#BREAKING : இலங்கையில் இருந்து 2 மாத கைக்குழந்தையுடன் அகதிகளாக 5 பேர் தமிழகம் வருகை.!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்து பெட்ரோல் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் தொழில்கள் பாதிப்படைந்து அத்தியாவசிய பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றன. அதன் காரணமாக இலங்கை அரசுக்கு எதிராக கொழும்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் விலை உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இலங்கை தமிழர்கள் கள்ளப்படகு மூலம் கடல் வழியாக தனுஷ்கோடிக்கு … Read more

“ஃபிளக்சில் என் படத்தை ஏன் போடல?" – திமுக நகர்மன்றத் தலைவர் வாக்குவாதம்; சமாதானம் செய்த எம்.எல்.ஏ

ராமேஸ்வரம், திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட 10 முக்கிய கோயில்களில் பக்தர்களுக்கு அவசரகால சிகிச்சை அளிக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் முதலுதவி சிகிச்சை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. சிகிச்சை மையத்தில் பணியாற்றுவதற்கான டாக்டர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் கோயில் கிழக்கு ரத வீதியில் கோயிலுக்கு சொந்தமான கட்டடத்தில் 5 படுக்கை வசதியுடன் முதலுதவி சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டநிலையில் அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு ராமநாதசாமி கோயில் … Read more

திருப்பூரில் சரக்கு வாகனத்தின் மீது சொகுசுக்கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சரக்கு வாகனத்தின் மீது சொகுசுக்கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிர் தப்பினர். பொல்லிக்காளிபாளையத்தில் இருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சரக்கு வாகனம் ஒன்று பொங்கலூருக்கு சென்றது. கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக சரக்கு வாகனத்தை நிறுத்திய ஓட்டுனர், பின்புறம் வாகனம் வருவதை அறியாமல் வலதுபுறம் திருப்பியுள்ளார்.அப்போது பின்னால் வந்த கார் சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி … Read more

'சஞ்சீவி மலையை அனுமன் சுமந்ததுபோல்; இலங்கையை சுமக்க பிரதமர் மோடி தயாராக இருக்கிறார்' – அண்ணாமலை பேச்சு

சஞ்சீவி மலையை அனுமன் சுமந்தது போல் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமக்க பிரதமர் மோடி தயாராக இருக்கிறார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலையைக் கண்டறிய 4 நாட்கள் பயணமாக இலங்கை சென்றார் பாஜக தலைவர் அண்ணாமலை. இலங்கை மலையக வாழ் இந்திய வம்சாவளி தமிழர்களின் கட்சியான ‘இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்’ ஏற்பாடு செய்த மே 1- உழைப்பாளர் தின நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் … Read more

நடுவானில் குலுங்கிய ஸ்பைஸ் ஜெட் விமானம்: விரிவான விசாரணைக்கு டிஜிசிஏ உத்தரவு

மும்பையிலிருந்து நேற்று மேற்குவங்க மாநிலம் துர்காபூர் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் நடுவானில் காற்றின் வேகத்தில் சிக்கி பயங்கரமாக குலுங்கியதில் 14 பயணிகள், 3 விமான சிப்பந்திகள் என மொத்தம் 17 பேர் காயமடைந்தனர். விமானம் தரையிறங்கும் வேளையில் மோசமான வானிலையால் இந்த விபத்து நடந்திருந்தாலும் கூட விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது (டிஜிசிஏ) விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. நடந்தது என்ன? நேற்று மாலை மும்பையில் இருந்து மேற்குவங்க … Read more

நீக்கப்பட்டது தடை: இலங்கை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

பொது இடங்களுக்கு மக்கள் செல்ல கோவிட் தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டதை அடையாளப்படுத்தும் தடுப்பூசி அட்டையை கைவசம் வைத்திருப்பதை கட்டாயமாக்கும் வகையிலும், அவ்வாறு முழுமையான தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கும் வகையிலும் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. 2022 ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டையை பொது இடங்களுக்கு செல்வோர் தமது கைவசம் வைத்திருத்தல் அவசியமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் குறித்த தினத்திற்கு முன்னர் கோவிட் … Read more

அமெரிக்காவின் சிகாகோ உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு.. 8 பேர் உயிரிழந்த நிலையில், 42 பேர் காயம்

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 42 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்காவில் துப்பாக்கிசூடு வன்முறை பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் ஆங்காங்கே துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் வழக்கமான நிகழ்வுகளாக மாறியுள்ளன. இந்நிலையில் சிகாகோ நகரின் தெற்கு Kilpatrick பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 69 வயது முதியவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதேபோல், Brighton Park, South Indiana, North Kedzie … Read more

காற்றின் வேகத்தில் நடுவானில் குலுங்கிய ஸ்பைஸ் ஜெட் விமானம்… 12 பயணிகளுக்கு பலத்த காயம்

மும்பையிலிருந்து மேற்குவங்க மாநிலம் துர்காபூருக்குச் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் காற்றின் வேகத்தில் குலுங்கியதில் 12 பயணிகள் பலத்த காயமடைந்தனர். மும்பையில் இருந்து புறப்பட்ட அந்த விமானம்  வானில் பறந்தபோது காற்றின் வேகத்தில் குலுங்கியதில் பயணிகள் ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொண்டனர். இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்படுவதாகவும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. Source link

எளிதான கேட்சை தவறவிட்ட சிஎஸ்கே கேப்டன் தோனி! பந்துவீசிய ஜடேஜா தந்த ரியாக்‌ஷன்… வைரல் வீடியோ

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி எளிதான கேட்சை தவற விட்டுள்ளார். ஐபிஎல் தொடரின் 46வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் ஒரு கட்டத்தில் ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஜடேஜா பந்துவீசினார், பந்தானது பேட்டில் உரசி விக்கெட் கீப்பரும், கேப்டனுமான … Read more

அமைப்புசாரா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு விரைவில் ரூ.1000 உதவி! ஸ்டாலின் மே தின அறிவிப்பு…

சென்னை: அமைப்புசாரா தொழிலாளர்களின் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலக் கூடிய குழந்தைகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும், கட்டுமான தொழிலாளர்களின் திருமண உதவித்தொகை ரூ.20ஆயிரம் உயர்ததப்படும் என்றும் மே தினத்தன்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். மே 1 ஆம் தேதியான நேற்று நாடு முழுவதும் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில்,தமிழகத்தில் சென்னை சிந்தாதிரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில், மே தின நினைவு சின்னத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் … Read more