வால்பாறை டூ சாலக்குடி: 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் துவங்கிய அரசுப் பேருந்து பயணம்

வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடிக்கு செல்லும் அரசுப் பேருந்து இயக்கம், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் இன்று முதல் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை பகுதி கேரளா- தமிழக எல்லையில் அமைந்துள்ளது. வால்பாறையில் வசிக்கும் 30 சதவீதம் பேர்கள் கேரளா பகுதியைச் சேர்ந்தவர்கள், மேலும் வால்பாறையில் இருந்து கேரளா மாநிலம் சாலக்குடி பகுதிக்கு செல்ல வனப்பகுதியில் சாலை உள்ளது. இந்நிலையில், வால்பாறைக்கு வரும் சுற்றுலா … Read more

Tamil news today live: மேகதாது; காவிரி ஆணையம் விவாதிக்கலாம்; முடிவு எடுக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம்

Go to Live Updates மேகதாது அணை விவகாரம்- உச்ச நீதிமன்றம் உத்தரவு மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை (ஜூலை20) நடந்தது.அப்போது மேகதாது அணை விவகாரம் தொடர்பாக காவிரி மேலாண்மை வாரியம் விவாதிக்கலாம், ஆனால் முடிவெடுக்கக் கூடாது என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் வழக்கை ஜூலை 26ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது. பெட்ரோல் டீசல் விலை சென்னையில் பெட்ரோல் – டீசல் விலையில் … Read more

#நீட் விலக்கு மசோதா., கேள்வி கேட்ட மத்திய அரசுக்கு, பதில் தயாரித்துள்ளோம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

இன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இடம், நீட் விலக்கு மசோதா குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மா.சுப்பிரமணியன்,  “நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் மிக முக்கிய கொள்கை, திட்டம். அந்த வகையில் தான் தமிழக முதல்வர் அவர்கள் ஆட்சியை பொறுப்பேற்ற முதல் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறவதற்கு தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.  இதுவரை நீட் … Read more

அத்தியாவசிய உணவு பொருட்களின் மீது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி உயர்வினை திரும்பப் பெற வேண்டும் – இபிஎஸ்

ஜிஎஸ்டி உயர்வை திரும்ப பெறுக – இபிஎஸ் அத்தியாவசிய உணவு பொருட்களின் மீது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி உயர்வினை திரும்பப் பெற வேண்டும் – இபிஎஸ் பாக்கெட்டுக்களில் அடைக்கப்பட்ட அரிசி, கோதுமை மாவு, பருப்பு, பன்னீர், தேன் மீது 5% என்ற வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும் – இபிஎஸ் ஜிஎஸ்டி வரி உயர்வை எதிர்ப்பை தெரிவிக்காத திமுக அரசு மற்றும் நிதியமைச்சருக்கு கண்டனங்கள் – இபிஎஸ் Source link

கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பகலவன் பொறுப்பேற்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து புதிய காவல் கண்காணிப்பாளராக பகலவன் பொறுப்பேற்றார். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததற்கு நீதி வேண்டும் என்ற பெயரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளி அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் ஒரு கட்டத்தில் கலவரமாக மாறியது. இதில் 50க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்துள்ளனர். மேலும் பள்ளி கட்டிடங்கள் மற்றும் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டு தீயிட்டு எரித்தனர். இந்த கலவரம் சம்பவம் தமிழகம் முழுவதும் … Read more

‘எல்லோரும் சந்தோஷமா சாப்பிட வாங்க’ – நடிகர் சூரி வெளியிட்டுள்ள வீடியோ

மதுரையில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் நடைபெறும் உணவுத் திருவிழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டுமென நடிகர் சூரி வீடியோ வெளியிட்டுள்ளார். உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உணவுத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் ஜூலை 23ஆம் தேதி மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவுத் திருவிழா மதுரையில் நடைபெற உள்ளது. மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள சிறு குறு தொழில் சங்கத்தில் இந்த உணவுத் திருவிழா நடைபெற … Read more

நீட் விலக்கு மசோதா; தமிழக அரசிடம் விளக்கம் கேட்கும் மத்திய அரசு

NEET UG 2022: Centre seeks clarifications from Tamil Nadu govt on anti-NEET bill: தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET) இருந்து தமிழக மாநில மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் மசோதா குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளதாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது. நீட் (NEET) தேர்வு என்பது இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான பொதுவான தகுதித் … Read more

தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு.. இன்றைய விலை நிலவரம்.!!

தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 72 ரூபாய் உயர்ந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும்  முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர். நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4658 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 37264-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, … Read more

காவலாளியை காண வந்த போது விபரீதம்.. வாழைத் தோப்பில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 3 பேர் பலி..!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த ராஜபாளையத்தில் வாழைத் தோப்பை சுற்றி அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். தோப்பில் காவலாளியாக இருக்கும் வெங்கடேசன் என்பவரை காண வந்த முருகதாஸ், சுப்ரமணி உள்ளிட்ட 3 பேர் மின் வேலியில் சிக்கி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று பேரின் உடலை கைப்பற்றிய போலீசார், தோப்பு உரிமையாளர் சடகோபன் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.  Source link

22 கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து நிர்வாகங்களுக்கு சிஐடியு தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த நோட்டீஸ்

சென்னை: ‘பே மேட்ரிக்ஸ்’ அடிப்படையில் ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 22 கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழக நிர்வாகங்களுக்கு சிஐடியு தொழிற்சங்கத்தினர் நேற்று வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கினர். தமிழகத்தில் 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 1.20 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். 2016-ம் ஆண்டு இறுதி செய்யப்பட வேண்டிய 13-வது ஊதிய ஒப்பந்தம் ஓராண்டு கால தாமதமாக 2017-ம் ஆண்டு ஏற்பட்டது. அதைத் … Read more