உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட ஈத் பெருநாளில் உறுதி ஏற்போம் – இந்திய தேசிய லீக்.!

உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட ஈத் பெருநாளில் உறுதி ஏற்போம் என்று, இந்திய தேசிய லீக் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் அந்த வாழ்த்துச்செய்தியில், “மனிதகுலத்திற்கு வழிகாட்டியாக விளங்கும் இறைத் தூதர் நபிகள் நாயகம் அருளிய போதனைகளை மனதில் நிறுத்தி, உடலையும், உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்தி, தூய்மை உணர்வோடு புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து, ஈகையின் சிறப்பினை எல்லோருக்கும் உணர்த்தும் வகையில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை எளியோருக்கு அளித்து, அனைவரும் இன்புற்று … Read more

Doctor Vikatan: அடிக்கடி மரத்துப்போகும் விரல்கள்; என்ன பிரச்னையாக இருக்கும்?

வலது உள்ளங்கை அடிக்கடி மரத்துப்போகிறது. விரல்களை மடக்கினாலே ஒரு நிமிடத்தில் மரத்து விடுகின்றன. எனக்கு ரத்தச்சோகையும் உள்ளது. இடது உள்ளங்காலில் அரிப்பு உள்ளது. எனக்கு என்னதான் பிரச்னையாக இருக்கும்? தீர்வு சொல்வீர்களா? – அனிதா பிரீத்தி (விகடன் இணையத்திலிருந்து) ஆதித்யன் குகன் பதில் சொல்கிறார் கோவையைச் சேர்ந்த, பொதுமருத்துவர் ஆதித்யன் குகன். “நீங்கள் குறிப்பிட்டுள்ள மரத்துப்போகும் உணர்வு, ரத்தச்சோகை போன்றவற்றை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 குறைபாடு இருக்கலாம் என்று தெரிகிறது. … Read more

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்.!

தூத்துக்குடி, மேட்டூர் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் துறைமுகத்தில் இருந்து அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட் மோட்டார் பழுதானதால், மொத்தமுள்ள 5 அலகுகளில் நான்கு யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால், 840 மெகா வாட் அளவுக்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, சேலம் மாவட்டம் மேட்டூரில் செயல்படும் புதிய அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி … Read more

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாட்டால் 840 மெகாவாட் உற்பத்தி பாதிப்பு

சேலம்: நிலக்கரி தட்டுப்பாட்டால், மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தினசரி 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பழைய உற்பத்திப் பிரிவில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 4 அலகுகள் மற்றும் புதிய உற்பத்திப் பிரிவில் 600 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட ஒரு அலகு உள்ளது. இதன் மூலம் தினசரி 1,440 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், நிலக்கரி வரத்து குறைவு … Read more

'பள்ளிகளில் பகவத் கீதையும், ராமாயணமும் கற்றுத்தர வேண்டும்' – உத்தராகண்ட் கல்வி அமைச்சர்  

ராஞ்சி: உத்தராகண்ட் பள்ளிகளில் மாணவர்களுக்கு பகவத் கீதையும், ராமாயணமும், வேதங்களும் கற்றுத்தரப்பட வேண்டும் என அம்மாநில கல்வி அமைச்சர் தன்சிங் ராவத் பேசியுள்ளார். அதேபோல் உத்தராகண்ட் மாநிலத்தின் வரலாறும், புவியியலும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) டூன் பல்கலைக்கழகம் சார்பில் ‘பரிக்‌ஷா பார்வ் 4.0’ என்ற நிகழ்ச்சியின் துவக்க விழாவில் அமைச்சர் கலந்து கொண்டார். குழந்தைகளின் கல்வி உரிமை மற்றும் கல்வித் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த … Read more

புதுக் கட்சி தொடங்குகிறார் பிராஷாந்த் கிஷோர்?

இந்திய அரசியல் களத்தில் பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர் பற்றித்தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற முக்கிய பங்காற்றியவர் அவர். தேர்தல் உத்தியாளரான பிரஷாந்த் கிஷோருடன் நெருக்கம் காட்டிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், அவரை தனது ஐக்கிய ஜனதாதள கட்சியின் தேசிய துணைத் தலைவராக்கினார். பீகாரில் பாஜகவுடன் ஐக்கிய ஜனதாதளம் கட்சி கூட்டணி வைத்திருந்தாலும் பல சமயங்களில் அக்கட்சியை விமர்சிக்க பிரசாந்த் … Read more

கோட்டாகம ஆர்ப்பாட்டக்காரர்களை முட்டாள்கள் என அசிங்கப்படுத்தும் வீரவன்ச

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை அசிங்கப்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கருத்து வெளியிட்டுள்ளார். தற்போதைய நிலையில் யாரும் பிரபல்யம் அடைய விரும்பினால் கோட்டாகம சென்றால் சாத்தியமாகும் என அவர் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற மே தின கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இன்று வீதியில் இருப்பவர்களில் அதிகமானோர் மத்திய வர்க்கத்தினர் தான். இன்று அவர்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல், சவால் ஏற்பட்டுள்ளது. நெருக்கடிக்கு மத்தியில் ஆர்ப்பாட்டங்களில் வீரனாகுவது பெரிய விடயமல்ல. எந்த … Read more

ஜெர்மனி சென்றார் பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பிய பயணத்தின் முதற்கட்டமாக ஜெர்மனியின் பெர்லின் நகருக்குச் சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்குத் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் அணிவகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளுக்கும் மூன்று நாள் சுற்றுப் பயணமாகச் சென்றுள்ளார். தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி பயணத்தின் முதற்கட்டமாக ஜெர்மனியின் பெர்லின் விமான நிலையத்துக்குச் சென்றடைந்தார். அங்கு அவருக்குத் துப்பாக்கி ஏந்திய வீரர்களின் அணிவகுப்புடன் சிவப்புக் … Read more

கொரோனா தடுப்பூசி போட யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது – உச்சநீதிமன்றம்

“தடுப்பூசி போட யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது” தடுப்பூசி இயக்கம் திருப்திகரமாக உள்ளது – உச்சநீதின்றம் “தடுப்பூசி – கொள்கை முடிவெடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம்” “தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வர கட்டுப்பாடு கூடாது” கொரோனா தடுப்பூசி போட யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது – உச்சநீதிமன்றம் மத்திய அரசு முன்னெடுக்கும் கொரோனா தடுப்பு இயக்கம் திருப்திகரமாக உள்ளது – உச்சநீதிமன்றம் பொதுமக்கள் நலன் கருதி, தடுப்பூசி இயக்கம் குறித்து, தனிக் கொள்கை முடிவெடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் … Read more

பரபரப்பை ஏற்படுத்தி உள்ள ‘வாய்தா’: மே 6ல் வெளிவருகிறது!

நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கி நிற்பதையும், தாமதமாவதால் எளிய மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் அடிப்படையாக வைத்து உருவாகி உள்ள வாய்தா திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வராஹ ஸ்வாமி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கே. வினோத்குமார் தயாரிக்க சி.எஸ். மகிவர்மன் இயக்கத்தில் கதை நாயகனாக மு.ராமசாமி நடித்திருக்கிறார். நாசர், புகழ் மகேந்திரன், பவுலின் ஜெசிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லோகேஸ்வரன் இசையமைத்துள்ளார். எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் மே 6ம் தேதி வெளியாகிறது.