ஒடிசாவில் விஷ எறும்பு தாக்குதல்வீடுகளில் இருந்து வெளியேறும் மக்கள்| Dinamalar

புவனேஸ்வர் :ஒடிசாவில் விஷ எறும்புகள் சாரை சாரையாக படையெடுத்து வருவதால், கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பழங்குடியின கிராமங்களில் விஷ எறும்புகள் என அழைக்கப்படும் சிவப்பு எறும்புகள் அதிகம் உள்ளன. மழைக்காலங்களில் இவை அதிகமாக ஊர்ந்து வரும். இந்நிலையில் பிரமானஷி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கன மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இப்போது வெள்ளம் வடியத் துவங்கியுள்ளதை அடுத்து, விஷ … Read more

தஞ்சை பெரிய கோயிலில் சாய் பல்லவி சாமி தரிசனம்

அக்மார்க் தமிழ் பெண்ணான சாய்பல்லவி நடிகையாக அறிமுகமானது மலையாளத்தில். பிரேமம் படத்தின் மலர் டீச்சர் அவருக்கு மலையாள சினிமாவில் பெரிய ரசிகர் வட்டத்தை ஏற்படுத்தி கொடுத்தது. தமிழில் சில படங்களில் நடித்தாலும் அது அவருக்கு சரியாக அமையவில்லை. கடைசியாக வெளிவந்த கார்கி படம்தான் தமிழில் அவருக்கு கைகொடுத்த படம். ஆனால் தெலுங்கில் அவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டாக அங்கு டாப்பில் இருக்கிறார். அடிப்படையில் நடன கலைஞரான சாய்பல்லவி டாக்டரும் ஆவார். தற்போது அவர் கமல் தயாரிப்பில் … Read more

அமலாபாலுக்கு இரண்டாவது திருமணம் நடந்ததா?..ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பித்த பாய் பிரெண்ட்!

சென்னை : நடிகை அமலாபாலுக்கு தனக்கும் திருமணம் நடந்ததற்கான ஆதாரங்களை பாடகர் பவ்நிந்தர் சிங் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். பால் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்தவர் நடிகை அமலா பால். அவர் ஆரம்பே மாமனாரை காதலிக்கும் ஒரு விவகாரமான படமான சிந்து சமவெளி படத்தில் மூலம் என்ட்ரி கொடுத்தார். இந்த படம் விமர்சனத்தில் சிக்கியதே தவிர பெரிதாக வரவேற்பை பெறவில்லை .ஆனால், அந்த படத்தில் அமலா பாலில் நடிப்பு பேசும்படியாக இருந்தது. மைனா … Read more

டிக்டாக் நிறுவனத்தின் அதிரடி பணிநீக்கம்.. அதிர்ச்சியில் சீன ஊழியர்கள்..!

சீனாவின் மிகப்பெரிய டிஜிட்டல் பொழுதுபோக்கு சேவை நிறுவனமான பைட் டான்ஸ், ஹாங்காங்கில் உள்ள அதன் வீடியோ கேமிங் பிரிவில் இருந்து நூற்றுக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. சீன அரசின் கடுமையான விதிமுறைகள் காரணமாக அந்நாட்டின் இண்டர்நெட் மற்றும் கேமிங் துறை நிறுவனங்கள் நெருக்கடியில் மாட்டிக்கொண்டு பல மாதங்களாகத் தவித்து வருகிறது. இந்த நிலையில் பண பலம் கொண்ட நிறுவனமாகப் பைட் டான்ஸ் விளங்கினாலும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. சமீபத்தில் அமெரிக்காவில் பல முன்னணி டெக் … Read more

காதல் நமக்கு ஒரு விசித்திரக் கதை… நடிகை மகாலட்சுமி வைரல் போட்டோஸ்

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் இடையே சீரியல் நடிகைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சீரியல் மட்டுமல்லாது சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகள் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழில் அரசி, வாணி ராணி, அன்பே வா உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானவர் மகாலட்சுமி. வில்லி வேடங்களில் அசத்திவருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் அவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்திரனை திருமணம் மகாலட்சுமி திருமணம் … Read more

இலக்கியங்கள் கொண்டாடும் பொன் ஓண விழா!|Visual Story

வாமன மூர்த்தி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம் பண்டிகை. இது தமிழர்களின் முக்கியப் பண்டிகையாகவும் விளங்கிவந்துள்ளது. ‘ஓணம்’ எனும் தியாகத் திருநாள்! #OnamFestival ‘மாயோன் மேய ஓண நன்னாள்’ என்று ஓணத்தைக் குறிப்பிடுகிறது மதுரைக்காஞ்சி. ’ஆவணி அவிட்டத்தில் ஓணப் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது’ என்கிறார் நக்கீரர். வாமனர் ‘திணிநிலம் கடந்தக்கால் திரிந்தயர்ந்து…’ என்ற பரிபாடலும் ‘நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு…’ என்ற முல்லைப்பாட்டும் வாமன அவதாரத்தையும் மாவலி சக்கரவர்த்தி பாதாளம் சென்றதையும் அறிவிக்கும். … Read more

ஸ்ரீரங்கம் பக்தர்கள் வசதிகாக பஞ்சக்கரை சாலையில் 6 ஏக்கரில் அமைகிறது வாகன நிறுத்துமிடம்

திருச்சி: ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, பஞ்சக்கரை சாலையில் 6 ஏக்கரில் வாகன நிறுத்துமிடம் அமைக்க திருச்சி மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், அவர்கள் வரும் கார், வேன், பேருந்து போன்ற வாகனங்களை நிறுத்த உரிய இடவசதி இல்லாததால், கோயிலைச் சுற்றி கிடைக்கும் இடங்களில் நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். இதனால் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, கோயிலுக்கு வரும் … Read more

உ.பி அலிகர் நகரில் பாஜக.வுக்கு மாறிய பிறகு விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய ரூபி கானுக்கு மிரட்டல்

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் தொடர்ந்து 2-வது முறையாக ஆளும் பாஜகவில் சேரும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இத்துடன் அரசியல் ஆதாயங் களுக்காக இவர்கள் இந்துக்களின் கடவுள்களுக்கு பூஜை செய்வதும் தொடங்கியுள்ளது. அந்த வகையில், உ.பியின் அலிகர் நகரவாசியும், மஹாவீர்கஞ்ச் பகுதி பாஜக மகளிர் பிரிவின் துணைத்தலைவருமான ரூபி ஆசிப் கான், கடந்த 31-ம் தேதி தனது வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடி உள்ளார். விநாயகர் சிலையை வைத்து கணவர் ஆசிப்கானுடன் இணைந்து பூஜை செய்து வருகிறார். … Read more

ராகுல் காந்தியின் தேச ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்க இயலவில்லை..! – சோனியா காந்தி கூறும் காரணம்..!

மருத்துவ பரிசோதனை காரணமாக தேச ஒற்றுமை யாத்திரை தொடக்க விழாவில் பங்கேற்க இயலவில்லை என சோனியா காந்தி கூறியுள்ளார். கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரையை இன்று தொடங்குகிறார். இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை `பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்கிறார். கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கும், ராகுல் காந்தி 12 … Read more