மிசாவையே பார்த்த ஸ்டாலினை மிரட்டுகிறீர்களா? – முதல்வர் கேள்வி

CM stalin Madurai election campaign speech: ரோம் நகராக மாற்றப்போகிறோம் என்று மதுரையை சீரழிச்சது தான் மிச்சம் என அதிமுகவை கடுமையாக விமர்த்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக ஓவ்வொரு மாவட்ட திமுக வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரம் … Read more

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு.!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்றும், நாளையும் தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.  17.2 2022 மற்றும் 18.2.2022 : தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் … Read more

கோயம்புத்தூரில் பத்திர எழுத்தர் முன் விரோதம் காரணமாக படுகொலை.! <!– கோயம்புத்தூரில் பத்திர எழுத்தர் முன் விரோதம் காரணமாக படுக… –>

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பத்திர எழுத்தர் ஒருவர் முன் விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். சரவணம்பட்டியை சேர்ந்த பத்திர எழுத்தர் பொன்னுசாமி என்பவர் தனக்கு சொந்தமான இடத்தை முத்துக்குமார் என்பவருக்கு 50 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு  பவர் எழுதிக்கொடுத்துள்ளார்.  சில நாட்களுக்கு முன்பு பணத்தை திருப்பி கொடுத்து பவர் பத்திரத்தை இரத்து செய்த நிலையில், அவரை தொடர்பு கொண்ட முத்துக்குமார் பேச வேண்டுமென அழைத்ததால் நல்லாம்பாளையம் சென்றுள்ளார். அங்கு முத்துக்குமார் மற்றும் அவரது நண்பர் ராஜன் ஆகியோர் பொன்னுசாமியிடம் … Read more

கோயிலுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.88 கோடி வாடகை வசூல்: இந்து சமய அறநிலையத் துறை தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் கோயில்களுக்கு சொந்தமான இடங்களில்வசிப்பவர்களிடம் ரூ.88 கோடிவாடகை வசூல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. அதில் குறிப்பாக கோயில் திருப்பணி, திருத்தேர், அடிப்படை வசதிகள் மேம்பாடு, பணியாளர்கள் நலத்திட்ட உதவி கள், ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்புஉள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வாடகை … Read more

மகனின் திருமணத்தை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடத்தி கொண்டாடி மகிழ்ந்த தந்தை

விளாத்திகுளம் அருகே மகனின் திருமணத்தை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தால் தனது நீண்ட நாள் கனவு நிறைவேறியதாக தந்தை நெகிழ்ச்சி அடைந்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள விருசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகசாமி. இவர் தனது இளம் வயதில் மாபெரும் மாட்டுவண்டி பந்தய வீரராக திகழ்ந்துள்ளார். பின்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக தனது சொந்த கிராமமான விருசம்பட்டியிலிருந்து, சென்னைக்கு புலம்பெயர்ந்து அங்கு தன் குடும்பத்தினருடன் தற்போது வாழ்ந்து வருகிறார். இதனால் இவர் தொடர்ந்து மாட்டுவண்டி பந்தயங்களில் … Read more

புரதம் நிறைந்த நிலக்கடலை தோசை; இனிமே இப்படி சமைச்சு பாருங்க!

புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது என்று அனைவரும் சொல்லக் கேட்டிருப்போம். ஆனாலும் நமக்கு பரீட்சையம் இல்லாத உணவை தொட்டுப் பார்க்கவும் நமக்கு ஏதோ போன்ற உணர்வு இருக்கும். இது உங்களுக்கு மட்டும் அல்ல. பெரும்பாலான நபர்களுக்கு இது இருக்கிறது. தென்னிந்திய பாரம்பரிய உணவுகளிலேயே இது கிடைக்கிறது என்றால் நாம் என்ன வேண்டாம் என்றா சொல்லப் போகிறோம். உங்களுக்காக மிகவும் எளிமையான,, புரதம் நிறைந்த நிலக்கடலை தோசை எப்படி செய்வது என்பதை … Read more

நேரம் குறித்த மாநில தேர்தல் ஆணையம்.. வெளியான அறிவிப்பு.!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஆயிரத்து 374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3 ஆயிரத்து 843 நகராட்சி உறுப்பினர்கள், 7 ஆயிரத்து 609 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 826 பதவிகளுக்கு வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.  இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் … Read more

இலங்கை அரசை கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம்.! <!– இலங்கை அரசை கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற போ… –>

இலங்கை அரசை கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் முதல் இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற பத்திற்கும் மேற்பட்ட படகுகளையும், 50க்கும் மேற்பட்ட மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். கைது நடவடிக்கைகளை கண்டித்தும், மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு பெற மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டியும் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். மேலும் வரும் 21ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாகவும் … Read more

10, 12-ம் வகுப்பு வினாத்தாள் முன்கூட்டியே வெளியான சர்ச்சை: தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடத்துக்கு முன் பள்ளிகளுக்கு அனுப்பப்படும்

சென்னை: 10, 12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியான நிலையில், வினாத்தாள் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வினாத்தாளை தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புமாணவர்களுக்கான முதலாவது திருப்புதல் தேர்வு கடந்த 9-ம் தேதி தொடங்கியது. பொதுத் தேர்வு எவ்வாறு நடத்தப்படுகிறதோ அதேபோன்று திருப்புதல் தேர்வும் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி நடத்தப்பட வேண்டும் என்ற பள்ளிக்கல்வித் துறை உத்தரவின்படி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. … Read more