உலக செய்திகள்
எல்லை மீறும் அமெரிக்கா; வடகொரியா கடும் எச்சரிக்கை.!
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், உக்ரைன் நாட்டு அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார். வரலாற்று ரீதியாக ரஷ்யாவின் ஒரு பகுதி உக்ரைன் என ரஷ்யா கூறிவருகிறது. ஆனால் தாங்கள் தனித்துவமானவர்கள் என உக்ரேனியர்கள் கூறிவருகின்றனர். இந்த சூழலில் நேட்டோவில் இணைய உக்ரைன் சம்மதம் தெரிவித்ததால், அதை எதிர்த்து ரஷ்யா போரை தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் … Read more
‘என்னை கொல்ல சதி ’ – இம்ரான் கான் கதறல்.!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து ஓய்வு பெற்ற பின்னர், 1996ஆம் ஆண்டில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (பிடிஐ) என்ற கட்சியை இம்ரான் கான் தொடங்கினார். கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இம்ரான் கான் கட்சிக்கு ஒரேயொரு எம்.பி. கிடைத்த நிலையில் 2007ஆம் ஆண்டு தேர்தலில் 80 எம்.பி.க்கள் கிடைத்தனர். 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 116 இடங்களில் வெற்றிபெற்று, சிறு கட்சிகளின் உதவியோடு பிரதமர் ஆனார். சுமார் 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த … Read more
முன்னுதாரண தலைவர் ஜெசிந்தா ஆர்டெர்ன் – உலக நாடுகள் கற்றதும் பெற்றதும் என்ன?
நியூசிலாந்தின் பிரதமர் பதவியிலிருந்து விடைபெற்று இருக்கிறார் ஜெசிந்தா ஆர்டெர்ன். நாட்டைக் காக்கும் சூப்பர் மேனாக சித்தரித்துக் கொண்டிருக்கும் உலகத் தலைவர்களுக்கு மத்தியில் மக்களோடு மக்களாக நின்று தனது ஐந்தரை ஆண்டு காலப் பணியை சிறப்பாகவும், நிறைவாகவும் முடித்திருக்கிறார் ஜெசிந்தா. “நான் என்னால் முடிந்ததை செய்திருக்கிறேன். இந்த ஐந்தரை ஆண்டுகளில் பெரிய சவால்களை நான் எதிர்கொண்டேன். நானும் மனிதிதான். அரசியல் தலைவர்களும் மனிதர்கள்தான். நான் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. இது நான் விடைபெறுவதற்கான நேரம்” என ஜெசிந்தா … Read more
அமெரிக்காவின் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவரை சுத்தியலால் தாக்கிய நபர்..
அமெரிக்காவின் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசியை, நபர் ஒருவர் வீடு புகுந்து சுத்தியலால் தாக்கிய சம்பவத்தின் வீடியோவை காவல்துறை வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் நான்சி பெலோசி வீட்டில் இல்லாத நேரத்தில், வீடு புகுந்த டிபேப் ஸ்வெட்டர் என்ற அந்த நபர், சுத்தியலால் தாக்கியதில் பால் பெலோசிக்கு மண்டை ஓட்டின் எலும்பு உடைந்தது. சிகிச்சைக்கு பின் அவர் குணமடைந்தார். சம்பவ இடத்திலேயே டிபேப் ஸ்வெட்டரை போலீசார் கைது செய்த நிலையில், நான்சி பெலோசியை … Read more
பொருளாதார நெருக்கடிக்கு அல்லாவே காரணம்; பாகிஸ்தான் நிதி அமைச்சர்.!
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்ற வாக்கெடுப்பில் இம்ரான் கான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பின்பு பாகிஸ்தானின் பிரதமராக பதவி ஏற்ற ஷாபாஸ் ஷெரீஃப் அரசுக்கு தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மிகப்பெரிய சோதனையாக உள்ளது என்றார். இம்ரான் கான் தலைமையிலான அரசு பொருளாதாரத்தை முறையாகக் கையாளவில்லை என்றும் மீண்டும் பழைய நிலைக்கே பொருளாதாரத்தைக் கொண்டு ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் பிரதமராக பதவி ஏற்ற பின்னர் ஷாபாஸ் … Read more
கால்நடைகள் கொண்டு சென்ற கப்பலில் 11 கோடியே 40 லட்சம் டாலர் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்..!
ஸ்பெயினில் கால்நடைகளை ஏற்றிவந்த கப்பலில் இருந்து 11 கோடியே 40 லட்சம் டாலர் மதிப்புள்ள போதைப்பொருட்களை போலீசார் கைப்பற்றினர். கேனரி தீவுகளுக்கு அப்பால் கால்நடை கப்பலை சோதனை செய்த ஸ்பெயின் போலீசார், அதிலிருந்த நான்கரை டன் கோக்கைனை பறிமுதல் செய்தனர். அந்த கப்பல் பத்திற்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள துறைமுகங்களுக்கு சென்று வந்துள்ளது. போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கால்நடைகள் கொண்டு செல்லும் கப்பல்களை கடத்தலுக்கு பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். Source link
உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கும் அமெரிக்காவை விமர்சித்த வடகொரியா..
உக்ரைனுக்கு 31 பீரங்கிகளை வழங்குவதாக உறுதியளித்ததன் மூலம், போரின் தீவிரத்தை அமெரிக்கா அதிகரித்துள்ளதாக வடகொரியா விமர்சித்துள்ளது. அமெரிக்கா வரம்பை மீறி, மறைமுகமாக போரை திணித்து, மேலாதிக்கத்தை நிறுவ முயற்சிப்பதாகவும் வடகொரியா குற்றஞ்சாட்டியுள்ளது. அமெரிக்காவின் ஆயுத உதவி குறித்து கவலை தெரிவித்துள்ள வடகொரிய அதிபரின் சகோதரி கிம் யோ ஜோங், இறையாண்மை கொண்ட அரசுகளின் தற்காப்பு உரிமை குறித்து அவதூறு பரப்ப அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு உரிமை இல்லை என சாடியுள்ளார். Source link
பாகிஸ்தானில் மர்ம நோய்க்கு 14 குழந்தைகள் உட்பட 18 பேர் பலி| 18 people, including 14 children, have died of a mysterious disease in Pakistan
கராச்சி: பாகிஸ்தானில், மர்ம நோயால் ௧௪ குழந்தைகள் உட்பட ௧௮ பேர் உயிரிழந்தனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில், துறைமுக நகரான கராச்சி அருகே உள்ள கெமாரி கிராமத்தில், ஜன., ௧௦ முதல் ௨௫ம் தேதிக்குள் மர்ம நோயால் ௧௮ பேர் பலியாகி உள்ளனர். இதில், ஒரே குடும்பத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.இது பற்றி சுகாதாரத் துறை இயக்குனர் அப்துல் ஹமீத் ஜுமானி கூறியதாவது: கடற்கரையை ஒட்டியுள்ள மவாச் கிராமத்தில், தொழிலாளர்கள் மற்றும் … Read more