ஜி – 20 மாநாட்டில் மேற்கத்திய நாடுகளுக்கு பிரதமர் மோடி. சூடு! . எரிபொருள் தடையால் மக்களுக்கு நேரடி பாதிப்பு என பேச்சு

பாலி :உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ள அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்கு, ‘ஜி – ௨௦’ மாநாட்டில் பிரதமர் மோடி சரியான சூடு வைத்தார். ”எரிபொருள் தடையால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து மக்களுக்கு நேரடி பாதிப்பு ஏற்படுகிறது,” என, அவர் குறிப்பிட்டார். ‘ஜி – 20’ எனப்படும் உலகின் பெரும் பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பின் கூட்டம், ஆசிய நாடான இந்தோனேஷியாவின் … Read more

இந்திய – அமெரிக்க உறவு: மோடி – பைடன் மகிழ்ச்சி

இந்திய – அமெரிக்க உறவு: மோடி – பைடன் மகிழ்ச்சி! ‘ஜி – 20’ மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்து இருநாட்டு உறவு குறித்து பேசினார். இது தொடர்பாக நம் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:இந்திய – அமெரிக்க உறவு குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆய்வு செய்தனர். பிரதான மற்றும் வளரும் தொழில்நுட்பங்கள், மேம்பட்ட கணினி தொழில்நுட்பம், ‘ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட … Read more

உலகின் 800 ஆவது கோடி அதிசய குழந்தை எங்கு பிறந்துள்ளது தெரியுமா?

உலக அளவில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவில் கொரோனா தாக்கத்தின் விளைவாக சமீபகாலமாய் பிறப்பு விகிதம் கணிசமான அளவு குறைந்துள்ளது. அதேசமயம் இந்தியாவின் மக்கள்தொகை வழக்கம்போல் கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, இன்னும் சில ஆண்டுகளிலேயே மக்கள்தொகையில் இந்தியா சீனாவை விஞ்சிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உலகின் மக்கள்தொகை இன்றைய தேதியுடன் (நவம்பர் 15) 800 கோடி என்ற புதிய மைக்கல்லை தொட்டுள்ளது. 12 ஆண்டுகளில் இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2010 … Read more

ரஷ்யா – உக்ரைன் இரு நாடுகளும் போர் கைதிகளை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்ததாக ஐ.நா குற்றச்சாட்டு..!

ரஷ்யா, உக்ரைன் இரு நாடுகளும் போர் கைதிகளை சித்திரவதை செய்ததாக ஐ.நா மனித உரிமை ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது. இருதரப்பிலும் விடுவிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட போர் கைதிகளிடம் ஐ.நா அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் ராணுவத்தினரை நாய்களை விட்டு கடிக்கவைத்தும், நிர்வாணப்படுத்தி உடலில் மின்சாரம் பாய்ச்சியும் ரஷ்ய வீரர்கள் சித்திரவதை செய்துள்ளது தெரியவந்தது. அதேபோல் உக்ரைன் வீரர்களும், தங்களால் கைது செய்யப்பட்ட ரஷ்ய வீரர்களை முறையான விசாரணையின்றி கொலை செய்ததும், நிர்வாணப்படுத்தி வாகனங்களில் அழைத்துச்சென்று அடித்து துன்புறுத்தியதும் … Read more

உக்ரைனில் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

பாலி: “உக்ரைனில் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து, தூதரக வழியில் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்” என்று ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். இந்தோனேசியாவின் பாலி தீவில் ஜி-20 உச்சி மாநாடு தொடங்கி உள்ளது. இதில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு குறித்த முதலாவது அமர்வில் பிரதமர் மோடி ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்: “சவாலான சர்வதேச சூழலியலில் ஜி-20 மாநாட்டிற்கு சிறப்பான தலைமைத்துவத்தை அளிக்கும் அதிபர் ஜோகோ … Read more

பாலியில் நடைபெற்று வரும், ஜி 20 மாநட்டின் இடையே சந்தித்து பேசிய பிரதமர் மோடி – அமெரிக்க அதிபர் பைடன்

ஜி 20 மாநட்டின் இடையே, இருதரப்பு உறவு குறித்து இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்து ஆலோசித்ததாக, வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாலியில் நிகழ்ந்த இந்த சந்திப்பின்போது, முக்கிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, உக்ரைன் போர் உள்பட பல விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.      Source link

World Population: உலக மக்கள்தொகை இன்று 800 கோடியை எட்டியது!

மக்கள் தொகை வளர்ச்சியில் இது ஒரு மைல் கல்லாக கருதும் ஐ.நா., மதிப்பீட்டின்படி, செவ்வாய்கிழமை (நவம்பர் 15) உலக மக்கள் தொகை 8 பில்லியன் அதாவது 800 கோடியை மக்களை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய கணிப்புகளின்படி, உலக மக்கள்தொகை 2030 ஆம் ஆண்டில் 8.5 பில்லியனாகவும், 2050 ஆண்டில் 9.7 பில்லியனாகவும், 2100 இல் 10.4 பில்லியனாகவும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கிறது. உலக மக்கள்தொகை தினத்தை ஒட்டி திங்களன்று வெளியிடப்பட்ட வருடாந்திர … Read more

ஹாய் மோடி.. ஹலோ ஜின்பிங்; ஜி – 20 மாநாட்டில் திடீர் சந்திப்பு!

சீன அதிபர் ஷி ஜின்பிங் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பரஸ்பரம் நன்றி தெரிவித்துக் கொண்டனர். தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவில் ஜி – 20 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து … Read more

இஸ்ரேலியர்களை கண்மூடித்தனமாக கத்தியால் குத்திய பாலஸ்தீன இளைஞர் சுட்டுக்கொலை..!

கத்தியால் கண்மூடித்தனமாகத் தாக்கி, இஸ்ரேலியர்கள் 2 பேர் உயிரிழக்க காரணமான பாலஸ்தீன இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார். மேற்கு கரையிலுள்ள தொழிற்பூங்காவின் நுழைவாயில் மற்றும் பெட்ரோல் பங்க் அருகே சாலையில் சென்ற இஸ்ரேலியர்களை குறிவைத்து 18 வயது பாலஸ்தீன இளைஞர் ஒருவர் கத்தியால் சரமாரியாகத் தாக்கிவிட்டு காரில் தப்பி சென்றார். மற்ற வாகனங்கள் மீது மோதி, விபத்துக்குள்ளான தனது காரை விட்டு வெளியேவந்தபோது இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டார். Source link

COP 27: பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு முக்கிய காரணமாக விளங்கும் Coca-Cola & PepsiCo!

எகிப்தில் இந்த ஆண்டு COP27 காலநிலை உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. கிரக வெப்பமயமாதல் உமிழ்வைக் குறைப்பதற்கும், காலநிலை தாக்கங்களால் நாசமடைந்து வரும் நாடுகளுக்கு நிதியுதவியை அதிகரிப்பதற்கும் ஆன ஒரு ஒப்பந்தத்தில் கிட்டத்தட்ட 200 நாடுகள் ஈடுபட உள்ளன. Coca-Cola நிறுவனம் COP27 உச்சிமாநாட்டின் ஸ்பான்சர்களில் ஒன்றாக உள்ளது. ஆனால் அந்த நிறுவனம் தான் அதிக பிளாஸ்டிக் மாசுபாட்டை பரப்புகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ‘பிரேக் ஃப்ரீ ப்ளாஸ்டிக்’ என்ற உலகளாவிய பிராண்ட் தணிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில், கோகோ … Read more