உபேர் அபாய பொத்தான்: காரில் காட்சிப் பொருள்; காகிதத்தில் மட்டுமே இருக்கும் பாதுகாப்பு

பயணிகளை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும் வாகனங்களில், சிவப்பு நிறத்தில் வர்ணம் பூசப்பட்ட ‘அபாய பொத்தான்’ ஒரு முக்கிய பாதுகாப்பு அம்சம். புது டெல்லியில் உபேர் ஓட்டுநரால் ஒரு பயணி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு அறிவிப்பின் மூலம் ‘அபாய பொத்தான்’ வைக்க வேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பொத்தான், அனைத்து வாடகை பயணிகள் வாகனங்களிலும் – டாக்சிகள் மற்றும் பேருந்துகளில் நிறுவப்பட வேண்டும் – பயணிகளால் அவற்றை எளிதில் அணுகவோ அல்லது இயக்கவோ முடியாதபோதும் காவல்துறைக்கு … Read more

தமிழ்நாட்டிலும் திமுக ஆட்சியை கவிழ்க்க துடிக்கும் பாஜகவினர், ஜனநாயக துரோகிகள் – சீமான் காட்டம்.!

இன்று செய்தியாளர் சந்திப்பில் சீமான் தெரிவித்தாவது, “எங்களின் போற்றுதலுக்கும் வணக்கத்திற்குமுரிய, வீரப்பெரும்பாட்டன் மன்னர் அழகுமுத்துக்கோன் அவர்களினுடைய நினைவைப் போற்றுகிற நாள் இன்று. அன்னை நிலம் அடிமைப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, வெள்ளைய ஆதிக்கத்தை எதிர்த்து போர் புரிந்த மான மறவன் எங்களுடைய பாட்டன் வீரன் அழகுமுத்துக்கோன் அவர்கள்.  வெள்ளைக்காரனுடைய துப்பாக்கியின் தோட்டாக்கள் எங்களின் ஆட்டு புழுக்கைக்குச் சமம் என்று முழக்கமிட்டவர். வீரத்தால் எங்கள் பாட்டனாரை வீழ்த்த முடியாமல், வஞ்சகம் செய்து சூழ்ச்சியால் வீழ்த்தினார்கள். அந்த சூழ்ச்சிக்கு துணைபோனவன் நம் மற்றொரு … Read more

நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை: காவிரியில் 1.10 லட்சம் கன அடி நீர் திறப்பு

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக, காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மாண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணையின் மொத்த உயரம் 124.80 அடியாக உள்ள நிலையில், நீர்மட்டம் 122.60 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 50,467 கனஅடி நீர் வரும் நிலையில், 72,964 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மைசூரு மாவட்டத்தில் உள்ள 84 அடி உயரமுள்ள கபினி அணையில் … Read more

திருப்பத்தூர் அருகே 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமை வாய்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் முனைவர்.ஆ.பிரபு தலைமையிலான ஆய்வுக்குழுவினர் திருப்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருந்தபோது மடவாளம் அருகே கல்வெட்டு ஒன்றை கண்டெடுத்துள்ளனர். இது குறித்து உதவிப் பேராசிரியர் முனைவர். ஆ.பிரபு கூறியது: ‘‘திருப்பத்தூரில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள மடவாளம் கிராமத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு நாங்கள் களஆய்வு நடத்தினோம். அப்போது, … Read more

முன்னாள் அமைச்சர் காமராஜ் உள்ளிட்ட 3 பேர் மீது மோசடி மற்றும் கொலை முயற்சி புகார்

முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் உள்பட 3 பேர் மீது பண மோசடி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாத திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட கீழவாளாச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர் சென்னை மயிலாப்பூரில் உள்ள சுப்புலட்சுமி என்பவருக்குச் சொந்தமான வீட்டை ரூ.60 லட்சம் பணம் கொடுத்து வாங்கியுள்ளார். அதன்பின்னர் சுப்புலட்சுமி தனது வீட்டை காலி செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். … Read more

தற்காலிக ஆசிரியர் நியமனம் – பள்ளிக்கல்வித் துறை முக்கிய உத்தரவு

Tamilnadu schools temporary teachers appointment new orders: தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பள்ளிக்கல்வித் துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நியமிக்க பள்ளிக் கல்வித்துறை கடந்த வாரம் சுற்றறிக்கை அனுப்பியது. இதில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 13,331 பணியிடங்கள் நிரப்பப்பட … Read more

போக்குவரத்துக் கழகத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதுதான் திராவிட மாடலா? – சீமான் கேள்வி.!

மோடி அரசினைப்போல பொதுத்துறை நிறுவனமான போக்குவரத்துக் கழகத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதுதான் திராவிட மாடலா? என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.  இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “அரசுப் பேருந்துகளைப் படிப்படியாகத் தனியார் வசம் ஒப்படைக்கும் தமிழ்நாடு அரசின் முடிவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஊழல் மற்றும் அரசின் நிர்வாக திறமையின்மையை மறைக்க மக்கள் சேவை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. 1972 ஆம் ஆண்டு … Read more

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சித் தலைவர்கள் வாழ்த்து

அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தினார். பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், இ.பி.எஸ்.-இன் பணி சிறக்க வாழ்த்துவதாக கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரனும் வாழ்த்து தெரிவித்துள்ளார். Source link

திண்டுக்கல், கொடைக்கானல் வனப் பகுதியில் 16,000 ஹெக்டேரில் அந்நிய மரங்களை அகற்றும் பணி விரைவில் தொடக்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட திண்டுக்கல், கொடைக்கானல் வனப்பகுதிகளில் மொத்தம் 16 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் அந்நிய மரங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை அகற்றும் பணி விரைவில் துவங்க உள்ளது. தமிழகத்தில் வனப்பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்ற தமிழக அரசு ரூ.536 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. முதற்கட்டமாக சத்தியமங்கலம், ஆனைமலை, முதுமலை, தர்மபுரி, திண்டுக்கல் மண்டலங்களில் உள்ள வனப்பகுதிகளில் அந்நிய மரங்களை அகற்றும் பணியை வனத்துறையினர் துவக்கியுள்ளனர். மண்டல வாரியாக வனப்பகுதியில் உள்ள அந்நிய மரங்கள் … Read more

திருப்பூர்: கற்களை வீசி தாக்கிக் கொண்ட பள்ளி மாணவர்கள்

திருப்பூரில் பள்ளி மாணவர்கள் கற்களை வீசி தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் குமார் நகர் பிஷப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கும் திருப்பூர் ரயில் நிலையம் அருகே பேருந்து நிறுத்தத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து சண்டை நடந்து வந்துள்ளது. இந்நிலையில், இன்று பிஷப் பள்ளி மாணவர்களும் நஞ்சப்பா பள்ளி மாணவர்களும் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கி உள்ளனர். இதனைக் கண்ட நபர் ஒருவர் மாணவர்களை தடுக்க … Read more