‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ – மீண்டும் பொதுமக்களை அச்சுறுத்தும் பாகுபலி காட்டுயானை

மேட்டுப்பாளையம் – ஊட்டி நெடுஞ்சாலையில் நடந்து சென்ற பாகுபலி காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து மிகுந்த மேட்டுப்பாளையம் – ஊட்டி நெடுஞ்சாலை வழியே பாகுபலி என்றழைக்கப்படும் ஒற்றை காட்டுயானை உலா வந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. மேட்டுப்பாளையத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பல மாதங்களாக ஒற்றை ஆண் காட்டுயானை ஒன்று சுற்றி வருகிறது. இதனை அடர்ந்த காட்டுக்குள் விரட்ட வனத் துறையினர் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிலையில், கடந்த … Read more

பெரியாறு அணைக்கு எதிரான ஆல்பம் பாடலுக்கு தடை விதிக்கக் கோரி மனு

முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டம் உயரும் போதெல்லாம் அணை உடைந்துவிடும் என கேரளாவில் வதந்தி பரப்புவது வழக்கம். இந்நிலையில், கடந்த வாரம் அணை பலவீனமாக இருப்பதாக ஆல்பம் பாடல் ஒன்று வெளியிடப்பட்டது. இதில் கிராஃபிக்ஸ் மூலம் அணை உடைவது போல காட்சிகள் உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி ஆட்சியர் அலுவலகத்தில் பாரதிய கிசான் சங்க மாவட்டத் தலைவர் சதீஷ்பாபு, கூடலூர் முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கத் தலைவர் கொடியரசன், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கச் செயலாளர் சிவனாண்டி … Read more

ஓ.பன்னீர்செல்வம் போட்ட ஸ்கெட்ச் – தூண்டிலில் சிக்கிய எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள, ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முடிவுக்கு வந்த இரட்டை தலைமைஅஇஅதிமுகவில், சுமார் 4 ஆண்டுகளாக நீடித்து வந்த இரட்டைத் தலைமை, கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. அன்றைய தினம், சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண்டபத்தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், இடைக்கால பொதுச் செயலாளராக, எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, … Read more

கூட்ட நெரிசல்: பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்

அருப்புக்கோட்டை அருகே பேருந்தின் படியில் இருந்து கீழே விழுந்து படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி அடுத்து ரெங்கையன்பட்டியைச் சேர்ந்தவர் சுப்புராஜ். இவருடைய மகள் சக்திமாரி (16) பனையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், சக்திமாரி தினமும் தனது ஊரிலிருந்து அரசுப் பேருந்தில் பள்ளிக்குச் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை சத்திமாரி வழக்கம்போல் பள்ளி முடிந்து பனையூர் … Read more

மாநில அளவில் பட்டு, பருத்தி ரகங்களில் சிறந்த நெசவாளர், ஏற்றுமதியாளருக்கு விருது: காசோலை, கேடயம், சான்றிதழ்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: மாநில அளவில் பட்டு, பருத்தி ரகங்களுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுகள், சிறந்த கைத்தறி ஏற்றுமதியாளர் விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கைத்தறி, விசைத்தறி, துணி நூல்பிரிவுகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காகவும், நெசவாளர்களின் நலனுக்காகவும் தமிழக அரசுபல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த 2021-22-ம்ஆண்டுக்கான கைத்தறி, துணிநூல் துறை மானியக் கோரிக்கையில் ‘மாநில அளவிலான சிறந்த கைத்தறி நெசவாளர் விருது வழங்கும் திட்டத்தின் கீழ் பரிசுத் தொகை உயர்த்தி … Read more

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எவ்வளவு கட்டணம்? தொடரும் விசாரணை!

தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத மாணவர்களிடம் அரசு கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்றால், மீதமுள்ள 50 சதவீத மாணவர்களிடம் 50 முதல் 60 லட்சம் ரூபாய் வரை வசூலிக்க வேண்டி வரும் என, தனியார் மருத்துவ கல்லூரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகள், மொத்தமுள்ள இடங்களில் 50 சதவீத இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் கடந்த … Read more

சாலை விபத்தில் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட ஆசிரியை – போராடி மீட்ட காவலர்

இருசக்கர வாகனத்தில் சென்ற ஆசிரியை மீது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில், ஆற்றில் தூக்கி வீசப்பட்ட ஆசிரியையை போராடி மீட்ட காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மகிழஞ்சேரி ஆதிலட்சுமி நகரைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவாரின் மனைவி உஷா. இவர், நன்னிலம் அருகே ஆணைக்குப்பம் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பணங்குடி அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த … Read more

10 நிமிடத்தில் 50 பாடல்கள்: சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற கோவை சிறுமி

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர்கள்  ரமேஷ் ,சாலினி தம்பதியினர். இவர்களது ஐந்து வயது மகள் இனியா. கோவை  மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளியில் யூ.கே.ஜி பயின்று வரும் இனியா அபார திறன் கொண்டவர். அனைத்து வகை காய்கறிகள் –  பழங்கள் –  நிறங்கள் – மற்றும் பொருட்களின் பெயர்களை மிகச்சரியாக கூறினார். யூ.கே.ஜி பயின்று வரும் இனியா, இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெற்று சாதனை இந்த நிலையில் 10 நிமிடங்களில் ஆங்கிலத்தில் உள்ள 50 குழந்தைகளுக்கான … Read more

பாடத் திட்டங்கள் மாற்றம், இடஒதுக்கீடு குறித்து ஆலோசிக்க முதல்வர் தலைமையில் ஆக.17-ல் துணைவேந்தர்கள் மாநாடு: அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு வரும் 17-ம் தேதி நடக்க உள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், உயர்கல்வித் துறை செயலர் உள்ளிட்டஅதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி கூறியதாவது: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் தனியாரிடம் இருந்தபோது, 1,573 ஆசிரியர்கள், 4,277ஊழியர்கள் கூடுதலாக இருந்தனர். இத்தனை பேருடன் அந்த … Read more

காஞ்சிபுரம்: அரசுப் பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்

அரசுப் பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்களின் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தாம்பரம் நோக்கிச் செல்லும் தடம் எண் 583 பேருந்தில், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் சிலர் பேருந்தில் தொங்கிய படியும், வேகமாக செல்லும் பேருந்து வெளியே கால்களை நீட்டி நெடுஞ்சாலையில் காலை தேய்த்தவாறும் பொதுமக்களையும் வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் வகையில் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். இதனை ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்படு … Read more