இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அடுத்த வாரம் நாடு திரும்ப உள்ளதாக தகவல்

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அடுத்த வாரம் நாடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொருளாதார நெருக்கடியால் ராஜபக்சே அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் வலுத்ததை அடுத்து கடந்த மாதம் ராணுவ விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறிய கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு சென்றார். அங்கிருந்து சிங்கப்பூருக்கும் பின்னர் தாய்லாந்திற்கும் சென்று தஞ்சமடைந்தார். இந்நிலையில், வரும் 24ம் தேதி கோத்தபய ராஜபக்சே நாடு திரும்ப உள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதரும் ராஜபக்சேவின் உறவினருமான உதயங்க … Read more

அதிக குழந்தைகள் பெத்துக்கிறவங்களுக்கு இனிமே ராஜமரியாதை தான்… இது எப்படி இருக்கு?

உலக அளவில் மக்கள்தொகை அதிகம் கொண்ட நாடுகளில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும தொடர்ந்து இருந்து வருகின்றன. உலகிவ் உள்ள கிட்டதட்ட 200க்கும் மேற்பட்ட நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் மூன்று ஒரு பங்கு இவ்விரு நாடுகளில் மட்டுமே உள்ளதால், இந்த மக்கள் வளத்தையும், அவர்களை கட்டிக்காப்பதிலும் சீனா மற்றும் இந்திய நாடுகளின் அரசுகள் பெரும் சவாலை சந்தி்த்து வருகின்றன என்றுதான் சொல்ல வேண்டும். நாடு இப்படியே மக்கள்தொகையில் பல்கி பெருகி போனால் சரிப்பட்டு வராது என்று … Read more

மீண்டும் ஆயுத சோதனை: 2 க்ரூஸ் ஏவுகணைகளை ஏவியது வட கொரியா

சியோல்: வட கொரியா புதன்கிழமை இரண்டு க்ரூஸ் ஏவுகணைகளை ஏவியதாக சியோலின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இந்த ஆண்டு ஆயுத சோதனைகளில் பியோங்யாங் சாதனை படைத்திருந்த நிலையில், சுமார் ஒரு மாத காலம் எந்த சோதனையும் செய்யப்படாமல் இருந்தது. எனினும், அந்த மந்தநிலையை தற்போதைய ஆயுத சோதனை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது என்று தென் கொரியா குறிப்பிட்டுள்ளது. “இன்று அதிகாலையில், தென் பியோங்கன் மாகாணத்தின் ஓஞ்சோனில் இருந்து வட கொரியா இரண்டு கிரூஸ் ஏவுகணைகளை மேற்குக் கடலில் … Read more

“தலிபான்கள் ஆட்சியில் 24 மணி நேரமும் வீட்டில் இருக்கிறோம்” – தொடரும் ஆப்கன் பெண்களின் துயர்

காபூல்: “தலிபான்கள் ஆட்சியில் ஓவ்வொரு நாளும் நாங்கள் பயத்திலேயே வாழ்த்து கொண்டிருக்கிறோம்” என்று ஆப்கன் பெண்கள் குரல் கொடுத்து வருகின்றனர். கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து பல்வேறு சீர்திருத்தங்களை அவர்கள் அறிமுகம் செய்து வருகின்றனர். அந்த வகையில் பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை அவர்கள் விதித்துள்ளனர். தலிபான்கள் ஆட்சிக்கு எதிராக தலைநகரில் பெண்கள் ஒரு வருடமாக போராடி வருகின்றனர். போராட்டம் நடத்தும் பெண்கள், தலிபான்களால் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகி … Read more

கென்ய அதிபர் தேர்தலில் வில்லியம் ரூட்டோ வெற்றி; வன்முறை வெடித்ததால் பதற்றம்

நைரோபி: கென்யாவின் அதிபராக வில்லியம் ரூட்டோ வெற்றி பெற்ற நிலையில், அந்நாட்டில் வன்முறை வெடித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது. கென்யாவில் கடந்த வாரம் நடந்த அதிபர் பொதுத் தேர்தலில் 50.49% வாக்குகள் பெற்று வில்லியம் வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் பிரதமரும், மூத்த அரசியல் தலைவருமான ரெய்லா ஒடிங்கா 48.85% வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில், தேர்தலில் முறைக்கேடு நடந்துள்ளதாக ரெய்லா ஒடிங்கா குற்றம் சாட்டினார். இந்தத் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். … Read more

இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர நிலை உத்தரவு முடிவுக்கு கொண்டுவரப்பட உள்ளதாக அதிபர் அலுவலகம் தகவல்

இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர நிலை உத்தரவு முடிவுக்கு கொண்டுவரப்பட உள்ளதாக அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்நாட்டு மக்களின் போராட்டதை கட்டுப்படுத்த அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அவசர நிலையை பிறப்பித்தார். தற்போது போராட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டு சுமூகமான நிலை உள்ளதாக கூறப்படுகிறது. எனவே நாளையுடன் முடிவடையும் அவசர நிலை உத்தரவை மீண்டும் நீட்டிக்க வாய்ப்பில்லை என அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.   Source link

உக்ரைன் போரை நீட்டிக்க விரும்புவதுடன் பிற நாடுகளிலும் போரை தூண்டும் அமெரிக்கா: புதின் குற்றச்சாட்டு

மாஸ்கோ: உக்ரைன் போரை நீட்டிக்க விரும்பும் அமெரிக்கா உலகின் பிற நாடுகளிலும் போரை தூண்டுகிறது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குற்றம்சாட்டி உள்ளார். ரஷ்யாவில் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கை காணொலி மூலம் அந்நாட்டு அதிப்ர விளாடிமிர் புதின் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: உக்ரைன் நிலவரத்தைப் பார்த்தால், போர் நீடிக்க வேண்டும் என அமெரிக்கா விரும்புவதைக் காட்டுகிறது. இதுபோலவே, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் போரைத் தூண்ட அமெரிக்கா முயற்சித்து … Read more

அமெரிக்கா – ரஷ்யா இடையே அணு ஆயுத போர் நடந்தால் 500 கோடி மக்கள் உயிரிழப்பர்: ஆய்வில் தகவல்

நியூயார்க்: அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே அணு ஆயுதப் போர் நடந்தால் 500 கோடி மக்கள் உயிரிழப்பர் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் புகழ்பெற்ற ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், 6 வெவ்வேறு அணுசக்தி போர் சூழ்நிலைகளின் விளைவுகளை ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து, நேச்சர் ஃபுட் இதழில் அந்த ஆய்வு முடிவுகள் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஒரு முழு அளவிலான அணு … Read more

70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வெப்பம்.. புகழ்பெற்ற கார்டா ஏரி பாறைகற்கள் வெளிப்பட்டது..!

இத்தாலியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சிர்மியோனில் கார்டா ஏரி கரையோர பகுதிகளில் பாறைகற்கள்  வெளிப்பட்டது. 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெப்ப அலை வீசி வருவதால், மோசமான வறட்சியை எதிர்கொண்டுள்ளது. வடக்கு இத்தாலியில் உள்ள பல ஏரிகள் மற்றும் ஆறுகள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கார்டா ஏரியில் 20 முதல் 25 மீட்டர் நீளத்திற்கு கரையோர பகுதிகளில் பாறைகற்கள் வெளிப்பட்டுள்ளன. Source link

இனி அனைவருக்கும் நாப்கின் இலவசம் : உலகில் முதன்முதலாக சட்டம் இயற்றிய நாடு

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம், The Period Products (Free Provision) என்ற சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் கடந்த திங்கட்கிழமையில் இருந்து அமலுக்கு வந்துள்ளது. இந்தச் சட்டத்தின் மூலம், மாதவிடாய் காலத்தில் தேவையான பொருட்களை வழங்குவது அரசு அதிகாரிகள், கல்வி நிறுவனங்களின் சட்டப்பூர்வ கடமையாகி உள்ளது. பள்ளி, கல்லூரிகள், மற்றும் பொது இடங்களில் உள்ள கழிவறைகளிலும் இவை இலவசமாக வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதோடு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்துப் பாலினத்தவரும் அணுகும் … Read more