திருப்பூரில் குடிபோதையில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை.!

திருப்பூரில் குடிபோதையில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சந்திராபுரத்தில் உள்ள டாஸ்மாக்கில் செவந்தபாளையத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே பயங்கர தகராறு நடந்துள்ளது. பின்னர் சிறிது நேரம் கழித்து டாஸ்மாக் அருகே சுரேஷ் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்த பொதுமக்கள் நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு சென்ற போலீசார் சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தப்பியோடிய … Read more

மத்திய, மாநில அரசுகளின் சலுகையால் கோவையில் ஓராண்டில் மும்மடங்காக அதிகரித்த மின்சார கார் விற்பனை

கோவை: பெட்ரோல், டீசல் விலையேற்றத் துக்குப்பிறகு மின்சார வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாகனத்தின் மோட்டார் திறன் 250 வாட்டுக்கு அதிகமாகவோ, வேகம் 25 கிலோ மீட்டருக்கு அதிகமாகவோ உள்ள மின்சார வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்டிஓ) பதிவு செய்ய வேண்டும். இந்த திறனுக்கு கீழ் உள்ள மின்சார வாகனங்களை பதிவு செய்ய தேவையில்லை. அதன்படி, கோவை தெற்கு, வடக்கு, மையம், மேற்கு, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய 6 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் 2020-21-ம் … Read more

நாளை யுபிஎஸ்சி தேர்வு… தேர்வர்களுக்காக தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அறிவிப்பு

யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுகள் காரணமாக ஜூன் 4 மற்றும் 5 சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை புறநகர் ரயில்கள் வார நாட்கள் அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் வார நாட்களை விட, ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விடுமுறை நாட்களில், 30 சதவீதம் மின்சார ரயில்கள் குறைத்து இயக்குவது வழக்கமாகும். ஜூன் 4 மற்றும் 5 சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுகள் நடைபெற உள்ளது. இதனால் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுக்கு செல்லும் தேர்வர்கள் … Read more

மாதத்தில் 2 நாள் முகாம்… திருச்சியை துடைத்து எடுத்த தூய்மைப் பணியாளர்கள்!

க.சண்முகவடிவேல், திருச்சி திருச்சி மாவட்டத்தில் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினை சிறப்பாக மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் சு.சிவராசு பேசியதாவது: “தமிழக முதல்வர் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினை சென்னையில் தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி, அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான முக்கிய சுற்றுலாத்தலங்கள், பிரசித்தி பெற்ற கோயில்கள், சந்தைகள், உழவர் சந்தைகள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளிலும் … Read more

மதுரை : சதிஷ் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்.! தமிழக  அரசு வெளியிட்ட அறிவிப்பு.!

மதுரையில் மண்சரிவு ஏற்பட்டு உயிரிழந்த தொழிலாளர் சதீஷ் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சமும்,கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் இருந்து ரூ.5 லட்சமும் நிதி வழங்கப்படும் என்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  மதுரை மாவட்டம், விளாங்கிடி கிராமத்தில் மாநகராட்சியின் சார்பில் நடைபெற்று வந்த குடிநீர் குழாய் அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி சதீஷ் எனும் தொழிலாளி உயிரிழந்தார்.  சதீஷ் உயிரிழந்த தகவலை … Read more

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பலி.!

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த நிகழ்வு குறித்து கண்காணிப்பு கேமரா காட்சியின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அங்கன்வாடி உதவியாளராக பணியாற்றி வந்த ராஜவள்ளி என்பவர், பணிக்கு செல்ல ரெட்டியார்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தனியார் பேருந்தை அவர் முந்த முயன்றதாக கூறப்படும் நிலையில், எதிர்பாராவிதமாக பேருந்து உரசியதில், நிலைதடுமாறி கிழே விழுந்தது அதன் சக்கரத்தில் சிக்கினார். இதில், ராஜவள்ளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த … Read more

மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனை அமைக்க திட்டம்

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வழிபாட்டிற்கு வரும் பக்தர்களின் அவசர சிகிச்சைக்காக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது. மதுரை மீனாட்சிம்மன் கோயில் உலக புகழ்பெற்ற ஆன்மிகத் தலமாகவும், சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் என 50,000 பேர் தினமும் மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகிறார்கள். சாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய இருக்கிறது. அப்படி வரிசையில் நிற்கும் பக்தர்கள் வயதானவர்கள், பெண்கள், நோயாளியாக இருக்கும்பட்சத்தில் திடீரென்று … Read more

மீனாட்சி கோயிலில் சாமி தரிசனம் செய்த பெற்றோர்; தொலைந்த 6 வயது குழந்தை – போலீசார் அதிரடி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வழி தவறி சென்ற குழந்தையை, துரிதமாக செயல்பட்டு காவல்துறையினர் இரண்டு மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு நாள்தோறும் பல்வேறு நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று நடைபெறும் மீனாட்சியம்மன் கோயில் வைகாசி வசந்த உற்சவ விழாவிற்கு சென்னையில் இருந்து தேனி மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர், தங்களது … Read more

அதிமுக ரெய்டுக்கு பயந்து பேசவில்லை – பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி பேட்டி

பாஜக மாநிலத் தலைவரையோ, பாரதிய ஜனதா கட்சியைப் பற்றியோ பேசுவதற்கு பொன்னையனுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்றும் அதிமுகவினர் ரெய்டுக்கு பயந்துகொண்டு சட்டசபையில் பேசவில்லை என்று பாஜக மாநில துணைத் தலைவர் வி.வி.துரைசாமி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அண்மையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்களுக்கான செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்துகொண்ட, அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன், தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி … Read more

திருமணம் செய்து வைக்காததால் தம்பதி எடுத்த விபரீத முடிவு.. நெல்லையில் நடந்த சோகம்..!

திருமணமான ஆறே மாதத்தில் கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியை சேர்ந்தவர் சக்திவேல்.  இவருக்கும் தனலெட்சுமி என்பவருக்கும் திடருமணம் நடைபெற்றது. இவர் தனலட்சுமி நகர் பகுதியில் தங்கி காயலான் கடை நடத்தி வந்தார். இந்நிலையில், இன்று காலை அவரது உறவினர்கள் செல்போனில் அழைத்தனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் செல்போனை எடுக்காததால் காவல்துறையினர் தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கணவன், … Read more