சீன அச்சுறுத்தல் எதிரொலி: கட்டாய ராணுவ சேவையை ஓராண்டாக உயர்த்த தைவான் முடிவு

தைபே: சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து தங்கள் நாட்டு இளைஞர்களுக்கான கட்டாய ராணுவ சேவைக் காலத்தை ஓராண்டாக உயர்த்த தைவான் முடிவு செய்துள்ளது. தைவான் எல்லைப் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக சீனா ராணுவம் அவ்வப்போது ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக தைவான் – சீன எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், தைவானில் காட்டாய ராணுவ சேவைக் காலத்தை ஓர் ஆண்டாக உயர்த்த அந்நாட்டு அதிபர் சாய் இங்-வென் முடிவு … Read more

சீனாவில் கடும் பனிமூட்டம் காரணமாக 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து..!

சீனாவின் ஹெனான் மாகாணத்தில், கடும் பனிமூட்டம் காரணமாக 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. செங்சுவு நகரில், மஞ்சள் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. பனிமூட்டத்தால் சாலையில் தெரிவுநிலை குறைந்து, கார்கள் மற்றும் லாரிகள் ஒன்றன் மீது ஒன்று மோதி சேதமடைந்த வீடியோக்களை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் சிக்கி பலர் காயமடைந்ததாகவும், மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

ஓராண்டு கட்டாய ராணுவ சேவை தைவான் அரசு புதிய முடிவு| One-year compulsory military service is the new decision of the Taiwanese government

தைபே தைவான் நாட்டில் இளைஞர்களுக்கான கட்டாய ராணுவ சேவையை ஓராண்டாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கிழக்காசிய நாடான தைவானை, நம் அண்டை நாடான சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தைவானுக்கு வெளிநாட்டு தலைவர்கள், பிரதிநிதிகள் வந்து சென்றால், உடனே அந்நாட்டை நோக்கி போர் விமானங்களை அனுப்பி சீனா மிரட்டி வருகிறது. நேற்று முன்தினம், 24 மணி நேரத்துக்குள் 71 போர் விமானங்கள், ஏழு போர்க்கப்பல்களை தைவானுக்கு அனுப்பி அச்சுறுத்தியது. இதையடுத்து, சீனாவை எதிர்கொள்ள தைவான் ராணுவமும் தயார் … Read more

2023 Predictions: அமெரிக்க அதிபர் எலான் மஸ்க், ஜெர்மனி – பிரான்ஸ் போர் ; கணித்தது யார் தெரியுமா?

2023 Predictions: 2023ஆம் ஆண்டு இன்னும் சில நாள்களில் பிறக்க உள்ளது. புத்தாண்டில் நாட்டிற்கும், வீட்டிற்கும் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு செழித்து வாழ வேண்டும் என்ற வழமையான வேண்டுதல்கள் ஒருபுறமிருக்க, தற்போதைய நிலைமையை விட மோசமான நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளது என்ற கணிப்பும் பல்வேறு தரப்பில் இருந்து வெளியாகி வருகிறது.  அந்த வகையில், ரஷ்ய அதிபர் புதினுக்கு மிகவும் நெருக்கமானவர் டிமிட்ரி மெட்வெடேவ். தற்போது, ரஷ்யாவின் ராணுவத்துறையை மேற்பார்வை செய்யும் ஒரு அமைப்பின் தலைமைப்பொறுப்பில் இருக்கும் இவர், … Read more

சீனாவில் என்ன தான் நடக்கிறது? 8ஆம் தேதி முதல்.. விஷப் பரீட்சை!

சீனாவில் வூஹான் நகரில் 2019ஆம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். 2020, 2021 ஆகிய இரு ஆண்டுகள் முழுவதும் கொரோனா உலகையே தலைகீழாக புரட்டிப் போட்டது. 2022ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் மூன்றாவது அலையின் பாதிப்பு இருந்தது. உடல் நலம் பாதிக்கப்படுதல், உயிரிழப்புகள், ஒரு பக்கம் என்றால் பொருளாதார பாதிப்பு மிக அதிகளவில் இருந்தது. கொரோனாவாலும் அதன் காரணமாக போடப்பட்ட பொது முடக்கத்தாலும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து … Read more

துவம்சம் செய்யும் பனி சூறாவளி: உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி| US Blizzard: Niagara Falls Turn Into Icy, Winter Wonderland

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: அமெரிக்காவை நான்கு நாட்களாக துவம்சம் செய்து வரும் பனி சூறாவளிக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஐ தாண்டியது. நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதியும் பனியில் உறைந்து போய் காணப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அமெரிக்காவில் கடந்த நான்கு நாட்களாக பனி சூறாவளி வீசுகிறது. நாடு முழுவதும் வெப்பநிலை மைனஸ் டிகிரியை தொட்டிருக்கும் நிலையில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடும் பனிப்பொழிவால், வீடுகள், கட்டடங்கள், … Read more

அமெரிக்காவில் நிலவும் மோசமான வானிலையால், 2வது நாளாக 3,800 விமானங்கள் ரத்து..!

அமெரிக்காவில் நிலவும் மோசமான வானிலையால், 2வது நாளாக 3,800 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பனிப்புயலின் கோரத்தாண்டவத்தால் நியூயார்க் மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரமான பஃபலோவில் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பனிக்கட்டிகள் குவிந்து கிடக்கின்றன. வீடுகள், மரங்கள், வாகனங்கள் என அனைத்தும் வெண்பட்டுப் போர்த்தியது போன்று காட்சியளிக்கின்றன. பனிப்புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 60ஆக உயர்ந்துள்ளது. Source link

விலை உச்சவரம்பை ஏற்கும் நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய தடை விதித்த ரஷ்யா..!

கச்சா எண்ணெய் விலை உச்சவரம்பை ஏற்கும் நாடுகளுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி முதல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய ரஷ்யா தடை விதித்துள்ளது. உக்ரைனுடன் போரில் ஈடுபட்டுவரும் ரஷ்யாவின் வருவாயை கட்டுப்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியம், ஜி7 நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா இணைந்து ரஷ்ய கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 60 டாலர் விலை உச்சவரம்பை நிர்ணயித்துள்ளன. இந்த விலை உச்சவரம்பை ஏற்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு எண்ணெய் விற்பனையை தடை செய்யும் ஆணையை … Read more

சீனா முழுவதும் மருத்துவமனைகளில் 16,000-க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் அமைப்பு..!

சீனாவில், அதிகரித்து வரும் கொரோனா பரவலை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுக்கும் முயற்சியாக நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்நாட்டில், உருமாற்றமடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் வேகமெடுத்து மக்களிடையே பரவி வருகிறது. மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சைக்காக காத்துக் கிடக்கும் சூழலை தடுக்கும் பொருட்டும், நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளித்து தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் நாடு முழுவதும் 16 ஆயிரம் காய்ச்சல் கிளினிக்குகள் திறக்கப்பட்டிருப்பதாக, அந்நாட்டு தேசிய சுகாதார … Read more

தென் கொரியாவில் ட்ரோன்களில் நிபுணத்துவம் வாய்ந்த ராணுவப் பிரிவு உருவாக்கப்படும் – அதிபர் யூன் சுக்-யோல்

தென் கொரியாவில் ட்ரோன்களில் நிபுணத்துவம் வாய்ந்த ராணுவப் பிரிவு உருவாக்க இருப்பதாக அதிபர் யூன் சுக்-யோல் அறிவித்துள்ளார். 5 வடகொரிய ட்ரோன்கள் நேற்று முன்தினம் தென் கொரியா எல்லைக்குள் நுழைந்ததை அடுத்து யூன் சுக் இதனை அறிவித்துள்ளார். தலைநகர் சியோல் உட்பட தென் கொரியாவின் பல்வேறு நகரங்களில் சுமார் 5 மணி நேரம் ட்ரோன்கள் பறந்திருப்பது, ராணுவத்தின் தயார் நிலை மற்றும் பற்றாக்குறையை காட்டுவதாக அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்த யூன் சுக், ட்ரோன் பிரிவை உருவாக்கிய பிறகு … Read more