எண்ணெய் கப்பலில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு..!

தாய்லாந்து அருகே நிறுத்தப்பட்டிருந்த எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். ஸ்மூத் சீ-22 என்ற அந்த எண்ணெய் கப்பலில் பழுதுநீக்கும் பணிகள் நடைபெற்றுகொண்டிருந்தபோது திடீரென பலத்த சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டு கப்பலில் தீப்பற்றி எரிந்தது. இதனால் பல அடி உயரத்திற்கு கரும்புகை எழும்பியது. நெருப்பை கட்டுப்படுத்த கரையிலிருந்தும், சிறிய படகுகளிலிருந்தும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இந்த விபத்தில், மியான்மரை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர். மாயமான 7 பேரை … Read more

பாலியல் தொழிலுக்காக பாகிஸ்தானிய பெண்களை 'இறக்குமதி' செய்யும் சீனா!

சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தட (CPEC) திட்டத்தை  சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ள சீனா பயன்படுத்துகிறது. வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை கையாள்வதில் பாகிஸ்தான் திணறி வரும் இந்த நேரத்தில், சீனா அதற்கு உதவாமல், நிலமையை தனக்கும் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. இருப்பினும், சுயநலமே குறியாக கொண்ட சீனா இவ்வாறு நடந்து கொள்வதில் ஆச்சரியமில்லை. சீனா, பாகிஸ்தானில் இந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதற்குப் பின்னால் சீனாவின் வஞ்சகமான நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரிகிறது. CPEC திட்டத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, … Read more

ஆறு மாத குழந்தை சுட்டுக் கொலை… அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பிரபலமான நகரங்களில் ஒன்றுதுலாரே. இந்த நகரின் ஒரு வீட்டில் இன்று துப்பாக்கி சூடு நடந்துள்ளது. தகவல் அறிந்து போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்கு விரைந்துள்ளனர். அப்போது அங்கு ஆறு மாத குழந்தை, தாய் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு பிணமாக கிடந்ததை கண்டு போலீசாரே ஒரு கணம் அதிர்ச்சி அடைந்தனர். துப்பாக்கி சூட்டில் காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்ட போலீசார் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். … Read more

இந்தியாவுடன் உண்மையான பேச்சுவார்த்தை நடத்த பாக். பிரதமர் விருப்பம்..!

இந்தியாவுடன் நடத்திய 3 போர்களால் துன்பம், வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவற்றை மட்டுமே பாகிஸ்தான் பெற்றிருப்பதாலும், அதிலிருந்து கற்றுக் கொண்ட பாடத்தாலும் இந்தியாவுடன் உண்மையான பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார். துபாயின் அரபி சேனலுக்கு ஷெபாஸ் ஷெரீப் அளித்த பேட்டியில், காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு பிரதமர் மோடியுடன் அமர்ந்து நேர்மையான முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதே தீர்வாக இருக்கும் என்று கூறினார். மேலும், அண்டை நாடான இந்தியாவுடன் எங்களின் உண்மையான பிரச்சனைகளை தீர்த்து, … Read more

பிரிட்டன் பிரதமர் அலுவலகத்தில் பொங்கல் விழா: தழைவாழையில் விருந்து| Pongal Celebrations at the British Prime Ministers Office: Feasting on the Leaf

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: பிரிட்டன் பிரதமர் அலுவலகத்தில் நடந்த பொங்கல் பண்டிகையையொட்டி, பிரதமர் அலுவலக ஊழியர்களுக்கு தழைவாழை இலையில் விருந்து வைத்தார் பிரதமர் ரிஷிசுனாக். பிரிட்டன் பிரதமாக பதவியேற்ற ரிஷி சுனாக், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் லண்டனில் 10. டவுனிங் தெருவில் பிரதமர் அலுவலகம் உள்ளது. இங்கு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து பிரதமர் அலுவலக ஊழியர்கள், பாதுகாவலர்கள் ஆகியோருக்கு பிரதமர் சார்பில் விருந்து வைக்கப்பட்டது. இதில் தழைவாழை இலையில் … Read more

சீனாவில் குறைந்து வரும் மக்கள் தொகை எண்ணிக்கை – தேசிய புள்ளியல் துறை

சீனாவின் தேசிய புள்ளியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 1961ம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது, 2021ம் ஆண்டில் இருந்ததை விட 2022ம் ஆண்டில் 8 லட்சத்து 50 ஆயிரம் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், மக்களிடம் அதிகரித்துள்ள கல்வியறிவால் “ஒரு குழந்தை” என்ற திட்டத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது. தற்போது, சீனாவில் 141 கோடியே 17 லட்சம் மக்கள் உள்ள நிலையில், இந்தியா 2022ம் ஆண்டிலேயே 141 … Read more

ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஹிந்து கோயில் மீது தாக்குதல்| Attack on Hindu temple again in Australia

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் மற்றொரு ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் நடந்துள்ளது. ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரின் வடக்கு புறநகர் பகுதியில் உள்ள சுவாமி நாராயண் உள்ளது. . இதன் மீது கடந்தாண்டு அக்டோபர் மாதம் காலிஸ்தான் ஆதரவாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தி இந்தியாவிற்கு எதிரான வார்த்தைகளையும் எழுதினர். ஹிந்துக்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தும், கொடூர செயலுக்கு பல்வேறு தலைவர்கள் வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து … Read more

பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கி சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு!

பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கியை ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜமாத் உத் தாவா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவராக இருந்த அப்துல் ரஹ்மான் மக்கியை தேடப்படும் பயங்கரவாதியாக இந்தியாவும், அமெரிக்காவும் அறிவித்திருந்தது. அப்துல் ரஹ்மான் மக்கி பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பது, நிதி திரட்டுவது, இளைஞர்கள் மத்தியில் உரையாற்றி அவர்களை மூளைச்சலவை செய்து தாக்குதலுக்கு தயாராக்குவது, குறிப்பாக இந்தியா மற்றும் ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் … Read more

புலம்பெயர்ந்து வருபவர்களுக்கு இனி நியூயார்க்கில் இடமில்லை: நகர மேயர்

நியூயார்க்: புலம்பெயர்ந்து வருபவர்களுக்கு இனி நியூயார்க்கில் இடமில்லை என்று அந்நகர மேயர் தெரிவித்துள்ளார். நியூயார்க் நகரில் புலம்பெயர்பவர்களால் உண்டாகும் நெருக்கடிகளை ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரும், நியூயார்க் நகர மேயருமான எரிக் ஆடம்ஸ் விமர்சித்திருக்கிறார். இவ்விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் அவர் கடுமையாக விமர்சித்திருக்கிறார். நியூயார்க் மேயர் மட்டுமல்ல, அமெரிக்காவின் சிகாகோ, வாஷிங்டன் டிசி போன்ற நகர மேயர்களும் இந்தக் கருத்தை முன்வைத்த்துள்ளனர். முன்னதாக, குடியரசுக் கட்சி ஆளும் மாகாணங்களில் உள்ள மேயர்கள் தங்கள் மாகாணங்களுக்கு வரும் … Read more

சட்டப்பிரிவு 370 ரத்தை நீக்கினால் மட்டும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் விளக்கம்

இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்த நிலையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் அளித்தால் மட்டுமே இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. துபாயை மையமாகக் கொண்டு இயங்கும் அல் அரேபியா என்ற தொலைக்காட்சிக்கு ஷெபாஸ் ஷெரீப் சமீபத்தில் நேர்காணல் அளித்துள்ளார். அதில், ”இந்தியாவுடன் ஆழமான, நேர்மையான, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விரும்புகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதனை அனுமதிக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் … Read more