உதயநிதி ஸ்டாலின் அவ்வளவு கூறியும் மீண்டும் விருப்பம் தெரிவித்த திமுக எம்.எல்.ஏ

“கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினரும், இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பங்கேற்க வேண்டும்” என்றும், மக்களின் விருப்பத்தை முதல்வர் நிறைவேற்ற வேண்டும் எனவும் மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் விருப்பம் தெரிவித்துள்ள சம்பவம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரும்பச்சேரியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மதியரசன் தலைமையில், ஒன்றிய கவுன்சிலர் முருகன் ஏற்பாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது ஆண்டு பிறந்த நாள் விழா … Read more

கார் வாங்கற ப்ளான் இருக்கா? அப்போ இத நோட் பண்ணிக்குங்க!

Business tips in tamil: இந்தியாவில் கார்களின் விலை ஒவ்வொரு ஆண்டும் பல மடங்கு அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் ஆண்டில் மட்டும், டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி, ஹூண்டாய், கியா, டொயோட்டா மற்றும் எம்ஜி மோட்டார் போன்ற பல வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளுக்கான விலை உயர்வை அறிவித்துள்ளனர். இதனால், கார் வாங்க ஆவல் கொண்டுள்ள நுகர்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கார் வாங்குவது என்பது பலரின் கனவாக இருக்கிறது. இது பெரிய முதலீடாகவும் உள்ளது. எனவே, ஒரு … Read more

உயிரிழந்த தந்தை.. திருமண நாளில் மகள் செய்த காரியத்தால் உருக்கமான உறவினர்கள்.!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் அருகே ஒரு பெண் தனது தந்தை உயிரிழந்த காரணத்தால் அவருடைய மெழுகு சிலைக்கு முன்பாக திருமணம் செய்து இருக்கின்றார்.  சென்ற வருடம் அந்தப் பெண்ணின் தந்தை செல்வராஜ் உயிரிழந்த நிலையில், அவருடைய இளைய மகள் மகேஸ்வரி மற்றும் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் என்ற மணமக்களுக்கு இன்று திருமணம் நடந்தது.  தந்தை உயிருடன் இல்லை என்ற காரணத்தால் தனது தந்தைக்கு முன்பு திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் ரூபாய் 5 லட்சம் … Read more

தொழில் அதிபர் மீது பாலியல் புகார் அளித்திருந்த பெண் கொலை.. சம்பந்தப்பட்ட தொழிலதிபர் நீதிமன்றத்தில் சரண்.!

கோயம்புத்தூரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் மீது பாலியல் புகார் அளித்திருந்த பெண் தீவைத்து கொல்லப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், சம்பந்தப்பட்ட தொழிலதிபர் குளித்தலை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மலர் என்ற அந்த பெண்மணி சில மாதங்களுக்கு முன் உரிமையாளர் நவநீதன் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார். ஞாயிற்றுகிழமை, கோயம்புத்தூரில் உள்ள நவநீதன் வீட்டிற்கு மலர் சென்று பெட்ரோல் ஊற்றி தீக்குளித்ததாக … Read more

உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஒதுக்குபுறத்தில் வீசப்பட்ட தமிழ் வாழ்க பெயர் பலகை

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் “தமிழ் வாழ்க” போர்டு அலுவலகத்திற்கு வெளியே ஒதுகுப்புறமாக வீசப்பட்டுள்ளது தமிழ் ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் கிராம ஊராட்சித் தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், தங்களின் ஊராட்சிகளுக்கான வளர்ச்சி திட்டங்கள் அனைத்தையும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் வாயிலாகத்தான் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இதனால் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசு சார் ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் என வந்து செல்கின்றனர். … Read more

யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள்: விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி

சேலம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு யூடியூப் பார்த்து வீட்டிலேயே துப்பாக்கி தயாரித்ததாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களுக்கான உரிமைகளை காக்கும் புரட்சிகர அமைப்பாக செயல்பட திட்டம் தீட்டியதாக காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த புளியம்பட்டி பகுதியில் காவல்துறையின் கடந்த மாதம் 20 ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். … Read more

திருட்டுத் தனமாக ஆன்லைனில் வெளியான விக்ரம்: முழுப் படமும் லீக்

Kamal Hassan, Vijay Sethupathi starrer Vikram Movie: கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படம் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முழு படமும் திருட்டுத் தனமாக ஆன்லைனில் வெளியாகி இருப்பது படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் தயாராகியுள்ள விகரம் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, கமல்ஹாசனின் நடிபில் வெளியாகியுள்ள விக்ரம் படம் செம்மையான கமர்ஷியல் கண்டெண்ட் … Read more

"ரொம்ப குண்டா இருக்கேன்.. பொண்ணே கிடைக்கல." விஷமருந்தி இளைஞர் தற்கொலை.!

சேலம் மாவட்டத்தில் இருக்கும் பொன்னம்மாப்பேட்டை பகுதியில் வசித்து வரும் தினேஷ்குமார் என்ற 26 வயது நபர், கடந்த மே 31 ஆம் தேதி விஷம் குடித்து மயங்கி அவர் வீட்டில் கிடந்துள்ளார்.  மகன் மயக்க நிலையில் இருப்பதைக் கண்ட பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தினேஷ் குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.  இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் … Read more

பாதாளச் சாக்கடை குழாய் பதிக்கும் பணியின்போது தொழிலாளி உயிரிழந்த விவகாரம்.. 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு.!

மதுரையில் பாதாளச் சாக்கடை குழாய் பதிப்பதற்கு பள்ளம் தோண்டும்போது  மண்சரிவில் சிக்கிய தொழிலாளி, தலை துண்டித்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஒப்பந்த நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுவிளாங்குடியில் நடைபெற்ற பணியின் போது மண் சரிவில் சிக்கிய, சதீஷ் என்பவரை மீட்க பொக்லைன் மூலம் பணிகள் நடைபெற்ற நிலையில், அவரது தலை துண்டிக்கப்பட்டது. இதனிடையே, உயிரிழந்த சதீஷின் குடும்பத்திற்கு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 5 லட்ச ரூபாயும், அமைப்பு … Read more

'அந்தக் கரவொலி இப்போதும் என் காதுகளில் ரீங்காரமிடுகின்றன' – 17 வயது சம்பவத்தை நினைவுகூர்ந்த முதல்வர்

சென்னை: நிகழ்ச்சி ஒன்றில், தனது 17 வயதின்போது நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில், சென்னை, குருநானக் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார் தமிழக முதல்வர் ஸ்டாலின். மாணவர்களை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின் தனது கல்லூரி காலத்தில் நடந்த சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டார். அதில், “போட்டியில் கலந்து … Read more