"கொலைக்களமாக மாறிவரும் தமிழகம்; இதுதான் சட்டம் ஒழுங்கை கவனிக்கும் லட்சணமா?"- ஈபிஎஸ்

கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் விற்பனை போன்ற சமுதாய சீர்கேடுகளைத் தவிர்த்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என, தமிழக அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் கொலைக்களமாக மாறி வருவதாகவும், இதனால் மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 36 மணி நேரத்தில் 15 படுகொலைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக செய்திகள் வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டம் ஒழுங்கை தாமே நேரடியாக கவனித்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன் கூறியதை எடப்பாடி பழனிசாமி … Read more

“மம்பட்டியை எடுத்து வாங்க கவுன்சிலர்னு போன் போட்டு திட்டுறாங்க” – மதுரை மாநகராட்சிக் கூட்டத்தில் அதிரவைத்த சொக்காயி

மதுரை; “வீட்டு வரி விதிப்பில் மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு தில்லு முல்லு செய்துள்ளனர். அதை விசாரிக்க வேண்டும்” என்று அதிமுக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, கவுன்சிலர் சொக்காயின் யாதார்த்த பேச்சும், ஆதங்கமும் மாநகராட்சி மன்ற அரங்கை சில நிமிடங்கள் அதிர வைத்தது. மதுரை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேசிய மேயர் இந்திராணி, “கவுன்சிலர்கள் … Read more

பாஜகவில் இணையும் திமுக எம்.பி?; தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு!

இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பச்சமுத்து. இவரது தலைமையின் கீழ் இயங்கும் ஐஜேகே, கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் ஐஜேகே கட்சிக்கு பெரம்பலூர் மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, பச்சமுத்து அமோக வெற்றி பெற்றார். இதன் பிறகு பச்சமுத்து பெரம்பலூர் தொகுதி பக்கமே தலைகாட்டவில்லை என்கிற குற்றச்சாட்டு தொகுதி மக்கள் மத்தியில் எழுந்தது. இதனை ஈடு செய்யும் வகையில், இந்த ஆண்டும் தொகுதியை சேர்ந்த … Read more

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் 2-வது நாளாக நடைபெற்றது. 14-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக, 7-வது கட்டமாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் கோபால் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இனி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  இந்த … Read more

சூனாம்பேடு பகுதியில் இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை கட்டிடம்; புதிதாக கட்டித் தர வலியுறுத்தல்

செய்யூர்: சூனாம்பேடு பகுதியில் ஒரு ரேஷன் கடை கட்டிடம் இடிந்து விழும் நிலையில் சேதமாகியுள்ளது. இக்கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, அங்கு புதிய கட்டிடத்தை கட்டித் தரும்படி அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சூனாம்பேடு ஊராட்சி காலனி பகுதியில் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் தமிழக அரசின் நியாயவிலை கடை இயங்கி வருகிறது. இக்கடையில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உணவு பொருட்களை வாங்கி சென்று வருகின்றனர். இக்கட்டிடம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் … Read more

அரசு மருத்துவர்களின் கவனக்குறைவால் மணிக்கட்டை இழந்த குழந்தை! -நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கோவில்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவர்களின் கவனக்குறைவால் மணிக்கட்டு பகுதியை இழந்த குழந்தைக்கு இழப்பீடாக 15 லட்சம் ரூபாயை வழங்கக் கோரிய வழக்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குனர் மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனை முதல்வர் ஆகியோர்a= பதிலளிக்க  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இதுகுறித்த மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ” கடந்த 2021 அக்டோபர் 27ல் காய்ச்சல் காரணமாக … Read more

தலைமுடியை பெற்றோர் வெட்டியதால், தற்கொலை செய்து கொண்ட +2 மாணவி.!

சமீபகாலமாகவே பள்ளி சிறுவர், சிறுமிகளின் தற்கொலை செய்திகள் அதிகமாக வந்த வண்ணம் இருக்கிறது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு அரசு தலையிட்டு ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பிலிருந்தும் வரும் கோரிக்கையாக இருக்கிறது. இத்தகைய சூழலில், கரூரில் ஒரு பெண் பெற்றோர் முடிவெட்டி விட்டதற்காக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் வெண்ணமலை பகுதியை சேர்ந்த ஸ்ரீனா என்ற இளம்பெண் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருடைய … Read more

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா | தமிழக நகர்புறங்களில் 6 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி

சென்னை: பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் தமிழகத்தின் நகர்புறங்களில் 6 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம், நகர்ப்புறம் (PMAY-U), கிராமப்புறம் (PMAY-G) என்று இரண்டு வகையாக பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பிரதமர் வீடு வழங்கும் திட்டம் நகரம் (நகர்புறம்) என்றும் கிராமபுறங்களில் பிரதமர் வீடு வழங்கும் திட்டம் … Read more

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த இடைக்கால தடை!

தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் கே.வெங்கடாச்சலம், அருணா அலாய்ஸ் ஸ்டீல் நிறுவன மேலாண்மை இயக்குனர் அருண் அருணாச்சலம், ஸ்ரீபதி பேப்பர் அன்ட் போர்ட்ஸ் நிறுவன பொது மேலாளர் ஜி.ஸ்ரீனிவாசன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் 2 உறுப்பினர்கள் (தொழில்நுட்ப உறுப்பினர், சட்டத்துறை உறுப்பினர்) இருக்க வேண்டும். தற்போது தலைவர் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் மட்டுமே உள்ளனர். சட்டத்துறை உறுப்பினர் இல்லை. இந்நிலையில், தமிழகத்தின் … Read more

சமையற்கூடம் இல்லை, சமையலறை ஆன கழிவறை பகுதி: மேல்நிலைப்பள்ளியின் அவல நிலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பொம்மதாத்தனூர் கிராமத்தில் இருந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி 2015 ஆம் ஆண்டு அரசு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பின்பு, துவக்கப்பள்ளி அதே இடத்திலும் உயர்நிலைப்பள்ளி கிராமத்திற்கு அருகே குறிப்பிட்ட தொலைவில் ஒரு கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அமைக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் இபிஎஸ் அவர்களால் இந்த பள்ளி திறந்து வைக்கப்பட்டது. அன்று முதல் பள்ளிகள் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன. … Read more