சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்… ஒற்றை ஆளாக போராடும் பாக்கியலட்சுமி

இல்லத்தரசிகள் மட்டுமல்லாது இளைஞர்கள் மத்திலும் நல்ல வரவேற்பை பெற்று வருவது சின்னத்திரை நிகழ்ச்சிகள். வார நாட்களில் சீரியலும். வார இறுதியில் ரியாலிட்டி ஷோக்களும் ரசிகர்களின் மனதை ஆக்கிரமித்து வருகினறன. இதை பயன்படுத்திக்கொள்ளும் வகையில்.சேனல்களும் அவ்வப்போது புதிய சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை களமிறங்கி வருகின்றன. இதில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும். டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை பெறுவது ஒரு சில சீரியல்கள் மட்டுமே. இதிலும் குறிப்பாக சன்டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்கே அதிக போட்டி நடக்கும். … Read more

#கன்னியாகுமரி || குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடை பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து காவல் துறையினர், அப்பகுதியில் சோதனை மேற்கொண்டதில் விஜயன்(51) என்பவரின் கடையில் புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா விற்பனை செய்ததது தெரிய வந்துள்ளது. … Read more

கொலை முயற்சி வழக்கில் மருமகனின் 10 ஆண்டு சிறை ரத்து: மாமியார் மன்னித்ததால் ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கடன் பிரச்சினையில் மாமியாரை அரிவாள் மனையால் வெட்டிய மருமகனுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை, மாமியார் மன்னித்துவிட்டார் என்ற காரணத்தின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. சேலம் ஆத்தூரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணி. இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2017 டிசம்பர் மாதம் 28-ம் தேதி இவர் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதில் வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சுப்பிரமணி வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து தனது … Read more

சத்துணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் – 28 பேர் மருத்துவமனையில் அனுமதி

கவிமணி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு திட்டத்தில் மதிய உணவு சாப்பிட்ட மாணவிகள் 26 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவிகள் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1300க்கு மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இன்று மதிய உணவு பள்ளியில் வழங்கப்பட்டுள்ளது. அதில் சோறு, பருப்பு குழம்பு மற்றும் முட்டை பரிமாறப்பட்டதாகக் கூறப்படுகிறது. … Read more

இந்தியாவின் முதல் பழங்குடி பெண் ஜனாதிபதி : திரௌபதி முர்முவுக்கு தலைவர்கள் வாழ்த்து

கடந்த ஜூலை 18-ந் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில். பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்கலாம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், நாட்டின் அடுத்த குடியரசு தலைவர் யார் என்பதை நிர்ணையிக்கும் தேர்தல் கடந்த 18-ந் தேதி நடைபெற்றது இதில் பாஜக சார்பில் பழங்குடியின பெண்ணான திரௌபதி முர்மு மற்றுமு் எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா … Read more

தமிழகத்தில் மீண்டும் பரபரப்பு.. அரசுப்பள்ளி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி.!

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியை சேர்ந்த கஜசுபமித்ரா (வயது14) பூஞ்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார் . இந்நிலையில் 9 ஆம் வகுப்பு மாணவ , மாணவிகளுக்கு செய்முறை தேர்வு அப்பள்ளியின் 2 ஆவது மாடியில் உள்ள வகுப்பறையில் நடந்து கொண்டிருந்தது . அப்போது மாணவி கஜசுபமித்ரா கையில் பிட் பேப்பர் வைத்து கொண்டு, தேர்வு எழுத முயன்றதாக கூறப்படுகிறது. இதனை வகுப்பறையில் உள்ள ஆசிரியை அறிவுரை கூறி கண்டித்துள்ளார். மேலும், … Read more

‘வெல்கம் டு சென்னை’ – செஸ் ஒலிம்பியாட் பாடலை வெளியீட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்

சென்னை: “வெலகம் டு சென்னை” என்ற செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். இந்திய வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியானது 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான பாடல் படப்பிடிப்பு கடந்த 7-ம் தேதி இந்த சென்னை … Read more

ஹார்ட் டிரைவை கைப்பற்றிய புலனாய்வு குழு! கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அவிழுமா மர்மமுடிச்சு?

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்ற வன்முறை தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை தொடங்கினர். அப்போது அவர்கள் கையில் ஹார்ட் டிரைவ் கிடைத்துள்ள நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முழு உண்மைகளும் தெரிய வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழப்புக்கு நீதி கேட்டு கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் தனியார் பள்ளி சூறையாடப்பட்டதோடு காவல்துறை வாகனங்கள் … Read more

மாணவி ஸ்ரீமதி மரணம்; பெரும்பாலான சி.சி டி.வி காட்சிகளை மறைப்பது ஏன்? வேல்முருகன் கேள்வி

க. சண்முகவடிவேல் Kallakurichi student death case; T. Velmurugan MLA Tamil News: திருச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய 100-க்கும் மேற்பட்டவர்கள் தமிழக வாழ்வுரிமை கட்சியில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளும் இணைப்பு விழா திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் ராயல் ராஜா தலைமை தாங்கினார். திருச்சி வடக்கு மாவட்ட … Read more

கடன் தொல்லையால் தந்தை மகள் தற்கொலை.. கரூர் அருகே நிகழ்ந்த சோகம்..!

கடன் தொல்லையால் தந்தை மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அருகே உள்ள காந்திகிராமம் போக்குவரத்து நகரை சேர்ந்தவர் முகமது பரீத். இவருக்கு திருமணமாகி  இரண்டு குழந்தைகள் உள்ளனர். முகமது அங்குள்ள  வங்கியில் கடன் பெற்றுபுதிதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இதற்கிடையில்,  கடனை திரும்ப செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மந்திரித்த தண்ணீர் எனக் கூறி மனைவி நஸ்ரின்பானு மற்றும் ஜகிந்நாஜ் ஆகியோருக்கு தண்ணீரில் … Read more