இதுதான் எங்களுக்கு முன்னாடியே தெரியுமே… அதுக்கு ஏன் இவ்ளோ பில்டப் கொடுக்கிறீங்க..

Tamil Serial Baakiyalakshmi Rating Update : எப்படியும் பாக்யா அம்மா ஜெயிச்சிடுவாஙகனு தெரியும் இது ஆடியன்ஸ்கே நல்லா தெரியும் அப்படி இருந்தும் அத ஏன் ஒரு வாரத்துக்கு இழுத்துக்கிட்டு போறீங்க சட்டு புட்டுனு முடிச்சிட்டு கோபி மேட்டர்க்கு வாங்க என்று சொல்ல வைக்கிறது பாக்யலட்சுமி சீரியல். கட்டிய கணவனே கண் கண்ட தெய்வம் என்று சொன்னது அந்த காலம். கணவனாக இருந்தாலும் கண்மூடித்தனமாக நம்பிவிடாதே என்பது இந்த காலம். இதற்கு சிறந்த உதாரணம் பாக்யலட்சுமி சீரியல். … Read more

தமிழகத்தில் 79 நிர்வாகிகளை நியமித்து, அறிவிப்பை வெளியிட்ட அண்ணாமலை.!

தமிழக பா.ஜ.க.,வுக்கு புதிய மாவட்டத்தலைவர்களை நியமனம் செய்து, அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். மொத்தமாக, 59 மாவட்ட தலைவர்கள், 20 மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய 79 நிர்வாகிகளை நியமித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அந்த அறிவிப்பில், “தென் சென்னை மாவட்டம் காளிதாஸ், சென்னை கிழக்கு மாவட்டம் சாய் சத்தியன், மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் விஜய் ஆனந்த், மத்திய சென்னை மேற்கு மாவட்டம் தனசேகர், வட சென்னை கிழக்கு மாவட்டம் கிருஷ்ணகுமார், வட சென்னை … Read more

“மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது'' – புது கணக்கு போடும் பிரசாந்த் கிஷோர்?

பாஜக-வில் தொடங்கி காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், திமுக போன்ற பெரிய கட்சிகளுக்காக பணியாற்றி, அக்கட்சிகளின் வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் பெரும் பங்கு ஆற்றினார். இதனிடையே, பிரசாந்த் கிஷோர் அண்மையில் காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதாக தகவல்கள் வெளியானது. அதை அவர் மறுத்துவிட்டர். மேலும் தன்னைவிட காங்கிரஸ் கட்சிக்கு இப்போது தலைமை தான் முக்கியம் என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து பிரசாந்த் கிஷோர் தனது தனிப்பட்ட அரசியல் பயணத்தை அறிவிக்க இருக்கிறார் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தகவல்கள் … Read more

அதிவேகமாக வளைவில் திரும்புகையில் சரிந்து விழுந்து விபத்து… மின் கம்பத்தில் மோதி இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு… பதைபதைக்க சிசிடிவி

கேரளாவில் அதிவேகமாக பைக்கில் வந்த இளைஞர், சாலை வளைவில் திரும்புகையில் சரிந்து விழுந்து, மின் கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவிக் காட்சிகள் வெளியாகியுள்ளன. திருவனந்தபுரத்தை சேர்ந்த சஞ்சீவன் என்ற இளைஞர், புனலூரில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி பைக்கில் அதிவேகமாக சென்றுக்கொண்டிருந்தார். அப்போது சுடுகடா என்னும் பகுதியில் சாலையில் வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த அவரது பைக் நிலைதடுமாறி சரிந்ததில், கீழே விழுந்த இளைஞர், சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி தூக்கி வீசப்பட்டார். … Read more

'கோடை வெயிலால் கோமா நிலைகூட ஏற்படக்கூடும்..' – ஆளுநர் தமிழிசை விழிப்புணர்வு ட்வீட்

சென்னை: உடல் உஷ்ண தாக்கத்தால் கோமா நிலைக்குக் கூட செல்லலாம் என்று தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநரும், மருத்துவருமான தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் வெப்ப நோய்களிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகளையும் அவர் விளக்கி ட்வீட் செய்துள்ளார். நாடு முழுவதும் கோடை வெப்பம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கோடை வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கோடை வெயிலால் ஏற்படும் உடல் உஷ்ண தாக்கத்தால் கோமா நிலைக்குக் … Read more

'கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது' – உச்ச நீதிமன்றம்

டெல்லி: எந்தவொரு தனிநபரையும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள கட்டாயப்படுத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில மாநிலங்களில் கரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது. இதற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இன்று (மே 2) தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கு பின்னணி: தமிழகம், கேரளம், ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கரோனா தடுப்பூசி செலுத்திக் … Read more

நடுவானில் குலுங்கிய விமானம்… பயணிகள் காயம் – விசாரணைக்கு உத்தரவு!

மும்பையில் இருந்து மேற்குவங்க மாநிலம் துர்காபூருக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் பயணிகளுடன் நேற்று மாலை புறப்பட்டது. அப்போது திடீரென நடுவானில் காற்றின் வேகத்தில் சிக்கிக் குலுங்கியது. இதில் பயணிகளின் பொருட்கள் கீழே விழுந்தன. கீழே விழுந்தும், முன் இருக்கையில் மோதியும் பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. ஸ்பைஸ் ஜெட் விமானம் நடுவானில் காற்றின் வேகத்தில் சிக்கி பயங்கரமாக குலுங்கியதில் பயணிகள் 14 பேர், விமான ஊழியர்கள் 3 பேர் என மொத்தம் 17 பேர் காயமடைந்தனர். ஆனாலும், கூட … Read more

அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோகும் நிலை: தனியார் வைத்தியசாலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாரிய மருந்து தட்டுப்பாடு காரணமாக தனியார் வைத்தியசாலை மற்றும் நேர்சிங் ஹோம் சங்கம் முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது. அதன்படி அவசர சத்திர சிகிச்சைகளை மாத்திரம் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பில் தனியார் வைத்தியசாலை மற்றும் நேர்சிங் ஹோம் சங்கத்தின் தலைவர் கலாநிதி ஆனந்த குருப்பு ஆராச்சி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், நாடளாவிய ரீதியிலுள்ள 200 தனியார் வைத்தியசாலைகளில் 76 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்படுகிறது. மருந்துகள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்கள் தட்டுபாடு குறித்து சுகாதார அமைச்சு மற்றும் … Read more

உக்ரைனுக்கு இங்கிலாந்து ஆயுத உதவிகள் வழங்குவதற்கு பதிலடி தரப்படும் என ரஷ்யா சூசகம்

உக்ரைனுக்கு இங்கிலாந்து ஆயுத உதவிகள் வழங்குவதற்கு பதிலடியாக, அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக ரஷ்யா சூசகமாக எச்சரித்துள்ளது. இது குறித்து பேசிய ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளரான மரிய சாக்கரோவா, நேட்டோ நாடுகளின் ராணுவ இலக்குகளை தங்களால் தாக்க இயலும் என்றும், பிரிட்டனும் அதன் உறுப்பினர்தான் என்றும் அவர் கூறினார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை எம்பிக்கள் முன்னிலையில் அதிபர் புதின் உரையாற்றியபோது, தேவையான அனைத்து ஆயுதங்களும் உள்ளதாகவும், அதனை பயன்படுத்துவோம் என்றும் அணு ஆயுத … Read more

டெல்லியில் அனைத்து வாகனங்களுக்கும் தகுதிச் சான்றிதழ் கட்டாயம்… மீறுவோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம், சிறைத்தண்டனை

தலைநகர் டெல்லியில் தகுதிச் சான்றிதழ் இல்லாமல் வாகனங்களை இயக்கினால் சிறைத்தண்டனையுடன் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லி போக்குவரத்துத் துறை விடுத்துள்ள அறிக்கையில், அரசுத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வாகனங்களும் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளின் வாகனங்களுக்கும் தகுதிச் சான்று அவசியம் என கூறப்பட்டுள்ளது. இதனை மீறுவோருக்கும் சிறைத்தண்டனையுடன் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more