'திராவிட மாடல் ஆட்சி இந்தியா முழுமைக்குமான வெற்றிச் சூத்திரமாக அமைந்துள்ளது' – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: திராவிட மாடல் ஆட்சி இந்தியா முழுமைக்குமான வெற்றிச் சூத்திரமாக அமைந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திருப்பத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் பல முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார். மேலும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “நீண்ட நெடிய வரலாற்றினைக் கொண்டுள்ள நகரம், இந்த திருப்பத்தூர் நகரம். சுமார் 1600 ஆண்டுகள் பழமையானது எனவும், சோழ, விஜயநகர, ஹொய்சாள … Read more

முதுமலை: சாலையில் நடமாடும் கரடிகள் – வாகனங்களை மெதுவாக இயக்க வனத்துறை எச்சரிக்கை

முதுமலை சாலையில் அடிக்கடி நடமாடும் கரடிகளால் வாகனங்களை மெதுவாக இயக்க வனத்துறை அறிவுறுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி சாலையில் சமீப காலமாக கரடிகள் நடமாடுவது அதிகரித்திருக்கிறது. தற்போது தேன் சீசன் துவங்கி உள்ளதால் கரடிகள் சாலைகளில் சுற்றி தரிவதை அதிகமாக காண முடிகின்றது. அப்படி சாலைக்கு வரும் கரடிகள் வாகனங்களை கண்டு அச்சபடாமல் சாலையிலேயே நின்று விடுகின்றன. ஒருசில நேரங்களில் லாரி உள்ளிட்ட வாகனங்கள் கரடிகள் சாலை நின்றால் அதனை பொருட்படுத்தாமல் … Read more

கிடப்பில் போடப்பட்ட கலைஞர் அரசாணை… தமிழக அரசு மருத்துவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்!

அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுவின் சார்பாக தமிழக முதல்வரின் தலையீட்டை கோரி இன்று நண்பகல் சேலம் மேட்டூரில் மருத்துவர் லட்சுமி நரசிம்மன் கல்லறையில், ‘சாகும் வரை உண்ணாவிரதம்’ தொடங்கியிருக்கின்றனர். டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் டாக்டர். நளினி, அனுராதா லட்சுமி நரசிம்மன் மற்றும் திவ்யா விவேகானந்தன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். 60 க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் உடன் அமர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தமிழக முன்னாள் முதல்வர் மற்றும் திராவிட … Read more

எடப்பாடி தரப்புக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்.!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் சொத்துகுவிப்பு புகார் வழக்கில், விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று, தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  வருமானத்திற்கு அதிகமாக 11 கோடி ரூபாய் சொத்து சேர்த்த புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறாத காரணத்தினால் சென்னை உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வழக்கு ஒன்றைத் … Read more

மாமியார் வீட்டுக்கு சென்றவர் வெட்டிக்கொலை !!

மாமியார் வீட்டின் அருகே டீ குடிக்கச் சென்ற ரவுடி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.   தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகே உள்ள களஞ்சேரியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி (35). பிரபல ரவுடியாக அப்பகுதியில் வலம்வந்த இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூரில்  உள்ள தனது மாமியார் வீட்டிற்கு அவர் சென்றுள்ளார். பின்னர் மாமியார் வீட்டு அருகில் உள்ள தேனீர் கடைக்குசென்று, டீ குடிக்க இருந்தார். … Read more

காமராஜர் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள்கள் காணாமல் போன விவகாரம்.. விசாரணை மேற்கொள்ள 5 பேர் கொண்ட குழு அமைப்பு!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்த தொலைதூர கல்வி மாணவர்களின் விடைத்தாள்கள் பழைய பேப்பர் குடோனில் இருந்து மீட்கப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ள 5 பேர் கொண்ட பேராசிரியர்கள் குழுவை துணைவேந்தர் அமைத்துள்ளார். விடைத்தாள்கள் கடந்த வாரம் மாயமான நிலையில், ஆலம்பட்டி பகுதியில் உள்ள பழைய பேப்பர் கடையில் இருந்து சில விடைத்தாள்களும், விரகனூர் பகுதியில் உள்ள மொத்த பேப்பர் குடோனில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடைத்தாள்களும் மீட்கப்பட்டது. ஆடு மேய்ப்பவர்கள் ஜன்னல் வழியே விடைத்தாள்களை திருடி எடைக்கு … Read more

முடிவுக்கு வந்தது 7 நாட்களாக நடந்த போராட்டம்: புதுச்சேரியில் அரசு பஸ்கள் மீண்டும் இயக்கம்

புதுச்சேரி: பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் 7 நாட்களாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து பிஆர்டிசி ஊழியர்கள் பணிக்குத் திரும்பி மதியம் முதல் அரசு பஸ்கள் இயங்கத் தொடங்கின. புதுவை அரசு போக்குவரத்துக்கழகமான பிஆர்டிசி டிரைவர்கள், கண்டக்டர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், பணி பாதுகாப்பு கோரியும் கடந்த 23ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர். நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்தது. கிராமப்புற பகுதியில் பஸ் வசதியின்றி மக்கள் அவதிப்பட்டனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அமைச்சர் … Read more

சென்னை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் மீது புகார்

சென்னையில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர், பாலியல் உணர்வை தூண்டும் வகையில் பேசிய உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஸ்ரீதர் ராமசாமி. இவர் பள்ளியில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகளின் பெற்றோர்களால் குழந்தைகள் நல குழுவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பொது … Read more

வாகனச் சோதனையில் பறித்த பணத்தை திருப்பிக் கொடுத்த வல்லம் சிறப்பு எஸ்.ஐ: ‘கண்டுக்காம’ காப்பாற்றும் உயர் அதிகாரிகள்!

கடந்த இரு தினங்களுக்கு முன்பு வாகன சோதனையின்போது தேங்காய் வியாபாரியிடம் பறித்த ரூ.46,300ஐ தனது உறவினர் ஒருவர் மூலம் திருப்பி கொடுத்துள்ளார் குற்றஞ்சாட்டப்பட்ட வல்லம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாண்டியன். தனக்கு எதிராக காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகார் மனுவை வாபஸ் வாங்குமாறு தேங்காய் வியாபாரியை தனது நெருங்கிய உறவினர் மூலம் சிறப்பு எஸ்ஐ பாண்டியன் நிர்பந்தம் செய்து  வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே குற்றச்சாட்டுக்குள்ளான சிறப்பு உதவி ஆய்வாளர் பாண்டியன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். … Read more

வெளியான செய்தி.., இதெல்லாம் ஏற்புடையதல்ல… டிடிவி தினகரன் பரபரப்பு டிவிட்.!

அரிசி, பருப்பு உள்ளிட்ட பொட்டலத்தில் அடைத்து விற்பனை செய்யப்படும் வணிக முத்திரையற்ற (Unbranded) உணவுப் பொருட்களுக்கு வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டு, 5% ஜி.எஸ்.டி வரி விதிக்க வேண்டும் என்று ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைத்து உள்ளது. அஞ்சலக சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி வரி விதிக்கும் முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. மக்களை பாதிக்கும் வகையிலான இந்த வரி உயர்வு பரிந்துரைகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்கக் கூடாது என்று, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும், “ஜிஎஸ்டி கவுன்சில் … Read more