மின்சாரம் தாக்கி தந்தை, மகன் உயிரிழப்பு… உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு

மின்சாரம் தாக்கி நெல்லை கல்லூரி மாணவரும், அவரது தந்தையும் இறந்த விவகாரத்தில் அவர்களது குடும்பத்திற்கு 26 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மின்சாரம் தாக்கி தனது தந்தையும் சகோதரரும் உயிரிழந்த நிலையில், இழப்பீடாக தலா 20 லட்சம் வழங்கக்கோரி முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் “திருநெல்வேலி மாவட்டம் களக்காடு கிராமத்தில் உள்ள எங்களது நிலத்தில் விவசாயம் செய்வதற்காக சென்றபோது, மின் கம்பி அறுந்து வேலியில் தொங்கியிருக்கிறது. இதை … Read more

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு..!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் நாளை 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. வரும் 27ம் தேதி டெல்டா மாவட்டங்கள் உட்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை மையம், … Read more

திமுகவில் இணைவதாக விஷமப் பிரச்சாரம்: அதிமுக எம்எல்ஏ ஆவேசம்

கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி, திமுகவில் இணைய உள்ளதாக நேற்று தகவல்கள் பரவின. இதையடுத்து, அமுல் கந்தசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில், “திமுகவினர் விஷமத்தனமான பிரச்சாரத்தை செய்துள்ளனர். இதுபோன்ற பிரச்சாரங்களை செய்வது திமுகவின் வாடிக்கை. நான் அன்னூரில் குடியிருக்கிறேன். 150 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர். தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை புறக்கணிக்கும் திமுகவுக்கு ஒருபோதும் நான் தலைவணங்க மாட்டேன். இறக்கும்வரை அதிமுகவில்தான் … Read more

கொதித்தெழுந்த பிடிஆர் – யூடர்ன் போட்டு ஓடிய நபர்! மத வன்முறை திட்டம் தவிடுபொடி!

சமூக விரோத கருத்துக்களை பகிரும் இடமாக சமூக வலைதளங்களை சிலர் பயன்படுத்தி வருகின்றனர். போலியான விஷமத்தனமான கருத்துக்கள் அதிகமாக பகிரப்பட்டு சாமானிய மக்களை சென்றடைகின்றன. அவசரத்தில் பலர் இந்த கருத்துக்களை உண்மை என நம்பக்கூடும் . அப்படியான ட்வீட் பதிவு ஒன்று தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கண்ணில் பட கொதித்தெழுந்துவிட்டார். ட்விட்டைல் ‘ராதா இல்லா படம் சாதா’ என்ற ஐடியில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை குறிப்பிடும் விதமாக, ‘அவர் 2022-23 பட்ஜெட்டில் இந்து கோவில்களை … Read more

படியில் நிற்காதே என கண்டித்த ஓட்டுநர் மீது தாக்குதல்! பள்ளி மாணவர்கள் அட்டூலியம்!

காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து நேற்று மாலை 5.30மணியளவில் காஞ்சிபுரத்திலிருந்து புரிசைக்கு செல்லும் அரசு பேருந்து புறப்பட்டு செல்லும் போது அந்த அரசு பேருந்தின் முன் படியில் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் தொங்கியவாறு பயணித்துள்ளனர்.  இதனையெடுத்து பேருந்து ஓட்டுநர் ரமேஷ் மேலே எறி வரும் படி கூறியுள்ளார். இதனால் ஓட்டுநருடன் பள்ளி மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் பேருந்து நிலைய பின்புறம் பகுதியில் பேருந்தினை நிறுத்தி அம்மாணவர்களிடம் படியில் பயணித்ததால் பேருந்தைவிட்டு இறங்க சொல்லியிருக்கிறார் … Read more

பள்ளிக்கு செல்லும்போது ஆபத்தான பயணம்; விதிமீறி பைக்குகளில் மின்னல் வேகத்தில் பறக்கும் சிறுவர்களால் விபத்து அபாயம்

வேலூர்: 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் லைசென்ஸ் இல்லாமல், பள்ளிக்கு செல்லும்போது, பைக்குகளில் மின்னல் வேகத்தில் சாகச பயணம் மேற்கொள்வது தொடர்கிறது. இது சாலை விதிகளை கடைபிடித்து செல்லும் வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் கண்காணிக்க கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் உள்ளன. மோட்டார் வாகன சட்டத்தின்படி 18 வயதுக்கு மேல் உள்ளவர்களே வாகனம் ஓட்ட தகுதியுள்ளவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு … Read more

விஜயகாந்துக்கு முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து..!

இன்று பிறந்தநாள் காணும் தேமுதிக நிறுவனர் விஜயகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். டுவிட்டரில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உடல் நலம் பெற்று துடிப்பான மனிதராக வலம் வர வேண்டும் என்பதே தனது ஆசை என்றும், நலம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் உடல் ஆரோக்கியத்துடன், எல்லா வளமும் பெற்று இறைவன் அருளுடன் நீடூழி வாழ வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.  Source link

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம்; அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்: ராமதாஸ்

சென்னை: “கடந்த 15 ஆண்டுகளாக போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்த காலத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், தந்தையின் ஆட்சியில் குறைக்கப்பட்ட ஒப்பந்த காலம் தனயனின் ஆட்சியில் மீண்டும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவு முதல்வருக்கு தெரிந்து எடுக்கப்பட்டதா? தெரியாமல் எடுக்கப்பட்டதா? என்பது தெரியவில்லை” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம், அவர்களின் நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்தும் என்று … Read more

விஜயகாந்தை பாத்து கத்துக்கோங்க… இனியாவது மாறுவாரா பிரேமலதா?

தமிழ் திரையுலகில் மட்டுமல்ல. தமிழக அரசியலிலும் சிறப்பான நிலையை எட்டியவர் . இவை அனைத்தும் ஒரே நாளிலோ அல்லது ஒருசில முயற்சிகளிலோ வந்து விடவில்லை. சாமானியராக இருந்து இந்தளவிற்கு பெயர், பணம், புகழ் உள்ளிட்டவற்றை பெற்றிருக்கிறார். திரையுலகில் தொடக்க காலத்தில் இருந்தே அனைவரையும் அரவணைத்து செல்லும் மனப்பாங்கு கொண்டவர். உதவிகள் கேட்டு வருவோருக்கு இல்லை என்று சொன்னதில்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் உரிய மரியாதை கொடுத்து பேசுவார். குறிப்பாக சாப்பாடு விஷயத்தில் குறை … Read more

சென்னை உயர் நிதிமன்றத்தில் இபிஎஸ் மேல்முறையீட்டு மனு விசாரணை தொடங்கியது

சென்னை: எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது. அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்த எடப்பாடி பழனிச்சாமி மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ஏற்கனவே தாக்கல் செய்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது என்னும் நிலையில் யூகங்களின் அடிப்படையில் நீதிபதி … Read more