சட்டப்பிரிவு 370 ரத்தை நீக்கினால் மட்டும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் விளக்கம்

இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்த நிலையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் அளித்தால் மட்டுமே இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. துபாயை மையமாகக் கொண்டு இயங்கும் அல் அரேபியா என்ற தொலைக்காட்சிக்கு ஷெபாஸ் ஷெரீப் சமீபத்தில் நேர்காணல் அளித்துள்ளார். அதில், ”இந்தியாவுடன் ஆழமான, நேர்மையான, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விரும்புகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதனை அனுமதிக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் … Read more

எண்ணெய் கப்பலில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு..!

தாய்லாந்து அருகே நிறுத்தப்பட்டிருந்த எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். ஸ்மூத் சீ-22 என்ற அந்த எண்ணெய் கப்பலில் பழுதுநீக்கும் பணிகள் நடைபெற்றுகொண்டிருந்தபோது திடீரென பலத்த சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டு கப்பலில் தீப்பற்றி எரிந்தது. இதனால் பல அடி உயரத்திற்கு கரும்புகை எழும்பியது. நெருப்பை கட்டுப்படுத்த கரையிலிருந்தும், சிறிய படகுகளிலிருந்தும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இந்த விபத்தில், மியான்மரை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர். மாயமான 7 பேரை … Read more

'இந்தியா மீது போர் தொடுத்து பாடத்தை கற்றுக் கொண்டோம்' – பாக். பிரதமர் பளீச்!

“இந்தியா மீது போர் தொடுத்து நாங்கள் சரியான பாடம் கற்றுக் கொண்டோம்,” என, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்து உள்ளார். கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் எரி பொருள் தட்டுப்பாடு காரணமாக ஆளும் ஆட்சிக்கு எதிரான பாகிஸ்தானில் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தடை செய்யப்பட்ட அமைப்பான தெஹ்ரீக் – இ – தலிபான் பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதல்களை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், “இந்தியாவுடன் நடந்த போரில், பல பாடங்களை கற்றுக் கொண்டோம்,” என … Read more

நிழல் உலக தாதா தாவூத்தின் 2வது திருமண விவகாரம்… உறவினர் அளித்த வாக்குமூலம்!

மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய நில் உலக தாதாவான தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் வாழ்ந்து வருகிறார். ஆனால், அவர் அங்கு இல்லை என பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானை சேர்ந்த பெண்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளதாக தாவூத்தின் சகோதரி மகன், தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். ஹசீனா பார்கரின் மகனும், தாவூத்தின் மருமகனுமான அலிஷா தேசிய புலனாய்வு … Read more

இத்தாலி | 30 ஆண்டுகளாக தேடப்பட்டுவந்த மாஃபியா தலைவர் மெஸ்ஸினா கைது

பலேர்மோ: இத்தாலியில் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த மாஃபியா தலைவர் மெஸ்ஸினா டேனாரோ கைது செய்யப்பட்டுள்ளார். இத்தாலியின் பிரபல நகரங்களில் ஒன்றான பலேர்மோவிலுள்ள தனியார் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை எடுத்துவந்த நிலையில் மெஸ்ஸினா கைது செய்யப்பட்டிருக்கிறார். மெஸ்ஸினாவின் கைது இத்தாலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில்,”மெஸ்ஸினா டேனாரோ தனியார் மருத்துவமனை ஒன்றில் புற்றுநோய்க்காக கிமோதெரபி சிகிச்சையை, போலி பெயரில் பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது கைதில் கிட்டதட்ட 100 பாதுகாப்புப் … Read more

பாகிஸ்தான் பெண்ணை மணந்தார் தாவூத் இப்ராஹிம்: என்ஐஏவிடம் உறவினர் தகவல்

மும்பை: மும்பையில் நிழல் உலக தாதாவாக இருந்து மும்பை குண்டுவெடிப்பின் மூளையாக செயல்பட்டு பின்னர் நாட்டிலிருந்து தப்பியோடி தற்போது பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ள தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்துள்ளதாக என்ஐஏ விசாரணையின்போது அவரது உறவினர் தெரிவித்துள்ளார். தாவூத் இப்ராஹிம்மின் உறவினரான அலிஷா பார்காரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் அவர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். அலிஷா பார்கர் விசாரணை அதிகாரிகளிடம் தாவூத் இப்ராஹிமின் குடும்ப உறவுகளைப் பற்றி முழுமையாக விவரித்துள்ளார். தாவூத்தின் முதல் மனைவி … Read more

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம்; பிரதமர் மோடி சம்மதிக்க வேண்டும்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், இதற்கு பிரதமர் நரேந்திர மோடி சம்மதிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேண்டுகோள் விடுத்துள்ளார். அல் அரேபியா என்ற தொலைக்காட்சிக்கு ஷெபாஸ் ஷெரீப் நேர்காணல் அளித்துள்ளார். அதில், ”இந்தியாவுடன் ஆழமான, நேர்மையான, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விரும்புகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதற்கு சம்மதிக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையே பற்றி எரியும் பிரச்சினைகளாக உள்ள காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இதன் மூலம் தீர்வு … Read more

சீனாவில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மக்கள் தொகை சரிவு

பீஜிங்: சீனாவின் மக்கள்தொகை கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், தேசிய பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சீனாவில் 1961 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக 2022 ஆம் ஆண்டில் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் சீன மக்கள் தொகை எண்ணிக்கை 1.41260 பில்லியன் ஆக இருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டின் முடிவில் சீனாவில் 1.41178 பில்லியன் மக்கள் மட்டுமே உள்ளதாகவும் சீன தேசிய புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது. 2021 … Read more

அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது ஐ.நா.,| UN lists Pak-based Abdul Rehman Makki as global terrorist after China lifts technical hold

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஐக்கிய நாடுகள்: பாகிஸ்தானை சேர்ந்த அப்துல் ரஹ்மான் மக்கியை, சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா., அறிவித்துள்ளது. இவர், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீதின் உறவினர் ஆவார். லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜமாத் உத் தாவா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவனாக இருந்த ரஹ்மான் மக்கியை தேடப்படும் பயங்கரவாதியாக இந்தியாவும், அமெரிக்காவும் அறிவித்திருந்தது. அப்துல் மக்கி பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்ப்பது, நிதி திரட்டுவது, இளைஞர்களை … Read more