கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பாக மேலும் 4 பேர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியதாக 2 பேர், போலீசார் வாகனத்தின் மீது கற்களை வீசியதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை வெற்றி பெற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து

டெல்லி: ராகுல் காந்தி மேற்கொள்ளும் ஒற்றுமை யாத்திரை வெற்றி பெற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்தார். மருத்துவ பரிசோதனையை கருத்தில் கொண்டு யாத்திரை தொடக்க விழாவில் பங்கேற்க இயலாததற்கு வருந்துகிறேன் என கூறினார். 

கல்லூரி மாணவி கொடுத்த பாலியல் புகார்: 13 வயதிலிருந்தே மாணவியை துன்புறுத்திய எஸ்.ஐ கைது!

சென்னையில் சிறுமி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தப் புகாரில், காவல் உதவி ஆய்வாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் உதவி ஆய்வாளர் பாண்டியராஜ் (50). சென்னை மாநகர காவல் துறையில் விஐபிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் பாதுகாப்பு பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கணவனை பிரிந்தப் பெண் ஒருவருடன், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக திருமணத்தை மீறிய உறவில் இருந்து … Read more

லிஃப்ட்டில் தொடரும் வளர்ப்பு நாய்களின் அட்டகாசம்.. அப்போ காசியாபாத், இப்போ நொய்டா!

உத்தர பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள குடியிருப்பு லிஃப்டில் சென்ற சிறுவனை வளர்ப்பு நாய் ஒன்று அதன் உரிமையாளர் முன்பே கடித்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. சிறுவனை நாய் கடித்தபோது கண்டுகொள்ளாமல் இருந்த பெண்ணை நெட்டிசன்கள் பலரும் வசைபாடியிருந்தார்கள். மேலும் அவர் மீது போலீஸ் வழக்கும் பதிந்திருக்கிறது. இப்படி இருக்கையில் அதே மாதிரி சம்பவம் ஒன்று நொய்டாவில் உள்ள குடியிருப்பு பகுதியில் அரங்கேறியிருக்கிறது. நொய்டாவின் செக்டார் 75 என்ற பகுதியில் உள்ள … Read more

ஒரே அழுகை.. நிறுத்துதா பாரேன்.. குழந்தை மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கொடூர தாய்

India oi-Jackson Singh லூதியானா: அழுதுக் கொண்டிருந்த குழந்தையை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்த கொடூர தாயை பஞ்சாப் போலீஸார் கைது செய்துள்ளனர். தான் பெற்றெடுத்த குழந்தைக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதனை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல தாய் தயங்க மாட்டாள் என்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். இன்றைக்கு கூட மத்திய பிரதேசத்தில் புலியுடன் சண்டையிட்டு தனது குழந்தையை காப்பாற்றிய தாய் குறித்த செய்தி வெளிவந்து மெய்சிலிர்க்க வைத்தது. ஆனால், அதற்கு நேரெதிராக தனது குழந்தையை தானே … Read more

ஆர்யா இல்லையேல் கேப்டன் இல்லை: சக்தி சவுந்தர்ராஜன்

டிக் டிக் டிக், மிருதன், டெடி உள்ளிட்ட சயின்ஸ் பிக்ஷன் பேண்டசி படங்களை கொடுத்த சக்தி சவுந்தர்ராஜன் இயக்கி உள்ள கேப்டன் படம் நாளை வெளிவருகிறது. ஏலியன் சர்வைவல் திரில்லராக படம் உருவாகி உள்ளது. திங் ஸ்டூடியோவுடன் இணைந்து ஆர்யா தயாரித்துள்ளார். சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி, கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் ஆர்யா இல்லையேல் கேப்டன் படம் இல்லை … Read more

கல்யாணம் செஞ்சாதான் குழந்தை பிறக்குமா?திருமணம் தேவையில்லாத ஒன்று..பரபரப்பை கிளப்பிய நடிகை தபு!

சென்னை : குழந்தை பெற்றுக்கொள்ள திருமணமாகி இருக்க வேண்டும் என்ற கட்டாயம் என்று நடிகை தபு ஒரு பேட்டியில் அதிரடியாக கூறியுளளார் பாலிவுட்டில் கடந்த 1982 ஆம் ஆண்டு வெளியான பஜார் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை தபு. இந்தப் படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் தபு. தொடர்ந்து பல்வேறு படங்களில் கிடைத்த வேடங்களில் நடித்த தபு, 1994ஆம் ஆண்டு வெளியான விஜய்பாத் என்ற படத்தில் லீடிங் ரோலில் நடித்து சிறந்த அறிமுக நடிகைக்கான … Read more

இனி ஒவ்வொரு காரிலும் இது கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து துறை அறிவிப்பு!

டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி அவர்கள் சமீபத்தில் கார் விபத்தில் பலியானதையடுத்து சாலை பாதுகாப்பை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் அனைத்து கார்களிலும் 6 ஏர்பேக்குகள் இருக்க வேண்டும் என்ற விதியை இறுதி செய்ய உள்ளதாக சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 6 ஏர்பேக்குகள் கட்டாயம் … Read more

பொருளாதார நெருக்கடி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தல்…..

நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியின் பாரதூரமான நிலைமை தொடர்பில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் தெளிவுபடுத்த அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைமையின் கீழ் தொடர் நிகழ்ச்சித்திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என குழுவின் உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டுள்ளது. அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா தலைமையில் நேற்றுக் (06) கூடியபோதே இவ்வாறு முன்மொழியப்பட்டது. இதில் கடந்த யூலை 27ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட “ 2022ஆம் ஆண்டின் அரையாண்டு … Read more

`காதலுக்கு வயது தடையல்ல’ – மகன்களின் வாழ்த்துகளோடு காதலியை கரம்பிடித்த 59 வயது முன்னாள் நீதிபதி!

கோடா நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் ஷிவ் பால் சிங். இவர் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, கால்நடை தீவன வழக்கில் பீகார் மாநில முன்னாள் முதல்வரும் ஆர்.ஜே.டி. தலைவருமான லாலு பிரசத்திற்கு, கால்நடை தீவன வழக்கில் குற்றாவளி எனத் தீர்ப்பளித்தவர். அதுமட்டுமல்லாமல், 1990களில் நடந்த ரூ. 3.13 கோடி கருவூல நிதி முறைகேடு வழக்கில், 2018-ம் ஆண்டு லாலுவுக்கு 14 ஆண்டு தண்டனையும், 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார். ஏற்கெனவே திருமணமாகி இருந்த ஷிவ்பால் … Read more