அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை: கொள்ளையர்கள் வெறிச்செயல்

வாஷிங்டன், அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணம் டேகோனி நகரில் வாகனங்களுக்கு கியாஸ் நிரப்பும் நிலையம் ஒன்று உள்ளது. இங்கு 66 வயதான இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் ஒருவர் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று, இந்த கியாஸ் நிலையத்துக்கு முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 3 பேர் வந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தார். … Read more

சீன மருத்துவமனைகளில் கரோனாவுக்கு ஒரே வாரத்தில் சுமார் 13,000 பேர் உயிரிழப்பு

பெய்ஜிங்: சீன மருத்துவமனைகளில் கடந்த ஒரு வாரத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 13,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க அறிவிக்கப்பட்டிருந்த கடும் கட்டுப்பாடுகள் கடந்த மாதம் தளர்த்தப்பட்டது. அப்போது முதல் கடந்த ஜனவரி 12-ம் தேதி வரை கரோனா பாதிப்பு காரணமாக சுமார் 60,000 பேர் மருத்துவமனைகளில் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு கூறியிருந்தது. ஆனால் இது சந்தேகிக்கும் வகையில் உள்ளதாக பல தரப்பினர் கூறுகின்றனர். சீனாவில் உள்ள மத்திய … Read more

'ஹிஜாப் அணிந்திருக்கும்போது நான் நானாக இல்லை' – ஈரான் செஸ் வீராங்கனை

மாட்ரிட், ஈரான் நாட்டின் தெஹ்ரான் நகரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ம் தேதி ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கூறி குர்திஸ்தான் மாகாணத்தை சேர்ந்த மாஷா அமினி (வயது 22) என்ற இளம்பெண்ணை ஈரான் அறநெறி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாஷா அமினியை போலீசார் தாக்கியதில் அவர் கோமா நிலைக்கு சென்றார். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாஷா செப்டம்பர் 16-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் … Read more

பதற வைக்கும் பாகிஸ்தான் பொருளாதாரம்: மீள்வதற்கு என்ன வழி?

இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் இப்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அண்டை நாடுகள் வலுவிழந்து போவது நமக்கு நல்லதல்ல. அந்த நாட்டுடன் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தில் ஏற்படும் சரிவு தொடங்கி, அகதிகள் ஊடுருவல், அதனால் நிகழக்கூடிய சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரை பல சவால்களை நாம் சந்திக்க வேண்டி வரும். இதன் தொடர் விளைவாக எழும் அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தம் தவிர்க்க இயலாதது. இது நமது வளர்ச்சிக்குக் குந்தகம் ஏற்படுத்தவே செய்யும். எனவே, … Read more

அமெரிக்க அதிபர் வீட்டில் சோதனை; முக்கியமான ரகசிய ஆவணங்கள் மீட்பு| US Presidents house raided; Recovery of important confidential documents

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வீட்டில், எப்.பி.ஐ., அதிகாரிகள், ௧௩ மணி நேரம் அதிரடிச் சோதனை நடத்தினர். இதில் பல முக்கியமான ரகசிய ஆவணங்கள் மீட்கப்பட்டன. அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் தங்களுடைய பதவிக்காலத்தில் கையாளும் முக்கியஆவணங்களை, அரசு ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்க வேண்டும். குற்றச்சாட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கடந்த, ௨௦௦௯ – ௨௦௧௭ வரை துணை அதிபராக இருந்தார். அப்போது அமெரிக்க அதிபராக இருந்தவர் பராக் ஒபாமா. மேலும், … Read more

நிலவில் கால் வைத்த 2ம் நபருக்கு 4வது திருமணம்…93 வயதில் 63 வயது பெண்னை மணந்தார்…!

லாஸ் ஏஞ்சல்ஸ், 1969ம் ஆண்டு அப்பல்லோ 11 மிஷனில் சந்திரனில் மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்கள் இறங்கினர். அப்பல்லோ 11 மிஷனில் சந்திரனில் நுழைந்த மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்களில் பஸ் ஆல்ட்ரின் ஒருவர். அந்த மிஷனில் இருந்த மூன்று அமெரிக்க வீரர்களில் தற்போது உயிருடன் இருப்பவர் இவர் மட்டுமே. அப்போலோ-11 பயணத்தின் போது சந்திரனில் நிலாவில் முதலாவதாக கால் வைத்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங். இரண்டாவது கால் பதித்தவர் பஸ் ஆல்ட்ரின். ஆல்ட்ரின் திருமணமாகி மூன்று முறை … Read more

சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே மாண்ட்ரே பார்க் நகரம் அமைந்துள்ளது. அங்கு கார்வே அவென்யூ பகுதியில் செங் வான் சோய் என்ற சீன வம்சாவளி தொழிலதிபருக்கு சொந்தமான ஓட்டல் செயல்படுகிறது. அந்த ஓட்டலில் நேற்று இரவு சீன புத்தாண்டு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில் 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது மர்ம நபர் ஒருவர், அதிநவீன துப்பாக்கியுடன் ஓட்டலில் நுழைந்து கண் மூடித்தனமாக சுட்டார். இதில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் … Read more

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சீன புத்தாண்டு கொண்டாடிய 10 பேர் பலி| 10 killed in shooting in US celebrating Chinese New Year

லாஸ் ஏஞ்சலஸ் : அமெரிக்காவில், சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, மர்ம நபர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில், ௧௦ பேர் பரிதாபமாக பலியாகினர்; மேலும், 10 பேர் காயம் அடைந்தனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இருந்து ௧௬ கி.மீ., தொலைவில் அமைந்துள்ள மான்டெரே பார்க் என்ற பகுதியில், ௬௦ ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்தோர் அதிகளவில் வசிக்கின்றனர். இப்பகுதியில், நேற்று முன்தினம் இரவு சீன புத்தாண்டு கொண்டாட்டம் துவங்கியது. … Read more

கலிபோர்னியாவில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு – 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு நிகழ்ச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10-ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மான்டேரி பூங்காவில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்த நிலையில், இரவு 10 மணியவில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். Source link

விவசாய நிலங்களை, உயர்தர விவசாய நிலங்களாக மேம்படுத்தும் சீனா..!

உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், சீனாவிலுள்ள விவசாய நிலங்கள் உயர்தர விவசாய நிலங்களாக மேம்படுத்தப்பட்டுவருகின்றன. உயர்தர பாசன வசதிகள், விவசாயத் தேவைகளுக்கு மின் பகிர்மானம் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த உயர்தர விவசாய நிலங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன. கடந்த ஒரு ஆண்டில், 74 லட்சம் ஏக்கர் உயர்தர விவசாய நிலங்களை அமைக்க திட்டமிட்ட சீனா, நிர்ணயித்த இலக்கை விட அதிகமாக, ஒரு கோடியே 73 லட்சம் ஏக்கர் உயர்தர விவசாய நிலங்களை அமைத்துள்ளது. Source link