காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க உச்சநீதிமன்றம் தடை

காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டும் என கர்நாடக அரசு தரப்பில் ஆணையத்தின் தலைவர் ஹல்தரிடம் முறையிடப்பட்டது. இதற்கு ஆணையமும் அனுமதி அளித்த நிலையில், இது உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளுக்கு எதிரானது எனக் கூறி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கின் விசாரணை இன்றைய தினம் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி கண்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் … Read more

அசிடிட்டி பிரச்னை இருக்குதா? மண்பானை தண்ணீர் குடிச்சுப் பாருங்க!

அந்த காலத்தில் பெரும்பாலான சமையல் பொருட்கள் மண்பாண்ட பொருட்களாக இருந்தன. நாளடைவில் பிளாஸ்டிக் எனப் பலவித பொருட்கள் சமையல் அறையில் நுழைந்தன. பிளாஸ்டிக் சுற்றுச்சூழலுக்கு உகந்தது அல்ல. பழங்காலத்தில் தண்ணீர் சேமித்து வைக்க மண்பானையை பயன்படுத்தின. இப்போது அது காட்சிப்பொருளாக பார்க்கப்படுகிறது. மண்பானை தண்ணீர் குடிப்பால் என்னென்ன நம்மைகள் என மருத்துவர். திக்ஷா பவ்சர் விவரிக்கிறார். மண்பானையில் தண்ணீர் சேமித்து வைத்து குடிப்பதால் அசிடிட்டி, ஒற்றைத் தலைவலி, அடிவயிற்றில் எரிச்சல், உடல் சூடு போன்ற வெப்பப் பிரச்சினைகள் … Read more

கன்னியாகுமரி.! விஷம் குடித்து வாலிபர் தற்கொலை.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கன்னியாகுமாரி மாவட்டம் தலைக்குளம் கீழவிளை பகுதியை சேர்ந்தவர் சுபாஷ்(35). இவருடைய மனைவி வாணி. சுபாஷ் கடந்த சில நாட்களாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் மது அருந்தி வந்துள்ளார்.  இதனால் சரியாக வேலைக்கு செல்லாமல் சுபாஷ் குடித்து வந்ததால், இதனை அவரது மனைவி வாணி மற்றும் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த சுபாஷ் சம்பவத்தன்று விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்து உள்ளார். இதைப்பார்த்த குடும்பத்தினர் அவரை … Read more

குடும்ப பிரச்சினையால் சூட கட்டிகளை தண்ணீரில் கலந்து குடித்து 3 குழந்தைகளுடன் இளம்பெண் தற்கொலை முயற்சி!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே குடும்ப பிரச்சினையால் இளம்பெண் ஒருவர் சூட கட்டிகளை தண்ணீரில் கலந்து தனது 3 குழந்தைகளுக்கும் கொடுத்ததுடன் தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மேலவாசல் ஆற்றங்கரை கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான விவேக் மன்னார்குடி ரயில் நிலையத்தில் கேட் கீப்பராக உள்ளார். இவருக்கு சத்யா என்ற மனைவியும், 3 வயதில் ஒரு ஆண் குழந்தை மற்றும் 8 மாதத்தில் இரட்டை பெண் குழந்தைகள் உள்ளன. கடந்த சில வாரமாக விவேக் இரவு பணிக்கு … Read more

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் வருவாய் துறை அதிகாரிகள் திடீர் சோதனை

நாமக்கல்: முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் உள்ள சொத்து மதிப்புகள் குறித்து பொதுப் பணித்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்பு சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் உள்ள சொத்து மதிப்பீடுகள் சரியாக உள்ளனவா என பள்ளிபாளையத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி வீடு, அலுவலகத்தில் பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் … Read more

மாதம்தோறும் மின் கணக்கீடு செய்யும் நடைமுறை எப்போது துவங்கும்? – அமைச்சர் விளக்கம்

வீடுகளில் மின் கணக்கிடுவதை எளிமையாக்கும் வகையில், ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்படவுள்ளது என்றும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு மாதம்தோறும் மின் கணக்கீடு செய்யும் நடைமுறை அமுல்படுத்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் மின் ஊழியர்கள் சங்கத்தினை சார்ந்தவர்கள் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர்கள் 23 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சரிடம் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த அமைச்சர் … Read more

இ.பி.எஸ் தரப்புக்கு அ.தி.மு.க தலைமை அலுவலகம்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

அதிமுக இரட்டை தலைமை விவகாரத்தில் இபிஎஸ் ஒபிஎஸ் தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சீல் வைக்கப்பட்ட அதிமுக தலைமை அலுவலகம் இபிஎஸ் தரப்பில் சொந்தமானது என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றை தலைமை போட்டி பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இபிஎஸ் ஒபிஎஸ் இருவரும் தனித்தியாக தங்களது ஆதரவாளர்களுடன் கட்சியின் ஒற்றை தலைமையை கைப்பற்றும் நோக்கில் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர். இதில் கட்சியில் பெரும்பாலான நிர்வாகிகள் இபிஎஸ் பக்கமே இருந்தனர். இதனால் … Read more

கிராம சபைக் கூட்ட செலவின வரம்பு ரூ.5000 ஆக உயர்வு: மநீம வரவேற்பு

சென்னை: கிராம சபைக் கூட்டங்கள் நடத்தும் செலவின வரம்பை ரூ.5000 ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்றுள்ளது. இது குறித்து அக்கட்சி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “கிராம சபைக் கூட்டங்கள் நடத்தும் செலவின வரம்பை ரூ.1000-ல் இருந்து ரூ.5000 ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. அடுத்தபடியாக,கிராம சபைத் தீர்மானங்களை இணையதளத்தில் வெளியிடுவது, அத்தீர்மானங்களை விரைவாக, முழுமையாக நிறைவேற்றுவது போன்ற நடவடிக்கைகள் மிக அவசியமாகிறது” என்று மக்கள் … Read more

விழுப்புரம்: கல்லூரி மாணவன் அடித்துக் கொலை; உறவினர்கள் மறியல்

விழுப்புரம் அருகே கல்லூரி மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் டி. எடையார் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் அருண் (21). இவர், விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருடைய இருசக்கர வாகனத்தை அதே பகுதியைச் சேர்ந்த சரத் (20) கீர்த்தி (18) சத்தியன் (17) வீரமணி (18) ஆகியோர் … Read more

ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்… குரல் கொடுத்த முதல் தமிழ் நடிகை :  நெட்டிசன்கள் பாராட்டு

கள்ளக்குறிச்சியை சேர்ந்த பிளஸ் 2 மாணவியின் மர்ம மரணம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவிக்கு ஆதரவாக நடிகை பிரியா பவானி சங்கரின் கருத்து தற்போது வைரலாகி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13-ந் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார் அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்பட்டாலுமு் மாணவியின் மரணத்தில் … Read more