ட்விட்டர் ஊழியர்களை எச்சரிக்கும் எலன் மஸ்க்… வாரத்தில் 80 மணி நேரம் வேலை , இலவச உணவு ரத்து என கெடுபிடிகள்

ட்விட்டர் பங்குகளை வாங்கிய கையோடு பாதியளவு ஊழியர்களை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பிய எலன் மஸ்க் எஞ்சியுள்ள ஊழியர்களுக்கு வாரத்தில் 80 மணி நேரம் வேலை இலவச உணவு ரத்து போன்ற கெடுபிடிகளை விதித்துள்ளார். ஊழியர்கள் மத்தியில் பேசிய எலன் மஸ்க், மேலும் நிதி ஆதாரத்தைப் பெருக்காமல் போனால் நிறுவனம் திவால் ஆவதைத் தவிர்க்க முடியாது என்று எச்சரித்தார். கோவிட் காலத்தையொட்டி வீட்டில் இருந்தபடியே பணியாற்றும் சலுகைகள் போன்றவற்றையும் எலன் மஸ்க் ரத்து செய்துள்ளார். Source link

ப்ளூ டிக் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது ட்விட்டர்

ட்விட்டர் நிறுவனத்தின் புதிய திட்டமான மாதம் 8 டாலருக்கு ப்ளூ டிக் அடையாளம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எலன் மஸ்க்கின் கட்டுப்பாட்டில் சென்ற பிறகு வாடிக்கையாளர்களுக்கு மாத சந்தா திட்டம் அறிவித்து ப்ளூ டிக்கிற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. முக்கியப் பிரமுகர்கள், விஐபிக்கள், பத்திரிகையாளர்கள் போன்ற நம்பகமான மனிதர்களை பின்தொடர இந்த ப்ளூ டிக் முக்கிய அடையாளமாகக் கருதப்பட்டது. ஆனால் கட்டணம் செலுத்திய பலர் போலிகணக்கு வைத்து உள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது. போலியான நபர்களின் அடையாளங்கள் அதிகரித்துள்ள … Read more

நேபாளத்தில் கொத்தடிமையாக இருந்த 38 இந்தியர்கள் மீட்பு| Dinamalar

காத்மாண்டு நேபாளத்தில் உள்ள செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 38 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். நம் அண்டை நாடான நேபாளத்தின் ரவ்டஹட் என்ற இடத்தில் செங்கல் சூளைகள் இயங்குகின்றன. இங்கு, நம் நாட்டின் உத்தர பிரதேசம் மற்றும் பீஹார் மாநிலங்களைச் சேர்ந்த பலர் வேலை செய்கின்றனர். இதில், ஒரு சூளையில் பலர் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸ் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து, தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அங்கு கொத்தடிமைகளாக இருந்த உத்தர … Read more

அமேசான் நிறுவனத்திலும் பணிநீக்கம்| Dinamalar

புதுடில்லி : ‘டுவிட்டர், மைக்ரோசாப்ட்’ ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து, ‘அமேசான்’ நிறுவனமும் பணிநீக்க நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அமெரிக்க மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான், அதன் லாபமில்லாத பிரிவுகளில் ஆள்குறைப்பு நடவடிக்கைகளை துவங்கி உள்ளது.இந்நிறுவனம் புதிதாக நபர்களை பணியமர்த்துவதை நிறுத்தி வைத்திருப்பதாக, கடந்த வாரம் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில், தற்போது ஆள்குறைப்பிலும் இறங்கி உள்ளதாக தெரியவந்துள்ளது.இந்நிறுவனத்தின் ‘ரோபோடிக்ஸ்’ பிரிவில் உள்ள அனைவரும் வேலையிழப்புக்கு ஆளாகி இருப்பதாக கூறப்படுகிறது. இப்பிரிவில் 3,000த்துக்கும் அதிகமானோர் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.மேலும், அதிக … Read more

சீன விமானப்படையின் தினத்தையொட்டி ஷென்சோ-14 குழுவினர் விண்வெளியில் இருந்து வாழ்த்து..!

சீனா தங்கள் நாட்டிற்கு வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் காலத்தை குறைத்துள்ளது. பொருளாதாரம் மற்றும் சமூக இடையூறுகளைக் குறைப்பதற்காக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச பயணிகள் சீனா புறப்படுவதற்கு முந்தைய சோதனைகள் இரண்டிலிருந்து ஒன்றாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், கட்டாய தனிமைப்படுத்தல் 7 நாட்களில் இருந்து 5 நாட்களாகவும், அதனைத் தொடர்ந்து 3 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் நிரந்தர இருப்பிடம் இல்லாத பயணிகள் ஹோட்டல்களில் 8 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link

‘பிடித்தமான பட்டர் சிக்கன்’ – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும், இந்திய உணவும்!

ஜெருசலேம்: இஸ்ரேலின் நீண்டகால பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் விருப்பமான உணவுப் பட்டியலில் இந்திய உணவுகளுக்கு எப்போது முதலிடம் உண்டு என்று கூறப்படுகிறது. அந்த வகையில் சமீபத்திய பொதுத் தேர்தலில் வெற்றியைப் பதிவு செய்திருக்கும் நெதன்யாகுவின் இந்திய உணவின் மீதான காதலை டெல் அவிவ்வில் உள்ள இந்திய ஓட்டல் உரிமையாளர் ஒருவர் விவரித்திருக்கிறார். நெதன்யாகு இஸ்ரேலில் உள்ள ‘தந்தூரி டெல் அவிவ்’ ஓட்டலில் பட்டர் சிக்கன் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். ஆம்… வாரத்திற்கு இரண்டு முறையாவது பட்டர் சிக்கனை … Read more

சார்லஸ் மன்னரின் மீது வீசப்பட்ட முட்டை; வீசியவருக்கு கிடைத்த தண்டனை என்ன தெரியுமா!

கிங் சார்லஸ் மீது முட்டைகள் வீசப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 23 வயதான பேட்ரிக் தெல்வெல், யார்க் நகரில் அரசர் கிங் சார்லஸ் மற்றும் ராணி, கமிலா மீது முட்டைகளை வீசியதற்காக போலிசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது அவருக்கு சிறப்பு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் பேட்ரிக் கைது செய்யப்பட்டார். கிங் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா மீது முட்டைகளை வீசிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நபருக்கு பொது … Read more

அரச பொறுப்புகளை துறந்தார் நார்வே இளவரசி! மாற்று மருத்துவம் குறித்த ஆய்வில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு

ஓஸ்லோ(நார்வே), நார்வே இளவரசி மார்த்தா லூயிஸ், பிரபல ஆப்பிரிக்க அமெரிக்க ஹாலிவுட் ஆன்மீக ஆசிரியர் டியூரெக் வெர்ரெட் என்பவரை காதலித்து வருகிறார். இந்நிலையில், தனது அரச கடமைகளில் இருந்து விலகுவதாக நார்வே இளவரசி மார்த்தா லூயிஸ் அறிவித்துள்ளார். கேன்சர் போன்ற தீவிர நோய்கள் குறித்து ஆய்வு செய்யவும், மாற்று மருத்துவத்தில் ஈடுபட உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். இளவரசி மார்த்தா லூயிஸ்-ஆன்மீக ஆசிரியர் டியூரெக் வெர்ரெட் ஜோடி மாற்று மருத்துவம் குறித்த ஆய்வில் ஈடுபட … Read more

சீனாவில் விமானங்களின் சாகச நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு ரசிப்பு..!

தென் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. சுகாயில் நடைபெற்று வரும் 14-வது சர்வதேச விமான மற்றும் விண்வெளி கண்காட்சியின்போது இந்த விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மக்கள் விடுதலை இராணுவத்தின் விமானப்படையின் கீழ் உள்ள ரெட் ஈகிள் ஏரோபாட்டிக் குழுவினர் நடத்திய வான் சாகசங்களை பார்வையாளர்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.  Source link

பெல்ஜியம்: பயங்கரவாதி கத்திக்குத்து தாக்குதல் – போலீஸ் பலி

பிரசில்ஸ், பெல்ஜியம் தலைநகர் பிரசில்சின் ஷர்க்பீக் பகுதியில் நேற்று இரவு 2 போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு கத்தியுடன் வந்த நபர் போலீசார் மீது சரமாரி தாக்குதல் நடத்தினார். பணியில் இருந்த போலீசின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். இதில், அந்த போலீஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். மற்றொரு போலீஸ் மீதும் அந்த நபர் தாக்குதல் நடத்த முற்பட்டார். அப்போது, அந்த போலீஸ் அதிகாரி தான் வைத்திருந்த துப்பாக்கியை … Read more