எழுச்சி தரும் எழுத்தறிவு! :இன்று உலக எழுத்தறிவு தினம் -| Dinamalar

ஒரு மொழியில் புரிதலுடன் சரியாக பேச, எழுத தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர். இது ஒருவரின் அடிப்படை உரிமை. எழுத்தறிவு பெற்றால் தான், ஜனநாயகத்தில் உரிமைகளை நிலை நாட்ட முடியும். உலகில் 77 கோடி பேர் எழுத்தறிவு அற்றவர்களாக உள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள். ஒருவர் சமூக, பொருளாதார வளர்ச்சி பெறுவதற்கு எழுத்தறிவு அவசியம். உலகில் பாகுபாடின்றி அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஐ.நா., சார்பில் 1967 முதல் செப்., 8ல் உலகஎழுத்தறிவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.’எழுத்தறிவு … Read more

பிரிட்டன் பிரதமரின் முதல் உரை…நாட்டு மக்களுக்கு அளி்த்த மூன்று வாக்குறுதிகள்!

பிரிட்டனின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் லிஸ் டிரஸ் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கை தோற்கடித்தார். பிரிட்டன் சட்டப்படி கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவருக்கே நாடடின் பிரதமர் பொறுப்பும் அளிக்கப்படும். இதன்படி பிரிட்டனின் புதிய பிரதமராகவும், நாட்டின் மூன்றாவது பெண் பிரதமராகவும் லிஸ் டிரஸ் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இங்கிலாந்து ராணியான இரண்டாவது எலிசபெத் அவரை பிரதமராக முறைப்படி நியனம் செய்தார். பிரதமர் பொறுப்பை ஏற்றபின் லண்டன் திரும்பியதும் … Read more

2024-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியில்லை: ஹிலாரி கிளிண்டன்

2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அவர்,  2016ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்பிடம் தோல்வியடைந்தார். டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிட்டால் படுதோல்வி அடைவது உறுதி என்றும் அவர் தெரிவித்தார். Source link

பழங்குடி இனத்தவர் மோதலில்சூடானில் 380 பேர் பலி| Dinamalar

கெய்ரோ :சூடானில், ஜன., முதல் ஆக., வரை, பழங்குடி இனத்தவரிடையே நடந்த மோதல்களில், ௩௮௦ பேர் கொல்லப்பட்டு உள்ளதாக, ஐ.நா., சபை தெரிவித்துள்ளது. ஐ.நா.,வின் மனிதநேய ஒருங்கிணைப்பு அலுவலகம், நேற்று வெளியிட்ட அறிக்கை:வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானில், பழங்குடி இன குழுக்களுக்கு இடையே, தொடர்ந்து மோதல்கள் நடந்து வருகின்றன. இதையடுத்து, அங்கு குழப்பமும், அமைதியின்மையும் நீடிப்பதால், ௧.77 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த ஆண்டு, ஜன., முதல் ஆக., வரை நிகழ்ந்த ௨௨௪ மோதல்களில், ௩௮௦ பேர் … Read more

SP1-77: கொரோனா வைரசின் அனைத்து வேரியண்டுகளையும் எதிர்க்கும் ஆண்டிபாடி கண்டுபிடிப்பு

Antibody To Coronaviruses: இதுவரை கண்டறியப்பட்ட அனைத்து கொரோனா வகைகளையும் நடுநிலையாக்கக்கூடிய ஆன்டிபாடியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். COVID-19 க்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசிகள் உலகிற்கு பெரிதும் உதவியுள்ளன. இருப்பினும், கொரோனா புதிய வகையாக உருவெடுத்துக் கொண்டே சவால் விடுகிறது. கொரோனாவின் புதிய பிறழ்வுகளை எதிர்த்துப் போராட பல்வேறு பூஸ்டர் தடுப்பூசிகளின் தேவைகள் எழுந்துள்ளன.  ஆனால் இப்போது, ​​விஞ்ஞானிகள் SP1-77 எனப்படும் ஆன்டிபாடியை கண்டுபிடித்துள்ளனர், இது அறியப்பட்ட அனைத்து COVID-19 வகைகளையும் நடுநிலையாக்குகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.  பாஸ்டன் குழந்தைகள் … Read more

எரிவாயு விற்பனையில் சீனாவுக்கு சலுகை..! – ரஷ்ய அதிபர் புடின் கூறும் புதிய தகவல்..!

சீனாவிற்கான ரஷ்ய எரிவாயு விற்பனையில் 50-50 என்ற விகிதாசாரத்தில் எரிவாயு விநியோகத்திற்கான கட்டணத்தை சீனா செலுத்தும் என்றும் புடின் தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளால் உலக பொருளாதாரமே வீழ்ச்சியடைந்து வருகிறது. உலக வளர்ச்சியின் முக்கிய இடம் ஆசியாவில் இருப்பதாக புடின் பேச்சு. ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் உலகப் பொருளாதாரத்தை அழித்து வருவதால் மேற்கத்திய நாடுகள் தோல்வியடைந்து வருவதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீது சிறப்பு ராணுவ … Read more

அதிபர் உரையாற்றியபோது சைக்கிளில் சுற்றி வந்த குழந்தை

சிலி நாட்டில் புதிய அரசியலமைப்பை ஆதரித்து வாக்களிக்குமாறு அழைப்பு விடுத்து அதிபர் கேப்ரியல் போரிக் உரையாற்றினார். அவர் ஆவேசமாக உரையாற்றிக் கொண்டிருந்தபோது, சூப்பர்மேன் உடையணிந்த சிறுவன் ஒருவன் தனது சைக்கிளில் அவரை சுற்றி சுற்றி வந்தான்.  சைக்கிளில் அவரை சுற்றி வந்த சிறுவன், பின்பு சைக்கிளை நிறுத்திவிட்டு அவரது பேச்சை சிறிது நேரம் கேட்டு விட்டு மீண்டும் அவரை சுற்றி வருவது போல் இந்த வீடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோவை ட்விட்டரில் 1.33 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.  … Read more

ரிப்பன் கட் செய்யும் போதே சரிந்துவிழுந்த பாலம்! – மயிரிழையில் உயிர் பிழைத்த தலைவர்கள்

மேம்பாலங்களை கட்டுவதில் பல பரிணாமத்தில் முன்னேறிவிட்ட உலக நாடுகள் மத்தியிலும், மூன்றாம் தர நாடுகளில் கட்டப்படும் பாலங்கள் இன்றளவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருப்பதில்லை என்பதற்கு உதாரணமாக காங்கோ நாட்டில் ஓர் சம்பவம் நடந்துள்ளது.  மேலும் படிக்க | பரிசல் ஓட்டி பள்ளிக்கூடத்துக்கு போகும் பிஞ்சுகள்- கிருஷ்ணகிரியில் ஓர் தண்ணீர் தீவு! காங்கோவில் புதிதாக கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவின் போதே சரிந்துவிழுந்த அவலம் நிகழ்ந்துள்ளது. இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. … Read more

இந்தியா மற்றும் சீனாவுடன் உறவை மேம்படுத்தும் வெளியுறவு கொள்கை: ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதல்

மாஸ்கோ: சீனா, இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளுடன் உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், தயாரிக்கப்பட்ட வெளியுறவு கொள்கைக்கு ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார். உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்தன. இந்தியா நடுநிலை வகித்தது. இதே போல் சீனா, மத்திய கிழக்கு நாடுகள், லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்நிலையில் … Read more

கனடாவின் புதிய இந்திய தூதராக சஞ்சய் வர்மா நியமனம்

புதுடெல்லி: கனடா நாட்டின் அடுத்த இந்திய தூதராக சஞ்சய் வர்மாவையும், தென்கொரியாவுக்கான இந்திய தூதராக அமித் குமாரையும் வெளியுறவுத் துறை அமைச்சகம் நியமித்துள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வில் கடந்த 1988-ம் ஆண்டு ஐஎப்எஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றவர் சஞ்சய்வர்மா. தற்போது ஜப்பான் நாட்டிற்கான இந்திய தூதராக உள்ளார். அவர் கனடாவிற்கான இந்திய தூதராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்சீனா, வியட்நாம், துருக்கி, இத்தாலி தூதரகங்களிலும் பணியாற்றி உள்ளார். கடந்த 1995-ம் ஆண்டு ஐஎப்எஸ் அதிகாரி அமித் … Read more