75வது சுதந்திர தினம்: அஞ்சல் அட்டைகளில் தியாகிகள் படம் வரைந்து அசத்திய பள்ளி மாணவர்கள்

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 அஞ்சல் அட்டைகளில் சுதந்திர போராட்ட தலைவர்கள் குறிப்பு மற்றும் தேசிய சின்னங்கள் வரைந்து  பள்ளி மாணவர்கள் அசத்தினர். திருச்சி, தென்னூரில் உள்ள தென்னூர் நடுநிலைப்பள்ளியில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 மாணவ, மாணவிகள் 75 அஞ்சல் அட்டைகளில், 750 வினாடிகளில் சுதந்திரப் போராட்ட தலைவர்களின் குறிப்பு மற்றும் தேசிய சின்னங்களை வரைந்து திருச்சி மாவட்ட நூலகத்திற்கு அஞ்சல் அனுப்பினர். மறந்துபோன அஞ்சல் கடிதம் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் … Read more

ஜெகதீப் தன்கர் துணை ஜனாதிபதியாக இன்று பதவியேற்றார்!

இந்தியாவின் 14ஆவது குடியரசுத் துணை தலைவராக மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தன்கர் இன்று (ஆகஸ்ட் 11) பதவியேற்றுக் கொண்டார். ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தன்கருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தன்கர் மாநிலங்களவை தலைவராகவும் செயல்பட உள்ளார். குடியரசுத் துணை தலைவர் தேர்தல் கடந்த ஆகஸ்ட் … Read more

30% மின் கட்டண உயர்வு | “வாழ்வை முடித்துக்கொள்ள வேண்டிய நிலை” – கோவை, திருப்பூர் விசைத்தறியாளர்கள் வேதனை

திருப்பூர்: “30 சதவீதம் மின் கட்டண உயர்வை அமல்படுத்தினால், எங்கள் வாழ்வை முடித்துக்கொள்ள வேண்டிய நிலைதான் வரும்” என்று கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள் பொதுக்குழுவில் வேதனையுடன் பேசப்பட்டது கவனம் ஈர்த்துள்ளது. கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அருகே கோம்பக்காட்டுபுதூரில் இன்று நடைபெற்றது. இதில் சங்கத் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். செயலாளர் குமாரசாமி முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், துணைச்செயலாளர் … Read more

அமைச்சர்கள் டிரான்ஸ்ஃபர் லிஸ்ட்டில் பிடிஆர் பெயர்?- முதல்வரின் முடிவு என்ன!

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முதல் அரசு ஊழியர்களின் ஓய்வூதிய விவகாரம் வரை, தான் வெளிப்படுத்தும் தன்னிச்சையான கருத்துகளால் அவ்வபோது சர்ச்சையில் சிக்கி வருகிறார் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். டெல்லி ஃப்ரஷர் : அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு, பெட்ரோல், டீசல் மீதான வரி வருவாய் போன்ற முக்கிய விவகாரங்களில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, பிடிஆர் அவ்வபோது பதிலடி கொடுப்பதை அவர் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மத்திய நிதியமைச்சகமே ரசிக்கவில்லையாம். எனவே பிடிஆரை மாநில … Read more

'பெரியார் கருப்புச் சட்டை அணிந்து தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றார்' – ப.சிதம்பரம்

சென்னை: பெரியார் கருப்புச் சட்டை அணிந்தே தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கருப்புச் சட்டை தொடர்பான பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதில் அளித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதரம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,” கருப்புச் சட்டை அணிந்தவர்கள் ஒருபோதும் மக்களின் நம்பிக்கையைப் பெற மாட்டார்கள் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார் தந்தை ஈ வெ ரா பெரியார் தம் வாழ்நாள் முழுதும் கருப்புச் சட்டையை அணிந்தார். … Read more

ஓபிஎஸ் தொடர்ந்த அதிமுக பொதுக்குழு வழக்கு: தீர்ப்பை தள்ளி வைத்த நீதிமன்றம்!

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், பொதுக்குழு உறுப்பினர்களுடைய கோரிக்கையை ஏற்று ஜூலை 11ல் பொதுக்குழு கூட்டப்படும் என ஜூன் 23 பொதுக்குழுவிலேயே அறிவிக்கப்பட்டதாகவும், அந்த அறிவிப்பு அப்போதே நேரலையாக அனைத்து தொலைக்காட்சிகளிலும், செய்தியாக மறுநாள் அனைத்து பத்திரிகைகளிலும் வெளியானதால், அதை நோட்டீசாக கருத வேண்டும் என்றும் விளக்கம் அளித்தார். … Read more

குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்தால் எண்ணெய் பொருட்கள் விலை கட்டுப்பாட்டுக்கு வரும்: கே.எஸ்.அழகிரி

தருமபுரி: குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்தால், எண்ணெய் பொருட்களின் விலை கட்டுப்பாட்டுக்கு வரும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இந்திய சுதந்திர பவள விழா ஆண்டு கொண்டாட்டத்தை ஒட்டி தருமபுரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் தருமபுரி மாவட்டம் முழுக்க பாதயாத்திரை நிகழ்ச்சி நடந்து வருகிறது. இன்று (வியாழன்) தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் நடந்த பாதயாத்திரை நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி கலந்து கொண்டார். முன்னதாக, பாப்பாரப்பட்டியில் … Read more

நீலகிரி, கோவையை விடாத கனமழை: இன்றும் சுழன்றடிக்கும்!

சென்னையில் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று 11.08.2022: வடதமிழக மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 12.08.2022, 13.08.2022: … Read more

தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்களில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று பள்ளி, கல்லூரிகளில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நடந்தது. அண்மையில், போதைப் பொருள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 11) தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து ஏறத்தாழ 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் போதை ஒழிப்பு உறுதிமொழி … Read more

தெற்கை புறக்கணிக்கிறாரா எடப்பாடி? கொதிக்கும் தென் மண்டல அதிமுக!

அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதி மாயத் தேவர் நேற்று முன் தினம் காலமானார் அவருக்கு வயது 88. எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய சமயம் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்கு தேர்தல் வந்தது. அதில் மாயத்தேவர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் முதன்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்ஜிஆரின் சின்னம் என பாமர மக்கள் மனதில் பதிந்த இரட்டை இலை சின்னத்துக்காக இன்று அதிமுகவில் கடுமையான மல்லுகட்டு நடைபெறுகிறது. அந்த சின்னத்தில் முதன்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மாயத் தேவர். … Read more