உலக செய்திகள்
பாகிஸ்தானில் மகளை சுட்ட தந்தை கைது| Father arrested for shooting daughter in Pakistan
கராச்சி, பாகிஸ்தானில், நீதிமன்றத்திலேயே புது மணப்பெண்ணான மகளை சுட்டுக் கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள மலைவாழ் பகுதியான வஜிரிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண், சமீபத்தில் டாக்டர் ஒருவரை காதல் திருமணம் செய்தார். இதை பெற்றோர் ஏற்காத நிலையில், வீட்டில் இருந்து வெளியேறிய இவர், கராச்சியில் கணவருடன் வசித்து வந்தார். இந்நிலையில், தான் விருப்பப்பட்டு திருமணம் செய்தது குறித்து கூறுவதற்காக, இவர் நேற்று கராச்சியில் உள்ள நீதிமன்றத்துக்குச் சென்றார். அப்போது, அங்கிருந்த … Read more
மே-14 ஆம் தேதி துருக்கியில் அதிபர் தேர்தல்.. எர்டோகன் மீண்டும் போட்டி..!
துருக்கியில், மே 14 ஆம் தேதி, நாடாளுமன்றத் தேர்தலும், அதிபர் தேர்தலும் நடைபெற உள்ளது. பள்ளி தேர்வுகளை முன்னிட்டு, ஒரு மாதம் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட உள்ளதாக அதிபர் தையீப் எர்டோகன் தெரிவித்துள்ளார். 2003 ஆம் ஆண்டு முதல் பிரதமராகவும், 2014 ஆம் ஆண்டு முதல் அதிபராகவும் பதவி வகித்துவரும் எர்டோகன் மீண்டும் அதிபர் தேர்தலில் களம்காண்கிறார். விலைவாசி உயர்வை முன்னிட்டு மக்கள் மத்தியில் நிலவிவரும் அதிருப்தியால் இந்த தேர்தல் அவருக்கு பெரும் சவாலாக இருக்கும் என … Read more
கனடா: விஜய் மக்கள் இயக்கத்திற்கு பர்லிங்டன் நகர மேயர் பாராட்டு
கனடாவில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் செய்துவரும் இரத்ததான முகாம், உணவு வழங்குதல் உள்ள சமூகல நலப்பணிகளை ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள பர்லிங்டன் நகர மேயர் மரியன்னே மீட் வார்டு பாராட்டியுள்ளார். மிகச் சிறப்பான முறையில் சமூகப் பணிகளை மேற்கொண்டு வருவதற்கு நன்றி தெரிவித்த அவர், இந்த சமூக நலப்பணிகளை அவர்கள் தொடர வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார். Source link
ஜப்பானில் குறைந்த பிறப்பு விகிதம்; பிரதமர் கவலை.!
ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய கணிப்புகளின்படி, உலக மக்கள் தொகை 2030 ஆம் ஆண்டில் சுமார் 8.5 பில்லியனாகவும், 2050 ஆம் ஆண்டில் 9.7 பில்லியனாகவும் வளரக்கூடும் என்று கணக்கிட்டுள்ளது. மேலும், இது 2080களில் சுமார் 10.4 பில்லியன் மக்கள் தொகையை கொண்டிருக்கும் என்றும் 2100 வரை அந்த நிலையில் இருக்கும் என்றும் அறிக்கையின் மூலம் தெரிவித்து உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையின் படி, 2023 ஆம் ஆண்டில் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான … Read more
பாகிஸ்தானில் முக்கிய நகரங்களில் நாள் முழுக்க மின்சாரம் துண்டிப்பு
பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் நாள் முழுக்க மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மின் பகிர்மான நிலையத்திலுள்ள ஜெனரேட்டர்களை முறையாக பராமரிக்காததால், தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டு, காலை முதலே கராச்சி, இஸ்லாமாபாத், லாகூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மெட்ரோ ரயில்கள் இயக்கப்படாததால் அலுவலம் செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகினர். மருத்துவமனைகளில், எக்ஸ்ரே உள்ளிட்ட மருத்துவ கருவிகளை இயக்கமுடியாததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இரவு 10 மணிக்குள் மின் விநியோகம் சீரடைந்துவிடும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. Source … Read more
நெட்ஃபிளிக்ஸ் பாஸ்வேர்ட் பகிர்வுக்கு கட்டணம்; ஏப்ரல் முதல் அமல்.!
உலகெங்கிலும் உள்ள பல நெட்ஃபிளிக்ஸ் பயனர்கள் தங்கள் கணக்கின் பாஸ்வேர்டை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள், இதனால் அவர்கள் ஸ்ட்ரீமிங் தளத்தில் உள்ளடக்கத்தை அனுபவிக்க முடியும். ஆனால் இங்கிலாந்தில் உள்ள அறிவுசார் சொத்து அலுவலகம் (ஐபிஓ), இந்த நடைமுறை அத்தகைய பயனர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகளை பதிவு செய்யலாம் என ஏற்கனவே எச்சரித்து இருந்தது. ஸ்ட்ரீமிங் கணக்குகளுக்கான கடவுச்சொல் பகிர்வு “இரண்டாம் நிலை பதிப்புரிமை மீறல்” என்றும் கூறியுள்ளது. பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்ளும் சந்தாதாரர்களை … Read more
அணுமின் நிலையங்களில் அமெரிக்க ஆயுதங்கள்; ரஷ்ய உளவுத்துறை ரிப்போர்ட்.!
வரலாற்று ரீதியாக ரஷ்யாவின் ஒரு பகுதி உக்ரைன் என ரஷ்யா கூறிவருகிறது. ஆனால் தாங்கள் தனித்துவமானவர்கள் என உக்ரேனியர்கள் கூறிவருகின்றனர். இந்த சூழலில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், உக்ரைன் நாட்டு அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார். அதை எதிர்த்து தான் ரஷ்யா போரை தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி … Read more
“உக்ரைன் போர் முடிவுக்கு வராததற்கு மேற்கத்திய நாடுகளே காரணம்” – ரஷ்யா
பிரிடோரியா: உக்ரைன் போர் முடிவடையாமல் இருப்பதற்கு மேற்கத்திய நாடுகளே காரணம் என்று ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. தென்னாப்பிரிக்கா சென்றுள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாரோவ், அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் நலீதி பந்தரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். தென்னாப்பிரிக்காவின் நிர்வாகத் தலைநகரான பிரிடோரியாவில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையை அடுத்து செர்கி லாரோவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய உக்ரைன் போர் ஓராண்டை நிறைவு செய்ய உள்ள நிலையில், அது எப்போது முடிவுக்கு … Read more