நாமக்கல்: கடத்தப்பட்ட 11 வயது சிறுமி மீட்பு – 2பேர் கைது

நாமக்கல்: கடத்தப்பட்ட 11 வயது சிறுமி மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் காளிசெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். சரவணன் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 11 வயதில் ஒரு மகள் உள்ளார். சரவணன் பணிக்குச் சென்ற நிலையில் அவரது மனைவியும் மகளும் நேற்று மொட்டை மாடியில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத சிலர் சரவணனின் மனைவி கவுசல்யா மற்றும் அவரது 11 … Read more

இலங்கை அரசியல் கட்சிகளுக்கு கோத்தபய ராஜபக்சே அழைப்பு

கொழும்பு   இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவியை அரசு நாடி வருகிறது. அதேநேரம் தங்கள் இன்னல்களுக்கு தீர்வு காண வழி தெரியாத ராஜபக்சே அரசு பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதைப்போல, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகி இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என புத்த மத அமைப்புகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன. இடைக்கால அரசு அமைக்காவிட்டால் இலங்கை … Read more

மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி எம்.என். எஸ். வெங்கட்ராமன் உயிரிழப்பு!!

ன்னை : மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ். வெங்கட்ராமன் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 65. மறைந்த வெங்கட்ராமனின் உடல்  விருதுநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து அவர் இறுதி சடங்குகள் அருப்புகோட்டை ரெட்டியபட்டி கிராமத்தில் இன்று மாலை நடக்கும் என தெரிகிறது.

அரியானா காங். தலைவர் பதவிக்கு பிஷ்னோய் தான் பொருத்தமானவர்: சுர்ஜேவாலா சர்ச்சை கருத்து

சண்டிகர்: `அரியானா காங்கிரஸ் தலைவர் பதவிக்கு குல்தீப் பிஷ்னோய் பொருத்தமானவராக இருந்திருப்பார்,’ என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, கட்சி தலைமையின் முடிவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்லில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ், வரும் 2024 மக்களவைத் தேர்தலை சந்திக்க, தேசிய, மாநில அளவில் மாற்றங்கள் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அரியானா மாநில காங்கிரஸ் தலைவர் குமாரி செலஜாவுக்கு பதிலாக, முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் … Read more

அதிமுக  திட்டங்களின் பெயர்களை மாற்றுவதுதான் திராவிட மாடலா?- விஜயபாஸ்கர் கேள்வி

அதிமுக கொண்டு வந்த திட்டங்களை மூடுவிழா காண்பது…. திட்டங்களின் பெயர்களை மாற்றுவது தான் திராவிட மாடலா என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். புதுக்கோட்டையில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சிவபதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது… “பகல் நேரத்தில் வறுத்தெடுக்கும் சூரியனின் தாக்கம் இரவு நேரத்திலும் வாட்டி வதைக்கிறது. அதேபோன்றுதான் தமிழகத்தில் ஆட்சியும் … Read more

எத்தனை தொழிற்சாலை கொண்டு வந்தீர்கள்; சிவாவுக்கு அன்பழகன் கேள்வி

புதுச்சேரி : புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க., அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் மே தின பொதுக் கூட்டம் லாஸ்பேட்டை உழவர் சந்தை, சுபாஷ் சந்திர போஸ் சிலை அருகில் நடந்தது.அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி தலைமை தாங்கினார். தமிழக முன்னாள் அமைச்சர், தாமோதரன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர் ,வையாபுரி மணிகண்டன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.புதுச்சேரி கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் பேசியதாவது:கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் அரசின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டியது எங்களது கடமையாகும். … Read more

சீனாவில் பொலிவு இழந்த மே தின விடுமுறை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங் : கொரோனா கட்டுப்பாடுகளால் சீனாவில் மே தின விடுமுறை கொண்டாட்டம் பொலிவு இழந்தது. நம் அண்டை நாடானா சீனாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. ஷாங்காய் பீஜிங் நகரங்களில் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. சீனாவில் ஆண்டுதோறும் மே தினத்தை ஒட்டி நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இந்த விடுமுறை நாட்களில் சீன மக்கள் சுற்றுலா செல்வர். ஆனால் தற்போது கொரோனா பரவலை தடுக்க சீனாவில் கட்டுப்பாடுகள் … Read more

Rasi Palan 2nd May 2022: இன்றைய ராசிபலன்

Rasi Palan 2nd May 2022:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Rasi Palan 2nd May 2022: இன்றைய ராசி பலன், மே 2ம் தேதி 2022 ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)  … Read more

இன்றைய (02.05.2022) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.!

இந்தியாவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதம் இருமுறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இம்முறை மாற்றி அமைக்கப்பட்டு, தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையை மத்திய அரசு அமல்படுத்தியது. விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்ததால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு … Read more

மளிகைக் கடை ஷட்டரை உடைத்து உணவுப் பொருட்களை சாப்பிட்ட யானைகள்.. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து யானைகளை விரட்டினர்

கோவை மாவட்டம் தடாகம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் மளிகை கடையின் ஷட்டரை உடைத்து உணவு பொருட்களை சாப்பிட்ட வீடியோ வெளியாகி உள்ளது. பெரிய தடாகம் வனப்பகுதியிலிருந்து  வெளியேறிய 7 காட்டுயானைகள், உணவு மற்றும் தண்ணீர் தேடி அதிகாலை தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உலா வந்தன. அதில் 3 யானைகள் அங்கிருந்த  மளிகைக்கடை ஒன்றின் ஷட்டரை உடைத்து உள்ளே இருந்த அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை சாப்பிட்டுள்ளன. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த … Read more