செம்பருத்தி பார்வதியின் அடுத்த சீரியல் இதுவா? எதிர்பார்ப்பை எகிற வைத்த புகைப்படம்

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. இதை கருத்தில் கொண்டு சேனல்கள் அவ்வப்போது புதிய சீரியல்களை களமிறக்கி வருகின்றனர். மேலும் பழைய சீரியல்களையும் சுவாரஸ்யத்துடன் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஜீ தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட செம்பருத்தி சீரியல் ரசிகர்களின் ஆதரவுடன் தொடர்ந்து 5 ஆண்டுகள் ஒளிபரப்பானது. விஜே அக்னி, ஷபானா, பிரியா ராமன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல … Read more

கடந்த 36 மணி நேரத்தில் 12 படுகொலை தான் நடந்திருக்கு – தமிழக காவல்துறை விளக்கம்!

கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி அறிக்கை விடுத்திருந்த நிலையில், 12 கொலைகள் தான் நடந்துள்ளதாக தமிழக போலீஸ் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியான அந்த அறிக்கையில், “கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்ததாக சில ஊடகச் செய்திகளில் மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் 2208.2022 அன்று 7 கொலைகளும், 23.08.2022 அன்று 5 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளது. சில ஊடகங்களில் பட்டியிலிடப்பட்ட பல்வேறு … Read more

பத்து மாதங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடலை மீட்க கிணற்றில் உள்ள நீரை இறைத்து வரும் போலீசார்.!

மாமூல் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் பத்து மாதங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடலை மீட்க கிணற்றில் உள்ள நீரை போலீசார் இறைத்து வருகின்றனர். குன்றத்தூர் அடுத்த எருமையூர் பகுதியை சேர்ந்தபிரகாஷ் என்ற ரவுடிக்கும், கருத்து என்ற ரவுடிக்கும் மாமூல் வாங்குவதில் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மறைமலை நகரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பிரகாஷ் சென்றபோது கருத்துவும் அவனது கூட்டாளிகளும் சேர்ந்து பிரகாஷை தூக்கி சென்று மண்ணிவாக்கம் பகுதியில் … Read more

“திமுக அரசை விமர்சிக்க யோக்கியதை கிஞ்சிற்றும் கிடையாது” – அதிமுகவை சாடிய முதல்வர் ஸ்டாலின்

கோவை: “சொந்தக் கட்சிக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியில், தங்களது கையாலாகாத்தனத்தை மறைப்பதற்கு, திசை திருப்புகிற நோக்கத்தோடு திமுக அரசை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். திமுக அரசை விமர்சிப்பதற்கு தகுதியோ, யோக்கியதையோ, கிஞ்சிற்றும் கிடையாது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுகவையே அவர் சாடியது தெளிவு. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கோயம்புத்தூர் மாவட்டம், ஈச்சனாரியில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். … Read more

திமுக அரசை விமர்சிப்பதற்கு தகுதியோ, யோக்கியதையோ அவர்களுக்கு கிடையாது..!- அதிமுகவை சாடிய ஸ்டாலின்..!!

நான்கு நாள் பயணமாக ஸ்டாலின் கொங்கு மண்டலத்திற்கு விசிட் செய்து வருகிறார். கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலதை சார்ந்த மாற்று கட்சியினர் திமுகவில் இன்று இணைந்தனர். சுமார் 50 ஆயிரம் மாற்று கட்சியினர் திமுகவில் இன்று இணைந்தனர். பொள்ளாச்சியில் ஆச்சிபட்டி திடலில் இதற்கான விழா நடந்து வருகிறது.புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய … Read more

வெள்ளலூர் பேருந்து நிலையத்தை மாற்றினால் உண்ணாவிரதம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அம்மாவின் ஆட்சி இருக்கும் பொழுது கோவை மாவட்டத்திற்கு மாநகராட்சிக்கும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்தார். திமுக அரசு பொறுப்பேற்றவுடன் அதிமுக கொண்டு வந்த திட்டங்களை முடக்குவதும் ரத்து செய்வதுமாக உள்ளதாக தெரிவித்தார். கோவை மாநகராட்சியில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சுமார் 150 கோடி மதிப்பில் 500க்கும் மேற்பட்ட பணிகளை ரத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.  திமுக ஆட்சியில் 133பணிகளுக்காக 18 சதவிகிதம் கமிஷன் கேட்டதால் எந்த … Read more

திருப்போரூர் ஓஎம்ஆர் சாலையில் அதிவேக மணல் லாரிகளால் பள்ளி மாணவர்கள் அச்சம்

திருப்போரூர்: திருப்போரூர் பகுதியில்  அதிவேகத்தில் செல்லும் மணல் லாரிகளால் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். திருப்போரூரில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் சிறுதாவூர் மற்றும் மானாம்பதி ஆகிய கிராமங்களில் உள்ள ஏரிகளில் இருந்து லாரிகள் மூலம் மண் எடுத்து செல்லப்படுகிறது. இவ்வாறு எடுத்துச்செல்லப்படும் மண் திருப்போரூர் புறவழிச்சாலை பணிகளுக்கும், அரசின் பல்வேறு திட்டப்பணிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. மண் எடுத்து செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து அதற்காக ஒவ்வொரு லாரிக்கும் எவ்வளவு கொள்ளளவு மண் எடுத்துச்செல்லவேண்டும், … Read more

தேனி: பயனாளிகளுக்கு வழங்கப்படும் முன்பே சேதமடையத் துவங்கிய அரசு கட்டிய புது வீடுகள்

சேதமடைந்த மழை நீர் வடிகால் வாய்க்கால் காரணமாக புதிதாக கட்டப்பட்ட வீடுகள் பழங்குடியின மக்களுக்கு வழங்குவதற்கு முன்பே சேதமடைய துவங்கிய அவலம் தேனி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணைக்கு மேல் உள்ள ராசிமலை பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளில் பழங்குடி இன மலைவாழ் மக்கள் வசித்து வந்தனர். பழங்குடியின மக்கள் வாழ்ந்து வரும் வீடுகளின் நிலை குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தொடர்ந்து செய்தி வெளியிட்டதன் அடிப்படையில் கடந்த … Read more

36 மணி நேரத்தில் 15 கொலைகள்; எங்கே போகிறது தமிழகம்? இ.பி.எஸ் ஆவேசம்

36 மணி நேரத்தில் 15 படுகொலைகள் எங்கே போகிறது தமிழகம்? என்று முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை தற்போது வைரலாகி வருகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்த நிலையில், திமுக 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை கைப்பற்றியது. ஆட்சி அமைத்த தொடக்கத்தில் கொரோனா தொற்று பாதிப்பை திறம்பட கையண்டதாக திமுகவுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர். அதே சமயம் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு … Read more

3-ம் ஆண்டு மாணவரை அரிவாளால் வெட்டிய முதலாமாண்டு மாணவர்.!

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் இயங்கிவரும் தனியார் கல்லூரியில் முன்விரோதம் காரணமாக மாணவிகள் முன்பு தன்னை தாக்கிய 3-ம் ஆண்டு மாணவரை அரிவாளால் வெட்டிய முதலாமாண்டு மாணவரை போலீசார் கைது செய்தனர். திருமங்கலம் குப்பலநத்தத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும் அதே கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த 17 வயது மாணவர் ஒருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும், இரு தினங்களுக்கு முன்பு மாணவிகள் முன்பு முதலாமாண்டு மாணவரை … Read more