கணவர் மீது சந்தேகம்…அந்தரங்க உறுப்பில் வெண்ணீர் ஊற்றிய பெண்!

கணவர் தன்னிடம் உண்மையாக இல்லை என்று சந்தேகம் கொண்டதால், கணவரின் பிறப்பு உறுப்பில் அவரது மனைவி வெண்ணீர் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, ராணிபேட்டையில் உள்ள கிராமத்தில் தங்கராஜ் (வயது 32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்ரீபெரம்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவருக்கும், இவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை வருவதாக கூறப்படுகிறது. தங்கராஜ் தனக்கு உண்மையாக இல்லை என்றும் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால், இருவருக்கும் சண்டை அதிகரித்துள்ளது. இதுபோல ஒரு நாள் சண்டை நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து தங்கராஜ் உறங்கியுள்ளார்.

அப்போது, அவரது பிறப்பு உறுப்பில் சுடு தண்ணீர் ஊற்றியுள்ளார்அவரது மனைவி. இதனால் காயமடைந்த தங்கராஜ் உதவி வேண்டி அலறியுள்ளார். அப்போது பக்கத்தில் வசிப்பவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். முதலில் இவர் வாலாஜ அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக மாற்றபட்டுள்ளார்.

இவரது மனைவி மீது ஐபிசி பிரிவு 294, 324, 506-யின் கீழ் வழக்கு தொடரப்பட்டு விசாரணை தொடங்கி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.