மர்ம நபர் வைத்த தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு| Dinamalar

சியோல்:தென் கொரியாவில், நீதிமன்றம் அருகே அலுவலக கட்டடம் ஒன்றில் மர்ம நபர் வைத்த தீயில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர்.கிழக்காசிய நாடான தென் கொரியாவின் டேகு நகரில், மாவட்ட நீதிமன்ற கட்டடத்துக்கு அருகில், ஏழு மாடி வணிக வளாகம் உள்ளது. இங்கு, வழக்கறிஞர்கள் உட்பட பலர் அலுவலகங்கள் வைத்திருந்தனர். இதன் இரண்டாவது தளத்துக்கு நேற்று காலை சிறு சிலிண்டருடன் வந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த ஒரு அலுவலகத்துக்கு தீ வைத்தார். அது மற்ற தளங்களுக்கும் வேகமாக … Read more

சர்வதேச நிதியத்தில் இந்தியருக்கு முக்கிய பதவி| Dinamalar

வாஷிங்டன்:சர்வதேச நிதியத்தின் ஆசிய – பசிபிக் மண்டல இயக்குனராக இந்திய பொருளாதார நிபுணர் கிருஷ்ணா ஸ்ரீநிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.இது பற்றி சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா வெளியிட்டு உள்ள அறிக்கை:சர்வதேச நிதியத்தின் ஆசிய – பசிபிக் மண்டல துணை இயக்குனராக உள்ள கிருஷ்ணா ஸ்ரீநிவாசன், அதன் இயக்குனராக நியமிக்கப்படுகிறார். இம்மாதம் 22ல் அவர் இந்தப்பதவியை ஏற்பார். இந்தியரான கிருஷ்ணா ஸ்ரீநிவாசன், சர்வதேச நிதித்துறையில் 27 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். நிதியத்தின் முக்கியமான காலகட்டங்களில் எங்களுடன் இணைந்து … Read more

டான்பாஸ் மாகாணத்தை கைப்பற்றரஷ்ய படையினர் தீவிர தாக்குதல்| Dinamalar

பாக்முட்:உக்ரைனின் டான்பாஸ் மாகாணத்தை முழுமையாக கைப்பற்றும் நோக்கத்தில் ரஷ்ய படையினர் நேற்று தாக்குதல் நடத்தினர். இரு தரப்பு வீரர்களும் தெருவில் இறங்கி சண்டையிட்டு கொண்டனர். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரியில் போர் தொடங்கியது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியது முதல், ரஷ்யா மீது 46 நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்நிலையில், ‘உக்ரைனின் சிவிரோடொனெட்ஸ்க் நகர் மற்றும் நகரை சுற்றியுள்ள பகுதிகளை உக்ரைனிய படைகள் தங்கள் … Read more

நைஜீரியாவில் 32 பேர் படுகொலைபயங்கரவாதிகள் அட்டூழியம்| Dinamalar

அபுஜா:நைஜீரியாவில், பயங்கரவாதிகள், 32 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், ஐ.எஸ்., அமைப்பின் கீழ் செயல்படும் புலானி என்ற பயங்கரவாத பிரிவு, விவசாயிகளை கிராமங்களில் இருந்து வெளியேற்றி, நிலங்களை ஆக்ரமித்து வருகிறது.கடுனா மாவட்டத்தில் கஜூரா பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளனர். கிராம மக்கள் அருகில் உள்ள புதர்களில் மறைந்துள்ளனர். அவர்களை பயங்கரவாதிகள் தேடிச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இதே போல நான்கு கிராமங்களில் அடுத்தடுத்து நுழைந்த பயங்கரவாதிகள், 32 … Read more

உலகின் சிறந்த பள்ளிகள் போட்டி; இந்தியாவின் 5 பள்ளிகள் தேர்வு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்-உலகின் சிறந்த பள்ளிகளுக்கான போட்டிக்காக இறுதி செய்யப்பட்டிருக்கும் 10 பள்ளிகளில், இந்தியாவைச் சேர்ந்த ஐந்து பள்ளிகள் இடம்பிடித்துள்ளன. ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ‘டி4 எஜுகேஷன்’ என்ற நிறுவனம், முதன் முறையாக உலகின் சிறந்த பள்ளிகளுக்கான போட்டியை நடத்துகிறது. சமூகத்துடன் இணைந்து செயல்படுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதிய கண்டுபிடிப்பு, இடர்பாடுகளில் இருந்து மீளுதல், ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஆதரவு ஆகிய ஐந்து பிரிவுகளில் இப்போட்டி நடக்கிறது. ஒவ்வொரு பிரிவிலும் சிறந்து விளங்கும் … Read more

எம்.பி., பதவி ராஜினாமா மாஜி நிதியமைச்சர் அதிரடி| Dinamalar

கொழும்பு:இலங்கையின் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே, தன் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார்.நம் அண்டை நாடான இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.அன்னியச் செலாவணி பற்றாக்குறையால், பெட்ரோல், டீசல் கூட வாங்க முடியாத அளவுக்கு அந்நாடு திணறுகிறது.இதற்கு பொறுப்பேற்று, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளியேறினார். இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே, முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயை பிரதமராக நியமித்தார். இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து வரும் நிலையில், முன்னாள் நிதி அமைச்சர் பசில் … Read more

பிரிட்டனில் பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்வு| Dinamalar

லண்டன்:பிரிட்டனில் பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் உலகளவில் கச்சா எண்ணெய் வரத்து குறைந்துள்ளது. இதனால் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.பிரிட்டன் வரலாற்றில் முதன் முறையாக நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 176 ரூபாயாக உயர்ந்துள்ளது. அந்நாட்டு அரசு, இந்தாண்டு மார்ச்சில் பெட்ரோல், டீசல் வரியை குறைத்தது. இதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு, … Read more

பரிசோதனை கருவிகள் விற்பனை முறைகேடு: சுகாதாரத் துறை அமைச்சர் கைது!

கொரோனா எனும் கொடிய வைரஸ் கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக ஒட்டுமொத்த உலகையே வாட்டி வதைத்து வந்தது. பொதுமுடக்கம், தடுப்பூசி என உலக நாடுகளின் தொடர் நடவடிக்கையால் கடந்த சில மாதங்களாக கொரோனா கட்டுக்குள் உள்ளது. இந்த நிலையில் கொரோனா கருவிகள் விற்பனை விவகாரம் வியாட்நாமில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அந்நாட்டின் ‘வியட் ஏ டெக்னாலஜி கார்ப்பரேஷன்’ என்ற நிறுவனம், கொரோனா பரிசோதனை கருவிகளை நாடு முழுவதும் விற்பனை செய்தது. அந்த கருவியின் உண்மை விலையை உயர்த்தி அதிக விலைக்கு … Read more