`வாட் வரியை குறைக்க வேண்டும்’ – அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன் திரண்ட பாஜக-வினர்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், “மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்க்கண்ட், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மத்திய அரசின் அறிவுரையை பின்பற்றாததால், இந்த மாநிலங்களில் உள்ள மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆர்பாட்டக்காரர்கள்  இந்த மாநிலங்களில் இப்போது வாட் வரியைக் குறைக்க கேட்டுக்கொள்கிறேன். நவம்பர் மாதம் மத்திய அரசு கலால் வரியைக் குறைத்ததன் மூலம் குடிமக்கள் எதிர்கொள்ளும் சுமையைக் குறைக்க முடிந்தது” என்று பிரதமர் மோடி அன்மையில் பேசியது விவாத … Read more

பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல்.. ஒரு மாணவர் உயிரிழப்பு.. 3 மாணவர்கள் கைது..!

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே பள்ளியில் ஏற்பட்ட மோதலில் 12ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் சக மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பாப்பாக்குடியைச் சேர்ந்த செல்வசூர்யா என்ற மாணவர், பள்ளக்கால் பொதுக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 25ஆம் தேதி இவருக்கும் 11ஆம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் இடையே கையில் சமுதாயக் கயிறு கட்டுவதில் பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் ஆதரவாக அவரவர் நண்பர்களும் ஒன்றுகூடவே, இரு … Read more

உதயநிதியை அமைச்சர்கள் துதிபாடுவது திமுகவுக்குப் பின்னடைவு: செல்லூர் ராஜூ விமர்சனம்

மதுரை: “அமைச்சர்கள் தங்களது துறை சார்ந்த பணிகளை கவனிக்காமல் உதயநிதியை காக்காப்பிடிக்க அவரை சட்டமன்றத்தில் துதிபாடுவது திமுகவிற்கு ஒரு பின்னடைவுதான்” என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று கே.கே.நகர் பகுதியில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ, “அதிமுகவில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். இது திமுக அல்ல. … Read more

என்னை கொல்வதற்கோ அல்லது பிடிப்பதற்கோ ரஷ்யப் படை பாராசூட் மூலம் கீவ் நகருக்குள் நுழைந்தன – அதிபர் ஜெலன்ஸ்கி

கீவ் நகருக்குள் நுழைந்து தன்னையும், தனது குடும்பத்தினரையும் கைது செய்து அழைத்து செல்ல ரஷ்யப் படையினர் முயன்றதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், போர் தொடங்கிய நாள் அன்று தானும் தனது மனைவி ஒலேனாவும், தங்களது 17 வயது மகள் மற்றும் 9 வயது மகனை எழுப்பி, குண்டு வெடிப்பு தொடங்கியதாக அவர்களிடம் தெரிவித்ததாக கூறினார். தான் ரஷ்யாவின் இலக்கு என்பதால் அதிபர் மாளிகை பாதுகாப்பான இடம் அல்ல என்பது … Read more

கொரோனா சூழலில் இந்திய பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய இன்னும் 12 ஆண்டுகள் ஆகக் கூடும்-ரிசர்வ் வங்கி

கொரோனா சூழலில் இந்திய பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய இன்னும் 12 ஆண்டுகள் ஆகக் கூடும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கொரோனாவால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக் குறித்து ரிசர்வ் வங்கி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் கொரோனா சூழலில் மூன்றாண்டுகளில் 52 இலட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்த இழப்புகளை 2034 – 2035 நிதியாண்டில் தான் ஈடுசெய்ய முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது. … Read more

உணவு பொருள்கள் தீரப்போகிறது: உக்ரைன் கோரிக்கையை நிராகரித்த ரஷ்யா!

உக்ரைனின் மரியுபோல் இரும்பு ஆலைக்குள் பதுங்கி இருக்கும் பொதுமக்களை வெளியேற்ற உக்ரைன் முன்வைத்த கோரிக்கையை ரஷ்ய நிராகரித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா போரில் தலைநகர் கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்ற தவறியதை அடுத்து, தற்போது உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் ரஷ்ய ராணுவம் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. அந்தவகையில், உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரான மரியுபோலை ரஷ்ய ராணுவம் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியதில் தற்போது … Read more

சீன செல்போன் நிறுவனமான சியோமியின் ரூ.5,551 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை

பெங்களூரு: சீன நிறுவனமான சியோமி செல்போன் தயாரிப்பு நிறுவனத்தின் ரூ.5,551 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை  முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சியோமி  நிறுவனம் செய்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணையை தொடங்கி உள்ள அமலாக்கத்துறை, அந்நிறுவனத்தின் சொதுக்களை முடக்கி உள்ளது. சீனாவின் பிரபல செல்போன் நிறுவனமான சியோமி இந்தியா நிறுவனத்தின் ரூ.5,551.27 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இயங்கி வருகிறது. இந்த … Read more

பள்ளியில் நடந்த மோதலில் மாணவர் பலி- 11ம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் கைது

நெல்லை: நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 மாணவர் செல்வ சூர்யாவுக்கும் 11ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது செல்வ சூர்யாவை எதிர்தரப்பை சேர்ந்த 3 மாணவர்கள் கற்களால் தலையில் பலமாக தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த செல்வ சூர்யா, சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே கோஷ்டி மோதல் … Read more

ஓமன் நாட்டில் மசூதிக்குள் கேரள வாலிபர் சுட்டுக்கொலை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் மொய்தீன். இவர் ஓமன் நாட்டில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை அங்குள்ள மசூதிக்கு மொய்தீன் சென்றார். தொழுகை முடிந்ததும் அங்கிருந்தவர்கள் வெளியேறினர். அப்போது மொய்தீன் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது தான் பலியானவர் மொய்தீன் என தெரியவந்தது. போலீசார் அந்த பகுதியில் சோதனை செய்தபோது ஒரு துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது. மொய்தீன் … Read more

ரூ.114.21 கோடியில் புதிய 40 திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தேனி: ரூ.114.21 கோடியில் புதிய 40 திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். ஊஞ்சம்பட்டில் அரசு விழாவில் ரூ.74.21 கோடியில் 102 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினர்.