சிரியாவில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.. 16 பேர் பலி!

சிரியாவில் போரில் சேதமடைந்த அலெப்போ பகுதியில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில், இடிபாடிகளில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். ஷேக் மக்சூத் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடம் திடீரென நேற்று இடிந்து விழுந்தது. தகவலறிந்து வந்த மீட்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கட்டடத்திற்கு அடியில் ஏற்பட்ட நீர்க்கசிவு காரணமாக பலவீனமாகி கட்டிடம் இடிந்து விழுந்திருக்கலாம் என்று தகவல்கள் … Read more

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் குண்டுவீச்சில் வாலிபர் காயம்

ஸ்ரீநகர், காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் இட்கா பகுதியில் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர், வீரர்கள் மீது கையெறி குண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பி ஓடினர். இந்த குண்டு குறி தவறி வேறொரு இடத்தில் விழுந்து வெடித்தது. இதில் அஜாஸ் அகமது தேவா (வயது 32) என்ற வாலிபர் காயமடைந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதைத்தொடர்ந்து தப்பி ஓடிய … Read more

நேட்டோ அமைப்பு போல அமெரிக்காவுக்கு எதிரான நாடுகள் இணைந்து புதிய ராணுவ கூட்டமைப்பை உருவாக்ககூடும் – ரஷ்ய அமைச்சர்!

நேட்டோ அமைப்பு போல அமெரிக்காவுக்கு எதிரான நாடுகள் இணைந்து புதிய ராணுவ கூட்டமைப்பை உருவாக்க கூடும் என்று ரஷ்ய அமைச்சர் மெட்வடேவ் எச்சரித்துள்ளார். உக்ரைன், ரஸ்யா இடையேயான போரில் உக்ரைனுக்கு நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகள் உதவி வருகின்றன. இதற்கு அமெரிக்காவும் ஆதரவளித்து வருகிறது. இதை சுட்டிக்காட்டிய  முன்னாள் அதிபரும், தற்போது அமைச்சராக இருப்பவருமான டிமிட்ரி மெட்வடேவ். அமெரிக்காவால் துன்புறுத்தப்பட்ட நாடுகள் நேட்டோ போல ராணுவ கூட்டமைப்பை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக கூறினார். உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு பின்னடைவு … Read more

உடல்நலம் குன்றிய வயதான கணவனை சுட்டுக் கொன்ற மூதாட்டி – கணவனும்-மனைவியும் திட்டமிட்டு நடத்திய துப்பாக்கிச் சூடு

புளோரிடா, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் தீரா நோயால் சிகிச்சை பெற்று வந்த கணவனை மனைவி துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டய்டொனா பீச்சில் உள்ள மருத்துவமனையில் 77 வயதான கணவனை 76 வயதான மனைவி திடீரென துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மருத்துவமனையில் இருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். போலீசார் நடத்திய விசாரணையில், உடல்நலம் குன்றிய முதியவரும், அவரது மனைவியும் 3 வாரங்களுக்கு முன்பே இது குறித்து … Read more

ஜெர்மனி உதவவில்லையென்றாலும் போரில் உக்ரைன் வெல்லும் – போலந்து பிரதமர்!

உக்ரைனுக்கு ஜெர்மனி ஆயுதங்கள் வழங்கினாலும் வழங்கா விட்டாலும், ரஸ்யாவுக்கு எதிரான போரில் அந்நாடு வெல்லும் என்று போலந்து பிரதமர் மாடேயஸ் மோராவெய்க்கி கூறியுள்ளார். ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களை முறியடிக்க பீரங்கிகளைத் தருமாறு ஜெர்மனியிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்க்கி கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு இன்னும் ஜெர்மனி தரப்பில் பதில்தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், உக்ரைனுக்கு ஜெர்மனி உதவினாலும் உதவாவிட்டாலும் ஐரோப்பா நாடுகளின் துணையோடு போரை உக்ரைன் வெல்வது உறுதி என்று போலந்து பிரதமர் கூறியுள்ளார். Source link

அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை: கொள்ளையர்கள் வெறிச்செயல்

வாஷிங்டன், அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணம் டேகோனி நகரில் வாகனங்களுக்கு கியாஸ் நிரப்பும் நிலையம் ஒன்று உள்ளது. இங்கு 66 வயதான இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் ஒருவர் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று, இந்த கியாஸ் நிலையத்துக்கு முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 3 பேர் வந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தார். … Read more

சீன மருத்துவமனைகளில் கரோனாவுக்கு ஒரே வாரத்தில் சுமார் 13,000 பேர் உயிரிழப்பு

பெய்ஜிங்: சீன மருத்துவமனைகளில் கடந்த ஒரு வாரத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 13,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க அறிவிக்கப்பட்டிருந்த கடும் கட்டுப்பாடுகள் கடந்த மாதம் தளர்த்தப்பட்டது. அப்போது முதல் கடந்த ஜனவரி 12-ம் தேதி வரை கரோனா பாதிப்பு காரணமாக சுமார் 60,000 பேர் மருத்துவமனைகளில் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு கூறியிருந்தது. ஆனால் இது சந்தேகிக்கும் வகையில் உள்ளதாக பல தரப்பினர் கூறுகின்றனர். சீனாவில் உள்ள மத்திய … Read more

'ஹிஜாப் அணிந்திருக்கும்போது நான் நானாக இல்லை' – ஈரான் செஸ் வீராங்கனை

மாட்ரிட், ஈரான் நாட்டின் தெஹ்ரான் நகரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ம் தேதி ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கூறி குர்திஸ்தான் மாகாணத்தை சேர்ந்த மாஷா அமினி (வயது 22) என்ற இளம்பெண்ணை ஈரான் அறநெறி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாஷா அமினியை போலீசார் தாக்கியதில் அவர் கோமா நிலைக்கு சென்றார். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாஷா செப்டம்பர் 16-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் … Read more

பதற வைக்கும் பாகிஸ்தான் பொருளாதாரம்: மீள்வதற்கு என்ன வழி?

இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் இப்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அண்டை நாடுகள் வலுவிழந்து போவது நமக்கு நல்லதல்ல. அந்த நாட்டுடன் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தில் ஏற்படும் சரிவு தொடங்கி, அகதிகள் ஊடுருவல், அதனால் நிகழக்கூடிய சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரை பல சவால்களை நாம் சந்திக்க வேண்டி வரும். இதன் தொடர் விளைவாக எழும் அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தம் தவிர்க்க இயலாதது. இது நமது வளர்ச்சிக்குக் குந்தகம் ஏற்படுத்தவே செய்யும். எனவே, … Read more

அமெரிக்க அதிபர் வீட்டில் சோதனை; முக்கியமான ரகசிய ஆவணங்கள் மீட்பு| US Presidents house raided; Recovery of important confidential documents

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வீட்டில், எப்.பி.ஐ., அதிகாரிகள், ௧௩ மணி நேரம் அதிரடிச் சோதனை நடத்தினர். இதில் பல முக்கியமான ரகசிய ஆவணங்கள் மீட்கப்பட்டன. அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் தங்களுடைய பதவிக்காலத்தில் கையாளும் முக்கியஆவணங்களை, அரசு ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்க வேண்டும். குற்றச்சாட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கடந்த, ௨௦௦௯ – ௨௦௧௭ வரை துணை அதிபராக இருந்தார். அப்போது அமெரிக்க அதிபராக இருந்தவர் பராக் ஒபாமா. மேலும், … Read more