இந்திய ராணுவத்துடன் நேரிடையாக மோத அஞ்சி, ஹேக்கர்கர் உதவியை நாடும் சீனா

இந்தியாவின் அதிகரித்து வரும் இராணுவ சக்தியை கண்டு அஞ்சும் சீனா தனது மோசமான திட்டங்களை நிறைவேற்ற சைபர் ஹேக்கர்களின் உதவியை நாடுவதாக இந்தியா மற்றும் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. டோக்லாமில் இந்திய ராணுவ வீரர்களுடன் சீன ராணுவ வீரர்கள் மோதிய போது, இந்தியா வலுவான பாடம் புகட்டியதால், இனி தியாவுடன் நேரடியாக போராடுவது எளிதல்ல என்று சீனா புரிந்து கொண்டுள்ளது. எனவே சீனா இந்திய ராணுவம் தனது வீரர்களை தாக்காமல், பாதுகாக்க முயல்கிறது. … Read more

அடுக்குமாடி குடியிருப்பின் மீது ரஷ்ய படைகள் தாக்குதல்.. இடுபாடுகளில் சிக்கி 29 பேர் உயிரிழப்பு – 5 சடலங்களை மீட்கும் பணி தீவிரம்..!

உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 29 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டான்பாஸை முழுவதுமாக கைப்பற்ற முயற்சிக்கும் ரஷ்யா, தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை மாலை சாசிவ் யார் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது ராக்கெட் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் அக்கட்டிடம் உருக்குலைந்து போனது. இடிபாடுகளில் இருந்து இதுவரை 24 பேர் சடலமாக மீட்கப்பட்டதாகவும், அதில் சிக்கியுள்ள 5 சடலங்களை மீட்க முடியவில்லை எனவும் அதிகாரிகள் … Read more

யோசெமிட்டி பூங்காவில் காட்டுத் தீ: எரிந்து சாம்பலாகும் உலகின் பழமையான மரங்கள்

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள யோசெமிட்டி தேசியப் பூங்காவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் உலகின் மிகப் பழமையான மரங்கள் எரிந்து வருகின்றன. கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே காட்டுத் தீயினால் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் லட்சக்கணக்கான மரங்களும், நிலங்களும் நாசமாகின. இந்த நிகையில், கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள யோசெமிட்டி தேசியப் பூங்காவில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக உலகின் பழமையான மரங்கள் எரிந்து வருகின்றன. காட்டுத் தீயை அணைக்க தீயணைப்புப் … Read more

ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டார் கோத்தபய – நாளை வெளியாகிறது அறிவிப்பு!

இலங்கை அதிபர் பதவியில் இருந்து நாளை கோத்தபய ராஜபக்சே விலக உள்ளார். இதற்கான கடிதத்தில் அவர் கையெழுத்திட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்டை நாடான இலங்கையில், வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதனால், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள அந்நாட்டு மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்து உள்ளனர். தலைநகர் … Read more

“தி கிரே மேன்” ஹாலிவுட் திரைப்பட பிரமோஷன் நிகழ்ச்சி.. செய்தியாளர் கேள்விக்கு நகைச்சுவையாக பதில் அளித்த தனுஷ்..!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற The Gray Man ஹாலிவுட் திரைப்பட promotion-ல் பங்கேற்ற நடிகர் தனுஷ், செய்தியாளர் கேள்விக்கு நகைச்சுவையாக பதில் அளித்தார். கேப்டன் அமெரிக்கா, அவெஞ்சர்ஸ் போன்ற வெற்றி படங்களை இயக்கிய ருஸ்ஸோ சகோதரர்கள், The Gray Man என்ற ஆக்ஷன் திரில்லரை இயக்கி உள்ளனர். Chris Evans, Ryan Gosling ஆகிய முன்னனி ஹாலிவுட் நடிகர்கள் நடிக்கும் இத்திரைப்படத்தில் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தில் நடிக்க தன்னை எப்படி … Read more

டோக்கியோவில் ஷின்சோ அபேவின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெறுகிறது.. நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் அஞ்சலி..!

தேர்தல் பிரச்சாரத்தின் போது சுட்டுக்கொல்லப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதி சடங்கு இன்று  நடைபெறுகிறது. கடந்த 8 ஆம் தேதி கொல்லப்பட்ட ஷின்சோ அபேவின் உடல் டோக்கியோவில் உள்ள ஷோஜோஜி கோவிலில் வைக்கப்பட்டுள்ளது.  மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மறைந்த முன்னாள் பிரதமருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.  Source link

இலங்கையில் இருந்து தப்ப முயன்ற பசில் ராஜபக்சே தடுத்து நிறுத்தம்!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு : இலங்கையில் இருந்து துபாய் தப்பி செல்ல முயன்ற முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சேவுக்கு குடியேற்றத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்காததால், அவர் திரும்பி சென்றார். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனால், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, நிதி அமைச்சராக இருந்த, அவரது சகோதரர் பசில் ராஜபக்சே ஆகியோர் பதவி விலகினர்.அவர்களின் மற்றொரு சகோதரரான அதிபர் கோத்தபயா ராஜபக்சே வீட்டை முற்றுகையிட்டதால், … Read more

எனக்கு இருந்தது ஒரே வீடு தான்… கண் கலங்கிய இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

பொருளாதாரம் நெருக்கடி காரணமாக திவாகி விட்ட இலங்கையில், எரிபொருள் பற்றாக்குறையால் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு, தேசம் சீர்குலைந்துள்ள இந்த நேரத்தில் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் முதல் தடவையாக மிக தீவிரமான  நெருக்கடி நிலையை எதிர்கொள்கிறது. வெளிநாட்டுக் கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இலங்கை ஆசியாவின் வளமான நாடுகளில் ஒன்றாக இருந்த இலங்கையில், தற்போது மக்கள் அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க முடியாத நிலையில் தவிக்கின்றனர்.  இதனால், கொதித்தெழுந்த … Read more

நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி: பிரபஞ்சத்தின் புகைப்படம் வெளியீடு

வாஷிங்டன்: ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (James Webb Space Telescope) விண்வெளியில் பதிவு செய்த புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. நாசாவின் மைல்கல்லாகப் பார்க்கப்படும் ஜேம் வெப் விண்வெளி தொலைநோக்கி கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று விண்ணில் ஏவப்பட்டது. பால்வீதியில், பூமியைப் போன்று உயிர் இருந்த/இருப்பதற்குச் சாத்தியமான புறக்கோள்கள் (exoplanets) இருக்கின்றனவா, பெருவெடிப்பிலிருந்து முதல் விண்மீன் கூட்டங்கள் எப்படி உருவாகின போன்ற பல கேள்விகளுக்கு இத்தொலைநோக்கி பதில் சொல்லும் என்று நாசா தெரிவித்தது. பூமியின் வெப்பத்தின் காரணமாக … Read more