கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பகலவன் பொறுப்பேற்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து புதிய காவல் கண்காணிப்பாளராக பகலவன் பொறுப்பேற்றார். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததற்கு நீதி வேண்டும் என்ற பெயரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளி அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் ஒரு கட்டத்தில் கலவரமாக மாறியது. இதில் 50க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்துள்ளனர். மேலும் பள்ளி கட்டிடங்கள் மற்றும் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டு தீயிட்டு எரித்தனர். இந்த கலவரம் சம்பவம் தமிழகம் முழுவதும் … Read more

‘எல்லோரும் சந்தோஷமா சாப்பிட வாங்க’ – நடிகர் சூரி வெளியிட்டுள்ள வீடியோ

மதுரையில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் நடைபெறும் உணவுத் திருவிழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டுமென நடிகர் சூரி வீடியோ வெளியிட்டுள்ளார். உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உணவுத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் ஜூலை 23ஆம் தேதி மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவுத் திருவிழா மதுரையில் நடைபெற உள்ளது. மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள சிறு குறு தொழில் சங்கத்தில் இந்த உணவுத் திருவிழா நடைபெற … Read more

நீட் விலக்கு மசோதா; தமிழக அரசிடம் விளக்கம் கேட்கும் மத்திய அரசு

NEET UG 2022: Centre seeks clarifications from Tamil Nadu govt on anti-NEET bill: தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET) இருந்து தமிழக மாநில மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் மசோதா குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளதாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது. நீட் (NEET) தேர்வு என்பது இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான பொதுவான தகுதித் … Read more

தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு.. இன்றைய விலை நிலவரம்.!!

தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 72 ரூபாய் உயர்ந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும்  முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர். நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4658 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 37264-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, … Read more

காவலாளியை காண வந்த போது விபரீதம்.. வாழைத் தோப்பில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 3 பேர் பலி..!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த ராஜபாளையத்தில் வாழைத் தோப்பை சுற்றி அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். தோப்பில் காவலாளியாக இருக்கும் வெங்கடேசன் என்பவரை காண வந்த முருகதாஸ், சுப்ரமணி உள்ளிட்ட 3 பேர் மின் வேலியில் சிக்கி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று பேரின் உடலை கைப்பற்றிய போலீசார், தோப்பு உரிமையாளர் சடகோபன் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.  Source link

22 கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து நிர்வாகங்களுக்கு சிஐடியு தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த நோட்டீஸ்

சென்னை: ‘பே மேட்ரிக்ஸ்’ அடிப்படையில் ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 22 கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழக நிர்வாகங்களுக்கு சிஐடியு தொழிற்சங்கத்தினர் நேற்று வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கினர். தமிழகத்தில் 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 1.20 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். 2016-ம் ஆண்டு இறுதி செய்யப்பட வேண்டிய 13-வது ஊதிய ஒப்பந்தம் ஓராண்டு கால தாமதமாக 2017-ம் ஆண்டு ஏற்பட்டது. அதைத் … Read more

கள்ளக்குறிச்சி விவகாரம்: தொடரும் கைது நடவடிக்கை; யூடியூப் சேனல்களை முடக்கவும் திட்டம்

கள்ளக்குறிச்சி போராட்டத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்ட திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி மாணவி இறப்பு சம்பந்தமாக பல பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில் தவறான தகவல்களை பரப்புபவர்களின் சமூக வலைதள கணக்குகள் கண்காணிக்கப்பட்டு பொய்யான தகவல் பரப்புபவர்களின் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறப்பு சம்பந்தமாக சமூக வலைதளங்களில் … Read more

குடியுரிமையை விட்டுக்கொடுத்த 3.9 லட்சம் இந்தியர்கள் : மத்திய அரசு தகவல்

கடந்த மூன்று வருடங்களில் 3.9 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை விட்டுகொடுத்தாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேற்றைய தினத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 3.9 லட்சம் இந்தியர்கள் தங்களது குடியுரிமையை விட்டுகொடுத்துள்ளனர். 2021ம் ஆண்டில் சுமார் 1.63 லட்சம் இந்தியர்கள் தங்களது குடியுரிமையை விட்டுகொடுத்துள்ளனர். மேலும் 78 ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமையை பெற்றுள்ளனர். பிஎஸ்பி கட்சி எம்பி ஹசி பெஸ்லூர் ரெஹமான் நாடாளுமன்றத்தில் … Read more

20 அரசு ஒப்பந்ததாரர்களின் இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை.!!

தமிழகத்தில் சுமார் 20 அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் ராமநாதபுரத்தை சார்ந்த அரசு ஒப்பந்ததாரரான செய்யாத்துரைக்கு சொந்தமான அலுவலகங்கள், வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதேபோல முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி … Read more

உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்கிரானுங்க..! பெண் காவல் ஆய்வாளர்..! பந்தோபஸ்து பரிதாபங்கள்..!

திருப்பூரில் இந்து முன்னணிப் பிரமுகருக்கு பாதுகாப்பு வழங்கும் போலீசாரை வெளியில் நிறுத்தி கதவை பூட்டியதாக வீடியோ வெளியான நிலையில், வாட்ஸ் அப்பில் பரப்பப்பட்ட போலியான போராட்டத் தகவலை நம்பி கடலூர் போலீசார் கொளுத்தும் வெயிலில் சில்வர் பீச்சில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். திருப்பூரில் இந்துமுன்னணிப் பிரமுகர் காடேஸ்வர சுப்பிரமணியின் பாதுகாப்புக்காக அவரது வீட்டிற்கு சென்ற காவலர்களை அவரது வீட்டு பணிப்பெண் தெருவில் நிறுத்தி கதவை மூடியதோடு, பாதுகாப்பு அளிக்க சென்ற போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது … Read more