கள்ளக்காதலியுடன் சேர்ந்து சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகைகளை திருடிய நபர்.!

சென்னை பூந்தமல்லி முத்துநகரை சேர்ந்தவர் சேகர் (வயது 40) இவரது தம்பி ராஜேஷ் (வயது 37) இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. இவர்களது தாயாருடன் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே ஸ்வீட் கடை உள்ளது. மேலும் பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றனர்.  கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேகரின் மனைவி பிரிந்து சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர் திரும்பி வந்த அவர் … Read more

பழனி முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்

பழனி முருகன் கோயிலில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். மலையடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலம் மலைக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, சிறுகாலந்தி பூஜையில் கலந்து கொண்டு பாலசுப்பிரமணியர் அலங்காரத்தில் இருந்த முருகனை தரிசனம் செய்தார். Source link

மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தற்கொலை முயற்சி – காரணம் என்ன?

மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி பிளேடால் கழுத்தை கிழித்து தற்கொலை முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள வடகாட்டுப்பட்டியைச் சேர்ந்த சின்னராஜ் என்பவரின் மகன் ஆரோக்யசாமி. இவர் தனது மனைவியை கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்று 23.02.2015 ஆம் ஆண்டு முதல் மதுரை மத்திய சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில், ஐந்து முறைக்கு மேல் பரோலில் சென்று வந்த இவர், இன்று காலை தனக்குத் தானே பிளேடால் … Read more

போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து தங்களுக்கு தாங்களே போதை ஊசி செலுத்திக்கொண்ட 7 பேர் கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசியில் எடுத்து தங்களுக்கு தாங்களே உடலில் செலுத்தி கொண்ட 7 பேரை போலீசார்  கைது செய்தனர். மலை கருப்புசாமி கோவில் பகுதியில் 5 பேரை மடக்கி பிடித்து விசாரித்ததில், மருத்துவரின் அனுமதி சீட்டு இல்லாமல் டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து கொரியர் மூலம் 100 எண்ணிக்கைகள் கொண்ட போதை மாத்திரையை 14 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியது தெரியவந்தது. இதேபோல், சித்தோட்டில் வீட்டில் போதை மாத்திரைகளை … Read more

அரசியலைவிட தொழிலே பிரதானம் என்பது இதுதானோ? – அண்ணாமலை

சென்னை: ஆமிர்கான் நடித்துள்ள “லால் சிங் சத்தா” இந்தி திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் வெளியிடுவது குறித்து, பாஜக தலைவர் அண்ணாமலை, அரசியலைவிட தொழிலே பிரதானம் என்பது இதுதானோ என்று பதிவிட்டுள்ளார். நடிகர் ஆமிர்கான், கரீனா கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ” லால் சிங் சத்தா”. இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகவுள்ளது. பாரஸ்ட் கம்ப் என்ற ஆங்கிலப் படத்தின் ரீமேக்காக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை தமிழில் உதயநிதி … Read more

பள்ளி தோழியுடன் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்

அம்பத்தூர் அருகே பள்ளி தோழியுடன் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த சிறுமி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை அம்பத்தூர் பானு நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கண்மணி -பாலாஜி தம்பதியர். இவர்களது மகள் தனன்யா (8)அம்பத்தூர் அன்னை வயலட் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில், இவருடன் படித்த கனுஷியா குடும்பத்தினருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கனுஷியா தாயார் சிந்துஜா அழைப்பின் பேரில் தனன்யா தனது தாய் கண்மணியுடன் கொரட்டுர் கருக்கு பகுதியில் உள்ள … Read more

சந்தனப் பொடி, பால், தேன்.. 5 ஆன்டி ஏஜிங் ஆயுர்வேத பியூட்டி டிப்ஸ்

ஆயுர்வேதத்தின் பண்டைய அறிவியல் உலகம் முழுவதும் பெரிதும் பின்பற்றப்படுகிறது. காலநிலை மாற்றம் தோல் அதன் நித்திய பளபளப்பை இழக்க வழிவகுக்கும், இந்த காலகட்டத்தில் ஆரோக்கியமான, ஊட்டமளிக்கும் தோல் பராமரிப்பு வழக்கத்துடன் நமது சருமத்தை அமைதிப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். சருமத்தில் பயன்படுத்தப்படும் தயாரிப்புகளில் ஒருவர் கவனமாக இருக்க வேண்டும், எனவே அனைத்து இயற்கை பொருட்களையும் பயன்படுத்துவது மற்றும் ஆயுர்வேதத்தின் பழமையான பாரம்பரியங்களில் நமது நம்பிக்கையை வைத்திருப்பது அவசியம். நீங்கள் ஆயுர்வேதத்தின் தீவிர பிரியராக இருந்தால், வயதானதை எதிர்த்துப் … Read more

தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் சூப்பர் அறிவிப்பு – தமிழக அரசு.!

தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதார அட்டை வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த குடும்ப சுகாதார அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் இந்த அட்டையில் இடம்பெற்றிருக்கும் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ குறிப்புகள் அடிப்படையில் அவர்களின் வீடுகளுக்கே சென்று பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்படும். மக்களை தேடிமருத்துவம் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் செயல் … Read more

கிராவல் என்ற பெயரில் தாதுக்கள் நிறைந்த தேரி செம்மண் கொள்ளை. ! அதிகாரிகள் துணையுடன் கடத்தல்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பல ஏக்கர் பரப்பிலுள்ள செம்மண் தேரியில் கிராவல் எடுப்பதாக கூறி தாதுக்கள் நிறைந்த தேரி மண் கடத்திய லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் செம்மண் தேரி மணல் குன்றுகள் அமைந்துள்ளன. தமிழகத்தில் வேறு எங்கும் அமைந்திடாத இந்த தேரி மணல் பகுதிகளை பாதுகாத்திடும் வகையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் திருச்செந்தூர் அருகே … Read more

4-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு: கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி – அமைதிப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முன்னதாக, முதல்வர் தலைமையில் நடந்த அமைதிப் பேரணியில் அமைச்சர்கள், திமுகநிர்வாகிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். திமுக தலைவராக 50 ஆண்டுகளுக்கும்மேல் பணியாற்றியவரும், 5 முறை தமிழக முதல்வராக பதவி வகித்தவருமான கருணாநிதி, கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் … Read more