குடிகார கணவன்.. கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!

குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை வளசரவாக்கம், வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் குமார். இவருக்கு திருமணமாகி விஜயா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். இருவரும் தொலைகாட்ச்இ தொடர்களில் நடித்து வருகின்றனர்.குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மூன்றாம் தேதி குடிபோதையில் வந்த அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தது விட்டதாக காவல்துறையினருக்கு விஜயா தகவல் அளித்தார். விரைந்து … Read more

தேவைக்கேற்ப உரங்களை வாங்கி பயன்படுத்துங்கள் – விவசாயிகளுக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோள்

சென்னை: அனைத்து மாவட்டங்களிலும் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் செலவினங்களைக் குறைக்க, தேவைக்கேற்ப உரத்தை வாங்கி பயன்படுத்தும்படி வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: நடப்பாண்டில், பருவமழை மிகவும் சாதகமானதாக இருப்பதாலும், மேட்டூர் அணை முதன்முறையாக, வழக்கத்துக்கு முன்னதாகவே மே 24-ம் தேதியே திறக்கப்பட்டதாலும், நடப்பு குறுவைப் பருவத்தில் வழக்கத்தை விட 5.2 லட்சம் ஏக்கருக்கும் மேல் நெல் சாகுபடி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, டெல்டா விவசாயிகளின் தேவையின் … Read more

பெங்களூருவில் இருந்து குட்கா கடத்திய இளைஞர் கைது.!

பெங்களூரில் இருந்து குட்கா கடத்திய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் இருந்து சென்னைக்கு குட்கா, பான்மசாலா உள்ளிட்ட தமிழக அரசு தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தி வரப்படுவதாக வேலூர் மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் அணைக்கட்டு சாலை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பெங்களூரில் இருந்து வந்த சரக்கு ஆட்டோவை மடக்கி பிடித்து அதனை சோதனை செய்ததில் அதில் 30 மூட்டைகளில் சுமார் 500 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் … Read more

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி உயிரிழப்பு; மருத்துவர் இன்றி செவிலியர்கள் பிரசவம் பார்த்ததாக குற்றச்சாட்டு

வாணியம்பாடி: இரட்டை பிரவசத்திற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் உயிரிழந்தார். செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் கர்ப்பிணி உயிரிழந்ததாக கூறி, ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி டவுன் அண்ணா நகர் பகுதி சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மதன்குமார் (22). இவரது மனைவி கெளரி (20). நிறைமாத கர்ப்பணியான கெளரிக்கு இன்று அதிகாலை 4 மணியளவில் பிரவச வலி ஏற்பட்டது. இதையடுத்து, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அதிகாலை 4.30 மணிக்கு … Read more

தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு 1.5 லட்சம் பேர் விண்ணப்பம்.. பள்ளிக்கல்வித்துறை.!

தற்காலிக ஆசிரியர் பணிக்கு 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2022-2023-ம் கல்வி ஆண்டில் கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டு்ள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் கல்வி மாவட்டங்களில் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் முறையிலோ தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது இந்த நிலையில், தற்காலிக ஆசிரியர் பணிக்கு 24 மாவட்டங்களில் மொத்தம் 1.5 லட்சம் பேர் … Read more

இடுக்கி மாவட்டத்தில் கனமழையால் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு.. இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு தடை..!

கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் கனமழையால் மலைப்பாதைகளில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் இரவுநேரப் பயணத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றியமையாப் பணிகளுக்குச் செல்லும் வாகனங்களைத் தவிரப் பிற வாகனங்கள் இரவு எட்டு மணி முதல் காலை ஆறு மணி வரை செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. . Source link

சென்னையில் பசுமையாகும் 21 ரயில் நிலையங்கள்: தெற்கு ரயில்வே அழைப்பு

சென்னை: சென்னையில் உள்ள 21 ரயில் நிலையங்களை பசுமையாக்கும் பணிகளை மேற்கொள்ள பல்வேறு அமைப்புகளுக்கு தெற்கு ரயில்வே அழைப்பு விடுத்துள்ளது. தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தின் கீழ் உள்ள 21 ரயில் நிலையங்களை பசுமையாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இதன்படி தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் காலியாக உள்ள இடங்கள் மற்றும் இணைப்புச் சாலைகளில் செடிகள், நறுமணச் செடிகள், மூலிகைகள் மற்றும் மருந்து செடிகள், அலங்கார செடிகள், … Read more

ஈரோடு.! தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை.!

ஈரோடு மாவட்டத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஈரோடு மாவட்டம் வெங்கமேடு பகுதியை சேர்ந்த வீரன் என்பவரின் மகன் நந்தகோபால்(21). இவர் கடந்த ஆறு மாதமாக சரியாக வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் அடிக்கடி நான் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று நந்தகோபால் மீண்டும் குடிபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்த நிலையில் அவரை தந்தை வீரன் சமாதானப்படுத்திவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.  இந்நிலையில் … Read more

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தொடக்கம்.. வீடுகள் இடிக்கப்படுவதை கண்டித்து மக்கள் தர்ணா போராட்டம்.!

சென்னை குரோம்பேட்டையில் சிட்லப்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. சிட்லப்பாக்கம் ஏரியில் கட்டப்பட்டுள்ள 488 வீடுகளை அகற்றுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 200 போலீசார் குவிக்கப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தொடங்கிய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில் இன்று 2 வீடுகள் மட்டும் அகற்றப்பட்டன. Source link

ஆக்கிரமிப்பாளர்களின் கைகளுக்கு சென்னை செல்லும் காலம் தொலைவில் இல்லை: முறைமன்ற நடுவம் விமர்சனம்

சென்னை: சென்னையில் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால் “பெரும்பாலான பகுதிகளில் ஆக்கிரமிப்பாளர்களின் கைகளுக்கு செல்லும் காலம் தொலைவில் இல்லை” என்று சென்னை மாநகராட்சியை முறைமன்ற நடுவம் கடுமையாக விமர்சித்துள்ளது. அம்பத்துாரை சேர்ந்த ஜனார்த்தனம் என்பவர், தமிழக உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் அளித்த புகாரில், “சென்னை பட்டரவாக்கம் பிரதான சாலையில், வாய்க்கால் புறம்போக்கு பகுதியில் 26 ஆயிரத்து 371 சதுர அடி நிலத்தை மூன்று நிறுவனங்கள் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளன. இதனால், மழைநீர் கொரட்டூர் ஏரிக்கு செல்வதற்கு தடைப்பட்டுள்ளது. எனவே, … Read more