காங்கோ நாட்டில் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு; 10 பேர் பலி

கின்ஷாசா, மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்கு பகுதியில் உகாண்டா எல்லையையொட்டி உள்ள காசிந்தி நகரில் தேவாலயம் ஒன்று உள்ளது. இந்த தேவாலயத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிரார்த்தனைக்காக ஏராளமான மக்கள் வந்திருந்தனர். அவர்கள் மனமுருகி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது தேவாலயத்துக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. குண்டு வெடிப்பில் சிக்கி 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் சுமார் 40 பேர் பலத்த காயம் … Read more

நேபாள விமான விபத்தில் 5 இந்தியர்கள் உட்பட 68 பேர் உயிரிழப்பு: கருப்பு பெட்டிகள் மீட்பு; விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை

காத்மாண்டு: நேபாளத்தில் நேரிட்ட விமான விபத்தில் 5 இந்தியர்கள் உட்பட 68 பேர் உயிரிழந்தனர். 4 பேரை காணவில்லை. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து அந்த நாட்டின் போக்கராவுக்கு எட்டி ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் காலை 10.33 மணிக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் நேபாளத்தை சேர்ந்த 53 பேர், இந்தியாவை சேர்ந்த 5 பேர், ரஷ்யாவை சேர்ந்த 4 பேர், கொரியாவை சேர்ந்த 2 பேர், பிரான்ஸ், ஆப்கானிஸ்தானை சேர்ந்த தலா ஒருவர் என 68 … Read more

பிரேசிலில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் வெடிவிபத்து; 4 பேர் பலி

பிரேசிலியா, பிரேசில் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள அமேசானாஸ் மாகாணம் மனாஸ் நகரில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. நேற்று முன்தினம் இந்த பயிற்சி மையத்தில் வழக்கம் போல் துப்பாக்கி சுடும் பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அங்கு பயங்கர வெடிவிபத்து நேரிட்டது. இதில் பயிற்சி மையத்தில் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக … Read more

பெருமுதலாளிகளால் ஊடகத் துறையின் தரம் சரிகிறதா?: ‘புளூம்பெர்க்’ மேத்யூ விங்க்லர் மற்றும் ‘தி இந்து’ என்.ராம் கலந்துரையாடல்

சென்னை: ஊடகத் துறையில் பெருமுதலாளிகளின் ஆதிக்கம் குறித்து நேற்று சென்னையில் உள்ள ஏசிஜே இதழியல் கல்லூரியில் (ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிஸம்) கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வில், அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற புளூம்பெர்க் செய்தி நிறுவனத்தின் முன்னாள் முதன்மை ஆசிரியர் மேத்யூ விங்க்லர் மற்றும் ‘தி இந்து’ என்.ராம் பங்கேற்று இதழியல் துறை மாணவர்களுடன் கலந்துரையாடினர். இந்தக் கலந்துரையாடலை ஏசிஜே கல்லூரியின் தலைவர் சசிகுமார் ஒருங்கிணைத்தார். சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் ஊடகத் துறையின் செயல்பாடு எப்படி இருக்கிறது, … Read more

நேபாள விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு, 2 பேரை காணவில்லை

காத்மண்டு, நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இருந்து சுற்றுலா தலமான பொக்காராவுக்கு நேற்று முன் தினம் காலை 10.33 மணிக்கு ‘எட்டி ஏர்லைன்ஸ்’ விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் என மொத்தம் 72 பேர் பயணம் செய்தனர். அந்த விமானம் காலை 11 மணிக்கு பொக்காரா விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது. பொக்காரா புதிய விமான நிலையம் கடந்த 1-ந்தேதி தான் திறந்து வைக்கப்பட்டது. விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு … Read more

சொகுசு கப்பல் பீகாரில் தரைதட்டவில்லை, திட்டமிட்டபடி பயணம் தொடர்கிறது – நீர்வழி ஆணையம் தகவல்

சாப்ரா, உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி கடந்த 13ம் தேதி நதிவழி சொகுசு கப்பல் பயணத்தை தொடங்கி வைத்தார். இந்த சொகுசு கப்பல் வங்காளதேசம் வழியாக அசாமில் உள்ள திப்ருகரை சென்றடையும். அனைத்து ஆடம்பர வசதிகளுடன், 36 சுற்றுலாப் பயணிகள் தங்கும் வசதியுடன், 18 அறைகள் கப்பலில் உள்ளன. இது தவிர, 40 பணியாளர்கள் தங்கும் வசதியும் இருந்தது. இந்த சூழலில் இந்த சொகுசு கப்பல் பீகாரின் சாப்ரா பகுதியில் ஆழமற்ற நதியில் பயணித்த … Read more

கனடாவில் விபத்து: சீக்கிய மாணவர் பரிதாப பலி| Accident in Canada: Sikh student tragically killed

டொரான்டோ,-கனடாவில் நிகழ்ந்த கார் விபத்தில், 17 வயது சீக்கிய மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவின் பிரிட்டிஷ் கொலாம்பியா மாகாணத்தில் வசிப்பவர் சரப்ஜித் நானாரா லால். சீக்கியரான இவருக்கு தரேன் லால், 17, என்ற மகனும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இருவரும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். தொடர் விடுமுறையையொட்டி, தரேன் லால் சுற்றுலா செல்ல, தன் வீட்டிலிருந்த காரை எடுத்துச் சென்றுஉள்ளார். இந்நிலையில் லாங்க்லே … Read more

“அமெரிக்கா வரும் அகதிகளுக்கு நியூயார்க் நகரில் இடமில்லை” – எரிக் ஆடம்ஸ்

மெக்சிகோ வழியாக அமெரிக்கா வரும் அகதிகளுக்கு நியூயார்க் நகரில் இடமில்லை என அந்நகரின் மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார். மெக்சிகோ எல்லையை ஒட்டி அமைந்துள்ள எல் பாசோ நகருக்கு முன்னறிவிப்பின்றி வந்த எரிக் ஆடம்ஸ், அங்கிருந்த அகதிகளிடம் உரையாற்றினார். நியூயார்க் நகருக்கு அனுப்பிவைக்கப்பட்டும் அகதிகளுக்கு அடைக்கலம் தந்தால், ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள மாநகராட்சியின் செலவீனங்கள் இரட்டிப்பாகும் என தெரிவித்தார். அகதிகள் வருகைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் டிரம்பின் குடியரசு கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள மாநிலங்களுக்கு … Read more

இவர்தான் 2022 Miss Universe… பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

Miss Universe எனப்படும் பிரபஞ்ச அழகிக்கான போட்டிகள் உலகின் பல்வேறு நாடுகளில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, 2022 ஆம் ஆண்டுக்கான 71 ஆவது Miss Universe போட்டி அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நேற்றிரவு நடைபெற்றது. பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 100 அழகிகள் இந்த பிரம்மாண்ட போட்டியில் பங்கேற்றனர். ஆடை அலங்காரம், கேட் வாக் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டதுடன், பொது அறிவு கேள்வி பிரிவும் இந்த போட்டியில் இடம்பெற்றிருந்தது. … Read more

நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டெடுப்பு..!

நேபாளத்தின் போக்ரா விமான நிலையத்தின் அருகே விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. காத்மாண்டுவில் இருந்து 72 பேருடன் சென்ற Yeti ஏர்லைன்ஸ் விமானம், ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் போக்ரா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற போது, Seti நதிக்கரையில் உள்ள வனப்பகுதியில் மோதி தீப்பற்றியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 5 இந்தியர்கள் உட்பட 68 பேர் பலியாகினர். இந்நிலையில், தேடுதலுக்கு பின் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டதாகவும், அது சேதமடையாமல் நல்ல … Read more