தமிழர்களுக்கு 'தை பொங்கல்' வாழ்த்து தெரிவித்த கனடா பிரதமர்…!!

ஒட்டாவா, தை மாதம் முதல் நாளான நேற்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, வண்ண கோலமிட்டு,பொங்கல் பானைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, மஞ்சள் கொம்பு செடியை கட்டி, மங்களகரமாக புத்தரிசியில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடினர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக உற்சாகம் இழந்த இந்த பொங்கல் விழா தற்போது எந்த கட்டுப்பாடும் இல்லாத நிலையில் களை கட்டியது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை … Read more

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கை அதிபர் ரணில் யோசனை| Sri Lankan President Ranils idea to overcome the economic crisis

கொழும்பு: ”பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நிதியத்தின்ஆதரவை பெறுவதேநல்லது” என இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த சில மாதங்களாக நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக இலங்கையில் உள்ள தொழிற்சங்க நிர்வாகிகளுடன் … Read more

பொது இடங்களில் புகைபிடிப்பதற்கான தடையை வலுப்படுத்தும் மெக்சிகோ

மெக்சிகோ, உணவகங்கள் மற்றும் பணியிடங்களில் புகை இல்லாத பகுதிகளை நிறுவிய மெக்சிகோவில் 2008 விதி இப்போது அனைத்து பொதுப் பகுதிகளிலும் முழுமையான தடையை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பூங்காக்கள், கடற்கரைகள், பணியிடங்கள் மற்றும் உணவகங்கள் அனைத்தும் இந்த வகையின் கீழ் வருகின்றன. கூடுதலாக, புகையிலை பொருட்களின் விளம்பரம், சந்தைப்படுத்தல் மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஆகியவற்றிற்கு முழுமையான தடை விதிக்கப்படுகிறது. இந்த புதிய மற்றும் கடுமையான விதிமுறைகள் வேப்ஸ் மற்றும் இ-சிகரெட்டுகளுக்கும் நடைமுறையில் உள்ளன என்று பிபிசி தெரிவித்துள்ளது. தடையை அமல்படுத்தும் … Read more

உக்ரைனில் ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 21 பேர் உயிரிழப்பு

கீவ், உக்ரைனில் ரஷிய படைகள் தொடர்ந்து உக்கிரமான தாக்குதலை நடத்திவருகின்றன. நேற்று இரவு டினிப்ரோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை குறிவைத்து ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. பல வாகனங்கள் தீப்பற்ற எரிந்தன. குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அங்கு மீட்பு பணி நடைபெறுகிறது. இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் 15 வயது சிறுமி உள்பட 21 பேர் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். … Read more

இலங்கையில் பொங்கல் திருநாளை கொண்டாடிய ஈழத்தமிழர்கள்..!

இலங்கையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஈழத்தமிழர்கள் வசிக்கும் பகுதிகளிலுள்ள ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் வழக்கத்தைவிட பொங்கல் கொண்டாட்டங்கள் சற்று களையிழந்து காணப்பட்டன. நாட்டின் பொருளாதாரம் மேம்பட கோயில்களில் நம்பிக்கையுடன் மக்கள் வழிபட்டனர். Source link

ஒரே மாதத்தில் 60 ஆயிரம் பேர் பலி; சீனாவில் கொரோனா கோர தாண்டவம்| 60 thousand people died in a single month; Chinas Corona crisis

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: சீனாவில் கொரோனா வேகமாக பரவுவதால், கடந்த டிச.,8ல் இருந்து தற்போது வரை, 60 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நம் அண்டை நாடான சீனாவில் கடந்த டிசம்பர் 8 முதல் தற்போது வரை, 54 ஆயிரத்து 435 பேர் கொரோனா மற்றும் அது தொடர்பான இணை நோய்களால் இறந்துள்ளனர். ஆனால், இந்த இறப்புகள் அனைத்தும் மருத்துவமனைகளில் நிகழ்ந்தவை. மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறாமல் வீட்டிலேயே இறந்தவர்கள் … Read more

ஆப்கானிஸ்தானில் வீடு புகுந்து முன்னாள் பெண் எம்.பி. சுட்டுக் கொலை..!!

காபூல், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தொடர்ந்து வன்முறை சம்பவங்களும், படுகொலைகளும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தில் எம்.பி.யாக இருந்த முர்சால் நபிஜாதா என்ற பெண் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அவரது வீட்டில் முன்னாள் ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினரும் அவரது பாதுகாவலரும் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் 2021ஆம் ஆண்டு தலிபான்கள் அதிகாரத்திற்கு வந்த பிறகு காபூலில் மீண்டும் … Read more

இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழ் சமூகத்துக்கு வாழ்த்து

ஒட்டாவா: தமிழ்நாடு உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழ் சமூகத்தினர் பொங்கல் விழா கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழ் சமூகத்துக்கு தமிழ் மொழியில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். பொங்கல் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா, ஜல்லிக்கட்டு, சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் ஜஸ்டீன் ட்ரூடோவும் ஒருவராக … Read more

பல்கேரியாவில் உடல் ஆரோக்கியம் வேண்டி முகமூடிகள் அணிந்தபடி, மேளதாளங்கள் முழங்க கொண்டாடப்படும் ‘சுர்வா திருவிழா’..!

பல்கேரியாவில், உடல் ஆரோக்கியம் வேண்டி கொண்டாடப்படும் சுர்வா திருவிழாவில், இறகுகளால் அலங்கரிக்கப்பட்ட முகமூடிகளை அணிந்தபடி மேளதாளங்கள் முழங்க, மக்கள் பேரணி சென்றனர். அவர்கள் அணிந்திருந்த பாரம்பரிய சிவப்பு ஆடைகளில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளிலிருந்து வெளிப்படும் ஓசை, தீய சக்திகளை விரட்டியடிக்கும் என நம்பப்படுகிறது. புத்தாண்டை முன்னிட்டு கொண்டாடப்படும் சுர்வா திருவிழாவில் கலந்துகொள்ள அனைவரும் சொந்த ஊர்களுக்குத் திரும்புவார்கள் என கூறப்படுகிறது. Source link

உலகளவில் மோடி தலைமையில் அதிகரிக்கும் இந்தியாவின் செல்வாக்கு: பாக்., மீடியா புகழாரம்| pak media praise india

இஸ்லாமாபாத்: உலகளவில் பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவின் கால்தடம் மற்றும் செல்வாக்கு அதிகரித்து வருவதாக பாக்., வெளியாகும் பத்திரிகையில் தலையங்கம் எழுதப்பட்டு உள்ளது. வழிநடத்தும் இந்தியா பாகிஸ்தானில் வெளியாகும் தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் பத்திரிகையில் அரசியல், பாதுகாப்புத்துறை நிபுணர் ஷஜாத் சவுத்ரி எழுதியுள்ளதாவது: வெளியுறவு கொள்கையில், பிரதமர் மோடி தலைமையில் இந்தியா தனக்கு என புதிய விதியை வகுத்துள்ளது. தனக்கு முன்னர் இருந்தவர்கள் செய்ய முடியாததை, இந்தியாவிற்கு முத்திரை குத்த பிரதமர் மோடி ஏதோ செய்துள்ளார். முக்கியமாக, … Read more