பாழாகும் மாணவர்களின் எதிர்காலம்: அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு ரவிக்குமார் எம்.பி. கடிதம்!

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான தேர்வு முடிவுகளை வெளியிடாததால் எண்ணற்ற மாணவர்களின் எதிர்காலம் பாழாவதாக சுட்டிக்காட்டியுள்ள விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் இது தொடர்பாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் முதுநிலைப் பட்டயபடிப்புக்கு மாணவர்களைச் சேர்த்துவருகிறது. இந்த ஆண்டு (2022) விண்ணப்பம் கோரப்பட்டு மாணவர்கள் நுழைவு தேர்வு எழுதி நேர்முக தேர்வுக்கும் சென்று வந்துள்ளனர். எனது விழுப்புரம் நாடாளுமன்ற … Read more

தக்காளி விலை கடும் வீழ்ச்சி தென்காசி விவசாயிகள் வேதனை

தென்காசி சுந்தரபாண்டியபுரம் பகுதியில் தக்காளி அதிக அளவில் விளைவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சந்தையில் வியாபாரிகள் மிகவும் குறைந்த விலைக்கு தக்காளியை விவசாயிகளிடம் கேட்கிறார்கள். வியாபாரிகள், 1 கிலோ தக்காளி ரூ.2-க்கு கேட்கிறார்கள். அவ்வாறு சில வியாபாரிகள், விவசாயிகளிடம் வாங்கி சந்தையில் ரூ.7-க்கு விற்கிறார்கள்.  இதனால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளான விவசாயிகள் சாலை ஓரங்களில் கடை அமைத்து  தக்காளிகளை பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்கிறார்கள். கேரள மாநிலத்தில் இருந்து தென்காசி பகுதிக்கு வரும் பொதுமக்கள் விவசாயிகளிடம் 30 கிலோ தக்காளியை … Read more

திருவாரூரில் மின்சாரம் திருடிய தனியார் பேக்கரிக்கு ரூ.3 லட்சம் அபராதம்

திருவாரூர்: திருவாரூரில் மின்சாரம் திருடியதாக கூத்தாநல்லூரில் செயல்படும் தனியார் பேக்கரிக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடையின் மேல்புறம் செல்லும் மின் ஒயரின் வழியாக கொக்கியை மாட்டி மின்சாரத்தை பேக்கரி உரிமையாளர் திருடியுள்ளார். 

'மாணவர்கள் மத்தியில் ஆயுதக் கலாச்சாரத்தை அனுமதிக்க மாட்டோம்' – ரயில்வே கூடுதல் இயக்குனர்

கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஆயுதக் கலாச்சாரத்தை அனுமதிக்க மாட்டோம், தயவு தாட்சியமின்றி நடவடிக்கை பாயும் என்று ரயில்வே கூடுதல் இயக்குனர் வனிதா IPS பேட்டியளித்துள்ளார். மதுரை இருப்புப்பாதை காவல் உட்கோட்டத்தில், பணியாற்றும் காவலர்களுக்கு வேலை பளு காரணமாக ஏற்படும் மனஅழுத்தத்தை குறைக்கும் பொருட்டும், பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கும் பொருட்டு காவலர்களின் மன மகிழ்ச்சிக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இருப்புப்பாதை காவல்துறை கூடுதல் … Read more

‘அதிமுக அலுவலகம் சூறை’ வழக்குகள் இப்போது சிபிசிஐடி வசம்: தமிழக அரசு புதிய தகவல்

சென்னை: அதிமுக தலைமை அலுவலம் சூறையாடப்பட்டது தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 4 வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம் தாக்கல் செய்த மனுவில், “கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தது. அப்போது ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்குள் புகுந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது … Read more

தமிழகம், புதுச்சேரியில் அடித்து வெளுக்கும் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களுக்கும் மேல் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (25.08.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், டெல்டா மாவட்டங்கள் … Read more

‘ஒரு லைட் கூட மாற்ற முடியல, நாங்க வேணா எழுந்து போய்டவா’ – மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர் புலம்பல்

தாம்பரம் மாநகராட்சியில் திமுக கவுன்சிலர்களே புலம்பும் அவல நிலை நீடித்து வருகிறது. தாம்பரம் மாநகராட்சி, பம்மல் அலுவலகத்தில் மண்டலம் 1ல் இன்று மண்டல குழு கூட்டம் நடைபெற்றது. இதில், மண்டலக் குழுத் தலைவர் வே.கருணாநிதி தலைமைத் தாங்கினார்.  இதில் தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் காமராஜ் உள்ளிட்ட அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். பொதுவாக அந்தந்த மாமன்ற உறுப்பினர்கள் தங்களது பகுதிகளுக்கான கோரிக்கைகளை இக்கூட்டத்தில் முன்வைப்பது வழக்கம்.  அந்த வகையில், மண்டல குழு கூட்டத்தில் பேச … Read more

100 அடி ரோடு முதல் அரும்பார்த்தபுரம் வரை முடங்கிய புறவழிச்சாலை திட்டம் புத்துயிர் பெறுகிறது; ரூ.26 கோடியில் விரைவில் பணிகள் துவக்கம்

புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இருப்பினும், நிரந்தர தீர்வு கிடைத்தபாடில்லை. நகரப்பகுதி முதல் கிராமம் வரை பெரும்பாலான இடங்களில் சாலைகள் விரிவுபடுத்தப்படாமல் குறுகியதாக உள்ளது. இதனால் அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி, புஸ்சி வீதி, உப்பளம் சாலை, காமராஜர் சாலை, வழுதாவூர் சாலை மற்றும் புதுச்சேரி-விழுப்புரம் சாலை என முக்கிய சாலைகளில் காலை, மாலை நேரங்களில் … Read more

அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரம் – 4 வழக்குகளும் சிபிசிஐடிக்கு மாற்றம்

அதிமுக தலைமை அலுவலக கலவரம், அலுவலக ஆவணங்கள் சூறையாடப்பட்டது தொடர்பாக பதிவான நான்கு வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம் தாக்கல் செய்திருந்த மனுவில், ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்குள் புகுந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அலுவலகத்தை சூறையாடியப் புகாரில் … Read more

என் இனிய இயக்குனர் அவர்களே..!பாரதிராஜாவுக்காக பிரான்சில் பிரார்த்தனை செய்த ராதிகா!

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இயக்குநர் இமயம் பாரதிராஜா விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என்று கூறி நடிகை ராதிகா பிரான்சில் பிரார்த்தனை செய்துள்ளார் ஸ்டூடியோவுக்குள் முடங்கி கிடந்த தமிழ் சினிமாவை வெளியுலகத்திற்கு கொண்டு சென்ற பெருமைக்கு சொந்தக்காரரான இயக்குனர் பாரதிராஜா, தற்போது இயக்கத்தில் இருந்து ஓய்வு பெற்று நடிகராக முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்கள் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திருச்சிற்றம்பலம் படம் நல்ல வரவேற்பை … Read more