உக்ரைன் ஹெலிகாப்டர் விபத்து – பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு

கீவ்: உக்ரைன் மீது சிறப்பு ராணுவ செயல்பாடு என்ற பெயரில் ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல் போர்த் தாக்குதலை நடத்தி வருகிறது. பதிலுக்கு உக்ரைன் ராணுவமும் ரஷ்யா மீது தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று உக்ரைன் தலைநகர் கீவ் புறநகர் பகுதியிலிருந்து ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது. இதில் உக்ரைன் அமைச்சர் டெனிஸ் மோனஸ்டயர்ஸ்கி உள்ளிட்ட 20 பேர் இருந்தனர். இந்நிலையில் ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களில் புறநகர்பகுதியில் விழுந்து விபத்துக்குஉள்ளானது. … Read more

விளையும் பயிர் நடுவே ”லியோனல் மெஸ்ஸி”-யின் பிரம்மாண்ட ஓவியம்.. இணையதளத்தில் வைரல்!

தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில், சோள வயலில் விளையும் பயிர் நடுவே பிரத்யேகமாக வரையப்பட்டுள்ள ”லியோனல் மெஸ்ஸி”-யின் பிரம்மாண்ட ஓவியம் இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. உலகக் கோப்பை கால்பந்தில் வெற்றிவாகை சூடிய மெஸ்ஸியின் தீவிர ரசிகரும், பொறியாளருமான கார்லோஸ் ஃபரிசெல்லி என்ற விவசாயி கோர்டோபா மாகாணத்தில் உள்ள தனது பச்சை வயலின் நடுவே புவி-குறியீட்டு கருவிகளை பயன்படுத்தி, சோள விதைகளை நடவு செய்து ஓவியத்தை உருவாக்கி உள்ளார். சோள வயலில் மெஸ்ஸி-யின் ஓவியம் தீட்டப்பட்டிருப்பது போல … Read more

ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைக்கு மத்தியில் வியட்நாம் அதிபர் நுயென் சுவான் பூக் திடீர் ராஜினாமா

ஹனோய், கம்யூனிச நாடான வியட்நாமில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் அதிபராக இருந்து வந்தவர் நுயென் சுவான் பூக். அதற்கு முன் 2016 முதல் 2021 வரை அந்த நாட்டின் பிரதமராக அவர் இருந்தார். அப்படி அவர் பிரதமராக இருந்தபோது, அவருக்கு கீழ் இருந்த மூத்த மந்திரிகள் பலரும் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக குற்ச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பல ஒப்பந்தங்களில் ஊழல் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதைதொடர்ந்து அந்த நாட்டின் … Read more

நியூசிலாந்து விமானம் ஆஸ்திரேலியாவில் அவசரமாக தரையிறக்கம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 145 பயணிகள்..!!

சிட்னி, நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவில் அமைந்துள்ள ஆக்லாந்து நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு நேற்று மதியம் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் 145 பயணிகள் பயணம் செய்தனர். இந்த விமானம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குள் நுழைந்து நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் 2 என்ஜின்களில் ஒன்று திடீரென செயலிழந்தது. இதனால் விமானத்தின் வேகம் குறைந்து, குறைவான உயரத்தில் பறந்தது. இதனையடுத்து விமானிகள் விமானம் ஆபத்தில் இருப்பதாக … Read more

வரி ஏய்ப்பு வழக்கில் இருந்து நோபல் பரிசு பெற்ற பத்திரிகையாளர் மரியா ரெஸ்ஸா விடுவிப்பு

மனிலா, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளரும், ‘ராப்லர்’ என்ற செய்தி நிறுவனத்தின் நிறுவனருமான மரியா ரெஸ்ஸா, கடந்த 2021-ம் ஆண்டு கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்காக நோபல் பரிசை பெற்றார். பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே, அந்நாட்டில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டார். அப்போது காவல்துறையின் அத்துமீறல்கள் காரணமாக 6.200 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்களை மரியா ரெஸ்ஸாவின் ‘ராப்லர்’ பத்திரிக்கை ஆதாரப்பூர்வமாக வெளியிட்டு வந்தது. இந்த சூழலில் மரியா … Read more

ரஷிய படைகள் போரில் வெல்வதில் எந்த சந்தேகமும் இல்லை – புதின்

மாஸ்கோ. உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நடத்தி வரும் போர் இன்னும் சில வாரங்களில் ஓர் ஆண்டை நெருங்கவுள்ளது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் உருக்குலைந்து போயின. அதேவேளையில் இந்த போரில் ரஷியாவும் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. போரில் ஆயிரக்கணக்கான ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் போரில் இருந்து பின்வாங்காத ரஷியா தொடர்ந்து வீரர்களை அணிதிரட்டி போர் முனைக்கு அனுப்பிவருகிறது. இந்தநிலையில், . உக்ரைன் பகுதிகளைக் கைப்பற்ற ரஷியா தீவிரமாக போரிட்டு வரும் நிலையில் … Read more

இந்தியர்களுக்கு விசா வழங்க அமெரிக்கா தீவிர முயற்சி| America is actively trying to provide Visa to Indians

வாஷிங்டன், அமெரிக்காவுக்கு வரும் இந்தியர்களுக்கு உரிய ‘விசா’க்கள் விரைவாக வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக, அமெரிக்க விசா துறை உயரதிகாரி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் படிக்க, வேலை பார்க்க, சுற்றுலா செல்வதற்காக விசா கோரி காத்திருக்கும் காலம் கிட்டதட்ட மூன்றாண்டுகளாக உயர்ந்துள்ளது. இது, பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத் துறையின் விசா சேவை பிரிவு துணை உதவி செயலர் ஜூலி ஸ்டப்ட் கூறியுள்ளதாவது: இந்தியாவில் இருந்து தொழில் மற்றும் சுற்றுலா விசா … Read more

உக்ரைனில் ஹெலிகாப்டர் விபத்து அமைச்சர் உட்பட 18 பேர் பலி | 18 killed in helicopter crash in Ukraine, including minister

கீவ், உக்ரைனில் நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், அந்நாட்டு உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி உட்பட 18 பேர் பலியாகினர். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா நடத்தி வரும் தாக்கு தல், ஓராண்டை எட்டி வரும் சூழலில், இரு தரப்பினருக்குமான போர் நாளுக்கு நாள் தீவிரம்அடைந்து வருகிறது. ரஷ்யாவின் தொடர் தாக்குதலில் ஏராளமான உயிர் சேதங்களும், பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், போர் தொடர்பான அவசர பணிக்காக, உக்ரைனின் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, இணை … Read more

உலக பொருளாதார மன்றம் எலானுக்கு அழைப்பு இல்லை| The World Economic Forum is not invited to Elan

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் தாவோஸ் : உலக பொருளாதார மன்றக் கூட்டத்திற்கான அழைப்பை நிராகரித்துவிட்டதாக, ‘டுவிட்டர்’ நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு அழைப்பே அனுப்பப்படவில்லை என, மன்றத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள தாவோஸ் நகரில், உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், உலகளவில் பல்வேறு பொருளாதார நிபுணர்கள், நிறுவன தலைவர்கள், அரசு பிரதிநிதிகள் என பலர் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில், எலான் மஸ்க் கூட்டத்தில் … Read more

ரொனால்டோ குடும்பத்தினருக்காக 2 மணி நேரம் மூடப்பட்ட ‘தீம் பார்க்’..!

கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, குடும்பத்தினருடன் பொழுதுபோக்குவதற்காக சவுதி அரேபியாவிலுள்ள தீம் பார்க்கிற்குள் 2 மணி நேரம் வெளிநபர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அல் நஸ்ர் கிளப்பிற்கு இரண்டரை ஆண்டுகள் விளையாட 4 ஆயிரத்து 400 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமான ரொனால்டோ, தனது பெண் தோழி ஜார்ஜினா, அவர்களது 4 குழந்தைகளுடன் சவுதிக்கு இடம்பெயர்ந்தார். அவர்கள் எவ்வித இடையூறுமின்றி பொழுதுபோக்குவதற்காக ரியாத்திலுள்ள போலுவா வோர்ல்டு கேளிக்கை பூங்கா 2 மணி நேரம் மூடப்பட்டது. சவுதி அரேபியாவில் திருமணமாகாத … Read more