பிரிட்டன் பிரதமர் அலுவலகத்தில் பொங்கல் விழா: தழைவாழையில் விருந்து| Pongal Celebrations at the British Prime Ministers Office: Feasting on the Leaf

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: பிரிட்டன் பிரதமர் அலுவலகத்தில் நடந்த பொங்கல் பண்டிகையையொட்டி, பிரதமர் அலுவலக ஊழியர்களுக்கு தழைவாழை இலையில் விருந்து வைத்தார் பிரதமர் ரிஷிசுனாக். பிரிட்டன் பிரதமாக பதவியேற்ற ரிஷி சுனாக், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் லண்டனில் 10. டவுனிங் தெருவில் பிரதமர் அலுவலகம் உள்ளது. இங்கு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து பிரதமர் அலுவலக ஊழியர்கள், பாதுகாவலர்கள் ஆகியோருக்கு பிரதமர் சார்பில் விருந்து வைக்கப்பட்டது. இதில் தழைவாழை இலையில் … Read more

சீனாவில் குறைந்து வரும் மக்கள் தொகை எண்ணிக்கை – தேசிய புள்ளியல் துறை

சீனாவின் தேசிய புள்ளியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 1961ம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது, 2021ம் ஆண்டில் இருந்ததை விட 2022ம் ஆண்டில் 8 லட்சத்து 50 ஆயிரம் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், மக்களிடம் அதிகரித்துள்ள கல்வியறிவால் “ஒரு குழந்தை” என்ற திட்டத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது. தற்போது, சீனாவில் 141 கோடியே 17 லட்சம் மக்கள் உள்ள நிலையில், இந்தியா 2022ம் ஆண்டிலேயே 141 … Read more

ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஹிந்து கோயில் மீது தாக்குதல்| Attack on Hindu temple again in Australia

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் மற்றொரு ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் நடந்துள்ளது. ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரின் வடக்கு புறநகர் பகுதியில் உள்ள சுவாமி நாராயண் உள்ளது. . இதன் மீது கடந்தாண்டு அக்டோபர் மாதம் காலிஸ்தான் ஆதரவாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தி இந்தியாவிற்கு எதிரான வார்த்தைகளையும் எழுதினர். ஹிந்துக்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தும், கொடூர செயலுக்கு பல்வேறு தலைவர்கள் வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து … Read more

பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கி சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு!

பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கியை ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜமாத் உத் தாவா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவராக இருந்த அப்துல் ரஹ்மான் மக்கியை தேடப்படும் பயங்கரவாதியாக இந்தியாவும், அமெரிக்காவும் அறிவித்திருந்தது. அப்துல் ரஹ்மான் மக்கி பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பது, நிதி திரட்டுவது, இளைஞர்கள் மத்தியில் உரையாற்றி அவர்களை மூளைச்சலவை செய்து தாக்குதலுக்கு தயாராக்குவது, குறிப்பாக இந்தியா மற்றும் ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் … Read more

புலம்பெயர்ந்து வருபவர்களுக்கு இனி நியூயார்க்கில் இடமில்லை: நகர மேயர்

நியூயார்க்: புலம்பெயர்ந்து வருபவர்களுக்கு இனி நியூயார்க்கில் இடமில்லை என்று அந்நகர மேயர் தெரிவித்துள்ளார். நியூயார்க் நகரில் புலம்பெயர்பவர்களால் உண்டாகும் நெருக்கடிகளை ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரும், நியூயார்க் நகர மேயருமான எரிக் ஆடம்ஸ் விமர்சித்திருக்கிறார். இவ்விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் அவர் கடுமையாக விமர்சித்திருக்கிறார். நியூயார்க் மேயர் மட்டுமல்ல, அமெரிக்காவின் சிகாகோ, வாஷிங்டன் டிசி போன்ற நகர மேயர்களும் இந்தக் கருத்தை முன்வைத்த்துள்ளனர். முன்னதாக, குடியரசுக் கட்சி ஆளும் மாகாணங்களில் உள்ள மேயர்கள் தங்கள் மாகாணங்களுக்கு வரும் … Read more

சட்டப்பிரிவு 370 ரத்தை நீக்கினால் மட்டும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் விளக்கம்

இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்த நிலையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் அளித்தால் மட்டுமே இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. துபாயை மையமாகக் கொண்டு இயங்கும் அல் அரேபியா என்ற தொலைக்காட்சிக்கு ஷெபாஸ் ஷெரீப் சமீபத்தில் நேர்காணல் அளித்துள்ளார். அதில், ”இந்தியாவுடன் ஆழமான, நேர்மையான, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விரும்புகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதனை அனுமதிக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் … Read more

எண்ணெய் கப்பலில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு..!

தாய்லாந்து அருகே நிறுத்தப்பட்டிருந்த எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். ஸ்மூத் சீ-22 என்ற அந்த எண்ணெய் கப்பலில் பழுதுநீக்கும் பணிகள் நடைபெற்றுகொண்டிருந்தபோது திடீரென பலத்த சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டு கப்பலில் தீப்பற்றி எரிந்தது. இதனால் பல அடி உயரத்திற்கு கரும்புகை எழும்பியது. நெருப்பை கட்டுப்படுத்த கரையிலிருந்தும், சிறிய படகுகளிலிருந்தும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இந்த விபத்தில், மியான்மரை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர். மாயமான 7 பேரை … Read more

'இந்தியா மீது போர் தொடுத்து பாடத்தை கற்றுக் கொண்டோம்' – பாக். பிரதமர் பளீச்!

“இந்தியா மீது போர் தொடுத்து நாங்கள் சரியான பாடம் கற்றுக் கொண்டோம்,” என, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்து உள்ளார். கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் எரி பொருள் தட்டுப்பாடு காரணமாக ஆளும் ஆட்சிக்கு எதிரான பாகிஸ்தானில் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தடை செய்யப்பட்ட அமைப்பான தெஹ்ரீக் – இ – தலிபான் பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதல்களை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், “இந்தியாவுடன் நடந்த போரில், பல பாடங்களை கற்றுக் கொண்டோம்,” என … Read more

நிழல் உலக தாதா தாவூத்தின் 2வது திருமண விவகாரம்… உறவினர் அளித்த வாக்குமூலம்!

மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய நில் உலக தாதாவான தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் வாழ்ந்து வருகிறார். ஆனால், அவர் அங்கு இல்லை என பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானை சேர்ந்த பெண்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளதாக தாவூத்தின் சகோதரி மகன், தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். ஹசீனா பார்கரின் மகனும், தாவூத்தின் மருமகனுமான அலிஷா தேசிய புலனாய்வு … Read more

இத்தாலி | 30 ஆண்டுகளாக தேடப்பட்டுவந்த மாஃபியா தலைவர் மெஸ்ஸினா கைது

பலேர்மோ: இத்தாலியில் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த மாஃபியா தலைவர் மெஸ்ஸினா டேனாரோ கைது செய்யப்பட்டுள்ளார். இத்தாலியின் பிரபல நகரங்களில் ஒன்றான பலேர்மோவிலுள்ள தனியார் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை எடுத்துவந்த நிலையில் மெஸ்ஸினா கைது செய்யப்பட்டிருக்கிறார். மெஸ்ஸினாவின் கைது இத்தாலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில்,”மெஸ்ஸினா டேனாரோ தனியார் மருத்துவமனை ஒன்றில் புற்றுநோய்க்காக கிமோதெரபி சிகிச்சையை, போலி பெயரில் பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது கைதில் கிட்டதட்ட 100 பாதுகாப்புப் … Read more