Myths About Diabetes: இதைச் செய்தால் 2 மாதத்தில் சுகர் பிரச்னை ஒழியுமா?

சர்க்கரை நோய் மற்றும் அது தொடர்புடைய கட்டுக்கதைகளுக்கு நிபுணர்களின் விளக்கம் குறித்து இங்கு காண்போம். சர்க்கரை நோய்/ நீரிழிவு நோய் இந்த காலகட்டத்தில் காய்ச்சல், சளி போன்று சாதாரண நோயாக மாறிவிட்டது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் மருந்து உட்கொள்ளப்படுகிறது. ஆனாலும், நோய் குணமடைய வேண்டும் என்றால் இதை சாப்பிட வேண்டும், இதை செய்ய வேண்டும் எனப் பல கூறப்படுகிறது. உண்மையில் இதைச் செய்தால் நோய் குணமடைந்து விடுமா?. டாக்டர் அக்ஷத் சாதா கூறியது குறித்து இங்கு காண்போம். கட்டுக்கதை: … Read more

‘வீடியோ பதிவுடன் மறு பிரேத பரிசோதனை’ – கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவின் முழு விவரம்

சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், வன்முறைச் சம்பவம் தொடர்பாக சிறப்பு படை அமைத்து விசாரிக்க தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் இந்தப் பள்ளியின் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 13-ம் தேதி பள்ளி விடுதியின் 3-வது மாடியில் … Read more

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி

Second monkeypox case confirmed in Kerala: Health Minister Veena George: கேரளாவில் திங்கள்கிழமை இரண்டாவது குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஜூலை 13 அன்று துபாயில் இருந்து கண்ணூர் வந்தடைந்த 31 வயது நபருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கண்ணூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியின் உடல்நிலை சீராக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். மேலும், அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் கண்காணிக்கப்பட்டு … Read more

பாராளுமன்றத்தில் ஒலித்த இளையராஜா பெயர்…, ஏமாந்து போன உறுப்பினர்கள்.!

மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள் பதவிக்கு இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, பிரபல திரைக்கதை எழுத்தாளா் வி.விஜயேந்திர பிரசாத், தா்மசாலா கோயில் நிா்வாக அறங்காவலா் வீரேந்திர ஹெக்டே உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து, இன்று தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டோர்கள்‌ மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். பின்னர், மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு “இளையராஜா” என்று அழைத்தார். அவையில் இருந்த உறுப்பினர்கள் கைத்தட்டி மகிழ்ச்சியை … Read more

நாளை முதல் வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் – தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவிப்பு.!

கள்ளக்குறிச்சி கலவரம் எதிரொலியாக அறிவித்த போராட்டத்தை திரும்பப்பெறுவதாகவும், நாளை முதல் வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என்றும் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று சந்தித்த கூட்டமைப்பினர், ஆலோசனை சுமூகமாக நடந்ததால் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்றனர். இதனிடையே, தமிழகத்தில் 9% பள்ளிகள் இன்று இயங்கவில்லை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. Source link

கள்ளக்குறிச்சி கலவரத்தின் பின்னணியில் உள்ள தீய சக்திகளை தண்டிக்க வேண்டும்: தமிழக பாஜக

சென்னை: “அரசியலுக்காக ஆதரவுகரம் நீட்டாமல், வன்முறையை கட்டவிழ்த்த சமூக விரோதிகளை கடுமையாக தண்டிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வருவதோடு இந்த கலவரத்தின் பின்னணியில் இருக்கும் தீய சக்திகள் அனைத்தையும் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்” என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “மக்கள் அதிகாரம், பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்களை கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக கைது செய்துள்ளது காவல்துறை. தொடர்ந்து இதுபோன்ற இயக்கங்கள் உணர்ச்சிகரமான, பதற்றம் நிறைந்த விவகாரங்களில் மக்களை … Read more

#BREAKING : மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக இல.கணேசன் பதவியேற்பு.!

இல.கணேசன் மணிப்பூர் ஆளுநராக உள்ள நிலையில் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நடைபெறும் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் ஜெகதீப் தங்கார் போட்டியிடுகிறார். இவர் மேற்கு வங்க கவர்னராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், மணிப்பூர் கவர்னரான இல.கணேசன் மேற்கு வங்காள கவர்னராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. Source link

தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்வு: செந்தில் பாலாஜி அறிவிப்பு

தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திங்கள்கிழமை தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் ரூ.12,647 கோடி கடன் உயர்ந்துள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். சென்னையில் மின்சார வாரிய அலுவலகத்தில் துறை ரீதியான ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் ரூ.12,647 கோடி கடன் உயர்ந்துள்ளது. ஒன்றிய … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல் | எமகண்டம், ‘செல்லாத வாக்கு’… இது புதுச்சேரி வாக்குப்பதிவு சுவாரஸ்யம்

புதுச்சேரி: புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்பி, முதல்வர், எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். நாளை அதிகாலை டெல்லிக்கு வாக்குப்பெட்டி எடுத்துசெல்லப்படுகிறது. எமகண்டம் நேரம் பார்த்தது, செல்லாத வாக்கை அளித்ததாக என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ கூறியது என சில சுவாரஸ்யங்கள் அரங்கேறின. நாடு முழுவதும் இன்று குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. பாஜக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகள் கூட்டணி கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து … Read more

பட்டப்பகலில் ஆசிரியர் தம்பதியர் அடித்துக் கொலை: மிளகாய் பொடி தூவி நகை, பணம் கொள்ளை

அருப்புக்கோட்டையில் பட்டப்பகலில் ஆசிரியர் தம்பதியர்களை கொலை செய்து மிளகாய் பொடியை தூவி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அருப்புக்கோட்டை எம்.டி.ஆர் நகர் வடக்கு 2-வது தெருவைச் சேர்ந்தவர் சங்கர பாண்டியன். ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர், தனது மனைவியான ஓய்வு பெற்ற ஆசிரியை ஜோதிமணியுடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் சதீஸ் சென்னை வேளச்சேரியில் குடும்பத்துடன் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் இன்று பிற்பகலில் அவரது … Read more