பரமத்திவேலூர் அருக 80 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே 80 ஆண்டுகளுக்கு மேலாக சாலையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றப்பட்டன. ஜேடர்பாளையத்தில் இருந்த இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு 2010 ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படாததால் ஜூலை 11-ந் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது. ஒரு வாரத்துக்கு முன்பே அங்கிருந்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. Source link

கர்நாடகாவில் கனமழை | மேட்டூர் அணையில் இருந்து 15,000 கன அடியாக நீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர்: காவிரி நீர் பிடிப்புப் பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 8010 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று 3149 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 8010 கனஅடியாக அதிகரித்துள்ளது. … Read more

"இது எவ்வளவு கேவலம்!" – ஓபிஎஸ், திமுகவை கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி

இன்று நடைபெற்ற சம்பவத்திற்கு முழு பொறுப்பு திமுகவும், துரோகி ஓபிஎஸ்ஸும் தான். அவர் ஒரு சுயநலவாதி. தனக்கு கிடைக்காத பதவி வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என நினைப்பார் என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக தெரிவித்தார். சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கல்வீச்சில் காயமடைந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிர்வாகிகளை அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து நலம் விசாரித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி … Read more

அ.தி.மு.க பொதுக்குழு: கே.பி முனுசாமி- சி.வி சண்முகம் திடீர் வாக்குவாதம் ஏன்?

ADMK general council meeting: KP Munusamy – CV Shanmugam Tamil News: அ.தி.மு.க பொதுக் குழு கூட்டம் சென்னை வானகரத்தில் சரியாக 9.35 மணிக்கு தொடங்கியது. முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் வரவேற்புரை வழங்கினார். பொதுக் குழுவிற்கு அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை தாங்கி பொதுக் குழு கூட்டத்தை நடத்தி தர வேண்டும் என்று என்ற தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். இதை கே.பிமுனுசாமி வழிமொழிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து 16 … Read more

முக்கிய விவகாரத்தில்… அர்ஜுன் சம்பத் அதிரடியாக கைது.!

இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் அக்கட்சியினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக சென்றனர். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினர், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மனு அளிப்பதற்கு  இங்கு அனுமதி இல்லை என தெரிவித்துள்ளனர்.    இதனால் இந்து மக்கள் கட்சியினர், காவல்துறையினருக்கு எதிராக முழக்கமிட்டனர். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சற்று பரபரப்பு நிலவியது.  இதனை தொடர்ந்து, இந்து மக்கள் கட்சி … Read more

ஓ.பன்னீர்செல்வத்தின் செயலுக்கு அதிமுக தலைவர்கள் கண்டனம்.!

அதிமுக தலைமையகத்தைக் கைப்பற்ற முயன்று வன்முறையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்குப் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் வாயிற்கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றார். அப்போது மோதல் ஏற்பட்டதில் பலர் காயமடைந்தனர்.   அதிமுக பொதுக்குழுவில் பேசிய இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரவுடிகளோடு இணைந்து வன்முறையை கையிலெடுத்த ஓபிஎஸ் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தார். … Read more

பழங்குடியினச் சான்றிதழ் கிடைக்காத விரக்தியில் தற்கொலை: முதியவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க முதல்வரிடம் கோரிக்கை

சென்னை: சாதிச்சான்றிதழ் பெறமுடியாமல் தற்கொலை செய்துகொண்ட முதியவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இன்று விவசாய சங்கத்தினர் முதல்வரிடம் நேரில் சந்தித்து அளித்தனர். இதுகுறித்து இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று காலை தலைமைச செயலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் மாநில செயலாளர் … Read more

‘கடலில் அந்திய சக்தியா’? மீனவர்களுக்கு அட்வைஸ் கொடுத்த சாகச குழுவினர்

சமுத்திரத்தை காக்க வேண்டி பாய்மரப் படகில் 500 நாட்டிக்கல் மைல் தூரம் சாகச பயணம் மேற்கொண்டு மீனவர்களிடம், தமிழக கடலோர பாதுகாப்பு குழுவினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தமிழ்நாட்டின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் அந்நிய ஊடுருவலை கண்காணிக்கவும், கடல் மாசுபாட்டை தடுக்கவும் சென்னை முதல் ராமேஸ்வரம் வரையிலான கடல் சாகச பாய்மரப்படகு பயணத்தை கடந்த 9 ஆம் தேதி காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு சென்னையில் தொடங்கி வைத்தார். மீனவ மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் இருந்து … Read more

இதையெல்லாம் இப்போவே உங்க கிச்சன்ல இருந்து தூக்கி எறிங்க!

சமையல் ஒரு அழகான பொழுதுபோக்கு. இது நீங்கள் உண்மையிலேயே ரசிக்கக்கூடிய ஒன்று. ஆனால் சில சமயங்களில் மிகவும் குழப்பமாக தோன்றும், குறிப்பாக நீங்கள் நேரம் இல்லாமல் இருக்கும்போது. இதுபோன்ற சமயங்களில், சில ஹேக்ஸ் உங்கள் வாழ்க்கையை மிகவும் எளிதாக்கும். எனவே, உங்கள் சமையலறையை சிறப்பாக பராமரிக்க உதவும் சில கிச்சன் ஹேக்ஸ் இங்கே உள்ளன. பழைய ஸ்பாஞ்ச் உங்கள் கிச்சன் ஸ்பாஞ்சை சோப்பு நீரில் சுத்தம் செய்வதன் மூலமோ, டிஷ்வாஷரில் கழுவுவதன் மூலமோ அல்லது மைக்ரோவேவில் சனிடைஸ் … Read more

ஓபிஎஸ்.,க்கு அடுத்த ஆப்பு..? தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்திக்க போகும் அதிமுக புள்ளிகள்.!

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று நடந்து முடிந்து உள்ளது. இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், முக்கியமாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் அனைத்தும் நீக்கப்படுவதாகவும், இதற்காக அதிமுகவில் கொண்டுவரப்பட்ட சட்ட விதி 20 முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகவும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இது மட்டுமல்லாமல் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றும், பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை இன்னும் 4 மாதத்தில் நடத்தி முடிப்பதற்கும், அதற்கான தேர்தல் பொறுப்பாளர்களையும் … Read more