ஆப்கானிஸ்தானில் 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் குளிர்.. 158 பேர் உயிரிழப்பு..!

ஆப்கானிஸ்தானில் கடும் குளிர் நிலவி வருவதால் கடந்த 2 வாரத்தில் 158 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குளிர் அதிகமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. குளிரை எதிர்கொள்ள போதிய அளவில் அடுப்பு, நிலக்கரி, ஆடை, போர்வைகள் இல்லை எனக் கூறப்படும் நிலையில், தன்னார்வ தொண்டு நிறுவன பெண் பணியாளர்களுக்கு தலிபான் அரசு தடை விதித்திருப்பதால், நாட்டில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் … Read more

லித்துவேனியாவிலிருந்து உக்ரைனுக்கு அனுப்பப்படும் டிரான்ஸ்பார்மர்

லித்துவேனியாவில், பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமலிருந்த ராட்சத டிரான்ஸ்பார்மர், கப்பல் மூலம் உக்ரைனுக்கு அனுப்பப்படுகிறது. உக்ரைனின் மின்சார கட்டமைப்பை குறிவைத்து ரஷ்ய படைகள் தாக்குவதால், லட்சக்கணக்கானோர் ஹீட்டர்களை பயன்படுத்த முடியாமல் மைனஸ் டிகிரி குளிரில் நடுங்கிவருகின்றனர். உக்ரைன் உள்ளிட்ட சோவியத் நாடுகளில் ஒரே மாதிரியான மின் கட்டமைப்பு உள்ளதால், லித்துவேனியாவில், 1980 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டிலில்லாமலிருந்த 200 டன் டிரான்ஸ்பார்மர், பார்ட் பார்டாக பிரிக்கப்பட்டு உக்ரைனுக்கு அனுப்பப்படுகிறது. 18 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த டிரான்ஸ்பார்மர் மூலம் … Read more

அமெரிக்க நிறுவனங்களில் ஆயிரக்கணக்கில் பணி நீக்கங்கள்! ஜோ பைடன் கவலை!

உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்க நிறுவனங்களில் பெருமளவிலான பணிநீக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், ஆயிரக்கணக்கான மக்கள் வேலையில்லாமல் உள்ளனர். கூகுள் நிறுவனம்  12,000 பேர்களை ஜனவரி 20 பணியில் இருந்து நீக்கியது. கடந்த வாரம், மைக்ரோசாப்ட் 10,000 பேர்களை வேலையை விட்டு நீக்குவதாக அறிவித்தது. அமேசான் நிறுவனம் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது. பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது.  இன்டெல் நிறுவனமும் பணிநீக்க செயல்பாட்டை … Read more

இஸ்ரேல் ராணுவத்தினரை கத்தியால் தாக்க முயன்ற பாலஸ்தீன இளைஞர் சுட்டுக்கொலை..!

இஸ்ரேல் ராணுவ வீரர்களை கத்தியால் குத்த முயன்ற பாலஸ்தீன இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார். காரிலிருந்து இறங்கிவந்த 20 வயது மதிக்கத்தக்க பாலஸ்தீன இளைஞர், பேருந்து நிறுத்தம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் ராணுவ வீரர்களை நோக்கி கத்தியுடன் பாய்ந்தார். ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். Source link

2019ல் இந்தியாவும், பாக்.,கும் அணு ஆயுத போருக்கு தயாரானதா? அமெரிக்க மாஜி அமைச்சர் அதிர்ச்சி தகவல்| India informed me Pak was preparing for nuclear attack post-Balakot strike, claims Pompeo

வாஷிங்டன்: கடந்த 2019 ல் இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத போரை நடத்த இருந்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் மைக் பாம்பியோ, எழுதிய புத்தகத்தில் கூறியுள்ளார். கடந்த 2019 ம் ஆண்டு பிப்., மாதம் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு காஷ்மீரின் புல்வாமாவில், துணை ராணுவ வீரர்கள் சென்ற பஸ்சை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக, பாகிஸ்தானின் பாபாகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ் … Read more

அமெரிக்காவில் இந்தியர்கள் மீது துப்பாக்கிச்சூடு.!

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை என்பது ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. துப்பாக்கி வன்முறை காப்பக இணையதளத்தின்படி, கடந்த ஆண்டில் மட்டும் பொதுவெளியில் 647 துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளது. அந்தவகையில் அமெரிக்காவில் கடந்த ஆண்டு மட்டும் 44 ஆயிரம் பேர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் பள்ளிக்கூட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பெருகி வருகின்றன. கடந்த மே மாதம் டெக்சாஸில் 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேபோல் … Read more

நியூசிலாந்து புதிய பிரதமராக 44 வயது கிறிஸ் ஹிப்கின்ஸ் தேர்வு| 44-year-old Chris Hipkins has been chosen as the new Prime Minister of New Zealand

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வெலிங்டன்: நியூசிலாந்து புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் தேர்வு பெற்றார். தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான நியூசிலாந்தின் பிரதமராக, தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஜெசிந்தா ஆர்டன். 42, கடந்த 2017 முதல் பிரதமராக இருந்தார். கடந்த வாரம் தன் பதவியை ராஜினாமா செய்வதாக அதிரடியாக அறிவித்தார். வரும், பிப்., 7ம் தேதி பதவியில் இருந்து விலகுவதாகவும், வரும் அக். பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார். … Read more

பயிற்சி விமானம் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக கீழே விழுந்ததால் 2 விமானிகள் பலி..!

பிலிப்பைன்ஸின் படான் மாகாணத்தில், பயிற்சி விமானம் வயல்வெளியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் விமானப்படை விமானிகள் 2 பேர் உயிரிழந்தனர். SF-260 TP Marchetti ரக விமானம், சாங்க்லே விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 40 நிமிடங்களில் விபத்து நேர்ந்துள்ளது.  அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக கீழே விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.  Source link

முன்னாள் அமெரிக்க தூதரின் இழிவான கருத்து; அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம்.!

முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ, சுஷ்மா ஸ்வராஜை ஒரு முக்கியமான அரசியல் தலைவராக பார்க்கவில்லை என்று கூறியுள்ளதற்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். மைக் பாம்பியோ எழுதி நேற்று வெளியான ‘நெவர் கிவ் அன் இன்ச்: ஃபைட்டிங் ஃபார் தி அமெரிக்கா ஐ லவ்’ என்ற அவரது சமீபத்திய புத்தகத்தில், பாம்பியோ சுஷ்மா ஸ்வராஜை “கூஃப்பால்” மற்றும் “ஹார்ட்லேண்ட் அரசியல் ஹேக்” என்ற அமெரிக்க ஸ்லாங் வார்த்தைகளைப் பயன்படுத்தி சற்றே இழிவாக … Read more

உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் போர் டாங்கிகள் எரிக்கப்படும் – ரஷ்யா எச்சரிக்கை

உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் போர் டாங்கிகள் எரிக்கப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. M1 ஆப்ராம்ஸ் போர் டாங்கிகளை உக்ரைனுக்கு வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் நேற்று தெரிவித்திருந்தனர். இதற்கு பதிலளித்துள்ள ரஷ்ய அதிபர் அலுவலக செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், அமெரிக்கா உக்ரைனுக்கு ஆப்ராம்ஸ் போர் டாங்கிகள் வழங்குவது உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், அவை பணத்தை வீணடிக்கும் செயல் என்றும், மற்ற ஆயுதங்களை போலவே இந்த டாங்கிகளும் எரியும் என்றும் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார். Source link