தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை ஆகிய 3 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை சென்னை வானிலை மையம் விடுத்துள்ளது. தமிழகத்தின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. தூத்துக்குடி, சிவகங்கை, திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு … Read more

என்.டி ராமாராவின் இளைய மகள் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை

ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சியின் நிறுவனருமான என்.டி. ராமாராவின் மகள் தற்கொலை செய்துகொண்டார். என்.டி. ராமாராவின் இளைய மகள் உமா மகேஸ்வரி ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸிலுள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் தற்போது அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பியுள்ளதாகவும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருவதாகவும் தகவல் தெரிவித்திருக்கிறது. என்.டி. ராமாராவின் 8 மகன்கள் மற்றும் 4 மகள்கள் என 12 பிள்ளைகளில் உமா … Read more

நடப்பாண்டே தேர்தல்: குமாரசாமி கணிப்பு| Dinamalar

பீதர் : இன்றைய அரசியல் சூழ்நிலையை கவனித்தால், கர்நாடகாவில் 2023 ஏப்ரலுக்கு பதில், நடப்பாண்டு டிசம்பருக்குள் சட்டசபை தேர்தல் நடக்கும். முதல்வர் பசவராஜ் பொம்மை பதவி காலத்தை நிறைவு செய்ய வாய்ப்பில்லை,” என ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார். பீதரில் அவர் கூறியதாவது:கர்நாடகாவில், முன்கூட்டியே சட்டசபை தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதால், ம.ஜ.த., ஏற்கனவே தன் வேட்பாளர்களை தேர்வு செய்ய துவங்கியுள்ளது. எங்களின், பஞ்சரத்னா’ திட்டம் குறித்து, வரும் மாதம் அறிவிக்கப்படும். இந்த திட்டம் கல்வி, சுகாதாரம், … Read more

மலையாள நடிகர் பாபுராஜ் வாழப்பள்ளி மறைவு

ஆண்ட்ராய்டு குஞ்சப்பன், மாஸ்டர் பீஸ், பிரேக்கிங் நியூஸ், அர்ச்சனா 31 நாட் அவுட், காயங்குளம் கொச்சுன்னி, நந்தனம் உட்பட 50க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்தவர் பாபுராஜ் வாழப்பள்ளி. நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த இவர், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். 59 வயதான இவர் தனது குடும்பத்துடன் கோழிகோட்டில் உள்ள குதுருசால் பகுதியில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, ஓமச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை … Read more

கூகுள், பேஸ்புக்-ஐ வரிசையில் சோமேட்டோ.. தீபிந்தர் கோயல் போடும் மாஸ்டர் பிளான்..!

உலகில் பல முன்னணி நிறுவனங்கள் தனது வர்த்தகத்தைச் சரியான முறையிலும், எளிமையாகவும் நிர்வாகம் செய்ய முக்கியமான திட்டத்தை எடுத்து வருகிறது. இதில் முதலாவதாகக் கூகுள் பல வர்த்தகத்தைத் தனித்தனியாக நிர்வாகம் செய்தாலும் கூகுள் என்ற பெயரில் தான் வர்த்தகம் செய்து வந்தது. ஆனால் கூகுள் -ஏ முக்கியமான வர்த்தகப் பிரிவு என்பதால் அனைத்து வர்த்தகத்தையும் ஒரு நிறுவனத்தின் கீழ், ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர திட்டமிட்டு ஆல்பபெட் என்னும் நிறுவனத்தை உருவாக்கியது. இதேபோலத் தான் பேஸ்புக் … Read more

ஜனாதிபதிக்கு பாகிஸ்தான் ஜனாதிபதியிடமிருந்து வாழ்த்து

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு, பாகிஸ்தான் ஜனாதிபதி கலாநிதி அரீப் அல்வி (Arif Alvi) அவர்கள் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அவர்களுக்கு இன்று, (01) விசேட வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி அவர்கள், இரு நாடுகளுக்கிடையில் நிலவுகின்ற உறவை இரு நாட்டினதும் முன்னேற்றத்திற்காக மேலும் வலுப்படுத்துவதே தமது எதிர்பார்ப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையின் கீழ், இலங்கை தற்போதுள்ள பொருளாதார சவால்களை வெற்றிகொள்ளும் எனக் குறிப்பிட்டுள்ள அரீப் … Read more

நான்சி பெலோசி தைவான் பயணம் மேற்கொண்டால்… அமெரிக்காவை மிரட்டும் சீனா

அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி திங்களன்று சிங்கப்பூரில்,  ஆசியா சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். இந்நிலையில், சீனா அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், நான்சி பெலோசி தைவானுக்குச் சென்றால் ” ராணுவம் சும்மா இருக்காது” என்று மிரட்டியுள்ளது. பெலோசியின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிங்கப்பூர், மலேசியா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதாக அறிவித்திருந்தது. அதில் தைவான் பற்றி குறிப்பிடப்படவில்லை. எனினும் ஊகத்தின் அடிப்படையில் சீனா இவ்வாறு மிரட்டியுள்ளது.   தைவான் சீனாவின் … Read more

கலைஞருக்கு வங்கக் கடலில் பேனா நினைவிடம்: மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிய தமிழக அரசு

முன்னாள் முதலமைச்சரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு கடலுக்குள் ரூ.80 கோடி மதிப்பில் பேனா சிலை வைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.இந்தத் திட்டம் தொடர்பாக அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் மற்றும் எ.வ. வேலு ஆகியோர் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் கலைஞர் கருணாநிதிக்கு வங்கக் கடலில் பேனா நினைவிடம் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது.முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி … Read more

நகைக்காக கொலை செய்யப்பட்ட மூதாட்டி, காவல்துறையினர் விசாரணை..!

மூதாட்டியை கொலை செய்து விட்டு நகையை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், துட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னம்மா. இவர் அவரது வயலை பார்க்க சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பவராததால் சந்தேகமடைந்த அவரது பேரன் வயலுக்கு அங்கே தேடி சென்றனர். அப்போது மூதாட்டி கழுத்தை நெறித்து கொலை செய்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் … Read more

அரசு தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த பட்டதாரி பெண் தற்கொலை! – ஆண் நண்பரிடம் போலீஸ் விசாரணை

சென்னை வளசரவாக்கம், பழனியப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணராவ் (53), சினிமா கேமரா மேனாக வேலைப்பார்த்து வருகிறார். இவரின் மகள் அரிதா ராஜேஸ்வரி (25), கல்லூரி படிப்பை முடித்து விட்டு அரசு வேலைக்காக டி.என்.பி.எஸ்.சி உள்ளிட்ட அரசு தேர்வுகளை எழுதி வந்தார். வீட்டில் மாணவர்களுக்கு டியூசனும் எடுத்து வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு வழக்கம் போல தூங்க செல்வதாக அறைக்குச் சென்ற அரிதா ராஜேஸ்வரி, நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை. அதனால் சந்தேகமடைந்த அவரின் குடும்பத்தினர் அரிதா … Read more