பாகிஸ்தான் பெண்ணை மணந்தார் தாவூத் இப்ராஹிம்: என்ஐஏவிடம் உறவினர் தகவல்

மும்பை: மும்பையில் நிழல் உலக தாதாவாக இருந்து மும்பை குண்டுவெடிப்பின் மூளையாக செயல்பட்டு பின்னர் நாட்டிலிருந்து தப்பியோடி தற்போது பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ள தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்துள்ளதாக என்ஐஏ விசாரணையின்போது அவரது உறவினர் தெரிவித்துள்ளார். தாவூத் இப்ராஹிம்மின் உறவினரான அலிஷா பார்காரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் அவர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். அலிஷா பார்கர் விசாரணை அதிகாரிகளிடம் தாவூத் இப்ராஹிமின் குடும்ப உறவுகளைப் பற்றி முழுமையாக விவரித்துள்ளார். தாவூத்தின் முதல் மனைவி … Read more

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம்; பிரதமர் மோடி சம்மதிக்க வேண்டும்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், இதற்கு பிரதமர் நரேந்திர மோடி சம்மதிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேண்டுகோள் விடுத்துள்ளார். அல் அரேபியா என்ற தொலைக்காட்சிக்கு ஷெபாஸ் ஷெரீப் நேர்காணல் அளித்துள்ளார். அதில், ”இந்தியாவுடன் ஆழமான, நேர்மையான, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விரும்புகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதற்கு சம்மதிக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையே பற்றி எரியும் பிரச்சினைகளாக உள்ள காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இதன் மூலம் தீர்வு … Read more

சீனாவில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மக்கள் தொகை சரிவு

பீஜிங்: சீனாவின் மக்கள்தொகை கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், தேசிய பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சீனாவில் 1961 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக 2022 ஆம் ஆண்டில் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் சீன மக்கள் தொகை எண்ணிக்கை 1.41260 பில்லியன் ஆக இருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டின் முடிவில் சீனாவில் 1.41178 பில்லியன் மக்கள் மட்டுமே உள்ளதாகவும் சீன தேசிய புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது. 2021 … Read more

அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது ஐ.நா.,| UN lists Pak-based Abdul Rehman Makki as global terrorist after China lifts technical hold

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஐக்கிய நாடுகள்: பாகிஸ்தானை சேர்ந்த அப்துல் ரஹ்மான் மக்கியை, சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா., அறிவித்துள்ளது. இவர், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீதின் உறவினர் ஆவார். லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜமாத் உத் தாவா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவனாக இருந்த ரஹ்மான் மக்கியை தேடப்படும் பயங்கரவாதியாக இந்தியாவும், அமெரிக்காவும் அறிவித்திருந்தது. அப்துல் மக்கி பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்ப்பது, நிதி திரட்டுவது, இளைஞர்களை … Read more

ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை ஆற்றில் வீசிய முகமது அலி.. அவமானங்களை மூலதனமாக்கி உயர்ந்த வீரனின் உண்மை வரலாறு!

குத்துச்சண்டையில், போராடி வென்ற ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை ஆற்றில் வீசி எறிந்த முகமது அலியின் பிறந்தநாள் இன்று. ஏன் இந்த கோபம் என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் லூயிவில் நகரில் 1942ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி பிறந்தார் பின்னாளில் முகமது அலி என்றழைக்கப்பட்ட காஸ்சியஸ் மர்செல்லஸ் கிளே. குத்துச் சண்டை மீதான தீராத காதலால் ஓவியரான தந்தையின் வறுமையையும் மீறி தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தார். பள்ளிக்குச் செல்ல போதிய … Read more

இத்தாலியில் 30 ஆண்டுகளாக தேடப்பட்ட மாபியா தலைவன் கைது| Mafia leader wanted in Italy for 30 years arrested

இத்தாலியில் 30 ஆண்டுகளாக தேடப்பட்ட மாபியா தலைவன் கைது ரோம்: இத்தாலியில் 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த மாபியா கும்பல் தலைவன் மேட்டியோ மெசினா டெனாரோ கைது செய்யப்பட்டார். இவர் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் ஆவார். 1993 முதல் தலைமறைவான இவருக்கு தற்போது வயது 60. மெசினா டெனாரோ, சிசிலியின் கோசா நோஸ்ட்ரா மாபியாவின் தலைவனாக இருந்துள்ளார். ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது போலீசார் மடக்கினர். தற்போது அவருக்கு புற்று நோய் … Read more

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்.. 130 வீடுகள் சேதம்!

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. ஞாயிறுக்கிழமை முதல் அங்கு தொடர்ச்சியாக அடுத்தடுத்து 219 நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. இதில் உயிர்சேதம் குறித்த தகவல்கள் ஏதும் வெளிவராத நிலையில், நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் நிலை குலைந்தன. ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவான ஒரு நிலநடுக்கத்தால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு அலறியடித்தபடி சாலைகளில் தஞ்சமடைந்தனர். Source link

“உக்ரைனுக்கு இங்கிலாந்து அனுப்பும் கனரக பீரங்கிகள் தீப்பற்றி எரியும்” – ரஷ்யா எச்சரிக்கை!

உக்ரைனுக்கு இங்கிலாந்து அனுப்பும் கனரக பீரங்கிகள் தீப்பற்றி எரியும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. வரும் வாரங்களில் சக்திவாய்ந்த 14 சேலஞ்சர், 2 பீரங்கிகள் உள்ளிட்ட தளவாடங்களை அனுப்புவதாக இங்கிலாந்து தெரிவித்திருந்தது. இந்நிலையில், மாஸ்கோவில் பேசிய ரஷ்ய செய்தித் தொடர்பாளர் இங்கிலாந்து, போலந்து போன்ற நாடுகளில் இருந்து வரக்கூடிய புதிய ஆயுதங்கள் போர்க்களத்தில் நிலைமையை மாற்றாது எனத் தெரிவித்தார். Source link

பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கி சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு

பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கியை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. இவர் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீத்தின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2023 ஜனவரி 16 அன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கமிட்டி பல்வேறு பிரகடனங்களையும் பரிசீலனையில் கொண்டு அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. யார் இந்த அப்துல் ரஹ்மான் மக்கி? > அப்துல் ரஹ்மான் மக்கியை ஏற்கெனவே இந்தியா தேடப்படும் பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. அதேபோல் … Read more