடுதலை போராட்ட காலத்திலும் திராவிட இயக்க வரலாற்றிலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது திருப்பூர். திருப்பூருக்கு பல சிறப்புகள் உண்டு. திமுக … Read more

கட்சி மாற பேரம் பேசுவதாக பா.ஜ.க மீது குற்றச்சாட்டு; 4 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் குறித்து ஒர் பார்வை

From controversial Somnath to face of protests: 4 MLAs AAP says on BJP watch: கட்சி மாறுவதற்கு பா.ஜ.க உறுப்பினர்கள் ரூ.20 கோடி தருவதாகக் கூறி தங்களை அணுகியதாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ.,க்கள் புதன்கிழமை குற்றம்சாட்டினர். பா.ஜ.க இந்த குற்றச்சாட்டை நிராகரித்த நிலையில், அதை பொய் என்று முத்திரை குத்தி, ஆம் ஆத்மி ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, பா.ஜ.க தனது 35 சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொண்டதாக … Read more