இந்து சமய அறநிலைய துறை ஆணையருக்கு அபராதம்: இடைக்கால தடை!

சென்னை சூளையில் உள்ள அருள்மிகு சொக்கவேல் சுப்பிரமணியர் திருக்கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு எடுத்த தனி நபர்கள், நீண்ட காலம் வாடகை செலுத்தாமல் இருப்பதாகக் கூறி சென்னை சூளையைச் சேர்ந்த சுகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நடவடிக்கையை விரைவுபடுத்த கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் … Read more

ப்ரேக்கப் ஆனபிறகும் தொடர்ந்து டார்ச்சர் செய்த இளைஞர் – இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோட்டில் காதல் பிரேக்கப் செய்தபிறகும் காதலன் தொடர்ந்து டார்ச்சர் செய்துவந்ததால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சத்தியராஜ். எலக்ட்ரீசியனான இவரது மனைவி அரசுப்பள்ளி ஆசிரியர். இவர்களுடைய மகள் திவ்யா(20)  மார்த்தாண்டம் நேசமணி கிறிஸ்தவ கல்லூரியில் பிஏ முடித்துவிட்டு உயர்கல்வி படிப்பிற்காக தயாராகி வருகிறார். இந்த நிலையில் சூழிகோணம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் திவ்யாவை காதலித்து வந்துள்ளார். திவ்யாவும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் காதலை தொடராமல் … Read more

கோவை நகைக் கடையில் கொள்ளை: சி.சி.டி.வி வீடியோவில் சிக்கிய கொள்ளையன்

பி. ரஹ்மான், கோவை மாவட்டம் கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து சத்தி செல்லும் சாலையில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமாக பாலாஜி ஜீவல்லரி என்ற பெயரில் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. மக்கள் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில் எப்போது வாகனங்கள் வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கும். இந்நிலையில் நேற்று மாலை இக்கடைக்கு வந்ந ஒருவர் பிரபல வங்கியின் மேலாளர் என கூறி தங்கச்சங்கிலிகளை காண்பிக்க சொல்லியிருக்கிறார். இதனையடுத்து கடையின் ஊழியர் அவருக்கு தங்கச்சங்கிலிகளை எடுத்துக்காண்பித்துள்ளார். அப்போது அப்பெண் ஊழியர் … Read more

நேர்மையானவர்களுக்கு நான் ‘சாஃப்ட்’, தவறு செய்வோருக்கு நான் ‘சர்வாதிகாரி’ – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: “என்னை ‘சாஃப்ட் முதல்வர்’ என்று யாரும் கருதிவிட வேண்டாம். நேர்மையானவர்களுக்குத்தான் நான் சாஃப்ட், தவறு செய்வோருக்கு நான் சர்வாதிகாரியாக மாறுவேன்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். போதைப் பொருள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய நிறைவுரை: “அனைவரும் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் முழு மூச்சோடு செயல்படப் போகிறீர்கள் என்பதை நினைக்கும்போது, கூட்டத்தின் துவக்கத்தில் இருந்த கவலை எனக்கு கொஞ்சம் குறைந்திருக்கிறது, முழுவதும் குறையவில்லை, … Read more

ஓ.பன்னீர்செல்வத்திற்கு சசிகலா ஓகே – 'இரட்டை இலை'க்கு பக்கா ஸ்கெட்ச்!

அதிமுக பிளவுக்கு பின்னணியில் திமுக காரணமாக இருக்கலாம் என, வி.கே.சசிகலா குற்றம் சாட்டி உள்ளார். அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.மாயத்தேவர் வயது மூப்பு காரணமாக நேற்று இயற்கை எய்தினார். அவரது உடல் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடலுக்கு அதிமுக, திமுக, அமமுக, மதிமுக, உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் கட்சி பாகுபாடின்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் மறைந்த மாயத்தேவர் உடலுக்கு நேரில் … Read more

`அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க இடைக்கால தடை'- சென்னை உயர்நீதிமன்றம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சூளையில் உள்ள அருள்மிகு சொக்கவேல் சுப்பிரமணியர் திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துகளை குத்தகைக்கு எடுத்த தனி நபர்கள், நீண்ட காலம் வாடகை செலுத்தாமல் இருப்பதாகக் கூறி சென்னை சூளையைச் சேர்ந்த சுகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, … Read more

3 1/2 மணி நேரம் ஆலோசனை நடத்திய ஓ.பி.எஸ்: சேலம் மாவட்டத்திற்கு தனி கவனிப்பு

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் நிலவி வரும் நிலையில், ஓ.பி.எஸ் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களுடன் செவ்வாய்க்கிழமை சுமார் மூன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது, சேலம் மாவட்டத்துக்கு தனிக் கவனம் செலுத்தினார். முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் மற்றும் தலைமைப் பொறுப்பாளர்களுடன் செவ்வாய்க்கிழமை சுமார் மூன்றரை மணி நேரம் விரிவான ஆலோசனை நடத்தினார். அப்போது, சேலம் மாவட்டப் பொறுப்பாளர்களிடம் அங்கே உள்ள பிரச்னைகளைக் கேட்டு தனிக் கவனம் செலுத்தியுள்ளார். … Read more

புதுச்சேரி அரசின் முழு பட்ஜெட்டை விரைவில் முதல்வர் தாக்கல் செய்வார்: செல்வம் தகவல்

புதுச்சேரி: விரைவில் அலுவல் ஆய்வுக்குழு கூடி முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான தேதியை அறிவிப்போம் என்றும், புதுச்சேரி அரசின் முழு பட்ஜெட்டை முதல்வர் தாக்கல் செய்வார் என்றும் அம்மாநில சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது: “2022 – 2023 நிதியாண்டுக்கான புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று நமது நாட்டின் … Read more

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: ராமதாஸ் வைத்த கோரிக்கை!

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை தண்டிப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று நிறுவனர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “சென்னை போரூர் சுங்கச்சாவடி அருகே காரில் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணை கத்தி முனையில் கடத்திச் சென்ற 4 பேர் கும்பல், கொளுத்துவாஞ்சேரி என்ற இடத்தில் முள்புதருக்கு இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இளம் பெண்ணை கடத்தி சீரழித்த … Read more

‘சூரி ஆன்மிகத்திற்கு எதிரானவரா?’-சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வீடியோ பகிரும் ரசிகர்கள்

நடிகர் சூரி தனது சொந்த ஊரில் நடைபெற்ற கோயில் விழாவில் ஒயிலாட்டம் ஆடும் வீடியோவை அவரது நண்பர்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற விருமன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூரி, சூர்யாவை பாராட்டி பேசும் போது… 1000 கோயில் கட்டுவதைவிட, 1000 அன்ன சத்திரம் கட்டுவதை விட ஒருவரை படிக்க வைப்பது பலநூறு ஆண்டுகள் பேசும் எனக் கூறியது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதோடு, சர்ச்சையையும் ஏற்படுத்தியது. … Read more