என்.டி.டிவி.,யின் 29 சதவீத பங்குகளை வாங்கிய அதானி.. அடுத்த திட்டம் என்ன?

அதானி குழுமம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 23) என்டிடிவி (NDTV) நிறுவனத்தின் 29.18 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. நடப்பாண்டின் மே மாதத்தில் அதானி குழுமம் BloombergQuint நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை மே மாதம் வாங்கியது.தொடர்ந்து, மற்றொரு செய்தி நிறுவனத்தில் அதன் முதலீட்டை அதிகரித்துள்ளது. இது தொடர்பாக அதானி குழுமம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அதானி குழுமத்தின் துணை நிறுவனமான ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க் நிறுவனம், விஸ்வபிரதான் கமர்ஷியல் பிரைவேட் நிறுவனத்தை வாங்கியதாக கூறப்பட்டுள்ளது. இந்நிறுவனம் 2009 மற்றும் … Read more

ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கல்வியியல் கல்லூரிக்கான விரிவுரையாளர்கள் தேர்வு நேர்மையாக நடக்குமா? – புகாரும் புலம்பலும்

சென்னை: ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கல்வியியல் கல்லூரிக்கான விரிவுரையாளர்கள் தேர்வு நேர்மையாக நடக்க வேண்டும் என வாய்ப்புக்கென நீண்ட நாள் காத்திருக்கும் ஆசிரியர்களின் எதிர்பார்ப்பதாக கோரிக்கை வைத்துள்ளனர். சென்னையிலுள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் மாவட்டங்களிலுள்ள ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்களில் மூத்த விரிவுரையாளர், விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர்கள் என 155 காலிப் பணியிடங்களுக்கான நியமன அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகஸ்ட் 20-ல் வெளியிட்டது. இதற்கான கல்வித் தகுதி முதுகலை … Read more

எதிர்க்கட்சிகளின் பழிச்சொற்களுக்கு பதில் சொல்வதற்கு எனக்கு நேரமில்லை..! – ஸ்டாலின் பேச்சு..!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக கொங்கு பகுதிக்கு சென்றுள்ளார். இன்று பொள்ளாச்சியில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் சுமார் 50,000க்கு மேற்ப்பட்ட மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர். பின்னர் இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் திமுக ஆட்சியமைத்த ஒன்றரை ஆண்டில் செய்யப்பட்ட சாதனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டார். தொடர்ந்து பேசிய அவர், “சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநிலம் முழுமைக்குமான பொதுவான தேர்தல் … Read more

தொடர் கனமழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது: 3வது வாரமாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுப்பு

கம்பம்: தொடர் கனமழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 3வது வாரமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலம் சுருளி அருவியாகும். இந்த அருவிக்கு தமிழகம், கேரளா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது, தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளான கம்பம், கூடலூர், பாளையம், சின்னமனூர் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. … Read more

தூத்துக்குடி: ஆசிரியர் திட்டியதாக தற்கொலைக்கு முயன்ற 3 மாணவிகள்: போலீஸ் விசாரணை

தூத்துக்குடியில் தனியார் பள்ளியில் ஆசிரியை திட்டியதாக 8ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் எறும்பு பொடி தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி, தனியார் மேல் நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளனர். இவர்களை 6ம் வகுப்பு பாடம் எடுக்கும் ஆசிரியை சுந்தரி திட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறிது நேரத்தில் அந்த மாணவிகள் மயக்கம் அடைந்த நிலையில், பள்ளியில் இருந்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், மூன்று மாணவிகளையும் பெற்றோர்கள் அரசு … Read more

டாஸ்மாக் கடையில் நாட்டு வெடிகுண்டு வீசிய இளைஞர்கள் கைது..!

செங்கல்பட்டு மாவட்டத்தில் வண்டலூர் அருகே இரணியம்மன் நகர் பகுதியில் டாஸ்மாக் கடை  ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் டாஸ்மாக் கடையில் மது வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்றனர்.  அப்போது அதில் ஒரு வாலிபர் திடீரென தனது கையில் வைத்திருந்த நாட்டு வெடி குண்டை டாஸ்மாக் கடை மீது வீசிவிட்டு அங்கிருந்து இருவரும் தப்பிச்சென்றனர். இதனால் டாஸ்மாக் கடையின் முன்புறம் உள்ள இரும்பு கேட் … Read more

“நீங்கள் எங்களுக்கு ஒரு மகன்” – மருமகனை வாழ்த்திய தமிழச்சி தங்கபாண்டியன்

சென்னை: தென் சென்னை தொகுதி திமுக எம்.பி.யான தமிழச்சி தங்கபாண்டியன் தனது மருமகனுக்கு தெரிவித்துள்ள பிறந்தநாள் வாழ்த்து கவனம் ஈர்த்துள்ளது. தென் சென்னை தொகுதி திமுக எம்.பி.யான தமிழச்சி தங்கபாண்டியன் மகள் நித்திலாவுக்கும், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலாளர் மகேந்திரன் மகன் கீர்த்தனுக்கும் சென்னை திருவான்மியூரில் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. பல்வேறு கட்சித் தலைவர்கள், தமிழகத்தின் முக்கிய பிரபலங்கள், சினிமா மற்றும் இலக்கியம் தொடர்புடையவர்கள் கலந்துகொண்ட இந்த திருமணம் அப்போது கவனம் … Read more

பெண்கள் முதலமைச்சரை தெய்வமாக வணங்குகின்றனர் – திமுகவில் இணைந்த தேமுதிக முன்னாள் எம் எல் ஏ தினகரன் பேச்சு..!

கொங்கு மண்டல பகுதியில் நான்கு நாள் பயணமாக முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலுள்ள ஆச்சிப்பட்டி பகுதியில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் 55,000 பேர் இணையும் விழா நடைபெற்று வருகிறது. இதில் அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க., உள்ளிட்ட பல கட்சிகளின் உறுப்பினர்கள் திமுகவில் இணைகின்றனர். அந்த வகையில் தே.மு.தி.க., மாவட்ட கழக புறநகர் செயலாளராக இருந்த பனப்பட்டி தினகரன் தற்போது திமுகவில் இணைந்துள்ளார். திமுகவில் இணைந்த பிறகு மேடையில் அவர் … Read more

’அமைச்சர் நேரு ஒருமையில் பேசவில்லை.. உரிமையில் பேசினார்’ சென்னை மேயர் பிரியா ராஜன்

நேற்று முன் தினம் தலைமை செயலகத்தில்,சென்னை தினத்தையொட்டி, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் நடந்த கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி போன்றவற்றில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நகர்ப்புற வளர்ச்சித் அமைச்சர் கே.என்.நேரு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி  உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு அமைச்சர் மேயரை பதில்  சொல்ல அறிவுறுத்தியுள்ளார். … Read more

கன்னியாகுமரியில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனம் பூசும் பணி தீவிரம்: 145 அடி உயரத்தில் சாரம் அமைக்கும் பணி நிறைவு

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடலின் நடுவில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலை உப்பு காற்றால் சேதமடையாமல் இருக்க 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுத்தப்படுத்தி, ரசாயன கலவை பூசுவது வழக்கம். கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு ரசாயன கலவை பூசப்பட்டது. கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு இந்த பணி மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூச தமிழக அரசு ₹1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. … Read more