ஜம்மு காஷ்மீரில் இரண்டு வெளிமாநில தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு..!

ஜம்மு காஷ்மீரின் ஆனந்த் நாக் பகுதியில் இரண்டு வெளிமாநில தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதால் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 10 நாட்களில் பீகார் மற்றும் நேபாளத்தை சேர்ந்த வெளி ஆட்களை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய இரண்டாவது தாக்குதல் இது. இந்த தாக்குதலை அடுத்து அப்பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர் Source link

பிரதமர் ரிஷி சுனக்கின் ஆட்சியில் இங்கிலாந்து – இந்தியா இடையிலான உறவு மேம்படும்: முன்னாள் பிரதமர் போரிஸ் கருத்து

புதுடெல்லி: இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் சமீபத்தில் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற தலைமைத்துவ மாநாட்டில் பங்கேற்க இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வந்தார். மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: நாம் இப்போது ஆபத்தான மற்றும் கொந்தளிப்பான காலத்தில் வாழ்ந்து வருகிறோம். கரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைக் கடந்து வந்துள்ளோம். தற்போது ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். அவர் ஒரு வலுவான … Read more

சொகுசு கப்பலில் 800 பேருக்கு கரோனா: ஆஸ்திரேலியாவில் வேகமாக பரவுகிறது

சிட்னி: ஆஸ்திரேலியாவில் கடந்த ஒரு வாரமாக ஒமைக்ரான் எக்ஸ்பிபி வகை கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இது 4-வது அலை என சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் ஆஸ்திரேலிய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், கார்னிவல் ஆஸ்திரேலியா நிறுவனத்துக்கு சொந்தமான மெஜஸ்டிக் பிரின்சஸ் என்ற சொகுசுக் கப்பலில் பயணித்த 800 பேருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்தக் கப்பல் சிட்னி அருகே நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கார்னிவல் … Read more

உலக மக்கள் தொகை நவ.15 தேதிக்குள் 800 கோடியாகும் – ஐ.நா.

உலகின் மக்கள் தொகை இன்னும் சில நாட்களில் 800 கோடியாக அதிகரிக்க உள்ளதாக ஐநா.வின் அறிக்கையில் தெரிவிக்கப்ப்டடுள்ளது. நவம்பர் 15ம் தேதி உலக மக்கள் தொகை 8 பில்லியன் இலக்கை எட்டுகிறது. தற்போது சீனா முதலிடத்தில்  இருந்தாலும், 2030ம் ஆண்டுக்குள் மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தில் இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் நைஜீரியா நான்காம் இடத்திலும் பாகிஸ்தான் 5வது இடத்திலும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு காரணமாக உள்ள நாடுகளாகும். இதே போல் … Read more

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு காந்தி அமைதி விருது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்-உலகம் முழுதும் அஹிம்சையின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து பிரசாரம் செய்து வரும், வாழும் கலை அமைப்பின் நிறுவனரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை கவுரவிக்கும் வகையில், அவருக்கு காந்தி அமைதி விருது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் செயல்படும் காந்தி அறக்கட்டளை அமைப்பு சார்பில், அஹிம்சைக்காக குரல் கொடுப்பவர்களுக்கும், மனித நேயத்துடன் சேவை செய்பவர்களுக்கும், ஆண்டுதோறும் காந்தி அமைதி விருது வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான விருது, தமிழகத்தைச் சேர்ந்தவரும், வாழும் கலை அமைப்பின் நிறுவனருமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு … Read more

மாலத்தீவில் உயிரிழந்தோர் உடலை இந்தியா அனுப்ப நடவடிக்கை| Dinamalar

மாலே மாலத்தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த ஏழு தொழிலாளர்கள் உடல்களை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை அந்நாடு எடுத்துள்ளது. தெற்காசிய நாடான மாலத்தீவின் தலைநகர் மாலேயில் சமீபத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள ஒரு கட்டடத்தின் தரைதளத்தில் இருந்த கார் பழுதுபார்க்கும் மையத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. அதன் மேல்தளத்தில் உள்ள விடுதிகளில், இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து வந்துள்ள தொழிலாளர்கள் தங்கியிருந்தனர். இந்த தீ விபத்தில், ௧௦ பேர் உயிரிழந்தனர். அதில், ஏழு … Read more

Tianzhou-5 சரக்கு விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது சீனா..

சீனா சரக்கு விண்கலமான Tianzhou-5 விண்கலத்தை இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. வென்சாங் விண்கல ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-7 ராக்கெட் மூலம் Tianzhou-5 விண்கலம் செலுத்தப்பட்டதாகவும், விண்கலம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து அதன் சுற்றுப்பாதையில் நுழைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் டியாங்காங் விண்வெளி நிலையத்தின் கட்டுமானப்பணிக்கான பொருட்களை வழங்குவதற்காக இந்த விண்கலம் அனுப்பப்பட்டது. Source link

இன்று உலக கருணை தினம்| Dinamalar

கருணை என்பது அனைவரிடமும் எவ்வித பாகுபாடின்றி அன்பு செலுத்துவது. மதம், அரசியல் என அனைத்துக்கும் அப்பாற்பட்டு விளங்கும் கருணையை போற்றும் விதமாக . ஜப்பானின் டோக்கியோவில் தொடங்கப்பட்ட கருணை அமைப்பு சார்பில் 1998 முதல் நவ. 13ல் கடைபிடிக்கப்படுகிறது. கருணையுடன் இருப்பது மகிழ்ச்சிக்கான ஹார்மோனை அதிகரிக்கச் செய்யும். இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு பெருகும். இதன் காரணமாகவே மருத்துவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை போலவே கருணை உணர்வோடும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர். கருணை உணர்வோடு இருப்பது … Read more

சரக்கு விண்கலம் பயணம் சீனாவின் முயற்சி வெற்றி| Dinamalar

பீஜிங், விண்வெளியில் அமைத்து வரும் ஆய்வு மையத்துக்கு தேவையான பொருட்களுடன் கூடிய விண்கலத்தை, சீனா வெற்றிகரமாக ஏவியது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’ தலைமையில், விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.ரஷ்யா உட்பட பல நாடுகள் இணைந்து இந்த ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. இந்நிலையில், நம் அண்டை நாடான சீனா, விண்வெளியில் தனக்கென தனியாக ஆய்வு மையத்தை அமைத்து வருகிறது. இதற்கு தேவையான பொருட்களை சீனா ஏற்கனவே அனுப்பி வைத்து உள்ளது.இதன் ஒரு பகுதியாக, ஆய்வு … Read more

சீனாவில் 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்..

சீனாவில் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. சீனாவுக்கு வரும் பயணிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதற்கான காலம் 7 நாட்களில் இருந்து 5 நாட்களாக குறைக்கப்பட்ட மறு நாளே, அந்நாட்டில் புதிதாக 11 ஆயிரத்து 950 பேருக்கு உறுதியாகியுள்ளது. இதனால் சுமார் 19 மில்லியன் மக்கள் வசிக்கும் குவாங்ஷூ மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. குவாங்ஷூவில் இருந்து பெய்ஜிங் மற்றும் பிற பகுதிகளுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. … Read more