சுறா துடுப்புகள் சீனாவுக்கு கடத்துவது அதிகரிப்பு: தமிழக கடல் பகுதியில் அரிதாகிவரும் சுறா மீன்கள்

தமிழகத்திலிருந்து இலங்கை வழியாக சீனாவுக்கு சுறா துடுப்புகளை கடத்துவது அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக கடல் பகுதியில் சுறாக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. உலகளவில் 480 வகையான சுறா மீன்கள் உள்ளன. தமிழகத்தில் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பரப்பில் கலங்குச் சுறா, கணவாய் சுறா, கல்லு சுறா, கொண்டையன் சுறா, கொம்பன் சுறா, தாளன் சுறா, பஞ்சு சுறா, பால் சுறா, திமிங்கல சுறா, ஈட்டிபல் சுறா, கங்கை சுறா, … Read more

முதல்வரை நெகிழச் செய்த அமைச்சர்; குட் லிஸ்டில் இடம்; காத்திருக்கும் பரிசு!

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் மாநாடு, பொதுக்கூட்டம் என்றாலே வழக்கமாக பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் மற்றும் கட்சிக்கொடிகளை பல கிலோ மீட்டர் தூரம் வைத்து இம்சைக்கு உள்ளாக்குவது உண்டு. அதிலும் , அதிமுக என்றால் இதுபோன்ற அலப்பறைகளுக்கு அளவே இருக்காது. கட்சி தலைமையின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அந்தந்த பகுதிகளின் பொறுப்பாளர்கள் இதுபோன்ற வேலைகளுக்காகவே லட்சங்களை வாரி இறைப்பார்கள். இதுபோன்ற பேனர் கலாச்சாரத்தின் விளைவாக ஏராளனமான விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலிகளும் அதிகரித்து வந்தது. இதனால், சமூக ஆர்வலர்கள் … Read more

நாமக்கல் மாவட்டம் வெப்படையில் தனியார் நிதி நிறுவன உரிமையாளர் கடத்திக்கொலை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் வெப்படை பாதரை பகுதியை சேர்ந்த கெளதம் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் ஒன்றிய இளைஞர் அணி செயலாளரான இவர், வெப்படை பகுதியில் கடந்த 6 வருடங்களாக தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 22ம் தேதி நிதி நிறுவனத்தில் இருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அவரை வழி மறித்த மர்ம கும்பல் கெளதமை இரு சக்கர வாகனத்துடன் கடத்தி சென்றுள்ளார். காரில் கடத்திச் … Read more

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை; 7 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி நெல் சாய்ந்தது.! நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாரான 7 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெற்பயிர்கள் சாய்ந்து உள்ளதால் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மாலை துவங்கி நள்ளிரவு வரை கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோயில், சீர்காழி , கொள்ளிடம், தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக … Read more

'நான் பிஜேபி காரன் தகராறு பண்ணுவேன்' – திருப்பூர் பாஜக தலைவர் போலீசாருடன் வாக்குவாதம்

’’நான் பிஜேபி காரன் தகராறு பண்ணுவேன், திமுக அடாவடி என தகராறு பண்ணுவேன்’’ என திருப்பூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது. திருப்பூரில் நடைபெற உள்ள சிறு குறு தொழில் மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை தந்துள்ளார். பல்லடம் சாலை வழியாக திருப்பூருக்கு முதல்வர் வருவதற்கு ஏற்ப போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் சாலையோரம் நின்ற வாகனங்களையும் அப்புறப்படுத்தி போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத … Read more

பில்கிஸ் பானு, பெகாசஸ் வழக்குகள் – உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 குற்றவாளிகள் ஆயுள் தண்டனை பெற்று வந்தநிலையில் ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு 11 பேரையும் விடுவித்தது. இதற்கு அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்தது. 11 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஎம் தலைவர் சுபாஷினி அலி மற்றும் இருவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் வியாழக்கிழமை ஓய்வு பெற உள்ள தலைமை நீதிபதி என்.வி … Read more

சிகிச்சைக்காக ராஜாத்தி அம்மாள் நாளை ஜெர்மனி பயணம்

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள், சென்னை சிஐடி காலனியில் மகள் கனிமொழியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு செரிமானக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஜெர்மனியில் உள்ள போர்ன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ராஜாத்தி அம்மாள் நாளை இரவு ஜெர்மனி புறப்பட்டுச் செல்கிறார். அவருடன், மகள் கனிமொழி உள்ளிட்டோர் செல்கின்றனர். Source link

திமுக எம்பி கனிமொழி ஜெர்மனிக்கு திடீர் பயணம்… இதுதான் காரணம்!

மறைந்த தமிழக முன்னாள் முதஸ்வர் மு. கருணாநிதியின் துணைவியாரான ராசாத்தி அம்மாள், சென்னை சிஐடி காலனியில் தமது மகள் கனிமொழியுடன் வசித்து வருகிறார். சில ஆண்டுகளாகவே ராசாத்தி அம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருவதாக தெரிகிறது. அதுவும் கருணாநிதி மறைவுக்கு பிறகு ராசாத்தி அம்மாளுக்கு அவ்வபோது உடல்நிலை கோளாறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு வயிற்றுவலி, அஜீரண கோளாறு உள்ளிட்ட பிர்ச்னைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவரின் … Read more

புதுச்சேரி சட்டசபையில் பரபரப்பு முதல்வர் ரங்கசாமி மீது பாஜ எம்எல்ஏ சரமாரி புகார்

புதுச்சேரி: பாஜ ஆதரவு சுயேட்சைகள் மற்றும் பாஜ எம்எல்ஏக்களின் தொகுதிகளை முதல்வர் ரங்கசாமி பழிவாங்குகிறார் என புதுச்சேரி சட்டசபையில் கல்யாணசுந்தரம் எம்எல்ஏ சரமாரி புகார் கூறியுள்ளார். புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது சுயேட்சை எம்எல்ஏ அங்காளன்,‘‘எனது தொகுதியில் என்னை கேட்காமல் 2, 3 கமிட்டிகள் போடப்பட்டுள்ளது. இது எந்த விதத்தில் நியாயம். என்னை புறக்கணிப்பதற்கு காரணம் என்ன? பாஜவை நான் ஆதரிப்பதற்காக என்னை கேட்காமல் போடுகிறார்களா? அல்லது தனித்தொகுதி என்பதால் யார் கேட்க போகிறார்கள் … Read more

'ஸ்டாலின்தான் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர்' – சிறுமி தான்யாவின் பெற்றோர் உருக்கம்!

குழந்தை தான்யாவை காப்பாற்றிய தமிழக முதலமைச்சர் தான் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சராக இருக்க வேண்டும்; அவர்தான் எங்கள் குலசாமி என சிறுமி தான்யாவின் பெற்றோர் உருக்கமாக பேசியுள்ளனர். திருப்பெரும்புதூர் அருகே உள்ள சவீதா மருத்துவமனையில் முகச்சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்த சிறுமி தான்யாவுக்கு தமிழக முதல்வரின் உத்தரவின் படி முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த நிலையில் மருத்துவர்களின் அறிவுரைப்படி சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார், சிறுமியை பார்க்க யாருக்கும் … Read more