ரஷ்ய பாலம் கடும் சேதம்| Dinamalar

கார்கிவ்-ரஷ்யாவையும், உக்ரைனில் இருந்து இணைக்கப்பட்ட கிரீமியாவையும் இணைக்கும் பாலத்தில் எரிபொருள் நிரப்பிய டிரக் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய பாலம் கடுமையாக சேதமடைந்தது; ரயில் பாதையும் சேதமடைந்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த, பிப்., 25ல் ரஷ்யா போர் தொடுத்தது. ஏழு மாதங்களையும் கடந்து போர் நடந்து வருகிறது.உக்ரைனில், தன் ராணுவத்தின் ஆதரவுடன், பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த நான்கு பிராந்தியங்களை, ரஷ்யா சமீபத்தில் தன்னுடன் இணைத்து கொண்டது. இதைத் தொடர்ந்து, உக்ரைன் மீதான தாக்குதலை … Read more

வட கொரியாமீண்டும் ஏவுகணை சோதனை: ஜப்பான் புகார்| Dinamalar

சீயோல்: வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. வட கொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் 4 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதற்கு போட்டியாக தென்கொரியாவும் 2 ஏவுகணை சோதனைகளை நடத்தியதில் ஹியூமூ-2 என்கிற குறுகிய தூர ‘பாலிஸ்டிக் ‘ ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் நேற்று வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதாக ஜப்பான் பிரமதர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து … Read more

கோவில் சிலை உடைப்பு: வங்கதேசத்தில் அட்டூழியம்| Dinamalar

டாக்கா-நம் அண்டை நாடான வங்கதேசத்தில், பிரசித்தி பெற்ற கோவிலில் இருந்த காளி சிலை, விஷமிகளால் உடைக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வங்கதேசத்தில், ஹிந்துக்கள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். இங்கு ஹிந்துக்களின் வழிபாட்டு தலங்கள் அடிக்கடி விஷமிகளால் தாக்கப்படுவது வழக்கமாக உள்ளது. கடந்தாண்டு தசரா பண்டிகையின் போது, சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியை நம்பி, ஹிந்து கோவில் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது. கடந்த ஆகஸ்டில் டாக்காவில் … Read more

இன்று உலக தபால் தினம்-| Dinamalar

தொழில்நுட்ப வளர்ச்சியால் ஒருவரை தொடர்பு கொள்வதற்கு இன்று இ–மெயில், இன்டர்நெட், அலைபேசி என பல தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்டன. இதற்கு முன், தகவல் பரிமாற்றத்துக்கு தபால் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. உலக தபால் அமைப்பு 1874ல் சுவிட்சர்லாந்தில் தொடங்கப்பட்டது. 1969ல் இதை நினைவுபடுத்தும் விதமாக அக்.,9, உலக தபால் தினமாக அறிவிக்கப்பட்டது. இதில் இந்தியா உள்ளிட்ட 150 நாடுகள் உள்ளன. தபால் துறையின் சேவைகளை பாராட்டும் விதமாகவும், திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் அக்.,9ல் உலக தபால் தினம் … Read more

வங்கதேசத்தில் ஹிந்து கோயிலில் சிலை சேதம்: மர்ம நபருக்கு வலைவீச்சு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் தாகா: வங்கதேசத்தின் ஜெனைதா பகுதியில் உள்ள ஹிந்து கோயிலில் இருந்த கடவுள் சிலையை சேதப்படுத்தியவர்கை ளபோலீசார் தேடி வருகின்றனர். நேற்று காலை தவுதியா கிராமத்தில், இருந்த காளி கோயிலில் சிலைகள் பல துண்டுகளாக உடைக்கப்பட்டு கிடந்தது. நள்ளிரவு கோயிலை சேதப்படுத்தி உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சிலையை சேதப்படுத்தி, சற்று தொலைவில் வீசிவிட்டு சென்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மர்மநபர்களை தேடி வருகின்றனர். … Read more

நேபாள அதிபர் மருத்துவமனையில் அனுமதி| Dinamalar

காத்மண்டு: உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து நேபாளம் நாட்டு அதிபர் பித்யா தேவி பண்டாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேபாளம் அதிபராக இருப்பவர் பித்யா தேவி பண்டாரி (வயது 61). நேற்று திடீரென கடும் காய்ச்சல், ஏற்பட்டது. இதையடுத்து காத்மண்டுவில் உள்ள மகராஜ்கஞ்ச் பகுதியில் அமைந்த திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்த்து வருகின்றனர். காத்மண்டு: உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து நேபாளம் நாட்டு அதிபர் பித்யா தேவி பண்டாரி மருத்துவமனையில் … Read more

இஸ்ரேலில் இந்திய இளைஞர் கத்தியால் குத்திக் கொலை – 8 சிறார்கள் கைது..

இஸ்ரேலில் இந்திய இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். வடகிழக்கு இந்தியாவில் வாழும் யூத இனத்தை சேர்ந்த 18 வயதான இயோல் லெகின்ஹல்  கடந்த ஓராண்டுக்கு முன்பு தனது குடும்பத்துடன் இஸ்ரேலில் குடிபெயர்ந்தார். நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு திரும்பியபோது நேரிட்ட சண்டையில் அவர் குத்தி கொல்லப்பட்டுள்ளார். இதுதொடர்பாக 13 முதல் 15 வயது வரையிலான சிறார்கள் 8 பேரை இஸ்ரேல் போலீஸ் கைது செய்திருப்பதாக டைம்ஸ் ஆப் இஸ்ரேல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. … Read more

மாஷா அமினி உடல்நல பாதிப்பால் இறந்தார்: ஈரான் அரசு விளக்கம்

தெஹ்ரான்: “மாஷா அமினி உடல் நலக்குறைவால்தான் உயிரிழந்தார்” என்று ஈரான் அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து ஈரான் அரசு வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், “மாஷா அமினியின் மரணம், அவரது தலை மற்றும் முக்கிய உறுப்புகளில் அடிப்பட்டதால் ஏற்படவில்லை. எட்டு வயதில் அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மாஷாவின் மரணம் ஏற்பட்டுள்ளது. இதற்கான ஆதாரம் சிடி ஸ்கேன்களில் தெளிவாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஈரான் அரசின் இந்த விளக்கத்தை போராட்டக்காரர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. … Read more

அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா தயாராகி வருகிறது: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

கீவ்: “எங்கள் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா தயாராகி வருகிறது” என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிபிசி நேர்காணலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, “எங்கள் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா தயாராகி வருகிறது. அவர்கள் இது தொடர்பாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவார்களா என்றால், அது எனக்கு தெரியாது. எனினும், இது ஆபத்தானது. என்னை பொறுத்தவரை அணு ஆயுதங்களை பற்றி பேசுவதே ஆபத்தானது. ரஷ்யாவின் அணு … Read more

Video: காரில் பர்கர் சாப்பட்டது குத்தமா… துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்த போலீஸ் – வேலை காலி…

அமெரிக்காவின் சான் அன்டோனியோ நகரில், மெக்டோனால்டு (McDonald’s) உணவகத்தின் கார் பார்க்கிங்கில் எரிக் கன்டூ என்ற 17 வயது இளைஞர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது  காரில் அமர்ந்து பர்கர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஜேம்ஸ் பெர்ன்னாட் என்ற காலவர், எரிக்கிடம் விசராணை நடத்தியுள்ள்ளார்.  விசாரணையின் போது, அந்த இளைஞர் காவலரை தாக்கிவிட்டு தனது காரில் தப்பிச்சென்றதாக முதலில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அப்போது, அந்த இளைஞர் தாக்க முற்பட்டபோது, அந்த காவலர் தனது துப்பாக்கியை … Read more