இத்தாலியில் 30 ஆண்டுகளாக தேடப்பட்ட மாபியா தலைவன் கைது| Mafia leader wanted in Italy for 30 years arrested

இத்தாலியில் 30 ஆண்டுகளாக தேடப்பட்ட மாபியா தலைவன் கைது ரோம்: இத்தாலியில் 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த மாபியா கும்பல் தலைவன் மேட்டியோ மெசினா டெனாரோ கைது செய்யப்பட்டார். இவர் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் ஆவார். 1993 முதல் தலைமறைவான இவருக்கு தற்போது வயது 60. மெசினா டெனாரோ, சிசிலியின் கோசா நோஸ்ட்ரா மாபியாவின் தலைவனாக இருந்துள்ளார். ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது போலீசார் மடக்கினர். தற்போது அவருக்கு புற்று நோய் … Read more

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்.. 130 வீடுகள் சேதம்!

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. ஞாயிறுக்கிழமை முதல் அங்கு தொடர்ச்சியாக அடுத்தடுத்து 219 நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. இதில் உயிர்சேதம் குறித்த தகவல்கள் ஏதும் வெளிவராத நிலையில், நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் நிலை குலைந்தன. ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவான ஒரு நிலநடுக்கத்தால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு அலறியடித்தபடி சாலைகளில் தஞ்சமடைந்தனர். Source link

“உக்ரைனுக்கு இங்கிலாந்து அனுப்பும் கனரக பீரங்கிகள் தீப்பற்றி எரியும்” – ரஷ்யா எச்சரிக்கை!

உக்ரைனுக்கு இங்கிலாந்து அனுப்பும் கனரக பீரங்கிகள் தீப்பற்றி எரியும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. வரும் வாரங்களில் சக்திவாய்ந்த 14 சேலஞ்சர், 2 பீரங்கிகள் உள்ளிட்ட தளவாடங்களை அனுப்புவதாக இங்கிலாந்து தெரிவித்திருந்தது. இந்நிலையில், மாஸ்கோவில் பேசிய ரஷ்ய செய்தித் தொடர்பாளர் இங்கிலாந்து, போலந்து போன்ற நாடுகளில் இருந்து வரக்கூடிய புதிய ஆயுதங்கள் போர்க்களத்தில் நிலைமையை மாற்றாது எனத் தெரிவித்தார். Source link

பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கி சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு

பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கியை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. இவர் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீத்தின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2023 ஜனவரி 16 அன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கமிட்டி பல்வேறு பிரகடனங்களையும் பரிசீலனையில் கொண்டு அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. யார் இந்த அப்துல் ரஹ்மான் மக்கி? > அப்துல் ரஹ்மான் மக்கியை ஏற்கெனவே இந்தியா தேடப்படும் பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. அதேபோல் … Read more

நடப்பாண்டின் பிற்பகுதியின் எல் நினோ காலநிலை மீண்டும் வரக்கூடும் என்பதால் உலக நாடுகளில் வெப்பநிலை அதிகரிக்கும் வாய்ப்பு!

நடப்பு ஆண்டின் பிற்பகுதியில் எல் நினோ எனப்படும் காலநிலை மீண்டும் வரக்கூடும் என்பதால் பெரும்பாலான உலக நாடுகளில் வெப்பநிலை அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டில் எல் நினோ காரணமாக பூமியின் வெப்பநிலை 1 புள்ளி 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்பதால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வெப்ப அலைகள் தாக்கம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் எல் நினோ காரணமாக பாகிஸ்தான் முதல் நைஜீரியா வரை கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் … Read more

2006-ல் கணவர், 2023-ல் மனைவி விமான விபத்தில் உயிரிழப்பு.. நேபாள விமான விபத்து குறித்து உருக்கமான தகவல்கள்..

நேபாளத்தில், விமான விபத்தில் கணவனை பறிகொடுத்த பெண் விமானி, 16 ஆண்டுகளுக்கு பிறகு அதேபோன்றதொரு விபத்தில் பலியாகியுள்ளார். விபத்துக்குள்ளான எதி ஏர்லைன்ஸ் நிறுவன விமானத்தின் விமானி அஞ்சு கதிவாடா. இவர், 2006-ஆம் ஆண்டு விமான விபத்தில் தனது கணவர் பலியான பிறகு கணவரின் காப்பீட்டுத் தொகையில் கிடைத்த பணத்தின் மூலம், விமான ஓட்டியாக பயிற்சி எடுத்து, 2010ம் ஆண்டு எதி ஏர்லைன்ஸில் இணைந்து பைலட்டாக ஆனார். இந்நிலையில், 68 பேரைப் பலிகொண்ட விமான விபத்தில் அஞ்சுவும் உயிரிழந்துள்ளார். Source … Read more

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு நடத்திய போதைக் கும்பல்.. 6 மாத குழந்தை உட்பட 6 பேர் பலியான பரிதாபம்!

அமெரிக்காவின் கலிஃபோனியா மாகாணத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 மாத குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தனர். 70,000 மக்கள் வசிக்கும் துலாரே நகரில் உள்ள ஒரு வீட்டை குறிவைத்து மறைந்திருந்த மர்மநபர்கள் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிச் சென்றனர். திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் நிகழ்த்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலில் தலையில் குண்டு பாய்ந்து பச்சிளம் குழந்தை உட்பட 6 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட வீட்டில் கடந்த வாரம் போதைப் பொருள் தொடர்பான … Read more

150 நாட்களாக தினமும் தொடர்ந்து மாரத்தான் ஓடி ஆஸ்திரேலிய பெண் உலக சாதனை..!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் 150 நாட்களாக தினமும் ஒரு மாரத்தான் ஓடி உலக சாதனை படைத்துள்ளார். Erchana Murray என்ற பெயர் கொண்ட அந்த பெண் இதுவரை 6ஆயிரத்து 300கிலோ மீட்டர் தூரத்தை மாரத்தான் ஓட்டத்தில் நிறைவு செய்துள்ளார். ஆஸ்திரேலிய விலங்குகள் மற்றும் தாவரங்களை பாதிக்கும் பேரழிவு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த இந்த  தொடர் மாரத்தான் ஓட்டத்தை நடத்தியதாக Erchana Murray தெரிவித்தார். Source link

சீனாவில் ரசாயன ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் உயிரிழப்பு

பீஜிங், சீனாவின் கிழக்கு லியோனிங் மாகாணம் பான்ஜின் நகரில் ரசாயனங்களை உற்பத்தி செய்யும் ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலையில் நேற்று முன்தினம் தொழிலாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் ரசாயன ஆலையில் பயங்கர வெடிவிபத்து நேரிட்டது. இதில் வானுயரத்துக்கு தீப்பிழம்பு எழுந்தது. அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலம் சூழந்தது. மேலும் வெடிவிபத்தை தொடர்ந்து ஆலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளில் … Read more

காங்கோ நாட்டில் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு; 10 பேர் பலி

கின்ஷாசா, மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்கு பகுதியில் உகாண்டா எல்லையையொட்டி உள்ள காசிந்தி நகரில் தேவாலயம் ஒன்று உள்ளது. இந்த தேவாலயத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிரார்த்தனைக்காக ஏராளமான மக்கள் வந்திருந்தனர். அவர்கள் மனமுருகி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது தேவாலயத்துக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. குண்டு வெடிப்பில் சிக்கி 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் சுமார் 40 பேர் பலத்த காயம் … Read more