‘மேகேதாட்டு குறித்து விவாதிக்கப்படும்’ – கல்லணையில் ஆய்வு செய்த காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் தகவல்

தஞ்சாவூர்: காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் இன்று மாலை ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக ஒருதலைபட்சமாக செயல்படும் ஆணையத்தை கண்டித்து கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர். காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர், ஆணையத்தின் உறுப்பினர் நவீன்குமார் ஆகியோர் தமிழகத்தில் காவிரி ஆற்றுப் பகுதியில் இரு நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர். நேற்று காவிரி ஆற்றின் தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு வந்த ஆணையத்தின் குழுவினர் … Read more

மசாஜ் செய்ய மறுத்த பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு – வெளியான சிசிடிவி காட்சிகள்!

கோவையில் மசாஜ் செய்ய மறுத்த பெண்ணை அரிவாளால் வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.  கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள எம்.கே. பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி மினிமோல் (வயது 43). இவர் சூலூரில் மசாஜ் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கவுசிக் மற்றும் அவருடன் மற்றொரு வாலிபரும் மினிமோலின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அவர்கள் தங்களுக்கு மசாஜ் செய்து விடும்படி கூறியிருக்கின்றனர். அதற்கு மினிமோல் வீட்டில் வைத்து … Read more

மதுரை டூ பிரக்யாராஜ் நகர்… தமிழகத்தில் இருந்து 2வது தனியார் ரயில் குறித்த அறிவிப்பு

இந்தியாவில் ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த திட்டத்திற்காக பாரத் கவுரவ் ரயில்கள் என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்று இடங்களை காட்சிப்படுத்துவதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் 190 ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த 190 ரயில்களில் ஐஆர்சிடிசி-யின் கீழ் மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களின் கீழும் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. தனியார் நிறுவனங்கள் ரயில்களை குத்தகைக்கு எடுத்து பயணிகளுக்கு ரயில் … Read more

டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து..ஆறு போல் ஓடிய எரிசாராயம்..!

எரிசாராயம் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலையில் இருந்து 5 டேங்கர் லாரிகளில் எரிசாராயம் ஏற்றிகொண்டு காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள மதுபான ஆலைக்கு சென்று கொண்டிருந்தது. அதில், ஒரு லாரி செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே தேன்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது ஒட்டுநரின் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்தது. அதில் டேங்கரில் உள்ள எரிசாராயம் ஆறு போல ஓடியது. … Read more

மலைகள் அதிகமுள்ள மாவட்டங்களில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் ஓராண்டு மலைப்பகுதியில் பணியாற்ற வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை

தமிழ்நாட்டில் மலைகள் அதிகமுள்ள மாவட்டங்களில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் ஓராண்டு மலைப்பகுதியில் பணியாற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஈரோடு, தேனி,சேலம்,வேலூர், திண்டுக்கல், திருப்பத்தூர், தருமபுரி ஆகிய 7 மாவட்டங்களில் இந்த உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. மலைப் பகுதியில் பணிபுரிய ஆசிரியர்கள் தயங்குவதால், மலையின் மேல் பகுதியிலும் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  Source link

தென் மாவட்ட அதிமுகவினர் யார் பக்கம்? – அணி திரட்டும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள்

மதுரை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோஷம் ஏற்பட்டுள்ள நிலையில், தென் மாவட்டங்களில் பொதுக்குழுவிற்கு முன் ஓபிஎஸ் – இபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மத்தியில் தங்கள் அணிக்கான ஆதரவை திரட்டி கொண்டிருக்கின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டாலும், அதன்பிறகு ஓபிஎஸ் – இபிஎஸ் அணியினர் இணைந்து ஒருங்கிணைந்த அணியாக செயல்பட்டனர். அமமுக தனிக்கட்சி தொடங்கி நடத்தி வருகிறார் டிடிவி தினகரன். சசிகலா இன்னும் வெளிப்படையான அரசியலில் களம் இறங்கவில்லை. அதிமுகவில் … Read more

போலீசாரை கண்டதும் ’ஐம்பொன் சிலைகளை’ விட்டுவிட்டு தெறிச்சு ஓடிய கொள்ளையர்கள்!

ஆவடி அருகே பட்டாபிராமில் இரு கோயில்களில் 7 ஐம்பொன் சிலைகள் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பிச்செல்ல ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது போலீசாரை கண்டதும் சிலைகளை போட்டுவிட்டு தப்பி ஓடிய கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆவடி அடுத்த பட்டாபிராம் முல்லை நகரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இது பிரசித்தி பெற்ற கோவில். இந்த கோவிலில் நேற்று இரவு பூஜை முடிந்து 9 மணிக்கு நடையை மூடிவிட்டு கோவில் பூசாரி சக்தி மாரியப்பன் சென்றிருக்கிறார். இந்நிலையில் இன்று காலை … Read more

எல்லாம் உங்க பவர்ல தான் பாஸ் எரியுது… அடேய் பவர்ல எரியலடா… அக்னிபத் தவறுல எரியுதுடா…

சமூக ஊடகங்களின் காலத்தில் மீம்ஸ்கள் தான் உடனடியாக அரசியல் நிகழ்வுகளுக்கு உடனடியாக விமர்சனங்களை வைத்து எதிர்வினையாற்றுகின்றன. அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு எதிர்வினையாற்றும் பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள், கார்ட்டூனிஸ்ட்கள் போல மீம்ஸ் கிரியேட்டர்களும் எதிர்வினையாற்றுகிறார்கள். அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத் தலைமை விவாதம், வட மாநிலங்களில் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்களின் போராட்டம் போன்ற அரசியல் நிகழ்வுகள் இன்றைய பரபரப்பான நிகழ்வுகளாக இருக்கின்றன. நம்முடைய மீம்ஸ் கிரியேட்டர்களும் இந்த நிகழ்வுகளை மையமாக வைத்தே மீம்ஸ் சாட்டையை சுழற்றியுள்ளனர். மீம்ஸ் உருவாக்குவதற்கு … Read more

கற்றுக் கொடுக்க வேண்டியவரே கெட்டுப் போகச் செய்யலாமா? மக்கள் நீதி மய்யம் கேள்வி.! 

 பள்ளிகளில் பரவும் சா`தீ’… கற்றுக் கொடுக்க வேண்டியவரே கெட்டுப் போகச் செய்யலாமா? என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  “தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள குளத்தூரில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவரிடம் உதவி தலைமை ஆசிரியை சாதி ரீதியாகப் பேசியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.  சாதிப்பற்று கூடாது என்று மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களே,  சாதி வெறியைத் தூண்டுவதுபோல பேசுவது ஏற்கத்தக்கதல்ல. இன்னமும் சாதி என்னும் தீயை அணைக்காமல், ஊதிக்கொண்டே இருந்தால், … Read more

நடிகர் விஜய் அலுவலகத்தில் வாயில் புரோட்டாவுடன் ஊழியர் சடலம் கண்டெடுப்பு..!

சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் அ.இ.த.வி.ம.இ அலுவலக வளாகத்தில் ஊழியர் ஒருவர் வாயில் புரோட்டாவுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் நடிகர் விஜய்யின்அ.இ.த.வி.ம.இ அலுவலகம் அமைந்துள்ளது. எளிதில் எவரும் உள்ளே ஏறி குதித்து புகுந்து விட இயலாத வகையில்10 அடி உயர கருங்கல் சுற்று சுவரில் பீங்கான் பதிக்கப்பட்டுள்ளது. பெரிய இரும்பு கேட்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ள அந்த அலுவலகத்தில் உட்பகுதிகளை புதுமைபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. … Read more