ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்து கோயில் சூறை – காலிஸ்தான் ஆதரவாளர்களால் பதற்றம்

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு இந்து கோயிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சூறையாடிய சம்பவம் நடந்துள்ளது. பஞ்சாபைப் பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்க வேண்டும் என்பது காலிஸ்தான் ஆதரவாளர்களின் நீண்ட கால கோரிக்கையாகும். இந்தஅமைப்பினர் இந்தியா உள்ளிட்டசில நாடுகளில் ஒடுக்கப்பட்டு விட்டாலும் கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். சிவா – விஷ்ணு கோயில் இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் அமைந்துள்ள  சிவா- விஷ்ணு கோயிலுக்குள் நேற்று முன்தினம் காலிஸ்தான் ஆதரவாளர்கள் புகுந்தனர். … Read more

ஆப்கானிஸ்தானில் திருடிய குற்றத்திற்காக 4 பேரின் கைகளை துண்டித்த தலிபான்கள்..!

ஆப்கானிஸ்தானில், திருட்டில் ஈடுபட்டதாக கூறி 4 பேரின் கைகளை வெட்டி தலிபான்கள் தண்டனை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. காந்தஹாரில் உள்ள அகமது சாஹி கால்பந்து மைதானத்தில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரின் கைகளை வெட்டி தலிபான்கள் தண்டனை நிறைவேற்றியுள்ளனர். மேலும், பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 9 குற்றவாளிகளுக்கு 39 கசையடிகள் வழங்கப்பட்டன.  இதற்கிடையே, முறையான விசாரணை ஏதுமின்றி மக்களுக்கு கொடூர தண்டனைகளை தலிபான்கள் கட்டவிழ்த்து விடுவதாக இங்கிலாந்து முன்னாள் அமைச்சரின் … Read more

பாகிஸ்தானுடன் தொடர்புடைய 150 தீவிரவாத அமைப்புகள் ஐ.நா. கறுப்பு பட்டியலில் சேர்ப்பு

நியூயார்க்: பாகிஸ்தானுடன் தொடர்புடைய சுமார் 150 தீவிரவாத அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் ஐ.நா.கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் துணைத் தலைவர் அப்துல் ரகுமான் மக்கி, கடந்த திங்கட்கிழமை ஐ.நா.வின் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அல்-காய்தா தடைகள் குழுவின் கீழ் அப்துல் ரகுமான் மக்கி, சர்வதேச பயங்கரவாதியாக பட்டியலிடப்பட்டார். அவருக்கு எதிராக சொத்துகள் முடக்கம், பயணத் தடை உள்ளிட்ட நடவடிக் கைகளை உலக நாடுகள் எடுக்க இத்தடை வகை செய்கிறது. ஐ.நா.வால் … Read more

கால்பந்து போட்டியின் நேரலையில் திடீர் என ஒலித்த அநாகரிக சப்தங்கள்.. தவறுகளுக்காக மன்னிப்பு கோரிய பிபிசி நிறுவனம்!

இங்கிலாந்தில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றின் நேரலையின்போது திடீர் என அநாகரிக சப்தங்கள் ஒலித்ததற்காக பிபிசி நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது. லண்டனில் உள்ள மொலினக்ஸ்  மைதானத்தில் வால்வர்ஹாம்ப்டன் மற்றும் லிவர்பூல் இடையேயான போட்டி நேரலை ஒளிபரப்பின் போது அருவருப்பான சத்தங்கள் ஒலித்துள்ளன. அப்போது போட்டியை சக நண்பர்களுடன் பார்த்துக் கொண்டிருந்த, போட்டி வர்ணனையாளரும் முன்னாள் கால்பந்து வீரருமான லினேகர் சிரிப்பில் ஆழ்ந்தார், இதற்கிடையில், ஜார்வோ என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் யூடியூப் குறும்புக்காரரான டேனியல் ஜார்விஸ், தாம் … Read more

சீன புத்தாண்டு விடுமுறையில் தினசரி கரோனா உயிரிழப்பு 36 ஆயிரத்தை தாண்டும்

பெய்ஜிங்: கடந்த 2020-ம் ஆண்டுக்கு பிறகு கரோனா ஊரடங்குக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. இதன் காரணமாக கரோனா பரவல் அங்கு மீண்டும் தீவிரமடையத் தொடங்கியது. தினசரி உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சீனப் புத்தாண்டு ஜனவரி 22-ம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு சீனாவில் 7 நாட்களுக்கு பொதுவிடுமுறை வழங்கப்பட உள்ளது. தற்போது சீனாவில் கரோனா தொற்று மிக அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் புத்தாண்டு விடுமுறை நாட்களில் அங்கு நாளொன்றுக்கு 36,000 பேர் கரோனா தொற்றால் உயிரிழக்கக் கூடும் … Read more

ஆப்கானிஸ்தானில் கடும் குளிர் பனி காரணமாக 70 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் 70 பேர் கடும் பனியில் உறைந்து உயிரிழந்தனர். குழந்தைகள், பெண்கள் உட்பட 140 பேர் கார்பன் மோனாக்சைடு பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஒரு வாரமாகவே காபூல் உள்ளிட்ட இதர மாகாணங்களில் வெப்ப நிலை சரிந்து, கோர் பகுதியில் குறைந்தபட்ச வெப்ப நிலை மைனஸ் 33 டிகிரியாக சரிந்தது. இந்த குளிர்காலம் சமீப காலங்களில் மிகவும் குளிர்ச்சியானது என்று ஆப்கான் வானிலை மையம் தெரிவித்தது. இந்த குளிர் அலை மேலும் ஒருவாரம் … Read more

கொரோனாவில் உயிர் பிழைத்து சாதனை படைத்த உலகின் வயதான பெண் மரணம்..!!

பாரீஸ், உலகின் வயதான பெண்ணாக அறியப்பட்டு வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி லூசில் ராண்டன் மரணமடைந்தார். அவருக்கு வயது 118. லூசிலின் மறைவை அவர் தங்கியிருந்த முதியோர் இல்லத்தின் செய்தி தொடர்பாளர் டேவிட் டவெலா உறுதிப்படுத்தியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில், “லூசில் ராண்டனின் மறைவு நிச்சயமாக பெருந்துயர் தான். ஆனால் அவர் இயற்கை எய்தவே விரும்பினார். மரணத்தின் மூலம் தனது சகோதரருடன் சேர வேண்டும் என்று விரும்பினார். லூசிலுக்கு நிச்சயமாக இது விடுதலை தான்” … Read more

Helicopter Crash: உக்ரைன் ஹெலிகாப்டர் விபத்து அமைச்சர்கள் குழந்தைகள் என 18 பேர் பலி

கீவ்: உக்ரைனில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி உட்பட 18 பேர் பலி, 29 பேர் காயமடைந்தனர். உக்ரைன் தலைநகர் கிவ்வின் கிழக்கு புறநகர் பகுதியில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 3 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். 10 குழந்தைகள் உட்பட 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.  விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி மற்றும் 8 பேர் பயணித்துள்ளனர். புரோவரி புறநகர் பகுதியில் இந்த ஹெலிகாப்டர் … Read more

உக்ரைன் ஹெலிகாப்டர் விபத்து – பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு

கீவ்: உக்ரைன் மீது சிறப்பு ராணுவ செயல்பாடு என்ற பெயரில் ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல் போர்த் தாக்குதலை நடத்தி வருகிறது. பதிலுக்கு உக்ரைன் ராணுவமும் ரஷ்யா மீது தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று உக்ரைன் தலைநகர் கீவ் புறநகர் பகுதியிலிருந்து ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது. இதில் உக்ரைன் அமைச்சர் டெனிஸ் மோனஸ்டயர்ஸ்கி உள்ளிட்ட 20 பேர் இருந்தனர். இந்நிலையில் ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களில் புறநகர்பகுதியில் விழுந்து விபத்துக்குஉள்ளானது. … Read more

விளையும் பயிர் நடுவே ”லியோனல் மெஸ்ஸி”-யின் பிரம்மாண்ட ஓவியம்.. இணையதளத்தில் வைரல்!

தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில், சோள வயலில் விளையும் பயிர் நடுவே பிரத்யேகமாக வரையப்பட்டுள்ள ”லியோனல் மெஸ்ஸி”-யின் பிரம்மாண்ட ஓவியம் இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. உலகக் கோப்பை கால்பந்தில் வெற்றிவாகை சூடிய மெஸ்ஸியின் தீவிர ரசிகரும், பொறியாளருமான கார்லோஸ் ஃபரிசெல்லி என்ற விவசாயி கோர்டோபா மாகாணத்தில் உள்ள தனது பச்சை வயலின் நடுவே புவி-குறியீட்டு கருவிகளை பயன்படுத்தி, சோள விதைகளை நடவு செய்து ஓவியத்தை உருவாக்கி உள்ளார். சோள வயலில் மெஸ்ஸி-யின் ஓவியம் தீட்டப்பட்டிருப்பது போல … Read more