ஈஸ்டர் குண்டுவெடிப்பு..முன்னாள் ஜனாதிபதி 100 மில்லியன் இழப்பீடு வழங்க உத்தரவு.!

கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் உள்ள தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடந்தப்பட்டது. இலங்கையில் மொத்தம் 9 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 290க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றது. இலங்கையில் இதுபோன்ற தாக்குதல் நடக்கவுள்ளதாக ஏப்ரல் 4ஆம் தேதி இந்திய உளவுத்துறை இலங்கையை எச்சரித்திருந்தது. அப்படி இருந்தும் … Read more

உக்ரைனில் போரிட மறுத்த வீரருக்கு சிறை; ரஷ்ய ராணுவ நீதிமன்றம் உத்தரவு.!

வரலாற்று ரீதியாக ரஷ்யாவின் ஒரு பகுதி உக்ரைன் என ரஷ்யா கூறிவருகிறது. ஆனால் தாங்கள் தனித்துவமானவர்கள் என உக்ரேனியர்கள் கூறிவருகின்றனர். இந்தநிலையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், உக்ரைன் நாட்டு அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தனது நாட்டுப் படைகளுக்கு உத்தரவிட்டார். இதை அடுத்து கடந்த … Read more

பிலிப்பைன்ஸ்: இறைச்சியை விட வெங்காயம் விலை மூன்று மடங்கு அதிகம்

மணிலா: பிலிப்பைன்ஸில் இறைச்சியை விட வெங்காயம் மூன்று மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவது அந்நாட்டு மக்களை கவலையடையச் செய்துள்ளது. பிலிப்பைன்ஸில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து உள்நாட்டு உற்பத்தி, விநியோகம் குறைந்து வருவதாலும், அதிகரித்து வரும் செலவுகளைக் கட்டுப்படுத்தவும் மார்ச் மாதத்திலிருந்து சுமார் 22,000 டன் காய்கறிகளை பிலிப்பைன்ஸில் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என்று விவசாய நல அமைப்புகள் கூட்டாக தெரிவித்துள்ளன. தென்கிழக்கு ஆசிய நாட்டின் உள்ளூர் உணவுகளில் வெங்காயம் பிரதானமாக உள்ளது. … Read more

கொரோனா பலி எண்ணிக்கையை சொல்லாத சீனாவின் திட்டம் என்ன? WHO கவலை

நியூடெல்லி: சீனாவில் உற்பத்தியான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் களியாட்டம் போட்டு, இன்னும் அடங்காமல் வெவ்வேறு அவதாரங்களை எடுத்து உலகையே அச்சத்தில் ஆழ்த்தி வரும் நிலையில், சீனாவில் மட்டும் இன்னும் வைரஸின் தாக்குதல் கட்டுக்குள் அடங்காமல் தலைவிரித்தாடுகிறது. ஆனால், கோவிட் மூலம் நாட்டில் ஏற்படும் மரணத்தை வரையறுக்க சீனா பயன்படுத்தும் அளவுரு தொடர்பாக உலக சுகாதார அமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.   புதன்கிழமையன்று சீனாவின் கொரோனா பாதிப்பு மற்றும் கோவிட் இறப்புகள் பற்றி கவலை உலக சுகாதார அமைப்பு … Read more

ஆண் மருத்துவர்களை அணுகக் கூடாது – பெண்களுக்கு தாலிபான் உத்தரவு!

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆண் மருத்துவர்கள் பெண்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடாது என்று தாலிபான்கள் அரசு உத்தரவிட்டு உள்ளது. தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி, ஆட்சி மற்றும் அதிகாரத்தை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றினர். சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து தாலிபான்கள் மீண்டும் கால் பதித்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் ஓராண்டுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் தாலிபான்கள் அந்நாட்டு மக்களுக்கு … Read more

“சல்மான் ருஷ்டியின் விதியைப் பாருங்கள்…” – சார்லி ஹெப்டோவுக்கு ஈரான் மிரட்டல்

தெஹ்ரான்: ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் கார்ட்டூன் வெளியிட்ட சார்லி ஹெப்டோவிற்கு ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பாரிஸில் செயல்படும் சார்லி ஹெப்டோ வார இதழ் சில நாட்களுக்கு முன்னர் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியை சித்தரித்து கார்ட்டூன் வெளியிட்டிருந்தது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் கார்ட்டூன் வெளியிட்டிருக்கிறது சார்லி … Read more

இந்தியாவின் AMBRONOL,  DOK-1 Max இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்: உலக சுகாதார நிறுவனம் 

ஜெனீவா: இந்தியாவின் நொய்டா நகரைச் சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனத்தின் இருமல் மருந்துகளான AMBRONOL, DOK-1 Max ஆகியனவற்றை பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிறுவனத் தயாரிப்புகள் தர நிர்ணயக் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவில்லை என்று கூறியுள்ளது. இன்றைய தேதிவரை சம்பந்தப்பட்ட மரியான் பயோடெக் நிறுவனம் தங்கள் இருமல் மருந்துகளின் பாதுகாப்பு, தரம் குறித்து எவ்வித உத்தரவாதமும் உலக சுகாதார அமைப்புக்கு தரவில்லை என்பதால் இந்த எச்சரிக்கையை விடுப்பதாக உலக சுகாதார நிறுவனம் … Read more

எரிவாயு மீதான ஜி-7 நாடுகளின் விலை வரம்பு நிர்ணயத்தால் ரஷ்யாவுக்கு நாள் ஒன்றுக்கு 280 மில்லியன் டாலர்கள் இழப்பு

எரிவாயு மீதான ஜி -7 நாடுகளின் விலை வரம்பு நிர்ணயத்தால் அடுத்த மாதம் முதல் ரஷ்யாவுக்கு நாள் ஒன்றுக்கு 280 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றின்மீது ஜி7 நாடுகள் விலை வரம்புகளை விதித்துள்ளது. இந்த நடவடிக்கை உக்ரைனில் அதன்  சிறப்பு ராணுவ நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கும் ரஷ்ய அரசின் திறனைக் குறைக்கும் என்று ஜி-7 நாடுகள் குழு நம்புவதாகவும், நாட்டிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கச்சா … Read more

அமெரிக்காவில் 5400 விமானங்கள் பலமணி நேரம் தாமதம்.. 900 விமானங்கள் ரத்து.. காரணம் என்ன.?

அமெரிக்காவின்  கணினி பழுது காரணமாக விமானிகள் மற்றும் விமானங்கள் இயக்கம் தொடர்பான பணிகளில் உள்ளவர்களுக்கு தகவல் அளிக்கும் நோடம் (NOTAM) முறை செயலிழந்தது.  இதன் காரணமாக 5400 விமானங்களைத் தாமதப்படுத்தவும் தரையிறக்கவும் உத்தரவிடப்பட்டது. சுமார் 900 விமானங்களை ரத்து செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் வழக்கமான விமானப் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் விமான சேவைகள் மீண்டும் படிப்படியாகத் தொடங்கியுள்ளன. வானத்தில் உள்ள அனைத்து விமானங்களையும் … Read more