தன்னார்வ ரத்த கொடையாளர்களின் விபரங்களை பதிவு செய்ய செயலி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தன்னார்வ ரத்த கொடையாளர்களின் விபரங்களை பதிவு செய்ய செயலி உருவாக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உலக ரத்த தான கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு சென்னை, எழும்பூரில் உள்ள நல வாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் ரத்த தானம் அளித்தார். இதனைத் தொடர்ந்து ஆண்களில் 4 முறைக்கு மேலும், பெண்களில் 3 முறைக்கு மேலும் ரத்த தானம் வழங்கியவர்களில் 61 … Read more

”என்னைப்போல் எந்தப் பெண்ணும் ஏமாறக்கூடாது” – காதலன் மீது பெண் பரபரப்பு புகார்

திருமணம் செய்துகொள்வதாக தன்னைப் போல் பல பெண்களை காதலித்து ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக காதலன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது காதலன் தன்னைபோல் பல பெண்களை காதலித்து ஏமாற்றி உடலுறவு கொண்டதாகவும், தனது இச்சைக்கு இணங்க வேண்டும் எனக்கூறி பல வழிகளில் பாலியல் தொல்லைகள் கொடுத்ததாகவும், தற்போது மீண்டும் வேறொரு பெண்ணை வரும் 16 ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளதாகவும் சென்னை … Read more

சீரடி தனியார் ரயில் கருப்பு தினம் அனுசரித்து போராடிய ரயில்வே ஊழியர்கள்

க. சண்முகவடிவேல், திருச்சி கோவையில் இருந்து சீரடிக்கு தனியார் ரயில் இன்று இயக்கப்படும் நிலையில் ரயில்வே தொழிலாளர்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசு சுற்றுலா என்ற பெயரில் கோவை – ஷிரடி இடையிலான விரைவு ரயிலையும், ராமாயண யாத்ரா என்கிற பெயரில் டெல்லி – நேபாள் விரைவு ரயிலையும், பாரத் கெளரவ் என்கிற பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட விரைவு ரயில்களையும் மத்திய அரசு தனியாருக்கு விற்க முடிவு செய்துள்ளது. இதனை … Read more

தமிழக காவல்துறையினர் செய்யும் அதிகார துஷ்பிரயோகங்களை தமிழக அரசு ஏன் கண்டுகொள்வதில்லை? – உயர்நீதிமன்றம்.!

தமிழக காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் அண்மைய காலமாக அதிகரித்துள்ளதாகவும், இதனை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு காவலர் குடியிருப்பு ஒன்றில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து காவல்துறையைச் சேர்ந்த மாணிக்கவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரணை செய்த உயர்நீதிமன்றம், “கடந்த 2014 ஆம் ஆண்டில் காலி செய்யுமாறு உத்தரவிட்டு, நீதிமன்றம் அதை உறுதி செய்த … Read more

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிக்கு சென்ற முதல் நாளே மாணவி உயிரிழப்பு.. உறவினர்கள் சந்தேகம்

கோயம்புத்தூரில், கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே எட்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். குனியமுத்தூரில் உள்ள நிர்மல் மாதா பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த சவுமியாவிற்கு மதியம் திடீரென மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பள்ளி நிர்வாகம் உடனடியாக அந்த மாணவியை சங்கீதா  மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சை பலனின்றி சவுமியா உயிரிழந்த நிலையில் அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் புகார் அளித்தனர். மாணவி ஏன் மயக்கம் ஏற்பட்டது ? பெற்றோருக்கு எப்போது … Read more

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைகளுக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவப் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

சுருக்கு வைத்து மாடுகளை பிடித்துச் செல்லும் கொள்ளை கும்பல் – அதிர்ச்சியில் விவசாயி!

சேலம் அருகே காட்டுக்குள் சுருக்கு வைத்து  கொள்ளை கும்பல் மாடுகளை பிடித்துச் செல்லும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில்  புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க போலீசார் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியண்ணன் (49). இவர் அப்பகுதியில் உள்ள சுகந்தி என்பவரின் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருவதோடு 20க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில், தினந்தோறும் மாடுகளை அருகில் உள்ள … Read more

பாஜக-வில் இணையும் ரஜினி ரசிகர்கள்!

எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் தஞ்சையில் நாளை நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பாஜகவில் இணைகின்றனர். இதுகுறித்து தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் ரஜினி.கணேசன் கூறியதாவது:தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த 14 ஒன்றியங்கள், இரண்டு மாநகரங்கள், ஒரு நகரம் ஆகியவற்றைச் சேர்ந்த ரசிகர்கள்; 1000-1500 பேர் பாஜகவில் இணைகிறார்கள்.அதேபோல பெரம்பலூர் மாவட்ட செயலாளர் … Read more

அதிமுகவில் ஒற்றை தலைமை… ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? 

அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் எதிர்பார்ப்பது ஒற்றை தலைமையே என்றும், அதுகுறித்து இன்றைய ஆலோசனை கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ள. அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று சென்னை: ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். … Read more

நாட்டிலேயே முதல் முறையாக.. முதல் பயணத்தில்.. முதல் தனியார் ரயில்

நாட்டிலேயே முதல் முறையாக தனியாரால் இயக்கப்படும் ரயில் கோவையில் இருந்து சீரடிக்கு பயணத்தை தொடங்கியது. திருப்பூர், ஈரோடு,சேலம், பெங்களூரு, மந்திராலயம் வழியாக செல்லும் ரயிலில் 1,500 பேர் பயணிக்கின்றனர். மத்திய அரசின் ‘பாரத் கௌரவ்’ திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள 5 நகரங்களில் இருந்து ஷீரடிக்கு தனியார் ரயில்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன் ஒரு பகுதியாகக் கோவையில் இருந்து ஷீரடிக்கு இன்று முதல் ரயில் சேவை இயக்கப்படுகிறது. கோவையைச் சேர்ந்த எம் என் … Read more