அமைச்சர் பி.டி.ஆர் போக்கு சரியில்லை… ஜாக்டோ- ஜியோ போராட்டம் அறிவிப்பு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ அமைப்பு தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் போக்கு சரியில்லை என்று அவருக்கு எதிராகப் போராட்டம் அறிவித்துள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில், ஜாக்டோ – ஜியோ அமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டது. ஜாக்டோ – ஜியோ அமைப்பின் போராட்டங்களுக்கும் கோரிக்கைகளுக்கும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆதரவு அளித்தார். மேலும், திமுக ஆட்சியில் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று … Read more

ராணிபேட்டை : காதுகுத்துக்கு சென்ற இளைஞர்கள் பரிதாப பலி..!

டிப்பர் லாரி மோதி இரண்டு இளைஞர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிபேட்டை மாவட்டம், வேடந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஜோதி. இவர் அவரது பேரக்குழந்தைகளுக்கு காது குத்துவதற்காக சொந்தகிராமத்திற்கு அவரது குடும்பத்தினர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஆறு இளைஞர்கள் காரில் சென்று கொண்டிருந்தனர். அந்த வழியே வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது. இந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு … Read more

மேடையில் நடித்துக்கொண்டிருந்த நாடகக்கலைஞர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த குப்பந்துறை கிராமத்தில் நாடகத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நாடகக்கலைஞர் ஒருவர் உயிரிழந்தார். மழை பெய்ய வேண்டி ஊரில் நேற்றிரவு இரணியன் நாடகம் நடந்துகொண்டிருந்தது. அப்போது நாரதர் வேடமிட்டு நடித்துக்கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த நாடகக்கலைஞர் ராஜய்யன்,  நடனமாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். பின்னர் சக கலைஞர்கள் அவரை மீட்டு சத்தியமங்கலத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக … Read more

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த 234 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது வாக்குகளை செலுத்திய நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் வாக்குப்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை இந்த வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், … Read more

நரம்பு வழியாக வலி நிவாரணி மருந்து.. காவலர் மகன் பரிதாப மரணம்.. வெளியான திடுக்கிடும் தகவல்

கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து ஆன்லைன் மூலம் போதை மருந்துகளை விநியோகம் செய்த நபரை மதுக்கரை தனிப்படை போலீசார் கும்பகோணத்தில் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழசீதை வீதியை சேர்ந்தவர் தலைமை காவலர் சவுந்திர பாண்டியன். இவரது மகன் அஜய்குமார் (19) கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவர், ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தனது நண்பர்களுடன் தங்கி கல்லூரிக்குச் சென்று வந்தார். இந்நிலையில் … Read more

7.5% இடஒதுக்கீடு, காலை சிற்றுண்டி திட்டம்; அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த கோரிக்கை 

Government aided school association requests to extend 7.5 Reservation and Breakfast scheme to them: தமிழ்நாடு அரசு நிதி உதவி பெறும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மேலாண்மை பள்ளிகளின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் திருச்சி ஆர். சி. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு தமிழ் வழிப்பள்ளி நிர்வாகிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆ.செபாஸ்டியன், தமிழக அரசு அங்கீகாரம் பெற்ற நிதியுதவி பெறும் பள்ளிகளின் மாநில பொதுச்செயலாளர் தாயப்பன், இந்து பள்ளி நிர்வாகிகள் … Read more

#தமிழகம் || காதலித்து திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை.!

கோவை : மேட்டுப்பாளையம் அடுத்த கூடுதுறை பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 30). இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு பிரியதர்ஷினி (26 வயது) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.  இந்நிலையில், பார்த்திபனுக்கு மதுபழக்கம் அதிகமானதால் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவம் நடந்த ஆண்டும் சண்டை வந்துள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த பார்த்திபன், பிரியதர்ஷினியை கன்னத்தில் அறைந்தார். இதனால் மனவேதனையுடன் இருந்து வந்த … Read more

தமிழகத்தில் உயரும் மின் கட்டணம்: எத்தனை யூனிட்டுக்கு எவ்வளவு கட்டண உயர்வு? – முழு விவரம்

சென்னை: தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறித்துள்ளார். பயன்படுத்து யூனிட் அடிப்படையில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. சென்னையில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் துறை ரீதியாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டியில், தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியது: தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் … Read more

தேனி: பாரதப் பிரதமரின் திட்டம் எனக்கூறி லட்சக்கணக்கில் மோசடி என புகார்

பாரதப் பிரதமர் திட்டத்தின் கீழ் வட்டியில்லா கடன் வாங்கித் தருவதாகக் கூறி பெண்களிடம் ரூ.16 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்ததாக பெண் மீது ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் மோனிஷா. இவருடன் தேனி நகரின் பழனிசெட்டிபட்டி, தேனி அல்லிநகரம், பொம்மைய கவுண்டன்பட்டி, ரத்தினம் நகர், கொடுவிலார்பட்டி, கோட்டூர் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து ஆட்சியர் முரளிதரனிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், … Read more

கள்ளக்குறிச்சி கலவரம்.. மாடுகளையும் திருடிய கலவரக்காரர்கள்…

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்தது தொடர்பாக இன்று மேலும் இரண்டு ஆசிரியைகள் கைது செய்யப்பட்டனர். 18 சிறார்கள் உள்பட 128 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாணவி உயிரழந்தது தொடர்பான வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு  மாற்றப்பட்டுள்ளது. மாணவி உயிரிழந்தது தொடர்பாக நேற்று  பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில்,  இன்று வேதியியல் ஆசிரியர் ஹரிப்ரியா, கணித ஆசிரியர் கிருத்திகா ஆகியோரும் கைது … Read more