அரசு பேருந்து மோதியதால் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம்-சாலையோரம் நடந்து சென்ற பெண் மீது மோதி இழுத்து சென்ற காட்சி

கேரளாவில் அரசு பேருந்து பின்பக்கமாக மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் தறிகெட்டு ஓடி, சாலையோரம் நடந்துச் சென்ற பெண் மீது மோதி இழுத்துச் சென்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. பாலக்காடு நோக்கிச் சென்ற அரசு பேருந்து வேரிக்காடு பகுதியில் அதிவேகமாக வளைவில் திரும்பிய போது, முன்னே சென்ற சரக்கு வாகனத்தின் பின்பக்கமாக மோதியுள்ளது. சரக்கு வாகனமும் வேகமாக சென்ற நிலையில், பேருந்து மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் தறிகெட்டு ஓடி, சாலையோரம் நடந்துச் … Read more

தவறுதலாக திறந்துவிட்டேன்.. நாடாளுமன்றத்தில் ஆபாசப் படங்களை பார்த்து சிக்கிய பிரித்தானியா எம்.பி விளக்கம்

 பிரித்தானியா நாடாளுமன்றத்தில் தவறுதலாக ஆபாச படத்தை திறந்துவிட்டேன் என சர்ச்சையில் சிக்கிய கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி-யான Neil Parish தெரிவித்துள்ளார். ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் விவாத அறையில் தனது தொலைபேசியில் ஆபாசப் படங்களைப் பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியால் Neil Parish இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த Neil Parish, விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து எம்.பி-யாக இருப்பேன் என கூறினார். அதிகபட்சம் 2 வாரத்திற்குள் தீர்வு… … Read more

நாளை மே1ந்தேதி: தொழிலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: நாளை மே 1-ஆம் தேதி உலக தொழிலாளர்கள் தினத்தையொட்டி,  தொழிலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், சிகாகோ நகரில் தொழிலாளர்கள் வரலாற்றுப் புகழ்பெற்ற பிரமாண்டமான பேரணியை நடத்தி – தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து பெற்ற உன்னதமான உரிமைகளை நினைவுகூரும் மே 1-ஆம் நாளை முன்னிட்டு தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொழிலாளர்களின் உற்ற தோழனாகவும் – அவர்களது உரிமைக்குரலைக் காதுகொடுத்து கேட்டு, … Read more

நிலக்கரி பற்றாக்குறைக்கு யார் காரணம்? சிதம்பரம் டுவிட்

சென்னை: டெல்லி, அரியானா மாநிலங்களில் உள்ள அனல் மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அம்மாநில அரசுகள் கவலை தெரிவித்துள்ளன. போதிய நிலக்கரி விநியோகத்தை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி மத்திய அரசுக்கு டெல்லி அரசு கடிதம் எழுதியுள்ளது.  இதற்கிடையே, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, அனல்மின் நிலையங்களில் 10 நாட்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பில் உள்ளது என தெரிவித்தார். இந்நிலையில், மின் தட்டுப்பாட்டுக்கு … Read more

ஜியோமி நிறுவனத்தின் ரூ.5,551 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

புது டெல்லி: இந்தியாவில் இயங்கும் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான சீனாவை சேர்ந்த ஜியோமி நிறுவனத்தின் ரூ.5,551.27 கோடி சொத்தை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.  ஜியோமி நிறுவனம் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் 1999-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஜியோமி நிறுவனம் கடந்த 2014ம் ஆண்டு முதல் இந்தியாவில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள உற்பத்தியாளர்களிடமிருந்து முழுமையாக தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களை … Read more

பிரபல செல்போன் நிறுவனமான ஷியோமி நிறுவனத்தின் ரூ.5,551 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

டெல்லி: பிரபல செல்போன் நிறுவனமான ஷியோமி நிறுவனத்தின் ரூ.5,551 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அனல்மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு எதிரொலி: தினமும் 400 சரக்கு ரயில்கள் மூலம் நிலக்கரி விநியோகம்

டெல்லி: மாநிலங்களுக்கான நிலக்கரி விநியோகத்தை வேகப்படுத்தும் முயற்சியாக நாடு முழுவதும் 753 பயணிகள் ரயில்களை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நாட்டில் உள்ள அனல்மின் நிலையங்களுக்கான நிலக்கரி விநியோகத்தில் சுணக்கம் ஏற்பட்டதால் பெரும்பாலான அனல்மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு குறைந்து அதன் எதிரொலியாக மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பஞ்சாப், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் மின்னுற்பத்தி வெகுவாக குறைந்து விட்டதால் மின்வெட்டு தவிர்க்கமுடியாத ஒன்றாகி விட்டது. வெயில் வாட்டி வதைக்கும் கோடி காலத்தில் … Read more

சாலையின் குறுக்கே தொங்கிய கேபிள் – போக்குவரத்தை சீர்செய்த சிறுவர்களை பாராட்டிய டிஎஸ்பி

ஈரோட்டில் சாலையின் குறுக்கே தொங்கிக்கொண்டிருந்த கேபிளை இழுத்து போக்குவரத்தை சரிசெய்த சிறுவர்களை டிஎஸ்பி பாராட்டியதுடன் எச்சரித்துள்ளார்.  ஈரோட்டில் இருந்து கரூர், பழனி, மதுரை உள்ள பல மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக கொல்லம்பாளையம் உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் இச்சாலையில் தொலைக்காட்சி கேபிள் அறுந்து கிடந்துள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவ்வழியாக சென்ற பள்ளி சிறுவர்கள் மூவர் கேபிளை இழுத்து போக்குவரத்தை சீர்செய்தனர். மேலும் உயரம் அதிகமுள்ள லாரிகளின் மேல் ஏறி உதவியும் … Read more

ஸியோமி நிறுவனத்தின் ரூ.5,551 கோடி பணம் முடக்கம் – அமலாக்கத்துறை அதிரடி!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஸியோமி நிறுவனத்தின் ரூ.5,551 கோடி பணத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. பிரபல மொபைல் நிறுவனமான “ஸியோமி” நிறுவனத்திடம் இருந்து கோடிக்கணக்கான பணத்தை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்நிறுவனத்திற்கு எதிராக அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999 இன் விதிகளின் கீழ் ஸியோமி டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ.5551.27 கோடியை பறிமுதல் செய்துள்ளது அமலாக்கத்துறை. … Read more

ராணுவ தளபதியாக பொறுப்பேற்றார் மனோஜ் பாண்டே| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக இருந்த நரவானே ஓய்வு பெற்றதை தொடர்ந்து, புதிய தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பேற்று கொண்டார். மனோஜ் பாண்டே, இந்திய ராணுவத்தின் பொறியாளர் பிரிவில் பணியாற்றி வந்தார். அந்த பிரிவில் இருந்து தளபதியாகும் முதலாவது நபர் என்ற பெருமை பெற்றார். தெற்கு பிளாக்கில், நரவானேயிடம் இருந்து பொறுப்புகளை ஏற்று கொண்ட மனோஜ் பாண்டே, இந்திய ராணுவத்தின் 29வது தளபதியாவார். கடந்த 1982 ம் ஆண்டு … Read more