nobel peace prize 2022: இந்தியாவுக்கு ஏமாற்றம்!

உலக அளவில் உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச அளவில் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு துறைவாரியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் 3, 4, 5 ஆம் தேதிகளில் முறையே மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியல் துறைகளுக்கான நோபல் பரிசுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக நேற்று (அக்டோபர் 6) இலக்கியத்துக்கான நோபல் … Read more

ஈரான் மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா

வாஷிங்டன்: மாஷா அமினி மரணத்தைத் தொடர்ந்து ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் நடத்திவரும் குடிமக்கள் மீது வன்முறையில் ஈடுபட்டு வரும் ஈரான் மீது மேலும் பல பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. மாஷா அமினியின் மரணம் காரணமாக, ஈரானில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. போராட்டத்தைக் கட்டுப்படுத்த பலரை ஈரான் அரசு கைது செய்துள்ளது. 70-க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். மேலும், ஈரானில் இணையமும் முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாஷா அமினியின் மரணத்துக்கும், ஈரானில் போராட்டக்காரர்கள் மீது நடக்கும் வன்முறைகளுக்கு … Read more

ஆஸ்திரேலியாவின் சிறந்த மாணவர்கள் விருது பெற்ற இந்திய மாணவிகள்

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவில் விக்டோரியன் பிரீமியர் விருதை வென்று இந்திய மாணவிகள் பெருமை சேர்த்துள்ளனர். 2021-22ம் ஆண்டிற்கான சர்வதேச மாணவர் என்ற விருதை திவ்யங்கனா ஷர்மா என்ற இந்திய மாணவி வென்றுள்ளார். இதே கல்வி ஆண்டில் ஆராய்ச்சி பிரிவில் சிறந்த மாணவர் விருதை வென்றார் ரித்திகா சக்சேனாப் என்ற இந்திய மாணவி. இந்த விருதுகள் விக்டோரியாவில் உள்ள சிறந்த சர்வதேச மாணவர்களை பாராட்டும் விக்டோரியா அரசாங்கத்தின் முன்முயற்சியாகும். இதில் ரித்திகா தனது 18 வயதில் மெல்போர்னுக்கு குடிபெயர்ந்தார், இப்போது ஸ்டெம் … Read more

'இந்து வெறுப்புக்கு பிரிட்டனில் இடமில்லை' – லண்டன் நவராத்திரி விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் பேச்சு

லண்டன்: பிரிட்டனில் இந்துஃபோபியாவுக்கு இடமில்லை என்று பிரிட்டன் எதிர்க்கட்சித் தலைவர் கேர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவின் மிகப்பெரிய நவராத்திரி விழாவாக அறியப்படும் லண்டன் நவராத்திரி விழாவில் லேபர் கட்சித் தலைவர் உரையாற்றினார். விழாவில் நூற்றுக்கணக்கான பிரிட்டன் வாழ் இந்தியர்களும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய கேர் ஸ்டார்மர், “நம் நாட்டில் நிறைய பேர் மத ரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். சமீப ஆண்டுகளாக வெறுப்புக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இங்கு நடக்கும் பிரிவினை அரசியல் சோர்வைத் தெருகிறது. மேலும் … Read more

பாகிஸ்தானில் பஸ் – லாரி மோதல்: பலி 11

கராச்சி: பாகிஸ்தானில் பயணியர் பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ௧௧ பேர் பலியாகினர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தின் ஜம்ஷோரோவிலிருந்து கராச்சி நோக்கி பயணியர் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி மீது பஸ் நேருக்கு நேர் மோதியதில் மூன்று பெண்கள் இரண்டு குழந்தைகள் உட்பட ௧௧ பேர் உயிரிழந்தனர். காயமடைந்த ௧௩ பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.பஸ் டிரைவர் துாங்கியதால் எதிரே வந்த லாரி மீது மோதி … Read more

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம் – இந்தியா புறக்கணிப்பு!

ஜெனிவா, இலங்கையில் அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே, 2009-ல் நடந்த இறுதிக் கட்ட போரின்போது, மனித உரிமைகள் மீறப்பட்டதாக புகார் எழுந்தது. ‘இது தொடர்பாக, இலங்கைக்கு எதிராக இனப் படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என, ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கடந்த 2012 – 2014 ல், அப்போது அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே ஆட்சியின்போது, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், அந்த தீர்மானங்கள் இரண்டு முறை தோல்வி அடைந்தன. … Read more

"எதிர்ப்பு குரல்கள் எரிமலையாக வெடித்து சிதறும்" – ஈரான் பெண்களுக்கு ஆதரவு தெரிவித்த நடிகை பிரியங்கா சோப்ரா!

வாஷிங்டன், ஹிஜாப் அணியாத காரணத்தினால் ஈரானிய இளம் பெண் மஹ்சா அமினியை போலீசார் தாக்கியதில், அவர் உயிரிழந்தார். இதையடுத்து ஈரானில் பெண்கள், தங்களது உரிமைக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரானிய பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, ஈரான் பெண்களுக்கு ஆதரவாக நடிகை பிரியங்கா சோப்ரா களமிறங்கியுள்ளார். முன்னதாக ஜூலியட் பினோச் மற்றும் இசபெல் ஹப்பர்ட் உள்ளிட்ட முன்னணி பிரெஞ்சு நடிகைகள் தங்களது முடியை வெட்டி ஈரானிய பெண்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். பிரியங்கா சோப்ராவும் சமூக … Read more

பாகிஸ்தானில் கைதிகளை பார்க்க வரும் பெண்கள் பலாத்காரம்| Dinamalar

லாகூர்: பாகிஸ்தான் சிறையில் உள்ள கைதிகளை பார்க்க வரும் பெண்களை சிறை ஊழியர்கள் பலாத்காரம் செய்த கொடுமை அரங்கேறியுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் அட்டோக் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு உள்ள கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் உள்ளிட்ட பெண்களை, சிறை பணியாளர்கள் பலாத்காரம் செய்துள்ளனர் என மாநில உளவு துறை மையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.அட்டோக் சிறையில் போதை பொருள் பயன்பாடும் அதிகமாக உள்ளது. மாபியா கும்பலைச் சேர்ந்தவர்கள் அதிகமாக அடைக்கப்பட்டுள்ளனர். சக்தி வாய்ந்தவர்களாக அவர்கள் சிறையில் வலம் … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.51 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 கோடியே 55 லட்சத்து 47 ஆயிரத்து 319 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே … Read more

உக்ரைன் போர் | அணு ஆயுதம் குறித்து புதின் ஜோக் அடிக்கவில்லை: பைடன் எச்சரிக்கை

வாஷிங்டன்: உக்ரைன் போரில் அணு ஆயுதம் பயன்படுத்தப்போவதாக ரஷ்ய அதிபர் புதின் பேசுவதை வெறும் பகடி என்று கடந்து செல்ல முடியாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். மான்ஹாட்டன் நகரில் ஊடக உலகின் ஜாம்பவானான ரூபர்ட் மர்டாக் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார். ஜனநாயகக் கட்சிக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பேசிய பைடன், 1962க்குப் பின்னர் அமெரிக்கா மிகப் பெரிய அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை. அப்போது … Read more