மன்னார்குடி அருகே குளிக்க சென்ற போது குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி.!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தது தொடர்பாக வடுவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரக்கோட்டை கிராமத்தில் உள்ள பழமையான குளத்தில் அக்கிராமத்தை சேர்ந்த 6 சிறுவர்கள் குளிக்க சென்றுள்ளனர். அப்போது, குளத்தின் ஒருகரையில் இருந்து மற்றொரு கரைக்கு நீந்தி சென்றபோது சிறுவர்கள் டேனியல் , மகேந்திரன் ஆகியோர் நீரில் முழ்கியதாக கூறப்படுகிறது. இதில், இருவரும் மூச்சு திணறி பரிதாபமாக உயிரழந்த நிலையில் தகவலறிந்து வந்த போலீசார் சிறுவர்களின் … Read more

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பெயரில் பணம் பறிப்பு: கல் குவாரி அதிபர்கள் குற்றச்சாட்டு

சேலம்: ”சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் பணம் பறிக்கும் நோக்கத்தில் பலர் குவாரி அதிபர்களை மிரட்டுகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழ்நாடு கல்குவாரி மற்றும் கிரசர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சின்னசாமி கூறியுள்ளார். தமிழ்நாடு கல்குவாரி மற்றும் கிரசர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் சங்கத்தின் மாநிலத் தலைவர் சின்னசாமி கூறியது: ”திருநெல்வேலி கல்குவாரி … Read more

குளத்திற்கு குளிக்கசென்று வெகுநேரமாகியும் திரும்பாத சிறுவர்கள்-கடைசியில் காத்திருந்த சோகம்

மன்னார்குடி அருகே குளிக்கச் சென்றபோது குளத்தில் மூழ்கி சிறுவர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே செருமங்கலத்தில் சக்கிலியன் குளம் உள்ளது. இதில் காரக்கோட்டை நடேசன் காலனியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் மகன் டேனியல், விஜயகுமார் என்பவரது மகன் மகேந்திரன் (15) ஆகிய இருவரும் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது குளத்தின் ஆழத்துக்கு சென்ற இருவரும், கரைக்கு திரும்பி வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், … Read more

TNSDC Jobs; தமிழக அரசு வேலைவாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

TNSDC recruitment 2022 for various jobs apply soon: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 09.06.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் கல்வியில் மாணவர்களுக்கு உதவுதல், ஊக்கப்படுத்துதல், வழிகாட்டுதல் மற்றும் திறமைப்படுத்துதல் போன்ற செயல்பாடுகளையும், நிறுவனங்களில் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் பயிற்சிகளையும் வழங்கி வருகிறது. இந்த திறன் மேம்பாட்டுக் கழகத்தில், சி.இ.ஓ, திட்ட … Read more

கணவன் மனைவி சண்டையில் தலையிட்ட உறவுகார பெண்.. பழிவாங்க கணவன் செய்த செயல்..!

பெண் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி  ஆபாச படங்களை பகிர்ந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவரின்  அடையாளத்தை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் கடந்த ஓராண்டாக ஆபாச படங்களை இணையத்தில் பகிர்ந்து வந்துள்ளார்.  இந்நிலையில், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து அந்த பெண் காவல்நிலையத்தில்  புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு … Read more

டாஸ்மாக் பாரில் லாட்டரி டிக்கட் விற்பனை… தலைமறைவாக இருந்த பார் உரிமையாளர் கைது.!

சென்னை அடுத்த திருவொற்றியூரில் உள்ள டாஸ்மாக் பாரில், லாட்டரி டிக்கட் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் பார் உரிமையாளரை போலீசார் பெங்களூருவில் வைத்து கைது செய்தனர். ஜோஸ்வா என்பவருக்குச் சொந்தமான டாஸ்மாக் பாருக்கு மது அருந்த வருவோரிடம் ஒரு நம்பர் லாட்டரி டிக்கெட் விற்று வந்த சுரேந்தர் என்ற பட்டதாரி இளைஞரை கடந்த வாரம் போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் பார் உரிமையாளர் ஜோஸ்வாவிற்கு தெரிந்தே லாட்டரி விற்பனை நடந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து பெங்களூருவில் தலைமறைவாக … Read more

“துர்நாற்றத்தில் தூங்கா நகரம்… தூய்மைப் பணியாளர்கள் கோருவதை உடனே செய்க” – இபிஎஸ்

சென்னை: “மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள்கடந்த 3 நாட்களாக 28 கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், தூங்கா நகரான மதுரையில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்து தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” என்று தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அறிவித்து, பின்புற வாசல் வழியாக ஆட்சியைப் பிடித்த இந்த திமுக … Read more

மரத்தில் தலைகீழாக தொங்கி உயிருக்கு போராடிய காகம் – பலமணி நேரம் போராடி மீட்ட இளைஞர்கள்

மரத்தில் தலைகீழாக தொங்கியபடி உயிருக்குப் போராடிய காகம் ஒன்றை இளைஞர்கள் பொறுமையாக மீட்ட நெகிழ்ச்சி சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை தக்கலை பகுதியில் அமைந்துள்ளது அரசு நடுநிலைப்பள்ளி. நேற்று காகம் ஒன்று இரை தேடியபடி இந்த அரசுப் பள்ளியின் முன் பக்கம் இருக்கும் வேப்பமரத்தில் வந்து அமர்ந்தது. இரை தேடிவந்த அந்த காகம் வேப்பமரத்தில் அமர்ந்தபோது அந்த மரத்தில் பின்னி பிணைந்து கிடந்த நூலில் அதன் கால்கள் … Read more

யூடியூபில் கொட்டும் பணம்: நீங்கள் சம்பாதிப்பது எப்படி?

Earn From YouTube in tamil: யூடியூப் மிகவும் பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக உருவெடுத்துள்ளது. பில்லியன் கணக்கான செயலில் உள்ள பயனர்களைக் கொண்டுள்ள இந்த தளம் ஏராளமான படைப்பாளிகள், பார்வையாளர்கள் மற்றும் பலரைக் கொண்டுள்ளது. மிகவும் பிரபலமான சேவையாக இருப்பதால், பயனர்கள் பணம் சம்பாதிக்கக்கூடிய பல வழிகளை இது வழங்குகிறது. யூடியூப் என்பது லட்சக்கணக்கான சேனல் உரிமையாளர்களின் வீடு. எனவே அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உருவாக்க இதை நம்பியுள்ளனர். பல பிரபலமான யூடியூபர்கள் இப்போது யூடியூப் … Read more

தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்த பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.! 

இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நேரில் சந்தித்து உள்ளார். இன்று மாலை நடந்த இந்த சந்திப்பு குறித்து பாமக தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள், இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுனர் மாளிகையில் தமிழக ஆளுனர் திரு. ஆர்.என். ரவி அவர்களை சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.  தொடர்வண்டித்துறையின் முன்னாள் இணை அமைச்சரும், … Read more