சீனாவில் கரோனாவுக்கு ஒரே மாதத்தில் 60,000 பேர் உயிரிழப்பு

பெய்ஜிங்: சீனாவில் கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஒரு மாதத்தில் சுமார் 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீன தேசிய சுகாதார ஆணையத்தின் கீழ் இயங்கும் சுகாதார நிர்வாகப் பிரிவின் தலைவர் ஜியாவோ யாஹூ, கடந்த டிசம்பர் 8-ம் தேதி முதல் இம்மாதம் 12-ம் தேதி வரை கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 938 என தெரிவித்துள்ளார். இது மருத்துவமனையில் சிகிச்சை … Read more

அமெரிக்காவில் டெஸ்லா கார் செல்ஃப் டிரைவிங் முறையில் சென்றபோது திடீரென நின்றதால் விபத்து..!

அமெரிக்காவில் டெஸ்லா கார் செல்ஃப் டிரைவிங் முறையில் சென்றபோது  சாலையில் திடீரென நின்றதால் பின்னால் வந்த 8 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது தொடர்பான சிசிடிவியில் பதிவான புதிய காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. சான் ஃபிரான்சிஸ்கோவைச் சேர்ந்த 76 வயதான வழக்கறிஞர் டெஸ்லா S மாடல் காரில் பே பிரிட்ஜின் அடியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென நின்றதால் பின்னால் வந்த கார்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 வயது குழந்தை உள்பட 9 பேர் படுகாயம் … Read more

முடியல.. இன்னும் 2 புயல் இருக்கு; பீதியில் உறைந்த மக்கள்!

அமெரிக்கா நாட்டில் உள்ள கலிபோர்னியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெய்த புயல் மழை அந்த மாகாணத்தையே புரட்டிப்போட்டு உள்ளது. இதனால் கலிபோர்னியா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பல மணி நேரம் மழை பெய்து சாலைகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் சாலைகளில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களும் நீரில் அடித்து செல்லப்பட்டது. அத்துடன் கட்டிடங்களுக்குள் வெள்ளம் புகுந்து மக்களை இன்னலுக்கு ஆளாக்கியது. கன மழை தொடர்ந்து பெய்தது மற்றும் அதீத ஈரப்பதத்தின் காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவகள் ஏற்பட்டது. … Read more

'ஜப்பானுக்கு பாதுகாப்பு அளிப்பதில் அமெரிக்கா உறுதி' – அதிபர் ஜோ பைடன்

ஜப்பானுக்கு பாதுகாப்பு அளிப்பதில் உறுதியாக உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்து உள்ளார். கிழக்கு ஆசிய நாடான ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா உடன் நட்பு ரீதியிலான தொடர்பு கொண்டுள்ளது. எனினும், மறுபுறம் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான தென் கொரியா மற்றும் ஜப்பானை அச்சுறுத்தும் வகையில் வட கொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலைகளுக்கு இடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், … Read more

லிதுவேனியா – லாட்வியா எரிவாயுக் குழாய் வெடித்து தீ விபத்து

லிதுவேனியாவில் இருந்து லாட்வியா நாட்டுக்கு செல்லும் எரிவாயுக் குழாய் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஆம்பர் கிரிட் என்ற நிறுவனம், லிதுவேனியாவில் இருந்து லாட்வியாவுக்கு, 2 குழாய்கள் மூலம் எரிவாயு விநியோகித்து வருகிறது. இந்நிலையில், பனேவெஸிஸ் பகுதியில் ஒரு குழாய் வெடித்து, சுமார் 50 மீட்டர் உயரத்திற்கு தீ கொளுந்துவிட்டு எரிந்தது. உடனடியாக எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டு தீ அணைக்கப்பட்ட நிலையில், தீ விபத்து ஏற்படாத மற்றொரு குழாய் மூலம் எரிவாயு விநியோகத்தை மீட்டெடுக்க முயற்சிப்பதாக … Read more

இந்தியாவுக்கு தோள் கொடுப்போம்! உஸ்பெகிஸ்தான் குடியரசுத்தலைவர் உறுதி!

Voice of Global South Summit: “வாய்ஸ் ஆஃப் குளோபல் சவுத் உச்சி மாநாடு” என்ற இரண்டு நாள் மாநாட்டினை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்தது. ஜனவரி 12 மற்றும் 13ம் தேதிகளில் நடந்த மாநாட்டில், தொடக்க நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார். முதல் நாளில் தலைவர்கள் பங்கேற்ற அமர்வுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். இரண்டாம் நாள் நிகழ்வில்மாநாட்டில் பேசிய உஸ்பெகிஸ்தான் நாட்டின் குடியரசுத் தலைவர் ஷவ்கத் மிர்சியோயேவ், … Read more

நித்தியானந்தாவின் கைலாசாவுடன் ஒப்பந்தம் போட்டதா அமெரிக்கா? ஒப்பந்தத்தால் என்ன பயன்?

நியூடெல்லி: கைலசா என்ற தனது தனி நாட்டை, அமெரிக்கா, இறையாண்மை கொண்ட நாடாக அமெரிக்கா அங்கீகரித்துவிட்டதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார். அமெரிக்கா தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரபூர்வமான தகவலும் வெளியாகாத சூழலில், நகர மேயர் ஒருவரோடு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் சமூக ஊடகங்களில் இந்த தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றன. The United States of America signs bilateral agreement with United States of KAILASA#Kailasa #Newark #NJ #Bilateral #USA #Nithyananda pic.twitter.com/PjGd4cemZb — … Read more

வரி மோசடி செய்த டொனால்ட் டிரம்பின் நிறுவனங்களுக்கு 1.6 மில்லியன் டாலர் அபராதம்

நியூயார்க்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் நிறுவனத்திற்கு $1.6 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டது, நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தனிப்பட்ட வருமானத்தை திரித்துக் காட்டி வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, வரி மோசடி செய்ததற்காக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் நிறுவனத்திற்கு 1.6 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி ஏய்ப்பு விவகாரம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று டிரம்ப் மறுத்துள்ளார். சதி மற்றும் பொய்யான வணிகப் பதிவுகள் உள்ளிட்ட 17 குற்றங்களுக்காக … Read more

7 ஆண்டுகளுக்குப் பின் ஈரான்- சவுதி அரேபியா இடையே பேச்சுவார்த்தை.. இரு நாடுகளும் மீண்டும் தூதரகங்களைத் திறக்க முடிவு!

7 ஆண்டுகளுக்குப் பின் ஈரான் மற்றும் சவுதி அரேபியா இடையே மீண்டும் தூதரகங்களைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சர் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் இரு நாடுகளின் கருத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். கடந்த 2016ம் ஆண்டுக்குப் பின் இருநாடுகளிடையே ஏற்பட்ட உயர்மட்டத் தொடர்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. Source link

கொரோனா அறிகுறி இருந்தால் 10 நாட்கள் தனிமை: உலக சுகாதார அமைப்பு சிபாரிசு

ஜெனீவா, உலக சுகாதார அமைப்பு, கொரோனா தொடர்பானதிருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்டால், 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளது. அறிகுறி இல்லாவிட்டால், 5 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. தனிமைப்படுத்தும் காலத்தை குறைக்க விரைவு ஆன்டிஜென் பரிசோதனை செய்யுமாறும் தெரிவித்துள்ளது. தினத்தந்தி Related Tags : Corona symptoms World Health Organization Recommendation