அமெரிக்கா | துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராக மக்கள் பேரணி

வாஷிங்டன்: அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிள் மக்கள் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று திரளாக பேரணி சென்றனர். அமெரிக்காவின் உவேல்டா, டெக்சாஸ், நியூயார்க், பப்ஃபலோ ஆகிய பகுதிகளில் ஏற்படும் தொடர் வன்முறைகளை தடுக்க கடுமையான துப்பாக்கி சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பேரணியாகச் சென்றனர். பேரணியில் பங்கேற்ற கொலம்பியா மேயர் முரியல் பவுசர் பேசும்போது, “ பொறுத்தது போதும். நான் இன்று ஒரு மேயராகவும், தாயாகவும், லட்சக்கணக்கான அமெரிக்க மக்களின் சார்பாகவும் … Read more

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பற்றாக்குறையால் சிக்கித்தவிக்கும் மலேசியா.!

மலேசியாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பற்றாக்குறையால் உற்பத்தி, கட்டுமானம், விவசாயம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாமாயில் உற்பத்திக்கான பனை அறுவடை, போதிய தொழிலாளர்கள் இல்லாததால், பெரியளவில் தேக்கநிலை காணப்படுகிறது. பொதுமுடக்கத்தால் வெளிநாட்டு ஊழியர்களை சேர்ப்பதில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கிய பிறகும் அனைத்து துறைகளிலும் 12 லட்சம் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

உக்ரைனின் சூரியகாந்தி விதைகள் சேகரிப்பு கிடங்கின் மீது ரஷ்ய படைகள் குண்டுவீசித் தாக்குதல்..!

உக்ரைனின் தெற்கு பகுதி நகரமான மைகோலைவ்-வில் ரஷ்ய படைகள் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதலில், சுமார் 3 லட்சம் டன் அளவிலான தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கு முழுவதும் தீக்கிரையாகியனது. கோதுமை மற்றும் சோளம் அதில் வைக்கப்பட்டிருந்தநிலையில் அவை சேதமமைந்ததாக வேளாண்துறை அமைச்சர் விசோட்ஸ்கி தெரிவித்தார். சில உள்ளூர் ஊடகங்கள் அங்கு சூரியகாந்தி விதையில் இருந்து தயாரிக்கப்படும் கால்நடைகளுக்கு தேவையான உணவுகள் இருந்ததாக தெரிவித்துள்ளன.  Source link

உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்கள் இருந்த கிடங்கை அழித்துவிட்டோம் – ரஷ்யா

மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு வழங்கிய ஆயுதங்கள் இருந்த கிடங்கை அழித்து விட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மேற்கு உக்ரைனின் டெர்னோபிலில் உள்ள  கிடங்கை, ரஷ்யப் படைகள் கப்பலில் இருந்து ஏவப்படும் காலிபர் ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்ததாக கூறியுள்ளது. அதனை மறுக்கும் வகையில், கருங்கடலில் இருந்து சோர்ட்கிவ் நகரின் மீது நிகழ்த்திய ஏவுகணை தாக்குதலில், ராணுவ தளவாடங்கள் சிறிதளவு சேதமடைந்ததாகவும், 22 பேர் காயமடைந்தனர் என்றும் டெர்னோபில் பிராந்திய ஆளுநர் கூறினார். மேலும், அங்கு ஆயுதங்கள் ஏதும் பதுக்கி … Read more

அமெரிக்காவில் தொடர்கதையாகும் துப்பாக்கிச் சூடு; சிகாகோவில் 5 பேர் பலி; 16 பேர் காயம்

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்குவது குறித்து அந்நாட்டில் விவாதம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், வார இறுதியில் சிகாகோவில் பலவேறு இடங்களில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 16 பேர் காயமடைந்துள்ளனர். இது நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து, அமெரிக்காவில் தலை தூக்கும் துப்பாக்கி கலாச்சாரம் பிரச்சினை குறித்த விவாதம் மேலும் வலுப்பெற்று வருகிறது. நாட்டில் ஆயுதங்களை வைத்திருப்பதற்கு … Read more

வடகொரியா கடலில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெடிக்க வைத்து தென் கொரிய சோதனை..!

வடகொரியா கடந்த சில நாட்களுக்கு முன் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்த நிலையில் மீண்டும் ஒரு சிறிய அளவிலான எறிகணையை சோதனை செய்ததாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கொரியா கடலில் எறிகணையை வெடிக்க வைத்து சோதனை செய்ததாகவும், அது சென்ற பாதைகளை கண்டறிந்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால், வடகொரியா மீதான கண்காணிப்பை அதிகப்படுத்தி உள்ளதாகவும், அமெரிக்காவுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் தென் கொரியா ராணுவம் … Read more

பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் இருப்பதாக கூறி இந்திய தேயிலையை திருப்பி அனுப்பியது ஈரான், தைவான்.!

குறிப்பிட்ட அளவை விட பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் இருப்பதாக இந்தியாவின் தேயிலையை ஈரான் மற்றும் தைவான் திருப்பி அனுப்பியது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் சர்வதேச தேயிலை சந்தையில் இந்திய நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகின. அதேநேரம் ஈரான் மற்றும் தைவான் நாடுகளின் நிராகரப்புகளே அதற்கு தடையாய் அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியா அனுப்பிய தேயிலை கண்டெய்னர்களில் தைவான் இரண்டு கண்டெய்னரையும், ஈரான் ஒன்றையும் திருப்பி அனுப்பியது. குறிப்பிட்ட அளவை விட Quinalphos ரசாயண மருந்து அதிகம் இருப்பதாக … Read more

சிரியாவின் டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – ரஷ்யா கண்டனம்!

சிரியாவின் டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ள ரஷ்யா, இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்துமாறு இஸ்ரேலை கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, டமாஸ்கஸுக்கு தெற்கே உள்ள பல இலக்குகளை நோக்கி இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி தாக்கியதாகவும், டமாஸ்கஸ் விமான நிலையத்தின் மீது நடத்திய தாக்குதலால் விமான நிலைய கட்டிடம், ஓடுபாதைகள் உள்ளிட்டவைகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், இஸ்ரேலின் … Read more

சீன எல்லையில் பணியாற்றிய 2 ராணுவ வீரர்களை காணவில்லை

இடாநகர்: மிக நீண்ட காலமாக அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருவதால் அந்த மாநில எல்லையில் கூடுதல் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அருணாச்சலின் தகலா எல்லைப் பகுதியில், ராணுவத்தின் கர்வால் ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த வீரர்கள் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த படையைச் சேர்ந்த பிரகாஷ் சிங் ராணா, ஹரேந்திர நெகி ஆகிய 2 வீரர்களை கடந்த மே 28-ம் தேதி முதல் காணவில்லை. பிரகாஷ் சிங் ராணா உத்தராகண்டின் ருத்ரபிரயாக் நகரைச்சேர்ந்தவர். அவருக்கு திருமணமாகி … Read more

சூரிய சக்தியில் இயங்கக் கூடிய சோலார் காரை தயாரித்துள்ள நெதர்லாந்து நிறுவனம்..!

மின்சார சார்ஜிங் இன்றி சூரிய சக்தியில் நாளொன்றுக்கு 70 கிலோ மீட்டர் தூரம் இயங்கக் கூடிய சோலார் காரை நெதர்லாந்தை சேர்ந்த லைட் இயர் என்ற தொடக்க நிலை மின்சார கார் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கி உள்ளது. லைட் இயர் ஒன் மாடல் காரின் மேற்பகுதி மற்றும் பேனட் பகுதியில் 5 சதுர மீட்டர் சுற்றளவுக்கு பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் கார் இயக்கத்திற்கு தேவையான சூரிய சக்தி ஆற்றலை உருவாக்குகிறது. அதிகபட்சமாக 160 கிலோ மீட்டர் தூரம் … Read more